எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, December 26, 2008

மொட்டை மாடிக் கூட்டம்



ஏன் இந்த புத்தகத்தை எழுதினீர்கள் ?

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கிறீர்களா?

ரஷ்யாவின் கம்யூனியஸத்தை எதிர்கிறீர்களா?

அமெரிக்காவின் கொ.ப.செ வா நீங்கள்?

அமெரிக்க அதிபரைப் பற்றி ஏன் எழுதினீர்கள்?

அவரால் இந்தியாவிற்கு என்ன பயன்?

இல்லை, அவரைப் போன்றொரு தலைவர் இந்தியாவில் இல்லை என்று சொல்கிறீர்களா?

அவர் ஏன் வாஷிங்டன் என்று பெயர் வைத்தார்? அவரென்ன டன் கணக்கில் துணிகளைத்துவைத்தாரா?

இப்படி பல கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார் நூல் ஆசிரியர் பாலுசத்யா.

முகவரி:

கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆல்வார்பேட்டை,
சென்னை - 18

Wednesday, December 24, 2008

கலைஞரின் சந்தர்ப்பவாதக் கவிதை

தோழமை தோள் கொடுக்கும் என்றெண்ணி கை கோர்த்தால் தேள் போல் கொட்டுகிறார் !

கல்லுடைத்து கள் குடித்தால் அவர் கவுரவம் குறையுமே என்றெண்ணி, மேற்கத்திய மதுவை மலிவாகத் தர மதுக் கடைகளைத் நான் திறந்தால்.

தேள் கொட்டியது, மருத்துவரை நான் அழைத்தேன் சிகிச்சைக்கு. மதுக்கடைகளை மூடினால் மருந்தளிக்க நான் மறுப்பேனா? – என்கிறார்.

நாடென்ன ஆனாலென்ன? என் மக்கள்
நலம்தன்னை கருத்தில் கொண்டு
ஆட்சியைப் பகிர்ந்தளித்தேன் சொந்தங்களுக்கு !

சொந்தங்களோ,
அரியணையை பிடிக்க சதிசெய்தது தெரியவர,
அவருடன் பகைமை பாராட்டி, போதுமடா உன்பாசம் !
நேசித்தேன் நான் உன்னை! மோசம் செய்தாய் நீ என்னை !
கலைந்ததடா உன் வேஷம் !

கழகத்தின் தோழர்களை நான் அழைத்து அவனது கரை சேவை போதுமென்று கட்சியிலிருந்தும், ஆட்சி கட்டிலிலிருந்தும் துரத்தினால்.....

அவனோ பகைமையை பழிதீர்க்க நாள் குறித்து, நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக அவனென்னை தோலுரிக்க,

”போதுமடா நம் பகைமை ! மக்கள் விழிக்கும் முன் சேர்ந்தெழுவோம்” நேசகரம் நான் நீட்ட, அவனும் கைக்கோர்த்தான்!

நாடென்ன ஆனாலென்ன ! நம் நலந்தானே முக்கியம் !

தெளிந்துவிடும் போதை மக்களுக்கு மதுக்கடைகளை மூடினால்,
மருத்துவருக்கோ கொண்டாட்டம், நம் பாடு திண்டாட்டம் !

யார் என்ன ஆனால் என்ன? எவர் குடும்பம் அழிந்தாலென்ன !
நம் குடும்ப நலந்தானே மிக முக்கியம் !

மூடுவேனா மதுக்கடைகளை, நான் மூடுவேனா !




இன்றைய சூழலில் கலைஞர் கவிதை எழுதினால் இப்படித்தான் எழுதுவார் மனசுக்குள்.

Tuesday, December 23, 2008

சே குவேரா உயிருடன் தான் இருக்கிறார் !



அவர் ஒரு மாபெரும் போராளி என்பதை விட உயர்ந்த பண்புகளுக்கும், தைரியத்துக்கும் மற்றும் மனித நேயத்திற்க்கும் சிறந்த உதாரணமாக விளங்கினார். சிறந்த சிந்தனையாளரும் மற்றும் நிர்வாகத்திறன் மிக்கவரும் ஆவார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சே குவாரா வாழ்ந்தார் என்று சொல்லுவதை விட மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் நிறைவாக இருக்கும்.

பிறப்பால் அவரொரு அர்ஜெண்டைனர் ஆனாலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து க்யூபாவின் விடுதலைக்காகப் போராடி, க்யூபா விடுதலை அடைந்த உடன் பல உயர் பதவிகள் அவரைதேடி வந்தன. அவர் என்னவோ ஆட்சி அதிகாரத்தில் உட்கார வேண்டும் என்பதற்க்காகவா புரட்சி படையில் சேர்ந்து சண்டையிட்டார் இல்லை இல்லை சிறு வயதில் இருந்தே அவருக்கு ஓர் இடத்தில் அமர்ந்து இடத்தை தேய்ப்பது என்றால் பிடிக்காது துறு துறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பார். உதாரணத்திற்கு வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று பல்வேறு கலாச்சாரங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் தனியாத ஆசை கொண்டவர். ஆசை என்று சொல்வதைக் காட்டிலும் அதன் மீது காதல் என்றால் தான் சரியாக இருக்கும்.

க்யூபா விடுதலைப் பெற்ற உடன் துப்பாக்கி ஏந்தி பொலிவியாக்குச் சென்று, அங்கே அடர்ந்த காட்டில் அடுத்த புரட்சிக்கான ஆயத்தங்கள். அங்கும் வேண்டும் விடுதலை ! என்ற முழக்கம் எழுப்பினார்.

தந்தையும் தாயும் :

எர்னஸ்டோ குவேரா லிஞ்ச்சுக்கு அர்ஜெண்டைனா தான் பூர்வீகம் அவருக்கு மட்டுமல்ல அவருடைய முந்தைய பன்னிரண்டு தலைமுறைகளுக்கு ஸான் இசித்ரோவில் தான். அர்ஜெண்டைனாவின் தலைநகரமான ஃபியூனஸ் அயர்ஸீக்கு அருகிலுள்ள பகுதி. வீட்டுக் கதவைத் திறந்தால் ப்ளெட் கடற்கரை.

ஸான் இசித்ரோக்கு வந்த பிறாகுதான், குவேராவின் வாழ்க்கை ரம்மியமாக மாறியது. அதற்கு முன்னால் அவர் ஒரு தொடர் தோல்வியாளர். தொழில் ரீதியாக அவர் எதைத் தொட்டாலும் அது விளங்காது. புதிது புதிதாகத் திட்டமிடுவார். நிறையச் செலவு செய்து, புதுய தொழில் தொடங்குவார். அதில் பெருத்த நஷ்டம் தான் ஏற்படும்.

ஸெலியாவை 1927ஆம் ஆண்டு குவேரா லிஞ்ச் திருமணம் செய்து கொண்டார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்வார்களே அது போல ஒரு மாதம் முன்னதாகவே (சே பிறந்தார்) ஜூன் மாதம் 14, 1928-ம் ஆண்டு அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. எர்னஸ்டோ குவேரா டி லா ஸெர்னா என்று அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டனர். இந்த எர்னஸ்டோ குவேரா டி லா ஸெர்னா தான் பின்னர் சே குவேராவாக மாறினார்.

நோய் தாக்கம்:

ஸெலியா தன்மகனை கூட்டிக் கொண்டு கடற்கரை மணலில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அன்று வழக்கத்திற்க்கு மாறாக கடுமையான குளிர்க் காற்று வீசிக்கொண்டிருந்தது. அதில் சே குவேரா அதிகமாக நடுங்கிகொண்டிருந்தான். குளிர் அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவன் பயத்தால் தான் நடுங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து தைரியமாக இருக்க வேண்டும் என்று அறியுறுத்தினார்.

ஸெலியாவிக்கிற்கு கதைகள் பிடிக்கும். கடல் பிடிக்கும். அவருக்குப் பிடிக்காத ஒரே விஷயம் பயம்.

ஸெலியா பெற்றோர் இளம் வயதிலேயே இறந்து விட்டதனால் சகோதரி கார்மன் அரவணைப்பில் வளர்ந்தார் அதனால் முற்போக்கு மற்றும் இடதுசாரி சிந்தனைகள் கொண்டவராக வாழ்ந்தார்.

கடலுக்கு குளிக்க அழைத்துச் சென்றாதால் சேகுவேராவுக்கோ உடல் மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தது.லிஞ்ச் ஓடி வந்து ஸெலியாவை பார்த்து கண்ட படி திட்டி தீர்த்துவிட்டு மருத்துவரிடம் அழைத்து சென்று பார்த்த பொழுது சேவுக்கு ஆஸ்துமா நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பொழுது ஸெலியாவுக்கும் சிறுவயதில் நுறையீரல் தாக்கிருப்பதை மருத்துவரிடம் கூறினார். மருத்துவரும் அதனால் தான் சேவையும் தாக்கியுள்ளதாக கூறினார். ஸெலியோ மிகவும் மனம் உடைந்து போனார் தன்னால் தான் குழந்தைக்கு நோய் தாக்கியதாக கருதி. ஸெலியா மிகுந்த பாசத்துடன் சேவை வளர்த்து வந்தாள். லிஞ்ச் எப்பொழுதுமே மிகவும் உற்சாகத்துடனும் ஜாலியாகவும் பொழுது போக்க கூடியவர். ஆனாலும் தன் மகனுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வந்தார். மகன் மிகவும் சோர்ந்து கிடப்பதை பார்த்த லிஞ்ச்சோ எப்படியாது சேவுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து பெரிய ஆளாக்கவேண்டும் என்று நினைத்தார்.

தன்னம்பிக்கை வளர்ந்த விதம்:

மகனை அழைத்து கொண்டு சிறு குன்றுகளிலும் சிறு சிறு மலைகளிம் ஏற பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தார் லிஞ்ச்.
அப்படி பயிற்சி கொடுக்கும் போது சேவின் மகிழ்ச்சியை பார்த்து பூரிப்படைந்தார் லிஞ்ச்.

ஒட்டுமொத்த அர்ஜெண்டைனாவையும் உலுக்கிய ஸ்பானிய உள்நாட்டுப் போர், 1936-ல் தொடங்கியது. இளைஞர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் போர் செய்திகளை முனைப்புடன் வாசித்து வந்தனர்.

பத்து வயதான எர்னஸ்டோ, ஸ்பானிய போரைக் கவனிக்கத் தொடங்கியது ஆச்சிரியம். இந்தப் போருக்குப் பின்னாலிருந்து அரசியலை அவன் புரிந்து கொள்ளவில்லை. அது அவனுக்கு காட்டியது, போர் கதைகளில் யார் எப்படிப் போரிட்டார்கள், எப்படி ஜெயித்தார்கள் , எந்தெந்தப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள் என்பது போன்ற அம்சங்களைத்தான் அதிக ஆவலோடு. தெரிந்துகொள்ள விரும்பினார். நிறைய சாகஸ கதைகளை வாசித்ததன் விளைவு தான் பின்னாளில் ஒரு புரட்சிகாரனாக மாறுவதற்க்கு வித்திட்டது.


காதல் :

குவேராவின் வாழ்க்கையில் சிச்சினா என்ற அழகி குறிக்கிட்டால் நாண்பர்களாக பழகி அதுவே காதலாக மலர்ந்தது. சேவிடம் ஒரு குறை இருந்தது அவர் என்றும் தன்னுடைய ஆடைப் பற்றியும் சவரம் செய்வதைப் பற்றியும் அவர் கவலைபட்டதே கிடையாது.
சிச்சினா அதைப் பற்றி கேட்டாலும் பெரியதா அலட்டிகொள்ளாமல் இருந்தார். சிச்சினாவுக்கு ஏனோ சேவின் மீது அளவு கடந்த பாசமும் நேசமும் உண்டானது. இருந்தாலும் அவர்களுடைய காதல் வெற்றியடைவில்லை.

மோட்டார் சைக்கிள் பயணம் :

சே தன்னுடைய சிறு வயது முதல் தன்னம்பிக்கை மிக்கவராக வளர்ந்தனால் நண்பர்களுடன் வேறுசில நாடுகளையும் மக்களின் கலாச்சாரங்களையும் கற்றுக் கொள்ள தன்னுடைய பதினாறாவது வதில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு அதில் குறிப்பிடதக்க வெற்றியும் பெற்றார்.

நண்பர் ஆல்பர்ட்டோயுடன் வட அமெரிக்காவுக்கு போக திட்டமிட்டார்.

ஜனவரி 1952-ல் உற்சாகத்துடன் தொடங்கிய அந்தப் பயணம் எட்டு மாதங்களில் ஐந்து நாடுகளைச் சுற்றி வருவதாக திட்டம் தீட்டி உருண்டு புரண்டு பயணத்தை முடித்து வீடு திரும்பினார்.

அப்பொழுதான் அவருக்கு கிடைத்தது கம்யுனிஸ்டுகளின் பரிச்சயம்.சேவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டே போனது.இதற்கு முன்பு அம்மாவிடம் தெறிந்த கொண்டார் கம்யூனிசத்தையும் மற்றும் முற்போக்கு சிந்தனைகளைப் பற்றியும்.

ஆயுதம் அவசியம் :

சே ஒவ்வாமையில் நிபுணத்துவம் பெற்று ஓர் ஆய்வகத்தில் நிபுணராக பணியாற்றத் தொடங்கினார். ஆனால் அவரால் ஓர் இடத்தில் இருந்து வேலை செய்யமுடியாது. அவருக்கு இருந்த பயணத்தின் மீது இருந்த காதலும் கம்யுனிஸ்டுகளின் மீதிருந்த காதலும் அவரை ஓரிடத்தில் உட்காரவிடவில்லை.

அதனால் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தார். எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கு அமெரிக்கா காலூன்றி இருப்பதைக் கண்டார்.

அங்கு இரண்டு க்யூபர்களை சந்தித்தார் அவர்கள் காலிக்ஸ்டோ கார்ஷியா மற்றும் ஸெவரினோ ராஸ்ஸல்.

மீண்டும் ஒரு தருணத்தில் நிகோலோபஸை சந்தித்தார். நான் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவரைப் பற்றி சொல்ல முடியுமா என்று கேட்டார். நிகோலோபஸும் காஸ்ட்ரோவைப் பற்றி நிறைய கூறியவுடன் சே அவரை மிகவும் நேசிக்கலானார்.
நிகோலோபஸ், சேவுக்கு ரால் காஸ்ட்ரோவை அறிமுகப் படுத்தினார்.

பின்னர் ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்து அவருடைய புரட்சிப் படையிலும் சேர்ந்தார். ஒவ்வொரு நாளும் காஸ்ட்ரோ சேவின் திட்டங்களைப் பற்றி கேட்கும் போது மிகவும் வியந்தார். அதனால் சே மிகவும் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒருவர் ஆனார்.

காஸ்ட்ரோவின் முதல் குறி க்யூபாவின் ராணுவக் கிடங்கு, மான்காடா. யார் யார் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே தெளிவாகச் சொல்லித் திட்டமிட்டு கைப் பற்றினார்கள்.

அந்த சமயத்தில் சே வுக்கு அதிகமாக கம்யூனியசத்தின் மீது நாட்டம் வந்து கம்யூனிஸ ஆதரவாளனாகவும் சோவியத் ஆதரவாளனாகவும் மாறினார்.

க்யூபாவுக்குச் சென்று மக்களைச் சந்தித்து புரட்சி படைக்கு ஆள் சேர்த்தார். அங்கு இது புரட்சி படை அல்ல, விவசாயிகள் படை என்று பெருமைபட சொன்னார்.

ஜனவரி 7, 1959-ல் ராணுவத்தை சிறைப்பிடித்து க்யூபாவை கைப்பற்றினார்கள். கொஞ்ச காலம் க்யூபாவில் இருந்தார்.
அவருக்குத்தான் ஓர் இடத்தில் இருந்து வேலை செய்வதென்பது பிடிக்காத காரியமானதே. அவர் மறுபடியும் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த பொலிவியாவுக்கு சென்று போராடி அங்கே இறந்தும் போனார்.

இருந்த போதிலும் சே இந்த உலகின் மிகப் பெரிய சின்னமாக இருக்கிறார். புரட்சிகரத்தன்மைக்கும் தைரியத்துக்கும் உயர்ந்த பண்புகளுக்கும் அவர் உதாரணமாகிவிட்டார்.

சே இறந்துவிட்டார் என்பதை நம்மால் நம்பவே முடியவில்லை.
நம்மோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

Tuesday, December 16, 2008

ஞானியின் பார்வையில் : மும்பை பயங்கரவாதம்

இரண்டாவது மொட்டை மாடிக்கூட்டம் எங்கள் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் பிரபல பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ஞானியின் பார்வையில் மும்பை பயங்கரவாத்தத்தை பற்றிய தலைப்பில் பொதுவான விவாதம் நடந்தது.


மும்பை தாக்குதல் நவம்பர் 26 ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட போது அவர் மும்ம்பையில்தான் இருந்துள்ளார். அப்பொழுது மும்பை தாஜ் ஹோட்டல், நரிமன் பகுதி மற்றும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையங்களில் தாக்குதல் நடந்த போது பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனமும் பதிவு செய்து ஒளிபரப்பவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் :

1. தொலைக்காட்சி மீதான குற்றச்சாட்டு.
2 காவல் துறையினர்மீது சரியான திட்டமிடாமை.
3.அரசியல்வாதிகளின் மீதான குற்றச்சாட்டு.

தொலைக்காட்சிகளின் மீதான குற்றச்சாட்டு

தொலைக்காட்சி ஊடகங்கள் தங்களுடைய TRP Rate ஐ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்க்காக தாஜ்ஹோட்டலிலேயே முற்றுகையிட்டு சுட சுட செய்தியை தரவேண்டும் என்பதற்காக தீவிரவாதிகளின் அதிரடி தாக்குதல்களையும் கமாண்டேக்களின் எதிர் தாக்குதல்களயும் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் சுட சுட செய்திகளில்லை அது சுட பட்ட செய்தி ஆன காரணத்தால் மக்களுக்கு ஆர்வம் இருக்காது என்பதனாலும் அங்கு செத்துப்போனது சாதாரணமான மனிதர்கள் என்பதாலும் எந்த ஒரு தொலைக்காட்சி ஊடகமும் அதை ஒளிபரப்பு செய்ய முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

இதே கருத்தை நானும் வலியுறுத்துகிறேன்.

ஆனால் நரிமன் பகுதியாகட்டும், தாஜ் ஹோட்டலாகட்டும் பணக்காரர்கள் வாழும் பகுதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் இருக்கும் இடம் இதை ஒளிபரப்பு செய்தால் உலகெங்கும் இருக்கும் மக்கள் எல்லோரும் ஆர்வமாக பார்ப்பார்கள் அதனால் இந்த தொலைகாட்சி சேனல்களெல்லாம் தங்களுடயை TRP Rate ஐ ஏற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கோடுதான் செயல்படுகிறது மற்றும் எந்த ஒரு உண்மையையும் வெளிகொண்டுவர அவைகள் ஈடுபடுவதில்லை அவைகள் சுயநல நோக்கோடு செயல்படுகின்றன என்கிறார்.

பத்திரிக்கை துறை மட்டுமே பொது நல நோக்கோடு சென்று செய்திகளை சேகரித்து தருகின்றன என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்.


காவல்துறையின் மீது குற்றச்சாட்டு.

காவல்துறையினர் எந்தவொரு திட்டமும் இல்லாமல் சென்று எதிர்தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால் தீவிரவாதிகளை மிகச் சரியான திட்டங்களை தீட்டி செயல்பட்டனர் என்பதையும் தெளிவாக சொல்கின்றார். தொலைக்காட்சி பேட்டியின்போது உயர் போலீஸ் அதிகாரி சொல்கிறார் எங்களுக்கு எந்தவொரு வழிகாட்டுதலும் இல்லாமல் சென்று தாக்குதலை தொடங்கினோம். ஆனால் தீவிரவாதிகள் ஓரிடத்தில் தாக்குதலை நடத்திவிட்டு ஓடி மறைந்து இன்னொரு இடத்திலிருந்து தாக்குதலை நடத்தினார்கள். அதனால் நாங்கள் சற்று நிலைகுலைந்து விட்டோம் என்று சொல்கிறபோது இவர்களின் மீதான குற்றச்சாற்றும் சரியென்றே தோன்றுகிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் - இந்துத்துவா பயங்கரவாதிகளும்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இந்தியாவின் மீதான தாக்குதல். என்பது இந்தியாவில் உள்ள பயங்கரவாத மதவெறியர்களான இந்துத்துவா அமைப்பினால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகே தொடங்குவதாக சொல்கிறார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் முன்பு நமது நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளான VHP, RSS மற்றும் BJP அமைப்புகளை மூடி விட்டு அதன் தலைவர்களான பிரவீன் தோகாடியா, அத்வானி, நரேந்திர மோடி, ஆகியோர்களை கைது செய்யவேண்டும் என்கிறார்.

நிறைய மேற்கோள்களுடன் 1992 ற்கு முந்தய தாக்குதல்களைப் பற்றி கேட்டபோது அவையெல்லாம் காஷ்மீர் சம்பந்தப்பட்ட செயல்பாடாகவே கருதுகிறார்.

பாபர் மசூதியை இடிக்கும் முன்பு வரை எந்த ஒரு பெரிய அசம்பாவிதங்களோ இஸ்லாமிய தீவிரவாத செயல்களோ நடைபெறவில்லை என்பதை தெளிவாக விளக்குகிறார்.


பொதுவாகவே 10, 12 வருடங்களுக்கு முன்பெல்லாம் விநாயகர் சதுர்த்தி விழாவை இவ்வளவு சிறப்பாக கொண்டாடியதில்லை. விநாயக சதுர்த்தி விழாவை ஆர்,எஸ்.எஸ், வி.எச்.பி. மற்றும் பி.ஜே.பி போன்ற இயக்கங்கள்தான் 1992 பிறகு நாடெங்கும் பரப்பி மக்களிடையே மதவெறியை தூண்டி (முஸ்லீம்களுக் எதிராக கலகங்களை தூண்டி) இரண்டு சமுதாய மக்களுக்கும் இடையே பிரச்சனைகளை கிளப்பி அதில் குளிர் காயந்து கொண்டிருக்கிறார்கள்.

வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் தயவில் பி.ஜே.பி ஆரம்பிக்கப்பட்டபோது கட்சியை எப்படி வளர்க்கலாம் என்று நினைத்தபோதுதான் அவர்களுக்கு கிடைத்தது இந்துத்துவா கொள்கை. இந்த கொள்கையை எப்படி மக்களிடையே கொண்டு செல்வது என்றபோதுதான் ஒவ்வொன்றாக தோன்றியது. முதலில் நம்முடைய கற்பனையான இதிகாசங்களை (ராமாயணம், மகாபாரதம்) தூசி தட்டி எடுத்து அதை நாடகமாக்கி மக்களிடையே ஆன்மீக உணர்வையும் மத உணர்வையும் வளர்த்தது. அவர்களிடத்தில் மதவெறியையும் தூண்டிக் கொண்டே பிரச்சாரத்தை செய்து கட்சிக்கு ஆள்பிடித்து மூளை சலவை செய்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் ஆன்மீக வெறியையும் ஆயுத பயிற்சிகளையும் கொடுத்து அவர்களை நாசவேலைக்கு தயார் செய்து கொண்டிருந்தது வி.எச்.பி.

அவ்வப்போது வி.எச்.பி பயிற்சி முகாம்களை நடத்தி அதிலென்னவோ ஆன்மீக சிந்ததனைகளை போதிப்பதுப்போல இந்துத்துவா பயங்கரவாத சித்தாந்தங்களை போதித்து அவர்களுக்குள் ஒரு விதமான மதவெறியை ஏற்படுத்தி பாபர் மசூதியை இடித்து ஒற்றுமையாக இருந்த இந்து, முஸ்லீம்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி அதை தமக்கு சாதகமாக்கி கொண்டு ஆட்சியைப் பிடிக்க பி.ஜே.பி திட்டம்போட்டு அதையும் நிறைவேற்றி கொண்டது.


வி.எச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் தோன்றிய பிறகு கூட பெரிதாக அந்த இயக்கங்கள் தென் மாநிலங்களில் வளர்ந்ததாக தெரியவில்லை. ஆனால் பி.ஜே.பி என்ற தீவிரவாத அரசியல் கட்சி வந்த பிறகுதான் எல்லா இடங்களிலும் பயங்கரவாதத்தின் கிளைகளை ஏற்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக போராட்டங்களை தூண்டி கலகங்களை ஏற்படுத்தி பாபர் மசூதியை இடித்தன. மசூதி இடித்தப் பிறகுதான் இஸ்லாமியர்கள் தங்களுக்குள் பிராந்திய வேற்றுமைகளை மறந்து தங்கள் இனங்களை பாதுகாத்துக்கொள்ள பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தற்காப்புக்காக செயல்படுகிறார்கள்.

இருந்தாலும் இந்தியாவில் உள்ள எந்தவொரு முஸ்லீம் அமைப்புகளும் தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

ஆனாலும் விதிவிலக்காக ஒருசில அமைப்புகள் மட்டும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுகிறார்கள் என்பதையும் மறுப்பதிற்கில்லை. ஏனென்றால் உள்ளுர் அமைப்புகளின் உதவிகள் இல்லாமல் எந்தவொரு தீவிரவாதியும் நம் நாட்டிற்குள் நுழைந்து விட முடியாது. இந்துத்துவா மதவெறியர்களின் பயங்கரவாத செயல்பாடுகளை சகிக்க முடியாமல்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தீர்வு

பாகிஸ்தானின் மீது போர் தொடுப்பது தீர்வாக இருக்க முடியாது. மற்றும் பயங்கரவாதிகளை உலகத்தின் நீதியின் முன்பு கொண்டு சென்று நிறுத்த வேண்டும் என்று சொல்கிறார். இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். ஏனென்றால் நம் நாட்டிற்கு இந்த தருணத்தில் போர் என்பது தேவையில்லாத ஒன்று உலகப் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த சமயத்தில் போர் என்பது தவிர்க்க படக் கூடிய ஒன்றுதான். அப்படியே போர் என்று வந்தால் நமது நாட்டின் பொருளாதாரமும் இன்னும் மோசமாக பாதிப்படையும். ஆதலால் போர் என்பது தீர்வாகாது.


நேற்று வரை நான் ஞானியை தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்த்து கொண்டிருந்தேன். ஒரு பழமொழி உண்டு கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று. அவருடைய பேச்சை கேட்ட பிறகுதான் அவர் மீதான தவறான என்னுடைய கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டேன்.

ஞானியின் நேர்மையான விளக்கமும், தெளிவான கண்ணோட்டமும், அவருடைய நாத்திக வாதமும், சீரிய சிந்தனைகளும் மற்றவர்கள் பார்க்கும் கோணத்திலிருந்து மாறுபட்டு சிந்தித்து நடு நிலைமையாக பேசுவதால் நிறைபேருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டு கேள்விகணைகளை ஏவுகிறார்கள் ஆனால் அவரோ மிகவும் சரியான வாதத்தை எடுத்து வைக்கிறார் அதனால் மற்றவர்கள் நிலைகுலைந்து போய் என்ன கேட்கவேண்டும் என்பதை மறந்து தேவையில்லாமல் அவர் மீது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கோடே கேள்விகளை கேட்கின்றனர்.

ஒருவர் கேள்வி கேட்டார் தமிழ்நாட்டில் பெரும்பாலும் தீவிரவாத தாக்குதல் நடைபெறுவதில்லையே அதற்கு என்ன காரணம் என்று கேட்டார்.

மற்றொருவர் சட்டென்று எழுந்து தந்தை பெரியார் இருந்த காரணத்தால் நடைபெறவில்லையா என்று கேட்டார்.

ஞானியோ சரியான விளக்கத்தை தராமால் தந்தை பெரியார் இருந்த காரணத்தால் தான் நடைபெறவில்லை என்றுசொன்னால் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறி நிறுத்திவிட்டார்.

அந்த கேள்விக்கு நான் இங்கு பதில் கூற கடைமைப்பட்டுள்ளேன்.

தந்தை பெரியார் இருந்த காரணத்தால் தான் மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் போனதும் மற்றும் மத வெறியர்களின் இலக்கிற்கு ஆளாகமல் எந்த ஒரு இஸ்லாமிய சமூகத்தின் மீது தாக்குதல் என்ற பேச்சிற்க்கே இடம் கொடுக்காமல் மிகவும் கட்டுகோப்பாக இருக்கிறது அதனால் முஸ்லீம் தீவிர வாதிகள் இதுவரையில் எந்த ஒரு தாக்குதல்களையும் நடத்தவில்லை என்றே கூற வேண்டும்.

ஆதலால் தந்தை பெரியார்தான் இதற்கு முழுமுதற்காரணம் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Monday, December 15, 2008

திருநங்கை ( அரவாணிகள் ) - துரத்தும் வாழ்க்கை




நமக்கு வாழ்க்கையில் சோகம் ஆனால் சோகமே இவர்களுக்கு வாழ்க்கை - திருநங்கை நான் வித்யா

ஆரம்பமே அதிர(இ)டியாக உள்ளது. சரவணனாக இருந்து வித்யா என்ற பெண்ணாக மாறுவதற்கு என்ன ஒரு தீவிரம், உயிரையே பணயம் வைக்கும் தைரியம், துணிச்சல். நிர்வாணம் என்னும் அந்த முதல் அத்தியாயத்தை படிக்கும்போதே நமக்கும் அந்த வலியை உணர முடிகிறது.

சமீபத்தில் சன் நீயூஸில் அரவாணிகளைப் பற்றி ஒரு தொகுப்பில் ஒரு டாக்டர் பேசிய போது சுகாதாரமற்ற மருத்துவமனைகளில் ஆணிலிருந்து பெண்ணாக மாற அரவாணிகள் ஆபரேஷன் செய்துக்கொள்ளும்போது உடலளவில் பெறும் வேதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் சிலர் உயிர் இழந்துவிடுவதையும் பற்றி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறந்து கொண்டிருந்த நிலையில் ஆண் குழந்தையாக வறுமையான குடும்பத்தில் சரவணனாக வித்யா பிறந்ததை படிக்கும்போது, பரவாயில்லை அவர் தந்தை அவனை நன்றாக வளர்ப்பார் என்று எதிர்பார்ப்பு ஏமாற்றமானது.

ஐந்து வயது வரை வீட்டில் அவனுக்கு ஏகப்பட்ட செல்லம். சரவணனை நன்கு படித்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்த அவன் தந்தைக்கு அதுவே ஒருகட்டத்தில் வெறியாகவே மாறிபோகிறது. முதல் வகுப்பில் சரவணன் முதல் ராங்க் வாங்கியபோது இருந்த சந்தோஷம் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவனை படி, படி, என்று வதைக்கத் தொடங்குவது நம்மையே வதைப்பது போன்று உள்ளது.

பள்ளி இறுதிவரை இப்படி ஏகத்துக்கும் அடிப்பட்டு வெறுத்து ஒருகட்டத்தில் தந்தையையே திருப்பி அடிக்க கை ஓங்கி விடுகின்றான். மென்மையான குணம் கொண்ட அவன் அடிமனதில் தன்மேல் இவ்வளவு கோபம் இருக்கிறது அன்றுதான் உணர்கின்ற அவர் அன்றிலிருந்து அவனைஅடிப்பதில்லை.

சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையை அணிந்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் அவன் ஆடுவதில் அலாதி ஆனந்தம் அடைவதும், தனிமையில் தன்னை பெண்ணாக பாவித்துக் கொள்வதுமே அவனுக்கு திருப்தியை தந்தது.

தனிமை நடனம் அவனுக்குள் இருக்கும் பெண்மையை வெளிப்படுத்துகிறது.
வளர வளர இது அவனை சுற்றிலுமுள்ளவர்களின் கிண்டலுக்கு உள்ளாகிறது.

பள்ளியில் சக மாணவர்களுடனும், மாணவிகளுடனும் சேரமுடியாமல் தவிப்பதாகட்டும். உறவினர்களும் அண்டை வீட்டுகாரர்களும் கேலியும், கிண்டலும் அவனை நரகத்துக்குள்ளாக்குகின்றன.

பள்ளி முடிந்து கல்லூரி சென்று பட்டம் பெறுவதாகட்டும், முதுகலை எம்,ஏ (மொழியியல்) படிக்க கல்லூரியில் சேர தந்தையிடம் போராடி வெற்றி பெறுவதாகட்டும். கல்லூரியில் நாடகத்தில் தன்னை ஈடுபடுததிக் கொள்வதாகட்டும். அவனுடைய சளைக்காத முயற்சி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. பொதுவாக இதுப்போன்ற திருநங்கைகள் தங்கள் வாழ்வில் பள்ளியின் இறுதி ஆண்டை தாண்டுவதே பிரம்ம பிரயத்தனமாக இருக்க இவனோ இவற்றையெல்லாம் அனாவசியமாக தாண்டுகிறான்.

கல்லூரியில் அவ்வளவாக கிண்டல்கள் எதுவும் இன்றி படித்து முடிப்பதும். இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும் திருநங்கைகளின் தொடர்புகள் அவளையும் அவர்ளைப் போன்று தன்னை மாற்றிக் கொள்ள விரும்புவதும். இதற்க்காக வீட்டை விட்டு வெயியேறிவிடுகிறான்.

திருநங்கைகள் அனைவருக்கும் ஏற்ப்படும் பிரச்சனை இதுபோலும். இவர்களை வீட்டில் ஏற்றுக் கொள்ள மறுப்பதாலும் சமுதாயமும் இவர்களுக்கு வேலை தர முன்வராததாலும இவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

முக்கியமாக வீட்டில் இருப்பவர்கள். ஆணாக இருப்பவர்கள் பெண்ணாகவோ அல்லது பெண்ணாக இருப்பவர்கள் ஆணாகவோ தங்களை மாற்றிக்கொள்ளவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. மேலும் அவர்கள் அப்படி தங்களை மாற்றிக் கொள்ள முயலும்போது வீட்டை விட்டு வெளியேறும்படி நேறுகிறது.

இங்கிருந்து தன்னை முழுவதும் பெண்ணாகவே பாவிக்கிறாள். நன்பர்கள் உதவியுடன் சென்னைக்கு வந்து திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனங்களுக்கு சென்று அவர்களுடன் சேர முயற்ச்சிக்கும்போது ஏற்கனவே ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் சிலர் அவளிடம் எங்காவது பணி புரிந்து கொண்டு தங்களுடன் தங்கலாம்.
என்று கூறும் அறிவுரை கூறுகிறார்கள்.

திருநங்ககைளே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு, திருநங்கை ஆவதில் உள்ள கஷ்டங்களை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

யார் எவ்வளவு கூறியும் விடாப்பிடியாக மறுத்து நீங்களெல்லாம் பெண்ணாக மாறி இருக்கும்போது நான் ஆக முடியாத என்று வித்யா தனக்குள் பொறுமுவதும். பெண்ணாக மாற அதற்குண்டான ஆபேரேஷன் பணத்திற்க்காக புனே சென்று திருநங்கைகளுடன் தங்கி பிச்சை எடுப்பதில் செல்கிறது.

திருநங்கைகளுக்கென்று உள்ள கட்டுப்பாடு மற்றும் அவர்கள் உறவுநிலையைப் பற்றி இங்கு விரிவாக விவரிக்கிறார். இது திருநங்ககைகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.

வீட்டைவிட்டு வெளியேறிய வித்யாவை அவள் வீட்டில் தேடுகிறார்கள். நண்பர்கள் மூலம் செய்தி அறிந்த வித்யா நடுவில் சென்னை வருவதும். தந்தை மற்றும் உறவினர்களை கண்டு திகைக்கிறாள். அவர்கள் மறுபடியும் அவளை மாற சொல்வதும். அவள் தன் முடிவில் பிடிவாதமாக இருந்து விடுகிறாள். மறுபடியும் பூனே திரும்புகிறாள்.

முதுகலை படித்துவிட்டு பிச்சை எடுப்பதில் ஆரம்பத்தில் அவளுக்கு ஏற்ப்பட்ட சிறிய தயக்கத்தை கூட பெண்ணாக ஆக வேண்டும் என்ற வெறியில் உதறிவிட்டு கடை, கடையாக, ரெயில், ரெயிலாக பிச்சை எடுக்கிறாள்.

பிச்சை எடுக்கும்போது ஏற்ப்படுகின்ற அவமானங்களும், திட்டுகளை விட ஒருமுறை ரவுடிகளிடம் மாட்டிக்கொண்டு, அவர்கள் அவளை பெல்ட்டால் ரவுண்டு கட்டி அடிப்பதை படிக்கும்போது. நிர்வாண ஆபரேஷனை படிக்கும்போது ஏற்ப்படுகின்ற வலி இங்கேயும் ஏற்ப்படுகிறது.

திருநங்கைகள் ஏன் பிச்சை எடுக்க நேரிடுகிறது என்பதை தன்னுடைய அனுபவத்தில் கண்டதை மிகுந்த மனவேதனையுடன் விவரிக்கிறார். சமுதாயம் தங்களை ஏன் ஒதுக்க வேண்டும் என்று கேள்வி கேட்கிறார்.

திருநங்கைகள் நடந்துக் கொள்ளும் விதம் பற்றி சமுதாயம் அவர்கள் மீது சாற்றும் குற்றச்சாட்டுக்கள் உண்மையில் அது அவர்கள் இயல்பல்ல என்றும். அவர்கள் தங்கள் தற்காப்பிற்காகவே அவ்வாறு நடந்துக் கொள்கிறார்கள் என்பதை மிகவும் அழுத்தமாக கூறியுள்ளார்.

ஒருவழியாக பிச்சை எடுத்து பணம் சேகரித்து கொண்டு கொடுரமான அந்த ஆபரேஷனையும் அதற்க்கு பின் 40 நாட்கள் அந்த வலியையும் பொறுத்துக் கொண்ட பின்னர் அவளுக்கு திருநங்கைகளுக்கான சடங்கு நடத்தப்படுகிறது.

அந்த சடங்கில் அவளுக்கு தான் பெண் என்ற அங்கிகாரத்தினால் கிடைக்கும் ஆனந்தம் இத்தனை நாட்கள் அவள் பட்ட வேதனைகளுக்கு மருந்தாகிறது.

திருநங்கை ஆனால் முடிந்ததா? வயிறு என்று ஒன்று இருக்கிறதே திருநங்கைகள் முறைப்படி யாராவது ஒரு நானி எனப்படும் மூத்த திருநங்கைக்கு கீழ் மறுபடியும் பிச்சை எடுக்க வேண்டிய நிலை.

முன்பு திருநங்கை ஆவதற்க்காக இருந்த வெறி நிறைவேறி விட்டதால் இப்பொழுது பிச்சை எடுப்பதில் நாட்டம் இல்லாமல் போகிறது.

சரி ரயிலில்தான் பிச்சைதான் எடுக்கவேண்டுமா? ஏன் தொழில் செய்யக்கூடாது என்று முடிவுசெய்து கீ-செய். பர்ஸ். டார்ச்லைட் என்று விற்க்கப்போனால் பிச்சை எடுக்கும்போது காசு கொடுத்தவர்கள் கூட இப்பொழுது வாங்க மறுத்தார்கள்.

திருநங்கைகள் தங்கள் சொந்த முயற்சியினால் முன்னேற முயல்வதற்க்கு சமுதாயம் உதவ தவறுவதை இங்கு மிகவும் ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.

பிச்சை எடுக்கும் வாழ்க்கை வெறுத்துப்போய் நானியிடம் இருந்து தப்பித்து திரும்ப சென்னை வருவது என்று அவளுடைய வாழ்க்கைக்கு சிறிதும் ஓய்வில்லாமல் செல்கிறது.

சென்னையிலிருந்து தன் சொந்த ஊரான தஞ்சாவூர் சென்று தன் தமக்கையின் வீட்டில் தங்குகிறாள். வயிற்று வலி ஏற்பட்டு மறுபடியும் ஒரு ஆபரேஷன் செய்து கொள்கிறாள். அவளுடைய தமக்கையும் அவள் கணவரும் ஆபரேஷன் செலவுக்கு உதவுகிறார்கள்.

அதற்கு மேல் அவர்களால் அவளுக்கு உதவ முடியவில்லை. அவர்களுக்கு தொந்தரவாக இருக்க விருமபாத வித்யா மறுபடியும் நண்பர்கள் உதவியுடன் வேலை தேடி அலைய வேண்டியதாகிறது.

திருநங்ககைகளுக்கு இருக்க இடம் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. எங்கு சென்றாலும் உதாசீனம் ஒருவழியாக வித்யாவிற்க்கு ஒருவழியாக அவர்கள் நண்பர்கள் மூலமாக வேலை கிடைத்து இடமும் கிடைக்கிறது.

வித்யா என்ற தன் பெயர் மாற்றத்திற்க்காக அரசு அனுமதியை வேண்டி இன்னும் அலைந்துக் கொண்டிருக்கிறார். அதில் ஏகப்பட்ட சிக்கல் வேறு. படித்த தன்னைப் போன்ற திருநங்கைகளுக்கே இந்த நிலைமை என்றால், படிக்காத பாமர திருநங்கைகளின் நிலையை எண்ணி வருந்துகிறார்.

மொத்தத்தில் திருநங்கைகளின் பிரச்சனைகளை தன் வாழ்க்கையின் ஊடே அருமையாக விவரித்திருக்கிறார் வித்யா. அவருடைய கேள்விகளுக்கான விடைகள் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றன.


புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

Saturday, December 13, 2008

பொன்மொழிகள் - ஒரு சிறிய தொகுப்பு

நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது;
ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
அதனால் எப்போதும் என்னுடன் தொடர்பில் இரு.
இப்படிக்கு,
உண்மையான நண்பன்.

==================================================

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
- பில் கேட்ஸ்

==================================================

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும்.
இதுதான் வாழ்க்கை!
==================================================

மேலாளர்: உன் தகுதி என்ன?
சர்தார்: நான் Ph.D
மேலாளர்: Ph.Dன்னா என்ன?
சர்தார்: Passed high school with Difficulty.

==================================================

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான்உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
- விவேகானந்தர்.
==================================================

இனிய காலை வணக்கம்!
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

==================================================

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.

==================================================

நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன். அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.

==============================
(தேர்வு அறையில்)

ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?
மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.

==============================

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

==============================

அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.

ஏன்னா அறிவு......

சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.


==============================

ஒண்ணு + ஒண்ணு = ரெண்டு
நீதான் எனக்கு ஃபிரெண்டு.

ரெண்டு + ரெண்டு = நாலு
நீ ரொம்ப வாலு.

மூணு + மூணு = ஆறு
நீ இல்லாம போரு.

நாலு + நாலு = எட்டு
எஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.

=============================================

நட்பு எனும் கலையானது,
ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது.
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும்.
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்.

=============================================

கடவுள்,

நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர்.
ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத
மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.

=============================================

30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு!
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!

=============================================

உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ

=============================================

எனக்கு இட்லியைப் பிடிக்காது
தோசையைத்தான் பிடிக்கும்.
ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.
தோசை சிங்கிளாத்தான் வேகும்.
கூல்... இனிய இரவு.

==================================================
உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.
=======================================

வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

அதனால்,

வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

====================================

எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி

===================================

கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.

கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!

====================================

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!

====================================

கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!

====================================

வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;

தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.


==============================
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. - பாரதியார்


==============================

எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
இன்றும் நாளையும் என்றும்.

==============================
உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!

==============================

இதை மெதுவாகப் படியுங்கள்:

LIFEISNOWHERE

இதை எப்படிப் படித்தீர்கள்?

LIFE IS NO WHERE என்றா?

LIFE IS NOW HERE என்றா?

நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!

==============================
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.

==============================

நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

==============================

ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:

"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"

நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.

நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:

"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."

==============================
நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.

==================================

Dictionary is the only place
where death comes b4 life,
divorce comes b4 marriage,
college comes b4 school
but the best thing is
friendship comes b4 love.
==================================

பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.
==================================

2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.

==================================

வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால்,
அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும்.

==================================
ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு.

கேரளா: நீண்ட கூந்தல்.
ஆந்திரா: கூரிய மூக்கு
மும்பை: செழுமையான கன்னங்கள்
பஞ்சாப்: பளிச் என்ற நிறம்
தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது
==================================

நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.
==================================
ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
==================================

ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன்
என் சிறிய குறுஞ்செய்தி,
உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!
==================================

யாரேனும் உங்களைக் காயப்படுத்தினால் அதற்காக வருந்தாதீர்கள்.
ஏனெனில் அதுதான் இயற்கையின் விதி.
சுவையுள்ள கனிகளைத் தரும

Friday, December 12, 2008

அமெரிக்க அதிபரின் வாழ்க்கை வரலாறு - ஒபாமா, பராக்



மிகவும் விறுவிறுப்பான் நடையில் நண்பர் ஆர்.முத்துக்குமார் எழுதிய ஒபாமா புத்தகம் படித்தேன்.

இதற்குமுன் சில புத்தகங்களில் ஒபாமாவை பற்றி படித்தேன் மிகவும் கடினமான வார்த்தைகளும் படிப்பதற்கு மிகவும் கஷ்டமாகவும் இருந்தது. இருந்தாலும் கிழக்குப் பதிப்பகம் சார்பில் வெளியிட்ட ஒபாமா நூல் மிகச்சிறப்பாக உள்ளது. ஆசிரியரும் எனது நண்பருமான ஆர்.முத்துகுமார் அவர்கள் ஒபாமாவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை ஒபாமாவின் சொந்தவாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், அவர் போராடிய விதத்தையும், அவர் கையாண்ட யுத்திகளையும் மிகவும் நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் தனக்கென்ற பாணியில் எளிமையான நடையில், எந்த ஒரு கடினமான வார்த்தைகளையும் பயன்படுத்தாமல் அனைவரும் படிக்கும் வகையில் புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்கமுடியால் முடிக்கும் அளவுக்கு கடைசிவரையிலும் விறுவிறுப்பு குறையாமல் எழுதிருக்கிறார்.

வல்லரசு நாடுகளின் தலைவனான அமெரிக்காவின் அதிபரைப்பற்றி நாம் தெறிந்துகொள்வதென்பது முக்கியமாக கருதுகிறேன்.

எல்லோரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகமாக நான் கருதுகிறேன் முடிந்தால் அதை வாங்கி படியுங்கள்.


புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

Monday, December 8, 2008

காங்கிரஸின் வெற்றி வாகை - பாஜக வின் தோல்வி

காங்கிரஸ் வெற்றி வாகை சூடும் என்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மக்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து மறுபடியும் காங்கிரஸால் தான் நல்லாட்சியைத் தரமுடியும் என்கிற சூழலை உருவாக்கிருக்கிறார்கள், அதற்க்கு காங்கிரஸார் மிகவும் நன்றிகடன் பட்டவர்களாக நடந்துகாட்டவேண்டும்.

பாஜக வின் தோல்வி ஏன் என்றால் அக்கட்சியின் செயல்பாடுகள் கடந்த காலங்களில் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லாதது ஒரு காரணம். அவர்கள் இந்துத்வாவை கைவிட்டு நாட்டு நலத்திட்டங்களை செயல்படுத்த முன்வரவேண்டும்.

காங்கிரஸுக்கு எனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெறிவித்துக்கொள்கிறேன்.


தேர்தல் முழுமுடிவுகள்


டில்லி:


மொத்த தொகுதிகள்:70
தேர்தல் நடந்தவை:69
அறிவிக்கப்பட்டவை:69
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:42
பா.ஜ., :23
பகுஜன் சமாஜ்:2
மற்றவை:2


ராஜஸ்தான் :


மொத்த தொகுதிகள்:200
அறிவிக்கப்பட்வை :200
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:96
பா.ஜ., :78
பகுஜன் சமாஜ் :6
மற்றவைகள்:20


மத்திய பிரதேசம்


மொத்த தொகுதிகள்: 230
தேர்தல் நடந்தவை: 230
அறிவிக்கப்பட்டவை: 230
வெற்றி பெற்ற தொகுதிகள்
பா.ஜ., - 144
காங்., - 70
பகுஜன் சமாஜ் - 6
மற்றவை - 10


மிசோரம்:


மொத்த தொகுதிகள்:40
தேர்தல் நடந்தவை:40
அறிவிக்கப்பட்டவை:40
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:31
மிசோ தேசிய முன்னணி:4
சொரம் தேசியவாத முன்னணி:2
மற்றவை:3


சட்டீஸ்கர் :


மொத்த தொகுதிகள்:90
தேர்தல் நடந்தவை:90
அறிவிக்கப்பட்டவை:90
வெற்றி பெற்ற தொகுதிகள் :
பா.ஜ.,:50
காங்கிரஸ்:38
பகுஜன் சமாஜ் கட்சி:2

டில்லியில் ஷீலா தீட்சித் எதிர்பாரா வெற்றி : ம.பி., - சட்டீஸ்கரில் மீண்டும் பா.ஜ., ஆட்சி: ஐந்தில் மூன்று காங்கிரஸ்!

நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மகிழ்ச்சியையும், பா.ஜ.,வுக்கு ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் உட்கட்சி மோதலால் வசுந்தரா தலைமையிலான பா.ஜ., அரசு தோல்வியை சந்தித்துள்ளது. டில்லியில் ஷீலா தீட்சித் எதிர்பாராத வெற்றி பெற்று, ஹாட்ரிக் அடித்துள்ளார்.


."மினி' பொதுத் தேர்தல் : ம.பி., - சட்டீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ., தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது."மினி' பொதுத் தேர்தல் என வர்ணிக்கப்பட்ட, ராஜஸ்தான், டில்லி, மிசோரம், ம.பி., சட்டீஸ்கர் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.மும்பை பயங்கரவாத தாக்குதல், பொருளாதார மந்த நிலை போன்ற பரபரப்பான சூழ்நிலையில் இந்த தேர்தல்கள் நடந்ததால் அனைத்து தரப்பினரின் கவனமும் இந்த தேர்தல் முடிவுகளிலேயே இருந்தது. அடுத்த ஆண்டில் லோக்சபாத் தேர்தல் நடக்கவுள்ளதால், இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் எதிர்பார்ப்பு அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தது.திட்டமிட்டபடி ஐந்து மாநில தேர்தல்களிலும் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மகிழ்ச்சியையும், பா.ஜ.,வுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.


ஷீலா அடித்த ஹாட்ரிக் (டில்லி): டில்லியில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் தோல்வி அடையும் என்றே கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது. மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் வேறு நடந்ததால், காங்கிரஸ் தோல்வி உறுதி எனக் கூறப்பட்டது. குறிப்பாக, பா.ஜ., இந்த மாநிலத்தில் வெற்றி பெறுவோம் என பெரிதும் நம்பியது. எதிர்பாராத வகையில் காங்கிரஸ் 42 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பா.ஜ.,வுக்கு 23 இடங்களே கிடைத்தன. மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று, ஷீலா தீட்சித் ஹாட்ரிக் அடித்துள்ளார். டில்லியில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளே இதற்குக் காரணம் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.


மகுடம் இழந்த மகாராணி (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலத்தில் துவக்கத்தில் இருந்தே பா.ஜ., தோல்வி அடையும் எனக் கூறப்பட்டது. இருந்தாலும், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் தேர்தல் நடந்ததால், பா.ஜ., வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால், மும்பை சம்பவம் ராஜஸ்தான் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. காங்கிரஸ் 96 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு ஐந்து இடங்கள் காங்கிரசுக்கு குறைவாக உள்ளன. பா.ஜ.,வில் நிலவிய உட்கட்சித் தகராறு தான் வசுந்தரா தலைமையிலான அரசின் தோல்விக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. பா.ஜ.,வுக்கு 78 தொகுதிகள் கிடைத்துள்ளன.


சாதித்துக் காட்டிய சவுகான் (ம.பி.,): மத்தியப்பிரதேசத்தில் உமா பாரதியின் பாரதிய ஜனசக்தி கட்சியால் பா.ஜ., தரப்பு ஒரளவு கலக்கம் அடைந்திருந்தது. இருந்தாலும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் அபாரமான செயல்பாடு, சரியான வேட்பாளர் தேர்வு, மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் போன்றவற்றின் காரணமாக பா.ஜ., ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் தரப்பில் தீவிர பிரசாரம் செய்தும், பா.ஜ.,வின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.


அசத்திய ராமன் சிங் (சட்டீஸ்கர்):சட்டீஸ்கரில் நக்சலைட்களின் அச்சுறுத்தல், விலைவாசி அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை முன் வைத்து, காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்தது. இருந்தாலும், பா.ஜ., முதல்வரான ராமன் சிங், தனது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை எடுத்துக் கூறி பிரசாரம் செய்தார்.கடும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோதும் காங்கிரஸ் தலைவர் அஜித் ஜோகி, மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்தார். ஆனால், அதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. பா.ஜ., இங்கு ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.இங்கு 50 தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. காங்கிரசுக்கு 38 தொகுதிகள் கிடைத்துள்ளன.


மிசோரம் காங்கிரஸ் வசம்: மிசோரமில், மிசோ தேசிய முன்னணியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மிசோ தேசிய முன்னணிக்கு நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.


இந்த ஐந்து மாநில தேர்தலில், மூன்றில் வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் உற்சாகம் அடைந்துள்ளது. எனவே, லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்வர் தேர்வுடன், லோக்சபாத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாரிப்பில் இறங்கிவிட்டது. பயங்கரவாதம், பொருளாதார மந்தநிலை போன்ற பிரச்னைகளைத் தாண்டி நிலைத்த அரசு என்ற அடிப்படையில் மக்கள் தெளிவாக ஓட்டளித்திருப்பதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்திருக்கிறது. ம.பி.,யில் சவுகானும், சட்டீஸ்கரில் ராமன் சிங்கும் தொடர்ந்து முதல்வர்களாக இருப்பார்கள் என்ற முடிவுடன், டில்லி, ராஜஸ்தான் தேர்தல் தோல்வி குறித்து ஆராய, பார்லிமென்டரி குழுவை பா.ஜ., நியமித்திருக்கிறது.


தேர்தல் முழுமுடிவுகள்


டில்லி:


மொத்த தொகுதிகள்:70
தேர்தல் நடந்தவை:69
அறிவிக்கப்பட்டவை:69
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:42
பா.ஜ., :23
பகுஜன் சமாஜ்:2
மற்றவை:2


ராஜஸ்தான் :


மொத்த தொகுதிகள்:200
அறிவிக்கப்பட்வை :200
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:96
பா.ஜ., :78
பகுஜன் சமாஜ் :6
மற்றவைகள்:20


மத்திய பிரதேசம்


மொத்த தொகுதிகள்: 230
தேர்தல் நடந்தவை: 230
அறிவிக்கப்பட்டவை: 230
வெற்றி பெற்ற தொகுதிகள்
பா.ஜ., - 144
காங்., - 70
பகுஜன் சமாஜ் - 6
மற்றவை - 10


மிசோரம்:


மொத்த தொகுதிகள்:40
தேர்தல் நடந்தவை:40
அறிவிக்கப்பட்டவை:40
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:31
மிசோ தேசிய முன்னணி:4
சொரம் தேசியவாத முன்னணி:2
மற்றவை:3


சட்டீஸ்கர் :


மொத்த தொகுதிகள்:90
தேர்தல் நடந்தவை:90
அறிவிக்கப்பட்டவை:90
வெற்றி பெற்ற தொகுதிகள் :
பா.ஜ.,:50
காங்கிரஸ்:38
பகுஜன் சமாஜ் கட்சி:2

Friday, December 5, 2008

வைக்கோவின் ஹாலிவுட் கதை

இந்தப் படத்தில் கதாநாயகனின் குடும்பம் வசதி குறைந்தது. அவன் மனைவி, ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். கதாநாயகன், தன் உடைமைகளை எல்லாம் விற்று, முதலீடு செய்து, மனித உடலின் ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தையும் பரிசோதித்து, நிலைமையைச் சொல்லும் பரிசோதனைக் கருவிகளை மொத்தமாக வாங்குகிறான். அவற்றை, மருத்துவமனைகளில் கொண்டுபோய் விற்பதற்காக, நெருங்குகிறான். வாங்குவார் இல்லை.

அவனது ஒரே மகன், ஆறு வயதுச் சிறுவன், பள்ளியில் படிக்கிறான். அலைந்து அலைந்து, எங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது, பசியோடும் பட்னியோடும் ஒவ்வொரு நாளும் இரவில் வீடு திரும்புகிறான். மனைவி கோபிக்கிறாள். இருக்கின்ற ரொட்டித்துண்டைப் பிள்ளைக்குக் கொடுத்துவிட்டு, பட்னியோடு தூங்குகிறான் தகப்பன். அந்தப் பரிசோதனைக் கருவிகளும் திருடு போகிறது.

‘ நியூ யார்க்கில் என் தமைக்கை வேலை பார்க்கும் நிறுவனத்தில் எனக்கும் வேலை கிடைத்துவிட்டது. நான் போகிறேன், மகனை நீயே பார்த்துக் கொள்’ என்று கூறிவிட்டு, மனைவி பிரிந்து செல்கிறாள். பள்ளிக்கூடத்தில் கட்டணம் செலுத்தமுடியாமல், பிள்ளைக்குக் கல்வி தடைப்படுகிறது. வீட்டு வாடகை செலுத்தவில்லை. காருக்கு வரி கட்டவில்லை. வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. இதற்க்காக் கைது செய்யப்பட்டு, ஒரு நாள் இரவு சிறையில் அடைக்கப்படுகிறான். அந்த இரவு முழுவதும் அவன் குழந்தை சிறைவாயிலிலேயே காத்துக் கிடக்கிறான். மறுநாள் விடுதலையாகி வருகிறான். வேலை தேடி, வீதிவீதியாக அலைகிறான். ஒரு கட்டத்தில், ஒரு வெள்ளை நிற கனவானுக்கு பயணத்தில் உதவுகிறான்.

இவன் மிகக் கூர்மையான அறிவாளி. எவராலும் எளிதில் சேர்க்க முடியா புதிர்க்கட்டங்களை அநாயசமாக அமைத்துக் காட்டுவான். முன்பு இவன் உதவிய கனவான் இயக்குநராக இருக்கின்ற பங்குச் சந்தை வேலை நேர்காணலுக்கு இவனுக்கு அழைப்பு அனுப்புகிறார். நேர்காணலுக்கு முதல் நாள்தான், வீட்டுக்கு வண்ணாம் பூசிக்கொண்டு இருந்த நிலையிலேயே கைது செய்யப்ப்ட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். காலையில் விடுதலை ஆனவுடன், போட்டு இருந்த பனியனோடு, நேர்காணல் அரங்கத்துக்கு ஓடுகிறான். நேர்காணல் குழுவினர், ஏளனமாகப் பார்க்கின்றனர். தன் நிலைமையைச் சொல்லிகிறான். கனவான் இரங்குகிறார். மூன்று மாதம் பயிற்சிக் காலம்.

பயிற்சி முடிந்து தேர்வு பெற்றால், வேலையில் சேரலாம் என்கின்றனர். அப்பயிற்சி நாள்களிலும் பட்டினிதான். தங்குவதற்கு இடம் இல்லை. நடைபதைகளில், ரயில் நிலைய பிளாட்பாரங்களில் பிள்ளையோடு படுத்துத் தூங்குகிறான்.

ஒருநாள், ஒரு ரயில்வே நிலையத்தில், தங்க இடம் இன்றி, கழிப்பறைக்கு உள்ளே தன் பிள்ளையோடு போய்த் தங்குகிறான். தரையில் செய்தித்தாள்களை விரித்துத் தன் பிள்ளையைப் படுக்க வைத்து இருக்கிறான், பிள்ளை தூங்கிறான்.

அந்தப் பிள்ளை ஒரு அற்புதமான பிள்ளை. அவன் கேட்பான் தகப்பனிடம், ‘அப்பா நான் பாரமாக இருப்பதால்தான் அம்மா போய்விட்டாளா? அப்படியானால் உனக்கும் நான் பாரமாக இருக்கின்றேனா?’ என்று கேட்கிறான்.

அவனை உச்சிமோந்து அள்ளிக்கொண்டு, ‘என் பிரிய மகனே, நீதானடா என்னை இயக்குகிறாய், என் பசி போக்கும் உணவுதான் உன் பார்வை, என் தாகம் தீர்க்கும் அமிர்தமும் நீதான்’ என்பான். அந்தப் பிள்ளை, கழிப்பறையில் இப்போது தூங்கிக்கொண்டு இருக்கிறான்.

அப்போது, கழிப்பறைக்கு உள்ளே வருவதற்காக யாரோ கதவைத் தட்டுகிறார்கள். காலால் அந்தக் கதவை மூடிக்கொண்டு, பிள்ளையை மடியில் போட்டுக்கொண்டு அமர்ந்து இருக்கிறான். அப்போதுதான், முதன்முதலாக அவனுடைய கண்களில் இருந்து இரண்டு கண்ணீர்த்துளிகள் உருண்டு விழுகின்றன. படம் பார்த்துக்கொண்டு இருந்த என்னுடைய கண்களிலும் கண்ணீர்த்திவலைகள். வாழ்க்கையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவனுக்குத் தோல்வி, எங்கு சென்றாலும் தோல்வி, எதைச் செய்தாலும் தோல்வி.

ஒரு வணிக வளாகத்தில் தன் சோதனைக் கருவியை விற்பதற்காக நின்றுகொன்று இருப்பான் பிள்ளையோடு. அப்போது அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில், அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜெபர்சனின் படத்துடன், அவருடைய பதவிப் பிரமாண உரையின் முக்கியமான பகுதி, காட்சியாக ஓடுகிறது. அந்த உரையின், ‘மகிழ்ச்சியைத் தேடி....’ என்ற சொற்கள் ஒலிக்கின்றன.

அந்த இடத்தைவிட்டு அகன்று, மகனோடு நடந்து செல்லும்போது, ‘அதற்கு என்ன பொருள்?’ என்று கேட்கிறான் மகன். ‘நம்முடைய நிலைதான் அதற்குப் பொருள். மகிழ்ச்சி என்பது கிடைக்காது, தேடிக்கொண்டே இருக்க வேண்டும்’ என்று சிரித்துக்கொண்டே சொல்லுவான்.

பங்குச்சந்தை பயிலகத்திலும் பல சோதனைகள். இனி இந்தத் துன்பத்தில் இருந்து விடுபட வழியே இல்லை. தொடரும் இருட்டில், இனி வெளிச்சமே இல்லை என்று, நிராசையே வாழ்வாகி, விரக்தியின் விளிம்பில் நிறுத்தப்படுகிறான். இந்த நிலையிலும், அவன் முடங்கி விடவில்லை. சோர்ந்து அடங்கி விடவில்லை. தொடர்கிறான்... தனது பயணத்தைத் தொடர்கிறான்! மூன்று மாத பயிற்சி முடிகிறது.

நேர்காணல் அறைக்கு மீண்டும் அழைக்கப்படுகிறான். முதலில் போனபோது, சிறையில் இருந்த வந்த அலங்கோலம். மேல்சட்டை அணியாத பரிதபம். இன்று, அங்கு அமர்ந்தவுடன் இயக்குநரிடம் சொல்லுகிறான். ‘இன்றைக்கு நான் ஒரு நல்ல சட்டை போட்டுக்கொண்டு வந்து இருக்கிறேன்’.

இரண்டு நிமிட இடைவெளிக்குப் பின்னர், பண்பான அந்தக் கனவான் சொல்கிறார்: ‘இன்று முதல் உனக்கு இந்தக் கம்பெனியில் நிரந்தர வெலை!’ அவன் நெஞ்சுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன. இதோ, அவனுக்கு விடிந்து விட்டது. கம்பெனியின் சில பங்குகளை அவனே விலைக்கு வாங்குகிறான். வெற்றித்தேவதை அவன் மீது பூ மழை பொழிகிறாள். செல்வம் குவிகிறது. அந்தக் கம்பெனியிலேயே ஓர் இயக்குநராகவும் உயர்கிறான். ஒரு கம்பெனியையே விலைக்கு வாங்குகிறான். இரவும் பகலும் பட்னி கிடந்து, வேதனை விம்மலுடன், வீடற்று வீதியில் திரிந்த அந்த நீக்ரோ இளைஞன், நகரத்தின் செல்வச் சீமான்களிள் ஒருவன் ஆகிறான்.

இந்தப் படம் கற்பனைக் கதை அல்ல. முழுக்க முழுக்க சிகாகோ நகரத்தில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம். இதில் கதாநாயகனாக நடித்த வில்ஸ்மித், அப்பாத்திரமாகவே உணர்வுபூர்வமாக ஒன்றிப் போய்விட்டார். அவர் பிறவியில் நீக்ரோ. அதைவிட, இப்படதுக்கு மேலும் ஓர் சிறப்பு என்னவென்றால், அவரது சொந்த மகன்தான் இந்தப் படத்திலும் அவரது பிள்ளையாக நடிக்கிறான்.


வைக்கோவின் ஆம்; நம்மால் முடியும்! புத்தகத்திலிருந்து நான் படித்து ரசித்த கதை.அப்பாவிற்க்கும் மகனுக்கும் உள்ள பாசபிணைப்பு மற்றும் அப்பாவிடம் அவன் கழிவறையில் கேட்கும் கேள்விகள் என் மனதை பாதித்த காட்சிகள்.

பார்க்க நேர்ந்தால் யாரும் தவறவிடாதீர்கள்.

படம் - Pursuit of Happyness