எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, June 25, 2010

" தமிழுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் : முதல்வர் வேண்டுகோள்

""தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,'' என்று செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கங்களின் துவக்க விழா, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள "டி' ஹாலில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நேற்று காலை நடந்தது.

ஆய்வரங்கத்தை துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:தமிழ் மொழியை மேலும் செழுமைப்படுத்திடவும், அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதை வளர்த்து 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துகளையும் இந்த ஆய்வரங்கத்தின் மூலமாகப் பெற இருக்கிறோம்.தமிழ் மொழி - தமிழர் பண்பாடு - நாகரிகத்தைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது எல்லா முனைகளிலும் புதிய எழுச்சியைக் காண முடிகிறது. ஏறத்தாழ 50க்கும் மேலான நாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது, புதிய தெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களை புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும். அந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாக கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டும்.

கோல்கட்டாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம், சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816ல் எல்லிசு, 1856ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர்.இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக் குடும்பம். அக்குடும்பத்தின் முதன்மை மொழி, தமிழ் என்னும் உண்மையை உலகிற்கு அவர்கள் உணர்த்தினர். 1927ல் ஜான் மார்ஷலின் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு, உலகின் கருத்தைத் தமிழின் பால் ஈர்த்தது.அதன் பின், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் குறித்து அறிந்து கொள்வதில், உலக நாடுகளின் அறிஞர்கள் ஆர்வம் காட்டினர்.

அவர்கள் ஆராய்ந்து, தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர் தம் இலக்கிய விழுமியம், கலைநயம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.திராவிட இனத்தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர். திராவிடம் தந்த செழிப்பும், வலிவும் தான், ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.வட மாநில திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டு, தமிழர்கள், தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வாதிட்டு நிலைநாட்டுகிறார் சோவியத் மொழி அறிஞர் சாகிரப்.காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள், திராவிட மொழிப் பிரிவின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர்.

பீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் "குருக்கர்' என்போர் திராவிட மக்களே என்பது, அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.இந்திய நாகரிக அடையாளமான சேலையும், வேட்டியும் திராவிட நாட்டின் கொடையாகுமென்று பேராசிரியர் சட்டர்ஜி, "இந்தோ - ஆரியன் - இந்து' என்ற நூலில் எழுதியுள்ளார். ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு, திராவிட வழிபாடே.அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோவில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது. ஆதிச்சநல்லூரின் மண்டை ஓடுகள், சிந்துவெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன.சங்க காலம், கி.மு., நான்காவது நூற்றாண்டின் துவக்க காலம் எனக் கொண்டால், சங்க இலக்கியங்களிலிருந்து திராவிட நாகரிகத்தை அறிய முடிகிறது.

ராமச்சந்திர தீட்சிதர் எழுதிய, "தமிழர் தோற்றமும், பரவியதும்' என்ற நூலில், "மத்திய தரைக்கடல், குமரிக் கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா எங்கும் பரவியது தமிழர் நாகரிகமே' என்று கூறியுள்ளார்.தமிழ் மொழியின் தொன்மையைப் பொறுத்தவரை, தொல்காப்பியம் போன்றதோர் பழமை இலக்கணம், எந்த மொழியிலும் இல்லை. திருக்குறள் போல அற இலக்கியம், எந்த மொழியிலும் இல்லை. சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான காப்பியம், எந்த மொழியிலும் இல்லை. ஆசியா முழுவதும் கோலோச்சிய பவுத்த சமயத்துக்கு மணிமேகலை போல ஒரு காப்பியம், பாலி மொழியிலும் இல்லை.எல்லா சமயங்களையும், சைவ, வைணவ சமயங்களையும், சமண, பவுத்த சமயங்களையும், கிறித்துவ, இசுலாமிய சமயங்களையும், இதயத்திலே ஏந்திக்கொண்ட மொழி தமிழ். சமயந்தோறும் நின்ற தையல் எனப் போற்றப் பெறும் தமிழ், சமயங்களையும் வளர்த்து தன்னையும் வளர்த்துக் கொண்ட மொழி.

திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம் தமிழினம். மயிலாடுதுறைக்கு அருகில் கழுக்காணி முட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையினரால், முதலாம் ராசாதிராசன் காலத்தைச் சேர்ந்த கி.பி., 1053வது ஆண்டைச் சேர்ந்த 85 செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.வில், புலி, கயல் ஆகிய சேர, சோழ, பாண்டியர்களின் முத்திரைகளோடு கிடைத்துள்ள அந்தச் செப்பேடுகள், வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரும் கருவூலம். தஞ்சை விசயாலயச் சோழன், பல்லவர்களிடமிருந்து கைப்பற்றியதற்கான புதிய வரலாற்றுக் குறிப்பு, இச்செப்பேட்டில் கிடைத்துள்ளது.இந்த செப்பேடு, மாநாட்டு கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி முறையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது உத்திரமேரூர் கல்வெட்டு. இவையெல்லாம் தமிழர்களின் தொடர்ச்சியான வரலாற்றுப் பதிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இந்த பெருமையையெல்லாம் தமிழர்கள் தான், வெளிநாட்டவர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர், அவற்றை தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலை தான் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.தமிழுக்கும், தமிழினத்துக்கும் ஆற்ற வேண்டியவை, இன்னும் ஏராளமாக உள்ளன. இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். கிரேக்கம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் தமிழியல், தமிழினம் குறித்தும் எழுதப்பட்ட நூல்கள், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

உலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள் மின்மயமாக்கப் பெற்று, உலகில் உள்ள ஒரு பகுதியில் உள்ளவர்களும் அவற்றைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும். துறைதோறும் தமிழ் பயன்பட வேண்டும். வகை வகையாய் அகராதிகளும், தொகை தொகையாய் கலைக் களஞ்சியங்களும் வர வேண்டும்.இன்னும் என்னென்ன தமிழுக்கு வேண்டும் என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கிற அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லி, இந்த அரசுக்கு ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, June 22, 2010

ஹூ ஜிண்டாவ்


யார் இவர்?.

