எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, November 3, 2010

தரமான கல்வியை புகட்ட நாம் என்ன என்ன செய்ய வேண்டும்.


1. சரியான கல்விக் கூடங்கள் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட பள்ளிகள். ( ஆய்வுக்கூடங்கள், கணினி மையங்கள், பாடப்புத்தகங்கள், தரமான ஆசிரியர்கள் )

2. நன்கு பயிற்சி பெற்ற தரமான ஆசிரியர்கள்.

3. கல்விகூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வேறெந்த வேலைகளையும் பள்ளி நிர்வாகம் வழங்க கூடாது.

4. மாணவர்கள் மற்றும் ஆசிரியகள் புரிதல் என்பது இங்கே மிக முக்கியம்.

5. மாணவர்களுக்கு புரியும் படியாக பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

6. மாணவர்கள் பாடத்தை புரிந்து கொண்டார்களா என்பதை எப்படி சோதிப்பது என்று கேட்டால் ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் நிறைய கேள்விகள் வரவேண்டும். ஆசிரியர்கள் அந்த எல்லாக் கேள்விகளுக்கும் பொருப்பான முறையில் பதிலளித்து அவர்களுடைய சந்தேகங்களை போக்கவேண்டும். யாராவது கேள்விகள் கேட்கவில்லை என்றால் அந்த மாணவனுக்கு பாடம் முழுமையாக புரிந்து கொண்டான் என்று கருதக் கூடாது. அவனுக்கு முழுமையாக புரியாமல் கூட இருக்கலாம் அப்படி இருக்கையில் கண்டிப்பாக மீண்டும் ஒரு முறை அவனைப் போன்ற பிள்ளைகளை தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக அமர்த்தி மீண்டும் அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுக்க வேண்டும். அவனுக்கு புரியும் வரை எடுக்கவேண்டும். அவனால் மீண்டும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், ஏன் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று ஆசிரியர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவனுக்கு எப்படி சொல்லிக் கொடுத்தால் அவன் புரிந்து கொள்வான் என்பதை ஆசிரிகள் கற்றுக் கொள்ளவேண்டும்.

இதிலிருந்து அவனுக்கு அடிப்படையில் இருந்தே அவனுக்கு புரியவில்லை என்று அர்த்தம். அதனால் நீங்கள் மீண்டும் அடிப்படையில் இருந்து மீண்டும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

7. ஒரு வகுப்புக்கு அதிகபட்சம் 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் அப்பொழுது தான் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் புரிதல் இருக்கும். இல்லாவிட்டால் தரமற்ற சமூதாயத்தை தான் நாம் படைக்கிறோம் என்று பொருள்.

இங்கே மிகவும் மோசமான நிலையில் நமது அரசாங்க பள்ளிகள் தான் முதலிடத்தில் இருக்கிறது.

அரசு பள்ளிகளில் தரமான ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு 10% சதவிகதம் மட்டும் தான் இருக்கும் மீதி இருக்கும் ஆசிரியர்கள் எல்லாம் பணி மூப்பு அடிப்படையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற பணிமூப்பு ஆசிரியர்களுக்கே எதுவும் தெரியாத நிலையில் மாணவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுக்க முடியும் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுககு எப்படி பதில் சொல்ல முடியும்.

தரமான ஆசிரியர்களை அமர்த்துவது அரசாங்காத்தின் கடமை அந்த கடமையை அரசாங்கம் செய்கிறதா என்றால் எந்த மாநில அரசும் செய்வதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஊதியத்திற்கு மட்டும் போராடும் ஆசிரியர்களின் இயக்கங்கள் மற்றும் சங்கங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வதில்லை.

ஓட்டிற்க்காக மட்டும் ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி கொடுக்கும் அரசாங்கங்கள் தரமான ஆசிரியர்களை நிர்ணயம் செய்வதில் இருந்து தவறிவிட்டது.

ஓட்டிற்காக செய்யாமல் நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக, நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக என்று நீண்டகால சிந்தனை எல்லாம் எந்த அரசாங்கத்திற்கு இல்லை.

ஏன் இந்த அவல நிலை எப்போது இந்த நிலைமாறும்.

இன்றைய அவல நிலையை சற்று பார்ப்போம் :



விமான போக்குவரத் துறையின் வளர்ச்சிக்கு தடை திறமையில்லாதா ஊழியர்களால் :



அடுத்த சில வருடங்களில் விமான போக்குவரத்து துறை, அணு தொழிநுட்பம் மற்றும் பாதுகாப்பு துறையில் குறிப்பிட தகுந்த வளர்ச்சியை பெரும்.இருந்தாலும் திறமையான ஊழியர்கள் இல்லாததால் அந்த துறைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று பெங்களூரில் நடைபெற்ற தொழில் நுட்பவல்லுனர்கள் கூட்ட்த்தில் விவாதிக்கப்பட்டது.

இந்திய விமான படையில் பயிற்சி பெற்ற 700 விமானி பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் 126 போரிடும் விமானங்களும் மற்றும் 100 ஹெலிக்காப்டர்களும் வாங்கவிருக்கிறார்கள் இந்நிலையில் அதனை இயக்குவதற்கு விமானிகள் இல்லை இதே நிலைமை தான் அணு அறிவியல்
துறையிலும் என்கிறார் சங்கைய இயக்குனர் நடுபலி அவர்கள்.

விமான போக்குவரத்து துறையானது விரிவுபடுத்தப்பட்டு அதனுடைய விமானி தேவை 2000 க்கும் அதிகம் மற்றும் 10,000 அதிகமான பழுதுபார்க்கும் பணியாளர்ச்கள். இந்த பணியிட்ங்களை நிரப்புவதுதென்பது கஷ்டமான காரியம் ஏனென்றால் ஏற்கனவே வேலையாட்கள் பற்றாக்குறையுள்ளது.

இதிலே சரியான தொழில்நுட்பம் பயின்ற வேலையாட்கள் பற்றாகுறை அதிகம். நாம் பக்கத்து நாடான சீனா 1700 தொழில்நுட்ப கல்லூரிகளில் 19 லட்சம் தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குகிறார்கள். ஆனால் நம்நாட்டில் 300 தொழில்நுட்ப கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்களைத் தான் உருவாக்க முடிகிறது அவர்களும் சரியான முறையில் பயிற்சி பெறாதவர்களே. உதாரணத்திற்கு க்டந்த 40 வருடத்தில் 15 இண்டீஜீனியஸ் எஞ்சின்களை உருவாக்கியிருக்கிறார்கள் ஆனால் நாமோ ஓரே ஒரு எஞ்ஜினைத் தான் உருவாக்கியிருக்கிறோம்.

பல கோடிரூபாய்க்கான ஒப்பந்தங்கள் வரவிருக்கிற நிலையில் இது போன்ற பற்றாகுறையை சரிசெய்யவில்லை என்றால் குறிபிட்ட காலத்துக்குள் ஒப்பந்த வேலையை முடித்து கொடுக்க முடியாது.

நல்ல திறமையான பயிற்சி பெற்ற வேலையாட்களை உருவாக்க முக்கியதுவம் அளிக்க வேண்டும் ரூ . 45,000 கோடி ரூபாக்கு முதலீடு வரவிருக்கிறது அது 1.25 மில்லியன் வேலை வாய்ப்புகளை ஏற்படப்போகிறது.
.

கணினி மையமாயாக்கலுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது விமான துறையிலும் மற்றும் பாக்காப்பு துறையிலும்.

என்று புலம்பும் நிலையில் நாம் இருக்கிறோம். மனித வளம் இவ்வளவு இருந்தும் இப்படி வருந்தும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

Friday, October 1, 2010

எச்சரிக்கை மணி பூர்வீக இந்தியர்களுக்கு - நேற்றைய தீர்ப்பு

ஒரு பெரும்பான்மையான சமூகத்தால் ஒரு சிறுபான்மை சமூகத்தின் உடமைகள் கைப்பற்றபட்டு இருக்கிறது.

பாபர் 500 வருடங்களுக்கு முன்னால் அந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டியெழுப்பி தொழுகை நடந்து கொண்டிருந்த ஒரு இடத்தை மற்றொரு பெரும்பான்மையான சமூகம் ஒன்று திட்டம் போட்டு கொள்ளை அடித்து கொண்டிருக்கிறது அதற்கு ஒரு நாட்டின் உயர் நீதி மன்றம் பெரும்பான்மையான சமூகத்திற்கு சார்பாக தீர்ப்பளித்திருக்கிறது.

எங்கே சிறுபான்மை சமூகத்திற்கு சாதமாக தீர்ப்பு வழங்கினால் பெரும்பானையான சமூகத்தால் சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம்கள் தாக்கப் படுவார்களோ என்று அஞ்சி இப்படி ஒரு மாபெரும் அபத்தமான தீர்ப்பை வழங்கி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

இதில் மூன்று நீதிபதிகளில் இருவர் ஓரளவுக்கு நடுநிலைமையோடு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் மற்றொருவர் இந்து மத வெறியர் அதனால் அவர் இந்துகளுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அடிப்படையிலே நீதிபதியும் ஒரு சாதாரண மனுஷன் தானே.

ஒரு நீதிபதி சட்டத்திட்டத்திற்கு ஏறப தீர்ப்பை வழங்க வேண்டுமே ஒழிய அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பை வழங்க கூடாது.

பாபரால் கட்டப்பட்டதுதான் அந்த மசூதி என்று எல்லோருக்கும் தெரியும் கடந்த 500 ஆண்டுகாலமாக அந்த இடத்தில் முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதற்கான எல்லா ஆதரமும் முஸ்லீம்கள் தரப்பிலான சன்னி வாஃப் அமைப்பு முன்வைத்தும் இது போதிய ஆதரம் இல்லை அதனால் இந்த மசூதி பாபரால் கட்டப்பட்டது என்பதை நிருபிக்க தவறிவிட்டது அதனால் இந்த இடத்தை மூன்றாக பங்கிட்டுக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்திருக்கிறது.

இந்த தீர்ப்பு எப்படி இருக்கிறது என்றால் 1998 ல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியது. அந்த தாக்குதலில் ஒரே ஒரு தீவரவாதி மட்டும் பிடிபட்டான் அவனது வாக்கு மூலத்தில் நாங்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் நாங்கள் அங்குதான் பயிற்சி பெற்றோம், கடல் வழியாக மும்பையில் ஊடுருவினோம், எனது பெற்றோர்கள் பாகிஸ்தான் நாட்டில் தான் வசிக்கிறார்கள் என்றதும் எல்லா தொலைக்காட்சிகளும் அவனது பெற்றோர்கள் இருக்கும் இடத்தை முற்றுகையிட்டு ஒலிபரப்ப தொடங்கியது இது பாகிஸ்தான் அரசுக்கும் மற்றும் பாகிஸ்தான் நீதிதுறைக்கும் தெரியும். இருந்தும் இந்திய அரசாங்கம் எல்லா விதமான ஆதாரத்தை வழங்கியும் இன்னும் சமந்தப்பட்ட தீவிரவாத குழுக்களை பிடிக்கவில்லை ஏன் என்று கேட்டால் போதிய ஆதாரம் தரவில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறது அது போலத்தான் சன்னி வாஃப் அமைப்பு வழங்கிய ஆதாரத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்து இந்த தீர்ப்பு வழங்கப்படிருக்கிறது.

ஒரு நீதிமன்றம் சாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பை வழங்க வேண்டும் அப்படிபட்ட தீர்ப்புதான் சரியான தீர்ப்பாக இருக்கும் அப்படிபட்ட நாடுதான் சரியான மற்றும் உயர்ந்த சிறந்த ஜனநாயக நாடாக விளங்க முடியும்.

இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு வரும் பொழுது அப்படி ஒரு தீர்ப்பை இந்தியன் என்கிற முறையில் நான் எதிர்பார்க்கிறேன்.

மீண்டும் இது போன்ற ஒரு தீர்ப்பு வந்தால் இதை வேறுவகையில் சமூகம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

ஆரியர்களுக்கு எதிராக மிண்டும் களமிரங்க பூர்வீக மக்களாகிய இந்தியர்கள் திராவிடர்களும் மற்ற சமூகத்தினரும் ஒன்று சேரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபடும்.

இப்பொழுது ஹிந்துக்கள் என்று பா.ஜ.க, R.S.S மற்றும் VHP போன்ற அமைப்புகள் ஆரியர்களை மட்டுமே சொல்லி வருகிறது இதுவே இன்னும் 500 வருடங்கள் ஆன பிறகு ஹிந்துக்கள் என்றால் ஆரியர்கள் மட்டும்தான் என்கிற நிலை வந்து ஆரியர்கள் தான் பூர்வீக இந்தியர்கள் மற்றவர்கள் எல்லாரும் அவர்களின் அடிமைகள் என்று வரலாறு எல்லா மட்டத்திலும் எல்லா இடங்களிலும் திருத்தி எழுதபட்டிருக்கும்.

அப்பொழுது மற்றவர்களின் கதி ?

நாங்கள் எல்லா மதத்தினரையும் சமமாக பார்க்கிறோம். யாராவது சிறுபான்மை சமூகத்திற்க்கு எதிராக நடந்து கொண்டாலோ அல்லது அவர்களை அழிக்க நினைத்தாலோ மீண்டும் ஆயிரம் பெரியார்கள் இந்தியா முழவதும் தோன்றுவார்கள் அவர்களில் சுபாஷ் சந்திரபோஷ் போன்றவர்கள் கூட வரலாம் அப்பொழுது ஆரியர்களின் நிலைமை?

அதனால் மக்களை கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவதையோ அல்லது பிரிவினைவாததை தூண்டுவதையோ நாங்கள் ஒரு போது அனுமதிக்கமாட்டோம்.

கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கு உயிரூட்ட நினைக்கிறது ஆரியர்களின் கூட்டம்.

இராமயணம் ஒரு கதை. அந்த கதை மக்களை நல்வழிப்படுத்தும் என்கிற நல்ல நோக்கத்தில் எழுதபட்டது. இதை ஆரியர்களின் சமூகம் உண்மை என்று சொல்லி மக்களை திசை திருப்பி மக்களை கடவுளின் பெயரால் சுரண்ட நினைக்கிறது மற்றவர்களை அழிக்க நினைக்கிறது. இதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இன்னும் நிறைய பேருக்கு இந்த உண்மை தெரியாது.குறிப்பாக இப்பொழுது உள்ள இளைஞர்களுக்கு. ஏதோ ஏட்டுக் கல்வி படித்தோம் பெற்றோர்கள் என்ன சொன்னார்களோ அதையே எந்த கேள்வியையும் கேட்காமல் நம்பினோம் என்று இருக்கிறார்கள்.

சிந்திக்க வேண்டும் எல்லா விஷயத்தை பற்றியும் படிக்க வேண்டும் உண்மையான வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை.

R.S.S, V.H.P மற்றும் B.J.P போன்ற அமைப்புகள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் மீண்டும் நீங்கள் எங்களுக்கு வேலை கொடுக்காதீர்கள்.

Thursday, July 22, 2010

காமராஜருக்கு அடுத்து கலைஞர்


எப்பொழுதோ எழுதவேண்டிய விஷயத்தை இப்பொழுதாவது பதிகிறேனே என்று நினைக்கும் போது வறுத்ததிற்கு பதில் மகிழ்ச்சி தான் பெருகுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கலைஞர் அவர்கள் சொல்லியிருந்தார் நாங்கள் காமாராஜரைப் போன்றுதான் சிறந்த கல்விக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.

எப்பொழுதுமே மற்ற மாநிலங்களை விட கல்வியில் நாம் முன்னோக்கிதான் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தொழில் நுட்பக் கல்லுரிகள் தமிழ்நாட்டில் மட்டும் 500 உள்ளது. கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கை 12000 ஆயிரத்திற்கு மேல் இருக்கின்றன.

எல்லா கிராம ஊராட்சிகளிலும் அரசு ஆரம்பகல்வி நிலையங்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது உயர்நிலைப் பள்ளிகள் இரண்டு கிராம ஊராட்சிகள் என்கிற அடிப்படையில் உள்ளது என்றால், தனியார் பள்ளிகள் கிராம ஊராட்சிகளில் குறைந்தது இரண்டு உள்ளது, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் கேட்கவே வேண்டாம் அவ்வளவு தனியார் பள்ளிகள் உள்ளது.

இதெல்லாம் கல்வி புரட்சியே என்று சொல்லலாம். தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இல்லாமல் கல்வியில் புரட்சி என்பது நடக்காது.

சமச்சீர் கல்வி என்று எல்லாருக்கும் சமமான கல்வியை கொண்டுவந்து ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்று பகுபாடு இல்லாமல் எல்லாருக்கும் சமமான கல்வியை கொடுத்ததில் கலைஞருக்கு பெரும் பங்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை.

அதே போன்று குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு இலவச கல்வி வழங்கி மாபெரும் கல்வி புரட்சிக்கு வித்திட்டுள்ளார் கலைஞர் அவர்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்  அவர்கள் சொல்கிறார் கல்விக்கடன் இந்தியாவில் வாங்கும் 10 பேரில் 4 மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தர்வர்கள் என்கிறார். அப்படியென்றால் கல்வியில் ஆர்வமில்லாமலா இவ்வளவு மாணவர்கள் கல்விக் க்டன் பெறுகிறார்கள்.

இதெல்லாமே கல்வி புரட்சிதான். காமாராஜருக்கு அடுத்தப்படியாக நான் இருக்கிறேன் என்று கலைஞர் சொல்வதில் நியாயம் இருக்கிறது.

இது போன்று அவர் நிறைய திட்டங்களை மக்களுக்காக வழங்க வேண்டும் என்று கேட்கிறேன் கலைஞரைப் போன்று மற்றவர்களால் இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தமுடியுமா என்றால் முடியாது என்று சொல்லலாம்.

கல்வி புரட்சியில் காமராஜருக்கு அடுத்தது கலைஞர் தான் என்பதில் சந்தேகமில்லை.

Thursday, July 15, 2010

வாழ்நாள் சாதனையாளர் - காமராஜர் பிறந்த நாள் செய்தி

108 வது பிறந்த நாள் இன்று.

விருதுநகரில் ஜூலை 15, 1903 ஆம் ஆண்டு பிறந்தார்.

ஏப்ரல் 13 1954 ஆம் ஆண்டு காமராஜர் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார்.

அவருடைய சாதனைகளை இன்று நினைவு கொள்வதில் நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம்.

1. குலக்கல்வித்திட்டத்தை ஒழித்தார்.
2. கடந்த ஆட்சியில் நிதி பிரச்னையால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தது மட்டுமல்லாமல் மேலும் 12000 ஆயிரம் பள்ளிகளை திறந்தார்.
3. ஏழை எளிய மாணவர்கள் 3 மைல்களுக்கு மேல் தாண்டி செல்லாமல் இருக்க பள்ளிகளை நிறுவினார்.
4. எல்லா பள்ளிகளுக்கும் முடிந்த வரை தேவையான எல்லா  அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.
5. எல்லா கிராமங்களிலும் ஆரம்பகல்வி நிலையங்களை அமைத்தார் எல்லா பஞ்சாயத்துகளிலும் 10 வது வரைக்கும் மேல் நிலைய பள்ளிகளை அமைத்தார்.
6. கல்லாமை என்கிற நிலைமையை இல்லாமை என்றாக்கினார். எல்லாருக்கும் 11 ஆம் வகுப்புவரை கல்வியை இலவசமாக்கினார்.
7. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை உலகிலேயே முதல் முறையாக அறிமுகப் படுத்தினார்.
8. அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்கினார். இதனால் பள்ளிகளில் ஏழை பணக்காரன் என்கிற பாகுபாட்டை களைந்தார்.
9. ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த கல்வி அறிவு சதவிகிதம் 7 % இருந்தது அதுவே காமராஜர் காலத்தில் 37 % ஆக உயர்ந்தது.
10. ராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் 12000 பள்ளிகள் இருந்தது அதுவே காமராஜர் காலத்தில் 27000 ஆயிரமாக உயர்ந்தது.
11. பள்ளிகள் மட்டும் இருந்தால் போதுமா என்று கல்விதரத்தையும் உயர்த்தினார்.
12. வேலை நாட்களை 180 லிருந்து 200 ஆக உயர்த்தினார்.
13. இவரது காலத்தில் தான் IIT என்னும் இந்தியன் இன்ஸிடியூட் ஆப் மெட்ராஸ் தொடங்கப்பட்டது
14. இவரது காலத்தில் தான் ஆரணி, அமராவதி, கீழ் பவானி, மணிமுத்தாறு, காவிரி பாசன பகுதியில்,வைகை, சாத்தூர்,கிருஷ்ணகிரி, புலம்படி,பரம்பிக்குலம், நொய்யாறு போன்ற ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டன.
15. பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன அதில் குறிப்பாக நெய்வேலி நிலக்கரி சுரங்கம், ஊட்டியில் புகைப்பட சுருள் தயாரிக்கும் தொழிற்சாலை,சிகிச்சை கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, சர்க்கரை ஆலைகள், மணலியில் சுத்திகரிப்பு ஆலை போன்ற பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
16. குந்தா நீர்மின் திட்டம், ஊட்டி மற்றும் நெய்வேலியில் அனல்மின் திட்டம் போன்ற பெரியத்திட்டங்கள் இவரது ஆட்சிக் காலத்தில் தான் தொடங்கப்பட்டது.

எல்லா துறைகளும் இவரது ஆட்சிகாலத்தில் சிறப்பாக முன்னேறியது.

எந்த அரசியல் தலைவர்களும் செய்யாத மற்றும் செய்ய முடியாத ஒரு காரியத்தை இவர் செய்தார் என்றால் அது கே-பிளான்.

இந்த K –Plan படி மூத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்லது இரண்டு பதவிகளில் இருப்பவர்கள் அதாவது கட்சி பதவியிலும் மற்றும் அமைச்சர் பதவியிலும் இருப்பவர்கள் அமைச்சர் பதவியை துறந்து கட்சிப் பணியை செய்ய வேண்டும் என்றார் இந்த திட்டம் காமராஜ் திட்டம் என்றானது.

இவரது தொலை நோக்குத்திட்டத்தை பார்த்த அன்றைய பாரத பிரதமர் ஜவஹலால் நேரு அவர்கள் காமராஜரை டெல்லிக்கு அழைத்து உங்களது சேவை தமிழ்நாட்டிற்கு மட்டும் போதாது இந்திய தேசம் முழுமைக்கும் தேவை என்றார்.

காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 1963ஆம் ஆண்டு அக்டோபர் 9 தேதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகள்:

1952 ல் பாரளுமன்ற உறுப்பினராக திருவல்லிபுத்தூர் தொகுதி.
1954 ல சட்டமன்ற உறுபினராக குடியாத்தம் தொகுதி.
1957 ல் சட்டமன்ற உறுப்பினராக சாத்தூர் தொகுதி.
1962 ல் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் சாத்தூர் தொகுதி.
1969 ல் பாராளுமன்ற உறுப்பினராக நாகர்கோவில் தொகுதி.
1971 ல் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் நாகர்கோவில் தொகுதியில்.


இவருடைய அரசில் பங்கு கொண்டுள்ள அமைச்சர்களுக்கு கூறிய அறிவுரை தான் இன்றும் பேசபடுகிறது.

அந்த அறிவுரை “ எந்த பிரச்னையும் எதிர்கொள்ளுங்கள் அதில் இருந்து ஒதுங்க நினைக்காதீர்கள் தீர்வை காணுங்கள் என்றார் ”.

இரண்டு பாரத பிரதமர்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

பெருமை மிகு விருதான ” பாரத் ரத்னா ” விருது இவருக்கு வழங்கப்படது.

அக்டோபர் 2, 1975 ஆம் ஆண்டு அவர் தனது கடமையை முடித்து கொண்டார்.

காமராஜர் பிறந்த மண்ணில் நாம் பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமைபட்டுக் கொண்டு அவருடைய பிறந்த நாளான இன்று அவரது வழியில் நாமும் நடந்து காட்டவேண்டும் என்கிற உறுதிமொழியை எடுப்போம்.

Monday, July 12, 2010

காட்டுமிராண்டி தனமான ஆணாதிக்க சட்டம்


ஈரானை சேர்ந்தவர் அசார்பக்ரே. இவரை 14 வயதில் விருப்பம் இன்றி ஒரு முதியவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் வேறு ஆண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறி இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

எனவே கைது செய்யப்பட்ட அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் 18 வயது நிரம்பியதும் அவருக்கு தாப்ரிஷ் சிறையில் இந்த தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


இதைத்தொடர்ந்து அவர் 4 வருடமாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு 18 வயது நடைபெறுகிறது. இன்னும் சிறிது நாளில் தண்டனை நிறைவேற்றப்பட உள்ள அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈரானின் மனித உரிமை கமிஷனின் மினா அகாடி ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே தண்டனையை 99 சவுக்கடியாக குறைக்க அவரது வக்கீல்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த சட்டம் காட்டு மிராண்டித்தனமான பிற்போக்குத்தனமானது உலக மனித உரிமை ஆணையம் இது போன்ற சட்டத்தை எதிர்த்து தீர்மான நிறைவேற்றி உலகில் எந்த மூலையிலும் பாலியல் ரீதியான பிரச்னைக்கு கல்லாலோ அல்லது எந்தவித துன்புறுத்தலாலோ ஒருவருக்கு மரண தண்டனை வழங்க கூடாதென்று வழியுறுத்த வேண்டும்.

ஒரு பெண் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது ஒரு ஆண் எந்த பெண்ணை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற நிலை இருக்க வேண்டும் 21 வது நூற்றாண்டில் இது போன்று ஒரு காண்டிமிராண்டித் தனமான சட்டத்தை எதிர்த்து உலகமக்கள் ஒன்று திரள வேண்டும்.

ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பிடித்த எந்த ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ வாழ உலக சட்டம் நடை முறைக்கு வரவேண்டும்.

ஒருவருடைய அந்தரங்க வாழ்க்கையை எந்த ஒரு பொதுவான சட்டமும் கட்டுப்படுத்த கூடாது அப்பொழுது தான் தனிமனித உரிமை காக்கப்படும்.

ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் ஒரு பெண் தனக்கு பிடித்த ஆணுடன் வாழ முடியாது என்றால் எவ்வளவு ஆணாதிக்க தனமான சர்வதிகாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது போன்ற ஒரு ஆணாதிக்க சட்டங்களை உடனே கொளுத்தி போட உலகமக்கள் முன்வரவேண்டும்.

சட்டம் எல்லாருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும் எந்த தனிமனிதனையும், அவனது தனிபட்ட சுதந்தரத்தை பாதிக்காதவகையிலும், மற்றும் ஒவ்வொருத்தருடைய தனிபட்ட சுதந்தரத்தை பேணிக்காக்கும் வகையிலும் பொதுவான உலகசட்டம் நடை முறைக்கு வரவேண்டும்.

Saturday, July 10, 2010

தமிழக சட்டசபையின் ஆசிரியர் தந்தை பெரியார்

தமிழக சட்டசபை வளாகம் சரியான ஒரு இடத்தில் அமைந்திருக்கிறதா என்றால் தெரியாது ஏனென்றால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வழி. இரயில் நிலையத்திற்கு செல்லவேண்டுமானால் அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். பாரி முனைக்குச் செல்லவேண்டுமானாலும் அந்த வழியாகத்தான். இப்படி நெரிசல் மிகுந்த பகுதியில் கட்டயிருப்பது மேலும் கூட்ட நெரிசலைத்தான் ஏற்படுத்தும்.

துணை நகரம் அமைப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. மீண்டும் தி.மு.க பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால் துணைநகரம் அமைவதில் எந்த சிக்கலும் இருக்காது.

எப்படி சட்டமன்ற வளாகம் அமைக்கப்பட்டதோ அப்படி துணை நகரமும் கலைஞர் இருக்கும் போதே அவருடைய ஆட்சியிலே ஏற்பட்டால் அவருடைய அரசியல் வாழ்க்கையில் மேலும் ஒரு மைல்கல்லாக அமையும்.

இப்பொழுது அமைந்துள்ள ஒருகிணைந்த தலைமைச் செயலகமும், சட்டசபை வளாகமும் பசுமை திட்டத்தின் கீழ் முழுமையான பாதுக்காப்புடன் அமைந்துள்ளது அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை அதில் வேற்று மனிதர்களோ அல்லது சந்தேகத்திற்குறிய நபர்களோ உள்ளே நுழைய முடியாது.

இந்த சட்டசபை வளாகம் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாநகருக்கு வெளியில் அமைக்கலாமா இல்லை மாநகருக்குள்ளே அமைக்கலாம் என்கிற ஒரு மாற்றுக் கருத்து இருந்தது. சட்டசபை வளாகம் அமைக்க YMCA விளையாட்டு மைதானமும் பரிசீலனையில் இருந்தது. அது பின்னர் கைவிடப்பட்டது அ.தி.மு.க ஆட்சியில் பின்னர் முழுவதுமாக கைவிடப்பட்டது சட்டசபை வளாகம் அமைக்கும் திட்டமே.

2006 ல் தி.மு.க ஆட்சி அமைத்த பிறகு அந்த திட்டத்தை கலைஞர் அவர்கள் கையிலெடுத்து ஓமந்தூரார் தோட்டத்தில் கட்ட தீர்மானித்து எதேச்சையாக கட்டி முடித்த அந்த இடம் மாபெரும் வரலாற்று சான்றை பெற்றுள்ளது.


திரவிட தந்தையாகிய பெரியார் அமர்ந்து பாடம் எடுப்பதைப் போலவும் மூத்த மாணவனாகிய அறிஞர் அண்ணா மற்ற சக மாணவர்களாகிய உறுப்பினர்களை திரவிட பாசரைக்கு அன்புடன் அழைப்பதை போலவும் இயற்கையாக அமைந்துள்ளது.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை சட்டசபைக்கு அண்ணா அவர்கள் வரவேற்பதைப் போன்றும் சட்டமன்றத்திலே குழுமியுள்ள உறுப்பினர்களுக்கு தந்தை பெரியார் பாடம் நடத்துவதை போன்றும் உள்ளது.

நீங்கள் வண்டியில் பயணம் செய்யும் போது பார்த்தீர்களே ஆனால் அண்ணாசாலையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் போது முதலில் வாலாஜா சந்திப்பில் அறிஞர் அண்ணா அவர்கள் வரவேற்பார் அடுத்த சிக்னலிலே தந்தை பெரியார் அமர்ந்த்திருப்பதைப் பார்ப்பீர்கள்.

தந்தை பெரியார் சட்டமன்ற வளாகம் முன்பு அமர்ந்திருப்பதால் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடம் எடுப்பதை போன்று இருக்கும்.

இந்த காட்சி இயற்கையிலே அமைந்த காட்சி அது. செயற்கையாக யாரும் சட்டமன்றம் கட்டியபிறகு சிலைகளை அமைக்கவில்லை.

இயற்கையே அப்படியொரு அழகை தந்துள்ளது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை கொள்ளதக்க விஷயமாக உள்ளது என்றால் மிகையல்ல. நமக்கெல்லாம் வழிகாட்டியாகவும், திரவிட தந்தையாகவும் மற்றும் என்றுமே சட்டமன்ற உறுபினர்களுக்கு ஆசிரியராகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள். அதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கடமையை சரிவர செய்யுங்கள் நம்மை என்றுமே தந்தை பெரியார் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்கிற நினைப்போடு.

Friday, June 25, 2010

" தமிழுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் : முதல்வர் வேண்டுகோள்

""தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,'' என்று செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கங்களின் துவக்க விழா, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள "டி' ஹாலில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நேற்று காலை நடந்தது.

ஆய்வரங்கத்தை துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:தமிழ் மொழியை மேலும் செழுமைப்படுத்திடவும், அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதை வளர்த்து 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துகளையும் இந்த ஆய்வரங்கத்தின் மூலமாகப் பெற இருக்கிறோம்.தமிழ் மொழி - தமிழர் பண்பாடு - நாகரிகத்தைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது எல்லா முனைகளிலும் புதிய எழுச்சியைக் காண முடிகிறது. ஏறத்தாழ 50க்கும் மேலான நாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது, புதிய தெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களை புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும். அந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாக கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டும்.

கோல்கட்டாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம், சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816ல் எல்லிசு, 1856ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர்.இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக் குடும்பம். அக்குடும்பத்தின் முதன்மை மொழி, தமிழ் என்னும் உண்மையை உலகிற்கு அவர்கள் உணர்த்தினர். 1927ல் ஜான் மார்ஷலின் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு, உலகின் கருத்தைத் தமிழின் பால் ஈர்த்தது.அதன் பின், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் குறித்து அறிந்து கொள்வதில், உலக நாடுகளின் அறிஞர்கள் ஆர்வம் காட்டினர்.

அவர்கள் ஆராய்ந்து, தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர் தம் இலக்கிய விழுமியம், கலைநயம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.திராவிட இனத்தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர். திராவிடம் தந்த செழிப்பும், வலிவும் தான், ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.வட மாநில திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டு, தமிழர்கள், தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வாதிட்டு நிலைநாட்டுகிறார் சோவியத் மொழி அறிஞர் சாகிரப்.காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள், திராவிட மொழிப் பிரிவின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர்.

பீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் "குருக்கர்' என்போர் திராவிட மக்களே என்பது, அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.இந்திய நாகரிக அடையாளமான சேலையும், வேட்டியும் திராவிட நாட்டின் கொடையாகுமென்று பேராசிரியர் சட்டர்ஜி, "இந்தோ - ஆரியன் - இந்து' என்ற நூலில் எழுதியுள்ளார். ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு, திராவிட வழிபாடே.அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோவில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது. ஆதிச்சநல்லூரின் மண்டை ஓடுகள், சிந்துவெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன.சங்க காலம், கி.மு., நான்காவது நூற்றாண்டின் துவக்க காலம் எனக் கொண்டால், சங்க இலக்கியங்களிலிருந்து திராவிட நாகரிகத்தை அறிய முடிகிறது.

ராமச்சந்திர தீட்சிதர் எழுதிய, "தமிழர் தோற்றமும், பரவியதும்' என்ற நூலில், "மத்திய தரைக்கடல், குமரிக் கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா எங்கும் பரவியது தமிழர் நாகரிகமே' என்று கூறியுள்ளார்.தமிழ் மொழியின் தொன்மையைப் பொறுத்தவரை, தொல்காப்பியம் போன்றதோர் பழமை இலக்கணம், எந்த மொழியிலும் இல்லை. திருக்குறள் போல அற இலக்கியம், எந்த மொழியிலும் இல்லை. சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான காப்பியம், எந்த மொழியிலும் இல்லை. ஆசியா முழுவதும் கோலோச்சிய பவுத்த சமயத்துக்கு மணிமேகலை போல ஒரு காப்பியம், பாலி மொழியிலும் இல்லை.எல்லா சமயங்களையும், சைவ, வைணவ சமயங்களையும், சமண, பவுத்த சமயங்களையும், கிறித்துவ, இசுலாமிய சமயங்களையும், இதயத்திலே ஏந்திக்கொண்ட மொழி தமிழ். சமயந்தோறும் நின்ற தையல் எனப் போற்றப் பெறும் தமிழ், சமயங்களையும் வளர்த்து தன்னையும் வளர்த்துக் கொண்ட மொழி.

திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம் தமிழினம். மயிலாடுதுறைக்கு அருகில் கழுக்காணி முட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையினரால், முதலாம் ராசாதிராசன் காலத்தைச் சேர்ந்த கி.பி., 1053வது ஆண்டைச் சேர்ந்த 85 செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.வில், புலி, கயல் ஆகிய சேர, சோழ, பாண்டியர்களின் முத்திரைகளோடு கிடைத்துள்ள அந்தச் செப்பேடுகள், வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரும் கருவூலம். தஞ்சை விசயாலயச் சோழன், பல்லவர்களிடமிருந்து கைப்பற்றியதற்கான புதிய வரலாற்றுக் குறிப்பு, இச்செப்பேட்டில் கிடைத்துள்ளது.இந்த செப்பேடு, மாநாட்டு கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி முறையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது உத்திரமேரூர் கல்வெட்டு. இவையெல்லாம் தமிழர்களின் தொடர்ச்சியான வரலாற்றுப் பதிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இந்த பெருமையையெல்லாம் தமிழர்கள் தான், வெளிநாட்டவர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர், அவற்றை தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலை தான் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.தமிழுக்கும், தமிழினத்துக்கும் ஆற்ற வேண்டியவை, இன்னும் ஏராளமாக உள்ளன. இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். கிரேக்கம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் தமிழியல், தமிழினம் குறித்தும் எழுதப்பட்ட நூல்கள், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

உலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள் மின்மயமாக்கப் பெற்று, உலகில் உள்ள ஒரு பகுதியில் உள்ளவர்களும் அவற்றைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும். துறைதோறும் தமிழ் பயன்பட வேண்டும். வகை வகையாய் அகராதிகளும், தொகை தொகையாய் கலைக் களஞ்சியங்களும் வர வேண்டும்.இன்னும் என்னென்ன தமிழுக்கு வேண்டும் என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கிற அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லி, இந்த அரசுக்கு ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, June 22, 2010

ஹூ ஜிண்டாவ்


யார் இவர்?.

இவர் தான் தற்போதைய சீனாவின் தந்தை. இவர்தானே சீனா என்கிற மாபெரும் குடும்பத்தை வழிநடத்துகிறார் அதனால் தான் நான் அவரை தந்தை என்று சொல்கிறேன்.

அவ்வாறே நூலாசிரியரும் குறிப்பிடுகிறார். மூன்று தலைமுறைகளை தெரிந்தவர், மூன்று தலைமுறை தலைவர்களுக்கு கீழும் வேலை செய்திருக்கிறார் என்றால் அதிபர் என்பதை விட இப்பொழுது அவரை தந்தை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

மாவோ,டெங்சியோங், ஜியாங் தற்போது ஹூ ஜிண்டாவ்.


புத்தகத்தை வாங்க மேலே உள்ள தொடர்பை சொடுக்கவும்.

ஹூ ஜிண்டாவ் படித்தேன் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். நடை நன்றாக இருந்தது. இன்னும் சொல்லபோனால் கொஞ்சம் கொஞ்சமாக தொகுத்து கொடுத்தது படிப்பதற்கு எளிமையாக இருந்தது. தலைவர்களுடைய பெயர்கள் மாவோ, டெங்சி, ஜியாங்,ஹூ வைத் தவிர மற்றவர்கள் பெயர் மனதில் நிற்பதற்கு கொஞ்சம் கஷ்டம்.

ஹூ வை பற்றி படிப்பதை விட சீனாவை பற்றி அதிக அறிமுகம் செய்கிறது என்றே தோன்றுகிறது. எனக்கு அவ்வளவாக சீனாவைப் பற்றி தெரியாது இருந்தாலும் கொஞ்சம் தெரிந்து கொள்ள உதவியது. புள்ளி விவரங்கள் புத்தகத்திற்கு வலுசேர்ப்பதாக இருந்தது.

கம்யூனிசத்தை கொஞ்சம் கொஞ்சமாக கை கழுவி கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு நிறைய உண்மையான புள்ளி விவரங்களை அரசாங்கம் நீண்டகாலத்திற்கு மறைக்கும் போது அதன் மீது தாக்கம் ஏற்பட்டு மாற்று சிந்தனை ஏற்பட்டு உடைவதற்கோ அல்லது உள்நாட்டு பிரச்னைகள் வருவதற்கு நிறைவே வாய்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது.

பத்திரிக்கை சுந்தந்திரம் பறிக்கப்பட்டும், எழுத்துரிமை, பேச்சுரிமை நசுக்கப்பட்டும். உண்மையான ஜனநாயகத்தை இன்னும் முடமாக்கிவைத்துள்ளது சீன ஒற்றை கட்சி ஆட்சி. கம்யூனிஸமா இல்லை முதலாளித்துவமா என்று வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அங்கே ஏழைகளிடத்திலே கம்யூனிஸ ஆட்சியும், முதலாளிகளிடத்திலே முதலாளித்துவ ஆட்சியையும் செய்துவருகிறது ஒற்றைக் கட்சி என்று சொல்லும் ஹூ ஜிண்டாவ் அரசாங்கம்.

மனித உரிமை மீறல்கள் நிறையவே அங்கு அரங்கேறுவதைப் போன்று தான் தோன்றுகிறது அதுதான் உண்மையும் கூட.

சீனாவிலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிக்கிடக்கிறது இந்தியாவைப் போன்றே.

இருந்தாலும் இந்தியாவில் எல்லாரும் குறிப்பாக கொஞ்சம் வசதி படைத்தவர்கள் நிம்மதியாக வாழலாம் ஆனால் சீனாவில் அப்படியில்லை என்றே தோன்றுகிறது. கம்யூனிஸ அரசு எதை எப்பொழுது பிடுங்கிக் கொள்ளுமோ யார் எந்த சமயத்தில் இருப்பிடத்தை காலி செய்ய வற்புறுத்துவார்களோ என்று நிம்மதியாக இருக்க முடியாது.

இந்தியாவைப் போன்றே அங்கும் லஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்து தாண்டவமாடுகிறது என்பதை சீனா விலகும் திரையில் சொல்லப்பட்டது. இந்த புத்தகத்தில் மிஸ்ஸாகி இருக்கிறது.

சீனாவைப் பற்றி, சீன அதிபர்களைப் பற்றி, பொருளாதரத்தைப் பற்றி, அபரிமிதமான வளர்ச்சியை பற்றி, கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப் போல் கம்யூனிஸம் தேய்ந்து முதலாளித்துவம் மாற்றத்தைப் பற்றி இந்த புத்தகம் நன்றாக அலசி ஆராய்கிறது.

Monday, June 21, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு தங்க நாணயம் வெளியீடு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, பாரத ஸ்டேட் வங்கி, சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளது;

துணை முதல்வர் ஸ்டாலின் நாணயங்களை வெளியிட்டார்.பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 2, 4 கிராம் எடைகளில் இரண்டு சிறப்பு நாணயங்கள் வெளியிடும் விழா, ரெசிடென்சி ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின், சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட்டார். தலைமை செயலர் ஸ்ரீபதி, முதல் நாணயத்தை பெற்றுக்கொண்டார்.இந்நாணயத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் இடம், பாரத ஸ்டேட் வங்கி விற்பனை நிலையங்கள் மற்றும் ரேஸ்கோர்சில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

"வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டு நினைவாக, சிறப்பு தங்க நாணயங்களை பொதுமக்கள் வாங்கி மகிழலாம்' என, வங்கி துணைப் பொதுமேலாளர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.

நாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை, பீளமேட்டிலுள்ள, "கொடிசியா' வளாகத்தில் நாளை ( 23ம் தேதி)துவங்குகிறது. வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த மாநாட்டை நேரில் காண இயலாத பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தினமலர் இணைய தளம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு அழைப்பாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட 4,600 பேரும், பல லட்சம் மக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, நாளை காலை 10.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்குகிறது. துணைமுதல்வர் ஸ்டாலின், வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டுச் சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிடுகிறார். அதன் பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குகிறார். பேராசிரியர் அஸ்கோ பார்போலா, விருது ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி, தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகிறார். மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, மாநாடு வளாகம் வரை நடக்கிறது.

வரும் 27ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் இம்மாநாட்டின் நிகழ்வுகள், இரு விதமாக வகைபடுத்தப்பட்டுள்ளன. மாநாடு பொதுநிகழ்வுகளில் மக்கள் பங்கேற்க ஏதுவாக மிக பிரம்மாண்டமான மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாநாடு துவக்க விழா, நாளை காலையில் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கிறது. நாளை மறுதினம் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடக்கின்றன. வரும் 25ம் தேதி கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

தொடர்ந்து, 26ம் தேதி கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடக்கின்றன. மாநாடு நிறைவு நாளான 27ம் தேதி நடக்கும் நிகழ்வில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், பிரணாப்முகர்ஜி பங்கேற்கின்றனர். மேற்கண்ட அனைத்து இந்நிகழ்வுகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். அதே வேளையில், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்கம் நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்குள், பங்கேற்பாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நன்றி : தினமலர்

செம்மொழி மாநாடு நடத்துவது ஏன்

"உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவது ஏன்' என்பது குறித்து, முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, தூர்தர்ஷன் "டிவி' மற்றும் ரேடியோவில், முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:இதுவரை, எட்டு உலகத் தமிழ் மாநாடுகள் நடந்துள்ளன. தற்போது கோவையில் நடக்கும் மாநாடு, அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடக்கும் மாநாடு. தமிழ், "செம்மொழி' என அறிவிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் மாநாடு.

உலகில் 6,880 மொழிகள் உள்ளன. இதில், 2,000 மொழிகள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றுள், "கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஹீப்ரு, சமஸ்கிருதம்' ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில், தமிழும் செம்மொழி எனும் சிறப்பை தற்போது பெற்றுள்ளது.தமிழ், மற்ற செம்மொழிகளை விட மேலானது. லத்தீன், ஹீப்ரு மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் இடையில் நசிந்து தற்போது வளமடைந்து வருகிறது. சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. சீனம், பட எழுத்து முறையில் உள்ளது. அரேபியம், காலத்தால் மிகவும் பிந்தியது. பாரசீகம், அரேபிய வரி வடிவத்தில் எழுதப்படுகிறது.

தமிழோ 2,500 ஆண்டுகள் தொடர்ச்சியான இலக்கியங்களைக் கொண்டுள்ளது. தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. இல்லற வாழ்க்கைக்கும் அகம், புறம் என வகுத்து இலக்கணம் கூறுவது, உலக மொழிகளிலேயே தமிழ் ஒன்றுதான்; இது தமிழின் தனிச் சிறப்பு.தமிழ், வேறு மொழிகளை சார்ந்திருக்கவில்லை; தனித்தன்மை வாய்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலியன திராவிட மொழிகள் எனப்படுகின்றன. இந்த மொழிகளுக்கு மூல மொழியாக தமிழ் விளங்குகிறது என கால்டுவெல் கூறியுள்ளார். அவர், 12 திராவிட மொழிகளை ஆராய்ந்து எழுதியுள்ளார்.

"மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூல், இந்த உண்மையை உரைக்கிறது.தமிழ், உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான நீதியையும், ஒழுக்கத்தையும், அற மாண்புகளையும் கூறுகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்னே செம்மொழி சிறப்பை தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல், 2004ல் தான் கிடைத்துள்ளது. இந்த பெருமையை கொண்டாடும் வகையில் தான், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது.கலிபோர்னியா பல்கலை தமிழ்த் துறைத் தலைவர் ஜார்ஜ் ஹார்ட், பின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா உட்பட, 49 நாடுகளில் இருந்து, 536 தமிழ் அறிஞர்கள் வருகின்றனர். இந்தியாவில் இருந்து, 5,000 பேர் பங்கேற்கின்றனர்.

பல்வேறு அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் மாநாட்டிற்கு வந்து செல்வோருக்கு வசதியாக சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்த நடக்கும், செம்மொழி மாநாடு, உலகத் தகவல் தொழில் நுட்பவியல் மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்கிறேன் என்றார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல்





கோவையில் வருகிற 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையான நிகழ்ச்சி நிரல்

தொடக்க விழா கோவை மாநாட்டு அரங்கில் 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசுகிறார்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மாநாட்டை தொடங்கி வைத்து, “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை” பின்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு வழங்குகிறார். தமிழக ஆளுநர் பர்னாலா மாநாட்டு சிறப்பு மலரை வெளியிடுகிறார். அமைச்சர் அன்பழகன் தகுதியுரை நிகழ்த்துகிறார்.

பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), வா.செ. குழந்தைசாமி, கா. சிவத்தம்பி (இலங்கை) ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். தலைமை செயலாளர் ஸ்ரீபதி நன்றி கூறுகிறார்.

23ம் தேதி மாலை பிரமாண்டப் பேரணி

23-ந்தேதி மாலை 4 மணிக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பேரணி நடைபெறுகிறது. இது கோவை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி, அவினாசி சாலை வழியாக சென்று மாநாட்டு வளாகத்தை அடைகிறது.

“இனியவை நாற்பது” என்ற தலைப்பில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில் இலக்கியம், கலை, வரலாறு ஆகியவற்றை நினைவூட்டும் அலங்கார வண்டிகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

24ம் தேதி மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி

24-ந்தேதி காலை 10.30 மணிக்கு லாரன்ஸ் குழுவின் மாற்று திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. பகல் 12 மணிக்கு பொது கண்காட்சியை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திறந்து வைக்கிறார். மலேசிய மந்திரி சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

புத்தக கண்காட்சியை ஜி.கே. வாசன் திறந்து வைக்கிறார். மாலத்தீவு அமைச்சர் அகமது நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இணைய தள கண்காட்சியும் திறக்கப்படுகிறது.

அப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கம்

பிற்பகல் 2.30 மணிக்கு “புதியதோர் உலகம் செய்வோம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் அப்துல் ரகுமான் தலைமை தாங்குகிறார். வ.மு. சேதுராமன், பொன்னடியான், ஆண்டாள் பிரியதர்சினி, வின்சென்ட் சின்னத்துரை, கவிதை பித்தன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

மாலை 4 மணிக்கு “சமயம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு சுந்தரலிங்க சாமியடிகளார் தலைமை தாங்குகிறார். பேராயர் சின்னப்பா, ஸ்ரீபால், சாரதாநம்பி ஆரூரான், காதர் மொய்தீன் உள்பட பலர் பேசுகிறார்கள். இரவு முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய “போர் வாளும் பூவிதழும் நாட்டிய நிகழ்ச்சியை பத்மா சுப்பிரமணியம் குழுவினர் வழங்குகிறார்கள். நடனம், நாடகம், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

25ம் தேதி கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்க கூட்டம்

25-ந்தேதி காலை 10 மணிக்கு “கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்க கூட்டம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார். ஈரோடு தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கவிதை படைக்கிறார்கள்.

11.30 மணிக்கு “தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே, இடைக்கால இலக்கியமே, இன்றைய இலக்கியமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. சோ. சத்தியசீலன் நடுவராக பங்கேற்கிறார். குமரி அனந்தன் உள்பட பலர் பேசுகிறார்கள்.

25ம் தேதி கருணாநிதி தலைமையில் கருத்தரங்கம்

மாலை 4 மணிக்கு “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

இதில் தங்கபாலு, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கி. வீரமணி, டாக்டர் ராமதாஸ், இல. கணேசன், டி. ராஜா எம்.பி., ஆர்.எம். வீரப்பன், திருமாவளவன், ஸ்ரீதர் வாண்டையார், காதர் மொய்தீன், ஜெகன்மூர்த்தி, செல்லமுத்து, தாவூத் மியாகான், திருப்பூர் அல்தாப், சந்தானம் பஷீர் அகமது ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

26ம் தேதி வாலி தலைமையில் கவியரங்கம்

26-ந்தேதி “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. இதற்கு கவிஞர் வாலி தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் மு. மேத்தா, பா. விஜய் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

அடுத்து வா.செ. குழந்தைசாமி தலைமையில் “செம்மொழி தகுதி” என்ற தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்பட பலர் பேசுகிறார்கள். இதையடுத்து க.ப. அறவாணன் தலைமையில் “கடல் கடந்த தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

நடிகை ரோகினியின் நாட்டிய நாடகம்

மாலை 4.30 மணிக்கு சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் “தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித் திரைக்கே, சின்னத்திரைக்கே, அச்சுத்துறைக்கே” என்ற தலைப்பில் நடக்கிறது. இதில் பாரதிராஜா, நடிகர் சந்திரசேகர், லியோனி, எஸ்.வி. சேகர், நக்கீரன் கோபால் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இரவு கொடிசியா வளாகத்தில் நடிகை ரோகிணி நடிக்கும் “பாஞ்சாலி சபதம்” நாடகம் நடக்கிறது.

27-ந்தேதி காலை

27-ந்தேதி காலை 10 மணிக்கு “வித்தாக விளங்கும் மொழி” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்துக்கு நடிகர் சிவக்குமார் தலைமை தாங்குகிறார். சுப. வீரபாண்டியன், திருச்சி செல்வேந்திரன், ஜெகத்கஸ்பார் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

பிரணாப் தலைமையில் நிறைவு விழா

மாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். ப. சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு தபால் தலையை மத்திய அமைச்சர் ராசா வெளியிடுகிறார்.

முதல்வர் கருணாநிதி, “சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக் கியதற்கான “கணியன் பூங்குன்றனார்” விருது வழங்கி மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். முன்னதாக தலைமை செயலாளர் ஸ்ரீபதி வரவேற்கிறார். முடிவில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அதிகாரி அலாவுதீன் நன்றி கூறுகிறார்.

Friday, June 18, 2010

ராகுல் காந்தி


அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு இன்று 40 வது பிறந்தநாள்.

அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Wednesday, June 16, 2010

D.D, தூர்தர்ஷன் நினைவுகள்

" பழைய நினைவுகள் என்றுமே சுகமானதாக இருக்கும் எல்லாருக்கும், எனக்கும் அப்படித்தான் "

ஒரு நல்ல பாட்டு கமலஹாசன் நடிச்ச பாட்டு, அந்தப் பாட்டுக்கூட ‘அவள் ஒரு தொடர்கதை’ன்னு நினைக்கிறேன். அது வந்து ஒரு ‘விகடகவி’ என்று ஆரம்பிக்கும், சரியாக தெரியவில்லை. அதுல சின்னப்பசங்கல கவர்பன்ற மாதிரி சூப்பராக இருக்கும். நான் அப்படியே ஆழ்ந்து பாடல பார்த்து பாட்ல-சிரிக்கிறப் பசங்கக்கூட சேர்ந்து நானும் சிரிச்சிட்டு இருந்தப்ப ‘டப்பு டிப்பு’ன்னு ஒரு சாத்து விழுந்தது. என்னடான்னு பார்த்தா,

"என்னை அம்மா அடிச்சிருக்காங்க".

என்னடா இன்னும் தூக்கம் சாயங்கால நேரத்துல, போயி மூஞ்சிக் கழுவிட்டு வந்து படின்னு ஒரு சத்தம் போட்டாங்க. அப்பதான் தெரிந்தது, அந்தப் பாட்டு கனவுல வந்தது. போனவாரம் சென்னைத் தொலைக்காட்சியில போட்ட ‘ஒலியும் ஒளியும்’ நினைவுக்கு வந்தது.

நான் சாயங்காலாமா ஸ்கூல்ல இருந்து வந்து தூங்கிட்டேன். வெள்ளிக்கிழமை (அன்று மதியம் தான் எனக்கு விளையாட்டு பிரியடு(Period)) முடிந்துவிட்டு வந்து அப்படியே புத்தகப் பையைபோட்டுட்டு களைப்பாக படுத்துட்டேன். எப்பமே வெள்ளிக் கிழமைன்னால ஒரு சந்தோஷம் வந்துவிடும். அடுத்த இரண்டுநாளுமே பள்ளிவிடுமுறை நாட்கள் சனி, ஞாயிறு.

ஒரே ஜாலியாக விளையாடலாம் என்பதைவிட நிறைய நிகழ்ச்சிகள் சென்னைத் தொலைக்காட்சியில் (D.D) ல வரும்.

என்னை ‘ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்னு’ வடிவேல் சொல்ற மாதிரி ‘நல்ல நிகழ்ச்சி’ வயலும் வாழ்வும். இந்த நிகழ்ச்சியைத் தவிர எல்லா நிகழ்ச்சியும் நான் பார்ப்பேன்.

முக்கியமாக வெள்ளிக் கிழமைன்னு சொன்னாலே ‘ஒளியும் ஒலியும்’ தான் 7:30லிருந்து 8:30 வரைக்கும் தவறாமல் ஏழு எட்டு பாட்டு வருதோ இல்லையோ, கண்டிப்பாக ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ வரும். அதலவேற விளம்பரங்கள், என்னப் பண்றது எல்லைவற்றையும் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும். இப்ப மாதிரியா? நிறைய சேனல்கள், அப்ப சென்னைத் தொலைக்காட்சி மட்டும்தானே!

எனக்கு அரையாண்டு பரீட்சைத் திங்கக்கிழமை ஆரம்பிக்குது. (நான் ஏழாவது படிச்சிட்டு இருக்கிறேன், சரியாக தெரியவில்லை) அப்பதான் என்னை எழுப்பி (அடிச்சி) படிக்கச் சொன்னாங்க எங்க அம்மா! சரி என்ன பண்றது புரியலை, எழுந்து உட்கார்ந்து கடிகாரத்தை பார்த்தா, ”மணி 7:20” ஆயிடுச்சு.

மூஞ்சி கழுவி விட்டு வந்து படிடான்னு அம்மா சொன்னாங்க.

சரின்னு போயி முகம் கழுவிட்டு, அம்மா பசிக்குதுன்னு சொன்னேன். எங்க அம்மா லேட்டாகும், இப்பதான் சப்பாத்தி மாவு பெசைஞ்சு கிட்டு இருக்கேன் ‘எட்டரை மணி’ ஆகும் அப்படின்னாங்க (ஆனால் எனக்கு பசிச்ச மாதிரி ஞாபகம் இல்லை.) அப்படிச் சொன்னாதானே பசியில படிப்பு மண்டையில ஏறாது, போய் டி.வி. பார்த்துவிட்டு வந்து, சாப்பிட்டு அப்புறம் படிப்பியான்னு சொல்லுவாங்க.

நான் நினைச்ச மாதிரியே நடந்தது.

எனக்கு பயங்கர சந்தோஷம். பக்கத்துவீட்டில போய், அது எதிர் வீடுதான் ‘ஒளியும் ஒலியும்’ பார்த்தேன். (ஆனா... ஒளியும் ஒலியும் பார்த்துட்டு படிக்கல அதுவேற விஷயம்). அடுத்த நாள் சனிக்கிழமை...

எப்பவுமே, சனிக்கிழமை மதியம் ஒவ்வொரு வாரமும் மாநில மொழித் திரைப்படம் போடுவாங்க, அன்னிக்குன்னு பார்த்து, தமிழ் படம் போட்டாங்க. அந்தப் படம் பேரு, ‘பேசும் படம்’, அது கமல் நடிச்ச படம். அந்தப் படத்தைப் பார்த்ததே ஒரு பெரிய கதை...

என்னுடைய பக்கத்து வீட்டுக்காரங்க மதியத்துல சாப்பிட்டு தூங்கறப் பழக்கம் உண்டு. அன்றைக்கும் அப்படித்தான் ஆச்சு. சாப்பிட்டுத் தூங்கிட்டாங்க. படம் பார்த்தே ஆகவேண்டுமே என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல. என்னுடைய அண்ணன் சொன்னான், இன்னிக்கு உங்க ஆள் ‘படம் டா.’ அதுதான் நான் கமலுடைய ரசிகன் ஆச்சே... இப்படிச் சொல்லி என்னுடைய ஆர்வத்தைத் தூண்டிடுச்சு...

அண்ணனுடைய உள்நோக்கம் புரியாமா இருந்த நான் ஒரு அப்பாவி!

வீட்ல நாங்க எல்லாரும் மதியம் சாப்பிட்டு முடிச்சுட்டோம், எங்க அம்மா சொன்னாங்க ஒழுங்கா எல்லாம் எடுத்து வைச்சு படிங்கன்னு. அப்படி சொல்லிட்டு போய் அவங்க படுத்துட்டாங்க.

நானும் எங்க அக்காவும், எலியும் பூனை மாதிரி. எப்பவும் சண்டைப் போட்டுக் கொண்டே இருப்போம்.

என்னுடைய அண்ணன் ஒரு கூத்தாடி மாதிரிதான். எப்படின்னு கேட்கிறீங்களா, ‘ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு’ சொல்லுவாங்கயில்ல, அதுமாதிரி நானும் என்னுடைய அக்காவும் சண்டைப்போட்டால், எங்க அண்ணனுக்கு சந்தோஷம். இரண்டுபேரையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பான். கடைசில அடிவாங்கறது என்னமோ நான் தான்...

அன்றைக்கு சனிக் கிழமையாச்சே...

கமல் படம் வேற...

என்னடா படம் பார்க்கப்போகலையான்னு என்னுடைய அண்ணன் கேட்டுச்சு. (அதான் சாப்பிட்டு மூணு பேரும் ரூம்ல உட்கார்ந்து படிச்சிக்கிட்டு இருந்தோம் (உண்மையிலே அரட்டை அடிச்சிட்டு தான் இருந்தோம்)). அப்பதான் இந்த டிஸ்கஸ்ஷன்!

இல்லண்ணா,

பக்கத்து வீட்டு சுபேஷ் வீட்லதான் எல்லாம் கதவை மூடித் தூங்கிட்டாங்கல எப்படி டி.வி. பார்க்கறதுன்னு சொன்னேன்.

எங்க அண்ணன் சொன்னாங்க பக்கத்துல ரெண்டு தெரு தள்ளி என்னுடைய ப்ரண்ட் வீட்ல டி.வி இருக்கு அங்கப்போய் பாரு, அப்படின்னு சொல்லிச்சு. நானும் ஒரு அப்பாவியாச்சே ‘கருத்ததெல்லாம் தண்ணி, வெளுத்ததெல்லாம் பாலு’ன்னு நினைக்கிற ஆளு.

அப்பக்கூட நீ அவ(அக்கா)கிட்ட, சொல்லிடாத அம்மாகிட்ட சொல்லிடுவாள், அப்படிச் சொல்லிட்டு நான் டி.வி பார்க்க போயிட்டேன். படம் சூப்பரா இருந்தது. அதுல ‘ஐஸ் க்யூப் கத்தி, கமலோட ஆக்டிங்’ என்னுடைய ஆள் படம் வேற கசக்கவா செய்யும் பயங்கர சூப்பர்.

படம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தா, எங்க அண்ணன் அக்காகிட்டச் சொல்லிடுச்சு, எங்க அக்கா போனவாரம் சண்(டே)டையில என்னை இந்த வாரம் பழித்தீர்த்துட்டா எங்க அம்மாகிட்ட சொல்லி. படிக்கச் சொன்னா படம் பார்க்கப் போயிட்டியான்னு அடி... செம அடி... உங்கவீட்டு அடி, எங்க வீட்டு அடியில்ல! அப்படி அடி...

அப்பப்போ இரண்டுமுறை ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்று வந்தப்பக்கூட வீட்டுக்கு வந்து அம்மா முழிச்சிட்டாங்காளான்னுப் பார்த்துட்டுப் போனேன். என்னப் பண்றது. அடிவாங்கணும்னு இருந்துருக்குப் போல...

எல்லாம் அந்த ஒரே ஒரு சேனல்தான் அப்ப... இப்பமாதிரியா? என்ன.

அன்னிக்கு சாயங்காலம் இந்திப்படம், அப்ப எதிர்வீடுதான்(சுபேஷ் வீடு), பிரச்னை ஒன்னும் இல்ல, ஏன்னா அம்மாவும் டி.வி. பார்த்தாங்க. (அன்று இரவு எனக்கும் அக்காவுக்கும் சண்டை, நான் பழி தீர்த்துட்டேன் அதுவேற கதை).

அடுத்தநாள், காலையில நீலா - மாலா
தொடர்கதை, அது ரொம்ப நல்லா இருக்கும். தவறாம பார்ப்பேன்.10 மணிக்கு இராமாயணம், எங்க ஏரியாவுல பக்கம் பக்கமா ஒரு 4 டி.விதான் இருக்கும். எல்லாம் 100 மீட்டர் 200 மீட்டர் தூரத்தில்தான் டி.வி இருக்கும். அன்றைக்கு சாயங்காலம் தமிழ்ப்படம் இடையிடையே ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்.’

மற்ற நாட்களில் எனக்கு தெரிஞ்சு புதன் கிழமை, இரவு ‘அப்புச்சாமி படம் எடுக்கிறார்’ மெகாத் தொடர் வரும். அது ரொம்ப காமெடியா, நல்லா இருக்கும். அதுக்கப்புறம் ‘சித்தாரா’ போடுவாங்க. அது ஒளியும் ஒலியும் மாதிரிதான் தெரியும்லா...

“சங்கர்லால் துப்பறிகிறார்” நல்லா இருக்கும்.

திங்கள் கிழமை தமிழ் பரீட்சைத்தான் ஓரளவு நல்லாத் தெரியும், பிரச்னையில்லை. நல்லா எழுதிட்டேன்.

இப்படியெல்லாம், நான் பள்ளியில் படிக்கும்போது சென்னைத் தொலைக்காட்சியில் பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாக இருக்கிறது.

மீண்டும் அப்படி ஒரு ‘வயலும் வாழ்வும்’ பார்க்க முடியுமா?

…………….

ராவணன் படப்பாடல் வரிகள்



பாடியவர்கள் : கார்த்திக், முகமது இர்ஃபான்
படம் : ராவணன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து


இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே

அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல
தவியா தவிச்சு
உசிர் தடம் கெட்டுத் திரியுதடி
தைலாங்குருவி
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி

இந்த மம்முதக் கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

[உசுரே போகுதே உசுரே போகுதே…]

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்டயிருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா

நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

[உசுரே போகுதே உசுரே போகுதே…]



வைரமுத்து'வின் ராவணன் பாடல் வரிகள்..!


கோடு போட்டா.. கொன்னு போடு..
வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா.. கொன்னு போடு..
வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..

வில்லப் போல வளஞ்ச கூட்டம்
வேலப் போல நிமிர்ந்து விட்டோம்
சோத்துல பங்கு கேட்டா அட எலயப்போடு எலய
சொத்துல பங்கு கேட்டா, அவன் தலய போடு தலய
ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது
மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்தான் கேக்காது
பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது

பாம்பக் கூடப் பழகி பசும் பால ஊத்தும் சாதி
தப்பு தண்டா செஞ்சா, அட அப்ப தெரியும் சேதி
கள்ளிக் காட்டுப் புள்ளத்தாச்சி கல்லாப்பெத்த வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா
செத்த கெழவன் எழுதிவெச்ச ஊத்த சோத்து வீரமடா

கோடு போட்டா.. கொன்னு போடு..
வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..


எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்
எங்க தண்ணி எரி சாராயம் போல் ஒரைக்கும்
வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி
ஒரு சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி
எட்டுக்காணி போன அட எவனும் எழ இல்ல
மானம் மட்டும் போனா நீ மைக்கா நாளே எழ
மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்

சீயான் காட்டத் தோண்டிப் பாத்தா
செம்மண் ஊத்து ரத்தம்தான்
கோடு போட்டா.. கொன்னு போடு..
வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..

நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்....!

Wednesday, June 2, 2010

" சிவப்பு கோட்டைக்கு சேதாரம் " - திரிணாமுல் காங்கிரஸால்

எப்போதும் ஒரே கட்சி ஆட்சியை அமைத்துக் கொண்டிருந்தால் அந்த மாநிலத்தில் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட விகிதத்துக்கு மேல் இருக்காதென்பது மேற்கு வங்கத்தை பார்த்தால் தெரியவரும்.

எந்த ஒரு வளர்ந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் நல்ல எதிர்கட்சி எங்கிருக்கிறதோ அங்கேதான் ஆரோக்கியமான போட்டிகள் உருவாகும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி திட்டத்தை மாற்றவோ அல்லது சரியான முறையில் செயல்படுத்தவோ முடியும்.
ஆனால் மேற்கு வங்கத்தை பொருத்தவரையில் கடந்த 30 ஆண்டுகாலமாக CPI(M) ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் சிறந்த எதிர்கட்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் செயல்படவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் ஒரு மாநிலம் பொருளாதர ரீதியில் மேம்பாடு அடைய வெறும் விவசாயத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் அதனுடைய வளர்ச்சி விகிதம் அதற்கேற்றார் போல் தான் இருக்கும்.

இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் பொருளாதாரததை உலகமயமாக்கி கிட்டதிட்ட 25 ஆண்டுகள் ஆகிறது. அப்படி இருக்கும் போது மற்ற எல்லா மாநிலங்களிலும் உள்ள அரசுகள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு குறிப்பிட தகுந்த வளர்ச்சியை தொழில் துறையில் அடைந்து கொண்டிருக்கும் நிலையில் மேற்கு வங்கம் மட்டுமே பின் தங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

அதேபோல் CPI(M) ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தை பார்த்தால் அங்கு ஒரு சிறந்த எதிர்கட்சியாக காங்கிரஸும், காங்கிரஸ் ஆட்சி புரியும் போது CPI(M) மும் நல்ல எதிர்கட்சியாக செயல் படுகிறது. அங்கு தொழில் துறையாக இருககட்டும் கல்விதுறையாக இருக்கட்டும் உளகட்டமைப்பு வசதியாக இருக்கட்டும் எல்லா விஷயத்திலும் ஒரு படி முன்னேறியுள்ளது.

இங்கு மட்டும் ஆட்சி செய்யும் CPI(M) மால் மட்டும் எப்படி சாத்தியம என்று பார்க்கும் போது அருகாமையில் உள்ள (தமிழ்நாடு, கர்நாடகம்) மாநிலத்தில் வளர்ச்சி அவர்கள் எப்படியெல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்து, ஒரு சிறந்த முற்போக்கான பொருளாதார கொள்கையை கையாண்டும் ஒரு குறிபிடதகுந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள் என்றால் மிகையல்ல.

ஆனால் மேற்குவங்க CPI(M) அரசு இன்னுமும் தொழில் துறையை தாரளமயமாக்கல் கொள்கையை கடைபிடிக்கவில்லை என்றால் அம்மாநில வளர்ச்சி அப்படியேதான் இருக்கும். அதாவது வெரும் விவசாயத்தை மட்டுமே நம்பிக்கொண்டிந்தால் எவ்வளவு வளர்ச்சி கிட்டுமோ அவ்வளவு தான் கிடைக்கும். இருந்தாலும் மற்ற மாநிங்களின் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும் போது தான் பிரச்னையே வருக்கிறது.

அப்படி இருக்கையில் அம்மாநிலத்தில் செயல்படும் காங்கிரஸ் தன்னுடைய எதிர் கட்சி என்கிற மிக சிறந்த ஆயுததை பயன்படுத்த தவறிவிட்டது. ஆனால் இப்பொழுது அந்த சிறந்த எதிர்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எப்படி சென்னை தி.மு.க வின் கோட்டையாக ஒரு காலத்தில் ஏன் இன்னுமும் கருதி கொண்டு இருக்கிறோமோ அதே போல் CPI(M)-மின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தது, அதை இந்தியாவே எதிர் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கையில் மேற்கு வங்கத்தில் மாற்றம் வரும் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள 141 வார்டுகளில் 94 வார்டுகளில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 43 நகராட்சிகளில் 20 நகராட்சிகளை திரிணமுல் கைப்பற்றியது. இடதுசாரி கட்சி 12 நகராட்சிகளையும், காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு நகராட்சியை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

கோல்கட்டா மாநகராட்சியைப் பொறுத்தவரை, இடதுசாரி கட்சிகளுக்கு 29 வார்டுகளே கிடைத்தன. காங்கிரசுக்கு ஒன்பது வார்டுகளும், பா.ஜ -வுக்கு ஒரு வார்டும் கிடைத்துள்ளது. இதன் மூலம், இடதுசாரிகளின் சிவப்புக் கோட்டை தகர்க்கப்பட்டுள்ளது.கடந்த 2005ல் நடந்த கோல்கட்டா மாநகராட்சி தேர்தலில், இடதுசாரி கட்சிகளுக்கு 75 வார்டுகளும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு 42 வார்டுகளும், காங்கிரஸ் கட்சிக்கு 21 வார்டுகளும், பா.ஜ -வுக்கு மூன்று வார்டுகளும் கிடைத்தன.

திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

கோல்கட்டா மாநகராட்சியிலிருந்து மட்டும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை திரிணமுல் அகற்றவில்லை; மாறாக, அவர்களது கோட்டையாக கருதப்பட்ட சால்ட் லேக் நகராட்சியையும் கைப்பற்றியுள்ளது. இந்த நகராட்சியில், மொத்தமுள்ள 25 வார்டுகளில் 16 வார்டுகளை திரிணமுல் கைப்பற்றியுள்ளது. இடதுசாரி கட்சிகளுக்கு ஒன்பது வார்டுகளே கிடைத்தன. அதுவே, கடந்த 2005ல் நடந்த தேர்தலில், அப்போதிருந்த 23 வார்டுகளில் இடதுசாரி கட்சிகளுக்கு 18 வார்டுகளும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து வார்டுகளும் கிடைத்தன.ஹூக்ளி மாவட்டத்தில், மொத்தமுள்ள 12 நகராட்சிகளில் 11 நகராட்சிகளை திரிணமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதுபோலவே, வட மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட 16 நகராட்சி தேர்தல் முடிவுகளில் 12 நகராட்சிகளை திரிணமுல் கைப்பற்றியது. இடதுசாரி கட்சிகளுக்கு மூன்று வார்டுகளும், காங்கிரசுக்கு ஒரே ஒரு வார்டும் கிடைத்தது.

எப்படியோ மேற்குவங்கத்தில் மாற்று அரசியல் கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் வளர்ச்சி பாதை பிரகாசிக்கும் என்றே தோன்றுகிறது. அதன் பிறகாவது காங்கிரஸ் சிறந்த எதிர்கட்சியாக செயல்படவேண்டும்.

முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டு பிறபோக்குதனமான அரசை மேற்கொண்டு வரும் CPI(M) ஐ அகற்றினால் மாநிலம் வளர்ச்சி அடையும் என்றே நினைக்கிறேன்.

