எண்ணங்களின் பிரதிபலிப்பு

Tuesday, May 19, 2009

மாவீரன் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார்

மாவீரன் பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார். அவர் இறந்ததாக காட்டப்படும் உடல் பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக அவரை போன்ற ஒத்த முகத்தை செய்து ஒரு உடலைக் காட்டிஇருக்கிறார்கள் சிங்கள இராணுவம்.

ஏன் அவர்கள் அவ்வாறு வேறு ஒருவர் உடலைக் காட்ட வேண்டும். விடுதலைப் புலிகள் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை சிங்கள இராணுவம் கைப் பற்றியாகிவிட்டது ஆனால் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை மட்டும் பிடிக்க முடியவில்லை என்றால் அது அவர்களுக்கு உலக நாடுகள் மத்தியில் கவுர்வப்பிரச்னை அதனால் சிங்கள அரசாங்கமே பிரபாகரனைப் போன்ற உடலமைப்புள்ள ஒரு உடலை எடுத்து முகத்தை மட்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அதை படம் பிடித்துக்காட்டி பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளது.

இந்த உடலைப் பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளது எல்லோருக்கும்.

1.இரண்டு நாட்களுக்கு முன்பு வரை சிங்கள் இராணுவம் பிரபாகரன் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் தப்பிச் செல்லும் போது நாங்கள் அவர்களை தாக்கி அதாவது ராக்கெட் லாஞ்சர் மூலமாக சுட்டு வீழ்த்திவிட்டோம் என்றார்கள்.

அவ்வாறு சிங்கள ராணுவம் ராக்கெட் லாஞ்சர் மூலமாக தாக்கினால் அந்த வேனில் இருந்தவர்களெல்லாம் சிதைந்து இருப்பார்கள் அதாவது உடல்கள் எல்லாம் தனித்தனியாக
பியித்து எடுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கையில் முழு உடலைக் காண்பிக்கிறார்கள் என்றால் அது சந்தேகத்துக் குறியதே!

2. நேற்று ஒரு உடலைக் காண்பித்த போதும் இந்த உடல் none fire zone என்றழைக்கப் படும் போர் நடைபெறாத இடத்தில் இருந்து கண்டெடுக்கப் பட்டதாக சொன்னார்கள்.
போர் நடைபெறாத இடத்தில் அவருடை உடல் கிடப்பதற்கு எப்படி சாத்தியம்.

3. பிரபாகரன் ஆம்புலன்ஸ் வேனில் தப்பித்து போகும்போது நாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டோம் என்றார்கள், ஏன் பிரபாகரன் கடைசி நேரத்தில் தப்பித்து போக வேண்டும். பிரபாகரனுக்குத் தெறியும், இன்னும் எத்தனை விடுதலைப் புலிகள் மிச்சம் இருக்கிறார்கள், இன்னும் எவ்வளவு நாளைக்கு ஆயுதங்கள் உள்ளது, என்ன என்ன ஆயுதங்கள் உள்ளது, நாம் இந்தப் போரில் வெற்றி பெறுவோமா இல்லையா என்பது போன்ற விஷயங்கள் அவருக்கு நன்றாகவே தெறியும் அப்படி இருக்கும் போது அவர் எப்பொழுதோ தப்பித்து போக வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே அவர் கடைசி நேரத்தில் தப்பித்து செல்லவேண்டிய அவசியம் என்ன?

"நலமாக இருக்கிறார் பிரபாகரன்': வைகோ அளித்த பேட்டியில், ""பிரபாகரன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்; நலமுடன் பாதுகாப்பாக இருக்கிறார். இந்தியாவில் உள்ள சில ஊடகங்கள் தான், அவர் உயிரோடு இல்லை; இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டார் என செய்தி பரப்புகின்றன. இந்த செய்தியில் எள்ளளவும் உண்மை இல்லை,'' என கூறினார்.

நேற்றைய ZTamil தொலைக்காட்சி பேட்டியின் போது பேசிய, ஈழத்தமிழர்களுக்காக நீண்ட வருடங்களாக குரல் கொடுத்துவரும் பழநெடுமாறன் அவர்கள் பிரபாகரன் இறக்கவில்லை அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்றார். இவருக்கும் விடுதலை புலிகளுக்கும் நேரடித் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது அதனால் அவர் உறுதியாக சொல்கிறார் அதை நாம் சிறிதளவு யோசிக்கவேண்டிதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் எல்லோரும் பிரபாகரன் இறந்ததை நம்பமறுக்கும் போது அந்த விஷயம் ஊர்ஜிதம் படுத்தபடவில்லை என்று தான் தோன்றுகிறது.

மாவீரன் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கவாய்ப்பு அதிகமாக உள்ளது.

யாரும் கவலைப்படவேண்டாம்.

2 comments:

செல்வன் (அன்பு ) said...

வணக்கம் எம் தமிழ் உறவுகளே நாங்கள் ஆரம்பித்துள்ள www.tamilseithekal.blogspot.com பிளாகுக்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை உங்கள் இணையதளத்திலோ அல்லது பிளாகிலோ எங்களுடைய பிளாகையும் இணைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..

அன்புடன்
தமிழ்செய்திகள் team

Anonymous said...

Don't worry he knows that he is alive.