எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, March 30, 2009

காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மூன்றாவது கூட்டணியின் தேர்தல் அறிக்கை

ஏன் இருக்கக் கூடாது இதுபோன்ற தேர்தல் அறிக்கைகள்? ஏன் தருவதில்லை எந்த ஒரு அரசியல் கட்சிகளும்?

1. அனைவருக்கும் கட்டாயக் கல்வி குறைந்தது 12ஆம் வகுப்பு வரை.
2. சமச்சீர் கல்வி மற்றும் தரமான ஆசிரியர்களை நியமித்தல்.
3. மும்மொழிக் கொள்கை.
4. சீரான இட ஒதுக்கீடு.
5. இந்த இட ஒதுக்கீட்டை படிப்படியாக குறைக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுதல்.
6. பள்ளி என்று எடுத்துக்கொண்டால் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்க உத்தரவாதம் அளித்தல்.
7. விஞ்ஞான ஆராய்ச்சி வளர்ச்சி திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயித்தல்.
8. விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் கடன்களுக்கு வட்டியைக் குறைத்து அதிக தொகைகள் கொடுக்க ஏற்பாடு செய்தல்.
9. பயிர்களுக்கான காப்பீட்டு முறையை அறிமுகம் செய்தல்.
10. விவசாயிகளுக்கு இலவச காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்துதல்.
11. பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் கொடுத்தல்.
12. பஞ்சாயத்து அமைப்புகள் சரியாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்க ஒரு மக்கள் குழுவை அல்லது வெளிப்படையான நிர்வாகத்தை அமைத்தல்.
13. மாநகரங்களுக்கும், நகரங்களுக்கும் மற்றும் கிராமங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க நடவடிக்கைகள் எடுத்தல். (இதன் மூலமாக மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம் பெயர்வது குறையும்).
14. கிராமங்களுக்குத் தேவையான நவீன வசதிகளை செய்து கொடுத்தல்.
15. கிராமங்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்க கிராமங்கள்தோறும் சட்ட ஆலோசனை மையங்களை அமைத்தல்.
16. குடும்பக் கட்டுபாட்டை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
17. சுகாதார மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து, நவீன மையமாக்குதல்.
18. மக்களுக்கு நீதிக் கிடைப்பதில் ஏற்படும் கால தாமதத்தை குறைத்தல்.
19. பெண் சிசுக்கொலையை தடுத்தல்.
20. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளித்தல்.
21. கலப்பு திருமணங்களை ஊக்குவித்தல்.
22. மதத்தின் பெயரால் தூண்டப்படும் தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குதல்.
23. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
24. தேவையான போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் சுத்தமான குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தல்.
25. தடைபடாத மின்சாரம் வழங்க உத்திரவாதம் அளித்தல்.
26. அனைத்து அரசு இயந்திரங்களையும் நவீன மையமாக்க நடவடிக்கை எடுத்தல்.
27. நாட்டின் உளவு அமைப்பை பலப்படுத்துதல்.
28. நாட்டின் உள்கட்டமைப்புகளை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
29. ஒவ்வொரு ஆண்டும் சரியான இலக்கு நிர்ணயித்து செயல்படுதல்.
30. தொலைநோக்குப் பார்வையுடன் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து அடுத்த 50 மற்றும் 100 ஆண்டுகளுக்குள் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயம் செய்து, வேண்டிய திட்டங்களை தீட்டிச் செயல்படுதல்.

Sunday, March 29, 2009

தேர்தலில் பணமா இல்லை நல்ல குணமா !

பா.ம.க,. - 7
1. ஸ்ரீபெரும்புதூர்
2. அரக்கோணம்
3. திருவண்ணாமலை
4. கள்ளக்குறிச்சி
5. சிதம்பரம்
6. புதுச்சேரி
7. தருமபுரி


தி.மு.க., - 21
1. திருவள்ளூர்(தனி)
2. வடசென்னை
3. தென்சென்னை
4. மத்திய சென்னை
5. ஸ்ரீபெரும்புதூர்
6. அரக்கோணம்
7. கிருஷ்ணகிரி
8. தர்மபுரி
9. திருவண்ணாமலை
10. கள்ளக்குறிச்சி
11. நாமக்கல்
12. நீலகிரி(தனி)
13. பொள்ளாச்சி
14. கரூர்
15. பெரம்பலூர்
16. நாகை(தனி)
17. தஞ்சை
18. மதுரை
19. ராமநாதபுரம்
20. தூத்துக்குடி
21. கன்னியாகுமரி


காங்கிரஸ் - 16
1. காஞ்சிபுரம்(தனி)
2. ஆரணி
3. சேலம்
4. ஈரோடு
5. திருப்பூர்
6. கோவை
7. திண்டுக்கல்
8. திருச்சி
9. கடலூர்
10. மயிலாடுதுறை
11. சிவகங்கை
12. தேனி
13. விருதுநகர்
14. தென்காசி(தனி)
15. நெல்லை
16. புதுச்சேரி


விடுதலைச் சிறுத்தைகள் - 2
1. விழுப்புரம்(தனி)
2. சிதம்பரம் (தனி)


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1
1. வேலூர்

நேரடிப் போட்டி பா.ம.க மற்றும் காங்கிரஸ்:

புதுச்சேரி

நேரடிப் போட்டி பா.ம.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள்:

சிதம்பரம்

நேரடிப் போட்டி பா.ம.க மற்றும் தி.மு.க:

1. ஸ்ரீபெரும்புதூர்
2. அரக்கோணம்
3. கள்ளக்குறிச்சி
4. திருவண்ணாமலை
5. தருமபுரி

நேர்மைக்கும், பணபலத்திற்கும் இடையே போட்டி:

அரக்கோணம் தொகுதி முன்னால் இரயில்வே இணை அமைச்சர் வேலுவுக்கும், தி.மு.க வில் இணைந்த ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும் இடையே இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

பார்ப்போம் இந்த தொகுதியை வெற்றி பெறுவது பணமா நல்ல குணமா என்று !

Thursday, March 26, 2009

சாணக்கியர் கலைஞரின் பிரித்தாளும் சூழ்ச்சி

ம.தி.மு.க

ம.தி.மு.க வின் தூண்கள் என்று சொல்லப்பட்டு வந்த L. கணேஷனும், செஞ்சி ராமச்சந்திரனும் கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது ம.திமு.க, அ.தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதை எதிர்த்து போர்க் கொடித் தூக்கி தோற்றுப் போனார்கள்.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார் கொண்டார் அரசியல் சாணக்கியர் கருணாநிதி. நீர் பூத்த நெருப்பாக ம.தி.மு.க பொதுசெயளாலர் வைகோ விற்கும் செஞ்சி மற்றும் கணேஷனுக்கும் இடையே இருந்த பிரச்சனையை பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி தன்பக்கம் இழுத்துக் கொண்டார்.

இழுத்து கொண்டாலும் பரவாயில்லை ம.தி.மு.க வை ஒன்றுமில்லாமல் ஒழிக்க அவர்பட்ட பாடு இருக்கிறதே அது பெரிய கதை.

ம.தி.மு.க விலிருந்து வெளியே வந்தவர்களை அப்படியே தி.மு.க இணைப்பதற்கு பதிலாக அவர்களை வைத்து செய்த கூத்து உலகில் வேறெங்கும் நடக்காது.

செஞ்சியும், கணேசனும் உண்மையான ம.தி.மு.க நாங்கள் தான் என்றும் கட்சியின் அனைத்து மாவட்டத் தலைவர்களும்,பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்றும் அதனால் கொடி மற்றும் கட்சியின் சின்னம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையித்திடம் புகார் கொடுத்தார்கள்.

செஞ்சியும், கணேசனும் சேலத்தில் பொதுக்குழுவை கூட்டி அதில் நிரூபிப்போம் என்றனர். ஆனாலும் அவர்கள் பொதுக்குழு கூடும் நாளை அறிவித்தார்கள். பொதுக்குழு நடைபெறும் நாளான்று அவர்கள் பட்ட கஷ்டங்கள் இருக்கிறதே வேறெப்போதும் அவர்களது வாழ்க்கையில் பட்டது கிடையாது. அவர்களாவது பரவாயில்லை வீரபாண்டி ஆறுமுகம் பட்டப் பாடு இருக்கிறதே அவ்வளவு பாடு. தி.மு.க காரர்களையெல்லாம் ம.தி.மு.க கரை வேஷ்டி கட்டி பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் "செஞ்சியும், கணேஷனும் காலை 11 மணி வரை பொதுக்குழு கூடும் மண்டபத்திற்கே வரவில்லை என்றால் பாருங்கள்.ஏன் வழி நெடுக தொண்டர்களின் கூட்டமா" என்றால் அது தான் இல்லை. "அன்று காக்கை, குருவி எல்லாம் பறக்கவில்லையாம்". ஏன் என்று கேட்டால் அந்தப் பக்கம் பறந்தால் ம.தி.மு.க வின் பொதுக்குழு உறுப்பினர்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து தன் கூடுகளிலே அடைந்து கிடப்பதாக சொன்னதாம்.