இவர் தான் தற்போதைய சீனாவின் தந்தை. இவர்தானே சீனா என்கிற மாபெரும் குடும்பத்தை வழிநடத்துகிறார் அதனால் தான் நான் அவரை தந்தை என்று சொல்கிறேன்.

அவ்வாறே நூலாசிரியரும் குறிப்பிடுகிறார். மூன்று தலைமுறைகளை தெரிந்தவர், மூன்று தலைமுறை தலைவர்களுக்கு கீழும் வேலை செய்திருக்கிறார் என்றால் அதிபர் என்பதை விட இப்பொழுது அவரை தந்தை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

மாவோ,டெங்சியோங், ஜியாங் தற்போது ஹூ ஜிண்டாவ்.


புத்தகத்தை வாங்க மேலே உள்ள தொடர்பை சொடுக்கவும்.

ஹூ ஜிண்டாவ் படித்தேன் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். நடை நன்றாக இருந்தது. இன்னும் சொல்லபோனால் கொஞ்சம் கொஞ்சமாக தொகுத்து கொடுத்தது படிப்பதற்கு எளிமையாக இருந்தது. தலைவர்களுடைய பெயர்கள் மாவோ, டெங்சி, ஜியாங்,ஹூ வைத் தவிர மற்றவர்கள் பெயர் மனதில் நிற்பதற்கு கொஞ்சம் கஷ்டம்.

ஹூ வை பற்றி படிப்பதை விட சீனாவை பற்றி அதிக அறிமுகம் செய்கிறது என்றே தோன்றுகிறது. எனக்கு அவ்வளவாக சீனாவைப் பற்றி தெரியாது இருந்தாலும் கொஞ்சம் தெரிந்து கொள்ள உதவியது. புள்ளி விவரங்கள் புத்தகத்திற்கு வலுசேர்ப்பதாக இருந்தது.

கம்யூனிசத்தை கொஞ்சம் கொஞ்சமாக கை கழுவி கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு நிறைய உண்மையான புள்ளி விவரங்களை அரசாங்கம் நீண்டகாலத்திற்கு மறைக்கும் போது அதன் மீது தாக்கம் ஏற்பட்டு மாற்று சிந்தனை ஏற்பட்டு உடைவதற்கோ அல்லது உள்நாட்டு பிரச்னைகள் வருவதற்கு நிறைவே வாய்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது.

பத்திரிக்கை சுந்தந்திரம் பறிக்கப்பட்டும், எழுத்துரிமை, பேச்சுரிமை நசுக்கப்பட்டும். உண்மையான ஜனநாயகத்தை இன்னும் முடமாக்கிவைத்துள்ளது சீன ஒற்றை கட்சி ஆட்சி. கம்யூனிஸமா இல்லை முதலாளித்துவமா என்று வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அங்கே ஏழைகளிடத்திலே கம்யூனிஸ ஆட்சியும், முதலாளிகளிடத்திலே முதலாளித்துவ ஆட்சியையும் செய்துவருகிறது ஒற்றைக் கட்சி என்று சொல்லும் ஹூ ஜிண்டாவ் அரசாங்கம்.

மனித உரிமை மீறல்கள் நிறையவே அங்கு அரங்கேறுவதைப் போன்று தான் தோன்றுகிறது அதுதான் உண்மையும் கூட.

சீனாவிலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிக்கிடக்கிறது இந்தியாவைப் போன்றே.

இருந்தாலும் இந்தியாவில் எல்லாரும் குறிப்பாக கொஞ்சம் வசதி படைத்தவர்கள் நிம்மதியாக வாழலாம் ஆனால் சீனாவில் அப்படியில்லை என்றே தோன்றுகிறது. கம்யூனிஸ அரசு எதை எப்பொழுது பிடுங்கிக் கொள்ளுமோ யார் எந்த சமயத்தில் இருப்பிடத்தை காலி செய்ய வற்புறுத்துவார்களோ என்று நிம்மதியாக இருக்க முடியாது.

இந்தியாவைப் போன்றே அங்கும் லஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்து தாண்டவமாடுகிறது என்பதை சீனா விலகும் திரையில் சொல்லப்பட்டது. இந்த புத்தகத்தில் மிஸ்ஸாகி இருக்கிறது.

சீனாவைப் பற்றி, சீன அதிபர்களைப் பற்றி, பொருளாதரத்தைப் பற்றி, அபரிமிதமான வளர்ச்சியை பற்றி, கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப் போல் கம்யூனிஸம் தேய்ந்து முதலாளித்துவம் மாற்றத்தைப் பற்றி இந்த புத்தகம் நன்றாக அலசி ஆராய்கிறது.

Monday, June 21, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு தங்க நாணயம் வெளியீடு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, பாரத ஸ்டேட் வங்கி, சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளது;

துணை முதல்வர் ஸ்டாலின் நாணயங்களை வெளியிட்டார்.பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 2, 4 கிராம் எடைகளில் இரண்டு சிறப்பு நாணயங்கள் வெளியிடும் விழா, ரெசிடென்சி ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின், சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட்டார். தலைமை செயலர் ஸ்ரீபதி, முதல் நாணயத்தை பெற்றுக்கொண்டார்.இந்நாணயத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் இடம், பாரத ஸ்டேட் வங்கி விற்பனை நிலையங்கள் மற்றும் ரேஸ்கோர்சில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

"வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டு நினைவாக, சிறப்பு தங்க நாணயங்களை பொதுமக்கள் வாங்கி மகிழலாம்' என, வங்கி துணைப் பொதுமேலாளர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.

நாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை, பீளமேட்டிலுள்ள, "கொடிசியா' வளாகத்தில் நாளை ( 23ம் தேதி)துவங்குகிறது. வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த மாநாட்டை நேரில் காண இயலாத பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தினமலர் இணைய தளம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு அழைப்பாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட 4,600 பேரும், பல லட்சம் மக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, நாளை காலை 10.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்குகிறது. துணைமுதல்வர் ஸ்டாலின், வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டுச் சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிடுகிறார். அதன் பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குகிறார். பேராசிரியர் அஸ்கோ பார்போலா, விருது ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி, தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகிறார். மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, மாநாடு வளாகம் வரை நடக்கிறது.

வரும் 27ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் இம்மாநாட்டின் நிகழ்வுகள், இரு விதமாக வகைபடுத்தப்பட்டுள்ளன. மாநாடு பொதுநிகழ்வுகளில் மக்கள் பங்கேற்க ஏதுவாக மிக பிரம்மாண்டமான மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாநாடு துவக்க விழா, நாளை காலையில் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கிறது. நாளை மறுதினம் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடக்கின்றன. வரும் 25ம் தேதி கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

தொடர்ந்து, 26ம் தேதி கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடக்கின்றன. மாநாடு நிறைவு நாளான 27ம் தேதி நடக்கும் நிகழ்வில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், பிரணாப்முகர்ஜி பங்கேற்கின்றனர். மேற்கண்ட அனைத்து இந்நிகழ்வுகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். அதே வேளையில், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்கம் நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்குள், பங்கேற்பாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நன்றி : தினமலர்

செம்மொழி மாநாடு நடத்துவது ஏன்

"உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவது ஏன்' என்பது குறித்து, முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, தூர்தர்ஷன் "டிவி' மற்றும் ரேடியோவில், முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:இதுவரை, எட்டு உலகத் தமிழ் மாநாடுகள் நடந்துள்ளன. தற்போது கோவையில் நடக்கும் மாநாடு, அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடக்கும் மாநாடு. தமிழ், "செம்மொழி' என அறிவிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் மாநாடு.

உலகில் 6,880 மொழிகள் உள்ளன. இதில், 2,000 மொழிகள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றுள், "கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஹீப்ரு, சமஸ்கிருதம்' ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில், தமிழும் செம்மொழி எனும் சிறப்பை தற்போது பெற்றுள்ளது.தமிழ், மற்ற செம்மொழிகளை விட மேலானது. லத்தீன், ஹீப்ரு மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் இடையில் நசிந்து தற்போது வளமடைந்து வருகிறது. சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. சீனம், பட எழுத்து முறையில் உள்ளது. அரேபியம், காலத்தால் மிகவும் பிந்தியது. பாரசீகம், அரேபிய வரி வடிவத்தில் எழுதப்படுகிறது.

தமிழோ 2,500 ஆண்டுகள் தொடர்ச்சியான இலக்கியங்களைக் கொண்டுள்ளது. தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. இல்லற வாழ்க்கைக்கும் அகம், புறம் என வகுத்து இலக்கணம் கூறுவது, உலக மொழிகளிலேயே தமிழ் ஒன்றுதான்; இது தமிழின் தனிச் சிறப்பு.தமிழ், வேறு மொழிகளை சார்ந்திருக்கவில்லை; தனித்தன்மை வாய்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலியன திராவிட மொழிகள் எனப்படுகின்றன. இந்த மொழிகளுக்கு மூல மொழியாக தமிழ் விளங்குகிறது என கால்டுவெல் கூறியுள்ளார். அவர், 12 திராவிட மொழிகளை ஆராய்ந்து எழுதியுள்ளார்.

"மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூல், இந்த உண்மையை உரைக்கிறது.தமிழ், உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான நீதியையும், ஒழுக்கத்தையும், அற மாண்புகளையும் கூறுகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்னே செம்மொழி சிறப்பை தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல், 2004ல் தான் கிடைத்துள்ளது. இந்த பெருமையை கொண்டாடும் வகையில் தான், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது.கலிபோர்னியா பல்கலை தமிழ்த் துறைத் தலைவர் ஜார்ஜ் ஹார்ட், பின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா உட்பட, 49 நாடுகளில் இருந்து, 536 தமிழ் அறிஞர்கள் வருகின்றனர். இந்தியாவில் இருந்து, 5,000 பேர் பங்கேற்கின்றனர்.

பல்வேறு அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் மாநாட்டிற்கு வந்து செல்வோருக்கு வசதியாக சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்த நடக்கும், செம்மொழி மாநாடு, உலகத் தகவல் தொழில் நுட்பவியல் மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்கிறேன் என்றார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல்





கோவையில் வருகிற 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையான நிகழ்ச்சி நிரல்

தொடக்க விழா கோவை மாநாட்டு அரங்கில் 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசுகிறார்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மாநாட்டை தொடங்கி வைத்து, “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை” பின்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு வழங்குகிறார். தமிழக ஆளுநர் பர்னாலா மாநாட்டு சிறப்பு மலரை வெளியிடுகிறார். அமைச்சர் அன்பழகன் தகுதியுரை நிகழ்த்துகிறார்.

பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), வா.செ. குழந்தைசாமி, கா. சிவத்தம்பி (இலங்கை) ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். தலைமை செயலாளர் ஸ்ரீபதி நன்றி கூறுகிறார்.

23ம் தேதி மாலை பிரமாண்டப் பேரணி

23-ந்தேதி மாலை 4 மணிக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பேரணி நடைபெறுகிறது. இது கோவை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி, அவினாசி சாலை வழியாக சென்று மாநாட்டு வளாகத்தை அடைகிறது.

“இனியவை நாற்பது” என்ற தலைப்பில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில் இலக்கியம், கலை, வரலாறு ஆகியவற்றை நினைவூட்டும் அலங்கார வண்டிகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

24ம் தேதி மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி

24-ந்தேதி காலை 10.30 மணிக்கு லாரன்ஸ் குழுவின் மாற்று திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. பகல் 12 மணிக்கு பொது கண்காட்சியை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திறந்து வைக்கிறார். மலேசிய மந்திரி சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

புத்தக கண்காட்சியை ஜி.கே. வாசன் திறந்து வைக்கிறார். மாலத்தீவு அமைச்சர் அகமது நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இணைய தள கண்காட்சியும் திறக்கப்படுகிறது.

அப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கம்

பிற்பகல் 2.30 மணிக்கு “புதியதோர் உலகம் செய்வோம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் அப்துல் ரகுமான் தலைமை தாங்குகிறார். வ.மு. சேதுராமன், பொன்னடியான், ஆண்டாள் பிரியதர்சினி, வின்சென்ட் சின்னத்துரை, கவிதை பித்தன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

மாலை 4 மணிக்கு “சமயம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு சுந்தரலிங்க சாமியடிகளார் தலைமை தாங்குகிறார். பேராயர் சின்னப்பா, ஸ்ரீபால், சாரதாநம்பி ஆரூரான், காதர் மொய்தீன் உள்பட பலர் பேசுகிறார்கள். இரவு முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய “போர் வாளும் பூவிதழும் நாட்டிய நிகழ்ச்சியை பத்மா சுப்பிரமணியம் குழுவினர் வழங்குகிறார்கள். நடனம், நாடகம், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

25ம் தேதி கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்க கூட்டம்

25-ந்தேதி காலை 10 மணிக்கு “கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்க கூட்டம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார். ஈரோடு தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கவிதை படைக்கிறார்கள்.

11.30 மணிக்கு “தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே, இடைக்கால இலக்கியமே, இன்றைய இலக்கியமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. சோ. சத்தியசீலன் நடுவராக பங்கேற்கிறார். குமரி அனந்தன் உள்பட பலர் பேசுகிறார்கள்.

25ம் தேதி கருணாநிதி தலைமையில் கருத்தரங்கம்

மாலை 4 மணிக்கு “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

இதில் தங்கபாலு, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கி. வீரமணி, டாக்டர் ராமதாஸ், இல. கணேசன், டி. ராஜா எம்.பி., ஆர்.எம். வீரப்பன், திருமாவளவன், ஸ்ரீதர் வாண்டையார், காதர் மொய்தீன், ஜெகன்மூர்த்தி, செல்லமுத்து, தாவூத் மியாகான், திருப்பூர் அல்தாப், சந்தானம் பஷீர் அகமது ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

26ம் தேதி வாலி தலைமையில் கவியரங்கம்

26-ந்தேதி “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. இதற்கு கவிஞர் வாலி தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் மு. மேத்தா, பா. விஜய் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

அடுத்து வா.செ. குழந்தைசாமி தலைமையில் “செம்மொழி தகுதி” என்ற தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்பட பலர் பேசுகிறார்கள். இதையடுத்து க.ப. அறவாணன் தலைமையில் “கடல் கடந்த தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

நடிகை ரோகினியின் நாட்டிய நாடகம்

மாலை 4.30 மணிக்கு சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் “தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித் திரைக்கே, சின்னத்திரைக்கே, அச்சுத்துறைக்கே” என்ற தலைப்பில் நடக்கிறது. இதில் பாரதிராஜா, நடிகர் சந்திரசேகர், லியோனி, எஸ்.வி. சேகர், நக்கீரன் கோபால் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இரவு கொடிசியா வளாகத்தில் நடிகை ரோகிணி நடிக்கும் “பாஞ்சாலி சபதம்” நாடகம் நடக்கிறது.

27-ந்தேதி காலை

27-ந்தேதி காலை 10 மணிக்கு “வித்தாக விளங்கும் மொழி” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்துக்கு நடிகர் சிவக்குமார் தலைமை தாங்குகிறார். சுப. வீரபாண்டியன், திருச்சி செல்வேந்திரன், ஜெகத்கஸ்பார் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

பிரணாப் தலைமையில் நிறைவு விழா

மாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். ப. சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு தபால் தலையை மத்திய அமைச்சர் ராசா வெளியிடுகிறார்.

முதல்வர் கருணாநிதி, “சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக் கியதற்கான “கணியன் பூங்குன்றனார்” விருது வழங்கி மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். முன்னதாக தலைமை செயலாளர் ஸ்ரீபதி வரவேற்கிறார். முடிவில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அதிகாரி அலாவுதீன் நன்றி கூறுகிறார்.

Friday, June 18, 2010

ராகுல் காந்தி


அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு இன்று 40 வது பிறந்தநாள்.

அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Wednesday, June 16, 2010

D.D, தூர்தர்ஷன் நினைவுகள்

" பழைய நினைவுகள் என்றுமே சுகமானதாக இருக்கும் எல்லாருக்கும், எனக்கும் அப்படித்தான் "

ஒரு நல்ல பாட்டு கமலஹாசன் நடிச்ச பாட்டு, அந்தப் பாட்டுக்கூட ‘அவள் ஒரு தொடர்கதை’ன்னு நினைக்கிறேன். அது வந்து ஒரு ‘விகடகவி’ என்று ஆரம்பிக்கும், சரியாக தெரியவில்லை. அதுல சின்னப்பசங்கல கவர்பன்ற மாதிரி சூப்பராக இருக்கும். நான் அப்படியே ஆழ்ந்து பாடல பார்த்து பாட்ல-சிரிக்கிறப் பசங்கக்கூட சேர்ந்து நானும் சிரிச்சிட்டு இருந்தப்ப ‘டப்பு டிப்பு’ன்னு ஒரு சாத்து விழுந்தது. என்னடான்னு பார்த்தா,

"என்னை அம்மா அடிச்சிருக்காங்க".

என்னடா இன்னும் தூக்கம் சாயங்கால நேரத்துல, போயி மூஞ்சிக் கழுவிட்டு வந்து படின்னு ஒரு சத்தம் போட்டாங்க. அப்பதான் தெரிந்தது, அந்தப் பாட்டு கனவுல வந்தது. போனவாரம் சென்னைத் தொலைக்காட்சியில போட்ட ‘ஒலியும் ஒளியும்’ நினைவுக்கு வந்தது.

நான் சாயங்காலாமா ஸ்கூல்ல இருந்து வந்து தூங்கிட்டேன். வெள்ளிக்கிழமை (அன்று மதியம் தான் எனக்கு விளையாட்டு பிரியடு(Period)) முடிந்துவிட்டு வந்து அப்படியே புத்தகப் பையைபோட்டுட்டு களைப்பாக படுத்துட்டேன். எப்பமே வெள்ளிக் கிழமைன்னால ஒரு சந்தோஷம் வந்துவிடும். அடுத்த இரண்டுநாளுமே பள்ளிவிடுமுறை நாட்கள் சனி, ஞாயிறு.

ஒரே ஜாலியாக விளையாடலாம் என்பதைவிட நிறைய நிகழ்ச்சிகள் சென்னைத் தொலைக்காட்சியில் (D.D) ல வரும்.

என்னை ‘ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்னு’ வடிவேல் சொல்ற மாதிரி ‘நல்ல நிகழ்ச்சி’ வயலும் வாழ்வும். இந்த நிகழ்ச்சியைத் தவிர எல்லா நிகழ்ச்சியும் நான் பார்ப்பேன்.

முக்கியமாக வெள்ளிக் கிழமைன்னு சொன்னாலே ‘ஒளியும் ஒலியும்’ தான் 7:30லிருந்து 8:30 வரைக்கும் தவறாமல் ஏழு எட்டு பாட்டு வருதோ இல்லையோ, கண்டிப்பாக ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ வரும். அதலவேற விளம்பரங்கள், என்னப் பண்றது எல்லைவற்றையும் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும். இப்ப மாதிரியா? நிறைய சேனல்கள், அப்ப சென்னைத் தொலைக்காட்சி மட்டும்தானே!

எனக்கு அரையாண்டு பரீட்சைத் திங்கக்கிழமை ஆரம்பிக்குது. (நான் ஏழாவது படிச்சிட்டு இருக்கிறேன், சரியாக தெரியவில்லை) அப்பதான் என்னை எழுப்பி (அடிச்சி) படிக்கச் சொன்னாங்க எங்க அம்மா! சரி என்ன பண்றது புரியலை, எழுந்து உட்கார்ந்து கடிகாரத்தை பார்த்தா, ”மணி 7:20” ஆயிடுச்சு.

மூஞ்சி கழுவி விட்டு வந்து படிடான்னு அம்மா சொன்னாங்க.

சரின்னு போயி முகம் கழுவிட்டு, அம்மா பசிக்குதுன்னு சொன்னேன். எங்க அம்மா லேட்டாகும், இப்பதான் சப்பாத்தி மாவு பெசைஞ்சு கிட்டு இருக்கேன் ‘எட்டரை மணி’ ஆகும் அப்படின்னாங்க (ஆனால் எனக்கு பசிச்ச மாதிரி ஞாபகம் இல்லை.) அப்படிச் சொன்னாதானே பசியில படிப்பு மண்டையில ஏறாது, போய் டி.வி. பார்த்துவிட்டு வந்து, சாப்பிட்டு அப்புறம் படிப்பியான்னு சொல்லுவாங்க.

நான் நினைச்ச மாதிரியே நடந்தது.

எனக்கு பயங்கர சந்தோஷம். பக்கத்துவீட்டில போய், அது எதிர் வீடுதான் ‘ஒளியும் ஒலியும்’ பார்த்தேன். (ஆனா... ஒளியும் ஒலியும் பார்த்துட்டு படிக்கல அதுவேற விஷயம்). அடுத்த நாள் சனிக்கிழமை...

எப்பவுமே, சனிக்கிழமை மதியம் ஒவ்வொரு வாரமும் மாநில மொழித் திரைப்படம் போடுவாங்க, அன்னிக்குன்னு பார்த்து, தமிழ் படம் போட்டாங்க. அந்தப் படம் பேரு, ‘பேசும் படம்’, அது கமல் நடிச்ச படம். அந்தப் படத்தைப் பார்த்ததே ஒரு பெரிய கதை...

என்னுடைய பக்கத்து வீட்டுக்காரங்க மதியத்துல சாப்பிட்டு தூங்கறப் பழக்கம் உண்டு. அன்றைக்கும் அப்படித்தான் ஆச்சு. சாப்பிட்டுத் தூங்கிட்டாங்க. படம் பார்த்தே ஆகவேண்டுமே என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல. என்னுடைய அண்ணன் சொன்னான், இன்னிக்கு உங்க ஆள் ‘படம் டா.’ அதுதான் நான் கமலுடைய ரசிகன் ஆச்சே... இப்படிச் சொல்லி என்னுடைய ஆர்வத்தைத் தூண்டிடுச்சு...

அண்ணனுடைய உள்நோக்கம் புரியாமா இருந்த நான் ஒரு அப்பாவி!

வீட்ல நாங்க எல்லாரும் மதியம் சாப்பிட்டு முடிச்சுட்டோம், எங்க அம்மா சொன்னாங்க ஒழுங்கா எல்லாம் எடுத்து வைச்சு படிங்கன்னு. அப்படி சொல்லிட்டு போய் அவங்க படுத்துட்டாங்க.

நானும் எங்க அக்காவும், எலியும் பூனை மாதிரி. எப்பவும் சண்டைப் போட்டுக் கொண்டே இருப்போம்.

என்னுடைய அண்ணன் ஒரு கூத்தாடி மாதிரிதான். எப்படின்னு கேட்கிறீங்களா, ‘ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு’ சொல்லுவாங்கயில்ல, அதுமாதிரி நானும் என்னுடைய அக்காவும் சண்டைப்போட்டால், எங்க அண்ணனுக்கு சந்தோஷம். இரண்டுபேரையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பான். கடைசில அடிவாங்கறது என்னமோ நான் தான்...

அன்றைக்கு சனிக் கிழமையாச்சே...

கமல் படம் வேற...

என்னடா படம் பார்க்கப்போகலையான்னு என்னுடைய அண்ணன் கேட்டுச்சு. (அதான் சாப்பிட்டு மூணு பேரும் ரூம்ல உட்கார்ந்து படிச்சிக்கிட்டு இருந்தோம் (உண்மையிலே அரட்டை அடிச்சிட்டு தான் இருந்தோம்)). அப்பதான் இந்த டிஸ்கஸ்ஷன்!

இல்லண்ணா,

பக்கத்து வீட்டு சுபேஷ் வீட்லதான் எல்லாம் கதவை மூடித் தூங்கிட்டாங்கல எப்படி டி.வி. பார்க்கறதுன்னு சொன்னேன்.

எங்க அண்ணன் சொன்னாங்க பக்கத்துல ரெண்டு தெரு தள்ளி என்னுடைய ப்ரண்ட் வீட்ல டி.வி இருக்கு அங்கப்போய் பாரு, அப்படின்னு சொல்லிச்சு. நானும் ஒரு அப்பாவியாச்சே ‘கருத்ததெல்லாம் தண்ணி, வெளுத்ததெல்லாம் பாலு’ன்னு நினைக்கிற ஆளு.

அப்பக்கூட நீ அவ(அக்கா)கிட்ட, சொல்லிடாத அம்மாகிட்ட சொல்லிடுவாள், அப்படிச் சொல்லிட்டு நான் டி.வி பார்க்க போயிட்டேன். படம் சூப்பரா இருந்தது. அதுல ‘ஐஸ் க்யூப் கத்தி, கமலோட ஆக்டிங்’ என்னுடைய ஆள் படம் வேற கசக்கவா செய்யும் பயங்கர சூப்பர்.

படம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தா, எங்க அண்ணன் அக்காகிட்டச் சொல்லிடுச்சு, எங்க அக்கா போனவாரம் சண்(டே)டையில என்னை இந்த வாரம் பழித்தீர்த்துட்டா எங்க அம்மாகிட்ட சொல்லி. படிக்கச் சொன்னா படம் பார்க்கப் போயிட்டியான்னு அடி... செம அடி... உங்கவீட்டு அடி, எங்க வீட்டு அடியில்ல! அப்படி அடி...

அப்பப்போ இரண்டுமுறை ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்று வந்தப்பக்கூட வீட்டுக்கு வந்து அம்மா முழிச்சிட்டாங்காளான்னுப் பார்த்துட்டுப் போனேன். என்னப் பண்றது. அடிவாங்கணும்னு இருந்துருக்குப் போல...

எல்லாம் அந்த ஒரே ஒரு சேனல்தான் அப்ப... இப்பமாதிரியா? என்ன.

அன்னிக்கு சாயங்காலம் இந்திப்படம், அப்ப எதிர்வீடுதான்(சுபேஷ் வீடு), பிரச்னை ஒன்னும் இல்ல, ஏன்னா அம்மாவும் டி.வி. பார்த்தாங்க. (அன்று இரவு எனக்கும் அக்காவுக்கும் சண்டை, நான் பழி தீர்த்துட்டேன் அதுவேற கதை).

அடுத்தநாள், காலையில நீலா - மாலா
தொடர்கதை, அது ரொம்ப நல்லா இருக்கும். தவறாம பார்ப்பேன்.10 மணிக்கு இராமாயணம், எங்க ஏரியாவுல பக்கம் பக்கமா ஒரு 4 டி.விதான் இருக்கும். எல்லாம் 100 மீட்டர் 200 மீட்டர் தூரத்தில்தான் டி.வி இருக்கும். அன்றைக்கு சாயங்காலம் தமிழ்ப்படம் இடையிடையே ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்.’

மற்ற நாட்களில் எனக்கு தெரிஞ்சு புதன் கிழமை, இரவு ‘அப்புச்சாமி படம் எடுக்கிறார்’ மெகாத் தொடர் வரும். அது ரொம்ப காமெடியா, நல்லா இருக்கும். அதுக்கப்புறம் ‘சித்தாரா’ போடுவாங்க. அது ஒளியும் ஒலியும் மாதிரிதான் தெரியும்லா...

“சங்கர்லால் துப்பறிகிறார்” நல்லா இருக்கும்.

திங்கள் கிழமை தமிழ் பரீட்சைத்தான் ஓரளவு நல்லாத் தெரியும், பிரச்னையில்லை. நல்லா எழுதிட்டேன்.

இப்படியெல்லாம், நான் பள்ளியில் படிக்கும்போது சென்னைத் தொலைக்காட்சியில் பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாக இருக்கிறது.

மீண்டும் அப்படி ஒரு ‘வயலும் வாழ்வும்’ பார்க்க முடியுமா?

…………….

ராவணன் படப்பாடல் வரிகள்



பாடியவர்கள் : கார்த்திக், முகமது இர்ஃபான்
படம் : ராவணன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து


இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே

அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல
தவியா தவிச்சு
உசிர் தடம் கெட்டுத் திரியுதடி
தைலாங்குருவி
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி

இந்த மம்முதக் கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

[உசுரே போகுதே உசுரே போகுதே…]

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்டயிருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா

நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

[உசுரே போகுதே உசுரே போகுதே…]



வைரமுத்து'வின் ராவணன் பாடல் வரிகள்..!


கோடு போட்டா.. கொன்னு போடு..
வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா.. கொன்னு போடு..
வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..

வில்லப் போல வளஞ்ச கூட்டம்
வேலப் போல நிமிர்ந்து விட்டோம்
சோத்துல பங்கு கேட்டா அட எலயப்போடு எலய
சொத்துல பங்கு கேட்டா, அவன் தலய போடு தலய
ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது
மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்தான் கேக்காது
பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது

பாம்பக் கூடப் பழகி பசும் பால ஊத்தும் சாதி
தப்பு தண்டா செஞ்சா, அட அப்ப தெரியும் சேதி
கள்ளிக் காட்டுப் புள்ளத்தாச்சி கல்லாப்பெத்த வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா
செத்த கெழவன் எழுதிவெச்ச ஊத்த சோத்து வீரமடா

கோடு போட்டா.. கொன்னு போடு..
வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..


எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்
எங்க தண்ணி எரி சாராயம் போல் ஒரைக்கும்
வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி
ஒரு சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி
எட்டுக்காணி போன அட எவனும் எழ இல்ல
மானம் மட்டும் போனா நீ மைக்கா நாளே எழ
மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்

சீயான் காட்டத் தோண்டிப் பாத்தா
செம்மண் ஊத்து ரத்தம்தான்
கோடு போட்டா.. கொன்னு போடு..
வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..

நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்....!

Wednesday, June 2, 2010

" சிவப்பு கோட்டைக்கு சேதாரம் " - திரிணாமுல் காங்கிரஸால்

எப்போதும் ஒரே கட்சி ஆட்சியை அமைத்துக் கொண்டிருந்தால் அந்த மாநிலத்தில் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட விகிதத்துக்கு மேல் இருக்காதென்பது மேற்கு வங்கத்தை பார்த்தால் தெரியவரும்.

எந்த ஒரு வளர்ந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் நல்ல எதிர்கட்சி எங்கிருக்கிறதோ அங்கேதான் ஆரோக்கியமான போட்டிகள் உருவாகும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி திட்டத்தை மாற்றவோ அல்லது சரியான முறையில் செயல்படுத்தவோ முடியும்.
ஆனால் மேற்கு வங்கத்தை பொருத்தவரையில் கடந்த 30 ஆண்டுகாலமாக CPI(M) ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் சிறந்த எதிர்கட்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் செயல்படவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் ஒரு மாநிலம் பொருளாதர ரீதியில் மேம்பாடு அடைய வெறும் விவசாயத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் அதனுடைய வளர்ச்சி விகிதம் அதற்கேற்றார் போல் தான் இருக்கும்.

இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் பொருளாதாரததை உலகமயமாக்கி கிட்டதிட்ட 25 ஆண்டுகள் ஆகிறது. அப்படி இருக்கும் போது மற்ற எல்லா மாநிலங்களிலும் உள்ள அரசுகள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு குறிப்பிட தகுந்த வளர்ச்சியை தொழில் துறையில் அடைந்து கொண்டிருக்கும் நிலையில் மேற்கு வங்கம் மட்டுமே பின் தங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

அதேபோல் CPI(M) ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தை பார்த்தால் அங்கு ஒரு சிறந்த எதிர்கட்சியாக காங்கிரஸும், காங்கிரஸ் ஆட்சி புரியும் போது CPI(M) மும் நல்ல எதிர்கட்சியாக செயல் படுகிறது. அங்கு தொழில் துறையாக இருககட்டும் கல்விதுறையாக இருக்கட்டும் உளகட்டமைப்பு வசதியாக இருக்கட்டும் எல்லா விஷயத்திலும் ஒரு படி முன்னேறியுள்ளது.

இங்கு மட்டும் ஆட்சி செய்யும் CPI(M) மால் மட்டும் எப்படி சாத்தியம என்று பார்க்கும் போது அருகாமையில் உள்ள (தமிழ்நாடு, கர்நாடகம்) மாநிலத்தில் வளர்ச்சி அவர்கள் எப்படியெல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்து, ஒரு சிறந்த முற்போக்கான பொருளாதார கொள்கையை கையாண்டும் ஒரு குறிபிடதகுந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள் என்றால் மிகையல்ல.

ஆனால் மேற்குவங்க CPI(M) அரசு இன்னுமும் தொழில் துறையை தாரளமயமாக்கல் கொள்கையை கடைபிடிக்கவில்லை என்றால் அம்மாநில வளர்ச்சி அப்படியேதான் இருக்கும். அதாவது வெரும் விவசாயத்தை மட்டுமே நம்பிக்கொண்டிந்தால் எவ்வளவு வளர்ச்சி கிட்டுமோ அவ்வளவு தான் கிடைக்கும். இருந்தாலும் மற்ற மாநிங்களின் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும் போது தான் பிரச்னையே வருக்கிறது.

அப்படி இருக்கையில் அம்மாநிலத்தில் செயல்படும் காங்கிரஸ் தன்னுடைய எதிர் கட்சி என்கிற மிக சிறந்த ஆயுததை பயன்படுத்த தவறிவிட்டது. ஆனால் இப்பொழுது அந்த சிறந்த எதிர்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எப்படி சென்னை தி.மு.க வின் கோட்டையாக ஒரு காலத்தில் ஏன் இன்னுமும் கருதி கொண்டு இருக்கிறோமோ அதே போல் CPI(M)-மின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தது, அதை இந்தியாவே எதிர் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கையில் மேற்கு வங்கத்தில் மாற்றம் வரும் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள 141 வார்டுகளில் 94 வார்டுகளில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 43 நகராட்சிகளில் 20 நகராட்சிகளை திரிணமுல் கைப்பற்றியது. இடதுசாரி கட்சி 12 நகராட்சிகளையும், காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு நகராட்சியை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

கோல்கட்டா மாநகராட்சியைப் பொறுத்தவரை, இடதுசாரி கட்சிகளுக்கு 29 வார்டுகளே கிடைத்தன. காங்கிரசுக்கு ஒன்பது வார்டுகளும், பா.ஜ -வுக்கு ஒரு வார்டும் கிடைத்துள்ளது. இதன் மூலம், இடதுசாரிகளின் சிவப்புக் கோட்டை தகர்க்கப்பட்டுள்ளது.கடந்த 2005ல் நடந்த கோல்கட்டா மாநகராட்சி தேர்தலில், இடதுசாரி கட்சிகளுக்கு 75 வார்டுகளும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு 42 வார்டுகளும், காங்கிரஸ் கட்சிக்கு 21 வார்டுகளும், பா.ஜ -வுக்கு மூன்று வார்டுகளும் கிடைத்தன.

திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

கோல்கட்டா மாநகராட்சியிலிருந்து மட்டும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை திரிணமுல் அகற்றவில்லை; மாறாக, அவர்களது கோட்டையாக கருதப்பட்ட சால்ட் லேக் நகராட்சியையும் கைப்பற்றியுள்ளது. இந்த நகராட்சியில், மொத்தமுள்ள 25 வார்டுகளில் 16 வார்டுகளை திரிணமுல் கைப்பற்றியுள்ளது. இடதுசாரி கட்சிகளுக்கு ஒன்பது வார்டுகளே கிடைத்தன. அதுவே, கடந்த 2005ல் நடந்த தேர்தலில், அப்போதிருந்த 23 வார்டுகளில் இடதுசாரி கட்சிகளுக்கு 18 வார்டுகளும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து வார்டுகளும் கிடைத்தன.ஹூக்ளி மாவட்டத்தில், மொத்தமுள்ள 12 நகராட்சிகளில் 11 நகராட்சிகளை திரிணமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதுபோலவே, வட மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட 16 நகராட்சி தேர்தல் முடிவுகளில் 12 நகராட்சிகளை திரிணமுல் கைப்பற்றியது. இடதுசாரி கட்சிகளுக்கு மூன்று வார்டுகளும், காங்கிரசுக்கு ஒரே ஒரு வார்டும் கிடைத்தது.

எப்படியோ மேற்குவங்கத்தில் மாற்று அரசியல் கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் வளர்ச்சி பாதை பிரகாசிக்கும் என்றே தோன்றுகிறது. அதன் பிறகாவது காங்கிரஸ் சிறந்த எதிர்கட்சியாக செயல்படவேண்டும்.

முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டு பிறபோக்குதனமான அரசை மேற்கொண்டு வரும் CPI(M) ஐ அகற்றினால் மாநிலம் வளர்ச்சி அடையும் என்றே நினைக்கிறேன்.