எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, May 20, 2009

முன்னால் பிரதமர் ராஜீகாந்தியின் நினைவு நாள்

இன்று காங்கிரஸ் முன்னால் பிரதமர் ராஜீகாந்தியின் நினைவு நாள். அதேவேளையில் அவருடைய ஆத்தமா சாந்தி அடையவும் உலக மக்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் எல்லாம் பெற்று இன்புற அனைவரும் வேண்டுவோம்.

Tuesday, May 19, 2009

மாவீரன் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார்

மாவீரன் பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார். அவர் இறந்ததாக காட்டப்படும் உடல் பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக அவரை போன்ற ஒத்த முகத்தை செய்து ஒரு உடலைக் காட்டிஇருக்கிறார்கள் சிங்கள இராணுவம்.

ஏன் அவர்கள் அவ்வாறு வேறு ஒருவர் உடலைக் காட்ட வேண்டும். விடுதலைப் புலிகள் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை சிங்கள இராணுவம் கைப் பற்றியாகிவிட்டது ஆனால் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை மட்டும் பிடிக்க முடியவில்லை என்றால் அது அவர்களுக்கு உலக நாடுகள் மத்தியில் கவுர்வப்பிரச்னை அதனால் சிங்கள அரசாங்கமே பிரபாகரனைப் போன்ற உடலமைப்புள்ள ஒரு உடலை எடுத்து முகத்தை மட்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அதை படம் பிடித்துக்காட்டி பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளது.

இந்த உடலைப் பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளது எல்லோருக்கும்.

1.இரண்டு நாட்களுக்கு முன்பு வரை சிங்கள் இராணுவம் பிரபாகரன் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் தப்பிச் செல்லும் போது நாங்கள் அவர்களை தாக்கி அதாவது ராக்கெட் லாஞ்சர் மூலமாக சுட்டு வீழ்த்திவிட்டோம் என்றார்கள்.

அவ்வாறு சிங்கள ராணுவம் ராக்கெட் லாஞ்சர் மூலமாக தாக்கினால் அந்த வேனில் இருந்தவர்களெல்லாம் சிதைந்து இருப்பார்கள் அதாவது உடல்கள் எல்லாம் தனித்தனியாக
பியித்து எடுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கையில் முழு உடலைக் காண்பிக்கிறார்கள் என்றால் அது சந்தேகத்துக் குறியதே!

2. நேற்று ஒரு உடலைக் காண்பித்த போதும் இந்த உடல் none fire zone என்றழைக்கப் படும் போர் நடைபெறாத இடத்தில் இருந்து கண்டெடுக்கப் பட்டதாக சொன்னார்கள்.
போர் நடைபெறாத இடத்தில் அவருடை உடல் கிடப்பதற்கு எப்படி சாத்தியம்.

3. பிரபாகரன் ஆம்புலன்ஸ் வேனில் தப்பித்து போகும்போது நாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டோம் என்றார்கள், ஏன் பிரபாகரன் கடைசி நேரத்தில் தப்பித்து போக வேண்டும். பிரபாகரனுக்குத் தெறியும், இன்னும் எத்தனை விடுதலைப் புலிகள் மிச்சம் இருக்கிறார்கள், இன்னும் எவ்வளவு நாளைக்கு ஆயுதங்கள் உள்ளது, என்ன என்ன ஆயுதங்கள் உள்ளது, நாம் இந்தப் போரில் வெற்றி பெறுவோமா இல்லையா என்பது போன்ற விஷயங்கள் அவருக்கு நன்றாகவே தெறியும் அப்படி இருக்கும் போது அவர் எப்பொழுதோ தப்பித்து போக வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே அவர் கடைசி நேரத்தில் தப்பித்து செல்லவேண்டிய அவசியம் என்ன?

"நலமாக இருக்கிறார் பிரபாகரன்': வைகோ அளித்த பேட்டியில், ""பிரபாகரன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்; நலமுடன் பாதுகாப்பாக இருக்கிறார். இந்தியாவில் உள்ள சில ஊடகங்கள் தான், அவர் உயிரோடு இல்லை; இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டார் என செய்தி பரப்புகின்றன. இந்த செய்தியில் எள்ளளவும் உண்மை இல்லை,'' என கூறினார்.

நேற்றைய ZTamil தொலைக்காட்சி பேட்டியின் போது பேசிய, ஈழத்தமிழர்களுக்காக நீண்ட வருடங்களாக குரல் கொடுத்துவரும் பழநெடுமாறன் அவர்கள் பிரபாகரன் இறக்கவில்லை அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்றார். இவருக்கும் விடுதலை புலிகளுக்கும் நேரடித் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது அதனால் அவர் உறுதியாக சொல்கிறார் அதை நாம் சிறிதளவு யோசிக்கவேண்டிதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் எல்லோரும் பிரபாகரன் இறந்ததை நம்பமறுக்கும் போது அந்த விஷயம் ஊர்ஜிதம் படுத்தபடவில்லை என்று தான் தோன்றுகிறது.

மாவீரன் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கவாய்ப்பு அதிகமாக உள்ளது.

யாரும் கவலைப்படவேண்டாம்.

Wednesday, May 6, 2009

எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பது?

பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கா?


காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கா?


மூன்றாவது அணிக்கா?


இல்லை சுயேட்ச்சைக்கா?



நான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களிக்க விரும்புகிறேன் நீங்களும் சிந்திக்கலாம் அந்த அணிக்கு வாக்களிக்க.

பா.ஜ.க ஒரு மதவாதக் கூட்டணி அது நாடறிந்த விஷயம் சரியான கொள்கை அவர்களுக்கு இல்லை, சரியான திட்டம் இல்லை, முக்கியமாக சரியான தலைமை அவர்களிடத்தில் இல்லை.

மூன்றாவது அணி என்று எடுத்துக்கொண்டால் இடது மற்றும் வலது சாரிகளின் பிற்போக்கான சிந்தனை மற்றும் செயல்பாடுகள்.உதாரணத்துக் எடுத்துக்கொண்டோமேயானால் அவர்கள் அமெரிக்காவிடம் அணு சக்தி தொடர்பான தொழில் நுட்பங்களை வாங்ககூடாது என்றும் நம் நாட்டில் உள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அணுசக்தி துறையில் முன்னேற வேண்டும் என்கிறார்கள்.

அணுசக்திக்குத் தேவையான மூலப்பொருள் யுரேனியம் நம் நாட்டில் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அது நமது தேவைக்கு போதுமானதாக இல்லை அதாவது யானை பசிக்கு சோளப்பொறி போன்றது.

சரி நம்மிடம் தோரியம் அதிகமாக உள்ளது அதை பயன்படுத்தி அணுசக்தி துறையில் முன்னேறலாம் என்றால் அது இன்னமும் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது அது செயல்பாட்டிற்கு வரவேண்டுமானால் 10 லிருந்து 20 வருடங்கள் ஆகலாம். அதுவரை நாம் என்ன செய்வது மின்சாரத்தை எந்தவகையில் தயாரிப்பது, ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டுமானால் அடிப்படைத் தேவை மின்சாரம். அது இல்லாமல் எந்த ஒரு நாடும் முன்னேற முடியாது. இதெல்லாம் தெரிந்தும் இடது மற்றும் வலது சாரிகள் நான் புடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று சொல்கிறார்கள், அமெரிக்காவிடம் அணுசக்தி ஒப்பந்தம் கூடாது என்றால் கூடாது தான்.

அதனால் இவர்க்ளுடை கொள்கை உதவாக்கரை கொள்கை இவர்களை ஆதரிக்க முடியாது.

நான்காவதாக சுயேட்ச்சைகள் என்று எடுத்து கொண்டால் அவர்களால் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையே தவிர எந்த விதப்பயன்பாடும் இருக்காது. அவர்களுடையத் தொகுதிக்கு அவர்களால் எதையும் பெரிதாக வாங்கித்தரமுடியாது அதனால் அவர்களும் ஒதுக்கப் படகூடியவர்களே.

ஆதலால் எல்லாவிததிலும் சாராசரியாக காங்கிரஸ் தான் நிலையான வலுவான அரசை நல்லாட்சியைத் தரமுடியும் என்று நான் ஆழமாக ந்ம்புகிறேன்.



அதனால் என்னுடைய வாக்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு.



நீங்களும் அதை ஆதரிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, May 3, 2009

அணுசக்தி ஒப்பந்தம்

அணு எரிபொருள் சப்ளை நாடுகள் அளித்த ஒப்புதல் மூன்று நாட்கள் நடந்த போராட்டத்திற்குப் பின் கிடைத்த வெற்றியாகும். இதன் அடுத்த கட்டமாக, அமெரிக்க காங்கிரசில், நிறைவேற்றி ஒப்புதல் பெற, அதிபர் புஷ் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலீசா ரைஸ் அதிக முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்த, என்.எஸ்.ஜி., என்று அழைக்கப்படும், 45 உறுப்பு நாடுகளைக் கொண்ட, அணுசக்தி சப்ளை நாடுகளின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக இருந்தது.


சீனப் பிரதிநிதி ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை: இதில், அமெரிக்கா மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகள் சீனாவையும் பணிய வைத்திருக்கிறது. கடந்த 34 ஆண்டுகளாக இந்தியா ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்து முற்றிலும் மாறிய சூழ்நிலையை நேற்று முன்தினம் கிடைத்த ஒப்புதல் தந்திருக்கிறது.அணு ஆயுதப் பரவல் தடை விஷயத்தில், சில நாடுகள் ஆட்சேபித்தன. சீனா அதிக பட்சமாக முட்டுக்கட்டை போட்டது. ஆனால், அமெரிக்காவின் தலையீட்டால், கடைசி முடிவு எடுக்கும் போது சீனப் பிரதிநிதி ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. ஆனால், இந்த எதிர்ப்புகளை வெற்றிகரமாக அமெரிக்கா தவிடுபொடியாக்கியது.


கடைசி நேரத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீசா ரைசுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. பல்வேறு நாடுகளையும் அவர் சமாதானப்படுத்தினார். அவர் இம்முயற்சியில் பெற்ற வெற்றி குறித்து கூறும் போது, "சர்வதேச அணுசக்தி முகமையிடமும், பின்பு அணு எரிபொருள் சப்ளை நாடுகள் குழுமத்திடமும் நிறைவேற்றப்பட முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியதாயிற்று. இந்த ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் என்பதில் உறுதியாக நின்று வெற்றி பெற்றிருக்கிறோம். அமெரிக்க பார்லிமென்டில் இதை நிறைவேற்ற கால அவகாசம் குறைவாக இருக்கிறது. ஆனால், இதை முடிவு செய்து நிறைவேற்றும் கமிட்டிகளிடம் பேசியுள்ளோம்' என்றார்.


பிரதமருக்கு பாராட்டு: சலுகைகளுடன் கூடிய அணு சக்தி வர்த்தகத்துக்கு என்.எஸ்.ஜி.,நாடுகள் இந்தியாவிற்கு ஒப்புதல் அளித்திருப்பதற்கு காரணமாகச் செயல்பட்ட , பிரதமர் மன்மோகன் சிங்கை , காங்கிரஸ் தலைவர் சோனியா பாராட்டினார்.இந்த ஒப்புதலை பெறுவதற்காக, பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்றதற்காக, பிரதமர் மன்மோகன் சிங்கை, சோனியா தலைமையில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் ஜனார்த்தன் துவேதி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், அம்பிகா சோனி, திக்விஜய் சிங், பிரித்வி ராஜ் சவுகான் உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.


பிரதமர் இல்லத்தில் நடந்த 20 நிமிட சந்திப்பில், இந்த முயற்சிக்கு சோனியாவும், காங்கிரஸ் செயற்குழுவும் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். இதில் வெற்றி பெறுவதற்கு தகுந்த முயற்சிகளை மேற்கொண்டதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வெகுவாக புகழ்ந்தார் மன்மோகன் சிங்.