எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, November 28, 2008

காங்கிரஸின் கையாலாகதத்தனம்

மும்பையில் தீவிரவாதிகளின் கண் மூடித்தனமான தாக்குதல்.

காங்கிரஸ் இனிமேலும் விழிக்குமா செயலிழந்த உள்த்துறை மற்றும் உளவுத்துறை செயல்படுமா !

உள்த்துறை அமைச்சர் சிராஜ் பாட்டேல் கடந்த முறை நடந்த தீவிரவாத தாக்குதலின் போது
தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஒரே சமயத்தில் எடுக்கப்பட்ட உரையாடலின் போது மூன்று வெவ்வேறு நிறுவன்ங்களுக்கு தான் உடனுக்குடன் உடையை மாற்றி ஒய்யாரமாக பட்டும் படாமலும் பதில் சொல்கிறார்.

அதுபோன்று மூன்று வெவ்வேரான கோணங்களில் உள்த்துறையை சீரமைக்க அல்லது கட்டமைக்க முயற்ச்சி செய்திருக்கலாம்.

இவருக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை அவருக்கு தன்னுடைய ஆடை அலங்காரத்திலும் சிகை அலங்காரத்திலும் கவனம் செலுத்துவதற்க்கே நேரம் சரியாக இருக்கிற போது அவருக்கெங்க நேரம் உள்த்துறையையும், உளவுத்துறையையும் கவனிக்க.

(எனக்கு சரியாக தெரியவில்லை உளவுத்துறையும் இவருடைய துறையின் கீழ்தான் வருதா என்று, இருந்தாலும் அவர்மீதுள்ள கோபத்தினால் எழுதுகிறேன்)

இவரை ஏன் இன்னும் அமைச்சராக வைத்துள்ளார்கள் என்றால் அவர் நேரு குடும்பத்தாருக்கு நெருக்கமான நட்பு வட்டாரம் அவ்வளவே அவருடைய தகுதி.

காங்கிரஸில் களை எடுக்கு நேரம் வந்தாச்சி என்றுதான் நான் நினைக்கிறேன்.

மற்ற எல்லா துறைகளும் நன்றாக இயங்கி கொண்டிருக்கும் போது இவருடைய துறை மட்டும் ஏன் இப்படி தூங்கிக் (இயங்கி) கொண்டிருக்கிறது என்று புரியவில்லை.

இந்தியா அடுத்த 20-30 ஆண்டுகளில் தன்நிறைவை அடைந்த்துவிடும் வல்லரசாக மாறும் என்று கருதும் போது.பலவீனமான பாதுகாப்பு வளையங்கள் இருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

உடனடியாக நாம் செய்ய வேண்டியதெல்லாம் நல்லதொரு உளவு அமைப்பு. புதிதாக கட்டமைக்கப்படவேண்டும்,அவர்களுக்கு எல்லாவிதமான அதிகாரங்களையும் கொடுத்து திறம்பட செயல்பட வைக்கவேண்டும்.அவ்வாரு செய்தால் தான் சாதரண மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

அதைவிட்டு விட்டு வேரு எதை செய்தாலும் அது கங்கிரஸுக்கு பாதகமாக தேர்தலில் எதிரொலிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

1 comment:

Unknown said...

காங்கிரஸ் கிழ போல்டுகள் அமைச்சர்களாக இருக்கும் வரை என்னத்தை செய்ய முடியும்?

வெற்று பேட்டி கொடுத்து , தத்தி தத்தி நடக்கத்தான் முடியும்