Monday, May 31, 2010

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பர்களும் இல்லை

நான் ஒரு முறை சபதம் எடுத்துவிட்டால் எடுத்ததுதான் என் முடிவில் இருந்து நான் என்றுமே பின்வாங்குவதில்லை. பின்வாங்கியதாக சரித்தரமும் இல்லை. கண்ணகி, பாஞ்சாலியின் போன்றவர்களின் சபதம் போன்றது தான் எங்களுடைய சபதமும் என்று எந்த அரசியல்வாதிகளாவது அல்லது அரசியல் கட்சிகளாவது நடந்து கொண்டதுண்டா என்றால் என்னைப் பொருத்தவரையில் இதுவரையில் இல்லை என்றே சொல்வேன்.

அப்படி ஏதாவொரு அரசியல் கட்சி இருந்து, தெரியப்படுத்தினால் தெரிந்து கொள்வேன்.

” வைக்கம் வீரர்”, ” பகுத்தறிவு பகலவன்”, ”சுயமரியாதை காவலன்”, ”தோழர் ராமசாமி “ இப்படி பல்வேறு பெயர்களை காலத்துக்கு ஏற்றார் போல் அழைத்துவந்து கடைசியில் எல்லாராலும் அன்போடும், பண்போடும், பாசத்தோடும், மரியாதையோடும் ” தந்தை பெரியார் ” என்று அழைக்கப்படும் திராவிடகழகத்தின் தலைவர் அவருடன் கட்சிபணியாற்றிய சி.என். அண்ணாதுரை அவர்கள் தனிஅரசியல் கட்சி தி.மு.க ஆரம்பித்து 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றதேர்தலில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்ட போது திராவிட கழக்த்தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எந்த கட்சியில் இருந்து வெளியில் வந்து தி.க வை ஆரம்பித்தாரோ அதே காங்கிரஸோடு சேர்ந்து பிரசாரம் செய்தார்.

இவ்வளவும் தனக்கு எதிரியாக நினைத்துக் கொண்டிருந்த காங்கிரஸுடன் சேர்ந்து தன்னுடன் இருந்த மற்றும் தன்னுடைய சிஷ்யனாக இருந்த சி. என். அண்ணாதுரையை எதிர்த்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அதே அண்ணாதுரை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முன்பு முதலமைச்சராக பதவி ஏற்க்கும் முன் தன்னுடைய தலைவராக நினைத்துக் கொண்டும், தன்னுடைய வழிகாட்டியாக நினைத்துக் கொண்டும் இருந்த தந்தைப் பெரியார் அவர்கள் தனக்கெதிராக பிரசாரம் செய்தாலும் அவரையே தன் மானசீக குருவாக எற்றுக் கொண்டு திருச்சியில் சென்று வணங்கி வாழ்த்து பெற்றப் பிறகே முதலமைச்சராக ஆட்சி பொருப்பில் அமர்ந்தார்.

இங்கு சொல்ல வந்த செய்தி என்ன என்பது எல்லாராலும் எல்லா மக்களாலும் எல்லா சமுகத்தாலும் எல்லா நேரத்திலும் ஏற்றுக் கொண்ட தலைவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இவர்களே கூட்டணி என்பது அதுவும் அரசியல் கூட்டணி என்பது அவரவர் கொள்கைக்கு ஏற்ப , அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் , அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் எந்த அரசியல் கூட்டணியில் சேர்ந்தால் அதிகளவில் நன்மைகிடைக்கும் என்று பார்த்தும் சேர்ந்தார்கள்.

அதன் பிறகு கர்மவீரர் காமராஜர் அவர்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய அரசியல் கட்சிகளுடன் என்றுமே கூட்டணி என்பதே இருக்க கூடாது என்று வழியுறுத்தினார் காங்கிரஸ் கட்சிக்கு. ஏன் அவர் அவ்வாறு சொல்லவேண்டும் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் நாம் தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாது என்பதனால் அவர் அவ்வாறு சொன்னார். அதற்காக அவர்கள் அப்படியேவா இருந்துவிட்டார்கள்.

மே 21, 1991 ம் ஆண்டு முன்னாள் பிரதமர், அந்நாள் காங்கிரஸ் தலைவர் அமரர் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். அந்த சமயத்தில் விடுதலைபுலிகளுடன் மிகநெருக்கமாக கருத்தபட்ட அரசியல் கட்சி தி.மு.க.

தி.மு.க. தான் பின்புலத்தில் இருந்து செயல்பட்டதாக கருதி அவர்களுடன் இனி எதிர் காலத்தில் கூட்டணி அமைத்துக் கொள்வதில்லை என்று காங்கிரஸ் கூறியது அப்படி இருக்கையில் இன்று அவர்கள் தி.மு.க யுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளவில்லையா ?.

நான் முன்பு கூறியது போல் அரசியலில் நிரந்தர நண்பர்களும் நிரந்திர எதிரிகளும் கிடையாது.

அவ்வளவு பெரிய தேசிய கட்சியே மீண்டும் கூட்டணி அமைத்துக் கொண்டதும். தன் சிஷ்யனையே எதிரியாக பாவித்து பிறகு அவர்கள் சேர்ந்ததும் வரலாறு அப்படி இருக்கையில் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் தோற்று கூட்டணியில் இருந்து வெளியில் வந்ததாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அறிவித்த போது மக்களிடையே பரவலாக பா.ம.க வின் எதிர்காலத்தை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.

அந்த சமயத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் பா.ம.க வைப பற்றி விமர்சனம் செய்திருந்தார். நிருபர்கள் அவர்களிடத்தில் நீங்கள் உங்களது கூட்டணியில் பா.ம.க வை சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார் எந்த காலத்திலும் பா.ம.க வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை மற்றும் பா.ம.க விற்கு எதிர்காலம் என்பது இருண்ட காலமாகத்தான் இருக்கும் என்று சொன்னார்.

அவரைப் போன்றே எல்லாரும் அவரவர் கருத்துகளை வெளியிட்டு அதே கருத்தை ஒட்டியவாரு கருத்து சொல்லிருந்தார்கள்.

இந்த சமயத்தில் எங்களது அலுவலத்திலும் இது போன்ற ஒரு கருத்து கணிப்பு நடத்தப் பட்டது. அதனை கேட்க இதை சொடுக்கவும் அதில் பேசிய மற்றும் கருத்து தெரிவித்த அத்துனை நண்பர்களும் தெரிவித்த கருத்து பா.ம.க விற்கு எதிர்காலம் இனிமேல் கேள்விகுறியே அவர்கள் மீண்டும் அரசியல் செய்யவே முடியாது என்றே சொன்னார்கள்.

இந்த சமயத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் எல்லாரும் அப்படி சொல்கிறார்கள் என்று.

பொதுவான, தீர்க்கமான கருத்தை தெரிவிக்கும் போது நாம் எப்படி சொல்லவேண்டும் உணர்ச்சிவசப் படாமலும், எந்த கட்சிக்கும் சாதகமில்லாமலும், அரசியல் நாகரிகமாக காலங்காலமாக கடைபிடித்துவரும் கூட்டணியைப பற்றியும், கூட்டணி மாறுவதைப் பற்றியும், களத்தில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கின்றன மற்றும் அந்த அரசியல் கட்சிகளெல்லாம் எந்தெந்த நிலைப்பாட்டில் இருக்கின்றன என்பதைபற்றியும் தெரிந்து கொண்டு கருத்தை சொன்னால் சரியாக இருக்கும்.

இது போல எல்லாரும் சிந்தித்து சொன்னார்களா என்று கேட்டால் இருக்காது என்று தான் எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் யாரவது ஒருவராவது மாற்றுக் கருத்தை கூறியிருந்தால் நான் மேலே சொன்ன விதிகளை நினைவில் வைத்து கூறியிருப்பார்கள் என்று சொல்லலாம் ஆனால் யாரும் அப்படி சொன்னதாக தெரியவில்லை.

கடைசியில் என்னிடம் பா.ம.க வைப் பற்றியும் அதன் எதிர்காலத்தைப் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நான் சொன்னேன் மீண்டும் பா.ம.க வை தி.மு.க அனைத்துக் கொள்ளும் இல்லாவிட்டால் அ.தி.மு.க சேர்த்துக்கொள்ளும் என்றேன் எல்லாரும் சிரித்தார்கள் என்ன அரசியலே தெரியாமல் பேசிறீங்களே என்றும் சொன்னார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இதற்குமுன்பு இது போன்று நடந்ததில்லையா, கூட்டணியை விட்டு வெளியேறி மீண்டும் கூட்டணியமைத்து கொள்ளவில்லையா ஏன் இவர்கள் பா.ம.க வெளியேறியதும் இப்படி சொல்கிறார்கள் என்று.

அப்பொழுதும் கேட்டார்கள் இரண்டு பெரும் திராவிடக் கழகங்களும் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்யும் என்றார்கள் மூன்றாவதாக தே.மு.தி.க வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றேன், எப்பொழுது அப்படியொரு கூட்டணி ஏற்படும் இரண்டு திராவிட கழகங்களும் சேர்க்காத பட்சத்தில் என்றேன். மேற்கூறிய இரண்டு கட்சிகளும் விட்டுவிடாது எப்படியும் சேர்த்துக் கொள்ளும் என்று எனக்கு தெரியும். ஏன்னென்றால் வடமாவட்டங்களில் அதிக செல்வாக்குள்ள கட்சி மற்றும் ஜாதி அடிப்படையிலானதொரு அரசியல் கட்சி.

எல்லாரும் சொல்வதைப் போல் பா.ம.க தனித்து நின்றால் ஒரு இடம் கூட கிடைக்காது என்பது ஒரு புறமிருக்க அதனால் அந்த இரண்டு அரசியல கட்சிகளுக்கும் பெரிய இழப்பு தான் ஏற்படும். எப்படி என்றால் வடமாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி என்கிற நம்பிக்கை ஏற்படும்

அப்படியில்லாமல் இரு திராவிட கட்சிகளும் தனித்துவிடபட்டால் பா.ம.க வின் கணிசமான ஓட்டு வங்கி எந்த வாக்காளர்களுக்கு சாதகமாக அமையும் என்று தெரியாமல் கடைசி வரை மதில் மேல் பூனையாக இருக்கும்.

பா.ம.கவின் கணிசமான ஓட்டு வங்கியைப் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி என்ற நிலை உருவாகும்.

எந்த ஒரு அரசியல் கட்சியும் தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் அமரவேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் முடிந்தவரை எல்லா சிறு அரசியல் இயக்கங்களையும் தங்களுடன் அரவணைத்து கொண்டு செல்லவே விரும்பும். அப்படியில்லாமல். இரண்டு பெரும் திராவிடக் கழகங்களும் பொது எதிரியாக பா.ம.க -வை நினைக்க வாய்ப்பேயில்லை.

இதனை அடிப்படையாக கொண்டுதான் நான் பா.ம.க வை இரண்டு அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒன்று சேர்த்துக் கொள்ளும் என்று சொன்னேன்.


நான் இந்த கருத்தை சொன்னவுடன் நீங்கள் பா.ம.க கட்சியை சார்ந்தவராக தான் இருக்கவேண்டும் என்றார்கள். ஒரு பொதுவான கருத்தை சொல்வதற்கு எந்த அரசியல் இயக்கங்களையும் சார்ந்து இருக்கத் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. இருந்தாலும் நான் ஜாதி அரசியல் மற்றும் மதத்தை அடிப்படையாக அரசியல் நடத்தும் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பவன் அல்ல அதற்கு எதிரானவன் என்கிற விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

நான் சொன்னது நடந்தாகிவிட்டது. நேற்று தி.மு.க –வின் செயற்குழுவில் மீண்டும் பா.ம.க வை சேர்த்துக் கொள்வதென்றும். 2011 ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு வரும் மாநிலங்களவை தேர்தலில் பா.ம.க விற்கு ஒரு இடம் தரபோவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது

நாளை ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்கும் என்பதை நாம் தொலைநோக்குப் பார்வையுடன் பார்த்து சிந்தித்தால் தான் தீர்க்கமான மற்றும் சரியான கருத்தை சொல்ல முடியும் என்று நம்புகிறேன்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது நிரந்தர எதிரிகளும் கிடையாது.

Friday, May 21, 2010

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள்

அமரர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 19 ஆண்டு நினைவு நாள் இன்று. அவரின் நினைவு நாளான இன்று ஒரு நிமிடமவுன அஞ்சலி செலுத்துவோம்

Wednesday, April 7, 2010

உதவி தேவை

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

Wednesday, March 3, 2010

நித்தியானந்தா நல்லவரே சாதாரண மனிதர்

நேற்று இன்று தொடங்கியதில்லை இந்த காம லீலைகள் காலம் காலமாக ஆன்மிகம் என்று சொல்லும் எல்லாருமே அப்படித்தான் செக்ஸ் மீது அளவுகடந்த வெறிக்கு உள்ளாகிறார்கள்.

பெரியார் காசிக்கு சென்றது போது எல்லாசாமியார்களும் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதுவும் போதைக்கு அடிமையாக இருப்பதையும் பார்த்து சாமி என்பதே போலி என்று அதை ஆதரிப்பவர்களையும் வெறுத்துதான் அதை எதிர்த்தார் தன் வாழ்நாள் முழுவதும். ஆனாலும் அவர் இல்லாவிட்டாலும் அவர் சித்தாந்தம் என்றும் அழிவதில்லை.

புட்டபருத்தி சாய் பாபாவைப் போல், பிரேமானாந்தாவைப் போல், சதுர்வேதி யைப் போல், ஜெயேந்திரர் விஜேயேந்திரைப், கல்கியை போல் ஈசாவைப் போல் டில்லி சாமியார் ஷிவ் முராத் திவிவேதியைப் போல் நித்தியானந்தா அவ்வளவே.



Sai Baba Exposed - Part 1 of 4 - Funny home videos are a click away


இப்பொழுது நித்தியானந்தா







எல்லாரும் சராசரி மனிதர்கள் தான் எல்லாருக்கும் காம உணர்ச்சி இருக்கும்.

சாதி மதம் கடவுள் எல்லாம் மறைவதற்கும் மறப்பதற்கும் இன்னும் குறைந்தது 10 ஆயிரம் வருடங்களாவது ஆகும். அதுவரை எல்லாம் இப்படித்தான்.

3 ஆயிரம் 4 ஆயிரம் வருடங்களாக ஒரு சமூகம் மற்ற சமூகத்தை அடிமை படுத்திக் கொண்டிருந்தது. அது இப்பொழுதான் பெரியாரின் விழிப்புணர்வு பிரசாரம் மூலமாகவும் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மண்டல் கமிஷன் அமுல் படுத்தியதின் மூலமாகவும் முறியடிக்கப்பட்டு உடைக்கப்பட்டு சுக்கு நூறாக சிதரடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.இது அப்படியே தொடர்ந்தால் இன்னும் 5 ஆயிரம் வருடங்களுக்குள் சாதி மதத்திலிருந்து தப்பிக்கலாம்.

இல்லை எல்லாரும் காதலித்து கல்யாணம் செய்தால் இன்னும் வெகுவிரைவில் தப்பிக்கலாம்.

அது வரை எல்லாம் இப்படித்தான் அந்த சாமியார் இவக் கூட படுத்தான் இந்த சாமியார் அவக் கூடப்படுத்தான் என்கிற செய்தி வந்து கொண்டுதான் இருக்கும்.

ஐயா, சாமின்னு சொல்லுவதெல்லாம் ஒன்றும் இல்லை உலகத்தில.

சும்ம நீங்களும் முருகனை போய் கும்பிடுங்க அவன் அண்ணன் விநாயகனை போய் கும்பிடுங்கன்னு சொல்லாதீங்க.

சாமியே இல்லை.

பூமி, சூரிய மண்டலத்தில இருக்கு. அதை சுற்றி கோடிக்கணக்கான நட்சித்திரங்கள் இருக்கு.

இரண்டு நாட்களுக்கு முன்னால் கூட ஒரு சூரியனை கண்டு பிடித்திருக்கிறார்கள் நமது விஞ்ஞானிகள்.

அதனால் நம்மால ஆயிரக்கனக்கான வருஷமாக நம்முன்னோர்கள் சாமி சாமி என்கிற சித்தாந்தத்தை கூறி வந்தார்கள். அது கடந்த 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டில அறிவியலின் வளர்ச்சி அபிரிமிதமாக இருந்த காரணத்தால் எல்லா விஷயத்தையும் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்.பூமி எப்படி தோன்றியது அதைச் சுற்றி என்ன என்ன கோள்கள் எல்லாம் இருக்கிறது. மனிதன் எப்படி தோன்றினான் அவன் எப்படி பரிணாம வளர்ச்சி பெற்றான் என்பதை பற்றி எல்லாம் அதைத்தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

டார்வின் பரிணாம கொள்கையையே நிறைய வருடங்களாக யாருமே ஏற்றுக் கொள்ளப் படவில்லையே. அப்படி இருக்கையில் பல ஆயிர வருஷமா நம் முன்னோர்கள் சொல்லி கொண்டிருந்த அந்த சாமி என்கிற விஷயத்தை எப்படி மறப்பார்கள் போலி என்று நினைப்பார்கள்.

சாமி என்கிற விஷயம் இன்னும் இரண்டு மற்றும் மூன்றாயிரம் வருஷங்கள் ஆகும் பெரும்பாலானோர் மறுப்பதற்கும் அது மறப்பதற்கும்.

பத்தாயிரம் வருடங்கள் கழித்து நம்முடைய சந்ததிகள் வரலாற்றை புரட்டி படிக்கும் போது நம் முன்னோர்கள் இப்படியெல்லாம் கடவுள் நம்ம்பிக்கைக் கொண்டு மத வேறுபாடு கொண்டு ஒருத்தனை அடிமை படுத்திக் கொண்டும் ஒரு சமூகம் மற்ற சமூகத்தை ஆட்டி படைத்து கொண்டும் இருந்திருக்கின்றன என்பதையெல்லாம் படித்து சிரிப்பார்கள்.

அதனால் நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்காவது உண்மையான போலித்தனமில்லாத ஆன்மிகம் என்ற போர்வையில் வளர்க்காமல் நல்ல சிந்தனையுள்ள குழந்தைகளாக வளர்க்க மற்றும் வளர என் வாழ்த்துக்கள்.

Sunday, January 24, 2010

உன்னைப் போல் ஒருவன்



நான் முன்பே எழுதியிருந்தேன் தலைவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதைப் பற்றி.

நான் ஏற்கனவே சொன்னேன் சிங்கள அரசு சொல்வதெல்லாம் பொய் கட்டுக் கதை தலைவர் உயிருடன் தான் இருக்கிறார் என்றும் யாரும் கவலைப் படவேண்டாம் என்றும் அது இப்பொழுது நிருபணம் ஆகியுள்ளது.

அவரென்ன கிள்ளுக் கீரையா கிள்ளி எறிவதற்கு.

சிங்கள அரசு நினைத்து கொண்டது விடுதலைப் புலிகளை கொன்று அவர்களை வீழ்த்திவிட்டதாக. அதுதான் அவர்களின் அறியாமை. என்ன செய்வது விடுதலைபுலிகள் தங்களது போராட்ட முறையை இரண்டு வருடங்களுக்கு முன்பே மாற்றிக் கொண்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.


விடுதலைப் புலிகள் தோற்கவில்லை, போராட்ட முறையை மாற்றியுள்ளார்கள் அவ்வளவே. அவர்கள் புதிய விடுதலை போரை இன்னும் சில நாட்களில் அறிவிப்பார்கள்.

விஷயத்திற்கு வருவோம். பிரபாகரன் இறந்ததாக காட்டப்பட்ட உடல் சிங்கள ராணுவ வீரரின் உடல்.

சிங்கள குடியரசு தலைவர் ராஜபக்‌ஷே அவர்கள் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் போது சிங்கள ராணுவத்திடம் இருந்து அவருக்கு அவசர அழைப்பு எதிர் முனையில் கோத்பையா ராஜபக்‌ஷே அண்ணே நம்முடைய வீரர்கள் அனைவரும் விடுதலை புலிகளை கொன்று விட்டார்கள். நாம் அறிவித்துவிடலாம் போரில் வெற்றி பெற்றதாக.

ராஜபக்‌ஷே : இல்லை தம்பி பிரபாகரனின் உடலை காட்டி அறிவித்தால் சர்வதேச நாடுகளிடையே கவுரவமாக இருக்கும்.

தம்பி : அப்படியா அண்ணே

ராஜபக்‌ஷே : ஆமா தாம்பி

தம்பி : அவன் தான் தப்பிச்சி போயிட்டானே.

ராஜபக்‌ஷே : அவன் கிடைச்சிருந்தா தான் ஆச்சரியமே அவன பிடிக்கமுடியாது நாம தான் அவன் கிட்ட இருந்து தப்பிக்கனும்.யாராவது அவன மாதிரியே இருக்காங்களா நம்மாளுங்க.

தம்பி : ஆமா அண்ணே நம்மாளுங்கள்ள ஒருத்தன் அவன மாதிரியே இருக்கான்.

ராஜபக்‌ஷே : அப்படியா !

தம்பி : ஆமா அண்ணே

ராஜப்க்‌ஷே : சரி நீ அவனை முடிச்சிடு. காரியத்தை முடிச்சிட்டு எனக்கு கூப்பிடு நான் உடனே திரும்பி வந்துடுறேன். நான் திரும்பி வரும்போது என்னை வரவேற்க தடபுடலா ஏற்பாடு செய்யனும் என்ன.

தம்பி : அப்படியே ஆகட்டும் அண்ணே !

தம்பி : ( மறுபடியும் போன் செய்யறாரு ) அண்ணே !

ராஜபக்‌ஷே : வெற்றியா !

தம்பி : வெற்றி அவனை போல இருக்கிற ஒருத்தனை போட்டுட்டு தயாரா இருக்கோம் நீங்க வந்தா அறிவிச்சிடலாம்.

ராஜபக்‌ஷே : ஓ இப்பொழுதே எல்லா நிகழ்ச்சிகளையும் நிறுத்திட்டு வந்துடுறேன்.

அதன் பிறகுதான் உங்களுக்கு எல்லாம் தெரியுமே அவரு ஏர்போர்ட் வந்திறங்கி மண்டிட்டு வணங்கி பேட்டிக் கொடுக்கிறாரு.

பாவம் இதில பலியானது அவருடைய சிங்கள சிப்பாய். அவனுடைய உயிருக்கு பரிசாக அவனுடைய குடும்பத்துக்கு பல லடசங்கள் பரிசு அவ்வளவே.

வளர்த்த ஆட்டை நாமெல்லாம் கோவிலுக்கு பலி கொடுப்பதை போல சிங்கள் ராணுவ வீரரை உயிரோடு இருப்பவரை நிற்கவைத்து எப்படி சுட்டால் முகம் சேதமடையாதோ அப்படி நிற்கவைத்து சுட்டு கொன்று அவடைய சீருடையை கழற்றி ஒரு புகைப்படம். விடுதலை புலிகளின் சீருடையை அணிவித்து ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு. இதோ நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்று கொக்ககரித்தார்கள்.

அவர்களுடைய அகோர முகத்திரையை அவர்களே கிழித்துக் கொண்டார்கள். அந்த சிங்கள் ராணுவ வீரர் உயிருடன் இருக்கும் பொழுது எடுத்த வீடியோ பதிவு.

தலைவனைப் போல் ஒருவன் ஆனால் அவன் தலைவன் இல்லை.

Monday, January 18, 2010

மாபெரும் தலைவர் ஜோதி பாசுக்கு அஞ்சலி


ஒரு மாபெரும் தலைவரை நாடு இழந்துவிட்டது. இது ஒரு வருத்தமான செய்தி என்றாலும் எல்லாரும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒரு இழப்பு தான். ஏனென்றால் அவருக்கு வயது 95 ஆகிறது.

இவரை போன்றொரு தன்னலமற்ற தலைவரை பெறுவது மிக கடினம்.

இவரது உடல் பிரிந்தாலும் அவருடைய கொள்கை என்றும் வாழும். அவருடைய கொள்கைக்கு என்றும் வயதாகாது அது நிலைத்து நிற்கும்.

என்னுடைய அஞ்சலியை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

Wednesday, January 13, 2010

விலங்குகளை விட மோசமான முறையில் கொல்லப்படும் ஆதிவாசிகள்



இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே. காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது எனது தேசம்.
ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் "காமன் மேன்" கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...

2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

மற்றபடி

Thursday, January 7, 2010

தி.மு.க அரசின் சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு மைல்கல்


ஒரு குடும்பத்தில் ஏற்கனவே பட்டதாரிகள் யாரும் இல்லாத நிலையில், அக்குடும்பத்தில் இருந்து முதல் முறையாக மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் சேர மாணவர்களுக்கு இடம் கிடைத்தால், அவர்களின் கல்விச்செலவு முழுவதையும் அரசே ஏற்கும்' என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.மக்களிடம் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இதுவரை ஒரு கோடியே 40 லட்சத்து 70 ஆயிரத்து 367 குடும்பங்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன. 24 ஆயிரத்து 495 பயனாளிகளுக்கு 83 கோடி ரூபாய் செலவில், மாநிலம் முழுவதும் உள்ள 539 மருத்துவமனைகளில், இலவச உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உயர்நிலைப் பள்ளி களை மேம்படுத்தி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

இது கலைஞரின் தொலை நோக்குச் சிந்தனையின் இளமை தெரிகிறது.

இது போன்ற அரிய திட்டங்களை இந்தியா முழுவதிலும் அமுல்படுத்த வேண்டும்.

1. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி
2. கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
3. குடும்பத்தில் முதல் பட்டதாரிகளின் கல்வி செலவை ஏற்கும் திட்டம்

இந்த மூன்று திட்டங்களும் கலைஞரின் பெயரைச் சொல்லும் திட்டங்கள்.

காமரஜருக்கு எப்படி மதிய உணவுத்திட்டமோ அது போல கலைஞருக்கு கலைஞரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.

கலைஞர் என்றும் நீ ஒரு இளைஞர்.

Sunday, January 3, 2010

தேசிய நதிநீர் இணைப்பு திட்டம்: காலத்தின் கட்டாயம்

இந்த 21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக உருவெடுக்கப் போவது தண்ணீர் பிரச்னை தான். இந்த தண்ணீர் பிரச்னையை சமாளிக்க நதிகளை இணைக்க வேண்டும் என்று, கடந்த பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல் படுத்த ஒரு ஆண்டிற்கு, 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அல்லது 56 கோடி ரூபாயில் திட்டம் அமைக்கலாமா என்ற தடுமாற்றம் ஏற்பட் டுள்ளது. என்றாலும் அடுத்த பத்தாண்டு களில், இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

நதிநீர் இணைப்பு திட்டத்தில், 30 நதிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இணைக்கப்படும். ஆயிரம் கி.மீ., நீளத்திற்கு கால்வாய்கள் அமைத்து, 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் எடுக்க, 11 ஆயிரம் கியூசெக்ஸ் நீர் தேவைப்படும். இதற்காக 400 புதிய நீர் நிலைகள் கட்டப் படும். நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, எந்த இடத்தின் வழியாக கால்வாய் அமைத் தால் பயனுள்ளதாக இருக்கும் என்பது அறியப்பட வேண்டும். அதிகமான நீர் கிடைக்கும் இடங்கள் மற்றும் குறைவான நீர் கிடைக்கும் இடங்கள் ஆகியவை குறித்து, அடையாளம் காணப்பட வேண்டும். ஆனால், அடையாளம் காணப்பட்ட அதிகமான நீர் கிடைக்கும் இடங்கள் குறித்து, ஒருமுகப்போக்கு இல்லை. உதாரணமாக, மகாநதி, கோதாவரி ஆகிய நதிகளில் அளவுக்கு அதிகமான நீர் உள்ளது என்று, மத்திய அரசு கூறிவரும் நிலையில், மாநில அரசுகளான ஒரிசா, ஆந்திரா ஆகியவை குறைவான நீர் தான் செல்கிறது என்று கூறி வருகின்றன. இதுகுறித்து வல்லுனர் களிடையே, விவாதம் நடந்து வருகிறது. ஆனால், நதிநீரை பங்கிட்டுக் கொள்வது குறித்து, முறையான ஒப்பந்தங்கள் இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை. இதே கதைதான் மற்ற மாநிலங்களுக்கு இடையேயும் நடக்கிறது.

மத்திய அரசு பணியிலிருந்த இன்ஜினியர் கே.எல்.ராவ் என்பவர் தான், கடந்த 1972ம் ஆண்டு, முதன்முதலில் நதிநீர் இணைப்பு குறித்த யோசனை யை வெளியிட்டார். இதன்படி, கங்கை - காவிரி இணைப்பு கால்வாய் அமைக்கப் பட்டால், பாட்னா அருகே வெள்ளமாக பாயும் 60 ஆயிரம் கியூசெக்ஸ் நீர் தென் மாநிலங் களின் 150 நாள் நீர் தேவையை சமாளிக்க உதவும் என்று கூறினார். ராவ் கூறிய கங்கை -காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு இணையான "கேர்லேண்ட் கெனால்ஸ்' என்ற திட்டத்தை கேப்டன் டாஸ்டர் என்பவர் கடந்த 1997ம் ஆண்டு பரிந் துரைத்தார். இதன்படி, இமயமலையில் பிறக்கும் நதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பிறக்கும் நதிகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில், கால் வாய்கள் அமைக்க வேண்டும் என்று கூறினார். ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாடு தேசிய குழு அமைக்கப்பட்டு, கேப்டன் டாஸ்டர் கூறிய நதிநீர் இணைப்பு கால்வாய் அமைப்பதிலுள்ள சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், இந்த திட்டம் சாத்தியமற்றது என்று, பின்னர் நிராகரிக்கப்பட்டது.

மழைக்காலங்களில் வட இந்தியாவில் பாயும் பல நதிகளில், வெள்ள அபாயம் ஏற்படுகிறது. இதை தடுக்க கால் வாய் அமைப்பதன் மூலம், ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதுடன் கூடுதல் வருவாய்க்கும் வழி ஏற்படும். தொடர்ச்சியாக கிடைக்கும் மழைநீரை சேமித்து வைக்காவிட்டால், அதனால் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிகமாக கிடைக்கும் மழைநீரை சேமித்து வைக்க, தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதனால், இந்தியாவில் வறட்சி ஏற்படும் பெரும்பாலான பகுதிகளின் நீர் தேவையை எளிதாக சமாளிக்க முடியும். திட்டங்களை அமலாக்கும் போது தேவையான நிதி, பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், பக்கத்து மாநிலங்களுக்கு நீர் அளிக்க வழி கிடைக்கும்.

விவசாய பயன்பாடு அதிகமுள்ள குறிப்பாக, டெல்டா பகுதிகளில் பாசனத்திற்கு நிலத்தடி நீர் பெருமளவில் உதவுகிறது. பாசனத்திற்கு தேவைப்படும் நீர், குழாய் கிணறு மூலம் பெறப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. காவிரி டெல்டா பகுதியிலுள்ள நிலத்தடிநீர் வளம் கிருஷ்ணராஜசாகர் அணையில் கொள்ளளவை விட, அதிகம் என்று யூ.என்.டி.பி., மதிப்பிட் டுள்ளது. ஆற்று சமவெளி பகுதியிலிருந்து, அதிக தொலைவிலுள்ள இடங்களில், நிலத் தடி நீர்வளமே குடிநீர் ஆதாரமாக உள்ளது. நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்துவதால், 10 முதல் 100 மீ வரை நீர் மட்டம் குறைந்து விடுகிறது. இதனால், இப்பகுதிகளில் 300 மீ ஆழம் வரை தண்ணீருக் காக கிணறுகள் தோண்ட வேண்டிய நிலை உள்ளது.

நகர்புறங்களில் தண்ணீர் மட்டம் குறைய, குறைய அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஆதரவுடன் குழாய் கிணறு தோண்டப்படுவதால் நிலத்தடிநீர் மட்டம் அதாள பாதாளத் திற்கு செல்வதை தடுக்க முடிவதில்லை. இந்த செயல் தொடரும் போது, நிலத்தடி நீர் கிடைக்காமல் அந்த பகுதியே பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நதிநீர் இணைப்பு மூலம் நீர் பற்றாக்குறையுள்ள இடங் களில் நல்ல நீர் வளம் ஏற்படும். பாசன வசதி அதிகமாவதால், விவசாய நிலங்கள் செழிப் படையும். குடிநீர் பற்றாக்குறை என்பது எங்குமே இருக்காது. நிலத்தடி நீர் மட்டமும் ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும். பல்வேறு பயன்களை தரும் திட்டம் என்று அனைத்து மட்டத்திலும் அறிந்திருந் தாலும், அதை செயல்படுத்த தொடர்ந்து தயக்கம் காட்டப் பட்டு வருகிறது என்பது தான் உண்மையான நிலை. தேசிய அளவிலும், தென்னிந்திய அளவிலும் நதிகளை இணைக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும், மத்திய அரசு இதுவரை அந்த கோரிக்கையை கண்டு கொள்வதாக இல்லை.

இந்நிலையில், தேசிய அளவில் நதிகளை இணைப்பது என்பது, இப்போதைக்கு சாத்தியமல்ல என்பதை உணர்ந்து கொண்ட தமிழக அரசு, தமிழகத் திலுள்ள நதிகளை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. காவிரி-வைகை-குண்டாறு-வைப்பாறு ஆகிய நதிகளை இணைப்பது குறித்து, ஏற் கனவே பல ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. மேட்டூர் அணையின் கீழ் பகுதியில், கட்டளை அணை அருகில் தடுப்பணை அமைத்து, அங்கிருந்து கால்வாய்கள் மூலம் வைகை, குண்டாறு, வைப்பாறு உள்ளிட்ட பல நதிகளை இணைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன் மூலம், கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை, திருச்சி மாவட்டத்திலுள்ள திருச்சி, ஸ்ரீரங்கம்; புதுக் கோட்டை மாவட்டத்திலுள்ள குளத்தூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், ஆவுடையார் கோவில்; சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி, தேவக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, இளையங்குடி, மானாமதுரை; ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவடானை, பரமக்குடி, கமுதி, ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர்; விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி, கரியாப்பட்டி, அருப்புக்கோட்டை; தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திக் குளம் ஆகிய பகுதிகள் பயன் அடையும். தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் இல்லாத காரணத்தி னால், மழைக்காலங்களில் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நீர் பெற முடியும். மாநிலத்தை வறட்சியின் கோரப்பிடியிலிருந்து காக்க வேறு வழியில்லாமல், தமிழக அரசு இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில், வற்றாத ஜீவ நதிகளான கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி போன்ற தென் னிந்திய நதிகளை, தமிழகத்தின் நதிகளோடு இணைத்தால் மட்டுமே ஆண்டு முழுவதும் நீர்வளம் குன்றாமல் கிடைக்கும். நீர் வழிச் சாலை திட்டம்: மதுரையைச் சேர்ந்த பொறியாளர் காமராஜ் மற்றும் அவரின் குழுவினர் பல ஆண்டு ஆய்வுக்கு பின்னர் "கங்கை - குமரி தேசிய நீர் வழிச்சாலை திட்டம்' என்ற ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம், தென் மாநிலங்கள் கூடுதல் நீர் பெறுவதுடன், நீர் வழிப் போக்குவரத்தையும் பெற முடியும்.

திட்டத்தின் விவரம்: மூன்று நீர்வழிகளை கொண்டதாக இத்திட்டம் அமைக்கப்பட்டு பிறகு ஒன்றாக இணைக்கப் படும்.

இமயமலை நீர்வழி: இது நான்காயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நீளம் கொண்டதாக இருக்கும். இது கங்கை -பிரம்மபுத்திரா நதிகளை இணைக்கும்.

மத்திய நீர்வழி: இது ஐந்தாயிரத்து 750 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது கங்கை, மகாநதி மற்றும் தபதி ஆகிய நதிகளை இணைக்கிறது.

தென்னக நீர்வழி: இது நான்காயிரத்து 650 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் கேரள நதிகளை இணைக்கும். இந்த நீர்வழிகள் 120 மீட்டர் அகலமும் 10 மீட்டர் ஆழமும் கொண்டதாக இருக்கும். இந்த மூன்று நீர்வழிகளும் உரிய வழியில் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்படும். நீர் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் நீரை பல்வேறு நதிகளில் பகிர்ந்தளித்தல் போன்ற பணிகளை இந்த நீர்வழி செய்யும். இதன் ஆண்டு கொள்ளளவு, 15 ஆயிரம் டி.எம்.சி., ஆகும். இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் பெரிய நதிகளை இத்துடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றின் கிளை நதிகளை இணைத்தாலே போதும். இயற்கையான புவியமைப்பு பயன்படுத்தி, இந்த திட்டம் நிறைவேற்றப்படும். கடலில் வீணாக கலக்கும் உபரி நீர் மட்டுமே நீர்வழியில் கொண்டு வரப்படும். இதன் காரணமாக, அனைத்து மாநிலங்களும் இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்.

நலம் பல தரும் நதி நீர் இணைப்பு

வெள்ளத்தடுப்பு: மழைக் காலங்களில் ஏற்படும் கட்டுப் படுத்த முடியாத வெள்ளத்தை, இந்த திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம். நீர் குறைவாக உள்ள பகுதியை நோக்கி வெள்ளத்தை திருப்பி விடலாம். இதனால் அசாம், பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் அபாய வெள்ள அளவை குறைக்கலாம். வெள்ளத் தினால் ஏற்படும் பாதிப்பு குறைந்து, வெள்ள நிவாரண பணிக்காக ஒதுக்கப்படும் தொகையும் வெகுவாக குறையும்.

குடிநீர்: அனைத்து முக்கிய நகரங்களுக்கும், கிராமங் களுக்கும் போதுமான குடிநீர் வசதியை ஆண்டு முழுவதும் வழங்க முடியும்.

விவசாயம்: 15 கோடி ஏக்கர் நிலம் கூடுதலாக பாசன வசதி பெறும். இதனால் ஆண்டுக்கு, 50 கோடி டன் உணவு உற்பத்தியை பெற முடியும். ஏற்றுமதி பெருகி, அன்னிய செலாவணி ஈட்ட முடியும்.

மின்சாரம்: நீர் வழிகளில் நீர் மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம், 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதன் மூலம் ஆண்டுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டலாம். இதனால் இந்திய தொழில் உற்பத்தியை, 15 மடங்கு உயர்த்த முடியும். அனைத்து நீர்வழிகளிலும் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம், இடமாற்றத்திற்கான மின் இழப்பு குறையும்.

வேலை வாய்ப்பு: இத்திட்டத் திற்கான கட்டுமான பணியின் மூலம், வேலை வாய்ப்பு பெருகும். மேலும், கப்பல் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் விவசாயத்துறை ஆகியவை மூலம் வேலை வாய்ப்பு அதிகமாக கிடைக்கும்.

தெலுங்கு கங்கை திட்டம் சிறந்த உதாரணம்: அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத் தில், ஒரு மலையில் ஓடும் நதியிலிருந்து, 720 கி.மீ., தொலைவி லுள்ள சமவெளிக்கு கால்வாய் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு, விவசாயம் செய்யப்படுகிறது. துருக்கி நாட்டிலிருந்து சவுதி அரேபியாவிற்கு, கிட்டத்தட்ட 3 ஆயிரம் கி.மீ., தொலைவிற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு நீர் எடுத்து வரப்படுகிறது. இத் திட்டத்தால், தங்கள் நாட்டிற்கு பெரும் பாதிப்பு என்ற போதிலும், இஸ்ரேல், ஈராக் ஆகிய நாடுகள் இந்த திட்டத்தை அனுமதித்துள்ளன. இந்தியாவில், ஆந்திர அரசு செயல்படுத்தியுள்ள தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம், மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஓடும் கிருஷ்ணா நதியை, தென்பகுதியிலுள்ள வடபெண்ணை ஆற்றுடன் இணைக்கும் வகையில் கால் வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயின் வழிநெடுக ஒவ்வொன்றும், 10 முதல் 12 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட மூன்று செயற்கை ஏரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குண்டூர், நெல் லூர் மற்றும் கடப்பா மாவட் டங்கள் நல்ல பாசன வசதியை பெற்றுள்ளன. மேலும், இத் திட்டத்தின் கீழ், சென்னை நகருக்கும் ஆண்டுக்கு 12 டி.எம்.சி., குடிநீர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், தேசிய நதிகளை இணைத்தால் ஏராளமான பலன் கிடைக்கும் என்பதற்கு, தெலுங்கு கங்கை திட்டம் ஒரு சிறந்த உதாரணம்.

நீர் வள மேலாண்மை குறைவு: இன்றைய நிலையில், நாட்டின் பல கடைக்கோடி கிராமங் களில் வசிக்கும் மக்களுக்கு, சராசரியாக 2 லிட்டர் குடிநீர் கூட கிடைப்பதில்லை. ஒரு புள்ளி விவரத்தின் அடிப்படையில், அமெரிக்காவில் வசிக்கும் நபருக்கு சராசரியாக தினசரி 5,910 லிட்டர் நீர் கிடைக்கிறது. மற்ற உலக நாடுகளை ஒப் பிடும் போது, இந்தியாவின் நீர்வளம் அவ்வளவு மோசமானதாக இல்லை. சர்வதேச அளவில், சமவெளி பகுதிகளில் சராசரியாக 70 செ.மீ., மழை பெய்கிறது. அதேவேளையில், இந்தியாவில் 117 செ.மீ., மழைபொழிவு உள்ளது. இந்த வகையில் ஆண்டுக்கு கிடைக்கும் 37 கோடி எக்டேர் மீட்டர் மழைநீர் நாட்டின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதுமானது. ஆனால், போதுமான நீர்வள மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தாத காரணத்தினால், கிடைக்கும் மழைநீர் அனைத்தும் வீணாக கடலில் கலந்து, நாட்டில் நீர் பற்றாக் குறை ஏற்படுகிறது. நதிநீர் இணைப்பு திட்டத் தை செயல்படுத்துவதன் மூலம் கிடைக்கும் மழைநீரில் பெரும் பகுதியை பயன் படுத்த முடியும்.

தூங்கும் நீர்வள நிறுவனம்: தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 1982ம் ஆண்டு, தேசிய நீர்வள நிறுவனம் துவக்கப்பட்டது. நதி நீர் இணைப்புக்கான திட்டங்களையும், வரைமுறைகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது இந்த அமைப்பின் செயல்பாடு என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு, மத்திய அரசு முழு அளவிலான நிதி உதவியை அளித்து வருகிறது. இந்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொறியாளர்கள் தான் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இதுநாள் வரை யார், யார் இதில் இடம் பெற்றுள்ளனர்; அவர்களின் பெயர் மற்றும் தகுதி குறித்து அறிவிக்கப்படவில்லை. மேலும், மற்ற துறைகளை சார்ந்தவர்களோ, பொதுமக்களின் பிரதிநிதிகளோ யாரும் இந்த அமைப்பில் இதுவரை இடம் பெறவில்லை. அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, இதுவரை எந்த அறிக்கையும் வழங்கப்படவில்லை. குறிப்பாக, நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து தொழில் நுட்ப அறிக்கை தர வேண்டிய இந்த நிறுவனம் இதுவரை அது சம்பந்தமாக ஒரு அறிக்கை கூட சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணைகளால் எப்பவுமே ஆபத்து தான்: சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில், உணவு பற்றாக் குறை அதிகமாக இருந்தது. விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பதற்காக, பல கோடி ரூபாய் செலவில் அணைகள் கட்டப்பட்டன. ஆனால், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகையும், விவசாய நிலமும் கொண்ட நாடுகளுக்கு அணைகள் ஒத்துவராது. நதிகளை இணைப்பதே சிறந்த முறையாகும் என்றும், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்றும் கருதப்படுகிறது. பொதுவாக அணைகள் கட்டுவதால், புவியியல் ரீதியில் பெரும் பாதிப்புக்கள் உண்டாகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை கருத்தில் கொண்டு தான் ஸ்வீடன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அணைகள் கட்ட, சட்ட ரீதியான தடை விதிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், புதிய அணைகளை கட்டுவதை காட்டிலும், வட மாநில நதிகளை, தென் இந்திய நதிகளோடு இணைப்பது ஒன்றே, இந்தியாவின் விவசாய மேம்பாட்டிற்கும், வெள்ள சேத தடுப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்ததாக இருக்கும் என்று நீர்வள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.