எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, June 25, 2009

அணு மற்றும் அணுகுண்டு

பள்ளியில் படிக்கும் போது இயற்பியல் பாடத்தை நிறைய மக்கப் செய்து தான் படித்தேன். அதில் ஒன்றும் புரியாது ஏனென்றால் அதில் சொல்லப்படும் விஷயங்கள்
கற்பனை மட்டுமே செய்து பார்த்துக் கொள்ளவேண்டும் மற்றபடி செய்முறை விளக்கங்கள் எல்லாம் ஒரு சில பாடத்தில் மட்டுமே செய்து காட்டுவார்கள்.

எனக்கு தெரிந்தவரை சூரிய ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் எவ்வாறு ஸ்டார்ச் தயாரிக்கின்றன. சூரிய ஒளி படாத இடத்தில் இலைகளால் ஸ்டார்ச் தயாரிக்க
முடிவதில்லை என்ற சோனையை மட்டுமே எங்கள் பள்ளியில் என்னுடை வகுப்பில் செய்து காட்டினார்கள். மற்றபடி வேறெந்த சோதனையும் அவவளவாக செய்து காட்டவில்லை.
ஏனென்றால் மற்ற சோதனைகளெல்லாம் செய்தால் செலவு ஆகும் என்பதால் செய்யவில்லை போலும்.

மின்சாரம் என்றால் என்ன? அதிலும் முக்கியமாக இந்த எலக்டரான்கள்,புரோட்டான்கள் மற்றும் நியூட்ரானகள் சுத்தமாக ம்ம்கூம் இன்னும் தலையை சுற்றுகிறது. அது எப்படி இருக்கும் கேட்டால் எல்லாத் துகள்களும் இந்த மூன்று அணுக்களால் ஆனது என்பார்கள். என்னடா இது சும்மா நம்பளை குழப்பறாங்களே என்று மேலும் கேட்டால் எல்லாத் தனிமங்களும், எல்லாப் பொருள்களும் இந்த மூன்றால் ஆனது என்கிறார்கள்.உள்வட்டப் பாதை வெளி வட்டப்பாதை. உள்வட்டபாதையில் நியுட்ரானகளும் புரோட்டாங்களும் இருக்கும் அதன் வெளிவட்டப் பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றிக் கொண்டிருக்கும்.நிறை எண் மாறுபடும் போது அதன் பண்புகளும் மாறுபடுகிறது.தனிமங்களும் மாறுப்டுகிறது இது எல்லாமே எனக்கு குழப்பம் தான்.

யாரவது இயற்பியல் வல்லுனர்கள் இருந்தால் எளிமையாக என்னைப் போல் உள்ள எல்லா Tube Light களுக்கும் புரிகிற மாதிரி விளக்கினால் புரிந்து கொள்வோம்.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது அணு என்ற ஒரு பாடம் இருந்தது. அதில் ரூதர்போடு சோதனையும் இருந்தது. ஆனாலும் அடிப்படையாகவே எனக்கு எதுவும் புரியாததனால்
பள்ளியிலும் சரி வேறெங்கும் சரி நான் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. எப்பொழும் போல் மக்கப் தான் அத்தனையும் மனப்பாடம் செய்து ஒரு 175 மதிப்பெண்கள் பெற்றேன்.

சரி அந்த குழப்பம் இன்று வரை தொடர்கிறது. அது எப்பொழுது தெளிவாகுமோ என்று தெரியவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்.



அணுவை எப்படி கண்டுபிடித்தார்கள். அந்த அணுவில் இருந்து எப்படி அணுகுண்டு தயாரித்தார்கள்?

அணுகுண்டு அணுகுண்டு என்று சொல்கிறார்களே அது என்னடா அணுகுண்டு அதெப்படி இருக்கும்?

அது எப்படி தயாரிக்கப்படுகிறது அதை யார் யார் எல்லாம் சேர்ந்து கண்டு பிடித்தார்கள்?

அதை எதற்காக கண்டு பிடித்தார்கள். ஆக்கபூர்வ செயல்களுக்குப் பயன்படுத்தலாமா இல்லை அழிவுக்கு மட்டும்தான் அதை பயன்படுத்த முடியுமா? போன்ற இன்ன பிறவிஷயங்களை

என்.ராமதுரை அணு புத்தகத்தின் மூலமாக அழகாக விவரிக்கிறார்.

இந்த புத்தக்த்தை படித்த பிற்குதான் ஓரளவுக்கு பிடிப்பட்டது அணு சக்தி ஒப்பந்தத்தை பற்றி, பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகள் கைகளுக்கு போகக்கூடாது என்று
உலகம் ஏன் கவலைப்படுகிறது என்பதைப் பற்றி மற்றும் வடகொரியா அவ்வப்பொழுது நடத்தும் அணுகுண்டு சோதனையைப் பற்றி.

இந்தியா எந்த நிலையில் உள்ளது நம்மால் அணு ஆயுதம் தயாரிக்க முடியுமா, முடியாதா, இல்லை வல்லரசுகளிடம் மட்டும் தான் அந்த அணு ஆயுத பலம் இருக்குமா என்பதை நம்மால் ஓரளவு யூகிக்கமுடியும். கூடிய விரைவில் அந்த இடத்தை நம்மால் அடைய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது.

முடிந்தால் எல்லோரும் அந்த புத்தக்தை வாங்கிப் படியுங்கள் ஓரளவுக்கு புரியும் அணு அரசியலைப் பற்றி.

அணு புத்தகத்தை வாங்க இங்கே சொடக்கவும்

Thursday, June 18, 2009

ரீல் இப்பொழுது ரியல் ஆகப்போகுது - காமெடி கலாட்டா

கட்சியை விட்டு வெளியில் நான் வரமாட்டேன் ஆனாலும் பிராமணர்களுக்காக பாடுபடுவேன் என்கிறார் காமெடி நடிகர் எஸ்.வி. சேகர்.

நான் அ.தி.மு.க. விட்டு விலகவில்லை. என்றாலும் எனக்கும் அந்த கட்சிக்கும் இப்போது எந்த தொடர்பும் இல்லை.

அ.தி.மு.க. சார்பில் எனக்கு எந்த தகவல்களும் சொல்லப்படுவது இல்லை. இது பற்றி கட்சி மேலிடத்தில் 16 முறை புகார் செய்து விட்டேன். எந்த பலனும் இல்லை.

எனவே இனி எந்த புகாரும் செய்யவும் எண்ணம் இல்லை. நான் எம்.எல்.ஏ.ஆக தொடர்ந்து நீடிப்பேன் வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன்.

நான் சட்டசப்படி நடக்கிறேன். எனவே நான் கட்சி மாறவேண்டிய அவசியம் இல்லை. அகில இந்திய ஆரியர் முன்னேற்றக் கழகம் என்றொரு கட்சியை தொடங்குவது குறித்து யோசனை இருந்து வருகிறது. முற்பட்ட சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு பெற இந்த கட்சியை தொடங்க வேண்டும் என்று கூறினார்கள். இது தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்துப் பேசினேன்.

அப்போது பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அல்லது முற்பட்ட சமுதாயத்துக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

இந்த கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றினால் தி.மு.க.வுக்கு 25 லட்சம் ஓட்டுக்கள் அதிகமாக கிடைக்கும். நான் கட்சி தொடங்கும் அவசியம் இருக்காது.

அவர் இவ்வாறு கூறி இருப்பதனால் இவர் தனியாக கட்சி ஆரம்பித்தால் 25 லட்ச ஓட்டுக்கள் கிடைக்கும் என்கிறார்.

ரீல் காமெடியன் இப்பொழுது ரியல் காமெடியன் ஆகப்போகிறார்.