எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, December 9, 2012

"90 சதவித இந்தியர்கள் முட்டாள்கள்' : நீதிபதி கட்ஜு விமர்சனம்


நாட்டின், 90 சதவீத இந்தியர்கள், முட்டாள்கள். மதத்தின் பெயரால் அவர்களை, சமூக விரோத சக்திகள் எளிதில் ஏமாற்றி விடுகின்றன,"" என, பிரஸ் கவுன்சில் தலைவர், நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த, கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்ற, நீதிபதி கட்ஜு, 66, கூறியதாவது:

நாட்டில் உள்ள மக்களில், 90 சதவீதம் பேர் முட்டாள்கள் என்று, உறுதியாக சொல்வேன்; அவர்கள் தலையில் மூளை கிடையாது; அவர்களை எளிதாக ஏமாற்றி விடலாம்.வெறும், 2,000 ரூபாய் இருந்தால் போதும், டில்லியில் பெரிய மதக்கலவரத்தை ஏற்படுத்திவிடலாம்; தவறாக சைகை காண்பிப்பதன் மூலமும், பிற மதத்தவரின் வழிபாட்டு இடங்களை, அவமரியாதை செய்வதன் மூலமும், எளிதில் மத கலவரத்தை ஏற்படுத்தி விடலாம்.

அந்தத் தகவல் தெரிந்ததும், முட்டாள் ஜனங்கள், ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வர். இந்தச் செயலுக்கு பின்னால், சில சமூக விரோத சக்திகள் இருக்கிறது என்பதை, அவர் கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

பின்தங்கி விட்டோம்:

நாட்டில், 1857ம் ஆண்டிற்கு முன், மதக் கலவரமே கிடையாது; மதத்தின் பெயரால், சண்டையிட்டுக் கொண்டதே கிடையாது. ஆனால், இப்போது நிலைமையை யோசித்து பாருங்கள். 80 சதவீத இந்துக்கள், மத உணர்வுடன் உள்ளனர்; அதுபோலவே, 80 சதவீத முஸ்லிம்களும் மத உணர்வுடன் உள்ளனர்.இதனால், நாம், 150 ஆண்டுகள் முன்னேறிச் செல்வதற்குப் பதிலாக, 150 ஆண்டுகள் பின்தங்கி விட்டோம். இதற்கு காரணம், ஆங்கிலேயர்கள் தான். அவர்கள் தான், மக்கள் மனதில் விஷத்தை பாய்ச்சி விட்டனர். சிப்பாய் கலகம் நடந்த, 1857ம் ஆண்டில், லண்டனில் இருந்த சில சக்திகள், "இந்தியர்களை இப்படியே விட்டால் சரிப்பட்டு வர மாட்டார்கள்' என கருதி, இந்தியர்களை பிரித்தாழ, மதம் என்ற வார்த்தையை பயன்படுத்தத் துவங்கின. அதன் மூலம், இந்துக்களையும், முஸ்லிம்களையும் அடித்துக் கொள்ளச் செய்தனர்.

இந்தி மொழி, இந்துக்களுக்கும், உருது மொழி, இஸ்லாமியருக்கும் என, தவறாக பிரசாரம் செய்யப்பட்டது; அதையும், உண்மை என நம்பி, ஏராளமானோர், இன்னும் மோதிக் கொள்கின்றனர்.

ஆனால், நம் முன்னோர்களில் ஏராளமானோர், உருது மொழி படித்துள்ளனர்; இங்கு, மக்களை முட்டாள் ஆக்குவது எளிது; நிறைய பேர் முட்டாள்களாக இருப்பதால், அவர்கள் பிறரை எளிதாக முட்டாள் ஆக்கிவிடுகின்றனர்.இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இனிமேலாவது உண்மையை உணர்ந்து, முட்டாள்களாக இருக்க வேண்டாம் என்பதற்காகத் தான்.இவ்வாறு, கட்ஜு பேசினார்.

வித்தியாசமானவர்:

மார்க்கண்டேய கட்ஜு, 2004ல், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்; அதற்கு பின், 2006ல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு, அக்., முதல், "பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா'வின் தலைவர் பொறுப்பில் உள்ளார். தனக்கு நியாயம் என தெரிந்ததை, அப்படியே சொல்வதிலும், நியாயமானதை செய்வதிலும், கட்ஜு வித்தியாசமானவராக திகழ்கிறார்.

Wednesday, December 5, 2012

எப்.டி.ஐ. வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி!


சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக லோக்சபாவில் பாஜக கொண்டு வந்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 253 வாக்குகளும் பதிவாயின. இதையடுத்து மத்திய அரசு தப்பியது.
இந்தத் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடந்தது. மாலையில் வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில் அரசைக் காப்பாற்ற பல திரைமறைவு வேலைகள், பேரங்கள் நடந்தன.
குறிப்பாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி ஆகியவற்றை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க பல்வேறு முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டது.
இந்த விவகாரத்தில் இருவருமே திட்டவட்டமாக எதையும் கூறவில்லை. ஆனாலும் இருவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோ அல்லது வெளிநடப்பு செய்தோ மத்திய அரசைக் காப்பாற்றி விடுவார்கள் என்பது காலையிலேயே தெரிந்துவிட்டது.
அதே போல ஓட்டெடுப்புக்கு சற்று முன் பகுஜன் சமாஜ் கட்சியும் அதைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சியும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டன.
அது எப்படி வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றினர்?.. தொடர்ந்து படியுங்கள்.
544 பேர் கொண்ட மக்களவையில் காங்கிரஸ் கூட்டணிக்கு 261 எம்பிக்கள் உள்ளனர். பாஜக, எதிர்க் கட்சிகளிடம் 219 எம்பிக்கள் உள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணியில் எப்டிஐக்கு ஆதரவான எம்பிக்கள் எண்ணிக்கை:
காங்கிரஸ்- 206
திமுக- 18
மற்ற கூட்டணிக் கட்சிகள்- 30
கூட்டணியில் இல்லாவிட்டாலும் மத்திய அரசை ஆதரிக்கும் கட்சிகள்:
லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்- 4
கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம்- 3
ஆக மொத்தம் காங்கிரஸ் கூட்டணிக்கு 261 எம்பிக்கள் ஆதரவு இருந்தது.
எப்டிஐக்கு எதிரான கட்சிகள், எம்பிக்கள் எண்ணிக்கை:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் எண்ணிக்கை- 152
இடதுசாரிக் கட்சிகள்- 24
மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ்- 19
அதிமுக- 9
ஆக மொத்தம் இவர்களது எண்ணிக்கை 204
544 எம்பிக்களும் அவையில் இருந்தால் ஓட்டெடுப்பில் அரசு வெல்ல 272 வாக்குகள் தேவைப்பட்டிருக்கும். ஆனால், பகுஜன் சமாஜ் (21 எம்பிக்கள்), சமாஜ்வாடி (22 எம்பிக்கள்) கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டால் அவையில் மொத்தமுள்ள எம்பிக்கள் எண்ணிக்கை 501 ஆகக் குறைந்துவிட்டது. இந்த நிலையில் வாக்கெடுப்பில் அரசு வெல்ல 501ல் பாதி அளவான 251 வாக்குகள் இருந்தாலே போதும் என்ற நிலை உருவானது.
இந் நிலையில் வாக்கெடுப்பு நடந்தபோது அவையில் 501 எம்பிக்கள் இல்லை. 471 எம்பிக்களே இருந்தனர். இதில்
253 எம்பிக்களின் ஆதரவுடன் ஓட்டெடுப்பில் மத்திய அரசு வென்றது. இதில் திமுக எம்பிக்களின் ஆதரவும் அடக்கம். அரசுக்கு எதிராக 218 வாக்குகள் பதிவாயின.
சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் அவையில் இருந்திருந்தால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் தான் அரசு வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், எப்டிஐக்கு ஆதரவாக வாக்களிக்க இவர்கள் விரும்பவில்லை. இதனால் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றிவிட்டனர்.
இதனால் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு இனி சாத்தியமாகிவிடும்.

Thursday, November 22, 2012

2G : விவகாரம் ஆர்.பி.சிங் விளக்கம்


 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிஏஜி வினோத் ராய் கூறிய தகவல்கள் முழுக்க முழுக்க அவரது சொந்த கற்பனை என்ற விவரம் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே வினோத் ராயின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டிருந்தால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி கிடைத்திருக்கும் என்றார் வினோத் ராய். ஆனால், சமீபத்தில் இதை ஏலம் விட்டபோது வாங்கக் கூட ஆள் இல்லாமல் வெறும் ரூ. 9,000 கோடிக்கே அது விற்பனையானது. இதிலிருந்தே ஸ்பெக்ட்ரத்தின் விலை தொடர்பாக வினோத் ராய் கூறிய 'மனக் கணக்கு' எந்த அளவுக்கு ஏற்றிச் சொல்லப்பட்ட ஒன்று என்பது நிரூபணமாகிவிட்டது.
இந் நிலையில் வினோத் ராய் மற்றும் அவரது துணை அதிகாரியான ரேகா குப்தாவின் அடுத்த தகிடுதித்தம் வெளியே வந்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து உண்மையிலேயே ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டியது, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய டைரக்டர் ஜெனராலான ஆர்.பி.சிங் தான். இவர் தான் தொலைத் தொடர்பு மற்றும் தபால் துறைக்கான சிஏஜியின் தணிக்கை அதிகாரி ஆவார்.
ஆனால், வினோத் ராய் அண்ட் கோ ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தாங்களே ஒரு அறிக்கையை தயார் செய்து அதில் ஆர்.பி.சிங்கிடம் கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளது. இந்த நஷ்டக் கணக்கு சரியானதல்ல என்று ஆர்.பி.சிங் கூறியும் கூட அவரது உயர் அதிகாரியான வினோத் ராய் அதில் கையெழுத்து போட வைத்துள்ளார். இதை ஆர்.பி. சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.
முரளி மனோகர் ஜோஷி...:
2ஜி விவகாரம் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு 2008ம் ஆண்டு முதலே விசாரித்து வந்தது. இந் நிலையில் இதன் தலைவராக பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி 2010ம் ஆண்டு பதவியேற்றார்.
அதே நேரத்தில் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகமான சிஏஜியின் அலுவலகமும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து ஆய்வு செய்து வந்தது. அப்போது, சிஏஜி அலுவலகத்தை முரளி மனோகர் ஜோஷி பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிஏஜி தயாரித்து வந்த ரகசிய 2ஜி அறிக்கை குறித்து விவாதித்துள்ளார். இதை சிஏஜி அலுவலகத்தின் தலைமையக டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சின்ஹா தனது அலுவலகக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.
இதன் பின்னர் தான் சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அதில், ஸ்பெக்ட்ரம் விற்பனையால் மத்திய அரசுக்கு ரூ. 57,666 கோடி முதல் ரூ. 1.76 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
சிஏஜி ஒரு விஷயத்தை ஆய்வு செய்து வந்தபோது முரளி மனோகர் ஜோஷி ஏன் அந்த விவரங்களைப் பெறவும், அது குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கவும் ஆர்வம் காட்டினார் என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்கே போய் உதவிய சிஏஜி அதிகாரிகள்:
மேலும் முரளி மனோகர் ஜோஷி இந்த விவகாரத்தில் அறிக்கை தயாரிக்க உதவுவதற்காக சிஏஜி அலுவலக அதிகாரிகள் அவரது வீட்டுக்கே நேரில் சென்று, அதுவும் விடுமுறை நாட்களில், உதவி செய்துள்ள விவரத்தையும் ஆர்.பி.சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஆர்.பி.சிங் 2ஜி விவகாரத்தில் சிஏஜி வினோத் ராயின் செயல்பாடுகள் குறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில்,
கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி, குட் பிரைடே விடுமுறை தினத்தில், சிஏஜி அலுவலக அதிகாரிகள் முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்குச் சென்றனர். பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் குற்றம் சாட்டி ஜோஷி தயாரித்த 2ஜி அறிக்கையை தயாரிக்க உதவினர்.
ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அலுவலக அறிக்கை என்னுடையதே அல்ல. தனக்கு இப்படித்தான் (ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் நஷ்டம் என்று கூறி) அறிக்கை வேண்டும் என்று எனது அதிகாரியான சிஏஜி (வினோத் ராய்) எழுத்துப்பூர்வமாகவே உத்தரவு போட்டுவிட்டால் நான் என்ன செய்ய முடியும்?.
நான் செய்த கணக்குத் தணிக்கையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் எந்த நஷ்டமும் இல்லை என்றே எழுதியிருந்தேன். அதே நேரத்தில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் வைத்திருக்கும் நிறுவனங்களிடம் இருந்து இன்னும் ரூ. 37,000 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தான் எழுதியிருந்தேன்.
இது நடந்தது 2010ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி. இதையடுத்து எனது தலைமையிலான குழுவை சிஏஜி தலைமையகத்தில் உள்ள துணை சிஏஜியான ரேகா குப்தாவின் கீழ் இணைத்துவிட்டனர். மேலும் மத்திய நிதித்துறையின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் பணியையும் என்னிடம் தரவில்லை.
2010ம் ஆண்டு ஜூலை மாதம் நான் கொடுத்த அறிக்கையை முழுவதுமாகவே திருத்தி (ரூ. 1.76 லட்சம் கோடி வரை நஷ்டம் என்று எழுதி) அதை மத்திய நிதித்துறைக்கும், தொலைத் தொடர்புத்துறைக்கும் அனுப்புமாறு உத்தரவு போட்டனர். இந்த உத்தரவு மேலதிகாரிகளிடம் இருந்து வந்ததால் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை.
மேலும் எந்தவித ஆடிட் வழிகாட்டுதல்களும் இல்லாமல் இந்த அறிக்கையை தயார் செய்திருந்தனர். எதை வைத்து இந்த நஷ்டக் கணக்குக்கு வந்தீர்கள், அந்த வழிகாட்டு விதிமுறைகள் என்ன என்று கேட்டு ரேகா குப்தாவுக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியும் பதிலே வரவில்லை.
அதே போல இந்த நஷ்டக் கணக்கை நான் ஏற்கவில்லை என்பதையும், சரியான வழிகாட்டுதல்கள்- ஆவணங்கள் இல்லாமல் இந்த ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் காட்டுப்படுவதையும் எதிர்த்து வினோத் ராய்க்கும் ரேகா குப்தாவுக்கும் அலுவலகரீதியாக பலமுறை எனது எதிர்ப்பைக் காட்டினேன்.
ஸ்பெக்ட்ரத்துக்கு இது தான் விலை என்று டிராய் அமைப்போ, மத்திய அரசோ எந்த கட்டணத்தையும் நிர்ணயித்திருக்கவில்லை. இதனால் எதை வைத்து ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று சொல்ல முடியும். நம்மிடம் இதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லையே என்று சுட்டிக் காட்டினேன். ஆனால், சிஏஜி தலைமையகம் (வினோத் ராய்) சொன்னதை வைத்து இது தான் நஷ்டம் (ரூ. 1.76 லட்சம் கோடி) என்று எழுதி அனுப்ப வேண்டிய நிலைக்கு எனது அலுவலகம் தள்ளப்பட்டது.
இவ்வாறு போட்டு உடைத்துள்ளார் ஆர்.பி.சிங்.
நஷ்டம் குறித்து வினோத் ராய் கூறிய தகவல்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் ஏற்கனவே பலமுறை ஆஜராகி ஆர்.பி.சிங் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இப்போது தான் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் தலையீடுகளையும் வினோத் ராயின் 'வேலைகளையும்' வெளியே விளக்கமாகப் பேசியுள்ளார் சிங்.

Sunday, November 4, 2012

ஊழல் ஒரு புற்றுநோய்.. ஊழலை ஒழிக்கப் போராடுவோம்: டெல்லி பொதுக்கூட்டத்தில் சோனியா


 ஊழல் ஒரு புற்றுநோய் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.. ஊழலை எதிர்த்து உறுதியுடன் போராடுவோம் என்று ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறைகூவல் விடுத்திருக்கிறார்.
மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு லட்சம் பேரை திரட்டி டெல்லியை உலுக்கி எடுத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் தொண்டர்களை டெல்லியில் திரட்டி குவித்து பிரம்மாண்ட பேரணியை காங்கிரஸ் கட்சி இன்று நடத்தியது. இப்பேரணிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தலைமை வகித்தார்.
பேரணியின் முடிவில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் உரையாற்றினர்.
ஊழலை ஒழிப்போம்- சோனியா
இக்கூட்டத்தில் சோனியா பேசுகையில்,
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன. ஊழல் ஒரு புற்றுநோய் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அது நோய்தான்.. இந்த நோய்க்கு எதிராக நாம் போராடுவோம். ஊழலை ஒழிக்க தொடர்ந்து போராடுவோம். ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானோர் தண்டனையில் இருந்து தப்பித்துவிடக் கூடாது. ஊழலைப் பற்றி பேசுகிறவர்கள் ஊழலில் திளைத்துப்போனவர்களாக இருப்பதையே காண முடிகிறது.
நாட்டின் ஜனநாயக அமைப்புகளை அதன் வேரை பலவீனப்படுத்தவே எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. நாடாளுமன்றத்தில் மக்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டை போடுகின்றன எதிர்க்கட்சிகள். மக்கள் பிரச்சனைகளை பேசவிடாமல் விவாதிக்கவிடாமல் தடுக்கின்றன எதிர்க்கட்சிகள். இந்தப் போக்கை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.
நாட்டின் அரசியல் சாசனத்தை எப்போதும் காங்கிரஸ் கட்சி பாதுகாக்கவே செய்யும். காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கானது.விவசாயிகளுக்கானது. மதச்சார்பற்ற கட்சிதான் காங்கிரஸ். 2004,2009-ம் ஆண்டு தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றதைப் போல் மீண்டும் மக்களின் நம்பிக்கையை இனிவரும் தேர்தல்களிலும் பெறுவோம் என்றார் அவர்.
லோக்பாலை நிறைவேற்றுவோம்- ராகுல்
இக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பேசுகையில்,
நாடாளுமன்றத்தில் விரைவில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றும். பொறுத்திருந்து பாருங்க.. லோக்பால் மசோதாவை நிறைவேற்றவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டன. ஆனால் நாங்கள் நிச்சயம் மீண்டும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம்.
அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பது பற்றி விவசாயிகளிடம் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அன்னிய நேரடி முதலீடு மூலமாக குளிர்பதன வசதி கிடைக்கும். நமது நாட்டின் விவசாயிகளுக்கு அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
ஏழைகள் வெறும் வயிற்றுடன் படுக்கக் கூடாது என்பதே எங்கள் கொள்கை. ஏழை மக்களின் விளைநிலம் வலுக்கட்டாயமாக பறிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். இதற்காகவே உணவு பாதுகாப்பு மற்றும் நில ஆர்ஜித சட்டங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வருகிறது என்றார்

மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்: மன்மோகன்சிங்


அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும் மக்களுக்கானது... ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடியது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்ட பேரணியின் முடிவில் ராம்லீலா மைதானத்தில் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் ஒளிமயமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதில் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த இலட்சியத்தை நாம் அடைய நீண்டதூரம் பயணித்தாக வேண்டும்.
சில மாற்றங்களை செய்தால் நாட்டுக்கு நன்மை கிடைக்குமெனில் அவற்றை நிச்சயமாக நாங்கள் செய்வோம். அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியில் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று சொல்லப்படுவது உண்மை அல்ல.
100 நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது எதிர்த்தார்கள். ஆனால் 8 கோடிப் பேர் பயனடைந்திருக்கின்றனர். மதிய உணவுத் திட்டத்தின் மூலம் 12 கோடி குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியமானவை. அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தவறான தகவல்களை சொல்லி வருகின்றன எதிர்க்கட்சிகள். கடந்த 8 ஆண்டுகளில் மக்களுக்காக ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம் என்றார்

ஒரு பெண் புலியின் வாக்குமூலம்!


வித்யாராணி என்ற பெண்விடுதலைப் புலி ஒருவர் அளித்ததாக விகடன் வார இதழில் வெளியான நேர்காணல் குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.
அந்தப் பேட்டியில் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், ஈழப் போராட்டம் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டுவிட்டதாகவும் வித்யாராணி கூறியுள்ளதை, திட்டமிட்ட இன விரோத செயல் என பல்வேறு ஈழ அமைப்புகளும் விமர்சித்துள்ளன.
தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டத்தை குலைக்கும் உளவியல் போர் இது என்று வர்ணித்துள்ளனர்.
ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை:
வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்' என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.
ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி'யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர்.
ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.
உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!' என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.
எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம்பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம்.
ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி 'புக்காரா' விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், 'அவர்கள் தமிழர்கள்' எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர்.
என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது.
சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன்.
நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்?
தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.
பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?
1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி.
பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார்.
ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!
அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?
இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!
இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?
ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!
என்ன நடந்தது?
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் இரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர்.
அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன்.
எமது போராட்டத்தில் தோற்றுப் போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்று விட்டோம். எமது போராட்டம் தோற்றுப் போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை.
முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு இராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தபோது, இராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன்.
எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியாவில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன்.
அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் இராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன்.
காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன்.
எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர்.
பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.
அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர்.
சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர்.
சோதியா படையணியில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர்.
காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. 'தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்' என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது.
கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே இரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர்.
குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெற்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கைகொட்டி ரசித்தனர்.
அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர்.
பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர்.
எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்த வண்ணம் இருந்தேன்!
விசாரணை சித்திரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்?
சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத்தீவுக் காடுகளுக்குள் கொண்டு போய் விட்டனர்.
அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது.
பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!
நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?
பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்றன.
முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர்.
நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்து விடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது.
பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு 'பால்... பால்' என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!
ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா?
எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர்.
பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்... எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை.
யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன்.
அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார்.
அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!
யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?
பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்திரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.
தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?
அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.
இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர்களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?
(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது)
இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர்களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை.
'ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்' என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
அதனால்தான் இன்றும் 'இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்' என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப் போடுகின்றனர்.
எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு விட்டது.
எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, 'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?' என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன்.
(சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.)
இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள்.
எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.
ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா?
கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல்களைக் கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப்பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா?
கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா?
கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!
உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை 'விபசாரி' என விமர்சித்...'
(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்...) 'நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!
(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
படம், பேட்டி: விகடன்

Monday, October 29, 2012

மத்திய அமைச்சரவை மாற்றம்:


 நேற்றைய மத்திய அமைச்சரவை மாற்றத்தில், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தொழிலதிபரை எதிர்த்த, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், ஜெய்பால் ரெட்டி, அறிவியல், தொழில் நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக நிலவிய யூகங்களுக்குப் பின், மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தில், ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர், ரகுமான் கான் (கர்நாடகா), தின்ஷா படேல் (குஜராத்), அஜய் மேக்கன் (டில்லி), பல்லம் ராஜு (ஆந்திரா), அஸ்வினி குமார் (பஞ்சாப்), ஹரீஷ் ராவத் (உத்தரகண்ட்) மற்றும் சந்திரேஷ் குமாரி (ராஜஸ்தான்) ஆகிய ஏழு பேர், கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவர்களில், ரகுமான் கானும், சந்திரேஷ் குமாரியும் அமைச்சரவைக்கு புதியவர்கள், மற்றவர்கள் எல்லாம், இணை அமைச்சர்களாக இருந்து, கேபினட் அமைச்சர்களாகியுள்ளனர்.
ஆந்திராவில் நடிகராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய, காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., சிரஞ்சீவி, காங்கிரஸ் தகவல் தொடர்பாளரும், பஞ்சாப் லூதியானா லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான மணீஷ் திவாரி ஆகியோர், தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவர்கள் தவிர, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, தாரிக் அன்வர் (மகாராஷ்டிரா ராஜ்யசபா எம்.பி.,), கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் சசி தரூர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, ஏ.எச்.கான் சவுத்ரி, அதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் தீபா தாஸ்முன்ஷி, ஆந்திராவைச் சேர்ந்த, சத்திய நாராயணா, ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி, பல்ராம் நாயக், கில்லி கிருபா ராணி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, லால் சந்த் கட்டாரியா, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராணி நரா, அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த, நினோங் எரிங் ஆகிய 13 பேரும், இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.
நேற்று மொத்தம், 22 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர். 

அவர்கள் அனைவருக்கும், ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அதே நேரத்தில், மத்திய அமைச்சர்கள் பலரின் இலாகாக்களும் மாற்றப்பட்டன. 

ஊனமுற்றோருக்காக வழங்கிய நிதியை, தன் அறக்கட்டளை மூலம் பெற்று, மோசடி செய்ததாக, சமூக சேவகர், அரவிந்த் கெஜ்ரிவாலால் குற்றம் சாட்டப்பட்ட, மத்திய சட்ட அமைச்சராக இருந்த, சல்மான் குர்ஷித், வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதுவரை கம்பெனிகள் விவகாரம் மற்றும் மின் துறையை கவனித்து வந்த வீரப்ப மொய்லி, பெட்ரோலியத் துறை அமைச்சரானார். மத்திய நீர்வளத் துறை அமைச்சராக இருந்த, பவன் குமார் பன்சால், ரயில்வே துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இயற்கை எரிவாயு விலை நிர்ணயத்தில், பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து, அவருடன் மோதலில் ஈடுபட்ட, பெட்ரோலியத் துறையை கவனித்து வந்த, ஆந்திராவைச் சேர்ந்த ஜெய்பால்ரெட்டி, அந்த துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை ஒதுக்கப் பட்டுள்ளது.
இதுவரை இணை அமைச்சராக இருந்த,தின்ஷா படேல், தற்போது, கேபினட் அமைச்சராகியுள்ளனர். அவருக்கு சுரங்கத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிப் பொறுப்புடன் கூடிய, இணை அமைச்சராக நேற்று பதவியேற்ற, சிரஞ்சீவிக்கு, சுற்றுலா துறையும், மற்றொரு தனி பொறுப்பு அமைச்சராகியுள்ள, மணீஷ் திவாரிக்கு, தகவல், ஒளிபரப்புத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி பங்குகளை வாங்கியது தொடர்பான சர்ச்சையில் சிக்கியதால், வெளியுறவு இணை அமைச்சர் பதவியை, 2010ல் ராஜினாமா செய்த, சசி தரூர், தற்போது, மனிதவள மேம்பாட்டுத் துறை துணை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர், கபில் சிபல் வசமிருந்த, மனிதவள மேம்பாட்டுத் துறை, நேற்று கேபினட் அமைச்சராக பதவியேற்ற, பல்லம் ராஜுவிடம் தரப்பட்டுள்ளது. ராஜு, முன்னர் ராணுவத் துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.
உத்தரகண்ட் மாநில முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு, அது கிடைக்காததால், தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய, விவசாயத் துறை இணை அமைச்சர், ஹரீஷ் ராவத், நேற்று கேபினட் அமைச்சரானார். அவருக்கு, நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இணை அமைச்சர்களாக பதவி வகித்து, நேற்று கேபினட் அமைச்சரான, தின்ஷா படேலுக்கு சுரங்கத் துறையும், அஜய் மேக்கனுக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையும் தரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலுக்கு, மிக நெருக்கமானவர்களாகக் கருதப்படும், காங்கிரஸ் இளம் தலைவர்களான, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, சச்சின் பைலட் மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேற்று, கேபினட் அமைச்சர்களாகப்பட்டு, அவர்களுக்கு மின்சாரம், கம்பெனி விவகாரம் மற்றும் இளைஞர் நலம்மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
முதுபெரும் காங்கிரஸ் தலைவரான, கே.எச்.முனியப்பா, ரயில்வே துறை இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து, சிறு, குறு மற்றும் மத்திய தொழில்கள் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். ரயில்வே இணை அமைச்சராக இருந்த, பரத்சிங் சோலங்கி, ரயில்வே இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து, குடி தண்ணீர் மற்றும் சுகாதாரத் துறை (தனி பொறுப்புடன் கூடியது) அமைச்சராகியுள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த புரந்தரேஸ்வரி, அந்தத் துறையிலிருந்து மாற்றப்பட்டு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சராகவும், சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சராக இருந்த, ஜிதின் பிரசாதா, ராணுவம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராகவும், தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர், ஜெகத்ரட்சகன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.அதேபோல், மின் துறை இணை அமைச்சர், வேணுகோபால், விமான போக்குவரத்து துறை அமைச்சராகியுள்ளார். பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், ராஜிவ் சுக்லாவுக்கு, திட்டமிடல் துறை கூடுதலாக தரப்பட்டுள்ளது.
வெளியுறவு துறை இணை அமைச்சர், அகமதுவிடம் கூடுதலாக இருந்த, மனிதவள மேம்பாட்டுத் துறை பறிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியத் துறை இணை அமைச்சரான, ஆர்.பி.என்.சிங், உள்துறை இணை அமைச்சராகியுள்ளார். நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையை கவனித்து வந்த, குமாரி செல்ஜா, சமூக நீதி மற்றும் அமலாக்கத் துறைக்கு மாற்றப் பட்டுள்ளார்.நேற்று புதிதாக இணை அமைச்சர்களாக பதவியேற்ற, கொடி குன்னில் சுரேஷுக்கு, தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறையும், தாரிக் அன்வருக்கு, விவசாயத் துறையும், சூரிய பிரகாஷ் ரெட்டிக்கு ரயில்வே துறையும், ராணி நராவுக்கு பழங்குடியினர் விவகாரமும், அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு, ரயில்வே துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான, ஏ.எச்.கான் சவுத்ரி (சுகாதாரம்மற்றும் குடும்ப நலம்), சத்திய நாராயணா (சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை), நினோங் எரிங் ( சிறுபான்மையினர் நலம்), தீபா தாஸ்முன்ஷி (நகர்ப்புற மேம்பாடு), பல்ராம் நாயக் ( சமூக நீதிபதி மற்றும் அதிகாரம் வழங்கல்), கில்லி கிருபா ராணி (தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம்) மற்றும் லால் சந்த் கட்டாரியாவுக்கு ராணுவத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகுல் ராய், பதவி விலகியது முதல், ரயில்வே துறையை, சி.பி.ஜோஷி கூடுதலாக கவனித்து வந்தார். அவரிடமிருந்த ரயில்வே துறை, பவன் குமார் பன்சாலுக்கு தரப்பட்டுள்ளது. இனி, சாலை போக்குவரத்து துறை அமைச்சராக மட்டும், ஜோஷி தொடர்வார்.
நேற்று கேபினட் அமைச்சராக பதவியேற்ற, ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர், ரகுமான் கானுக்கு, சிறுபான்மையினர் நலத்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், இந்தத் துறை, சல்மான் குர்ஷித்திடம் இருந்தது.நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின் மூலம், பிரதமரையும் சேர்த்து, மத்தியஅமைச்சர்களின் எண்ணிக்கை, 79 ஆக உயர்ந்தது. வரும், டிசம்பர் மாதம், குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அதை கருத்தில் கொண்டும், ஆந்திரா உட்பட சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், பிரதமர் மன்மோகன் சிங், நேற்றைய அமைச்சரவை மாற்றத்தை நிகழ்த்தியிருப்பதாக நம்பப்படுகிறது.

16 ஆண்டுகளுக்கு பிறகுகாங்., வசம் ரயில்வே:மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாகக் கருதப்படும், ரயில்வே துறை, 16 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் வசம் வந்துள்ளது. இந்த முறை, மிச்சம் மீதி இல்லாமல், ஒட்டுமொத்த துறையும், காங்கிரஸ் வசமே வந்துள்ளது; இணையமைச்சர்கள் அனைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே.
தனி பட்ஜெட், ஏகப்பட்ட நிதி ஒதுக்கீடு, தனி ரயில் என, ஏராளமான வசதிகள் கொண்ட ரயில்வே துறையின், காங்கிரஸ் அமைச்சராக, கடைசியாக இருந்தது, காமன்வெல்த் ஊழல் புகழ், சுரேஷ் கல்மாடி. 1996ல், நரசிம்மராவ் ஆட்சியின் போது, ரயில்வே அமைச்சராக, கல்மாடி இருந்தார்.அதற்குப் பிறகு, கடந்த, 16 ஆண்டுகளாக, காங்கிரஸ் வசம் அந்தத் துறை வரவே இல்லை. கூட்டணி கட்சிகளின் நிர்பந்தம், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய ஆசை போன்றவற்றால், கூட்டணி கட்சிகளுக்கு அந்தத் துறை, தாரை வார்க்கப்பட்டது.காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், இரண்டாவது ஆட்சியில், கடந்த மூன்றாண்டுகளாக, ரயில்வே துறையின் அமைச்சர்களாக, மம்தா பானர்ஜி, தினேஷ் திவேதி மற்றும் முகுல் ராய் இருந்தனர். முகுல் ராய் ராஜினாமா செய்த பிறகு, காங்கிரஸ் கட்சியின், மூத்த அமைச்சர்களில் ஒருவரான, சி.பி.ஜோஷி தற்காலிகமாக கவனித்து வந்தார்.

நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது, ரயில்வே துறை அமைச்சராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, பவன்குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தத் துறையின் இணையமைச்சர்களாக, அதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளனர்.

Wednesday, March 28, 2012

பாலம் ராமரால் கட்டப்பட்டதா அல்லது திராவிடர்களால் கட்டப்பட்டதா?

மணல் எப்படி உண்டாகிறது என்று பார்ப்போம். வானத்தில் இருந்து கருமேகம் குளிர்காற்று பட்டு மழை நீர் உருவாகி அது மழையாக பொழிகிறது. அந்த மழையானது பெரும்பன்மையாக மலைபிரதேசங்களில் அதாவது மலைக்குன்றுகள் இருக்கும் பகுதிகளில் மரங்கள் மிகுதியாக இருப்பதால் அங்கே பொழிகிறது அந்த மலைக்குன்றுகளில் பொழிவதால், அந்த மலைக் குன்றுகளில் உள்ள கற்கள் பாறைகள் அரித்து ஆற்று வெள்ளத்தால் அடித்து வரப்பட்டும் நிலப்பரப்புகளில் மழைவெள்ளம் உருண்டோடி வருவதாலும் நிலபரப்பில் உள்ள கற்கள் உடைந்தும் சிறு சிறு துண்டுகளாகவும் பிறகு பொடி பொடியான கற்கள் அதாவது அதைத்தான் நாம் மணல் என்கிறோம், அந்த மணல் ஆற்று வெள்ளம் சமதலத்தில் நிற்கும் போது அப்படியே தேங்கிவிடுகிறது மணல் வெளிகளாக காட்சியளிக்கிறது ஆற்றுத் நீர் வற்றியவுடன். இப்படித்தான் மணல் திட்டு மணல் பரப்பு உண்டாகிறது.

இதே போன்ற ஒரு நிலைதான் நமது தென் பகுதியில் கடற்பரப்பில் உள்ள மணல் திட்டானது மேற்கில் இருந்து அரபிக்கடலாலும், கிழக்கில் இருந்து வங்காளக் கடலாலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கும் ஒரு இடம் தான் பாம்பன் தீவு இப்பொழுது ராமேஸ்வர தீவு தென்கிழக்கு தமிழகத்தையும் மன்னார் தீவு அதாவது இலங்கையின் வடமேற்கு பகுதியையும் இணைக்கும் விதமாக அமைந்திருக்கிறது அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இயற்கையாக அந்த மணல் மேடானது நாம் மேலே சொன்னது போல முக்கடலும் சங்கமிப்பதாலும் அந்த கடலின் காற்றோட்டத்தாலும் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த முக்கடலும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மோதும் போது அந்த மணலானது அங்கே குவிக்கப்படிருக்கிறது என்றும் அதனால் அதன் வழியாக கப்பற் போக்குவரத்துக்காக சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்தினால் எப்பொழுதும் மணல் மேடு குவிந்த வண்ணம் இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.அதனால் சேது சமுத்திரத்திட்டத்தை மாற்று வழியில் செயலபடுத்தலாம் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

மற்றொரு புறம் அந்த மணல் மேடானது பல்லாயிரக் கணக்கான  ஆண்டுகளுக்கு முன்பிருந்த குமரிக் கண்டம் (லெமுரிய) கடலில் கொஞ்சம் கொஞ்சமாக அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்த பனிக்கட்டிக உருகி கடல்மட்டம் அதிகரிக்க அதிகரிக்க நீர் பரப்பு அதிகரித்து தாழ்வான பகுதியில் இருந்த குமரிக் கண்டம் கடலால் மூழ்கடிக்கப்பட்ட போது அந்த சமயத்தில் இப்பொழுது சர்ச்சைக்குரிய அந்த மணல் மேடானது அந்த கண்டத்திலே வாழ்ந்த மக்களால் கிழிஞ்சல்களையும், மணலைக் கொண்டும் இரண்டு தீவுகளுக்குமிடையே ஒரு பாதையை அமைத்து இருக்கிறார்கள்.


இப்பொழுதுதான் நமக்கு சிமெண்ட் இருக்கிறது, தார் கண்டுபிடித்து விட்டோம் அதனால் சாலைகளை கனரக வாகனங்களை கொண்டு போட்டு விடுகிறோம் .ஆனால் அப்பொழுது இந்த மாதிரியான தொழில் நுட்பம் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் கிடைத்தைக் கொண்டு சாலை அமைத்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய அறிவாளிகளாக இருந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள் என்று பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு கூட நாம் சுண்ணாம்பு கலவையைத் தான் பயன்படுத்திக் கொண்டிருந்தோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஆக இந்த பாலமானது பிறகு தண்ணீர் மட்டம் அதிகரிக்க அதிகரிக்க நாளடைவில் நீருக்கு அடியில் சென்றுவிட்டது. அந்த பாலத்தைதான் நாம் இப்பொழுது ஆதாம்பாலம் என்கிறோம். இந்த பாலமானது இரு தீவுகளில் இருந்த மக்களால் போடபட்டிருக்க வேண்டும் என்பதே ஒரு கூற்று.
ராமாயணத்தை இயற்றிய காலத்தில் அந்த பாலமானது இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நாம் நம்புவோமாக.ஏனென்றால் இராமாயணம் இயற்றி 3 ஆயிரம் வருடங்கள் தான் இருக்கும்.

ராமாயணம் என்பது ஒரு இலக்கியம் அது நாளடைவில் நாம் அதற்கு வெவ்வேறு பெயர்கள் வைத்து அதை புனிதபடுத்திவிட்டோம் அல்லது அந்த அளவிற்கு அதைக் கொண்டுவந்து விட்டார்கள் எனலாம்.
எப்படி இப்பொழுது உள்ள இலக்கிய வாதியான சாருவும், ஜெய மோகனும் ஒரு இலக்கியத்தை படைக்கிறார்கள் அந்த இலக்கியத்தில் வரும் நாயகன் ஒரு சாகச நாயகன் என்று வைத்துக் கொள்வோம் அவன் ஆகாத்தில் பரந்து செல்கிறான் அப்படியே வேறொரு கிரகத்துக்கு போகிறான் அல்லது நிலாவிற்கு செல்கிறான் என்றெல்லாம் கற்பனைக் கதைகள் அந்த புத்தகத்தில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் அதனால் அந்த நிலாவையே உருவாக்கியது அவன் தான் என்றும் அந்த நிலாவை கண்டுபிடித்ததும் நிலா என்று பெயரிட்டதும் அவன் தான் என்றும் 5 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு அல்லது 10 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு கூறினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

ஏனென்றால் நமக்கு நிலா என்று சொல்லக் கூடிய கிரகம் நம்முன்னோர்கள் கண்டுபிடித்து பெயரிட்டிருந்தார்கள் அதில் அமெரிக்க விஞ்ஞானிகள் நீல் ஆம்ஸ்டராங் சென்று வந்துவிட்டாகள் என்று நமக்குத்தெரியும் அதெல்லாம் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது முதன் முதலில் சென்றவர்கள் என்று. நம்முடைய சமகாலத்தில் வாழும் இலக்கியவாதிகள் படைக்கும் கற்பனையை நாம் ரசித்துவிட்டு போய்விடுகிறோம் அதற்காக 10 ஆயிரம் வருடங்கள் கழித்து அதை கண்டுபிடித்தது அந்த இலக்கியத்தில் வரும் நாயகன் தான் என்று வாதிடுவது எந்த விதத்தில் நியாயம் இருக்கிறது.

அதைப் போலத்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நம்முன்னோர்களால் சிறந்த முறையில் கட்டப்பட்ட ஒரு சாலையை அல்லது பாலத்தை கற்பனையான நாயகன் தான் கட்டினான் என்று கூறுவது சரியா?

பார்க்க போனால் அந்த பாலத்தை வடிவமைத்து சுண்ணாம்பு கற்களையும் மணலையும் கொண்டு கட்டியதற்க்கு நமது முன்னோர்கள் தமிழர்களாகிய திரவிடர்களுக்கே அந்த நற்பெயர்கிடைக்க வேண்டும் சிறந்த வல்லுனர்களாக விளங்கியதற்கான சான்றாக எடுத்துக் கொண்டும் மிகவும் திறமைவாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க வாய்ப்பில்லை.

ஆதலால் அந்த பாலமானது திராவிட கலாச்சாரத்திற்கு சான்றாக விளங்குகிறது, பண்டையத் தமிழர்களின் நாகரிகத்தையும் சிறந்த வல்லுனர்களாகவும் விளங்கியிருக்கிறார்கள் என்பதற்கும் சான்றாக அமைந்திருக்கிறது இந்த பாலத்தின் பெருமையெல்லாம் தமிழர்களாகிய நம்மையேச் சாரும் வேறுயாரும் இதை சொந்தம் கொண்டாட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

Wednesday, March 7, 2012

5 மாநிலங்களில் கட்சிகள் வென்ற இடங்கள் முழு விவரம்







தேர்தல்









உத்திரபிரதேசம்





2012
2007


சமாஜ்வாடி
224
97


பகுஜன்
80
206


பா..
47
51


காங்கிரஸ்
28
22


ராஸ்ட்ரிய
9
10












பஞ்சாப்





2012
2007


அகாலி தல்
56
49


காங்கிரஸ்
46
44


பாஜக
12
19


சுயேச்சை
3
5












உத்ரகாண்ட்





2012
2007


காங்கிரஸ்
32
21


பாஜக
31
27


பகுஜன்
3
8


சுயேச்சை
3
3


ukkd
1
3












கோவா





2012
2007


காங்கிரஸ்
9
16


பாஜக
21
14


சுயேச்சை
3
2


MGP
3
2


INDB
2
0












மணிப்பூர்





2012
2007


காங்கிரஸ்
42
30


திரிணாமுல்
7
0


MSCP
5
0


NPF
4
0


LJP
1
0