எண்ணங்களின் பிரதிபலிப்பு

Tuesday, August 13, 2013

ஜெயலலிதா அரசினால் தமிழகத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநில அரசு ஒத்துழைக்காத காரணத்தால் சென்னையில் மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இது தவிர இது தவிர பல்லாயிரம் கோடி மதிப்புள்ள 7 நெடுஞ்சாலைத் திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் தாமதமாவதால் தமிழகத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய-மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக செயல்பட்டால் தான் நாடு முன்னேற முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக காலம்காலமாக நிலவி வரும் தமிழக அரசியல் மோதல் காரணமாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே சரியான ஒத்துழைப்பு இல்லாமல் இருப்பதால் மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களிலும் எதிரொலிப்பது தான் மிகவும் கவலை அளிக்கிறது.

சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்காகவும், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னை மதுரவாயல் முதல் துறைமுகம் வரை 19 கி.மீ தொலைவுக்கு பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது.

அத்திட்டத்திற்கு கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்றிருந்தால் இந்நேரம் பணிகள் முடிவடைந்து அப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியிருக்கும். ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு உள்ளூர் அரசியல் மோதல்களை மனதில் வைத்துக் கொண்டு இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. 10% பணிகள் கூட முடிவடையாத நிலையில் இத்திட்டம் தடைபட்டதால் இதுவரை ரூ.872 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டில் சுமார் பாதியளவாகும்.

இந்த அளவு இழப்பீட்டை செலுத்துவது சாத்தியமல்ல என்பதால் இத்திட்டத்தை கைவிடலாமா? என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இத்திட்டம் கைவிடப்படும் ஆபத்து இருப்பதால் சென்னை துறைமுகத்தில் ரூ.3686 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள மெகா சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் திட்டமும், திருப்பெரும்புதூர் அருகில் ரூ. 415 கோடியில் உலர் துறைமுகம் அமைக்கும் திட்டமும் தடைபட்டிருக்கின்றன. மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் பாலத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த இரு திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதால், தமிழக அரசின் தடை காரணமாக மொத்தம் சுமார் ரூ. 6000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் கைவிடப்படக்கூடும்.

இத்திட்டங்கள் கைவிடப்பட்டால், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சென்னை துறைமுகத்தின் விரிவாக்கமும், தமிழகத்திலிருந்து செய்யப்படும் ஏற்றுமதிகளும் பாதிக்கப்படும். இது தமிழகத்தின் வளர்ச்சியிலும், வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும்பாலத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் அதற்கு தடை விதித்திருப்பதாக தமிழக அரசு கூறுகிறது.

தமிழக அரசு, சாதாரண பாலம் அமைக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுவிடும் என்று கூறுவது வியப்பாக உள்ளது.

இவைமட்டுமின்றி,

எண்ணூர்- மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம்,
திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம்,
திருச்சி-கரூர் சாலைத் திட்டம்,

திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலைத் திட்டம் உள்ளிட்ட மேலும் 7 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் தமிழக அரசின் ஒப்புதல் கிடைக்காததால் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இத்திட்டங்கள் முடக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு வகை செய்ய வேண்டியது தான் மாநில அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருக்கக் கூடாது. எனவே, மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் அனைத்துக்கும் போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை அகற்றி, இவற்றை விரைந்து செயல்படுத்த மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்.

Monday, August 12, 2013

அத்வானி வருகையின் போது பைப் வெடிகுண்டுவைத்த நபர் கைது

நேற்றைய சன் செய்திகள் நேர்காணலில் நம்ம அக்கா தமிழிசை சௌந்தரராஜன் நமது மறதியை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உலகின் அமைதி உருவம்(!) அத்வானி ரதயாத்திரை சென்ற பாதையில் வெடிகுண்டு வைத்தது முஸ்லிம்கள் என முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்தார்கள். ஆனால் வெடிகுண்டு வைத்த இந்துத்துவ தீவிரவாதிகளான சிவசங்கர், தீனதயாளன், மற்றும் குபேரனை விட்டு விட்டு மீண்டும் முஸ்லிம்கள் மீது பழியை போட்டு
கொலை வழக்கை மத மோதலாக்கி சமுதாயத்தை பிளவுபடுத்தி ஊட்டு பிச்சை எடுக்க என்னே ஒரு தந்திரம்?
மூன்று முஸ்லிம்களை பற்று சந்தேகப் பட்டு அவர்களை பற்றி துப்பு கொடுப்பவர்களு பரிசு என காவல்துறை அறிவித்தது...இவரோ குற்றவாளியாகவே அறிவித்துவிட்டார்!... அக்கா உங்கள் பேச்சு கேட்டு ஆட்டம் போட இது ஒன்றும் குஜராத் அல்ல!

