எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, August 27, 2008

ப்ரஜா ராஜ்யம் - சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம்





அன்னை தெரசா பிறந்தநாளான நேற்று (26)சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம்

ஆந்திர அரசியலில் பெரிதா எதிர்ப்பார்க்கப்பட்ட அரசியல் புயல் திருப்பதியில் மையம் கொண்டு பெருவெள்ளம் எனும் ஆந்திர மக்கள் கலந்துகொண்ட" ப்ரஜா ராஜியத்தின் " (மக்கள் ஆட்சி) துவக்கப்பட்டு இந்திய அரசியல்வாதிகளையும் இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டது.

10 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் தானாக, யாருடைய கட்டாயமும் இல்லாமல் கலந்துகொண்ட ஒரே கட்சி கூட்டம் எதுவென்றால் அது இதுவாகத்தான் இருக்கும்.

ஏன் தேசியக்கட்சி மாநாடு நடத்தினால் கூட இது போல் ஒரு மக்கள் வெள்ளத்தை பார்க்கமுடியாது.

திராவிடக்கட்சிகள் மாநாடு நடத்தினால் கட்டயாமாக ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் குறைந்தது 1000 பேர்களையாவது கூட்டிச்செல்லவேண்டும் என்ற வாய்மொழி உத்தரவுவந்தாலும், பணம் கொடுத்தாலும் 200 லிருந்து 300 பேர்வரைத்தான் பிடித்துகொண்டுபோய் நிறுத்தி மாவட்டதலைவர்களிடத்தில் நான் 1000 பேரை கூட்டிவந்திருக்கிறேன் என்று கூறி நல்லபேர் வாங்கநினைப்பார்கள்.கடைசியில் பார்த்தால் மாநாடு பந்தல் கூட நிறைந்திருக்காது.

வீடியோ கிராஃபரை கூட்டிவந்து 4லிருந்து 5 லட்சத்திற்கும் மேலாக தொண்டர்கள் திரண்டார்கள் என்று கட்டுக்கத்தையை விடுவார்கள் செயற்கையான மாயையயை உருவாக்கிகாட்டுவார்கள்.ஆனால் இது அதைப்போல் அல்லாமல் மக்களின் உணர்வுகளாகத்தான் தோன்றின.

அடுத்த பாராளுமன்றத்தேர்திலிலேயே சில அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்..

நல்ல அதிர்வுகளைத்தந்தால் பயனாக இருக்கும்.

மாற்றம் ஒன்றுதானே மாற்றமேயில்லாதது!