எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, March 20, 2008

தமிழக அரசின் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

* தாலி மற்றும் பிற மதத்தினர் மணவிழாவில் பயன்படுத்தும் சிலுவை, கருகமணி ஆகியவற்றுக்கு எடை வரம்பின்றி வரி விலக்கு.

* சித்த மருந்துகளுக்கு வரி விலக்கு.

* பன், ரஸ்க், சோயா எண்ணெய், வெல்லம் ரப்பர் பூச்சுள்ள நெசவுத் துணிகள் ஆகியவைகளுக்கு வரி விலக்கு- மற்றும் பல பொருட்களுக்கு வரி குறைப்பு

* பயிர்க் காப்பீட்டுத் திட்டம்-25 லட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 50 சதவிகிதத்தை அரசே வழங்கும்.

* கூட்டுறவு வங்கிகள் மூலம் 1500 கோடி புதிய பயிர்க்கடன்.

* கூட்டுறவுப் பயிர்க்கடன் வட்டி ரூ.4 ஆகக் குறைப்பு.

* சிவகங்கை மற்றும் பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள்.

* திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக புதிய பொறியியல் கல்லூரிகள்.

* புதிய திருப்பூர் மாவட்டம் உதயம்

* புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி மற்றும் பொன்னமராவதி புதிய வருவாய் வட்டங்கள்.

* வேலூர் நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்

* 3500 புதிய அரசு பேருந்துகள் வாங்கப்படும்

* ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம்-ரூ. 15,000 லிருந்து ரூ. 20,000 ஆக உயர்வு.

* ரூ. 6000 மகப்பேறு நிதி உதவி பெற இனி வருமான சான்றிதழ் தேவையில்லை.

* சிறு வணிகம் செய்யும் மகளிர் உட்பட 2 லட்சம் வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 50 கோடி கடன்.

* கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட வாங்கிய ரூ.15 கோடி கடன் அறவே ரத்து.

* ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோவிலிருந்து பெற்ற விவசாயக் கடன்கள் ரூ. 5 கோடி அறவே தள்ளுபடி.

* கேபிள் டிவி நடத்துவோர் மீதான கேளிக்கை வரி ரத்து - ஏற்கனவே உள்ள நிலுவை ரூ. 16 கோடி முழுவதும் தள்ளுபடி.

* பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் பெற்ற கூட்டுறவு வீட்டு வசதிக் கடன் நிலுவை முழுவதும் தள்ளுபடி. குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவினர் கடனைத் திருப்பி செலுத்தினால் அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப் படுவதோடு, வட்டியில் ஒரு பகுதியும் தள்ளுபடி.

* 50 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் முற்றிலும் ரத்து

* அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சிறப்புக் கட்டணம் ரத்து

* விசைத்தறி நெசவாளர்களுக்கு தனி நல வாரியம்

* கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஒரு தனி நல வாரியம்.

* நரிக்குறவர்களுக்கு தனி நல வாரியம்

* அரவாணிகள் நல வாரியம் - மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி.

* அருந்ததியர் உள் ஒதுக்கீடு - பரிந்துரை செய்ய நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழு நியமனம்

* கழிவு நீர்க் குழாய்களில் தூய்மைப்பணி புரிவோருக்கு பாதுகாப்பு உடைகள், இலவச மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச உடல்நலப் பரிசோதனை.

* கழிவு நீர் குழாய்களில் இறங்கி பணிபுரிவதைத் தவிர்க்க சிறப்பு இயந்திரங்கள்.

* சின்னத்திரை கலைஞர்களுக்கு நல நிதியம் - ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு.

* ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஓர் உடற்பயிற்சி நிலையம்.

* தமிழ்வழிக் கல்வியில் பயின்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப் பெண்கள்பெறும் 1000 மாணவ மாணவியர்களுக்கு கணினி பரிசு

* எயிட்ஸ் நோயினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க அரசின் சார்பில் அறக்கட்டளை - ரூ. 5 கோடி ஒதுக்கீடு

* 5440 கிராமங்களில் இணைய வசதிகளுடன் கூடிய பொதுச்சேவை மையங்கள் - அங்கே அரசு சான்றிதழ்கள், விண்ணப்பங்கள் பெற வும், கட்டணங்கள் செலுத்தவும் வசதி

* மீனவர் மற்றும் மீனவ மகளிருக்கான நவீன மீன்பிடி தொழில்நுட்பப் பயிற்சி மையம் அமைக்கப்படும்

* குளச்சலில் புதிய மீன்பிடி துறைமுகம்.

* வேலூர் நகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

* ஒரு இலட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10 ஆயிரம் விவசாயிகள் சுயஉதவிக் குழுக்கள் - 10 கோடி ரூபாய் சுழல்நிதியாக அரசு நிதியுதவி.

* ரூ. 12 கோடியில் மதுரை வெள்ளத் தடுப்புத் திட்டம்.

* ரூ. 211 கோடி மதிப்பீட்டில் திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங் களில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம்.

* அரசு அலுவலர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - ரூ. 2 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை.

* அரசு அலுவலர்களுக்கு 47 சதவீதமாக 1.1.2008 முதல் அகவிலைப்படி உயர்வு.

* ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவு ஈட்டுத் தொகை ரூ. 50,000லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்வு.

* 100 புதிய அரசு உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* 100 புதிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* அனைவருக்கும் இடைநிலைக் கல்வி - புதிய திட்டம் - ரூ. 200 கோடி ஒதுக்கீடு

* இயற்கை சீற்றங்கள் மற்றும் பெரும் விபத்துக்கள் நடைபெற்று ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக சென்னை யில் சிறப்பு மருத்துவ மையம்.

* தொழிலில் பின்தங்கிய பகுதிகளான திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.

* நாகர்கோவில் மற்றும் அரியலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

* ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி உட்பட 5 மாநகராட்சிகள் - 7 நகராட்சிகளில் நகர்புறச் சாலைகள் மேம்பாடு

* போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை மாநகரில் அதிவேக உயரச் சாலை

* தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 22,000 வீடுகள் கட்டப்படும்.

* மேலும் 2521 கிராம ஊராட்சிகளில் அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம்

* மேலும் 8 இலட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள் வழங்க ரூபாய் 160 கோடி ஒதுக்கீடு.

* ரூ. 750 கோடி செலவில் இந்த ஆண்டு, வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்

* 25,000 மகளிர் புதிய சுய உதவிக் குழுக்கள்.

* 1,50,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 150 கோடி சுழல்நிதி.

* மகளிர் ஆணையத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம்.

* அரவாணிகளாக உணர்வோருக்கு இடைக்கால தங்கும் விடுதி

* கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் நிதி ஆண்டிலிருந்து 4 சதவீத வட்டி மானியம்.

* கைத்தறி நெசவாளர் காப்பீட்டுத் திட்டம் - நெசவாளர் பங்கையும் அரசே செலுத்தும்.

* காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.

* பனைத் தொழிலாளர்களுக்கு இலவசக் கருவிகள்.

* 8 புதிய ஆதிதிராவிடர் உயர் நிலைப் பள்ளிகள் - 3 புதிய பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உணவுப்படி, மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ரூ. 400 லிருந்து ரூ. 450 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 500 லிருந்து ரூ. 550 ஆகவும் உயர்வு.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு 25 புதிய இல்லங்கள்- இவர்கள் தங்கி பயிலும் 25 இல்லங்களுக்கு புதிய கட்டடங்கள்.

* சிறுபான்மையினருக்கு இந்த ஆண்டு ரூ.40கோடி கடன் உதவி.

* 350 சத்துணவு மையங்கள் மற்றும் 2000 குழந்தைகள் மையங்கள் நவீனமயம் ஆக்கப்படும் - எரிவாயு இணைப்பு மற்றும் ப்ரஷர் குக்கர் கள் வழங்கப்படும்.

* சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காடு பகுதியில் கடலின் அடியில் மீன் அருங்காட்சியகம்.

* 25,000 ஏக்கர் பரப்பில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து திட்டம் எதுவும் இடம்பெறாதது பெரும் ஏமாற்றமே.
மற்றும் தொழில்நுட்பபூங்காக்களை மேலும் சில இடங்களில் விரிவு படுத்த நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

ஓசூரில் தொடங்கும் தொழில்நுட்பபூங்கா பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

10ம் வகுப்பு வரை கட்டாயக்கல்வி, அதில் இரண்டாம் மொழித்தேர்வாக ஆங்கிலம் மட்டுமே இன்று வரை உள்ளது அதில் இந்தி மொழியையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க ஏதாவது அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து நடைமுறை படுத்தினால் தமிழக மக்களும் மொழிப்பிரச்சினையின்றி மற்ற மாநிலங்களுக்கு சென்றுவர மற்றும் தொழில் செய்யவும் நாட்டின் பொருளாதாரம் மேமபாடு்பாடையவும் உதவும்.

No comments: