எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, February 1, 2009

மீண்டும் நிரூபணம் - சிங்களர்களின் கொடுங்கோல் ஆட்சியிக்கு

நார்வேயில் தமிழர்களுடன் உறவை வளர்த்த இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார்.

நார்வேக்கான இலங்கைத் தூதுவர் எசல வீரக்கோன் வெளிவிவகார அமைச்சரினால் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

நார்வேயில் கடந்த இருவருடங்களாக தூதுவராக கடமையாற்றிய ஏசல நார்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாகவும், நார்வேயில் உள்ள தமிழர்களுடன் உறவுகளை ஏற்படுத்திவருவதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சகம் புகார் செய்யப்பட்டதையடுத்து இவர் வரவழைக்கப்பட்டுள்ளார்.

நார்வேயில் தமிழ் மக்களுக்கு எதிரான புகைப்படக் கண்காட்சியை நடத்த வேண்டும் என இலங்கை அரசாங்கம் பணித்திருந்தது எனினும் இவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து திருப்பியழைக்கப்பட்டுள்ளார்.

சிங்கள் அரசின் பிரதிநிதியான தூதுவரே சிங்களர்களின் அடக்குமுறையை, இனப்படுகொலையை கண்டு அவரது அரசிற்கு எதிராக போராடத் துணிந்துள்ளார் என்றால் எந்த அளவிற்கு இலங்கைத் தமிழர்களுக்கு பாதிப்பு இருக்கும்.

No comments: