எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, January 29, 2009

முஷரஃப் என்ன ஹீரோவா ?

போராட்டமே வாழ்க்கை என்ற போது போராடமல் இருக்க முடியுமா. பொது நலம் என்கிற போது சுயநலத்தை பார்ப்பது அது பொது நலத்திற்கு செய்யும் துரோகம் அல்லவா!.

அது போலதான் நாடு என்று வரும் போது வீடு என்று நினைத்தால் அது நாம் நம் நாட்டிற்கு செய்யும் துரோகம் ஆகாதா!

அது போல என் நாட்டு மக்கள் என்கிற போது என்குடும்பம் என்றால் நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா!

அப்படித்தான் இருந்தார்கள் அவர்கள் துரோகிகளாக எங்கள் நாட்டிற்கு பூட்டோவும் அவருடை மகள் பெனசிர் பூட்டோவும் மற்றும் நவாப்பும்.

நான் அவ்வாரு இருக்க கூடாது என்றுதான் என்னை நான் அர்பணித்தேன் என் நாட்டிற்காக.

நான் பிறந்தது இந்தியா என்றாலும் வளர்ந்தது பாகிஸ்தானில் தான். என்னுடை அப்பா, அம்மா மற்றும் என்னுடைய சொந்தங்கள் எல்லோரும் நன்றாக படித்த குடும்பம் என்பதால் என்னையும் நன்றாக படிக்கவைத்தனர் நானும் நன்றாக பட்டித்தேன். சின்ன வயதில் எல்லோருக்கும் இருக்கும் குறும்புத்தனத்தில் நான் குறைந்தவன் அல்ல. எல்லோரையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு நான் நிறையவே குறும்பு செய்வேன் அதனால் என்னுடைய பள்ளியில் ஆகட்டும், என்குடும்பத்தில் ஆகட்டும் என்னிடையே கடுமையாக நடந்து கொள்வார்கள்.

எல்லோருக்கும் பருவக் காலத்தில் வரும் காதல் உணர்ச்சிகள் காதலி எல்லாம் இருந்தது. அதேபோல் எல்லோருக்கும் நடக்கும் சம்பவம் போல் எனக்கும் தோல்வியில் முடிந்தது.

அவரை அவரே ஹீரோவாக காட்டிக் கொள்ளாவிட்டால் வேரு யார்தான் அவரை ஹீரோ என்று சொல்வார்கள். அதனால் தன் என்னவோ அவர் தன்னை ஹீரோவாகவே சித்தரித்து பேசுகிறார்.

மிகவும் அழகானவர், உடல் தோற்றத்திலும் சரி முக வசீகரத்திலும் சரி, படிப்பிலும் சரி மற்றும் விளையாட்டிலும் சரி அவர் மற்றவர்களுக்கு சளைத்தவர் இல்லை ஆனாலும் அவர் உண்மையில் அவர் அவ்வாரு இருந்தாரா என்ற சந்தேகம் எல்லாருடை மனதிலும் எழும். ஆனாலும் நான் நினைக்கிறேன் அதுவெல்லாம் பள்ளிப் பருவதில் ஆகட்டும் கல்லூரிப் பருவத்தில் ஆகட்டும் எந்த ