எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, April 26, 2009

கலைஞரின் கடைசி நாடகம் கரை சேர்க்குமா இந்த தேர்தலில்

கலைஞர் அவர்கள் அண்ணா நினைவிடத்தில் இன்று காலை 5 மணி முதல் உண்ணாவிரத்த்தை ஆரம்பித்திருக்கிறார்.

ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் என்கிற அரசில் நாடகத்தை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார் கலைஞர்.

இவ்வளவு நாள் இல்லாத அக்கறை இன்று ஏன் தோன்றியது?

புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் தோன்றியதைப் போல் இவருக்கும் தோன்றிவிட்டதா இல்லை இது வெறும் தேர்தலில் தோற்று விடுவோமோ என்கிற பயம் கடைசியாக உள்ள அஸ்திரத்தை பயன்படுத்தி மக்களை மாற்றலாம் என்று கனவு காண்கிறார்.

இதை அவர் ஆறு மாதத்திற்கு முன்பு செய்திருந்தால் நாம் சொல்லலாம் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார் இவரல்லவா தமிழினத்தலைவர் என்று.

இப்பொழுது எல்லோருக்கும் தெரியும் இது வெரும் அரசியல் நாடகம் என்று.

பார்ப்போம் கலைஞரின் இந்த கடைசி நாடகம் அவரை இந்த தேர்தலில் கரை சேர்க்குமா என்று.

கண்டிப்பாக இல்லை சேர்க்காது.

1 comment:

Raju said...

இதெப்படி கடைசி நாடகமாகும்...!
இன்னும் தேர்தலுக்கு நாட்கள் இருக்குங்க..!