எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, December 26, 2008

மொட்டை மாடிக் கூட்டம்



ஏன் இந்த புத்தகத்தை எழுதினீர்கள் ?

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கிறீர்களா?

ரஷ்யாவின் கம்யூனியஸத்தை எதிர்கிறீர்களா?

அமெரிக்காவின் கொ.ப.செ வா நீங்கள்?

அமெரிக்க அதிபரைப் பற்றி ஏன் எழுதினீர்கள்?

அவரால் இந்தியாவிற்கு என்ன பயன்?

இல்லை, அவரைப் போன்றொரு தலைவர் இந்தியாவில் இல்லை என்று சொல்கிறீர்களா?

அவர் ஏன் வாஷிங்டன் என்று பெயர் வைத்தார்? அவரென்ன டன் கணக்கில் துணிகளைத்துவைத்தாரா?

இப்படி பல கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார் நூல் ஆசிரியர் பாலுசத்யா.

முகவரி:

கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆல்வார்பேட்டை,
சென்னை - 18

Wednesday, December 24, 2008

கலைஞரின் சந்தர்ப்பவாதக் கவிதை

தோழமை தோள் கொடுக்கும் என்றெண்ணி கை கோர்த்தால் தேள் போல் கொட்டுகிறார் !

கல்லுடைத்து கள் குடித்தால் அவர் கவுரவம் குறையுமே என்றெண்ணி, மேற்கத்திய மதுவை மலிவாகத் தர மதுக் கடைகளைத் நான் திறந்தால்.

தேள் கொட்டியது, மருத்துவரை நான் அழைத்தேன் சிகிச்சைக்கு. மதுக்கடைகளை மூடினால் மருந்தளிக்க நான் மறுப்பேனா? – என்கிறார்.

நாடென்ன ஆனாலென்ன? என் மக்கள்
நலம்தன்னை கருத்தில் கொண்டு
ஆட்சியைப் பகிர்ந்தளித்தேன் சொந்தங்களுக்கு !

சொந்தங்களோ,
அரியணையை பிடிக்க சதிசெய்தது தெரியவர,
அவருடன் பகைமை பாராட்டி, போதுமடா உன்பாசம் !
நேசித்தேன் நான் உன்னை! மோசம் செய்தாய் நீ என்னை !
கலைந்ததடா உன் வேஷம் !

கழகத்தின் தோழர்களை நான் அழைத்து அவனது கரை சேவை போதுமென்று கட்சியிலிருந்தும், ஆட்சி கட்டிலிலிருந்தும் துரத்தினால்.....

அவனோ பகைமையை பழிதீர்க்க நாள் குறித்து, நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக அவனென்னை தோலுரிக்க,

”போதுமடா நம் பகைமை ! மக்கள் விழிக்கும் முன் சேர்ந்தெழுவோம்” நேசகரம் நான் நீட்ட, அவனும் கைக்கோர்த்தான்!

நாடென்ன ஆனாலென்ன ! நம் நலந்தானே முக்கியம் !

தெளிந்துவிடும் போதை மக்களுக்கு மதுக்கடைகளை மூடினால்,
மருத்துவருக்கோ கொண்டாட்டம், நம் பாடு திண்டாட்டம் !

யார் என்ன ஆனால் என்ன? எவர் குடும்பம் அழிந்தாலென்ன !
நம் குடும்ப நலந்தானே மிக முக்கியம் !

மூடுவேனா மதுக்கடைகளை, நான் மூடுவேனா !




இன்றைய சூழலில் கலைஞர் கவிதை எழுதினால் இப்படித்தான் எழுதுவார் மனசுக்குள்.

Tuesday, December 23, 2008

சே குவேரா உயிருடன் தான் இருக்கிறார் !



அவர் ஒரு மாபெரும் போராளி என்பதை விட உயர்ந்த பண்புகளுக்கும், தைரியத்துக்கும் மற்றும் மனித நேயத்திற்க்கும் சிறந்த உதாரணமாக விளங்கினார். சிறந்த சிந்தனையாளரும் மற்றும் நிர்வாகத்திறன் மிக்கவரும் ஆவார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சே குவாரா வாழ்ந்தார் என்று சொல்லுவதை விட மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் நிறைவாக இருக்கும்.

பிறப்பால் அவரொரு அர்ஜெண்டைனர் ஆனாலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து க்யூபாவின் விடுதலைக்காகப் போராடி, க்யூபா விடுதலை அடைந்த உடன் பல உயர் பதவிகள் அவரைதேடி வந்தன. அவர் என்னவோ ஆட்சி அதிகாரத்தில் உட்கார வேண்டும் என்பதற்க்காகவா புரட்சி படையில் சேர்ந்து சண்டையிட்டார் இல்லை இல்லை சிறு வயதில் இருந்தே அவருக்கு ஓர் இடத்தில் அமர்ந்து இடத்தை தேய்ப்பது என்றால் பிடிக்காது துறு துறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பார். உதாரணத்திற்கு வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று பல்வேறு கலாச்சாரங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் தனியாத ஆசை கொண்டவர். ஆசை என்று சொல்வதைக் காட்டிலும் அதன் மீது காதல் என்றால் தான் சரியாக இருக்கும்.

க்யூபா விடுதலைப் பெற்ற உடன் துப்பாக்கி ஏந்தி பொலிவியாக்குச் சென்று, அங்கே அடர்ந்த காட்டில் அடுத்த புரட்சிக்கான ஆயத்தங்கள். அங்கும் வேண்டும் விடுதலை ! என்ற முழக்கம் எழுப்பினார்.

தந்தையும் தாயும் :

எர்னஸ்டோ குவேரா லிஞ்ச்சுக்கு அர்ஜெண்டைனா தான் பூர்வீகம் அவருக்கு மட்டுமல்ல அவருடைய முந்தைய பன்னிரண்டு தலைமுறைகளுக்கு ஸான் இசித்ரோவில் தான். அர்ஜெண்டைனாவின் தலைநகரமான ஃபியூனஸ் அயர்ஸீக்கு அருகிலுள்ள பகுதி. வீட்டுக் கதவைத் திறந்தால் ப்ளெட் கடற்கரை.

ஸான் இசித்ரோக்கு வந்த பிறாகுதான், குவேராவின் வாழ்க்கை ரம்மியமாக மாறியது. அதற்கு முன்னால் அவர் ஒரு தொடர் தோல்வியாளர். தொழில் ரீதியாக அவர் எதைத் தொட்டாலும் அது விளங்காது. புதிது புதிதாகத் திட்டமிடுவார். நிறையச் செலவு செய்து, புதுய தொழில் தொடங்குவார். அதில் பெருத்த நஷ்டம் தான் ஏற்படும்.

ஸெலியாவை 1927ஆம் ஆண்டு குவேரா லிஞ்ச் திருமணம் செய்து கொண்டார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்வார்களே அது போல ஒரு மாதம் முன்னதாகவே (சே பிறந்தார்) ஜூன் மாதம் 14, 1928-ம் ஆண்டு அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. எர்னஸ்டோ குவேரா டி லா ஸெர்னா என்று அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டனர். இந்த எர்னஸ்டோ குவேரா டி லா ஸெர்னா தான் பின்னர் சே குவேராவாக மாறினார்.

நோய் தாக்கம்:

ஸெலியா தன்மகனை கூட்டிக் கொண்டு கடற்கரை மணலில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அன்று வழக்கத்திற்க்கு மாறாக கடுமையான குளிர்க் காற்று வீசிக்கொண்டிருந்தது. அதில் சே குவேரா அதிகமாக நடுங்கிகொண்டிருந்தான். குளிர் அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவன் பயத்தால் தான் நடுங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து தைரியமாக இருக்க வேண்டும் என்று அறியுறுத்தினார்.

ஸெலியாவிக்கிற்கு கதைகள் பிடிக்கும். கடல் பிடிக்கும். அவருக்குப் பிடிக்காத ஒரே விஷயம் பயம்.

ஸெலியா பெற்றோர் இளம் வயதிலேயே இறந்து விட்டதனால் சகோதரி கார்மன் அரவணைப்பில் வளர்ந்தார் அதனால் முற்போக்கு மற்றும் இடதுசாரி சிந்தனைகள் கொண்டவராக வாழ்ந்தார்.

கடலுக்கு குளிக்க அழைத்துச் சென்றாதால் சேகுவேராவுக்கோ உடல் மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தது.லிஞ்ச் ஓடி வந்து ஸெலியாவை பார்த்து கண்ட படி திட்டி தீர்த்துவிட்டு மருத்துவரிடம் அழைத்து சென்று பார்த்த பொழுது சேவுக்கு ஆஸ்துமா நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பொழுது ஸெலியாவுக்கும் சிறுவயதில் நுறையீரல் தாக்கிருப்பதை மருத்துவரிடம் கூறினார். மருத்துவரும் அதனால் தான் சேவையும் தாக்கியுள்ளதாக கூறினார். ஸெலியோ மிகவும் மனம் உடைந்து போனார் தன்னால் தான் குழந்தைக்கு நோய் தாக்கியதாக கருதி. ஸெலியா மிகுந்த பாசத்துடன் சேவை வளர்த்து வந்தாள். லிஞ்ச் எப்பொழுதுமே மிகவும் உற்சாகத்துடனும் ஜாலியாகவும் பொழுது போக்க கூடியவர். ஆனாலும் தன் மகனுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வந்தார். மகன் மிகவும் சோர்ந்து கிடப்பதை பார்த்த லிஞ்ச்சோ எப்படியாது சேவுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து பெரிய ஆளாக்கவேண்டும் என்று நினைத்தார்.

தன்னம்பிக்கை வளர்ந்த விதம்:

மகனை அழைத்து கொண்டு சிறு குன்றுகளிலும் சிறு சிறு மலைகளிம் ஏற பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தார் லிஞ்ச்.
அப்படி பயிற்சி கொடுக்கும் போது சேவின் மகிழ்ச்சியை பார்த்து பூரிப்படைந்தார் லிஞ்ச்.

ஒட்டுமொத்த அர்ஜெண்டைனாவையும் உலுக்கிய ஸ்பானிய உள்நாட்டுப் போர், 1936-ல் தொடங்கியது. இளைஞர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் போர் செய்திகளை முனைப்புடன் வாசித்து வந்தனர்.

பத்து வயதான எர்னஸ்டோ, ஸ்பானிய போரைக் கவனிக்கத் தொடங்கியது ஆச்சிரியம். இந்தப் போருக்குப் பின்னாலிருந்து அரசியலை அவன் புரிந்து கொள்ளவில்லை. அது அவனுக்கு காட்டியது, போர் கதைகளில் யார் எப்படிப் போரிட்டார்கள், எப்படி ஜெயித்தார்கள் , எந்தெந்தப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள் என்பது போன்ற அம்சங்களைத்தான் அதிக ஆவலோடு. தெரிந்துகொள்ள விரும்பினார். நிறைய சாகஸ கதைகளை வாசித்ததன் விளைவு தான் பின்னாளில் ஒரு புரட்சிகாரனாக மாறுவதற்க்கு வித்திட்டது.


காதல் :

குவேராவின் வாழ்க்கையில் சிச்சினா என்ற அழகி குறிக்கிட்டால் நாண்பர்களாக பழகி அதுவே காதலாக மலர்ந்தது. சேவிடம் ஒரு குறை இருந்தது அவர் என்றும் தன்னுடைய ஆடைப் பற்றியும் சவரம் செய்வதைப் பற்றியும் அவர் கவலைபட்டதே கிடையாது.
சிச்சினா அதைப் பற்றி கேட்டாலும் பெரியதா அலட்டிகொள்ளாமல் இருந்தார். சிச்சினாவுக்கு ஏனோ சேவின் மீது அளவு கடந்த பாசமும் நேசமும் உண்டானது. இருந்தாலும் அவர்களுடைய காதல் வெற்றியடைவில்லை.

மோட்டார் சைக்கிள் பயணம் :

சே தன்னுடைய சிறு வயது முதல் தன்னம்பிக்கை மிக்கவராக வளர்ந்தனால் நண்பர்களுடன் வேறுசில நாடுகளையும் மக்களின் கலாச்சாரங்களையும் கற்றுக் கொள்ள தன்னுடைய பதினாறாவது வதில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு அதில் குறிப்பிடதக்க வெற்றியும் பெற்றார்.

நண்பர் ஆல்பர்ட்டோயுடன் வட அமெரிக்காவுக்கு போக திட்டமிட்டார்.

ஜனவரி 1952-ல் உற்சாகத்துடன் தொடங்கிய அந்தப் பயணம் எட்டு மாதங்களில் ஐந்து நாடுகளைச் சுற்றி வருவதாக திட்டம் தீட்டி உருண்டு புரண்டு பயணத்தை முடித்து வீடு திரும்பினார்.

அப்பொழுதான் அவருக்கு கிடைத்தது கம்யுனிஸ்டுகளின் பரிச்சயம்.சேவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டே போனது.இதற்கு முன்பு அம்மாவிடம் தெறிந்த கொண்டார் கம்யூனிசத்தையும் மற்றும் முற்போக்கு சிந்தனைகளைப் பற்றியும்.

ஆயுதம் அவசியம் :

சே ஒவ்வாமையில் நிபுணத்துவம் பெற்று ஓர் ஆய்வகத்தில் நிபுணராக பணியாற்றத் தொடங்கினார். ஆனால் அவரால் ஓர் இடத்தில் இருந்து வேலை செய்யமுடியாது. அவருக்கு இருந்த பயணத்தின் மீது இருந்த காதலும் கம்யுனிஸ்டுகளின் மீதிருந்த காதலும் அவரை ஓரிடத்தில் உட்காரவிடவில்லை.

அதனால் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தார். எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கு அமெரிக்கா காலூன்றி இருப்பதைக் கண்டார்.

அங்கு இரண்டு க்யூபர்களை சந்தித்தார் அவர்கள் காலிக்ஸ்டோ கார்ஷியா மற்றும் ஸெவரினோ ராஸ்ஸல்.

மீண்டும் ஒரு தருணத்தில் நிகோலோபஸை சந்தித்தார். நான் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவரைப் பற்றி சொல்ல முடியுமா என்று கேட்டார். நிகோலோபஸும் காஸ்ட்ரோவைப் பற்றி நிறைய கூறியவுடன் சே அவரை மிகவும் நேசிக்கலானார்.
நிகோலோபஸ், சேவுக்கு ரால் காஸ்ட்ரோவை அறிமுகப் படுத்தினார்.

பின்னர் ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்து அவருடைய புரட்சிப் படையிலும் சேர்ந்தார். ஒவ்வொரு நாளும் காஸ்ட்ரோ சேவின் திட்டங்களைப் பற்றி கேட்கும் போது மிகவும் வியந்தார். அதனால் சே மிகவும் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒருவர் ஆனார்.

காஸ்ட்ரோவின் முதல் குறி க்யூபாவின் ராணுவக் கிடங்கு, மான்காடா. யார் யார் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே தெளிவாகச் சொல்லித் திட்டமிட்டு கைப் பற்றினார்கள்.

அந்த சமயத்தில் சே வுக்கு அதிகமாக கம்யூனியசத்தின் மீது நாட்டம் வந்து கம்யூனிஸ ஆதரவாளனாகவும் சோவியத் ஆதரவாளனாகவும் மாறினார்.

க்யூபாவுக்குச் சென்று மக்களைச் சந்தித்து புரட்சி படைக்கு ஆள் சேர்த்தார். அங்கு இது புரட்சி படை அல்ல, விவசாயிகள் படை என்று பெருமைபட சொன்னார்.

ஜனவரி 7, 1959-ல் ராணுவத்தை சிறைப்பிடித்து க்யூபாவை கைப்பற்றினார்கள். கொஞ்ச காலம் க்யூபாவில் இருந்தார்.
அவருக்குத்தான் ஓர் இடத்தில் இருந்து வேலை செய்வதென்பது பிடிக்காத காரியமானதே. அவர் மறுபடியும் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த பொலிவியாவுக்கு சென்று போராடி அங்கே இறந்தும் போனார்.

இருந்த போதிலும் சே இந்த உலகின் மிகப் பெரிய சின்னமாக இருக்கிறார். புரட்சிகரத்தன்மைக்கும் தைரியத்துக்கும் உயர்ந்த பண்புகளுக்கும் அவர் உதாரணமாகிவிட்டார்.

சே இறந்துவிட்டார் என்பதை நம்மால் நம்பவே முடியவில்லை.
நம்மோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

Tuesday, December 16, 2008

ஞானியின் பார்வையில் : மும்பை பயங்கரவாதம்

இரண்டாவது மொட்டை மாடிக்கூட்டம் எங்கள் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் பிரபல பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ஞானியின் பார்வையில் மும்பை பயங்கரவாத்தத்தை பற்றிய தலைப்பில் பொதுவான விவாதம் நடந்தது.


மும்பை தாக்குதல் நவம்பர் 26 ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட போது அவர் மும்ம்பையில்தான் இருந்துள்ளார். அப்பொழுது மும்பை தாஜ் ஹோட்டல், நரிமன் பகுதி மற்றும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையங்களில் தாக்குதல் நடந்த போது பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனமும் பதிவு செய்து ஒளிபரப்பவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் :

1. தொலைக்காட்சி மீதான குற்றச்சாட்டு.
2 காவல் துறையினர்மீது சரியான திட்டமிடாமை.
3.அரசியல்வாதிகளின் மீதான குற்றச்சாட்டு.

தொலைக்காட்சிகளின் மீதான குற்றச்சாட்டு

தொலைக்காட்சி ஊடகங்கள் தங்களுடைய TRP Rate ஐ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்க்காக தாஜ்ஹோட்டலிலேயே முற்றுகையிட்டு சுட சுட செய்தியை தரவேண்டும் என்பதற்காக தீவிரவாதிகளின் அதிரடி தாக்குதல்களையும் கமாண்டேக்களின் எதிர் தாக்குதல்களயும் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் சுட சுட செய்திகளில்லை அது சுட பட்ட செய்தி ஆன காரணத்தால் மக்களுக்கு ஆர்வம் இருக்காது என்பதனாலும் அங்கு செத்துப்போனது சாதாரணமான மனிதர்கள் என்பதாலும் எந்த ஒரு தொலைக்காட்சி ஊடகமும் அதை ஒளிபரப்பு செய்ய முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

இதே கருத்தை நானும் வலியுறுத்துகிறேன்.

ஆனால் நரிமன் பகுதியாகட்டும், தாஜ் ஹோட்டலாகட்டும் பணக்காரர்கள் வாழும் பகுதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் இருக்கும் இடம் இதை ஒளிபரப்பு செய்தால் உலகெங்கும் இருக்கும் மக்கள் எல்லோரும் ஆர்வமாக பார்ப்பார்கள் அதனால் இந்த தொலைகாட்சி சேனல்களெல்லாம் தங்களுடயை TRP Rate ஐ ஏற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கோடுதான் செயல்படுகிறது மற்றும் எந்த ஒரு உண்மையையும் வெளிகொண்டுவர அவைகள் ஈடுபடுவதில்லை அவைகள் சுயநல நோக்கோடு செயல்படுகின்றன என்கிறார்.

பத்திரிக்கை துறை மட்டுமே பொது நல நோக்கோடு சென்று செய்திகளை சேகரித்து தருகின்றன என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்.


காவல்துறையின் மீது குற்றச்சாட்டு.

காவல்துறையினர் எந்தவொரு திட்டமும் இல்லாமல் சென்று எதிர்தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால் தீவிரவாதிகளை மிகச் சரியான திட்டங்களை தீட்டி செயல்பட்டனர் என்பதையும் தெளிவாக சொல்கின்றார். தொலைக்காட்சி பேட்டியின்போது உயர் போலீஸ் அதிகாரி சொல்கிறார் எங்களுக்கு எந்தவொரு வழிகாட்டுதலும் இல்லாமல் சென்று தாக்குதலை தொடங்கினோம். ஆனால் தீவிரவாதிகள் ஓரிடத்தில் தாக்குதலை நடத்திவிட்டு ஓடி மறைந்து இன்னொரு இடத்திலிருந்து தாக்குதலை நடத்தினார்கள். அதனால் நாங்கள் சற்று நிலைகுலைந்து விட்டோம் என்று சொல்கிறபோது இவர்களின் மீதான குற்றச்சாற்றும் சரியென்றே தோன்றுகிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் - இந்துத்துவா பயங்கரவாதிகளும்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இந்தியாவின் மீதான தாக்குதல். என்பது இந்தியாவில் உள்ள பயங்கரவாத மதவெறியர்களான இந்துத்துவா அமைப்பினால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகே தொடங்குவதாக சொல்கிறார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் முன்பு நமது நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளான VHP, RSS மற்றும் BJP அமைப்புகளை மூடி விட்டு அதன் தலைவர்களான பிரவீன் தோகாடியா, அத்வானி, நரேந்திர மோடி, ஆகியோர்களை கைது செய்யவேண்டும் என்கிறார்.

நிறைய மேற்கோள்களுடன் 1992 ற்கு முந்தய தாக்குதல்களைப் பற்றி கேட்டபோது அவையெல்லாம் காஷ்மீர் சம்பந்தப்பட்ட செயல்பாடாகவே கருதுகிறார்.

பாபர் மசூதியை இடிக்கும் முன்பு வரை எந்த ஒரு பெரிய அசம்பாவிதங்களோ இஸ்லாமிய தீவிரவாத செயல்களோ நடைபெறவில்லை என்பதை தெளிவாக விளக்குகிறார்.


பொதுவாகவே 10, 12 வருடங்களுக்கு முன்பெல்லாம் விநாயகர் சதுர்த்தி விழாவை இவ்வளவு சிறப்பாக கொண்டாடியதில்லை. விநாயக சதுர்த்தி விழாவை ஆர்,எஸ்.எஸ், வி.எச்.பி. மற்றும் பி.ஜே.பி போன்ற இயக்கங்கள்தான் 1992 பிறகு நாடெங்கும் பரப்பி மக்களிடையே மதவெறியை தூண்டி (முஸ்லீம்களுக் எதிராக கலகங்களை தூண்டி) இரண்டு சமுதாய மக்களுக்கும் இடையே பிரச்சனைகளை கிளப்பி அதில் குளிர் காயந்து கொண்டிருக்கிறார்கள்.

வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் தயவில் பி.ஜே.பி ஆரம்பிக்கப்பட்டபோது கட்சியை எப்படி வளர்க்கலாம் என்று நினைத்தபோதுதான் அவர்களுக்கு கிடைத்தது இந்துத்துவா கொள்கை. இந்த கொள்கையை எப்படி மக்களிடையே கொண்டு செல்வது என்றபோதுதான் ஒவ்வொன்றாக தோன்றியது. முதலில் நம்முடைய கற்பனையான இதிகாசங்களை (ராமாயணம், மகாபாரதம்) தூசி தட்டி எடுத்து அதை நாடகமாக்கி மக்களிடையே ஆன்மீக உணர்வையும் மத உணர்வையும் வளர்த்தது. அவர்களிடத்தில் மதவெறியையும் தூண்டிக் கொண்டே பிரச்சாரத்தை செய்து கட்சிக்கு ஆள்பிடித்து மூளை சலவை செய்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் ஆன்மீக வெறியையும் ஆயுத பயிற்சிகளையும் கொடுத்து அவர்களை நாசவேலைக்கு தயார் செய்து கொண்டிருந்தது வி.எச்.பி.

அவ்வப்போது வி.எச்.பி பயிற்சி முகாம்களை நடத்தி அதிலென்னவோ ஆன்மீக சிந்ததனைகளை போதிப்பதுப்போல இந்துத்துவா பயங்கரவாத சித்தாந்தங்களை போதித்து அவர்களுக்குள் ஒரு விதமான மதவெறியை ஏற்படுத்தி பாபர் மசூதியை இடித்து ஒற்றுமையாக இருந்த இந்து, முஸ்லீம்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி அதை தமக்கு சாதகமாக்கி கொண்டு ஆட்சியைப் பிடிக்க பி.ஜே.பி திட்டம்போட்டு அதையும் நிறைவேற்றி கொண்டது.


வி.எச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் தோன்றிய பிறகு கூட பெரிதாக அந்த இயக்கங்கள் தென் மாநிலங்களில் வளர்ந்ததாக தெரியவில்லை. ஆனால் பி.ஜே.பி என்ற தீவிரவாத அரசியல் கட்சி வந்த பிறகுதான் எல்லா இடங்களிலும் பயங்கரவாதத்தின் கிளைகளை ஏற்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக போராட்டங்களை தூண்டி கலகங்களை ஏற்படுத்தி பாபர் மசூதியை இடித்தன. மசூதி இடித்தப் பிறகுதான் இஸ்லாமியர்கள் தங்களுக்குள் பிராந்திய வேற்றுமைகளை மறந்து தங்கள் இனங்களை பாதுகாத்துக்கொள்ள பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தற்காப்புக்காக செயல்படுகிறார்கள்.

இருந்தாலும் இந்தியாவில் உள்ள எந்தவொரு முஸ்லீம் அமைப்புகளும் தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

ஆனாலும் விதிவிலக்காக ஒருசில அமைப்புகள் மட்டும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுகிறார்கள் என்பதையும் மறுப்பதிற்கில்லை. ஏனென்றால் உள்ளுர் அமைப்புகளின் உதவிகள் இல்லாமல் எந்தவொரு தீவிரவாதியும் நம் நாட்டிற்குள் நுழைந்து விட முடியாது. இந்துத்துவா மதவெறியர்களின் பயங்கரவாத செயல்பாடுகளை சகிக்க முடியாமல்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தீர்வு

பாகிஸ்தானின் மீது போர் தொடுப்பது தீர்வாக இருக்க முடியாது. மற்றும் பயங்கரவாதிகளை உலகத்தின் நீதியின் முன்பு கொண்டு சென்று நிறுத்த வேண்டும் என்று சொல்கிறார். இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். ஏனென்றால் நம் நாட்டிற்கு இந்த தருணத்தில் போர் என்பது தேவையில்லாத ஒன்று உலகப் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த சமயத்தில் போர் என்பது தவிர்க்க படக் கூடிய ஒன்றுதான். அப்படியே போர் என்று வந்தால் நமது நாட்டின் பொருளாதாரமும் இன்னும் மோசமாக பாதிப்படையும். ஆதலால் போர் என்பது தீர்வாகாது.


நேற்று வரை நான் ஞானியை தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்த்து கொண்டிருந்தேன். ஒரு பழமொழி உண்டு கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று. அவருடைய பேச்சை கேட்ட பிறகுதான் அவர் மீதான தவறான என்னுடைய கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டேன்.

ஞானியின் நேர்மையான விளக்கமும், தெளிவான கண்ணோட்டமும், அவருடைய நாத்திக வாதமும், சீரிய சிந்தனைகளும் மற்றவர்கள் பார்க்கும் கோணத்திலிருந்து மாறுபட்டு சிந்தித்து நடு நிலைமையாக பேசுவதால் நிறைபேருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டு கேள்விகணைகளை ஏவுகிறார்கள் ஆனால் அவரோ மிகவும் சரியான வாதத்தை எடுத்து வைக்கிறார் அதனால் மற்றவர்கள் நிலைகுலைந்து போய் என்ன கேட்கவேண்டும் என்பதை மறந்து தேவையில்லாமல் அவர் மீது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கோடே கேள்விகளை கேட்கின்றனர்.

ஒருவர் கேள்வி கேட்டார் தமிழ்நாட்டில் பெரும்பாலும் தீவிரவாத தாக்குதல் நடைபெறுவதில்லையே அதற்கு என்ன காரணம் என்று கேட்டார்.

மற்றொருவர் சட்டென்று எழுந்து தந்தை பெரியார் இருந்த காரணத்தால் நடைபெறவில்லையா என்று கேட்டார்.

ஞானியோ சரியான விளக்கத்தை தராமால் தந்தை பெரியார் இருந்த காரணத்தால் தான் நடைபெறவில்லை என்றுசொன்னால் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறி நிறுத்திவிட்டார்.

அந்த கேள்விக்கு நான் இங்கு பதில் கூற கடைமைப்பட்டுள்ளேன்.

தந்தை பெரியார் இருந்த காரணத்தால் தான் மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் போனதும் மற்றும் மத வெறியர்களின் இலக்கிற்கு ஆளாகமல் எந்த ஒரு இஸ்லாமிய சமூகத்தின் மீது தாக்குதல் என்ற பேச்சிற்க்கே இடம் கொடுக்காமல் மிகவும் கட்டுகோப்பாக இருக்கிறது அதனால் முஸ்லீம் தீவிர வாதிகள் இதுவரையில் எந்த ஒரு தாக்குதல்களையும் நடத்தவில்லை என்றே கூற வேண்டும்.

ஆதலால் தந்தை பெரியார்தான் இதற்கு முழுமுதற்காரணம் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Monday, December 15, 2008

திருநங்கை ( அரவாணிகள் ) - துரத்தும் வாழ்க்கை




நமக்கு வாழ்க்கையில் சோகம் ஆனால் சோகமே இவர்களுக்கு வாழ்க்கை - திருநங்கை நான் வித்யா

ஆரம்பமே அதிர(இ)டியாக உள்ளது. சரவணனாக இருந்து வித்யா என்ற பெண்ணாக மாறுவதற்கு என்ன ஒரு தீவிரம், உயிரையே பணயம் வைக்கும் தைரியம், துணிச்சல். நிர்வாணம் என்னும் அந்த முதல் அத்தியாயத்தை படிக்கும்போதே நமக்கும் அந்த வலியை உணர முடிகிறது.

சமீபத்தில் சன் நீயூஸில் அரவாணிகளைப் பற்றி ஒரு தொகுப்பில் ஒரு டாக்டர் பேசிய போது சுகாதாரமற்ற மருத்துவமனைகளில் ஆணிலிருந்து பெண்ணாக மாற அரவாணிகள் ஆபரேஷன் செய்துக்கொள்ளும்போது உடலளவில் பெறும் வேதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் சிலர் உயிர் இழந்துவிடுவதையும் பற்றி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறந்து கொண்டிருந்த நிலையில் ஆண் குழந்தையாக வறுமையான குடும்பத்தில் சரவணனாக வித்யா பிறந்ததை படிக்கும்போது, பரவாயில்லை அவர் தந்தை அவனை நன்றாக வளர்ப்பார் என்று எதிர்பார்ப்பு ஏமாற்றமானது.

ஐந்து வயது வரை வீட்டில் அவனுக்கு ஏகப்பட்ட செல்லம். சரவணனை நன்கு படித்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்த அவன் தந்தைக்கு அதுவே ஒருகட்டத்தில் வெறியாகவே மாறிபோகிறது. முதல் வகுப்பில் சரவணன் முதல் ராங்க் வாங்கியபோது இருந்த சந்தோஷம் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவனை படி, படி, என்று வதைக்கத் தொடங்குவது நம்மையே வதைப்பது போன்று உள்ளது.

பள்ளி இறுதிவரை இப்படி ஏகத்துக்கும் அடிப்பட்டு வெறுத்து ஒருகட்டத்தில் தந்தையையே திருப்பி அடிக்க கை ஓங்கி விடுகின்றான். மென்மையான குணம் கொண்ட அவன் அடிமனதில் தன்மேல் இவ்வளவு கோபம் இருக்கிறது அன்றுதான் உணர்கின்ற அவர் அன்றிலிருந்து அவனைஅடிப்பதில்லை.

சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையை அணிந்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் அவன் ஆடுவதில் அலாதி ஆனந்தம் அடைவதும், தனிமையில் தன்னை பெண்ணாக பாவித்துக் கொள்வதுமே அவனுக்கு திருப்தியை தந்தது.

தனிமை நடனம் அவனுக்குள் இருக்கும் பெண்மையை வெளிப்படுத்துகிறது.
வளர வளர இது அவனை சுற்றிலுமுள்ளவர்களின் கிண்டலுக்கு உள்ளாகிறது.

பள்ளியில் சக மாணவர்களுடனும், மாணவிகளுடனும் சேரமுடியாமல் தவிப்பதாகட்டும். உறவினர்களும் அண்டை வீட்டுகாரர்களும் கேலியும், கிண்டலும் அவனை நரகத்துக்குள்ளாக்குகின்றன.

பள்ளி முடிந்து கல்லூரி சென்று பட்டம் பெறுவதாகட்டும், முதுகலை எம்,ஏ (மொழியியல்) படிக்க கல்லூரியில் சேர தந்தையிடம் போராடி வெற்றி பெறுவதாகட்டும். கல்லூரியில் நாடகத்தில் தன்னை ஈடுபடுததிக் கொள்வதாகட்டும். அவனுடைய சளைக்காத முயற்சி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. பொதுவாக இதுப்போன்ற திருநங்கைகள் தங்கள் வாழ்வில் பள்ளியின் இறுதி ஆண்டை தாண்டுவதே பிரம்ம பிரயத்தனமாக இருக்க இவனோ இவற்றையெல்லாம் அனாவசியமாக தாண்டுகிறான்.

கல்லூரியில் அவ்வளவாக கிண்டல்கள் எதுவும் இன்றி படித்து முடிப்பதும். இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும் திருநங்கைகளின் தொடர்புகள் அவளையும் அவர்ளைப் போன்று தன்னை மாற்றிக் கொள்ள விரும்புவதும். இதற்க்காக வீட்டை விட்டு வெயியேறிவிடுகிறான்.

திருநங்கைகள் அனைவருக்கும் ஏற்ப்படும் பிரச்சனை இதுபோலும். இவர்களை வீட்டில் ஏற்றுக் கொள்ள மறுப்பதாலும் சமுதாயமும் இவர்களுக்கு வேலை தர முன்வராததாலும இவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

முக்கியமாக வீட்டில் இருப்பவர்கள். ஆணாக இருப்பவர்கள் பெண்ணாகவோ அல்லது பெண்ணாக இருப்பவர்கள் ஆணாகவோ தங்களை மாற்றிக்கொள்ளவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. மேலும் அவர்கள் அப்படி தங்களை மாற்றிக் கொள்ள முயலும்போது வீட்டை விட்டு வெளியேறும்படி நேறுகிறது.

இங்கிருந்து தன்னை முழுவதும் பெண்ணாகவே பாவிக்கிறாள். நன்பர்கள் உதவியுடன் சென்னைக்கு வந்து திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனங்களுக்கு சென்று அவர்களுடன் சேர முயற்ச்சிக்கும்போது ஏற்கனவே ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் சிலர் அவளிடம் எங்காவது பணி புரிந்து கொண்டு தங்களுடன் தங்கலாம்.
என்று கூறும் அறிவுரை கூறுகிறார்கள்.

திருநங்ககைளே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு, திருநங்கை ஆவதில் உள்ள கஷ்டங்களை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

யார் எவ்வளவு கூறியும் விடாப்பிடியாக மறுத்து நீங்களெல்லாம் பெண்ணாக மாறி இருக்கும்போது நான் ஆக முடியாத என்று வித்யா தனக்குள் பொறுமுவதும். பெண்ணாக மாற அதற்குண்டான ஆபேரேஷன் பணத்திற்க்காக புனே சென்று திருநங்கைகளுடன் தங்கி பிச்சை எடுப்பதில் செல்கிறது.

திருநங்கைகளுக்கென்று உள்ள கட்டுப்பாடு மற்றும் அவர்கள் உறவுநிலையைப் பற்றி இங்கு விரிவாக விவரிக்கிறார். இது திருநங்ககைகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.

வீட்டைவிட்டு வெளியேறிய வித்யாவை அவள் வீட்டில் தேடுகிறார்கள். நண்பர்கள் மூலம் செய்தி அறிந்த வித்யா நடுவில் சென்னை வருவதும். தந்தை மற்றும் உறவினர்களை கண்டு திகைக்கிறாள். அவர்கள் மறுபடியும் அவளை மாற சொல்வதும். அவள் தன் முடிவில் பிடிவாதமாக இருந்து விடுகிறாள். மறுபடியும் பூனே திரும்புகிறாள்.

முதுகலை படித்துவிட்டு பிச்சை எடுப்பதில் ஆரம்பத்தில் அவளுக்கு ஏற்ப்பட்ட சிறிய தயக்கத்தை கூட பெண்ணாக ஆக வேண்டும் என்ற வெறியில் உதறிவிட்டு கடை, கடையாக, ரெயில், ரெயிலாக பிச்சை எடுக்கிறாள்.

பிச்சை எடுக்கும்போது ஏற்ப்படுகின்ற அவமானங்களும், திட்டுகளை விட ஒருமுறை ரவுடிகளிடம் மாட்டிக்கொண்டு, அவர்கள் அவளை பெல்ட்டால் ரவுண்டு கட்டி அடிப்பதை படிக்கும்போது. நிர்வாண ஆபரேஷனை படிக்கும்போது ஏற்ப்படுகின்ற வலி இங்கேயும் ஏற்ப்படுகிறது.

திருநங்கைகள் ஏன் பிச்சை எடுக்க நேரிடுகிறது என்பதை தன்னுடைய அனுபவத்தில் கண்டதை மிகுந்த மனவேதனையுடன் விவரிக்கிறார். சமுதாயம் தங்களை ஏன் ஒதுக்க வேண்டும் என்று கேள்வி கேட்கிறார்.

திருநங்கைகள் நடந்துக் கொள்ளும் விதம் பற்றி சமுதாயம் அவர்கள் மீது சாற்றும் குற்றச்சாட்டுக்கள் உண்மையில் அது அவர்கள் இயல்பல்ல என்றும். அவர்கள் தங்கள் தற்காப்பிற்காகவே அவ்வாறு நடந்துக் கொள்கிறார்கள் என்பதை மிகவும் அழுத்தமாக கூறியுள்ளார்.

ஒருவழியாக பிச்சை எடுத்து பணம் சேகரித்து கொண்டு கொடுரமான அந்த ஆபரேஷனையும் அதற்க்கு பின் 40 நாட்கள் அந்த வலியையும் பொறுத்துக் கொண்ட பின்னர் அவளுக்கு திருநங்கைகளுக்கான சடங்கு நடத்தப்படுகிறது.

அந்த சடங்கில் அவளுக்கு தான் பெண் என்ற அங்கிகாரத்தினால் கிடைக்கும் ஆனந்தம் இத்தனை நாட்கள் அவள் பட்ட வேதனைகளுக்கு மருந்தாகிறது.

திருநங்கை ஆனால் முடிந்ததா? வயிறு என்று ஒன்று இருக்கிறதே திருநங்கைகள் முறைப்படி யாராவது ஒரு நானி எனப்படும் மூத்த திருநங்கைக்கு கீழ் மறுபடியும் பிச்சை எடுக்க வேண்டிய நிலை.

முன்பு திருநங்கை ஆவதற்க்காக இருந்த வெறி நிறைவேறி விட்டதால் இப்பொழுது பிச்சை எடுப்பதில் நாட்டம் இல்லாமல் போகிறது.

சரி ரயிலில்தான் பிச்சைதான் எடுக்கவேண்டுமா? ஏன் தொழில் செய்யக்கூடாது என்று முடிவுசெய்து கீ-செய். பர்ஸ். டார்ச்லைட் என்று விற்க்கப்போனால் பிச்சை எடுக்கும்போது காசு கொடுத்தவர்கள் கூட இப்பொழுது வாங்க மறுத்தார்கள்.

திருநங்கைகள் தங்கள் சொந்த முயற்சியினால் முன்னேற முயல்வதற்க்கு சமுதாயம் உதவ தவறுவதை இங்கு மிகவும் ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.

பிச்சை எடுக்கும் வாழ்க்கை வெறுத்துப்போய் நானியிடம் இருந்து தப்பித்து திரும்ப சென்னை வருவது என்று அவளுடைய வாழ்க்கைக்கு சிறிதும் ஓய்வில்லாமல் செல்கிறது.

சென்னையிலிருந்து தன் சொந்த ஊரான தஞ்சாவூர் சென்று தன் தமக்கையின் வீட்டில் தங்குகிறாள். வயிற்று வலி ஏற்பட்டு மறுபடியும் ஒரு ஆபரேஷன் செய்து கொள்கிறாள். அவளுடைய தமக்கையும் அவள் கணவரும் ஆபரேஷன் செலவுக்கு உதவுகிறார்கள்.

அதற்கு மேல் அவர்களால் அவளுக்கு உதவ முடியவில்லை. அவர்களுக்கு தொந்தரவாக இருக்க விருமபாத வித்யா மறுபடியும் நண்பர்கள் உதவியுடன் வேலை தேடி அலைய வேண்டியதாகிறது.

திருநங்ககைகளுக்கு இருக்க இடம் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. எங்கு சென்றாலும் உதாசீனம் ஒருவழியாக வித்யாவிற்க்கு ஒருவழியாக அவர்கள் நண்பர்கள் மூலமாக வேலை கிடைத்து இடமும் கிடைக்கிறது.

வித்யா என்ற தன் பெயர் மாற்றத்திற்க்காக அரசு அனுமதியை வேண்டி இன்னும் அலைந்துக் கொண்டிருக்கிறார். அதில் ஏகப்பட்ட சிக்கல் வேறு. படித்த தன்னைப் போன்ற திருநங்கைகளுக்கே இந்த நிலைமை என்றால், படிக்காத பாமர திருநங்கைகளின் நிலையை எண்ணி வருந்துகிறார்.

மொத்தத்தில் திருநங்கைகளின் பிரச்சனைகளை தன் வாழ்க்கையின் ஊடே அருமையாக விவரித்திருக்கிறார் வித்யா. அவருடைய கேள்விகளுக்கான விடைகள் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றன.


புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

Saturday, December 13, 2008

பொன்மொழிகள் - ஒரு சிறிய தொகுப்பு

நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது;
ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
அதனால் எப்போதும் என்னுடன் தொடர்பில் இரு.
இப்படிக்கு,
உண்மையான நண்பன்.

==================================================

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
- பில் கேட்ஸ்

==================================================

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும்.
இதுதான் வாழ்க்கை!
==================================================

மேலாளர்: உன் தகுதி என்ன?
சர்தார்: நான் Ph.D
மேலாளர்: Ph.Dன்னா என்ன?
சர்தார்: Passed high school with Difficulty.

==================================================

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான்உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
- விவேகானந்தர்.
==================================================

இனிய காலை வணக்கம்!
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

==================================================

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.

==================================================

நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன். அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.

==============================
(தேர்வு அறையில்)

ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?
மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.

==============================

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

==============================

அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.

ஏன்னா அறிவு......

சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.


==============================

ஒண்ணு + ஒண்ணு = ரெண்டு
நீதான் எனக்கு ஃபிரெண்டு.

ரெண்டு + ரெண்டு = நாலு
நீ ரொம்ப வாலு.

மூணு + மூணு = ஆறு
நீ இல்லாம போரு.

நாலு + நாலு = எட்டு
எஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.

=============================================

நட்பு எனும் கலையானது,
ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது.
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும்.
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்.

=============================================

கடவுள்,

நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர்.
ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத
மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.

=============================================

30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு!
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!

=============================================

உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ

=============================================

எனக்கு இட்லியைப் பிடிக்காது
தோசையைத்தான் பிடிக்கும்.
ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.
தோசை சிங்கிளாத்தான் வேகும்.
கூல்... இனிய இரவு.

==================================================
உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.
=======================================

வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

அதனால்,

வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

====================================

எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி

===================================

கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.

கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!

====================================

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!

====================================

கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!

====================================

வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;

தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.


==============================
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. - பாரதியார்


==============================

எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
இன்றும் நாளையும் என்றும்.

==============================
உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!

==============================

இதை மெதுவாகப் படியுங்கள்:

LIFEISNOWHERE

இதை எப்படிப் படித்தீர்கள்?

LIFE IS NO WHERE என்றா?

LIFE IS NOW HERE என்றா?

நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!

==============================
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.

==============================

நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

==============================

ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:

"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"

நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.

நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:

"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."

==============================
நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.

==================================

Dictionary is the only place
where death comes b4 life,
divorce comes b4 marriage,
college comes b4 school
but the best thing is
friendship comes b4 love.
==================================

பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.
==================================

2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.

==================================

வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால்,
அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும்.

==================================
ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு.

கேரளா: நீண்ட கூந்தல்.
ஆந்திரா: கூரிய மூக்கு
மும்பை: செழுமையான கன்னங்கள்
பஞ்சாப்: பளிச் என்ற நிறம்
தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது
==================================

நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.
==================================
ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
==================================

ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன்
என் சிறிய குறுஞ்செய்தி,
உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!
==================================

யாரேனும் உங்களைக் காயப்படுத்தினால் அதற்காக வருந்தாதீர்கள்.
ஏனெனில் அதுதான் இயற்கையின் விதி.
சுவையுள்ள கனிகளைத் தரும

Friday, December 12, 2008

அமெரிக்க அதிபரின் வாழ்க்கை வரலாறு - ஒபாமா, பராக்



மிகவும் விறுவிறுப்பான் நடையில் நண்பர் ஆர்.முத்துக்குமார் எழுதிய ஒபாமா புத்தகம் படித்தேன்.

இதற்குமுன் சில புத்தகங்களில் ஒபாமாவை பற்றி படித்தேன் மிகவும் கடினமான வார்த்தைகளும் படிப்பதற்கு மிகவும் கஷ்டமாகவும் இருந்தது. இருந்தாலும் கிழக்குப் பதிப்பகம் சார்பில் வெளியிட்ட ஒபாமா நூல் மிகச்சிறப்பாக உள்ளது. ஆசிரியரும் எனது நண்பருமான ஆர்.முத்துகுமார் அவர்கள் ஒபாமாவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை ஒபாமாவின் சொந்தவாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், அவர் போராடிய விதத்தையும், அவர் கையாண்ட யுத்திகளையும் மிகவும் நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் தனக்கென்ற பாணியில் எளிமையான நடையில், எந்த ஒரு கடினமான வார்த்தைகளையும் பயன்படுத்தாமல் அனைவரும் படிக்கும் வகையில் புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்கமுடியால் முடிக்கும் அளவுக்கு கடைசிவரையிலும் விறுவிறுப்பு குறையாமல் எழுதிருக்கிறார்.

வல்லரசு நாடுகளின் தலைவனான அமெரிக்காவின் அதிபரைப்பற்றி நாம் தெறிந்துகொள்வதென்பது முக்கியமாக கருதுகிறேன்.

எல்லோரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகமாக நான் கருதுகிறேன் முடிந்தால் அதை வாங்கி படியுங்கள்.


புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

Monday, December 8, 2008

காங்கிரஸின் வெற்றி வாகை - பாஜக வின் தோல்வி

காங்கிரஸ் வெற்றி வாகை சூடும் என்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மக்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து மறுபடியும் காங்கிரஸால் தான் நல்லாட்சியைத் தரமுடியும் என்கிற சூழலை உருவாக்கிருக்கிறார்கள், அதற்க்கு காங்கிரஸார் மிகவும் நன்றிகடன் பட்டவர்களாக நடந்துகாட்டவேண்டும்.

பாஜக வின் தோல்வி ஏன் என்றால் அக்கட்சியின் செயல்பாடுகள் கடந்த காலங்களில் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லாதது ஒரு காரணம். அவர்கள் இந்துத்வாவை கைவிட்டு நாட்டு நலத்திட்டங்களை செயல்படுத்த முன்வரவேண்டும்.

காங்கிரஸுக்கு எனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெறிவித்துக்கொள்கிறேன்.


தேர்தல் முழுமுடிவுகள்


டில்லி:


மொத்த தொகுதிகள்:70
தேர்தல் நடந்தவை:69
அறிவிக்கப்பட்டவை:69
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:42
பா.ஜ., :23
பகுஜன் சமாஜ்:2
மற்றவை:2


ராஜஸ்தான் :


மொத்த தொகுதிகள்:200
அறிவிக்கப்பட்வை :200
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:96
பா.ஜ., :78
பகுஜன் சமாஜ் :6
மற்றவைகள்:20


மத்திய பிரதேசம்


மொத்த தொகுதிகள்: 230
தேர்தல் நடந்தவை: 230
அறிவிக்கப்பட்டவை: 230
வெற்றி பெற்ற தொகுதிகள்
பா.ஜ., - 144
காங்., - 70
பகுஜன் சமாஜ் - 6
மற்றவை - 10


மிசோரம்:


மொத்த தொகுதிகள்:40
தேர்தல் நடந்தவை:40
அறிவிக்கப்பட்டவை:40
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:31
மிசோ தேசிய முன்னணி:4
சொரம் தேசியவாத முன்னணி:2
மற்றவை:3


சட்டீஸ்கர் :


மொத்த தொகுதிகள்:90
தேர்தல் நடந்தவை:90
அறிவிக்கப்பட்டவை:90
வெற்றி பெற்ற தொகுதிகள் :
பா.ஜ.,:50
காங்கிரஸ்:38
பகுஜன் சமாஜ் கட்சி:2

டில்லியில் ஷீலா தீட்சித் எதிர்பாரா வெற்றி : ம.பி., - சட்டீஸ்கரில் மீண்டும் பா.ஜ., ஆட்சி: ஐந்தில் மூன்று காங்கிரஸ்!

நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மகிழ்ச்சியையும், பா.ஜ.,வுக்கு ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் உட்கட்சி மோதலால் வசுந்தரா தலைமையிலான பா.ஜ., அரசு தோல்வியை சந்தித்துள்ளது. டில்லியில் ஷீலா தீட்சித் எதிர்பாராத வெற்றி பெற்று, ஹாட்ரிக் அடித்துள்ளார்.


."மினி' பொதுத் தேர்தல் : ம.பி., - சட்டீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ., தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது."மினி' பொதுத் தேர்தல் என வர்ணிக்கப்பட்ட, ராஜஸ்தான், டில்லி, மிசோரம், ம.பி., சட்டீஸ்கர் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.மும்பை பயங்கரவாத தாக்குதல், பொருளாதார மந்த நிலை போன்ற பரபரப்பான சூழ்நிலையில் இந்த தேர்தல்கள் நடந்ததால் அனைத்து தரப்பினரின் கவனமும் இந்த தேர்தல் முடிவுகளிலேயே இருந்தது. அடுத்த ஆண்டில் லோக்சபாத் தேர்தல் நடக்கவுள்ளதால், இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் எதிர்பார்ப்பு அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தது.திட்டமிட்டபடி ஐந்து மாநில தேர்தல்களிலும் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மகிழ்ச்சியையும், பா.ஜ.,வுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.


ஷீலா அடித்த ஹாட்ரிக் (டில்லி): டில்லியில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் தோல்வி அடையும் என்றே கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது. மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் வேறு நடந்ததால், காங்கிரஸ் தோல்வி உறுதி எனக் கூறப்பட்டது. குறிப்பாக, பா.ஜ., இந்த மாநிலத்தில் வெற்றி பெறுவோம் என பெரிதும் நம்பியது. எதிர்பாராத வகையில் காங்கிரஸ் 42 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பா.ஜ.,வுக்கு 23 இடங்களே கிடைத்தன. மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று, ஷீலா தீட்சித் ஹாட்ரிக் அடித்துள்ளார். டில்லியில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளே இதற்குக் காரணம் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.


மகுடம் இழந்த மகாராணி (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலத்தில் துவக்கத்தில் இருந்தே பா.ஜ., தோல்வி அடையும் எனக் கூறப்பட்டது. இருந்தாலும், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் தேர்தல் நடந்ததால், பா.ஜ., வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால், மும்பை சம்பவம் ராஜஸ்தான் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. காங்கிரஸ் 96 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு ஐந்து இடங்கள் காங்கிரசுக்கு குறைவாக உள்ளன. பா.ஜ.,வில் நிலவிய உட்கட்சித் தகராறு தான் வசுந்தரா தலைமையிலான அரசின் தோல்விக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. பா.ஜ.,வுக்கு 78 தொகுதிகள் கிடைத்துள்ளன.


சாதித்துக் காட்டிய சவுகான் (ம.பி.,): மத்தியப்பிரதேசத்தில் உமா பாரதியின் பாரதிய ஜனசக்தி கட்சியால் பா.ஜ., தரப்பு ஒரளவு கலக்கம் அடைந்திருந்தது. இருந்தாலும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் அபாரமான செயல்பாடு, சரியான வேட்பாளர் தேர்வு, மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் போன்றவற்றின் காரணமாக பா.ஜ., ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் தரப்பில் தீவிர பிரசாரம் செய்தும், பா.ஜ.,வின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.


அசத்திய ராமன் சிங் (சட்டீஸ்கர்):சட்டீஸ்கரில் நக்சலைட்களின் அச்சுறுத்தல், விலைவாசி அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை முன் வைத்து, காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்தது. இருந்தாலும், பா.ஜ., முதல்வரான ராமன் சிங், தனது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை எடுத்துக் கூறி பிரசாரம் செய்தார்.கடும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோதும் காங்கிரஸ் தலைவர் அஜித் ஜோகி, மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்தார். ஆனால், அதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. பா.ஜ., இங்கு ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.இங்கு 50 தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. காங்கிரசுக்கு 38 தொகுதிகள் கிடைத்துள்ளன.


மிசோரம் காங்கிரஸ் வசம்: மிசோரமில், மிசோ தேசிய முன்னணியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மிசோ தேசிய முன்னணிக்கு நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.


இந்த ஐந்து மாநில தேர்தலில், மூன்றில் வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் உற்சாகம் அடைந்துள்ளது. எனவே, லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்வர் தேர்வுடன், லோக்சபாத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாரிப்பில் இறங்கிவிட்டது. பயங்கரவாதம், பொருளாதார மந்தநிலை போன்ற பிரச்னைகளைத் தாண்டி நிலைத்த அரசு என்ற அடிப்படையில் மக்கள் தெளிவாக ஓட்டளித்திருப்பதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்திருக்கிறது. ம.பி.,யில் சவுகானும், சட்டீஸ்கரில் ராமன் சிங்கும் தொடர்ந்து முதல்வர்களாக இருப்பார்கள் என்ற முடிவுடன், டில்லி, ராஜஸ்தான் தேர்தல் தோல்வி குறித்து ஆராய, பார்லிமென்டரி குழுவை பா.ஜ., நியமித்திருக்கிறது.


தேர்தல் முழுமுடிவுகள்


டில்லி:


மொத்த தொகுதிகள்:70
தேர்தல் நடந்தவை:69
அறிவிக்கப்பட்டவை:69
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:42
பா.ஜ., :23
பகுஜன் சமாஜ்:2
மற்றவை:2


ராஜஸ்தான் :


மொத்த தொகுதிகள்:200
அறிவிக்கப்பட்வை :200
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:96
பா.ஜ., :78
பகுஜன் சமாஜ் :6
மற்றவைகள்:20


மத்திய பிரதேசம்


மொத்த தொகுதிகள்: 230
தேர்தல் நடந்தவை: 230
அறிவிக்கப்பட்டவை: 230
வெற்றி பெற்ற தொகுதிகள்
பா.ஜ., - 144
காங்., - 70
பகுஜன் சமாஜ் - 6
மற்றவை - 10


மிசோரம்:


மொத்த தொகுதிகள்:40
தேர்தல் நடந்தவை:40
அறிவிக்கப்பட்டவை:40
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:31
மிசோ தேசிய முன்னணி:4
சொரம் தேசியவாத முன்னணி:2
மற்றவை:3


சட்டீஸ்கர் :


மொத்த தொகுதிகள்:90
தேர்தல் நடந்தவை:90
அறிவிக்கப்பட்டவை:90
வெற்றி பெற்ற தொகுதிகள் :
பா.ஜ.,:50
காங்கிரஸ்:38
பகுஜன் சமாஜ் கட்சி:2

Friday, December 5, 2008

வைக்கோவின் ஹாலிவுட் கதை

இந்தப் படத்தில் கதாநாயகனின் குடும்பம் வசதி குறைந்தது. அவன் மனைவி, ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். கதாநாயகன், தன் உடைமைகளை எல்லாம் விற்று, முதலீடு செய்து, மனித உடலின் ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தையும் பரிசோதித்து, நிலைமையைச் சொல்லும் பரிசோதனைக் கருவிகளை மொத்தமாக வாங்குகிறான். அவற்றை, மருத்துவமனைகளில் கொண்டுபோய் விற்பதற்காக, நெருங்குகிறான். வாங்குவார் இல்லை.

அவனது ஒரே மகன், ஆறு வயதுச் சிறுவன், பள்ளியில் படிக்கிறான். அலைந்து அலைந்து, எங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது, பசியோடும் பட்னியோடும் ஒவ்வொரு நாளும் இரவில் வீடு திரும்புகிறான். மனைவி கோபிக்கிறாள். இருக்கின்ற ரொட்டித்துண்டைப் பிள்ளைக்குக் கொடுத்துவிட்டு, பட்னியோடு தூங்குகிறான் தகப்பன். அந்தப் பரிசோதனைக் கருவிகளும் திருடு போகிறது.

‘ நியூ யார்க்கில் என் தமைக்கை வேலை பார்க்கும் நிறுவனத்தில் எனக்கும் வேலை கிடைத்துவிட்டது. நான் போகிறேன், மகனை நீயே பார்த்துக் கொள்’ என்று கூறிவிட்டு, மனைவி பிரிந்து செல்கிறாள். பள்ளிக்கூடத்தில் கட்டணம் செலுத்தமுடியாமல், பிள்ளைக்குக் கல்வி தடைப்படுகிறது. வீட்டு வாடகை செலுத்தவில்லை. காருக்கு வரி கட்டவில்லை. வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. இதற்க்காக் கைது செய்யப்பட்டு, ஒரு நாள் இரவு சிறையில் அடைக்கப்படுகிறான். அந்த இரவு முழுவதும் அவன் குழந்தை சிறைவாயிலிலேயே காத்துக் கிடக்கிறான். மறுநாள் விடுதலையாகி வருகிறான். வேலை தேடி, வீதிவீதியாக அலைகிறான். ஒரு கட்டத்தில், ஒரு வெள்ளை நிற கனவானுக்கு பயணத்தில் உதவுகிறான்.

இவன் மிகக் கூர்மையான அறிவாளி. எவராலும் எளிதில் சேர்க்க முடியா புதிர்க்கட்டங்களை அநாயசமாக அமைத்துக் காட்டுவான். முன்பு இவன் உதவிய கனவான் இயக்குநராக இருக்கின்ற பங்குச் சந்தை வேலை நேர்காணலுக்கு இவனுக்கு அழைப்பு அனுப்புகிறார். நேர்காணலுக்கு முதல் நாள்தான், வீட்டுக்கு வண்ணாம் பூசிக்கொண்டு இருந்த நிலையிலேயே கைது செய்யப்ப்ட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். காலையில் விடுதலை ஆனவுடன், போட்டு இருந்த பனியனோடு, நேர்காணல் அரங்கத்துக்கு ஓடுகிறான். நேர்காணல் குழுவினர், ஏளனமாகப் பார்க்கின்றனர். தன் நிலைமையைச் சொல்லிகிறான். கனவான் இரங்குகிறார். மூன்று மாதம் பயிற்சிக் காலம்.

பயிற்சி முடிந்து தேர்வு பெற்றால், வேலையில் சேரலாம் என்கின்றனர். அப்பயிற்சி நாள்களிலும் பட்டினிதான். தங்குவதற்கு இடம் இல்லை. நடைபதைகளில், ரயில் நிலைய பிளாட்பாரங்களில் பிள்ளையோடு படுத்துத் தூங்குகிறான்.

ஒருநாள், ஒரு ரயில்வே நிலையத்தில், தங்க இடம் இன்றி, கழிப்பறைக்கு உள்ளே தன் பிள்ளையோடு போய்த் தங்குகிறான். தரையில் செய்தித்தாள்களை விரித்துத் தன் பிள்ளையைப் படுக்க வைத்து இருக்கிறான், பிள்ளை தூங்கிறான்.

அந்தப் பிள்ளை ஒரு அற்புதமான பிள்ளை. அவன் கேட்பான் தகப்பனிடம், ‘அப்பா நான் பாரமாக இருப்பதால்தான் அம்மா போய்விட்டாளா? அப்படியானால் உனக்கும் நான் பாரமாக இருக்கின்றேனா?’ என்று கேட்கிறான்.

அவனை உச்சிமோந்து அள்ளிக்கொண்டு, ‘என் பிரிய மகனே, நீதானடா என்னை இயக்குகிறாய், என் பசி போக்கும் உணவுதான் உன் பார்வை, என் தாகம் தீர்க்கும் அமிர்தமும் நீதான்’ என்பான். அந்தப் பிள்ளை, கழிப்பறையில் இப்போது தூங்கிக்கொண்டு இருக்கிறான்.

அப்போது, கழிப்பறைக்கு உள்ளே வருவதற்காக யாரோ கதவைத் தட்டுகிறார்கள். காலால் அந்தக் கதவை மூடிக்கொண்டு, பிள்ளையை மடியில் போட்டுக்கொண்டு அமர்ந்து இருக்கிறான். அப்போதுதான், முதன்முதலாக அவனுடைய கண்களில் இருந்து இரண்டு கண்ணீர்த்துளிகள் உருண்டு விழுகின்றன. படம் பார்த்துக்கொண்டு இருந்த என்னுடைய கண்களிலும் கண்ணீர்த்திவலைகள். வாழ்க்கையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவனுக்குத் தோல்வி, எங்கு சென்றாலும் தோல்வி, எதைச் செய்தாலும் தோல்வி.

ஒரு வணிக வளாகத்தில் தன் சோதனைக் கருவியை விற்பதற்காக நின்றுகொன்று இருப்பான் பிள்ளையோடு. அப்போது அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில், அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜெபர்சனின் படத்துடன், அவருடைய பதவிப் பிரமாண உரையின் முக்கியமான பகுதி, காட்சியாக ஓடுகிறது. அந்த உரையின், ‘மகிழ்ச்சியைத் தேடி....’ என்ற சொற்கள் ஒலிக்கின்றன.

அந்த இடத்தைவிட்டு அகன்று, மகனோடு நடந்து செல்லும்போது, ‘அதற்கு என்ன பொருள்?’ என்று கேட்கிறான் மகன். ‘நம்முடைய நிலைதான் அதற்குப் பொருள். மகிழ்ச்சி என்பது கிடைக்காது, தேடிக்கொண்டே இருக்க வேண்டும்’ என்று சிரித்துக்கொண்டே சொல்லுவான்.

பங்குச்சந்தை பயிலகத்திலும் பல சோதனைகள். இனி இந்தத் துன்பத்தில் இருந்து விடுபட வழியே இல்லை. தொடரும் இருட்டில், இனி வெளிச்சமே இல்லை என்று, நிராசையே வாழ்வாகி, விரக்தியின் விளிம்பில் நிறுத்தப்படுகிறான். இந்த நிலையிலும், அவன் முடங்கி விடவில்லை. சோர்ந்து அடங்கி விடவில்லை. தொடர்கிறான்... தனது பயணத்தைத் தொடர்கிறான்! மூன்று மாத பயிற்சி முடிகிறது.

நேர்காணல் அறைக்கு மீண்டும் அழைக்கப்படுகிறான். முதலில் போனபோது, சிறையில் இருந்த வந்த அலங்கோலம். மேல்சட்டை அணியாத பரிதபம். இன்று, அங்கு அமர்ந்தவுடன் இயக்குநரிடம் சொல்லுகிறான். ‘இன்றைக்கு நான் ஒரு நல்ல சட்டை போட்டுக்கொண்டு வந்து இருக்கிறேன்’.

இரண்டு நிமிட இடைவெளிக்குப் பின்னர், பண்பான அந்தக் கனவான் சொல்கிறார்: ‘இன்று முதல் உனக்கு இந்தக் கம்பெனியில் நிரந்தர வெலை!’ அவன் நெஞ்சுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன. இதோ, அவனுக்கு விடிந்து விட்டது. கம்பெனியின் சில பங்குகளை அவனே விலைக்கு வாங்குகிறான். வெற்றித்தேவதை அவன் மீது பூ மழை பொழிகிறாள். செல்வம் குவிகிறது. அந்தக் கம்பெனியிலேயே ஓர் இயக்குநராகவும் உயர்கிறான். ஒரு கம்பெனியையே விலைக்கு வாங்குகிறான். இரவும் பகலும் பட்னி கிடந்து, வேதனை விம்மலுடன், வீடற்று வீதியில் திரிந்த அந்த நீக்ரோ இளைஞன், நகரத்தின் செல்வச் சீமான்களிள் ஒருவன் ஆகிறான்.

இந்தப் படம் கற்பனைக் கதை அல்ல. முழுக்க முழுக்க சிகாகோ நகரத்தில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம். இதில் கதாநாயகனாக நடித்த வில்ஸ்மித், அப்பாத்திரமாகவே உணர்வுபூர்வமாக ஒன்றிப் போய்விட்டார். அவர் பிறவியில் நீக்ரோ. அதைவிட, இப்படதுக்கு மேலும் ஓர் சிறப்பு என்னவென்றால், அவரது சொந்த மகன்தான் இந்தப் படத்திலும் அவரது பிள்ளையாக நடிக்கிறான்.


வைக்கோவின் ஆம்; நம்மால் முடியும்! புத்தகத்திலிருந்து நான் படித்து ரசித்த கதை.அப்பாவிற்க்கும் மகனுக்கும் உள்ள பாசபிணைப்பு மற்றும் அப்பாவிடம் அவன் கழிவறையில் கேட்கும் கேள்விகள் என் மனதை பாதித்த காட்சிகள்.

பார்க்க நேர்ந்தால் யாரும் தவறவிடாதீர்கள்.

படம் - Pursuit of Happyness

Friday, November 28, 2008

காங்கிரஸின் கையாலாகதத்தனம்

மும்பையில் தீவிரவாதிகளின் கண் மூடித்தனமான தாக்குதல்.

காங்கிரஸ் இனிமேலும் விழிக்குமா செயலிழந்த உள்த்துறை மற்றும் உளவுத்துறை செயல்படுமா !

உள்த்துறை அமைச்சர் சிராஜ் பாட்டேல் கடந்த முறை நடந்த தீவிரவாத தாக்குதலின் போது
தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஒரே சமயத்தில் எடுக்கப்பட்ட உரையாடலின் போது மூன்று வெவ்வேறு நிறுவன்ங்களுக்கு தான் உடனுக்குடன் உடையை மாற்றி ஒய்யாரமாக பட்டும் படாமலும் பதில் சொல்கிறார்.

அதுபோன்று மூன்று வெவ்வேரான கோணங்களில் உள்த்துறையை சீரமைக்க அல்லது கட்டமைக்க முயற்ச்சி செய்திருக்கலாம்.

இவருக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை அவருக்கு தன்னுடைய ஆடை அலங்காரத்திலும் சிகை அலங்காரத்திலும் கவனம் செலுத்துவதற்க்கே நேரம் சரியாக இருக்கிற போது அவருக்கெங்க நேரம் உள்த்துறையையும், உளவுத்துறையையும் கவனிக்க.

(எனக்கு சரியாக தெரியவில்லை உளவுத்துறையும் இவருடைய துறையின் கீழ்தான் வருதா என்று, இருந்தாலும் அவர்மீதுள்ள கோபத்தினால் எழுதுகிறேன்)

இவரை ஏன் இன்னும் அமைச்சராக வைத்துள்ளார்கள் என்றால் அவர் நேரு குடும்பத்தாருக்கு நெருக்கமான நட்பு வட்டாரம் அவ்வளவே அவருடைய தகுதி.

காங்கிரஸில் களை எடுக்கு நேரம் வந்தாச்சி என்றுதான் நான் நினைக்கிறேன்.

மற்ற எல்லா துறைகளும் நன்றாக இயங்கி கொண்டிருக்கும் போது இவருடைய துறை மட்டும் ஏன் இப்படி தூங்கிக் (இயங்கி) கொண்டிருக்கிறது என்று புரியவில்லை.

இந்தியா அடுத்த 20-30 ஆண்டுகளில் தன்நிறைவை அடைந்த்துவிடும் வல்லரசாக மாறும் என்று கருதும் போது.பலவீனமான பாதுகாப்பு வளையங்கள் இருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

உடனடியாக நாம் செய்ய வேண்டியதெல்லாம் நல்லதொரு உளவு அமைப்பு. புதிதாக கட்டமைக்கப்படவேண்டும்,அவர்களுக்கு எல்லாவிதமான அதிகாரங்களையும் கொடுத்து திறம்பட செயல்பட வைக்கவேண்டும்.அவ்வாரு செய்தால் தான் சாதரண மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

அதைவிட்டு விட்டு வேரு எதை செய்தாலும் அது கங்கிரஸுக்கு பாதகமாக தேர்தலில் எதிரொலிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

Thursday, November 27, 2008

இந்தியாவுக்கு பிரபாகரன் வேண்டுகோள்





எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள்.

தமிழீழ தாய் நாட்டின் விடிவிற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயம் எல்லாம் நிறைந்து நிற்கும் வீரர்களை நினைவு கூர்ந்து கவுரவிக்கும் புனித நாள்.

என்றும் இல்லாதவாறு ஒரு பெரும்போரை தமிழீழ தேசம் இன்று எதிர்கொண்டு நிற்கிறது. சிங்கள இனவாத அரசு ஏவி விட்டுள்ள தமிழ் இன அழிப்பு போருக்கு உலகின் பல்வேறு நாடுகளும் முண்டு கொடுத்து நிற்க, எமது மக்களின் தார்மீக பலத்துடன் நாம் தனித்து நின்று போராடி வருகிறோம்.

இந்த மண் எமக்கு சொந்தமான மண். பழந்தமிழர் நாகரீகம் நிலைபெற்ற மண். வரலாற்று காலத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராஜ்ஜியங்களை அமைத்து அரசாண்டார்கள்.

எங்கள் மண்ணில் ஆங்கிலேயே காலனியாதிக்கம் அகன்று சிங்கள ஆதிக்கம் கவிந்த நாள் முதல் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பி தேர்வு செய்யவில்லை.

திம்புவில் தொடங்கி ஜெனீவா வரை பல்வேறு வரலாற்று சூழல்களில் பேச்சுகளில் பங்குபெற்று வந்திருக்கிறோம். சிங்கள அரசுகளின் கடும்போக்கும் நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளுமே பேச்சு தோல்விகளுக்கு காரணம்.

புலிகள் இயக்கத்தை பலவீனப்படுத்தி தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிங்கள அரசு இந்த பேச்சு வார்த்தைகளை பயன்படுத்தியது. அனைத்து உலகத்தின் அனுசரணையோடு கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒரு தலைப்பட்சமாக சிங்கள அரசு கிழித்து எறிந்து விட்டு தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது.

அப்போது, சமாதானம் பேசிய உலக நாடுகள் எதுவும் ஒப்புக்காக கூட கண்டிக்கவில்லை. மாறாக, சிங்கள தேசத்துக்கு அழிவு ஆயுதங்களை சில நாடுகள் அள்ளிக் கொடுத்தன. ராணுவ பயிற்சிகளையும், ராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் தமிழருக்கு எதிரான இன அழிப்பு போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவு இரக்கமின்றியும் சிங்கள அரசு தொடர்ந்து வருகிறது.

எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. ஆகாயத்தில் இருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது. உலகத் தமிழினத்தின் ஒட்டு மொத்தப் பேராதரவோடு இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம். எமது போராட்டம், எந்தவொரு நாட்டின் தேசிய நலனுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம். அண்டை நாடான இந்தியாவுடன் நட்புறவை வளர்த்துச் செயல்படவே விரும்புகிறோம். எமது மக்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு எம் மீதான தடையை நீக்கி எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று எம்மை தடை செய்துள்ள நாடுகளை அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

இந்திய தேசத்தில் இன்று பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக் கிடந்த எமது போராட்ட ஆதரவு குரல்கள் இன்று மீண்டும் ஓங்கி ஒலிக்கின்றன. எமது போராட்டத்தை ஏற்றுக் கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்த கால மாற்றத்துக்கு ஏற்ப, இந்திய பேரரசுடன் அறுந்துபோன எமது உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள நாம் விரும்புகிறோம்.

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மை பிரித்து நிற்கின்றபோதும் எமது மக்களின் இதயத்துடிப்பை அறிந்து தமிழகம் இந்த வேளையில் எமக்காக எழுச்சி கொண்டு நிற்பது தமிழீழ மக்களுக்கும் எமது விடுதலை இயக்கத்துக்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எம் மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி அன்புக் கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழக தலைவர்களுக்கும் இந்திய தலைவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே நேரம் இந்தியாவுக்கும் எமது இயக்கத்துக்கும் இடையிலான நல்லுறவிற்கு பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில், அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடைïறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும்வரை நாம் தொடர்ந்து போராடுவாம்.

Saturday, November 15, 2008

கங்கிரஸ் தலைமையில் புதியகூட்டணி : பாராளுமன்றத் தேரதலில்







தமிழ் நாட்டைப் பொருத்தவரை மும்முனை போட்டியாகவும்
தேசிய அளவில் இருமுனை போட்டியாகவும் அமைய அதிக வாய்ப்பிருக்கிறது.

1.காங்கிரஸ்,பா.ம.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, இடது சாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள்.

2.தி.மு.க மற்றும் பா.ஜ.க.

3.அ.தி.மு.க,சுப்ரமணியசாமி மற்றும் இதர கட்சிகள் .

தற்போது கிடைத்த தகவலின் படி தி.மு.க வின் மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் அவர்களுடன் மீண்டும் கூட்டணி வைத்துக்கொண்டால் தோல்வி தான் கிடைக்குமென்று தமிழக காங்கிரஸார் அகில இந்திய காங்கிரஸ்க்கு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சோனியா காந்தி அவர்கள் இதுவரை அதைப் பற்றி அவ்வளவாக கண்டுகொள்ளாதவர் நெருக்கமான வட்டாரங்களில் தமிழ்நாட்டில் சட்ட ஒழூங்கு மற்றும்
தி.மு.க வின் அரசியல் செயல்பாடுகள் குறித்து அவ்வப்பொழுது கேட்டறிந்து வருகிறார், மற்றும் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்றும் கேட்டுள்ளார்.
ஆகவே ராமதாஸ் ஏற்க்கனவே இதுப்பற்றி பலமுறை காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி இப்பொழுது அகில இந்திய தலைமைக்கும் கேட்கும் படியாக காய்களை நகர்த்துவதாக தெறிகிறது.

அதனால் தான் இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸார் அவ்வளவாக பிடிகொடுத்து பேசாத நிலையிலும், தற்போதைய தி.மு.க அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள
வெறுப்பின் காரணமாகவும் சற்று ஒதுங்கி இருந்து மவுனம் காத்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி MLA க்களின் கூட்டத்தில் கூட்டணியைப் பற்றி சில விஷயங்களை பேசி இருக்கிறார்கள்.

கலைஞர் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு பேட்டியில் அரசிற்க்கு எதிராக சதி நடக்கிறது என்றும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அறிக்கைவிட்டார்.

தி.மு.க வின் சரிவு :

பல விதமான பிரச்சனைகளால் தி.மு.க அரசிற்கு நெருக்கடிகள் தோன்றிகொண்டிருக்கிறது.

1.முதலில் தயாநிதி மாறனுடைய தினகரன் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள்,
2.மதுரை தினகரன் பத்திரிக்கை தாக்கப்பட்ட விவகாரம்.
3. தயாநிதி மாறனை அமைச்சர் பதவியிலிருந்தது நீக்கியது.
4.அமைச்சர் பூங்கோதை கிரிமினலுக்கு ஆதரவாக பேசி பதவியிலிருந்து நீக்கியது.
5.அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம்.
6.மணல் திருட்டு.
7.அரிசி கடத்தல்.
8.அமைச்சர் மைதின்கான் ஒரு விழாவில் ஏடாகூடமாக (அரிகடத்தலைப் பற்றி) பேசியது.
9.அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா வின் ஆள்கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டு பதவியை இழந்தது.
10.பா.ம.க குருவை கைது செய்தது.
11.வைகோ வை கைது செய்தது.
12. முக்கியமாக மின்வெட்டுப் பிரச்சனை.
13.தற்போது இலங்கைப் பிரச்சனையை கையாளும் விதம்.
14.டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி பிரச்சனை.
15.அத்தியாவசய பொருட்களின் விண்ணை தொடும் விலைவாசி உயர்வு.
16.முக்கியமாக சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

இது போன்ற நடவடிக்கைகளில் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் தி.மு.க விற்க்கு குறைந்து கொண்டே வ்ரும் நிலையில்,விஜயகாந்தின் மீது மக்களின் கவனம் மாறி கனிசமாக செல்வாக்கு வளர்ந்து கொண்டு வரும் நிலையில் பா.ம.க வின் பச்சைக்கொடி காட்டபட்டதாலும் (கூட்டணிக்குள் தேமுதிக வருவதற்க்கு), ஏறக்குறைய இரண்டாம் கட்டத்தலைவர்கள் கூட்டணியைப் பற்றி திரைக்குப் பின்னால் தேமுதிகவுடன் பேசிவருவதாலும், இந்தக் கூட்டணி ஏறக்குறைய அமைய வாய்ப்பிருப்பதாக தோன்றுகிறது.

அதனால் தான் T. R. பாலு அவர்களின் மூலமாக தூது அனுப்பி பா.ம.க வை மீண்டும் இணைத்துக் கொள்ள கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது.

ஆகவே வெகு சீக்கிரத்தில் காங்கிரஸ் தலைமையில் நாடளுமன்ற கூட்டணி அமையும் என்றே தெரிகிறது.

அப்படி நடந்தால் கலைஞரின் ஆட்சி கவிழ்ந்து மேற்சொன்ன கூட்டணியே சட்டமன்றத்தேர்தலிலும் எதிரொலிக்கும்.

காங்கிரஸின் கனவு நனவாகி, காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய எனது வாழ்த்துக்களை இப்பொழுதே தெறிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, November 12, 2008

காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டம் ! சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்களின் அராஜகங்கள் அட்டூழியங்கள் !







ஒருவரையொருவர் தாக்கி கொள்கிறார்கள் நான்கு சுவற்றுக்குள் அல்ல ஆயிரக்கனக்கான மக்கள் நடமாடும் அதுவும் உயர்நீதிமன்றம் இருக்கும் வளாகத்தின் பக்கத்தில் உள்ள கல்லுரி வாயிலில் ஒரு மாணவன் சகமாணவர்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு அந்த மாணவன் மயங்கி விழுந்த பின்பும் கூட சக மாணவர்கள் அவனை சூழ்ந்து கொண்டு அடிக்கிறார்கள், அருகில் காவல் துறையினர் இருக்கிறார்கள், பத்திரிக்கைத் துறை நிருபர்கள் இருக்கிறார்கள் மக்கள் எல்லாம் கதறி காப்பாற்றுங்கள் என்று கூறிய பின்பும் கூட அதை தடுக்காமல் காவல் துறையினர் வேடிக்கை பர்த்துகொண்டிருந்தது ஏன்?

சட்டம் ஒழுங்கை காப்பாற்றபடும் காவல் துறையினறாலே கூட அதை தடுக்க முடியாமல் நிற்க்கிறார்கள் என்றால், ஏன் அவர்களுக்கு,

வேறு வேளை இருந்த காரணத்தால் அதை அவர்கள் தடுக்க வில்லையா?

இல்லை அவர்களுக்கு யாரவது லஞ்சம் கொடுத்தனால் கண்டுகொள்ளவில்லையா?

இல்லை அதை தடுக்கப் போனால் நாமும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்பதால் வேடிக்கைப் பார்த்தார்களா?

ஏன் அவர்களுக்கு சிறிதளவு கூட மனிதாபிமானம் இல்லையா?

சட்டக்கல்லுரி மாணவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டால் சட்டம் காவல்துறையினர் மீதே பாயும், ஏனென்றால் அவர்களெல்லாம் சட்டக்கல்லுரி மாணவர்கள், சட்டம் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள்.

சட்டக்கல்லுரி மாணவர்களுக்கு மட்டும் என்ன தலையில் கொம்பா முளைத்திருக்கிறது, சட்டம் பயின்றால் அவர்கள் இஷ்டத்திற்க்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாமா!

ஆம் நீங்கள் செய்யலாம்! உங்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று அக்கல்லூரிகளி படித்த முன்னால் மாணவர்களும் இன்னால் வக்கீல்களும், சாதி சங்கத் தலைவர்களும் வரிஞ்சிக் கட்டிக்கொண்டு நிற்க்கிறார்கள்.

அம்பேத்க்கார் கல்லுரியில் தான் எல்லாம் தலைவிரித்து தாண்டவம் ஆடுகிறது. சட்டத்தைக் காப்பாற்ற அணி நிற்ப்பார்கள் என்றால்,இவர்களெல்லாம் புரட்சி செய்கிறோம் மேல் ஜாதியினருக்கு எதிராக கலகம் செய்கிறோம், மேல் ஜாதிகாரர்களின் ஆத்திக்கத்தை ஒழிக்கப் போராடுகிறோம்,என்கிற போர்வையில் வன்முறையை தூண்டி, ஜாதி கலவரத்தை தூண்ட நினைக்கிறார்க்ள். நான் தான் சட்டக் கல்லுரியில் கலகம் செய்தேன், நான் தான் அந்தப்போராட்டத்திற்க்கு தலைமை தாங்கினேன்,என்று கூறி தாழ்த்தப் பட்டவர்களின் தலைவன் என்று ஏதாவது கட்சியில் பதவியை வங்கிக்கொண்டும் இல்லை ஒரு கட்சியை ஆரம்பித்துக் கொண்டும் அரசியல் தலைவர்கள் ஆகிவிடலாம் என்று நினைத்து அவர்கள் அவ்வாரு நடந்து கொள்கிறார்கள்.

நான் சொல்கிறேன் நீங்கள் கலகம் செய்யுங்கள் தாழ்த்ப்பட்டவர்களெல்ல்லாம் நன்றாக படியுங்கள் படித்தால் தான் எதிர்காலம் நமது கைகளில் வருமென்று !

போராடுங்கள் கல்விக்கு ஆகும் செலவை மானியமாகத், நல்ல தரமான மற்றும் சர்வதேச தரத்திற்க்கு கல்வியை தாருங்களென்று !

தலைமைத்தாங்குங்கள் எங்கெல்லாம் சமத்துவத்திறக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்கும் அறப்போராட்டித்திற்க்கு !

அப்படி வந்தவர்தான் டாக்டர் அம்பேத்க்கார் அவர்கள். அவருடைய பெயரை வைத்துள்ள கல்லுரியில் படித்துக் கொண்டு காட்டுமிராண்டிதனமாக,ரௌவுடித்தனமாக, அராஜகத்தில் ஈடுபடுவது மாபெரும் கண்டனத்திற்க்குரிய ம்ன்னிக்க முடியாத குற்றமாகும்.

சட்டத்தை மதிக்கப்படுபவர்களே அதை மிதிக்கும் போது, சட்டக் கல்லூரி மாணவர்களை அடக்கும் விதமாக, ஒழுக்கத்தை போதிக்கும் விதமாக, மற்றக் கல்லூரி மாணவர்களை போல் நடக்கும் விதமாகசில சட்டத் திருத்தங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் BAR Council .

கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் எந்த ஒரு ஒழுக்கக் கேடான நடவடிக்கைகளில் ஈடு பட்டாலோ அல்லது கலவரத்தை தூண்டும் விதமாகப் பேசினாலோ அல்லது
ரௌடித்தனமாக நடந்தாலோ அல்லது எந்த ஒரு கட்சியுடன் தொடர்பிருந்தாலோ அல்லது எந்த போலிஸ் ஸ்டேசனில் அவர்களுக்கெதிராக கேஸ் இருந்தாலோ அல்லது
பதிவாகி இருந்தாலோ கூட BAR Council லில் உருப்பினராக முடியாது என்ற ஒரு சில நடவடிக்கைகளை எடுத்தால் ஒழிய சட்டக்கல்லூரி மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாது.

Friday, October 17, 2008

சச்சினின் புதிய உலகசாதனை

Sachin world Record



பார்த்து மகிழுங்கள்.

மேலும் அதிக ரன்கள் குவிக்க எனது வாழ்த்துக்கள்.

Wednesday, October 15, 2008

கலைஞரின் கபட நாடகமும் ! கனிமொழியின் கதாபாத்திரமும் ! அம்மாவின் வெகுளித்தனமும் !








கலைஞரின் கபட நாடகம் நாடறிந்த விஷயமாயிற்று என்று அம்மா வெகுளித்தனமாக சொல்கிறார்.

அம்மாவின் கேள்வி கணைகள்.

1. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை, ஐந்து முறை முதல்வரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தை.

கலைஞர் பதில் - இதெல்லாம் எனக்கு தெறியும்.

2. இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிட வாய்ப்பு ஏற்படும். "இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ராணுவ தாக்குதல் உடனே நிறுத்தப்பட வேண்டும்' என்பது தான் தற்போதுள்ள முக்கிய பிரச்னை.

கலைஞர் பதில் - இதுவும் எனக்கு தெறியும்.

3. லோக்சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடிவடைய உள்ளது. மத்திய அமைச்சர்களைப் பற்றி தீர்மானத்தில் சேர்க்கவில்லை. மாநில அரசே பதவி விலகும் என கருணாநிதி ஏன் அறிவிக்கவில்லை?மாநில அரசுக்கு இன்னும் இரண்டரை ஆண்டு காலம் பதவிக்காலம் இருப்பதால், அதைப் பற்றி தீர்மானத்தில் ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை.

கலைஞர் பதில் - நான் ராஜினாமா செய்தால் மக்கள் நிம்மதியாகிவிடுவார்களே !.

4.உண்மையிலேயே கனிமொழிக்கு இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால்,
ராஜ்யசபா தலைவரிடம் தன் ராஜினாமா கடிதத்தை இன்றைய தேதியிட்டு கொடுத்திருக்க வேண்டும்.

கலைஞர். பதில் - என்னுடைய நாடகத்தில் நடிக்கும் போது அவளொரு நடிகை மட்டுமே.
என்ன இதுகூடபுரியாமல் அம்மா அறிக்கை விடறாங்க, நாடகத்தில் சாவதைப் போல்
ஒரு சீன் இருந்தால் அவனென்ன உண்மையாகவா இறந்து போவான்.

5.உண்மையிலேயே கருணாநிதிக்கு இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால்,
மத்திய மந்திரி சபையில் இருந்து தி.மு.க.,வைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் உடனே பதவி விலக வேண்டும். மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை, அனைத்து எம்.பி.,க்களும் திரும்பப் பெற வேண்டும். தி.மு.க., அரசும், தமிழகத்தில் தனது ஆட்சி அதிகாரத்தை தூக்கி எறிய முன்வர வேண்டும்.

கலைஞர். பதில் - அய்யோ அய்யோ இந்த உலகம் இன்னுமா என்னை நம்புது.

கலைஞர் ஏன் இவ்வளவு காலம் மௌனம் சாதித்தார் என்பது ஏன் என்று தெறியாமல் இவர் இலங்கைத்தமிழர்களுக்காத்தான் குரல் கொடுக்கிறார் என்றும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுகிறார் என்றும் சொல்கிறார். ஆனால் உண்மை அதுவல்ல மக்களை திசைதிருப்பும் குடும்ப நாடகம் மின்வெட்டு பிரச்சினை,அமைச்சர்களின் கட்டப் பஞ்சாயத்து பிரச்சினை, மணல் திருட்டு, அரசிகடத்தல் போன்ற பிரச்சினைகளால் மக்கள் தி.மு.க அரசின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கும் போது எப்படி அவர்களை திசையை மாற்றலாம் என்றெண்ணும் போதுதான் கலைஞருக்கு தோன்றிய நாடகம், எல்லாக் கட்சிகளும் இலங்கைத் தமிழர்களுக்காக களத்தில் இறங்கி போராடிக்கொண்டிருக்கும் போது.தானும் ஏதாவது செய்து போராடுவதைப் போல அரசியல் stunt அடிச்சி, குடும்ப நாடகத்தை அரங்கேற்றி விட்டார்.

கனிமொழி நாடகத்தில் முதல் மதிப்பெண் பெற்று முன்னிலை வகிக்கிறார்.(தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதிணாரடி பாயும்)என்பதை நிருபித்து தன் அப்பா இயற்றிய நாடகத்தில் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார்.

இரண்டு வாரகாலத்தில் போர் நிருத்தத்தை அறிவிக்க மத்திய அரசு இலங்கைக்கு நிர்பந்த்திக்க வேண்டும் இல்லாவிட்டால் தமிழக M.P க்கள் பதவி விலகுவார்கள் என்று சொன்னவர், தமிழக அரசு ராஜினாமா செய்யும் என்று ஏன் அறிவிக்கவில்லை.ஏனென்றால் பதவி ஆசை, இன்னும் நிறைய சம்பாத்திக்கவேண்டுமென்ற வெறி.

கலைஞரின் குடும்பம் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்தால் போதும் தமிழ்நாடு எல்லாவித்ததிலும் முன்னேற்றமடையும் என்பது அனைவரின் ஒருமித்தக் கருத்தாக இப்பொழுது அமைந்துவிட்டது.

Monday, October 13, 2008

அமெரிக்காவில் ஏற்பட்ட வீழ்ச்சி ஏன்? நடந்தது தான் என்ன?

கடந்த 15 நாட்களாக பங்குச்சந்தை பற்றிப் பேசாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. காரணம், சிறிய அளவு சேமிப்பையும் முதலீடாக்கிய ஒரு சாதாரண நபரும் இந்த சந்தை வீழ்ச்சியில் பாதிக்கப்பட்டிருக்கிறார்.கடந்த இரு ஆண்டுகளில் பங்குச்சந்தையில் முதலீடு என்பது ரேஸ் குதிரைப் பந்தயத்தில் முதலீடு போல பெரிதாகப் பேசப்பட்ட விஷயம்.


பங்குச்சந்தை குறியீட்டெண் 10 ஆயிரத்தை தாண்டியபின் மடமட வென அதிகரித்து, 15 ஆயிரத்தை தாண்டியதும், அதில் முதலீடு செய்யாமல், வங்கி நிரந்தர வைப்பில் பணத்தைச் சேமித்தவர்கள் அப்பாவிகளாகக் கூட காணப்பட்டனர்.இன்று பங்குகள், பங்குச்சந்தையின் செயல்கள், முதலீட்டில் அதன் தாக்கம் ஆகியவை பற்றி அறிந்தவர்களை விட அறியாத பலரும் ஆர்வத்தில் முதலீடு செய்துவிட்டு, தற்போதைய சந்தையின் அதலபாதாள வீழ்ச்சியில் குன்றிப் போய் இருக்கின்றனர்.


இந்நிலைக்கு அமெரிக்காவின் போக்கே காரணம். வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்ற கருத்தை நோக்கி செயல்படும் பொருளாதாரத்தை அங்கே ஊக்குவித்தனர். தவிரவும், எல்லாவற்றையும் நுகரும் கலாசாரம் என்ற நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன் வாங்கிய வீடுகள் தற்போது மும்மடங்கு வரை விலை அதிகரித்தது.இந்த வீட்டு வசதிக்காக வங்கிகள் கடன் தரும் நடைமுறையில் அமெரிக்கா பின்பற்றிய அணுகுமுறை பெரிய ஆபத்தை உலகம் முழுவதும் கொண்டு வந்து விட்டிருக்கிறது.


கடன் பெற்றவர்கள் : ஏதோ லேமென் வங்கி வீழ்ச்சி என்று ஆரம்பித்த கதை, 70 ஆயிரம் கோடி டாலரை அரசு தரமுன்வந்தும் அமெரிக்க நிலைமையை மோசமாக்கியிருக்கிறது.உதாரணமாகச் சொன்னால், மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் டாலரில் ஒரு வீடு (அன்று அதன் இந்திய மதிப்பு ரூ.45 லட்சம்) வாங்கினால், அமெரிக்காவில் அதற்குப் பெரிய ஆதாரம் ஒன்றும் கேட்காமல் கடன் தந்துவிடும் வங்கி.முகவரிக்கான அத்தாட்சி கூட இல்லாமல் கடன் பெற்றவர்கள் உண்டு. கிரெடிட் கார்டு கலாசார வேகம் அப்படி. வீடு வாங்கினால் அது அதிகவிலைக்கு எதிர்காலத்தில் விற்கப்படும் என்ற கருத்தில், அமெரிக்காவில் வீடு வாங்கும் மோகம் அதிகரித்தது. அந்தக் கடன்பத்திரங்களை அப்படியே அமெரிக்க வங்கிகள்,


"அதிக லாபம் தரும் கடன் உதவி வசதிகள்' என்று கவர்ச்சிகரமாகப் பெயரிட்டு மற்ற நிதி நிறுவனங்களுக்கு விற்றன.இதில் திவாலான அமெரிக்க நிதிநிறுவனம் லேமென் வாங்கிக்குவித்த கடன்பத்திரங்கள் ஏராளம். இந்தக் கடன் பத்திரங்கள் பல்வேறு வங்கிகளுக்குக் கைமாறி, அதற்கு கமிஷன் பெற்றவர்கள் ஏராளம். நீர்க்குமிழி போல இந்த வர்த்தகம் உலகெங்கும் வங்கிகளிடம் பரவியது.ஆனால், கடந்த ஆண்டு வீட்டு விலை இறங்கத் தொடங்கியது. தவணை கட்ட வேண்டியவர்கள் படுத்து விட்டனர்.


நிறைய வீடுகளை விற்க முன்வந்தனர், கிடைத்த விலைக்கு விற்று லாபம் பார்க்க முயன்றனர். ஆனால், வாங்குவதில் அதிக வேகம் இல்லை.அதேசமயம், அதிகலாபத்தில் இந்தப் பத்திரங்களை விலைக்கு வாங்குவதை லேமென் முதலிய நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டன. அதிக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த வங்கிகள் நிதிப்புழக்கம் இன்றி முடங்கின. பத்திரங்களைப் பெற்று கணிசமான வட்டிக்குப் பணம் தரும் வங்கிகளின் சாமர்த்தியம் முடிவுக்கு வந்தது. தங்களிடம் உள்ள ஆஸ்திமதிப்பு குறைந்ததும் ஒரு வங்கி மற்றொரு வங்கியிடம் தனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டு வழக்குகள் தொடர்ந்தன.


அமெரிக்கா மட்டும் அல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் வங்கிகள் தடுமாறின. இது ஆசியாவுக்கும் பரவி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த "சப்பிரைம்' பிரச்னை இன்று உலகையே நிம்மதியில்லாமால் ஆக்கி விட்டது.முடிவில் 70 ஆயிரம் கோடி டாலரை அமெரிக்க அரசு தர வேண்டியதாயிற்று; உழைத்துச் சேமித்தவர்கள் பணத்தை அழித்து விட்டது. பொதுவாக ஒருவர் கடன் பெற்று வீடு வாங்கினால் அது சொத்து அல்ல; பொருளாதார சுமை. அதே போல கிரெடிட் கார்டில் மளிகைச் சமான்கள் வாங்கினால் அது சுமை; சுகம் அல்ல.


ஒரு பக்கம் அச்சம். மறுபக்கம் பேராசை : பணக்காரர்கள் தங்கள் பணத்தை வங்கியில் வைத்திருக்க மாட்டார் கள், அதைப் பெருக்கு வழிகாண் பார்கள். மாறாக, ஸ்டாக் புரோக்கரிடம் போனில் பேசி பங்குகள் வாங்கினால் அது பணமரமாகக் காய்க்கும் என்றால் அவ்வளவு தான்! அந்தப்பாடத்தை இப்போது அமெரிக்க அனுபவத்துடன் பலரும் கற்று வருகின்றனர். நல்ல வேளையாக, "சப்பிரைம்' நடைமுறையை இந்தியாவில் பின்பற்றவில்லை.இன்று பங்குச்சந்தை அதலபாதளத்தில் நிற்கிறது. இதற்குக் காரணம் ஒரு பக்கம் அச்சம். மறுபக்கம் பேராசையால் ஏற்பட்ட பீதி


தீபாவளி கொண்டாடுவேன்' : மும்பை ஸ்டாக் புரோக்கர் ஜுன்ஜுன்வாலா வெளிப்படையாக, "பங்குச்சந்தையில் 20 ஆயிரம் வரை புள்ளிகள் உயரும் என்று நான் கணிக்கவில்லை, ஆபத்தில்லா முதலீடு செய்தவர்கள் நன்றாக வரும் தீபாவளியைக் கொண்டாடுவார்கள், "மேலும் தீபாவளிக்கும், பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல, பேச வேண்டாம். நான் நன்றாகவே வழக்கப்படி தீபாவளி கொண்டாடுவேன்' என்கிறார். அப்படி எத்தனை ஸ்டாக் புரோக்கர்கள் இனிக் கூறப்போகிறார்கள் என்பது கேள்வி தான்.


நெம்புகோல் தத்துவம்: 150 சதவீத லாபம் எப்படி வரும்?: அமெரிக்காவில், 2003ம் ஆண்டு வட்டிவீதம் 1 சதவீதம் என்று ஏற்பட்டதிலிருந்து வீட்டுக்கடன் என்பதில் வந்த பல்வேறு நடைமுறைகள் இன்று அமெரிக்க, ஐரோப்பிய வங்கி நிறுவனங்களைக் கலக்குகின்றன.ஏதோ ஆதாயம் வரும் என்று எண்ணி, கையில் இருக்கும் மூலதனத்தை இழப்பது சரியல்ல; ஆனால், கையில் மூலதனமே இல்லாமல் நடக்கும் பரிவர்த்தனைகள், அதற்கான நடைமுறைகள் இப்போது உலகம் முழுவதும் எல்லாரையும் அச்சப்பட வைத்து விட்டது. ஒரு சிறிய உந்து சக்தியை வைத்து பெரிய பாறாங்கல்லைக் கூடப் புரட்டலாம் என்பது நெம்புகோல் தத்துவம், இது இயற்பியலில் உள்ளது


ஒருவர் 1,000 ரூபாயை சேமிப்பில் போட்டு ஆண்டுக்கு 15 சதவீத வட்டி என்றால், அது ஆண்டு முடிவில் 1,150 ரூபாயாக உயரும். ஆனால், கையில் 1,000 ரூபாயை வைத்துக்கொண்டு மேலும், 9,000 ரூபாய் கடன் வாங்கி பின் மொத்தமாக, 10 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தால் எப்படி? அந்த முதலீட்டிற்கு ஆண்டு இறுதியில் வட்டி 15 சதவீதக் கணக்கில் பார்த்தால், அசலுடன் சேர்த்து 11 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும்.பணம் வாங்கியது உறவினரிடம் என்றால், வாங்கிய அசலை மட்டும் திரும்பக் கொடுத்துவிட்டால், எந்தவித முயற்சியும் இன்றி 2,500 ரூபாய் கிடைக்கிறது. அதில் முதலில் கையில் வைத்திருந்த அசல் 1,000 ரூபாய் மட்டுமே என்பதை நினைத்தால் ஆச்சரியம் அல்லவா? அப்போது 1,000 ரூபாய்க்குக் கிடைத்தது 1,500 ரூபாயா? நினைத்தால் மலைப்பாக இருக்கும். இது, 150 சதவீத லாபம்.இப்படி லாபம் கிடைக்காமல் 15 சதவீத வட்டியும் காற்றில் பறந்து விடுகிறது என்றால், அந்த நிலையில் கிடைப்பது 8,500 ரூபாய் மட்டுமே.


உறவினரிடம் வாங்கிய 9,000 ரூபாயிலும் 500 இழப்பாகி விடுகிறது. கையில் வைத்திருந்த 1,000 ரூபாய் கிடைக்காமல் போய்விட்டது. இப்படித்தான், "சப்பிரைம்' கடன் பத்திரங்கள் லாபம் கிடைக்கும் என்று பல்வேறு முதலீடுகளாக மாறி இன்று, "வால்ஸ்டிரீட் மட்டும் அல்ல, உலகையே கலக்குகிறது. இதில் ஒரு நல்ல அம்சம். இந்தியாவில் உள்ள வங்கி ஏதும் இந்த நிதிச்சுழலில் சிக்காததால், அதில் சேமிக்கப்பட்ட டிபாசிட்டுகளுக்கு ஆபத்து இல்லை

Friday, September 26, 2008

தி.மு.க. வின் ஜனநாயக விரோதப் போக்கு






திருச்சியில் கடந்த 21-ம் தேதி தி.மு.க., முப்பெரும் விழா நடந்தது.தங்கபாலு பேசும்போது
ஆட்சியில் பங்கு தருவதற்கு கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டால் பொதுக்குழு, செயற்குழு கூடிமுடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

அவர் என்னவோ செய்யக்கூடாத தப்பு பண்ணின மாதிரியும் கேட்கக்கூடாததைக் கேட்ட மாதிரியும் கலைஞர் கருணநிதி கூட்டணி உடன்பாட்டின் போது, 'ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்றும் அப்படியே பங்கு கொடுப்பதாக இருந்தாலும்கூட பாண்டிச்சேரியையும் சேர்த்துக்கொள்ளலாம்' என்கிறார்.

என்னவோ அவர் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைச்சிருக்கற மாதிரியும் ஏதோ காங்கிரஸ் ஒப்புக்கு ஒத்துப்போவதுபோலும் ஆகிவிட்டது.இதுவரை நடந்த தேர்தல்களில், எல்லா நேரமும் எல்லாக்கட்சியும் முழு மெஜாரிட்டியுடன்தான் ஆட்சி அமைத்தது. இதுவரை தமிழ் நாட்டின் வரலாற்றிலே கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. அதனால் காங்கிரஸார் கூட்டணி உடன்பாட்டின்போது எந்த ஒரு நிபந்தனையும் வைக்காமல் தேர்தலில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு போட்டியிட்டது. இதனால் கூட்டணி உடன்பாடு செய்ய வேண்டிய
அவசியம் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை.ஆனால், மக்களின் தீர்ப்பு மகேசனின் தீர்ப்பாக இருக்கும்போது இனிமேல் அந்த உடன்படிக்கையை போடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது தி.மு.க. மக்கள், தேர்தலின்போது அவ்வளவாக தி.மு.க. வை நம்பாமல் அதன் முக்கியக் கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ்,பா.ம.க. மற்றும் இடதுசாரிகளை நம்பித்தான் வாக்களித்தார்கள்.

அதனால் தி.மு.க. முழுமெஜாரிட்டியான மேஜிக் எண் 124 ஐ தொட்டிருந்தால், யாரும் ஆட்சியில் பங்கு கொள்ளவும் மற்ற திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடவும் மாட்டார்கள்.

ஆனால் நடந்தது என்ன? தி.மு.க 95 ம், காங்கிரஸ் 35 ம், பா.ம.க 18 ம் மற்றும் இடதுசாரிகள் -15 ம் பெற்று வெற்றி பெற்றன.

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பா.ம.க மற்றும் இடதுசாரிகளைத் தவிர்த்து காங்கிரஸ் ஆதரவு இருந்தாலே போதுமானது. இதனால் பா.ம.க., எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவு தெரிவித்தது, அதேபோல், இடதுசாரிகளும் . ஆனால் காங்கிரஸின் நிலைமை அப்படி இல்லை. இவர்களின் தயவால் ஆட்சி அமைக்கும்போது, ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை. ஏனென்றால் காங்கிரஸை மக்கள் அதன் கொள்கையின் அடிப்படையிலே தேர்ந்தெடுத்தார்கள் .அதனால் அவர்களுக்கு காங்கிரஸார் சார்பில் அவர்களின் கொள்கையின் அடிப்படையில் மக்களுக்குச் சில நல்ல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த நினைக்கிறார்கள் .அப்படி நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் மக்களின் தீர்ப்புக்கு மாறாக நாங்கள் ஆட்சியில் பங்கு தரமாட்டோம் நாங்கள்தான் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்போம் என்று சொல்லுவது, ஜனநாயகத்திற்கு எதிரானது முரணானது விரோதமானது. எந்த அடிப்படையில் அவ்வாறு சொல்கிறார்கள் ஆட்சி சுகத்திலா,அதிகார சுகத்திலா என்று தெரியவில்லை.