இப்படி சாணக்கியத் தனம் செய்து ம.தி.மு.க வை உடைக்கப் பார்த்தார் கலைஞர் அவர்கள். ஆனாலும் அன்று நடந்த அவமானத்திற்கு பிறகு அவர்கள் போட்டி ம.தி.மு.க என்று அறிவித்து செயல்பட்டு வந்து கொண்டிருந்தார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தான் தி.மு.க வில் இணைந்தார்கள். இருந்தாலும் அவர்களுக்கு இந்த முறை தி.மு.க வில் நாடளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவர்களைத் தொடர்ந்து,

ம.தி.மு.க வின் முன்னால் அவைத்தலைவரும் இன்னால் தி.மு.க வின் உறுப்பினருமான கண்ணப்பன்.

கண்ணப்பனைத் தொடர்ந்து கம்பன் ராமகிருஷ்ணனும் ம.தி.மு.க விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பா.ம.க:

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தி.மு.க கூட்டணியில் சேருமா சேராதா என்ற நிலையில், ஒரு வேளை சேராத பட்சத்தில் வன்னியர்களின் ஓட்டுக்களை பெற அல்லது வன்னியர்களின் ஓட்டுக்களை சிதறடிக்க வன்னியர் அறக்கட்டளைகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்க ஏற்பாடு செய்தார்.

இத்தனை நாட்களாக செய்யாமல் இப்பொழுது அதை தூசுத் தட்டி பா.ம.க விற்கு கிலியை ஏற்படுத்தினார்.

வன்னியர்கள் எல்லாரும் டாக்டர் ராம்தாசின் பின்னால் போகமல் தடுக்க அவர் மெனக்கெட்டதை போல் வேறுயாரும் மெனக் கெட்டதுகிடையாது.

தேர்தல் நேரத்தில் எப்பொழுதும் அவருக்கு நினைவுக்கு வருபவர்கள், திருக்குறளுக்கு பொருளுரை எழுதிய மற்றும் இதிகாசங்களுக்கு மறுவடிவம் கொடுத்திட்ட தமிழ் ஐயா ஜெகத்ரட்சகன் மற்றும் தேசிய அரசியலில் பொதுவாழ்வில் தன்னையே தானம் செய்த வாழப்பாடி சுகந்தன் நினைவுக்கு வருவார்கள்.

வாழப்பாடி ராமமூர்த்தி இருந்த வரைக்கும் கலைஞர் அவர்கள் ராமதாஸுக்கும், வாழப்பாடி ராமமூர்த்திக்கும் இடையே சீனப்பெருஞ் சுவர்போல் இருந்து நட்பினை வளரவிடாமல் பார்த்துகொண்டார்.

அதே போல் இப்பொழுது எனது தம்பி என்று செல்லமாக ராமதாசால் அழைக்கப்படும் தொல் திருமாவளவனை அவருக்கு எதிராக களமிறக்க சூழ்ச்சி செய்து மீண்டும் புகையை போட ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்த நேரத்தில் திருமாவும், ராமதாசும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கலைஞரின் அரசியல் சூழ்ச்சிக்கும் நயவஞ்சகத்திற்க்கும் ஆளாகமல் இருக்க வேண்டும்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் சாணக்கியத்தனம் நாளுக்கு நாள் மெருகு ஏறிக் கொண்டே வருகிறது.

Tuesday, March 24, 2009

கங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் கட்சி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு கிலோ மூன்று ரூபாய் விலையில் மாதம் 25 கிலோ அரிசி, தலித் மற்றும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்கலை வரை இலவசக் கல்வி,வங்கியில் வாங்கிய கடனை சரியாகத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகை போன்றவை வழங்கப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது. பாமர மக்கள் நலன் குறித்து அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

தேர்தல் அறிக்கை:

1. லோக்சபா மற்றும் சட்ட சபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பது உறுதி செய்யப்படும். 15வது லோக்சபாவில் இதுதொடர் பான சட்ட மசோதா நிறைவேற்றப்படும். அதனால், 2014ம் ஆண்டு நடக்கும் லோக்சபாத் தேர்தலில், பெண்கள் 33 சதவீத அளவுக்கு போட்டியிடுவர்.
2. வீடில்லாதவர்களும், இடம் பெயர்ந்து வருவோரும் நகரங்களில் மானிய விலையில் உணவைப் பெறும் வகையில், சமுதாய சமையல் அறைகள் அமைக்கப்படும்.
3. நகரங்களிலும், கிராமங்களிலும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், கிலோ மூன்று ரூபாய் விலையில், மாதம் ஒன்றுக்கு 25 கிலோ உணவுதானியம் வழங்கப்படும். இதற்கேற்ற வகையில், உணவு உரிமைச் சட்டம் இயற்றப்படும்.
3. ஆதிவாசி மற்றும் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்கலை வரை இலவசக் கல்வி அளிக்கப்படும்.
4. வங்கிகளில் வாங்கிய கடனை சரியாகத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும்.
5. அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படும். ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாட வகுப்பில், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் மற்றும் பல்கலைக் கழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையோ அல்லது கல்விக் கடனோ வழங்கப் படும். இந்தக் கல்வி கடன் எந்தவிதமான நிபந்தனை உத்தரவாதமும் இல்லாமல் வழங்கப்படும்.
6. சாதாரண மக்கள் நிவாரணம் பெறும் வகையில், மிதமான வகையில் சேவை வரிகள் விதிக்கப்படும்.
7. வரும் 2010ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல், "பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,)' அறிமுகப் படுத்தப்படும்.
இந்த வரி அமலுக்கு வந்து விட்டால் மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப் படும் இதர வரிகளான "வாட்,' கலால் வரி, சேவை வரி, கேளிக்கை வரி, ஆடம்பர வரி போன்றவை முற்றிலும் ஒழிக்கப்படும். இதனால், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
8. இளைஞர்களும், இளம் பெண்களும் (18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்கள்) நாட்டின் தேசிய கட்டமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில், அவற்றில் அனுபவம் பெறும் வகையில், பயிற்சித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத் தப்படும். இதன்மூலம் அவர்கள் மிகுந்த பலன் பெறலாம்.
9. காங்கிரஸ் கட்சி மட்டுமே அகில இந்திய அளவில் பரவியிருப்பதோடு, அகில இந்திய அளவிலான பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு செயல் படுகிறது.
ஐந்து ஆண்டு கால பதவிக்காலத்தை காங்கிரஸ் கட்சி வெற்றிகரமாக முடித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு, கவுரவம் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய தொடர்ந்து பாடுபடும்.
10. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். குறைவான பணவீக்கத்துடன் உயரிய பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப் படும்.
11. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து, விளைப் பொருட்களை விவசாயிகளின் வீட்டிற்கே சென்று கொள்முதல் செய்யும் முறை துவக்கப்படும்.
12. நீதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க நீதித்துறை சீர்திருத்தம் தொடரும். போலீஸ் துறையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
13. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
14. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் ஜனநாயக மயமாக்கப்படும்.
15. எரிசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் உள்ள அரசு நிறுவனங்களின் மீது அரசின் கட்டுப்பாடு தொடரும்.
16. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமமும் அகண்ட அலைவரிசை இணைப்புடன் இருப்பது உறுதி செய்யப்படும்.
17. ஏழைக் குடும்பங்கள் அனைத்திற்கும் சுகாதார காப்பீடு திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப் படும். மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.
18. நடப்பு 2008-09ம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலைமை நீடித்தது. இருந்த போதிலும், இந்தியா 7 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு அறிவித்த சலுகைத் திட்டங்களால் அடுத்த சில வாரங்களில் பலன் கிடைக்கும்.
19. ஆண் - பெண் எண்ணிக் கையில் ஏற்றத்தாழ்வு நிலவுவதைச் சரிக்கட்ட பெண் குழந்தைகளுக்கான சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிக்கப் படும். அவர்களுக்குக் கல்வி கிடைப்பதும் உறுதி செய்யப் படும்.
ஆரம்பப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவிகளுக்குப் பண உதவி அளிக்கும் திட்டம் துவக்கப்படும். அவர்களின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் வரவு வைக்கப்படும்.
20. இந்திய தேசிய காங்கிரஸ் நான்கு "இசங்களை' எதிர்க்கிறது. நாட்டை நாசமாக்கும் மொழிவெறி, மாநில வெறி, சாதி வெறி, மதசம்பந்தப்பட்ட எல்லாவித வெறி ஆகியவற்றை எதிர்க்கிறோம்.

தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Monday, March 23, 2009

இந்தியப் பிரிவினை நூல் விமர்சனம்


இந்தியப் பிரிவினை ஜின்னாவின் தொலை நோக்குப்பார்வையிலும் சரி என்னுடைய பார்வையிலும் சரி நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியானதே.

காந்தி பல விஷயங்களில் கொஞ்சம் கோணலாக சிந்திப்பவர்தான். அவர் இதற்கும் விதி விலக்கல்ல.

ஜின்னா அன்று செய்த மாபெரும் நல்லக் காரியம் இந்தியப் பிரிவினை. அவர் அவ்வாறு யோசித்ததனால் தான் இந்தியாவில் நாம் இன்று நிம்மதியாக வாழ்கின்றோம் இல்லையென்றால் இப்பொழுது பாகிஸ்தானில் எவ்வாறு பயங்கரவாதம் படுக்கை போட்டுக் கொண்டு பல்லிளிக்கிறதோ அதே போல் இந்தியா முழுதும் பரவி நாட்டை சீரழித்திருக்கும்.

இதனால் நாம் ஜின்னாவிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

ஜின்னா நினைத்தது வேறு ஆனால் பாகிஸ்தானில் இப்பொழுது நடப்பது வேறு. உலக அரங்கில் முஸ்லீம் ஆகிய நாம் தனித்துவம் பெறவேண்டும் என்பதற்காக பிரிவினையை மேற்கொண்டார். ஆனால் சுதந்திரம் பெற்றப் பிறகு வெகு சில காலங்களிலே அவர் இறந்த கரணத்தால் அவருடை சிந்தனைகள் இன்றளவும் செயல் வடிவம் பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இன்றாளவும் அவர்கள் பாகிஸ்தானியர்களுக்கு முக்கியத்துவம் தந்து உள்கட்டமைப்பை சீரமைத்து சிறந்த வெளியுறவு கொள்கைளை வகுத்து வருங்கால சந்ததியினருக்கு நன்மை எதுவும் அவர்கள் சேர்க்கவில்லை. அவர்கள் அதற்கு மாறாக வன்முறையைத்தூண்டி தவறான பாதையில் தான் அவர்கள் வழி நடத்திச் செல்கிறார்கள்.

அதே போல சக்திகள் நம்முடைய நாட்டிலும் இருக்கிறது R.S.S, V.H.P ஆனலும் அவர்களின் பாட்ச்சா இங்கு பலிக்கவில்லை.மூளைச்சலவை செய்கிறேன் என்ற பெயரில் இளைஞர்களை திசை திருப்ப பார்த்தார்கள். ஆனால் அது தோல்வியில்தான் முடிந்தது. மதத்தின் பெயரில் மூளைச்சலவை செய்தால் அது பயங்கவாதத்தில் தான் கொண்டுபோய் முடியும் என்ற உதாரணம் பாகிஸ்தான் தான்.

இவர்கள் தோல்வி அடைந்ததிற்கு காரணம் ஹிந்துத்வாவை எதிர்த்த இந்துக்களினால் தான்.

இனிமேலும் மதத்தின் பெயரில் மக்களைத்தூண்டுவதை மதவாத சக்திகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

முதல் அத்தியாயமே நம்மை பதைபதைக்க வைக்கிறது. ரயில் வந்து நிற்க்கிறது, ஆனால் யாரும் இறங்கவில்லை, ஏனென்றால் யாருமே உயிருடன் இல்லை. ரயில் முழுவதும் இறந்த உடல்கள் சிதறி கிடக்கின்றன. இப்படி ஒரு பிரிவினை நடந்திருக்கிறது என்று நினைக்கும்போது மனம் வேதனையில் ஆழ்கிறது.

நாம் எல்லோரும் இப்பொழுது இந்தியச் சுதந்ததிர தினத்தை கொண்டாடும் அதே தினத்தில் 1947-ம் ஆண்டு நடைபெற்ற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்ததிர தினத்தை கொண்டாடுவார்களா என்பது சந்தேகமே!

காந்தி தன்னால் இயன்ற அளவிற்கு போராடிப் பார்த்திருக்கிறார். பேச்சுவார்த்தை, உண்ணாவிரதம், உயிரை பணயம் வைத்து வன்முறை நடைபெறும் இடத்திற்கே சென்று சமாதானம் செய்வது என்று தன்னால் முடிந்த அளவிற்கு முயற்ச்சித்திருக்கிறார்.

கத்தி இன்றி ரத்தம் இன்றி பெற்றோம் சுதந்ததிரம் என்று பெறுமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அப்படி பெற்ற சுதந்ததிரத்திற்க்காக மிகப் பெரிய விலையை இந்தியா கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.

பிரிவினை நடைப்பெற்ற அனைத்து இடங்களிலும் இந்து, முஸ்லீம் இரண்டு தரப்பிலும் பலத்த உயிரிழப்பு, ஏன்? எதற்கு? என்று நம்முள் கேள்விகள் மோதுகின்றன. அதற்க்கான விடையாக அடுத்தடுத்த பிளாஷ் பேக் அத்தியாயங்கள்.

அனைத்து மதங்களும் ஒரே கடவுளை நோக்கியே அழைத்துச் செல்கின்ற என்று பல யுகங்களாக பல பெரியோர் கூறியிருந்தும் அதை காதால் கேட்டும் மனதால் அவற்றை நம்ப மறுப்பதே இன துவேஷத்திற்கு காரணமாக அமைகிறது.

ஒன்றாக இருந்த இந்து, முஸ்லீம் இடையே ஏற்ப்பட்ட இந்த பிரிவினைக்கான ஆணிவேராக மதம் சுட்டிக்காட்டப்படுகிறது. இரு தரப்பினருக்கும் உணவிலிருந்து, கடவுள் வரை வேவ்வேறு பழக்க வழக்கங்கள். இருநதாலும் இரு தரப்பினரும் சேர்ந்து வாழ முடியும் என்ற காந்நிதியின் வாதத்தை ஜின்னா கட்டாயமாக மறுக்கிறார்.

காந்தியின் வாதத்தை உடன் இருக்கும் நேருவும், படேலும் கூட ஏற்றக் கொள்ளவில்லை எனும்போது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பிரிவினை நேராமல் தடுக்கும் பொறுட்டு மவுண்ட்பேட்டன், ஜின்னாவுடன் சேர்ந்து நடத்திய அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிகின்றன. பாகிஸ்தான் வேண்டும் என்ற உறுதியாக இருந்தார் ஜின்னா.


இந்தியப் பாகிஸ்தான் பிரிக்கும் வேலையை ஏற்றுக் கொள்ளும் பீரிட்டீஷ்காரரான ராட்கிளிஃபுக்கு இந்தியாவைப் பற்றி ஒன்றும் தெரியாது இந்திய எல்லைகளை பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அவரிடம் இந்திய, பாகிஸ்தான் பிரிவினைக்கான பணி ஒப்படைக்கப்படுகிறது.

இரண்டே மாதங்களே இருக்கின்றன என்னால் எப்படி இதைச் செய்ய முய்ய முடியும் என்று மவுண்ட்பேட்டனிடம் கேட்கிறார். மவுண்ட்பேட்டனோ என்ன ஆனாலும் பரவாயில்லை கோடு போட்டுக் கொடுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

அவர் இழுக்கப்போகும் கோடு எத்தனை காடு, மலை, ஆறு, கட்டிடங்கள், நிலங்கள், இவையனைத்திற்க்கும் மேலாக மனிதர்களின் இதயங்களைப் பிளக்கப்போகிறது என்று அவருக்குத் தெரியாது. ஆனாலும் கோடுப் போடுகிறார்.

ஒரு கிராமத்திற்க்கு நடுவே ஒரு கோடு இழுக்கப்பட்டிருந்தது. உச்சக்கட்டமாக அந்த கோடு ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து சென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா பின் பக்கம் வந்தால், பாகிஸ்தான்.

பிரிட்டீஷ் அரசோ, புதிதாக அமையப்போகும் இந்திய அரசாங்கமோ பிரிவினைக்காக கால அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் ஏற்படமால் போனது துரதிர்ஷ்ட்டமே.

ஒரு வீட்டை காலி செய்ய வேண்டுமென்றால்க்கூட நமக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. ஒரு நாட்டை இரண்டாகப் பிரித்து இங்கிருப்பவர்கள் அங்கு போகவேண்டும் அங்கிருப்பவர்கள் இங்கு வரவேண்டும் என்றால் எவ்வளவு நாட்கள் மாதங்கள், வருடங்கள் தேவைப்பட்டிருக்கம், ஆனால் இங்கோ வெறும் சில நாட்களிலேயே பிரிவினை முடிந்து விடுகிறது.

அதற்க்கான விலை மிகவும் பயங்கரம் பெண்கள், குழந்தைகள் என்று எத்தனை அப்பாவி ஜீவன்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

பாகிஸ்தானைப் பிரித்துக்கொண்டு போன ஜின்னாவிற்க்கு உடல் நிலை சரியில்லாமல் போக காஷ்மீரில் சென்று ஓய்வெடுக்க நினைத்து அதற்க்கான ஏற்ப்பாடு செய்யும்போது காஷ்மீர் மன்னர் அதற்கு அனுமதி மறுக்கவே, மனிதருக்கு வருகிறது கோபம். அந்தக் கோபத்தின் விளைவு இன்றளவும் இந்திய - காஷ்மீர் பிரச்சனையாக நீடித்துக் கொண்டிருக்கிறது.

ஜின்னா தனக்கு ஏற்ப்பட்ட அவமானத்தை கௌரவ பிரச்சனையாக எடுத்துகொண்டு காஷ்மீரை அடைய குறுக்கு வழியை மேற்க்கொள்ளும்போது அவரிடம் நமக்கு இருந்த கொஞ்சம் மரியாதையும் போய் விடுகிறது.


பிரிவினைக்குப் பிறகு இநதியாவின் நிலை பரவாயில்லை தட்டுத் தடுமாறி இன்று உலக அளவில் வளர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கும் நாடாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் நிலையோ பத்திரிக்கையில் படிக்கிறோமே பிறந்த குழந்தையை அநாதையாக குப்பைத் தொட்டியில் கிடந்தது என்று அதுப்போல ஜின்னாவும் பாகிஸ்தானை அநாதையாக நடுத்தெருவில் விட்டு சென்றார். அது இன்றளவும் அப்படியே இருக்கிறது.



புத்தகத்தின் குறைகள் :

நிறைய அத்தியாயங்கள் முடிக்கவேண்டுமே என்கிற கட்டாயத்தில் சுருக்கி எழுதியிருக்கிறார்.

ஒரு சில அத்தியாயத்தில் சில பத்திகள் சற்று ஒன்றுகொன்று தொடர்பில்லாதவையாக இருக்கிறது.

இவருடைய வேறெந்த புத்தகத்திலும் இல்லாத அளவிற்கு எழுத்துப் பிழைகள்.

இந்திய பிரிவினை புத்தகத்தில் முழுமைப் பெறவில்லை.

புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

Monday, March 2, 2009

நாடாளுமன்றத்தேர்தல் தேதி அறிவிப்பு

தேர்தல் ஆணையாளர் திரு. கோபால்சாமி அவர்கள் நாடாளுமன்றத்திறக்கான தேர்தல் தேதியை அறிவித்தார்.

ஏப்ரல் 16ல் தொடங்கி மே 13 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 16

இரண்டாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 23

மூன்றாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 30

நான்காம் கட்டத்தேர்தல் மே 7 மற்றும்

ஐந்தாம் கட்டத்தேர்தல் மே 13 நடைபெறும் என்றும்

ஓட்டு எண்ணிக்கை மே 16ல் நடைபெறும்.

ஜூன் 2ம் தேதி பாராளுமன்றம் கூடும்.

ஜம்மூ மற்றும் காஷ்மிரில் 5 கட்டங்களாகவும், பீகாரில் 4 கட்டங்களாகவும், மகாராஷ்டரத்தில் 3 கட்டங்களாகவும் மற்றும் அஸ்ஸாமில் 2 கட்டங்களாகவும் நடைபெற இருக்கிறது.