எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, June 18, 2009

ரீல் இப்பொழுது ரியல் ஆகப்போகுது - காமெடி கலாட்டா

கட்சியை விட்டு வெளியில் நான் வரமாட்டேன் ஆனாலும் பிராமணர்களுக்காக பாடுபடுவேன் என்கிறார் காமெடி நடிகர் எஸ்.வி. சேகர்.

நான் அ.தி.மு.க. விட்டு விலகவில்லை. என்றாலும் எனக்கும் அந்த கட்சிக்கும் இப்போது எந்த தொடர்பும் இல்லை.

அ.தி.மு.க. சார்பில் எனக்கு எந்த தகவல்களும் சொல்லப்படுவது இல்லை. இது பற்றி கட்சி மேலிடத்தில் 16 முறை புகார் செய்து விட்டேன். எந்த பலனும் இல்லை.

எனவே இனி எந்த புகாரும் செய்யவும் எண்ணம் இல்லை. நான் எம்.எல்.ஏ.ஆக தொடர்ந்து நீடிப்பேன் வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன்.

நான் சட்டசப்படி நடக்கிறேன். எனவே நான் கட்சி மாறவேண்டிய அவசியம் இல்லை. அகில இந்திய ஆரியர் முன்னேற்றக் கழகம் என்றொரு கட்சியை தொடங்குவது குறித்து யோசனை இருந்து வருகிறது. முற்பட்ட சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு பெற இந்த கட்சியை தொடங்க வேண்டும் என்று கூறினார்கள். இது தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்துப் பேசினேன்.

அப்போது பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அல்லது முற்பட்ட சமுதாயத்துக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

இந்த கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றினால் தி.மு.க.வுக்கு 25 லட்சம் ஓட்டுக்கள் அதிகமாக கிடைக்கும். நான் கட்சி தொடங்கும் அவசியம் இருக்காது.

அவர் இவ்வாறு கூறி இருப்பதனால் இவர் தனியாக கட்சி ஆரம்பித்தால் 25 லட்ச ஓட்டுக்கள் கிடைக்கும் என்கிறார்.

ரீல் காமெடியன் இப்பொழுது ரியல் காமெடியன் ஆகப்போகிறார்.

No comments: