எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, April 3, 2009

நடிகர் S. S. சந்திரன் ஒரு மாமாவா, நடிகர் சந்திரசேகர் கம்யூனிஸவாதியா

கூட்டுப் புழுக்கள்:


இந்தப் படத்தை நான் சிறுவயதிருக்கும் போது கிட்டதட்ட 2 அல்லது 3 ஆம் வகுப்பு படித்துக் கொண்டியிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன் முதல் முறையாக பார்க்கும் போது. அப்பொழுதெல்லாம் படம் என்றால் என்ன என்று அந்த வயதில் தெரிய வாய்ப்பில்லை. அதனால் நானும் கதையோடு ஒன்றி கதாப் பாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் சிரித்தால் சிரிப்பதும், அவர்கள் அழுதால் நாமும் அழுவதும், அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் நாம் கஷ்டப் படுவததை போல் உணர்வோம்.

அந்த உணர்வு நேற்று படம் பார்க்கும் போது எனக்கு ஏற்பட்டது ஏனென்றால் நான் படத்தில் முழுவதுமாக லயித்துவிட்டேன் என்று சொல்வதை விட இயக்குனரின் கதை மற்றும் திரைக்கதை மிக அருமையாக இருந்தது.


நேற்று ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக்காட்சி அலைவரிசையில் கூட்டுப் புழுக்கள் என்ற படம் பார்த்தேன்.மிகவும் அருமையான படம் அது. ஒவ்வொரு கதாப் பாத்திரத்தையும் இயக்குனர் ஆர்.சி. சம்பத் செதுக்கி இருக்கிறார். அதில் நடித்த நடிகர்கள் அனைவரும் மிக அற்புதமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

முடிந்தால் எல்லோரும் பாருங்கள்.

முடிந்தவரை இயக்குனர் அவர்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.

குடும்பம், அரசியல், உறவுகள், பாசம், காதல், சோகம், சந்தோஷம், காதல் தோல்வி, கம்யூனிஸம்.


இங்கு ஒரு கதாப் பாத்திரத்தில் வரும் சம்பவத்தை சொல்ல ஆசைப் படுகிறேன்:


அந்தப் படத்தில் வரும் ஒரு குடும்பத்தில் அப்பா மாதம் ஒவ்வொரு முறையும் ஏதாவது வேசி கிட்ட போவார்.அதற்கு ஒரு இடைத்தரகர் ஒருவர் இருப்பார்.
(இதில் அப்பா கதாப்பாத்திரமாக S.S. சந்திரன் )

இந்த மாதம் அந்த இடைத்தரகர் வந்து நல்ல அழகான கல்லூரிப் பெண் இருக்கிறார்கள் வாங்க என்று கூப்பிடுவார் அவரும் வருவார் பார்த்தால் அவருடைய மகள்.

இங்கு இருவருக்குமிடையே ஏற்படும் குற்றவுணர்வுகளை மிக அழகாக நேர்த்தியாக காட்டியிருப்பார் இயக்குனர் அவர்கள்.

அடுத்த சீன்களில் அப்பாவுக்கும் மகளுக்கும் வசனமே இருக்காது இருவரும் பார்த்துக்கொள்ள மாட்டார்கள் ஆனாலும் சுகமான முடிவை தந்து இருப்பார்.

இதில் இடதுகை சந்திரசேகர் கம்யூனிஸவாதியாக நடித்திருப்பார்.

இப்படி ஐந்து குடும்பங்கள் வாழ்கின்றன, ஒரே காம்பவுண்டுக்குள்.

ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் இருக்கும் பிரச்சனைகளையும் மிகவும் அழகாக சொல்லியிருப்பார்.

அதில் குறிப்பாக யாரையும் நாயகன் நாயகி என்று சொல்ல முடியாது.நடித்த எல்லோரும் நாயகர்கள் எல்லோருமே நாயகிகள்.

முழுமைப் பெற்ற படம் அது.

அதில் நடித்த நடிகர்கள்

ரகுவரன்
அமலா
இடக்கை சந்திரசேகர்
S.S. சந்திரன்
C.I.D. சகுந்தலா
தீபா
சாருகாசன்
ஸ்ரீகாந்த்
ராதாரவி
சரிதா
கோபால கிருஷ்ணன்

1 comment:

ttpian said...

உண்மை சுடும்...
தமிழ்நாட்டு அரசியல்வாதிகல்,தேர்தல் திருவிழாவுக்கு போஇவிட்டார்கள்
எங்கலைபோல சிலர் புலம்புகிறோம்