எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, July 22, 2010

காமராஜருக்கு அடுத்து கலைஞர்


எப்பொழுதோ எழுதவேண்டிய விஷயத்தை இப்பொழுதாவது பதிகிறேனே என்று நினைக்கும் போது வறுத்ததிற்கு பதில் மகிழ்ச்சி தான் பெருகுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கலைஞர் அவர்கள் சொல்லியிருந்தார் நாங்கள் காமாராஜரைப் போன்றுதான் சிறந்த கல்விக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.

எப்பொழுதுமே மற்ற மாநிலங்களை விட கல்வியில் நாம் முன்னோக்கிதான் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தொழில் நுட்பக் கல்லுரிகள் தமிழ்நாட்டில் மட்டும் 500 உள்ளது. கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கை 12000 ஆயிரத்திற்கு மேல் இருக்கின்றன.

எல்லா கிராம ஊராட்சிகளிலும் அரசு ஆரம்பகல்வி நிலையங்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது உயர்நிலைப் பள்ளிகள் இரண்டு கிராம ஊராட்சிகள் என்கிற அடிப்படையில் உள்ளது என்றால், தனியார் பள்ளிகள் கிராம ஊராட்சிகளில் குறைந்தது இரண்டு உள்ளது, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் கேட்கவே வேண்டாம் அவ்வளவு தனியார் பள்ளிகள் உள்ளது.

இதெல்லாம் கல்வி புரட்சியே என்று சொல்லலாம். தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இல்லாமல் கல்வியில் புரட்சி என்பது நடக்காது.

சமச்சீர் கல்வி என்று எல்லாருக்கும் சமமான கல்வியை கொண்டுவந்து ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்று பகுபாடு இல்லாமல் எல்லாருக்கும் சமமான கல்வியை கொடுத்ததில் கலைஞருக்கு பெரும் பங்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை.

அதே போன்று குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு இலவச கல்வி வழங்கி மாபெரும் கல்வி புரட்சிக்கு வித்திட்டுள்ளார் கலைஞர் அவர்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்  அவர்கள் சொல்கிறார் கல்விக்கடன் இந்தியாவில் வாங்கும் 10 பேரில் 4 மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தர்வர்கள் என்கிறார். அப்படியென்றால் கல்வியில் ஆர்வமில்லாமலா இவ்வளவு மாணவர்கள் கல்விக் க்டன் பெறுகிறார்கள்.

இதெல்லாமே கல்வி புரட்சிதான். காமாராஜருக்கு அடுத்தப்படியாக நான் இருக்கிறேன் என்று கலைஞர் சொல்வதில் நியாயம் இருக்கிறது.

இது போன்று அவர் நிறைய திட்டங்களை மக்களுக்காக வழங்க வேண்டும் என்று கேட்கிறேன் கலைஞரைப் போன்று மற்றவர்களால் இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தமுடியுமா என்றால் முடியாது என்று சொல்லலாம்.

கல்வி புரட்சியில் காமராஜருக்கு அடுத்தது கலைஞர் தான் என்பதில் சந்தேகமில்லை.

Thursday, July 15, 2010

வாழ்நாள் சாதனையாளர் - காமராஜர் பிறந்த நாள் செய்தி

108 வது பிறந்த நாள் இன்று.

விருதுநகரில் ஜூலை 15, 1903 ஆம் ஆண்டு பிறந்தார்.

ஏப்ரல் 13 1954 ஆம் ஆண்டு காமராஜர் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார்.

அவருடைய சாதனைகளை இன்று நினைவு கொள்வதில் நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம்.

1. குலக்கல்வித்திட்டத்தை ஒழித்தார்.
2. கடந்த ஆட்சியில் நிதி பிரச்னையால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தது மட்டுமல்லாமல் மேலும் 12000 ஆயிரம் பள்ளிகளை திறந்தார்.
3. ஏழை எளிய மாணவர்கள் 3 மைல்களுக்கு மேல் தாண்டி செல்லாமல் இருக்க பள்ளிகளை நிறுவினார்.
4. எல்லா பள்ளிகளுக்கும் முடிந்த வரை தேவையான எல்லா  அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.
5. எல்லா கிராமங்களிலும் ஆரம்பகல்வி நிலையங்களை அமைத்தார் எல்லா பஞ்சாயத்துகளிலும் 10 வது வரைக்கும் மேல் நிலைய பள்ளிகளை அமைத்தார்.
6. கல்லாமை என்கிற நிலைமையை இல்லாமை என்றாக்கினார். எல்லாருக்கும் 11 ஆம் வகுப்புவரை கல்வியை இலவசமாக்கினார்.
7. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை உலகிலேயே முதல் முறையாக அறிமுகப் படுத்தினார்.
8. அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்கினார். இதனால் பள்ளிகளில் ஏழை பணக்காரன் என்கிற பாகுபாட்டை களைந்தார்.
9. ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த கல்வி அறிவு சதவிகிதம் 7 % இருந்தது அதுவே காமராஜர் காலத்தில் 37 % ஆக உயர்ந்தது.
10. ராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் 12000 பள்ளிகள் இருந்தது அதுவே காமராஜர் காலத்தில் 27000 ஆயிரமாக உயர்ந்தது.
11. பள்ளிகள் மட்டும் இருந்தால் போதுமா என்று கல்விதரத்தையும் உயர்த்தினார்.
12. வேலை நாட்களை 180 லிருந்து 200 ஆக உயர்த்தினார்.
13. இவரது காலத்தில் தான் IIT என்னும் இந்தியன் இன்ஸிடியூட் ஆப் மெட்ராஸ் தொடங்கப்பட்டது
14. இவரது காலத்தில் தான் ஆரணி, அமராவதி, கீழ் பவானி, மணிமுத்தாறு, காவிரி பாசன பகுதியில்,வைகை, சாத்தூர்,கிருஷ்ணகிரி, புலம்படி,பரம்பிக்குலம், நொய்யாறு போன்ற ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டன.
15. பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன அதில் குறிப்பாக நெய்வேலி நிலக்கரி சுரங்கம், ஊட்டியில் புகைப்பட சுருள் தயாரிக்கும் தொழிற்சாலை,சிகிச்சை கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, சர்க்கரை ஆலைகள், மணலியில் சுத்திகரிப்பு ஆலை போன்ற பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
16. குந்தா நீர்மின் திட்டம், ஊட்டி மற்றும் நெய்வேலியில் அனல்மின் திட்டம் போன்ற பெரியத்திட்டங்கள் இவரது ஆட்சிக் காலத்தில் தான் தொடங்கப்பட்டது.

எல்லா துறைகளும் இவரது ஆட்சிகாலத்தில் சிறப்பாக முன்னேறியது.

எந்த அரசியல் தலைவர்களும் செய்யாத மற்றும் செய்ய முடியாத ஒரு காரியத்தை இவர் செய்தார் என்றால் அது கே-பிளான்.

இந்த K –Plan படி மூத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்லது இரண்டு பதவிகளில் இருப்பவர்கள் அதாவது கட்சி பதவியிலும் மற்றும் அமைச்சர் பதவியிலும் இருப்பவர்கள் அமைச்சர் பதவியை துறந்து கட்சிப் பணியை செய்ய வேண்டும் என்றார் இந்த திட்டம் காமராஜ் திட்டம் என்றானது.

இவரது தொலை நோக்குத்திட்டத்தை பார்த்த அன்றைய பாரத பிரதமர் ஜவஹலால் நேரு அவர்கள் காமராஜரை டெல்லிக்கு அழைத்து உங்களது சேவை தமிழ்நாட்டிற்கு மட்டும் போதாது இந்திய தேசம் முழுமைக்கும் தேவை என்றார்.

காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 1963ஆம் ஆண்டு அக்டோபர் 9 தேதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகள்:

1952 ல் பாரளுமன்ற உறுப்பினராக திருவல்லிபுத்தூர் தொகுதி.
1954 ல சட்டமன்ற உறுபினராக குடியாத்தம் தொகுதி.
1957 ல் சட்டமன்ற உறுப்பினராக சாத்தூர் தொகுதி.
1962 ல் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் சாத்தூர் தொகுதி.
1969 ல் பாராளுமன்ற உறுப்பினராக நாகர்கோவில் தொகுதி.
1971 ல் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் நாகர்கோவில் தொகுதியில்.


இவருடைய அரசில் பங்கு கொண்டுள்ள அமைச்சர்களுக்கு கூறிய அறிவுரை தான் இன்றும் பேசபடுகிறது.

அந்த அறிவுரை “ எந்த பிரச்னையும் எதிர்கொள்ளுங்கள் அதில் இருந்து ஒதுங்க நினைக்காதீர்கள் தீர்வை காணுங்கள் என்றார் ”.

இரண்டு பாரத பிரதமர்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

பெருமை மிகு விருதான ” பாரத் ரத்னா ” விருது இவருக்கு வழங்கப்படது.

அக்டோபர் 2, 1975 ஆம் ஆண்டு அவர் தனது கடமையை முடித்து கொண்டார்.

காமராஜர் பிறந்த மண்ணில் நாம் பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமைபட்டுக் கொண்டு அவருடைய பிறந்த நாளான இன்று அவரது வழியில் நாமும் நடந்து காட்டவேண்டும் என்கிற உறுதிமொழியை எடுப்போம்.

Monday, July 12, 2010

காட்டுமிராண்டி தனமான ஆணாதிக்க சட்டம்


ஈரானை சேர்ந்தவர் அசார்பக்ரே. இவரை 14 வயதில் விருப்பம் இன்றி ஒரு முதியவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் வேறு ஆண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறி இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

எனவே கைது செய்யப்பட்ட அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் 18 வயது நிரம்பியதும் அவருக்கு தாப்ரிஷ் சிறையில் இந்த தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


இதைத்தொடர்ந்து அவர் 4 வருடமாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு 18 வயது நடைபெறுகிறது. இன்னும் சிறிது நாளில் தண்டனை நிறைவேற்றப்பட உள்ள அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈரானின் மனித உரிமை கமிஷனின் மினா அகாடி ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே தண்டனையை 99 சவுக்கடியாக குறைக்க அவரது வக்கீல்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த சட்டம் காட்டு மிராண்டித்தனமான பிற்போக்குத்தனமானது உலக மனித உரிமை ஆணையம் இது போன்ற சட்டத்தை எதிர்த்து தீர்மான நிறைவேற்றி உலகில் எந்த மூலையிலும் பாலியல் ரீதியான பிரச்னைக்கு கல்லாலோ அல்லது எந்தவித துன்புறுத்தலாலோ ஒருவருக்கு மரண தண்டனை வழங்க கூடாதென்று வழியுறுத்த வேண்டும்.

ஒரு பெண் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது ஒரு ஆண் எந்த பெண்ணை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற நிலை இருக்க வேண்டும் 21 வது நூற்றாண்டில் இது போன்று ஒரு காண்டிமிராண்டித் தனமான சட்டத்தை எதிர்த்து உலகமக்கள் ஒன்று திரள வேண்டும்.

ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பிடித்த எந்த ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ வாழ உலக சட்டம் நடை முறைக்கு வரவேண்டும்.

ஒருவருடைய அந்தரங்க வாழ்க்கையை எந்த ஒரு பொதுவான சட்டமும் கட்டுப்படுத்த கூடாது அப்பொழுது தான் தனிமனித உரிமை காக்கப்படும்.

ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் ஒரு பெண் தனக்கு பிடித்த ஆணுடன் வாழ முடியாது என்றால் எவ்வளவு ஆணாதிக்க தனமான சர்வதிகாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது போன்ற ஒரு ஆணாதிக்க சட்டங்களை உடனே கொளுத்தி போட உலகமக்கள் முன்வரவேண்டும்.

சட்டம் எல்லாருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும் எந்த தனிமனிதனையும், அவனது தனிபட்ட சுதந்தரத்தை பாதிக்காதவகையிலும், மற்றும் ஒவ்வொருத்தருடைய தனிபட்ட சுதந்தரத்தை பேணிக்காக்கும் வகையிலும் பொதுவான உலகசட்டம் நடை முறைக்கு வரவேண்டும்.

Saturday, July 10, 2010

தமிழக சட்டசபையின் ஆசிரியர் தந்தை பெரியார்

தமிழக சட்டசபை வளாகம் சரியான ஒரு இடத்தில் அமைந்திருக்கிறதா என்றால் தெரியாது ஏனென்றால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வழி. இரயில் நிலையத்திற்கு செல்லவேண்டுமானால் அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். பாரி முனைக்குச் செல்லவேண்டுமானாலும் அந்த வழியாகத்தான். இப்படி நெரிசல் மிகுந்த பகுதியில் கட்டயிருப்பது மேலும் கூட்ட நெரிசலைத்தான் ஏற்படுத்தும்.

துணை நகரம் அமைப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. மீண்டும் தி.மு.க பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால் துணைநகரம் அமைவதில் எந்த சிக்கலும் இருக்காது.

எப்படி சட்டமன்ற வளாகம் அமைக்கப்பட்டதோ அப்படி துணை நகரமும் கலைஞர் இருக்கும் போதே அவருடைய ஆட்சியிலே ஏற்பட்டால் அவருடைய அரசியல் வாழ்க்கையில் மேலும் ஒரு மைல்கல்லாக அமையும்.

இப்பொழுது அமைந்துள்ள ஒருகிணைந்த தலைமைச் செயலகமும், சட்டசபை வளாகமும் பசுமை திட்டத்தின் கீழ் முழுமையான பாதுக்காப்புடன் அமைந்துள்ளது அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை அதில் வேற்று மனிதர்களோ அல்லது சந்தேகத்திற்குறிய நபர்களோ உள்ளே நுழைய முடியாது.

இந்த சட்டசபை வளாகம் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாநகருக்கு வெளியில் அமைக்கலாமா இல்லை மாநகருக்குள்ளே அமைக்கலாம் என்கிற ஒரு மாற்றுக் கருத்து இருந்தது. சட்டசபை வளாகம் அமைக்க YMCA விளையாட்டு மைதானமும் பரிசீலனையில் இருந்தது. அது பின்னர் கைவிடப்பட்டது அ.தி.மு.க ஆட்சியில் பின்னர் முழுவதுமாக கைவிடப்பட்டது சட்டசபை வளாகம் அமைக்கும் திட்டமே.

2006 ல் தி.மு.க ஆட்சி அமைத்த பிறகு அந்த திட்டத்தை கலைஞர் அவர்கள் கையிலெடுத்து ஓமந்தூரார் தோட்டத்தில் கட்ட தீர்மானித்து எதேச்சையாக கட்டி முடித்த அந்த இடம் மாபெரும் வரலாற்று சான்றை பெற்றுள்ளது.


திரவிட தந்தையாகிய பெரியார் அமர்ந்து பாடம் எடுப்பதைப் போலவும் மூத்த மாணவனாகிய அறிஞர் அண்ணா மற்ற சக மாணவர்களாகிய உறுப்பினர்களை திரவிட பாசரைக்கு அன்புடன் அழைப்பதை போலவும் இயற்கையாக அமைந்துள்ளது.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை சட்டசபைக்கு அண்ணா அவர்கள் வரவேற்பதைப் போன்றும் சட்டமன்றத்திலே குழுமியுள்ள உறுப்பினர்களுக்கு தந்தை பெரியார் பாடம் நடத்துவதை போன்றும் உள்ளது.

நீங்கள் வண்டியில் பயணம் செய்யும் போது பார்த்தீர்களே ஆனால் அண்ணாசாலையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் போது முதலில் வாலாஜா சந்திப்பில் அறிஞர் அண்ணா அவர்கள் வரவேற்பார் அடுத்த சிக்னலிலே தந்தை பெரியார் அமர்ந்த்திருப்பதைப் பார்ப்பீர்கள்.

தந்தை பெரியார் சட்டமன்ற வளாகம் முன்பு அமர்ந்திருப்பதால் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடம் எடுப்பதை போன்று இருக்கும்.

இந்த காட்சி இயற்கையிலே அமைந்த காட்சி அது. செயற்கையாக யாரும் சட்டமன்றம் கட்டியபிறகு சிலைகளை அமைக்கவில்லை.

இயற்கையே அப்படியொரு அழகை தந்துள்ளது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை கொள்ளதக்க விஷயமாக உள்ளது என்றால் மிகையல்ல. நமக்கெல்லாம் வழிகாட்டியாகவும், திரவிட தந்தையாகவும் மற்றும் என்றுமே சட்டமன்ற உறுபினர்களுக்கு ஆசிரியராகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள். அதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கடமையை சரிவர செய்யுங்கள் நம்மை என்றுமே தந்தை பெரியார் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்கிற நினைப்போடு.