அத்வானி பாதையில் குண்டு வைத்தது யார்?... உண்மை ஆதாரம் கீழே!
''ஹைதராபாத் குண்டுவெடிப்பை இல்லாத இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஒரு மோசடி வழக்கிற்காக திருச்சியை சேர்ந்த குபேரனை விசாரித்த போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆம்! கடந்த மாதம் மும்பையிலிருந்து புதுவையை நோக்கி வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட வெடிக்குண்டு தொடர்பு பற்றியும் அதனோடு தொடர்புடைய நபர்களை பற்றியும் அவன் வெளியிட்ட வாக்குமூலம் தான் அது. உடனே இது பற்றிய தகவலை வெடிக்குண்டு வழக்கை விசாரிக்கும் புதுவை மாநில சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தந்தனர். புதுவை போலீசாரும் இதுபற்றிய தீவிர விசாரணையில் இறங்கினர். புதுவையை சேர்ந்த அந்த நபர்களுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) குபேரனை விசாரிக்க திருவண்ணாமலை ஆரணியை அடுத்த மட்டதாரியை சேர்ந்த தீனதயாளன் மற்றும் மட்டாசிமங்கலம் துறையூர் சிவசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது. இதுதொடர்பாக புதுவை சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். விசாரணையில் ரயிலில் வெடிக்குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளான் சிவசங்கர். அவனிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவன் அளித்த தகவலின் அடிப்படையில் அவன் வீட்டிலிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

‘குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவும’ விசாரணையில் கூறி இருக்கிறான் இந்த சிவசங்கர். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்றபோது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனி மனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும்? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா? போன்ற விவரங்களை சேகரிக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.

இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீனதயாளனை விசாரித்தபோது மதுரையில் பா.ஜ.க அத்வானியின் ரதயாத்திரை வழியில் வைக்கப்பட்ட பைப் வெடிக்குண்டுடன் தொடர்புடையவன் என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்தும் இதன் பின்ணணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக மதுரை சம்பவத்தை வைத்து பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சி திட்டம் வெளிப்பட்ட நிலையில், அதுபோன்ற இந்த சம்பவமும் காவி பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர், தீனதயாளன் மற்றும் குபேரன் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும். மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அவற்றின் வெளிப்பாடு, அவற்றின் பத்திரிக்கை தர்மம் அனைத்தும் கேள்விக்குறியாத்தான் இருந்திருக்கும். மேலும் கைது செய்யப்பட்டவரின் முகவரி இல்லாத அமைப்பு என தலைப்புச் செய்தியாக, விவாத பொருளாக தங்களின் முஸ்லிம் விரோத போக்கை தீர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை!

Wednesday, August 7, 2013

வீராணம் ஏரி நிரம்புமா ?

காட்டுமன்னார்கோவில்
வறண்டு போய் கிடந்த வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
வறண்டு போன வீராணம்
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரிக்கு சாதாரணகாலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், செந்தூறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் செங்கால், கருவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவதுண்டு.
இதன் மூலமாக ஒரு லட்சம் ஏக்கர் வரையில் நேரடியாகவும், மறைமுகமாவும் பசனம் பெறுவதுடன், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக இங்கிருந்து தண்ணீர் அனுப்பப்படும். கடந்த 5 மாத காலமாக வீராணம் ஏரி தண்ணீர் இன்றி வறண்டு போய் காட்சி அளித்தது.
10 நாட்கள் வரையில்...
இந்த நிலையில் கல்லணையில் இருந்து கீழணைக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் கன அடி வரையில் தண்ணீர் வந்ததை அடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் வடவாறு வழியாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை வீரணாம் ஏரிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
இந்த நீர் நேற்று மதியம் 1.30 மணி அளவில் வீராணம் ஏரியை வந்தடைந்தது. மாலை நிலவரப்படி ஏரிக்கு விநாடிக்கு 2 ஆயிரத்து 33 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதை அளவிற்கு நீர் வரத்து இருந்தால் ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டுவதற்கு 10 நாட்கள் வரையில் ஆகும்.
5 ஆண்டுகளுக்கு பின்
மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின் ஆகஸ்ட்டு மாதத்தில் முதன் முறையாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது இதுவே முதல் முறையாகும். ஏனைய ஆண்டுகளில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான் ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏரிக்கு தண்ணீர் வருவது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்று வருகிறார்கள். அதோடு சமபா சாகுபடி செய்வதற்கு இந்த ஆண்டில் தேவை£யன அளவிற்கு தண்ணீர் கிடைக்கும் என்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
வீராணத்திற்கு கூடுதலாக தண்ணீர் கொண்டு செல்ல வசதி இல்லை வீணாக கடலில் கலக்கும் ஒருலட்சம் கன அடி நீர்
வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வரும் வடவாற்றில் 2 ஆயிரத்து 300 கன அடி நீர் வரையிலேயே தாக்கு பிடிக்கும். எனவே இதற்கு மேலாக தண்ணீர் அனுப்ப இயலாது. எனவே தற்போது 2 ஆயிரம் கன அடி வரையில் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டும், முக்கிய நீர் ஆதாரமாக வீராணத்திற்கு தண்ணீரை கொண்டு செல்ல போதிய வசதிகள் ஏதும் இல்லை.
நீரின் அளவு குறைய வாய்ப்பு
இதன் காரணமாக தற்போது ஒருலட்சம் கன அடி வரையில் கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது. மேலும் கர்நாடகத்தில் மழைக்குறைவால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்து இருப்பதுடன், அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரின் அளவையும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் கீழணைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்து போகும் நிலை ஏற்படும்.
வீணாகும் நீர்
இதனால் நீர்ஆதாரமாக உள்ள வீராணம் ஏரி முழுவதுமாக நிரம்புமா என்பது சந்தேகமே. இத்தகைய சூழ்நிலையில் ஏரிக்கு தேவையான தண்ணீரை கொண்டு செல்ல போதிய அளவிற்கு வசதி இல்லாத காரணத்தினால் தற்போது வீணாக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு வங்காள விரிகுடா கடலில் கலந்து வருகிறது.