நேற்று லயோலோ கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேகூட மக்களின் எண்ணங்கள் எதிரொலித்திருக்கிறது என்றால் இதை தி.மு.க. மதித்து காங்கிரஸாருக்கு ஆட்சியில் உரிய பங்கினை தந்து எதிர்காலத்திற்கு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். காங்கிரஸார் மக்களுக்குத்தான் தியாகத்தைச் செய்யவேண்டுமே ஒழிய தி.மு.க. வுக்கு எந்தத் தியாகத்தையும் செய்யத் தேவையில்லை.அது அவர்களின் உரிமை கடமையும்கூட, இவ்வாறு நடந்தால் எப்படி காங்கிரஸாருக்கு மக்கள் எதிர்காலத்தில் ஓட்டளிப்பார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸை, காங்கிரஸாரை எப்படி நம்புவார்கள் என்பதும் புரியவில்லை.

தமிழ் நாட்டிலுள்ள காங்கிரஸார் தங்களின் நிலைமைகளை அகில இந்திய காங்கிரஸின் தலைமைக்கு விளக்கமாக எடுத்துக்கூறி, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான ஆட்சியின் பங்கையும் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமைகளையும் செய்யவேண்டும், அப்படிச் செய்தால்தான தமிழ்நாட்டில் காங்கிரஸார் தங்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்கும் எதிர்காலத்தில் அடிபணிய அல்லது வால் பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Monday, September 22, 2008

முதல் மொட்டை மாடி கூட்டம் - சிந்திக்க சில விஷயங்கள்






எங்களுடைய New Horizon Media மாதம் ஒருமுறை பொது விவாதக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது, இரண்டாவது சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு. இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.


முதல் வாரம் என்பதனால் கூட்டம் குறைவாக இருந்தது என்றாலும் நிறைவாகத்தான் இருந்தது (டீ, காபி, சமோசா என்று).நான் எல்லாம் கலந்துகொள்ளலாமா என்று நினைத்துக் கொண்டிருந்த போது எங்களுடைய முதன்மை ஆசிரியர் பா.ராகவன் எல்லோரையும் அழைத்தார்.எல்லோரும் மொட்டை மாடி கூட்டத்திற்கு வாருங்கள் என்று அப்பொழுதுதான் தெரிந்தது இது எழுத்தாளார்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் தான் என்று. சரி என்னத்தான் பேசுகிறார்கள், எதைப்பற்றி பேசுகிறார்கள், எப்படி பேசுகிறார்கள், ஏன் பேசுகிறார்கள் அதில் நான் என்ன செய்யவேண்டும் என்று நினைத்தபோது தான் எனக்கான பொதுவான கருத்துக்களை கொண்ட பேச்சுகள் வந்தது, அப்பொழுதுதான் நினைத்தேன் நாமும் கேள்வி கேட்கலாமென்று அதுகாறும் தயங்கலாகவே இருந்தது. சரி கேட்டுவிடலாம் என்று நினைத்தபோது சாரு அவர்கள் வேரொரு கருத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார் இலக்கியத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் ரசனையுடன் அவரது பேச்சை கேட்டேன். பிறகு அவர் நிறுத்தி யாராவது கேள்விகள் கேட்கிறீங்களா என்றார் அப்பொழுதுதான் நான் கையை உயர்த்தி கேட்டேன்.

இன்றைய இளைஞர்களுக்கு 200 வார்த்தைகள் தான் தெரிகிறது என்றும் அதை வைத்துக்கொண்டுதான் அவர்கள் பேசுகிறார்கள் பெண்களிடம் கடலை
போடுகிறார்கள் என்றும் சொன்னார். நான் கேட்டேன் ஏன் அவர்களுக்கு 200 வார்த்தைகள் தான் தெரிகிறது அதற்கு மேல் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லையா, இல்லை தெரிந்துகொள்ள விருப்பமில்லையா என்று, ஆனால் அவர் ஏதோ சொன்னார் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் அதைப்பற்றி விளக்கமாக கேட்குமுன் அவர் கைகடிகாரத்தை பார்த்துகொண்டே மற்றவர்களை பார்த்தார் உடனே முத்துகுமார் அவர்கள் ஒருகேள்வியை கேட்டார்.

திராவிட கழகங்கள் ஆட்சிக்கு வந்ததால் தான் மாணவர்களுக்கெல்லாம் தமிழ் தெரியவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள் திராவிட கழகங்கள் வந்து தானே ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை எல்லாம் நடத்தி நம் தமிழை மட்டுமே படிக்க வழி செய்த போது எப்படி நீங்கள் அவ்வாறு சொல்கிறீர்களென்று அதற்கு அவர் சொன்னார் நிறைய ஆங்கில பள்ளிகளை திறந்து வைத்துவிட்டு அதனால் பிள்ளைகலெல்லாம் அங்குதான் சேர்ந்து படிக்கிறார்கள் தமிழ் வழி பள்ளிகளில் படிப்பதில்லையென்று அதானால் தான் தமிழ் வளரவில்லையென்றும், மாணவருகளுக்கு தமிழ் தெரியவில்லையென்று சொல்கிறார்.

நான் கேட்கிறேன் எத்தனை பள்ளிகளில் தமிழாசிரியர்கள் ஆர்வமுடன் மாணவர்களுக்கு பாடம் நடதுகிறார்கள் அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு சரியான மற்றும் பகுத்தறிவுடன் பதிலை சொல்கிறார்கள், மாணவர்கள் கேட்கும் கேள்விகளை சரியான முறையில் புரிந்துகொண்டு அவர்களுக்கு புரியும் விதமாக எத்தனை ஆசிரியர்கள் விளக்கங்களை தருகிறார்கள்.

இதெல்லாம் ஒழுங்காக நடந்தால் தானே அவர்களுக்கு ஆர்வம் வரும்.மொழிகளின் மீது பற்று வரும், படிக்கலாம் என்ற எண்ணம் வரும்,இதையெல்லாம் விட்டு விட்டு நாம் மாணவர்களின் மீது குறை சொல்வது என்ன நியாயம் என்று எனக்கு புரியவில்லை.

தமிழ் ஆர்வளர்கள் தான் இந்த மாதிரி எங்கு நாம் தப்பு செய்கிறோம், எங்கு தப்பு நடக்கிறது என்று கண்டுபிடித்து திருத்த முயற்சி செய்யவேண்டும்.

மொழிகளின் மீது ஆர்வத்தை தூண்டவேண்டும் முடிந்தவரை குழந்தை பருவத்திலே நிறையமொழிகளை கற்று கொடுக்க முயற்சி எடுக்க வேண்டும்.அப்பொழுதுதான் நம்முடைய தமிழும் வளரும், நாட்டின் பொருளாதாரமும் வளரும்,நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியுமே மொழிகளில் தான் அடங்கியுள்ளது என்பதை நாம் மறக்ககூடாது.

Sunday, September 7, 2008

அணுசக்தி ஒப்பந்தத்தின் வியன்னா வெற்றி

அணுசக்தி ஏற்றுமதியாளர்கள் கூட்டம் வியன்னாவில் சிலதினங்களாக நடைப்பெற்றுவருகிறது அதில் நமக்கு குறிப்பிடதக்க வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகது.

இதை 21ம் நூற்றாண்டின் முதல் வெற்றியென்றே சொல்லலாம்.

ஏன் நான் அவ்வாறு சொல்கிறேன் என்றால் உலக ஆராய்ச்சியாளர்கள் 21ம் நூற்றாண்டை சீனா மற்றும் இந்தியாவின் நூற்றாண்டாகத்தான் இருக்குமென்று சொல்கிறார்கள்.20ஆம் நுற்றாண்டு அமெரிக்காவுடையதோ அதைபோலத்தான் 21ம் நூற்றாண்டு இந்தியாவுடையது அதில் எந்த மாற்றமுமில்லை.

நேற்று நடந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற்று இறுதியில் வாக்கெடுப்பு நடைபெற்று வெற்றிபெற்றது.

இதில் குறிப்பிடதகுந்த அம்மசம் என்னவென்றால்

1.அணு ஆயுதபரவல் தடை ஒப்பந்தம்

மற்றும்

2.அணுகுண்டு சோதனை

போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமலேயே Nuclear Supplier Group யின் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

அணுமூலப்பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகள் இந்த இரண்டு ஒப்பந்தகளில் கண்டிப்பாக கையெழித்திடவேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே மற்ற நாடுகளிலிருந்து மூலப்பொருட்களயும் தொழில் நுட்பத்தையும் பெறமுடியும்.

ஆனால் நாம் மட்டும் இந்த விதியிலிருந்த்து விலக்கு அளிக்கப்பட்டிருகிறோம் என்றால் உலக நாடுகளின் கவனம் முழுதும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.

ஏன் இந்தியாவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதென்றால் இந்தியா ஒரு போதும் சுயக்கட்டுப்பாட்டை மீறாத,மற்ற நாடுகளின் அரசியல் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காத மற்றும் முக்கியமாக அகிம்சவாத நாடு என்று கருதி,கட்டுப்பாட்டை விதிக்க தேவையில்லை அவர்களாகவே கட்டுப்பட்டு செயல்படுவார்கள் என்று நினைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதே போல் ஒரு ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு தருமா என்றால் அது கனவில் கூட நடைபெறாத ஒன்று.

இந்த ஒப்பந்தத்தினால் நாட்டின் மிகமுக்கியமான மற்றும் வளரும் பொருளாதாரத்திற்கு அடிப்படையான மின்சார தேவையின் அளவு ஈடுசெய்யப்படும்.

எவ்வளவு விரைவில் தோரியத்திலிருந்தது மின்சாரம் எடுக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாக செய்யவேண்டும், ஏனென்றால் நீண்டகாலத்திற்கு மற்றவர்களையே நம்பிருக்கமுடியாதில்லையா!

வெற்றிகள் தொடர நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக.

Wednesday, August 27, 2008

ப்ரஜா ராஜ்யம் - சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம்





அன்னை தெரசா பிறந்தநாளான நேற்று (26)சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம்

ஆந்திர அரசியலில் பெரிதா எதிர்ப்பார்க்கப்பட்ட அரசியல் புயல் திருப்பதியில் மையம் கொண்டு பெருவெள்ளம் எனும் ஆந்திர மக்கள் கலந்துகொண்ட" ப்ரஜா ராஜியத்தின் " (மக்கள் ஆட்சி) துவக்கப்பட்டு இந்திய அரசியல்வாதிகளையும் இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டது.

10 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் தானாக, யாருடைய கட்டாயமும் இல்லாமல் கலந்துகொண்ட ஒரே கட்சி கூட்டம் எதுவென்றால் அது இதுவாகத்தான் இருக்கும்.

ஏன் தேசியக்கட்சி மாநாடு நடத்தினால் கூட இது போல் ஒரு மக்கள் வெள்ளத்தை பார்க்கமுடியாது.

திராவிடக்கட்சிகள் மாநாடு நடத்தினால் கட்டயாமாக ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் குறைந்தது 1000 பேர்களையாவது கூட்டிச்செல்லவேண்டும் என்ற வாய்மொழி உத்தரவுவந்தாலும், பணம் கொடுத்தாலும் 200 லிருந்து 300 பேர்வரைத்தான் பிடித்துகொண்டுபோய் நிறுத்தி மாவட்டதலைவர்களிடத்தில் நான் 1000 பேரை கூட்டிவந்திருக்கிறேன் என்று கூறி நல்லபேர் வாங்கநினைப்பார்கள்.கடைசியில் பார்த்தால் மாநாடு பந்தல் கூட நிறைந்திருக்காது.

வீடியோ கிராஃபரை கூட்டிவந்து 4லிருந்து 5 லட்சத்திற்கும் மேலாக தொண்டர்கள் திரண்டார்கள் என்று கட்டுக்கத்தையை விடுவார்கள் செயற்கையான மாயையயை உருவாக்கிகாட்டுவார்கள்.ஆனால் இது அதைப்போல் அல்லாமல் மக்களின் உணர்வுகளாகத்தான் தோன்றின.

அடுத்த பாராளுமன்றத்தேர்திலிலேயே சில அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்..

நல்ல அதிர்வுகளைத்தந்தால் பயனாக இருக்கும்.

மாற்றம் ஒன்றுதானே மாற்றமேயில்லாதது!

Tuesday, July 22, 2008

நூலிழையில் தப்பியது மத்திய அரசு! ஆதரவு : 275 எதிர்ப்பு: 256

பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுகளும், எதிராக 256 ஓட்டுகளும் விழுந்தன. இதன் மூலம், கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த பரபரப்பான திருப்பங்களுக்கு பின், நூலிழையில் மத்திய அரசு தப்பியது. அரசை கவிழ்த்து, அணுசக்தி ஒப்பந்தத்தை சீர்குலைப்பதோடு, மாயாவதியை பிரதமராக்கலாம் என, இடதுசாரி தலைவர்கள் கண்ட கனவும், மேற்கொண்ட வியூகமும் பெரும் தோல்வியை தழுவியுள்ளது. மீதமுள்ள ஆட்சிக் காலத்தை, இடதுசாரிகளின் நிர்பந்தம் இன்றி, பிரதமர் மன்மோகன் சிங் அரசு முடிக்கும்.


தீவிரமாக செயல்பட்டனர் : கடந்த 2004ம் ஆண்டு முதல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, இடதுசாரிகள் சமீபத்தில் வாபஸ் பெற்றனர். அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதையடுத்து, பார்லிமென்டை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, மன்மோகனை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, "அரசை எப்படியும் காப்பாற்றுவது' என, காங்கிரஸ் தலை மையிலான அணியும், "எப்படியும் வீழ்த்தி விடுவது' என, இடதுசாரி தலைமையிலான அணியினரும் தீவிரமாக செயல்பட்டனர்.


எம்.பி.,க்கள் 25 கோடி மற்றும் 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக புகார்கள் எழுந்தன.இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் லோக்சபா கூடியது. அப்போது, அரசுக்கு நம்பிக்கை கோரும் ஒருவரி தீர்மானத்தை தாக்கல் செய்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். "நாட்டின் நலன் கருதியே அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது' என்றார். இதைத் தொடர்ந்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உட்பட பல கட்சித் தலைவர்கள் பேசினர்.இரண்டாவது நாளாக நேற்று தலைவர்களின் விவாதம் தொடர்ந்தது. விவாதம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ., கட்சியை சேர்ந்த எம்.பி., அசோக் அகர்வால், அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க தனக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் தெரிவித்தார். சபை வரலாற்றில் இல்லாத வகையில், கைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களை வெளியே எடுத்து சபையில் காண்பித்தார்.


இப்பிரச்னையால் மதியத்திற்கு மேல் சபையில் அமளி ஏற்பட்டு, பின் ஒரு வழியாக 6.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, விவாதத்தை முடித்து வைக்க பிரதமர் அழைக்கப் பட்டார். அப்போதும் கூச்சல், குழப்பம் இருந்ததால், பிரதமர் தன் உரையை சில நிமிடங்களில் முடித்து விட்டார்.அவர் தாக்கல் செய்த ஆறு பக்க பதிலுரையில், "என்னை தங்களின் அடிமைகளாக நடத்த இடதுசாரி கட்சியினர் திட்டமிட்டனர். ஒவ்வொரு கட்ட சமரச பேச்சுவார்த்தையின் போது, தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்த விரும்பினர். அது ஏற்றுக் கொள்ள முடியாதது' என்று தெரிவித்திருந்தார்.


பின்னர், பல நாட்களாக நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நம்பிக்கை ஓட்டெடுப்பு துவங்கியது. எதிர்க்கட்சியினர் டிவிஷன் ஓட்டு நடத்த வேண்டும் என, வலியுறுத் தினாலும், எலக்ட்ரானிக் மிஷின் மூலம் முதலில் ஓட்டெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், எலக்ட்ரானிக் மிஷினில், 50க்கும் மேற்பட்ட ஓட்டுகள் பதிவாகவில்லை. மொத்த ஓட்டுகள் 487 என்றும், அரசுக்கு ஆதரவு 253 என்றும், எதிர்ப்பு 232 என்றும், ஓட்டுப் போடாதவர்கள் இரண்டு பேர் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, எம்.பி.,க்களிடம் சீட்டுக்கள் கொடுக்கப்பட்டு டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அரசுக்கு ஆதரவாக 275 எம்.பி.,க்களும், எதிராக 256 எம்.பி.,க்களும் ஓட்டளித்தனர்.


10 எம்.பி.,க்கள் ஓட்டுப் போடவில்லை. சபையில் நேற்று 541 எம்.பி.,க்கள் ஆஜராகியிருந்தனர். இவர்களில் 271 பேர் ஆதரவு அரசுக்கு தேவை. இருந்தாலும், அதை விட கூடுதலாக நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.மொத்தத்தில் எதிரணியின் ஓட்டுகளை விட கூடுதலாக 19 ஓட்டுகள் பெற்று அரசு வெற்றி பெற்றது. நேற்றைய ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம், கடந்த 30 ஆண்டுகளில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், வெற்றி பெற்ற ஏழாவது பிரதமர் என்ற பெருமையை மன்மோகன் பெற்றுள்ளார்.ஓட்டெடுப்பின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே, சபையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.


நேற்று நடந்த இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட பா.ஜ., எம்.பி.,க்கள் நான்கு பேருக்கு, பார்லிமென்டின் லாபியில் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது.நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி தலைவர் அமர்சிங், "என் அரசியல் வாழ்வில் இன்று தான் மகிழ்ச்சியான நாள்' என்றார். மத்திய அரசு பெற்ற வெற்றி, "ஊழல் மூலமாகவும், மோசடி வேலைகள் மூலமாகவும் பெற்ற வெற்றி' என, பா.ஜ., கூறியுள்ளது.அரசு வெற்றி பெற்றதை தொழில்துறையும் வரவேற்றுள்ளது.


