எண்ணங்களின் பிரதிபலிப்பு

Saturday, November 15, 2008

கங்கிரஸ் தலைமையில் புதியகூட்டணி : பாராளுமன்றத் தேரதலில்







தமிழ் நாட்டைப் பொருத்தவரை மும்முனை போட்டியாகவும்
தேசிய அளவில் இருமுனை போட்டியாகவும் அமைய அதிக வாய்ப்பிருக்கிறது.

1.காங்கிரஸ்,பா.ம.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, இடது சாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள்.

2.தி.மு.க மற்றும் பா.ஜ.க.

3.அ.தி.மு.க,சுப்ரமணியசாமி மற்றும் இதர கட்சிகள் .

தற்போது கிடைத்த தகவலின் படி தி.மு.க வின் மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் அவர்களுடன் மீண்டும் கூட்டணி வைத்துக்கொண்டால் தோல்வி தான் கிடைக்குமென்று தமிழக காங்கிரஸார் அகில இந்திய காங்கிரஸ்க்கு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சோனியா காந்தி அவர்கள் இதுவரை அதைப் பற்றி அவ்வளவாக கண்டுகொள்ளாதவர் நெருக்கமான வட்டாரங்களில் தமிழ்நாட்டில் சட்ட ஒழூங்கு மற்றும்
தி.மு.க வின் அரசியல் செயல்பாடுகள் குறித்து அவ்வப்பொழுது கேட்டறிந்து வருகிறார், மற்றும் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்றும் கேட்டுள்ளார்.
ஆகவே ராமதாஸ் ஏற்க்கனவே இதுப்பற்றி பலமுறை காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி இப்பொழுது அகில இந்திய தலைமைக்கும் கேட்கும் படியாக காய்களை நகர்த்துவதாக தெறிகிறது.

அதனால் தான் இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸார் அவ்வளவாக பிடிகொடுத்து பேசாத நிலையிலும், தற்போதைய தி.மு.க அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள
வெறுப்பின் காரணமாகவும் சற்று ஒதுங்கி இருந்து மவுனம் காத்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி MLA க்களின் கூட்டத்தில் கூட்டணியைப் பற்றி சில விஷயங்களை பேசி இருக்கிறார்கள்.

கலைஞர் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு பேட்டியில் அரசிற்க்கு எதிராக சதி நடக்கிறது என்றும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அறிக்கைவிட்டார்.

தி.மு.க வின் சரிவு :

பல விதமான பிரச்சனைகளால் தி.மு.க அரசிற்கு நெருக்கடிகள் தோன்றிகொண்டிருக்கிறது.

1.முதலில் தயாநிதி மாறனுடைய தினகரன் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள்,
2.மதுரை தினகரன் பத்திரிக்கை தாக்கப்பட்ட விவகாரம்.
3. தயாநிதி மாறனை அமைச்சர் பதவியிலிருந்தது நீக்கியது.
4.அமைச்சர் பூங்கோதை கிரிமினலுக்கு ஆதரவாக பேசி பதவியிலிருந்து நீக்கியது.
5.அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம்.
6.மணல் திருட்டு.
7.அரிசி கடத்தல்.
8.அமைச்சர் மைதின்கான் ஒரு விழாவில் ஏடாகூடமாக (அரிகடத்தலைப் பற்றி) பேசியது.
9.அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா வின் ஆள்கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டு பதவியை இழந்தது.
10.பா.ம.க குருவை கைது செய்தது.
11.வைகோ வை கைது செய்தது.
12. முக்கியமாக மின்வெட்டுப் பிரச்சனை.
13.தற்போது இலங்கைப் பிரச்சனையை கையாளும் விதம்.
14.டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி பிரச்சனை.
15.அத்தியாவசய பொருட்களின் விண்ணை தொடும் விலைவாசி உயர்வு.
16.முக்கியமாக சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

இது போன்ற நடவடிக்கைகளில் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் தி.மு.க விற்க்கு குறைந்து கொண்டே வ்ரும் நிலையில்,விஜயகாந்தின் மீது மக்களின் கவனம் மாறி கனிசமாக செல்வாக்கு வளர்ந்து கொண்டு வரும் நிலையில் பா.ம.க வின் பச்சைக்கொடி காட்டபட்டதாலும் (கூட்டணிக்குள் தேமுதிக வருவதற்க்கு), ஏறக்குறைய இரண்டாம் கட்டத்தலைவர்கள் கூட்டணியைப் பற்றி திரைக்குப் பின்னால் தேமுதிகவுடன் பேசிவருவதாலும், இந்தக் கூட்டணி ஏறக்குறைய அமைய வாய்ப்பிருப்பதாக தோன்றுகிறது.

அதனால் தான் T. R. பாலு அவர்களின் மூலமாக தூது அனுப்பி பா.ம.க வை மீண்டும் இணைத்துக் கொள்ள கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது.

ஆகவே வெகு சீக்கிரத்தில் காங்கிரஸ் தலைமையில் நாடளுமன்ற கூட்டணி அமையும் என்றே தெரிகிறது.

அப்படி நடந்தால் கலைஞரின் ஆட்சி கவிழ்ந்து மேற்சொன்ன கூட்டணியே சட்டமன்றத்தேர்தலிலும் எதிரொலிக்கும்.

காங்கிரஸின் கனவு நனவாகி, காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய எனது வாழ்த்துக்களை இப்பொழுதே தெறிவித்துக் கொள்கிறேன்.

1 comment:

முத்தன் said...

வீண்கனவு பலிக்காது.