எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, November 9, 2011

அன்னா ஹசாரேவுடன் ஆர்.எஸ்.எஸ் ரகசிய ஒப்பந்தம் அம்பலம்





   முன்னால் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறகு ஒரு சரியான மற்றும் வலிமையான தலைமை இல்லாமல் பாஜக தவித்துக் கொண்டிருப்பது அதனை பின்புலத்தில் இருந்து இயக்கும் RSS க்கு பெரிய சவலாக இருக்கிறது.


மக்களவை எதிர்கட்சி தலைவராக இருக்கும் சுஷ்மா சுவராஜ் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பல நெருக்கடிகள் கொடுத்தும் பாரளுமன்றத்தை முடக்கியும் எதிர்கட்சி தலைவராக நல்ல விதமாக பாரளுமன்றத்திலே நடந்து கொண்டாலும் தன் பங்குக்கு பாஜகவுக்கு பெயர் வாங்கி கொடுத்தாலும் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க RSS  தயங்குகிறது ஏன் என்றால் அவர் ஒரு பெண் என்பதால். 


மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராக இருக்கும் அருண்ஜெட்லியும் தன் வேலைகளை சிறப்பாக செய்து அரசியல் செய்தாலும் அவர் வாஜ்பாயிடம் அரசியல் கற்றுக் கொண்ட சீடர் என்பதால் அவரிடம் கொஞ்சம் இரக்க குணமும், இந்துத்துவாக்கு எதிரான மனநிலையும் இருப்பதனால் RSS அவரை ஒரு பிரதம வேட்பாளாரக அறிவிக்க தயங்குகிறது.


இது நாள் வரை கடந்த 7 ஆண்டுகாலமாக சரியான தலைமை இல்லாததால் அந்த கட்சி பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது RSS. அதன் விளைவாக எந்த ஒரு பாஜக தலைவரும் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக செயல்படாமல் செயலிழந்து கிடப்பதானால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கருதிய RSS குள்ளநரிகள், பசு வேசம் போட ஆரம்பித்து இருக்கிறார்கள் 


பாபா ராம்தேவ் வெளிநாட்டில் பதுக்கு வைத்திருக்கும் கருப்பு பணத்திற்கு எதிராக டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத்ததை ஆரம்பித்தார் அப்பொழுதும் அவருடைய உண்ணாவிரத கூட்டத்திலே காவி நிறங்களாகத்தான் இருந்தது இதற்கு எல்லாம் RSS தான் காரணம் இவர்களை எல்லாம் தூண்டிவிட்டு உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக போட்ட திட்டம் என்பதை அறிந்து கொண்டு அதை முறியடித்து காங்கிரஸ் அரசாங்கம்.


அதன் பிறகு ஊழலுக்கு எதிராக அன்னா ஹஜாரேவை தூண்டி போராட்ட களத்திற்கு அனுப்பியுள்ளது RSS.


இதை காங்கிரஸ் இயக்கம் வன்மையாக கண்டித்தும் வந்துள்ளது. அன்னாவின் பின்புலத்தில் RSS இயக்கம் இருந்து செயல்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் பலமுறை கூறியும் குற்றம் சாட்ட்சியும் வந்துள்ளார்கள். இது நாள் வரைக்கும் வாய்திறக்காமல் இருந்த RSS இப்பொழுதுதான் வாய்திறந்துள்ளது.


RSS ன் தலைவர் மோகன்ராவ் பகவத் இந் நிலையில் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசியது,


ஊழலுக்கு எதிரான தனது இயக்கத்தில் ஆர்எஸ்எஸ்சும் சேர வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தால் அதை ஏற்போம். ஆனால், இதுவரை அப்படிப்பட்ட கோரிக்கை ஏதும் அவரிடமிருந்து வரவில்லை. அதே நேரத்தில் அன்னாவின் இயக்கத்தில் சேர ஆர்எஸ்எஸ் தொண்டர்களை நாங்கள் தடுக்கவில்லை.


எங்களுக்கும் ஹசாரேவுக்குமான தொடர்பு நீண்ட காலம் பின்னோக்கியது. கிராமப் புறங்களில் ஹசாரே மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை வெளியுலகுக்குத் தெரிய வைத்தது ஆர்எஸ்எஸ் தான். எங்களது கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில் கூட ஹசாரே எங்களுக்கு உதவினார்.


கிராம வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட்டபோது தான் ஊழலுக்கு எதிராக இயக்கத்தைத் துவக்குமாறு ஹசாரேவுக்கு ஆர்எஸ்எஸ் யோசனை சொன்னது. நான் கடந்த ஜூன் மாதத்தில் ஹசாரேவை சந்திப்பதாகக் கூட இருந்தது. ஆனால், இருவரும் வேறு சில பணிகளில் தீவிரமாக இருந்ததால் சந்திப்பு நடக்கவில்லை.


ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்குவது தொடர்பாக பாபா ராம்தேவிடம் கூட ஆர்எஸ்எஸ் ஆலோசனை நடத்தியது. ஆனால், ஹசாரேவுடன் இணைந்து செயல்படுமாறு ராம்தேவை நாங்கள் வலியுறுத்த முடியாது. அதே நேரத்தில் ஹசாரேவின் இயக்கத்தில் ஒரு பங்கு வகிக்குமாறு ராம்தேவிடம் கோரியுள்ளோம்.


இதனால் பாஜக செயலிழந்து கிடப்பதையும் மறைமுகமாக ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவும் அன்னா ஹஜாரேவையும், பாபா ராம்தேவையும் களம் இறக்கிவிட்டு இருக்கிறார்கள் என்பது தெள்ள தெளிவாகிறது.


கொஞ்சம் கொஞ்சமாக அன்னாவின் முகம் வெளுக்க ஆரம்பித்துள்ளது. மக்களுக்கு அன்னா டீம் மீது இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்த நிலையில் மீதி அன்னா மீது இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து விட்டது.


அன்னா போன்ற ஆட்களை மூளை சலவை செய்து RSS இயக்கம் தனது சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது. இனிமேலும் அன்னா அவர்கள் ஊழலுக்கு எதிராக என்கிற வாதத்ததை விட்டு தன்னுடைய கிராமத்திற்கே சென்று விட்ட பணிகளை தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.



Wednesday, November 2, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் VS அதிமுக அராஜக அரசாங்கம்

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் கலைஞரால் திறக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூடி அதை எழும்பூரில் அமைந்திருக்கும் அரசு தேர்வாணைய இயக்குனரகத்திற்கு மாற்ற போவதாக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு மாற்றபட இருக்கிறது என்கிற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.



அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு பார்வை :
* அமைவிடம்: கோட்டூர்புரம், சென்னை
* அடிக்கல் நாட்டப்பட்டது: 16.8.2008
* திறப்பு: 15.9.2010
* செலவு: ரூ.172 கோடி
* மொத்த பரப்பளவு: 8 ஏக்கர், 8 தளங்கள்
* நூலக கட்டடத்தின் மொத்த பரப்பரளவு: 3.75 லட்சம் சதுர அடி
* குழந்தைகள் முதல், மாணவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனி தளங்களில் நூலக வசதி
* 417 கார்கள், 1,026 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் வசதி
* 30 பேர் மற்றும் 151 பேர் அமரும் வகையில், இரு தனி கூட்ட அரங்குகள்
* 1,100 பேர் அமரும் வகையில், பெரிய ஆடிட்டோரியம்
* தற்போதைய நிலவரப்படி நூல் இருப்பு: 5.25 லட்சம்
* சாதாரண நாட்களில் நூலகத்திற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை: 1,000
* விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை: 2,500 முதல் 3,000 வரை.


எட்டு ஏக்கர் நிலத்தில்...:கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம் குறித்த விவரங்கள்:
* எட்டு ஏக்கர் நிலத்தில், 172 கோடி ரூபாய் செலவில் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது.
* மொத்தம் ஒன்பது மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.
* மூன்று லட்சத்து 33 ஆயிரத்து 140 சதுர அடி பரப்பளவு கொண்டது.
* 50 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட அரங்கம் உள்ளது.
* 80 பேர் அமரக்கூடிய இரண்டு கூட்ட அரங்குகள்.
* 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குழந்தைகளுக்கான வசதிகள் கொண்ட பிரிவு.
* 420 கார்கள் உட்பட 1,500 வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதி.

இது போன்ற வசதிகள் கொண்ட நூலகத்தை மாற்றி இந்த இடத்தில் உயர் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவோம் என்கிறார்கள்.

புதிய சட்ட சபை வளாகத்தை மருத்துவமனையாகவும் மருத்துவ கல்லூரியாகவும் மாற்றி அதை பொதுமக்கள் வசதிக்காக விடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அதை ஏன் மாற்ற வேண்டும் என்று அப்பொழுது பெரிதாக கேள்விகள் எதுவும் எழவில்லை ஏனென்றால் அந்த கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருந்தது சரி கலைஞர் மேல் இருந்த கழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற முடிவெடுத்தாலும் அந்த கட்டிடத்தை நல்ல முறையாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கும் ஆகையால் எல்லாரும் சமாதானம் ஆகி ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் இந்த நூலகமானது பிரத்தேகரமாக வடிவமைக்கப்பட்டு சிறப்பு வாய்ந்த கட்டிடமாக கட்டப்பட்டு பொதுமக்கள் கடந்த ஒரு வருடங்களாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது இந்த நூலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன.

எல்லாம் கலைஞரின் மேலே உள்ள வெறுப்புணர்ச்சி அந்த வெறுப்புணர்ச்சியை பொதுமக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மிகவும் சிறப்பு வாய்ந்த நூலகத்தை மாற்றுவதென்பது மக்களை மடையர்கள் என்று நினைத்துக் கொண்டு ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்கிற திமிரில் எகத்தாலத்தில் இனி ஐந்து வருடங்கள் நம்மை யார் என்ன கேட்கமுடியும் என்கிற ஆனவத்தில் இது போன்று ஆடிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா அவர்கள் அவருடைய ஆட்டம் இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது.

இது போன்ற சுயநலவாதிகளைத் தான் நாம் மீண்டும் மீண்டும் முதலமைச்சராக கொண்டுவந்துக் கொண்டிருக்கிறோம் என்றால் வெட்ககேடாக இருக்கிறது.

கலைஞருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கிற திட்டத்தையெல்லாம் அழிக்க வேண்டும் என்றே ஜெயலலிதா அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். இவர்கள் மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை.

திமுக ஆட்சியில் பெயர் சொல்லுகின்ற நலதிட்டங்கள் கொண்டுவந்தார்கள் என்றால் நீங்கள் அதற்கு மேல் பெயர் சொல்லுகின்ற திட்டங்களை கொண்டு வாருங்கள்.

கலைஞர் அவர்கள் நல்ல நூலக்த்தை கொண்டுவந்தார்கள் என்றால் நீங்களும் இது போன்ற நூலகத்தை மற்ற நகரத்தில் ஏற்படுத்தலாமே அதை விடுத்து அந்த நூலகத்தை அழிப்பதென்பது மிகவும் மோசமான செயலாகும் கண்டிக்கதக்கது.

அரசு நூலகத்தை மாற்றுவதை மறுபரிசீலனை செய்து அந்த நூலகத்துக்கு வேண்டிய வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Friday, September 16, 2011

அரசின் நலத்திட்டங்கள் வேண்டுமா ஏன்?

கறவை மாடுகள்:முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் பாராட்டு;
வாழ்நாளில் மறக்க முடியாது


நேற்று முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 103 வது பிறந்த நாள் விழா அனைவராலும் மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டது.

தமிழக அரசின் சார்பில் அண்ணா பிறந்தநாளில் அதிமுக தேர்தலின் போது சொல்லியிருந்த வாக்குறுதிகளை நேற்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் அவர்கள். இந்த நல திட்டங்கள் நேரிடையாக பாமரமக்களுக்கு சென்றடைவதால் இந்த நலதிட்ட உதவிகள் வரவேற்க்கூடிய ஒன்று.

ஜெர்சி பசுகள் வழங்கி இருக்கிறார்கள் அதனால் வெண்மை புரட்சி ஏற்படும் என்கிறார்கள் கண்டிப்பாக கரவை மாடுகள் வழங்குவதால் அந்த மாடுகளை கூட வாங்க முடியாத ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் உறுதியாக பயனடைவர் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த மாடு ஒரு நாளைக்கு 10 முதல் 16 லிட்டர் வரை கறக்ககூடியது. ஒரு லிட்டர் அரசாங்க மற்றும் மற்ற பால் கொள்முதல் நிலையங்களில் லிட்டர் ஒன்றுக்கு 18 ரூபாய் என்கிற அளவில் வாங்குகிறார்கள். அதனால் நாளொன்றுக்கு குறைந்தது இவர்களுக்கு 200 ரூபாய் வருமானத்திற்கு உத்திரவாதம் இருக்கிறது இது போன்ற நலத்திட்டங்கள் நேரிடையாக ஏழைகள்களை சென்றடைந்து அவர்களின் சமூகமேம்பாட்டுக்கு வழி செய்கிறது.

இதே போல 4 ஆடுகள் கொடுத்தார்கள் இந்த நான்கு ஆடுகள் 4 லிருந்து 5 மாதத்திற்குள்ளாக நன்கு வளர்ந்துவிடும். ஒவ்வொரு ஆடும் குறைந்தது 5 ஆயிரம் முதல் 6 வரை விற்கும், அதனால் நான்கு ஆடுகள் என்றால் 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் மாதம் இவர்களுக்கு 3ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்த முதலீட்டை சரியாக பயன்படுத்தி கொண்டால் அவர்களின் வாழ்க்கைத் தரம் சிறக்கும் என்பதில் சந்தேகமில்லை வரவேற்க்கூடிய ஒன்று.

இது போலவே மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி இது இல்லாத எவ்வளவோ ஏழைகள் இருக்கிறார்கள் இது போன்ற நலதிட்ட உதவிகள் ஏழைகளை நேரிடையாக சென்றடைவதால் இதையெல்லாம் வரவேற்ககூடியது தான். இந்த வசதிகள் கூட இல்லாமல் இருக்கும் இந்த சமுதாயத்தில் இதெல்லாம் தருவது நியாயம் தான்.

மாணவர்களுக்கான இலவச மடி கணினி என்பது மிகப்பெரிய திட்டம் இந்த திட்டத்தால் இந்த தலைமுறை மாணவர்கள் இன்னும் 10 வருடங்களில் மற்ற மாநிலங்களில் உள்ள ஏன் மற்ற நாட்டில் உள்ள மாணவர்களிலே மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக கணினி தொழில்நுட்பத்திலும் அதைச் சார்ந்த தொழில்நுட்பத்தில் நல்ல அறிவாற்றலை பெறக்கூடிய வாய்ப்பை இந்த நலத்திட்டம் அளித்திடும். இதனால் இதனை நாம் நீண்டகால திட்டம் அல்லது தொலைநோக்கு திட்டம் என்றே சொல்லலாம்.

அதனால் தேவையான மக்களுக்கு மானியம் நேரிடையாக சென்றடைகின்ற இது போன்ற திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்.

Monday, September 12, 2011

அரசியல் பணியில் காங்கிரஸ் தொண்டன் காமராஜ் -அறிய புகைப்படம்


எளிமைக்கு உதாராணம் காமராஜர். காலில் செருப்பு கூட இல்லாம அரசியல் பணிசெய்கிறார் கர்மவீரர் காமராஜர் அவர்கள். சுய நலமே இல்லாமல் பொது நலத்தோடு ஒருவன் இருந்தான் என்றால் அவன் பெயர் காமராஜ் ஆக மட்டும் தான் இருக்கும்.





Friday, September 9, 2011

மங்காத்தா -விமர்சனம்




 தல அறிமுகம் ஆவதே உட்டாலக்கடி கிரி கிரி சைதாபேட்டை வடகிரி மாதிரி அசத்தலா அறிமுகம் ஆகிறார். என் கவுண்டர் குற்றவாளியை போலீஸ் தயார் செய்து வைத்திருந்த ரௌடிகளிடமும், போலீஸிடமும் இருந்து காப்பாற்றுகிறார்.

நல்ல நாட்டுக்கடை என்று சொல்லகூடிய லட்ஷ்மி ராய்யுடன் குத்தாட்டம் அடுத்து தலவீட்டிலும் இரவு தொடர்ந்து, காலையில் போன் அடிக்குது எடுத்து பேசுகிறார் மறு முனையில் அவருடைய காதலி - த்ரிஷா, என்ன நைட்டு குடிச்சியா என்று கேட்கிறார் தல இல்லை நைட்டு ஒரு சின்ன வேலை இருந்தது என்று சொல்கிறார் சரி நான் உன் வீட்டுக்கு வருகிறேன் என்று போனில் முத்தமிட்டுவிட்டு வைத்து விடுகிறார் த்ரிஷா.

உடனே தல இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது என்று சொல்லி திரும்பி படுக்கிறார் பக்கத்தில் ல்ட்ஷ்மி ராய் படுத்திருக்கிறார், தல - நீ யார் என்று கேட்க, நைட்டெல்லாம் என்னைய கொஞ்சோ கொஞ்சிட்டு இப்ப யாருன்னா கேட்கிற என்கிறார்.

ஐயோ நீ கிளம்பு எனக்கு வேலைஇருக்கு என்கிறார்.

லட்ஷிமி ராய் அங்கேயே டர்க்கி டவலை கழற்றி விட்டு மாற்று உடையை மாற்றி விட்டு நிற்கிறார், தல அவளை அப்படியே தள்ளிக்கொண்டு போய் கதவுக்கு வெளியில் விடும்போது என்னுடைய hand bag உள்ளே இருக்கு எடுத்துக்கிறேன் என்று சொல்லும் போதே த்ரிஷா வந்து விடுகிறார்.

தல நடிப்பு இங்கே தான் சூப்பர் அப்படியே ராய் யாருன்னே தெரியாதது போல அவரு மேல் மாடியில் இருக்காரு என்று சொல்லி த்ரிஷாவை கூட்டிக் கொண்டு உள்ளே போய் அவரை உட்காரவைத்து விட்டு அந்த hand bagஐ தேடும்போது தல நன்றாக இயல்பாகவே நடித்து ரசிகர்களின் கைத்தட்டலை வாங்கினார்.

அதே போல பிரேம்ஜிக்கும் நல்ல ஓப்பனிங் சீன் இருக்கு அவர் மும்பையில் ரயிலை விட்டு இறங்கும்போது ஒரு பாட்டு உடனே நடந்து வரும்போது லட்ஷிமி ராய் மீது மோதல் ராய் கையில் வைத்திருந்த பொருட்கள் கிழே விழுந்தவுடன் ராய் உட்கார்ந்து எடுக்கும் போது அப்படியே ராயை காம கண்ணில் பார்த்து ஜொல்லு வடிப்பது நன்றாகவே இருந்தது. லட்ஷ்மிராயின் உடையும் நன்றாகவே இருந்தது சீலை அணிந்து போதுமான அளவு கவர்ச்சி காட்டி இருக்கிறார்.

அப்படியே த்ரிஷா வீட்டுக்கு போகிறார் த்ரிஷா அப்பாவாக ஜெயபிரகாஷ் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் அப்பா கேட்கிறார் அஜித்த பார்த்து, உங்களுக்கு என்ன வயசாகிறது என்று கேட்கும் போது, நான் இருக்கும் போது இதெல்லாம் அவரிடம் கேட்க கூடாது என்று செல்லமாக கோபிக்கிறார். தல உடனே இந்த மே மாத்தில் இருந்து 40 ஆகிறது என்று அவருடைய உண்மையான் வயசை சொன்னவுடன் அவருடைய நேர்மை தெரிகிறது.

அப்படியே ஒரு பாட்டு ..

ஆக்‌ஷன் கிங் வருகிறார் கிரிகெட் சூதாட்டப் பணத்தை பிடிப்பதற்காக அவருடைய தலைமையில் போலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டு சூதாட்டாகாரர்களையும் சூதாட்ட பணத்தையும் பிடிக்க முறபடுகிறார் இப்படியே படம் நகர்கிறது.

அப்படியே பிரேம் ஜியை வைபவ் க்கும் அஞ்சலிக்கும் நடக்கும் கல்யாணத்தில் சந்திக்கிறார். வைபவ் ஜெயபிரகாஷின் உதவியாளராக இருக்கிறார் அஞ்சலி த்ரிஷாவின் நண்பராக இருக்கிறார்.

தல-யிம் த்ரிஷாவும் ஒரு பொது இடத்தில் பேசிக் கொண்டு பிரிகிறார்கள் அப்பொழுது தலயை பிரேம்ஜி சந்திச்சி சார் எப்படி இருக்கீங்கன்னு கேட்க தல நீங்க யாரு என்கிறார் சார் நாம கல்யாணத்தில் பார்த்தோமே என்கிறார் அப்படியே என்ன சார் குடிக்க வந்தீங்களா என்று பேசிக் கொண்டே இருவரும் ஒரு பாருக்குள்ளே குடிக்க சென்று நல்லா குடித்துவிட்டு போதையில் இருக்கும் போது நாங்க எல்லாம் சூதாட்டப் பணத்தை கொள்ளையடிக்க போகிறோம் என்பதை உளறிவிடுகிறார்.

வெளியில் வந்தும் மீண்டும் ஒரு பாட்டில் வேண்டி இரு கடையின் கதவை தட்டுகிறார் விஜய் வசந்த் கதவை திறக்க இதென்னடா வசந்த் அன் கோ ந்னு நினப்பா என்று கலாயிக்கிறார் அப்படியே அவயே ஒரு ஆஃப் பாட்டிலும் மிக்ஸிங்கிக்கு வாட்டர் பாட்டிலும் வாங்கி கொண்டு தல காரில் சென்று கொண்டிருக்கும் போது மீண்டும் தல அவர்கள கொள்ளையடிப்பதை பற்றி விசாரிக்கிறார் பிரேம்ஜி எல்லாத்தையும் போட்டு உளறி தள்ளிவிடுகிறார்.

இப்படியே கதை நகர்கிறது மீண்டும் பிரேம்ஜியும் அவருடைய நண்பர்களும்  சேர்ந்து எப்படி கொள்ளையடிப்பது என்று பேசிக் கொண்டிருக்கும் போது நாம் சரியாக பிளான் பண்ணி திருடி விட்டால் கோடிஸ்வரர்கள் மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான் வாழ்க்கை என்று சொல்லும் போது பிரேம்ஜியின் வயிறு கலக்குவதை நல்ல நகைச்சுவையாக எடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் பேசி முடித்து வெளியில் வரும்போது தல அவர்களை சந்தித்து என்ன கொள்ளையடிக்க போறீங்களா என்று கேட்க எல்லாரும் திறு திறு என்று முழிக்க இல்ல நாங்க சும்மா வெளியில் போறோம் என்கிறார்கள் தல உடனே எல்லாத்தையும் சொல்லிட்டான் ப்ரேம்ஜி என்கிறார் இப்பொழுது தலயிம் அந்த கூட்டணியில் சேர்ந்து கொள்ளையடிச்ச பிறகு அந்த பணத்தை யாருக்கும் தராமல் மற்றவர்களை கொன்றுவிட்டு நாம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்து பார்க்கும் சீன் ரொம்ப நன்றாக இருக்கிறது.

தல money  money  என்று சொல்லும் போது அவருடைய கர்ஜனை நன்றாக இருக்கிறது.

இடைவேளை

அந்த சூதாட்டப் பணம் ஜெயபிரகாஷின் தியேட்டருக்கு வந்து அதை புக்கீஸ் எல்லாரும் பிரித்து கொள்வது தான் திட்டம் இந்த இடத்தில் வந்து தல தலைமையில் கொள்ளையடிப்பது என்பது இவர்களின் திட்டம்.

இந்த பணம் வருவது போலிஸுக்கு தெரிந்தும் அவர்களும் நோட்டமிடுகிறார்கள். ஆனால் அந்த பணம் அங்குவராமல் வேறெங்கோ கொண்டு செல்லப் போவதாக சொல்கிறார் தல அப்படியே ஒரு பிளான் போட்டு அந்த பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் கொள்ளையடித்து ஒரு பாழடைந்த குடோனுக்குள் வைத்து பூட்டிவிட்டு அதை யார் திறந்தாலும் மற்றர்வகளுக்கு அலர்ட் வரும்படி புரோகிராம் செய்கிறார் பிரேம்ஜி.

இப்படியே ஜெயபிரகாஷுக்கு  புக்கீஸ் எல்லாம் போன் செய்து பணத்தை ஒழுங்காக கொடுக்கும் படி மிரட்டுகிறார்கள். அவரும் பணத்தை கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பி தேடிக் கொண்டுருக்கும் போது தல அங்கே பார்ட்டி வைத்து கொள்ளையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயபிரகாஷின் ஆள் அரவிந்த் வைபவ் வை பார்த்து சந்தேகித்து துரத்தி பிடித்து அடிச்சி எங்கே வைத்திருக்கிறாய் பணத்தை என்று கேட்கிறார்கள் உடனே ஜெயபிரகாஷ் உள்ளே வருகிறார் அவரது பின் அஜித் துப்பாக்கியுடன் நிற்கிறார் சண்டை போட்டு வைபவ் காப்பற்றி பணம் இருக்கும் இடத்துக்கு செல்கிறார்கள்.

பிரேம்ஜி வரசொல் என்று தல கேட்கிறார் அவருக்கு போன் செய்தால் எடுக்க மாட்ங்கிறான் என்று சொல்கிறார் வைபவ் சரி நாமலே கதவை திறக்கலாம் என்று சுடுகிறார் தல, பிரேம்ஜி புரோகிராம் செய்தது போல அலர்ட் மெசேஜ் எதுவும் வரவில்லை அது போல  உள்ளேயும் பணமும் இல்லை ஐந்தில் இருவர் பிரேம்ஜியிம், அஸ்வினும் கொள்ளை பணத்தை கொண்டு சென்று கோவாவில் கும்மாலம் போடுகிறார்கள் அங்கே லட்ஷ்மி ராயும் இருக்கிறார் கொள்ளை பணத்தை மூவரும் பிரிப்பதற்கு பதிலாக நாம் இருவரும் எடுத்துகிட்டு ப்ரேமை போட்டுத் தள்ளுவோம் என்கிறான் அஸ்வின். ஆனால் எதிர்பாரா விதமாக ல்ட்ஷ்மிராய் அஸ்வினை போட்டு தள்ளிவிட்டு ப்ரேமுடன் செல்ல முற்படும்போது அஜித் டீமும், அர்ஜூன் போலீஸ் டீமும் அங்கே வந்துவிடுகிறது அஜித் எல்லாரையும் போட்டு தள்ளிவிட்டு அர்ஜூனும், தலயும் பணத்தை பிரித்துக் கொண்டு கட்டடத்திற்கு தீயிட்டு பணம் தீயில் எரிந்ததை போன்று அரசுக்கு சொல்லிவிட்டு ஆளுக்கு பாதி பணத்தை எடுத்துகொண்டு மலேயாவில் செட்டில் ஆகிவிடுகிறார் அஜித்.

நல்ல திரைகதை ஆனால் கதை என்று ஒன்றும் இல்லை.

வரிகளே புரியாத பாடல்கள். தியாகராஜ பாகவதர் படத்தில் வருவதைப் போல் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பாடல் சண்டை காட்சிகள் என்றே கதை வேகமாக நகருகிறது.

நல்ல கண்கொள்ளா காட்சிகள் கோவாவில் காட்டுகிறார்கள்  இதற்காகவது மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்.

மங்காத்தா ஒரு மெகா ஆர்ட் மற்றும் மெகா ஆர்டிஸ்ட் படம்.

அஜித்திற்காகவே சின்ன வேடங்களில் முன்னனி நடிகை அஞ்சலி நடித்திருக்கிறார் இவரை போலவே லட்ஷ்மி ராயும் நடித்து இருக்கிறார் வர்வேற்க தக்கது.

அஜித் ரசிகர் மன்றத்தை களைத்துவிட்டாலும் அஜித்துக்கென்று ரசிகர்கள் பட்டாளம் பலதர பட்ட மக்களும் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

அஜித் ஒரு மாஸ் ! தல ஒரு மாஸ் !

Saturday, May 14, 2011

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்






Tamil Nadu Result Status
Status Known For 234 out of 234 Constituencies
Party
Won
Leading
Total
Communist Party of India
9
0
9
Communist Party of India (Marxist)
10
0
10
Indian National Congress
5
0
5
All India Anna Dravida Munnetra Kazhagam
150
0
150
All India Forward Bloc
1
0
1
Dravida Munnetra Kazhagam
23
0
23
Pattali Makkal Katchi
3
0
3
Others
33
0
33


Puducherry Result Status
Status Known For 30 out of 30 Constituencies
Party
Won
Leading
Total
Indian National Congress
7
0
7
All India Anna Dravida Munnetra Kazhagam
5
0
5
Dravida Munnetra Kazhagam
2
0
2
Others
16
0
16


Kerala Result Status
Status Known For 140 out of 140 Constituencies
Party
Won
Leading
Total
Communist Party of India
13
0
13
Communist Party of India (Marxist)
45
0
45
Indian National Congress
38
0
38
Nationalist Congress Party
2
0
2
Janata Dal (Secular)
4
0
4
Kerala Congress (M)
9
0
9
Muslim League Kerala State Committee
20
0
20
Revolutionary Socialist Party
2
0
2
Others
7
0
7


West Bengal Result Status
Status Known For 294 out of 294 Constituencies
Party
Won
Leading
Total
Communist Party of India
2
0
2
Communist Party of India (Marxist)
40
0
40
Indian National Congress
42
0
42
All India Forward Bloc
11
0
11
All India Trinamool Congress
184
0
184
Revolutionary Socialist Party
7
0
7
Samajwadi Party
1
0
1
Others
7
0
7




Assam Result Status
Status Known For 126 out of 126 Constituencies
Party
Won
Leading
Total
Bharatiya Janata Party
5
0
5
Indian National Congress
78
0
78
All India Trinamool Congress
1
0
1
All India United Democratic Front
18
0
18
Asom Gana Parishad
10
0
10
Bodoland Peoples Front
12
0
12
Others
2
0
2

Friday, May 13, 2011

மேட்டூர் தொகுதி தேர்தலில் பாமக தோல்வி


ÚUy}Ÿ ÙRÖh‡›¥ L|• CµT½›¥ ÚR.˜.‡.L. ÚYyTÖ[Ÿ GÍ.BŸ.TÖŸ†‡TÁ ÙY¼½ ÙT¼\ÖŸ. Cjh ˜z° A½«T‡¥ RÖUR• H¼TyPRÖ¥ C¿‡YÛW TWTW“ ŒX«V‰.

TÖ.U.L.-ÚR.˜.‡.L.

ÚNX• UÖYyP• ÚUy}Ÿ ÙRÖh‡›¥ ‡.˜.L. iyP‚ NÖŸ‘¥ TÖyPÖ¸ UeL· Lyp UÖŒX RÛXYŸ È.ÚL.U‚ ÚTÖyz›yPÖŸ. A.‡.˜.L. iyP‚ NÖŸ‘¥ ÚR.˜.‡.L. ÚYyTÖ[Ÿ GÍ.BŸ.TÖŸ†‡TÁ L[• LPÖŸ.

ÚNX• UÖYyP†‡¥ TÖ.U.L.°•, ÚR.˜.‡.L.°• ÚSWzVÖL ÚTÖyz›yP JÚW ÙRÖh‡ C‹R ÙRÖh‡RÖÁ. C‹R ÙRÖh‡eLÖ] Ky|L· ÚUoÚN¡ LÖÚY¡ TÖ¦ÙPeÂe L¥©¡›¥ ÚS¼¿ GQTyP].

L|• CµT½

C‡¥ ÙRÖPeL†‡¥ TÖ.U.L. ÚYyTÖ[Ÿ È.ÚL.U‚ i|R¥ Ky| ÙT¼¿ ˜Á]‚›¥ C£‹RÖŸ. B]Ö¥, C¿‡or¼¿L¸¥ ÚR.˜.‡.L. ÚYyTÖ[Ÿ GÍ.BŸ.TÖŸ†‡TÁ ˜ÁÂÛX ÙT¼\ÖŸ. AY£eh•, È.ÚL.U‚eh• JªÙYÖ£ r¼¿L¸¨• L|• ÚTÖyz ŒX«V‰.

C¿‡or¼¿ ÙS£jh• NUV• ÚR.˜.‡.L. ÚYyTÖ[Ÿ GÍ.BŸ.TÖŸ†‡TÄeh Ky|L· N¼¿ i|RXÖL fÛP†RRÖ¥ AYW‰ ÙY¼½ S•‘eÛL ‰¸Ÿ†R‰. B]Ö¥, 15-Y‰ r¼½¥ J£ –Á]„ YÖehT‡° G‹‡W†‡¥ ‡{Ÿ ÚLÖ[Ö¿ H¼TyP‰. CR]Ö¥ ˜z° A½«T‡¥ CW°YÛW TWTW“ ŒX«V‰.

ÚR.˜.‡.L. ÙY¼½

G‹‡W†‡Á ÚLÖ[Ö¿ N¡ ÙNšVTyP‘Á, ÚR.˜.‡.L. ÚYyTÖ[Ÿ GÍ.BŸ.TÖŸ†‡TÁ ÙY¼½ ÙT¼\RÖL A‡LÖW”ŸYUÖL A½«eLTyPÖŸ. AYŸ 75,672 YÖehL· ÙT¼¿ RÁÛ] G‡Ÿ†‰ ÚTÖyz›yP È.ÚL.U‚ÛV LÖyz¨• 2,594 Ky|L· «†‡VÖN†‡¥ ÙY¼½ YÖÛL sz]ÖŸ. 73,078 YÖehL· ÙT¼¿ È.ÚL.U‚ ÚRÖ¥« AÛP‹RÖŸ.

A‡LÖW”ŸY ˜z° «YW• Y£UÖ¿:-

T‡YÖ] Ky|L·:- 2,12,608

T‡YÖ] Ky|L·:- 1,69,607

1) GÍ.BŸ.TÖŸ†‡TÁ (ÚR.˜.‡.L.)- 75,672

2) È.ÚL.U‚ (TÖ.U.L.)- 73,078

3) ÚL.T†UWÖ^Á (rÚV.)- 6,273

4) H.TÖefV• (rÚV.)-2738

5) BŸ.ÙN‹‡¥hUÖŸ (C‹‡V ^]SÖVL Lyp)- 2487

6) ‘.TÖXr‘WU‚VÁ (TÖ.^]RÖ)- 2286

7) GÍ.ÚL.TÖŸ†‡TÁ (rÚV.)- 1338

8) BŸ.U‚ (rÚV.)-1254

9) «.Wtp† (rÚV.)- 1254

10) ‘.˜£LÁ (rÚV.)-1110

11) ‘.TÖŸ†‡TÁ (rÚV.)-672

12) È.TÖŸ†‡TÁ (rÚV.)-605

13) ÚL.TZÂ (rÚV.)-473

14) ÚL.TZÂNÖ– (rÚV.)- 367.


Wednesday, May 4, 2011

பழிக்கு பழி இரத்ததிற்கு இரத்தம் - ஒபாமா VS ஒசாமா



  வருத்தம் ஒரு மனித உயிர் பழியானது அல்காயிதா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையால் சுட்டுக்கொன்றது.
எப்படியோ எந்த ஒரு நாடும் சரி அமெரிக்காவிற்கு பின்னால் வால் பிடிக்ககூடாது. வால் பிடித்தால் இது போன்ற கதியை சந்திக்க நேரிடும்.

சரியா தவறா நீ செய்தது சரி என்றால் நான் செய்ததும் சரிதான். பழிக்கு பழி. முன்வினை பின்வினை அவ்வளவே.

 ஒரு நாடு மற்ற நாடுகளின் மீது ஆதிக்கத்தை செலுத்துவது. பெரும்பான்மையான நாடுகள் ஒரு நாடு எதைச் செய்தாலும் ஆதரிக்கும் போக்கு, தான் நினைத்தை மற்ற நாடுகளின் மீது திணித்து தான் செய்ய நினைக்கும் காரியத்தை சாதித்துக் கொள்வது. இதையெல்லாம் அமெரிக்கா என்கிற வல்லரசு செய்து கொண்டிருக்கிறது.

வல்லரசு என்றால் அவ்வாறெல்லாம் செய்யலாமா அது சர்வதேச சட்டப்படி குற்றமில்லையா என்றால். அது பெருபான்மையான நாடுகளின் ஆதரவு ஒரு நாட்டுக்கு இருந்தால் அந்நாடு ஜனநாயக போர்வையில் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கருத்து அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.

ஏன் இதை மற்ற நாடுகள் தடுக்க முன்வரவில்லை தடுப்பதற்கான அதிகாரமில்லையா இல்லை வல்லரசு நாடான அமெரிக்காவின் மீது பயமா.

அமெரிக்கா எதை செய்தாலும் மற்ற நாடுகள் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறது. சரியான கண்டனம் தெரிவிப்பதில்லை ஏன்.

ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது சரியான காரணமில்லாமல் போர் தொடுத்தால் அதனை தடுக்க முடியும் அல்லது அல்லது அந்நாட்டில் ஆளும் அரசால் ஒரு பெரும்பான்மையான பொதுமக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்றால் சர்வதேச சமுகத்தால் கண்டனம் தெரிவித்து அதையும் மீறி செயல்பட்டால் அந்த அரசின் மீது பொருளாதர தடை வித்தித்து அந்நாட்டை வழிக்கு கொண்டுவரலாம்.

எந்த ஒரு தனிமனிதருக்கு எதிராகவும் பொது மக்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தலோ அல்லது தாக்குதலோ நடத்தவோ அரசாங்கம் அல்லாது மற்ற அமைப்புகளுக்கு தண்டிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அது போல ஒரு அரசாங்கத்திற்கு எதிராக உங்களுடைய கருத்தை சொல்ல வன்முறையை தவிர்த்து நிறைய வழிகள் இருக்கின்றன. ஒரு சிறந்த எதிர்கட்சியாக இருந்து அரசின் கொள்கைளை விமர்சிக்கலாம் மற்ற நாடுகளின் வெளியுறவுக் கொள்கைளை விமர்சிக்கலாம் அல்லது மற்ற நாடுளை எதிர்த்து அவர்கள் செய்யும் அத்துமீறல்களை கண்டித்து சர்வதேச சமூகத்தினரிடையே கொண்டு சென்று விவாதம் நடத்தலாம் அதை விடுத்து தனிப்பட்ட முறையில் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வது என்பது விபரீதமான முடிவைத் தான் தரும்.


Saturday, April 30, 2011

தேர்தல் களம் - வெற்றி நமதே! வாய்மையே வெல்லும் !

   எப்படியோ தேர்தல் கூத்தெல்லாம் நடந்து முடிஞ்சிருச்சி. அப்பப்பா தேர்தல் தேதி அறிவித்த உடனே எல்லா கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு கூட்டணி அமைப்பதில் மும்முரமாகி, திமுக மற்றும் அ.இ.அ.தி.மு.க வும் பெரிய கட்சியான மற்றும் அதிக வாக்கு வங்கியை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியை இழுக்க போட்டிப் போட்டு அதில் தி.மு.க வெற்றிப் பெற்று காங்கிரஸ் தயவுடன் கூட்டணி அமைத்து தமிழக தேர்தலில் போட்டியிட்டது.

காங்கிரஸ் கூட்டணியில் திமுக,பாமக,விடுதலை சிறுத்தைகள்,இந்திய முஸ்லீம் லீக்,கொங்குநாடு முன்னேற்றக் கழகம், முவேந்தர் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

அதிமுக கூட்டணியில் தேமுதிக,CPI, CPI(M),சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு நாடு இளைஞர் பேரவை, மனித நேய மக்கள் கட்சி,இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்ன்னி கழகம், பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

காங்கிரஸ் கூட்டணியில் முதலில் இழுபறி ஏற்பட்டு சிறிய குழப்பத்திற்கு பிறகு சுமுகமாக தொகுதி பங்கீடு முடிந்தது. அப்பொழுது மற்றவர்களின் கவனமெல்லாம் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருந்தது.

 என்ன கூட்டணி அமையுமா இல்லை அமையாதா என்று இருந்தார்கள். ஒரு கட்டத்தில் திமுக செயற்குழு கூடி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியில் வந்து போட்டியிடுவது, மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அமைச்சரவையில் இருந்து விலகி மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பது என்று தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்தது.

  தி.மு.க வினர் மத்திய அரசியலில் இருந்து வெளியில் வந்தாலும் மத்திய அரசுக்கு போதிய பலம் பெற சமாஜ்வாடி கட்சி ஆதரவளிக்க தன்னிச்சையாக முன் வந்தது. இது போன்று நிறைய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மத்திய அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்தது.

ஆனால் காங்கிரஸ் கட்சி மிகவும் மனமுடைந்தது திமுக வின் தன்னிச்சையான விலகல் என்கிற முடிவுக்கு. தி.மு.க கேட்ட மந்திரி சபை கொடுத்து அழகு பார்த்தும் கூட்டணி தர்மத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களின் அத்துமீறலை, அதிகார துஷ்பிரயோகத்தை நம் வீட்டில் நம் குழந்தை ஒரு தப்பு செய்தால் எப்படி வலிக்காமலும் அவர்களுடைய மனம் புண்படாமலும் தவறை சுட்டிக் காட்டுவோமோ அதுபோல சுட்டிக் காட்டியும் எப்படி அந்த குழந்தை தனது தவறை உணராமல் மீண்டும் மீண்டும் தவறை செய்யுமோ அதுபோல திமுக அமைச்சர்கள் செய்தாலும் தாய்மையுள்ளதோடு அரவணைத்து மத்திய அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் பேரியக்கம். அப்படி இருக்கும்போது தன்னிச்சையாக தி.மு.க விலகல் என்பது மிகவும் வேதனையானது என்று காங்கிரஸ் கருதியது.

திமுக செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை தெரிவிப்பதற்காக சென்ற மத்திய அமைச்சர்கள் அழகிரி மற்றும் தயாநிதிமாறனிடம் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் அன்னை சோனியா அவர்கள் தன்னுடைய வருத்தத்தை சொல்லியிருக்கிறார்கள். அதை கேட்ட அமைச்சர்கள் இருவரும் என்ன செய்வதென்றே தெரியாமல் நாமும் நமது கழகமும் எப்படிபட்ட மாபெரும் வரலாற்று பிழையை மற்றும் இப்படிபட்ட நேர்மையான காங்கிரஸுக்கு துரோகம் செய்ய நினைத்தோமே என்று மனவருத்தம் அடைந்து உடனே திமுக தலைவரை அழைத்து நடந்த தவறை சுட்டிக்காட்டி நாம் தவறை உணர்ந்து மீண்டும் மறுப்பறிக்கை விடவேண்டும் கூட்டணியில் நீடிக்க வேண்டும் வரலாற்றுப் பிழையை நாம் செய்யக் கூடாது என்று சொன்னவுடன் அதை உடனே ஏற்று மறுப்பறிக்கை விட்டது தி.மு.க தலைமை.

இது போன்ற சிக்கலை எளிமையாக தீர்த்துக் கொண்ட விதம் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை விதைத்துவிட்டது இது தான் சரியான கூட்டணி தாம் செய்யவிருந்த வரலாற்று பிழை திருத்தி கொண்டாரே கலைஞர் அவர் தான் தங்களுடைய முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்.

ஆனால் அதிமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் தொகுதி பங்கீடு நீண்ட இழுபறி, எண்ணிக்கை முடிந்தாலும் இன்ன இன்ன தொகுதிகள் முடிவாகவில்லை இப்படி இருக்கும் போது அதிமுக தனது 160 தொகுதி பட்டியலை வெளியிட்டு கூட்டணி கட்சிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.

இடதுசாரிகளின் தலைவர்கள் ஒன்று கூடி மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்று சந்திப்பது என்று முடிவெடுத்து, சந்தித்து மீண்டும் அதிமுக வுடன் பேசி பார்ப்பது உடன்பட்டால் கூட்டணி இல்லை என்றால் மூன்றாவது அணி என்று முடிவெடுத்தார்கள்.

இந்நிலையில் விஜயகாந்து, அப்பொழுது தனது தலைமையில் கூட்டணி அமைப்பது என்றே முடிவெடுத்து இருந்தார் ஆனால் அவருடன் இருந்த முன்னணி தலைவர் ஒருவர் சிபிஐ மாநில செயலாளர் த.பாண்டியன் ஒரு நம்பக தன்மையற்றவர் அவரை நம்பி நீங்கள் தவறான முடிவு மற்றும் அறிக்கை வெளியிடவேண்டாம் என்று சொல்லி இருக்கிறார், இவரும் இவர் தரப்புக்கு நாம் இந்த கம்யூனிஸ்டுகாரர்களையே நம்பக் கூடாதென்று சொல்லியிருக்கிறார்.

மீண்டும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை ஒரு சுமூக உடன்பாடு வந்தது இந்நிலையில் மக்களின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொண்டார் ஜெயலலிதா அவர்கள்.

 இந்த அம்மையார் எப்பொழுதும் இப்படித் தான் யாரையும் மதிக்காது, தான் தோன்றிதனமாக எதையும் செய்யும். கூட்டணி கட்சித் தலைவர்களையே மதிப்பதில்லை எப்படி ஓட்டுப் போடும் மக்களை மதிக்கும் என்று மக்கள் கொந்தளித்தார்கள்.

இந்த குழப்பம் போதாதென்று மதிமுகவை அசிங்கபடுத்தியது, கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்டு மற்றும் கடந்த காலங்களில் அதிமுக போட்டியிட்ட எல்லா இடைத்தேர்ல்களிலும் தனது கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டால் எப்படி பிரசாரம் செய்வாரோ அதைவிட 100 மடங்கிற்கு அதிகமாக அதிமுக வேட்பாளருக்காக பிரசாரம் செய்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், அவருக்கு இந்த தேர்தலில் வெறும் 9 இடங்கள் தான் தரமுடியும் இல்லை இல்லை உங்களுக்கு 8 இடங்கள் தான் தரமுடியும் இல்லை இல்லை உங்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை அதனால் 7 தொகுதிகள் தான் தரமுடியும் என்று சொல்லி மதிமுகவின் தன்மானத்தை விலை பேசியது, இந்த செயல் மதிமுகவினரிடம் மட்டுமல்லாமல் படித்த மக்களில் இருந்து பாமர மக்கள் வரைக்கும் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி அதிமுக மீது மீண்டும் மீண்டும் வெறுபுணர்ச்சியை அதிகப்படுத்தியது.

இது மட்டுமா தேர்தல் பிரசாரத்தில் கூட்டணி கட்சி தலைவரான விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளரை பிரசாரக் கூட்டம் என்று பாராமல் தான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்கிற நாகரிகத்தை மறந்து அடித்து உதைத்தது மக்களிடையே மேலும் வெறுப்பை ஏற்படுத்தியது.

இதுபோன்று மீண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர் போட்டியிடும் கட்சி சின்னத்தையே மாற்றிக் கூறி நான் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். இதையெல்லாம் கண்ட மக்கள் வெறுப்பின் உச்சிக்கே சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற அதிமுக கூட்டணியின் குளறுபடிகளால் காங்கிரஸ் கூட்டணிக்கு அபாரா வெற்றியை தேடித்தந்துவிட்டார்கள்.

இது ஒரு புறமிருக்க திமுக கடந்தகாலங்களில் செய்த சாதனைகளை சொல்லியும், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு போன்றவர்களின் கடும் பிரசாரத்தினால் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அதனால் காங்கிரஸ் கூட்டணிக்கு 130+ தொகுதிகளும் அதிமுக கூட்டணிக்கு 104 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஒவ்வொரு தொகுதியின் வெற்றி வாய்ப்பு என்பது குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் இருக்கும் என்பதால் காங்கிரஸ் கூட்டணிக்கு தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

 காங்கிரஸ் கட்சியானது கலைஞரை 6 வது முறையாக அரியணையில் ஏற்றியே தீர்வது என்று முடிவெடுத்து உழைத்த கடுமையான உழைப்பிற்கு வருகின்ற மே 13 அன்று விடைத் தெரியும்.

Thursday, March 24, 2011

தேர்தல் விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகள்

தமிழகத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணிகளை உறுதி செய்துள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல், பிரசாரம், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்ட பணிகளில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

தேர்தலை அமைதியான முறையில் நடத்திட அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இதனால், விதிமுறை மீறல்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் என்னென்ன என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


* பிரசாரத்தின் போது, சாதி, மத, மொழி உணர்வுகளை தூண்டும் வகையில் பேசினாலோ அல்லது இறையாண்மையை பாதிக்கும் வகையில் பேசினாலோ இந்திய தண்டனை சட்டம், பிரிவு-125, 153.(ஏ) மற்றும் 153.(பி) யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

* பொது இடங்களில், சுவர் விளம்பரம் மற்றும் போஸ்டர்கள் ஒட்டினால், தமிழ்நாடு, பொது இட சீர்குலைப்பின் பிரிவு- 2-4(ஏ) ன் கீழ் வழக்கு பதிவு செய்து, ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

* பிரசார மற்றும் பொதுக்கூட்டங்களில் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்களை கட்சிகள் வினியோகிப்பது தெரியவந்தால், பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-171.(பி) ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு, ஒரு வருடம் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

* வாக்காளர்களுக்கு உணவு மற்றும் மது வினியோகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-123, 151 மற்றும் 135.(சி) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குறைந்த கால சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

* பிரசாரத்தின் போது வெளியிடப்படும் துண்டு பிரசுரங்களில் அச்சகத்தின் முகவரி இல்லாவிட்டால், பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-127.(ஏ) ன் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, ஆறு மாத சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

* தேர்தலில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்திற்கும் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி சீட்டு பெற்று, அதை வாகனத்தின் முன் ஒட்டியிருக்க வேண்டும். மீறினால், இந்திய தண்டனை சட்டம், பிரிவு-171.(எச்) யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

* தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்தாலோ அல்லது வேறு விதமான குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு- 171.(டி) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு வருடம் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

* தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் வரும், ஏப்ரல் மாதம் 11ம் தேதி மாலை 5மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். மீறுபவர்கள் மீது, பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-126 ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

* வாக்குப்பதிவு தினத்தன்று கட்சிகளால் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகள் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும். இதை, மீறுபவர்கள் மீது பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-130 ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். எனவே, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் விதிமுறைகளை பின்பற்றி தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.