கட்சி மாறிய எம்.பி.,க்கள் யார்?: பா.ஜ.,வைச் சேர்ந்த நான்கு பேர், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், பிஜு ஜனதா தளம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தலா ஒருவர் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.ஐ.மு., கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டு போட்ட பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி., ஹரிஹர் ஸ்வெயின் அக்கட்சியிலிரு ந்து நீக்கப்பட்டுள்ளார் என, அக்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

Monday, July 21, 2008

பா.ஜ.க.-காங்கிரசை மிரட்டும் 3-வது அணி

மத்திய அரசை காப்பாற்றி எப்படியாவது ஆட்சியைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் போரா டிக்கொண்டிருக்கிறது.

எப்படியாவது, ஏதாவது செய்து காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட வேண்டும் என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக் கொண்டு காரியத்தில் குதித்துள்ளது.

காங்கிரஸ், பா.ஜ.க. இருகட்சித்தலைவர்களின் விïகத்திற்கிடையே தேசிய அரசியலில் திடீர் திருப்பமாக 3-வது அணி எனப்படும் மாற்று அணி புதிய சக்தியாக வலுப்பெற்றுள்ளது. இப்படி ஒரு அபார திடீர் வளர்ச்சியை 3-வது அணி பெறும் என்று அரசியல் நிபுணர்களே எதிர் பார்க்கவில்லை.

ஐக்கிய தேசிய முற் போக்கு கூட்டணி எனப் பெயரிடப்பட்ட 3-வது அணி யில் அ.தி.மு.க., சமாஜ் வாடி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் உள்பட 8 கட்சிகள் இருந்தன. முதலில் இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. சமீபத்தில் சமாஜ்வாடி கட்சி `பல்டி' அடித்து காங்கிரஸ் பக்கம் போய் விட்டது.

இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினையில் தங்களை காங்கிரசார் அவ மானப்படுத்தி விட்டதாக கருதிய கம்ïனிஸ்டு தலை வர்கள் மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். சிதறிக்கிடந்த மாநில கட்சிகளை ஒருங் கிணைத்தது அவர்கள்தான். `தலித்' இன மக்களின் தனித் தலைவராக உருவெடுத்து வரும் மாயாவதியை சந்தித்துப் பேசினார்கள்.

அதன் பேரில் 3-வது அணி தலைவர்கள் சந்திர பாபு நாயுடு, சவுதாலா ஆகியோருடன் மாயா வதி பேசினார். மெகா கூட்டணிக்கு திட்டமிடப் பட்டது. இதைத் தொடர்ந்து தேவேகவுடா, சந்திரசேகர் ராவ், அஜீத்சிங் உள்பட பல தலைவர்களுடன் இடது சாரி கட்சித் தலைவர்களும், மாயாவதியும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதற்கு பலன் கிடைத்தது.

காங்கிரஸ், பா.ஜ.க. பக் கம் போகாமல் நாமே சொந்த காலில் நிற்க லாம் என்று மாநில கட்சி களிடம் நம்பிக்கை விதை தூவப்பட்டது. மாயாவதி யுடன் கூட்டணி வைத்துக் கொள்வதன் மூலம் `தலித்' ஓட்டுக்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் பல கட்சிகள் மெகா கூட்டணிக்கு சம் மதித்தன. தற்போது 3-வது அணியில் பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத், இந்திய தேசிய லோக் தளம், ஜார்க்கண்ட் விகாஸ் கட்சி, ராஷ்டீரிய லோக் தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கான, ராஷ் டீரிய சமிதி உள்பட 10க் கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

இந்த மெகா கூட்டணிக்கு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு உள்ளது. இதன் மூலம் அடுத்தத் தேர்தலில் 3-து அணியை ஒரு மாபெ ரும் சக்தியாக மாற்ற முயற்சி கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று டெல்லியில் 3-வது அணி தலைவர்கள்-இடது சாரி கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.

ஓட்டெடுப்பு நாளை நடந்து முடிந்ததும், நாளை மறுநாள் (புதன்கிழமை) 3-வது அணி தலைவர்கள் மீண்டும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.

3-வது அணியில் தற் போது அதிகாரப்பூர்வமாக தலைவர் என்று யாரும் இல்லை. உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயா வதியை தலைவராக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் மாயாவதி தேசிய அரசியலில் விசுவரூபம் எடுக்கத் தொடங்கி உள் ளார்.

மாயாவதியை அடுத்த பிரதமர் ஆக்குவோம் என்ற கோஷத்தை இடது சாரிகள் முதலில் எழுப்பினார்கள். இதை 3-வது அணியில் உள்ள மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது பா.ஜ.க.-காங்கிரசுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மாயாவதியுடன் கூட்டணி சேர்ந்தால், தங்கள் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ் ஆகியோர் நினைக்கிறார்கள். உத்தரபிரதேச அரசியலில் எதிரும்-புதிருமாக இருந்த மாயாவதி - அஜீத்சிங் இருவரும் 3-வது அணி மூலம் சேர்ந்து இருப்பதும் முக்கியமானதாக கருதப்படு கிறது.

இவர்கள் கை கோர்த்து இருப்பதால் உத்தரபிரதேச முஸ்லிம்-தலித்-உயர்சாதி ஓட்டுக்கள் பெருவாரியாக 3-வது அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜீத்சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம் கட்சிக்கு வளர்ச்சி கிடைக்கும் என் கிறார்கள்.

3-வது அணி எனும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நாடெங்கும் மாயா வதி கால் பதிக்கத் தொடங்கி இருப்பது காங்கிரசை விட பா.ஜ.க. தலைவர்களுக்கு தான் கலக்கத்தை கொடுத் துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் பட்சத்தில் அத்வானிதான் அடுத்த பிரதமர் என்ற எண்ணம் நாடெங்கும் பரவி இருந்தது. அத்வானிக்கு போட்டியாக களத்தில் யாரும் இல்லை என்ற நிலை இருந்தது.

தற்போது 3-வது அணி வலுவாகி மாயாவதி முன் நிறுத்தப்பட்டுள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்பட லாம் என்று பா.ஜ.க. பயப் படுகிறது. "உண்மையில் பிரதமர் வேட்பாளர் என்ற எங்கள் கோஷத்துக்கு பாதிப்பு வரலாம்'' என்று மூத்த பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறினார்.

மாயாவதியை முன் நிறுத்தி சந்திரபாபு நாயுடு, தேவேகவுடா, அஜீத்சிங், சந்திரசேகரராவ், சவுதாலா, பிருந்தாவன் கோஸ்வாமி போன்றவர்களை துணைக்கு வைத்துக் கொண்டால் இந்தியாவில் புதிய புரட்சியை உண்டாக்கி விட முடியும் என்று கம்ïனிஸ்டு தலைவர்கள் பிரகாஷ் கரத்தும், ஏ.பி.பரதனும் உறுதி யாக நம்புகிறார்கள். மாநில கட்சிகள் ஒத்துழைப்புடன் மாயாவதி சூறாவளி சுற்றுப்பயணத்தில் சுமார் 12 சதவீத தலித் ஓட்டுக்களை 3-வது அணி பக்கம் திருப்பி விட முடியும் என்றும் அவர் கள் கருதுகிறார்கள்.

மாயாவதிக்கு உத்தரபிர தேசம் தவிர மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார் மாநில `தலித்'களிடம் ஓரளவு செல் வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கு மூலம் வட இந்தியாவில் கணிசமான தொகுதிகளில் அவர் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். காங்கிரஸ் தலைவர்களும் இந்த பயத் தில் தான் உள்ளனர்.

தென் இந்தியாவில் தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் ஆகியோருடன் சேருவதன் மூலம் மாயாவதி அலை தெற்கிலும் வீச வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இடது சாரிகள்-மாயாவதி அணி புதிய எழுச்சியை கொடுக்கும் என்று எதிர் பார்க்கிறார்கள்.

இடது சாரிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு வைத்துள்ள அர சியல் குறி மாயாவதிக்கு தனிப்பட்ட வெற்றியை தேடி கொடுக்கும்.

பாராளுமன்றத்தில் மன்மோகன்சிங் நம்பிக்கை தீர்மானம்; அத்வானி காரசார விவாதம்

அமெரிக்காவுட னான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரிகள் ஆத ரவை வாபஸ் பெற்றதால் மத்திய அரசு மெஜாரிட்டியை இழந்தது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு நிரூ பிக்க வேண்டும் என்று பா.ஜ.க., இடது சாரி கள் வலியுறுத்தின. இதை ஏற்று நாளை (செவ்வாய்க்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வந்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவை திரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆதரவாக வாக் களிக்க ரூ.25 கோடி வரை "குதிரை பேரம்'' நடந்ததாக தகவல்கள் வெளியானது. இது தவிர தேசிய அரசியலில் கட்சிகளின் நிலைப்பாட் டிலும் மாறுதல்கள் ஏற்பட்டது.

3-வது அணியில் இருந்து விலகிய முலாயம்சிங் யாத வின் சமாஜ்வாடி கட்சி, காங்கிரசுடன் "கை'' கோர்த் தது. இதையடுத்து 3-வது அணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சந்திர சேகர்ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தேவேகவு டாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சேர்ந்தன.

இடது சாரிகளும் ஆதரவு கரம் நீட்டி இருப்பதால் 3-வது அணி தேசிய அள வில் வலுவானதாக மாறி உள்ளது. இந்த மாற்றம் காரணமாக ஆளும் கூட்ட ணிக்கு ஆதரவாக 260 எம்.பி.க்களும், எதிராக 268 எம்.பி.க்களும் இருப்பது உறுதியாகி உள்ளது.

சிறிய கட்சிகள், சுயேட் சைகள் தெரிவித்து வரும் கருத்துக்களின் அடிப்படை யில் கணக்கிட்டால் மத்திய அரசுக்கு 268 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக 270 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே மத்திய அரசு வெற்றி பெறுமா, தோல்வி அடையுமா என்பது கணிக்க முடியாத படி உள்ளது.

தொடர்ந்து சிக்கல் நீடிப் பதால் சில எம்.பி.க்களை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கச் செய்யும் கடைசி ஆயுதத்தை காங்கிரஸ் தலைவர்கள் கையில் எடுத்துள்ளனர். 10 முதல் 15 எம்.பி.க்களை வரவிடாமல் செய்ய முயற்சி கள் நடக்கிறது. பா.ஜ.க., சிவசேனாவில் உள்ள எம்.பி.க்கள் பணத்துக்காக கடைசி நிமிடத்தில் விலை போய் விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

பரபரப்பான இத்தகைய சூழ்நிலையில் பாராளு மன்றத்தின் 2 நாள்சிறப் புக் கூட்டம் இன்று பகல் 11 மணிக்கு தொடங்கியது. எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இது முக்கியமான கூட்டம். இதில் எல்லா எம்.பி.க்களும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜி கூறினார்.

கூட்டம் தொடங்கியதும் 7 புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

அதன் பிறகு கடந்த கூட்டத் தொடருக்கு பின்னர் மறைந்த 5 முன்னாள் எம்.பி.க்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வழக்க மாக இத்தகைய தீர்மானத் துக்கு பிறகு கேள்வி நேரம் நடைபெறும். ஆனால் இன்று கேள்வி நேரம் எதுவும் இல்லை.

சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கேட்டுக் கொண்ட படி நேரடியாக நம்பிக்கைத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. "அமைச்சரவையின் மீது இந்த சபை நம்பிக்கை வைத் துள்ளது'' என்ற ஒற்றை வரி நம்பிக்கைத்தீர்மானத்தை சரியாக 11.22 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங் தாக் கல் செய்தார்.

இந்த தீர்மானத்தின் மீது மொத்தம் 16 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்று கூறிய சபாநாயகர் சோம்நாத்சட்டர்ஜி ஒவ் வொரு கட்சிக்கும் பேச அளிக்கப்படும் வாய்ப்புகள் குறித்து கூறினார்.

விவாதத்தை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து முதலில் பேசினார். ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு கடந்த 4 ஆண்டு களில் செய்துள்ள சாத னைகளை அவர்பட்டியலிட் டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியா வுக்கு ஏன் தேவை என்பதை பற்றியும், அவர் விளக்கம் அளித்தார்.

மன்மோகன்சிங் பேச்சு விவரம் வருமாறு:-

நான் பதவி ஏற்ற நாளில் இருந்து நாட்டு நலன் கருதியே எல்லா பணிகளையும் செய்து வருகிறேன். எனது அரசு எடுத்த ஒவ்வொரு முடிவும் நாட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே எடுக்கப் பட்டது.

4 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு, பண வீக்கம், விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை சமா ளிக்க அரசு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக இந்த சபை கூடி உள்ளது. கம்ïனிஸ்டு தலைவர்கள் ஜோதிபாசு, ஹர்கிஷன்சிங் சுர்ஜித் ஆகியோரால் இந்த கூட்டணி அரசு செதுக்கப்பட்டது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி கழகத்திடம் ஒப்புதல் பெற்றாலும், அமெரிக் காவை அணுகும் முன்பு பாராளுமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று இடது சாரிகள் உள்பட எல்லா கட்சிகளிடமும் உறுதி அளிக்கப்பட்டது.

எனது உறுதி மொழியை யாரும் ஏற்கவில்லை. நான் ஜப்பான் மாநாட்டுக்கு சென் றிருந்த போது இடது சாரி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஜப்பானில் இருந்து திரும்பி வந்த உடனே நான் ஜனாதிபதியை சந்தித்துப் பேசினேன். பாராளு மன்றத் தில் விரைவில் மெஜாரிட்டியை நிரூபிப்பதாக உறுதி கூறினேன்.

மத்திய அரசு எடுத்துள்ள ஒவ்வொரு நடவடிக்கை மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே எந்த இடைïறு பற்றியும் கவலைப்படாமல் உறுதியுடன் முன்னெடுத்து செல்வேன்.

இந்த அரசு எத்தகைய நடவடிக்கைககளில் ஈடு பட்டாலும் அது சுதந்திர போராட்டத்தை போற் றும் வகையிலும், 21-ம் நூற் றாண்டு சவால்களை சமா ளிக்க ராஜீவ் கண்ட கனவு களை நிறைவேற்றும் வகை யில் இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங்பேசினார்.

இதையடுத்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அத்வானியை பேசும்படி சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அழைப்பு விடுத்தார். அத்வானி பேச்சில் அனல் பறந்தது. சுமார் 1 மணி நேரம் மேல் அவர் ஆவேச மாகப்பேசினார். அவர் கூறி யதாவது:-

அணுசக்தி ஒப்பந்தத்தை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சமபங்குதாரராக இல்லை. இதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்த ஒப்பந்தம் தனிப்பட்ட 2 நாடுகளுக்கு இடையில் உள்ளது போல இல்லை. தனிப்பட்ட 2 பேருக்கு இடை யில் உள்ளது போல இருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. ஓட்டுக்காக உள்நாட்டு பாது காப்பு விஷயத்தில் அரசு அலட்சியமாகவே இருந்தது.

இந்தியாவில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ. பின்புலமாக இருப்பதை நாங்கள் பல தடவை சுட்டிக் காட்டினோம். ஆனால் அரசு கொஞ்சமும் செயல் படவில்லை. தற்போது இந்த அரசு தீவிர சிகிச்சைப் பிரி வில் கிடக்கும் நோயாளி போல கிடக்கிறது.

இந்த அரசு தப்பி பிழைக் குமா, பிழைக்காதா என்பதே பெரிய கேள்விக் குறியாக உள்ளது. இந்த அரசை நடத்தும் பிரதமருக்கு ஓட்டு உரிமை இல்லை. இந்திய வரலாற்றில் இத்தகைய நிலை ஏற்பட்டு இருப்பது இது தான் முதல் தடவை.

கூட்டணி தர்மத்தை பிரதமரும், சோனியாவும் கடைப்பிடிக்கவில்லை. ஜன நாயக அமைப்புகள் அனைத் தும் தவறாக பயன்படுத்தப்பட்டன.

தற்போது இந்த அரசு மெஜாரிட்யை இழந்து விட்டது. இந்த அரசை தோற்கடிக்க விரும்புகிறோம். ஆனால் இதன் மூலம் நிலையற்ற தன்மை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

இவ்வாறு அத்வானி பேசினார்.

அத்வானி பேசிய போது பல தடவை காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரி வித்து கூச்சலிட்டனர். சபாநாயகர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்து அவர்களை உட்கார வைத் தார்.

அத்வானி தன் பேச்சின் போது 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையை மன்மோகன்சிங் எதிர்த்ததாக குறிப்பிட்டார். அதற்கு பிதமர் மன்மோகன்சிங் எழுந்து மறுப்பு தெரிவித்தார்.

அத்வானி பேசி முடித்த தும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு உறுப்பினர் முகம்மது சலீம் எழுந்து பேசினார். இன்றைய முதல் நாள் விவாதம் இரவு 10 மணி வரை நடக்கும் என்று தெரிகிறது.

நாளை (செவ்வாய்க் கிழமை)யும் அரசியல் கட் சித் தலைவர்கள் விவா தத்தில் பங்கேற்று பேசு வார்கள். முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் பதில் அளித்து பேசுவார். நாளை பிற்பகல் நம்பிக்கைத் தீர் மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறும்.

எம்.பி.க்கள் தங்கள் இருக்கை முன் உள்ள பொத்தானை அழுத்தி வாக்கை பதிவு செய்வார்கள். அதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் சீட்டு மூலம் வாக்கெடுப்பு தொடரும். சில மணி நேரங்களுக்குள் ஓட்டெடுப்பு முடிவு தெரிந்து விடும்.

மத்திய அரசு தலைவிதி நாளை மாலை தெரிந்து விடும்.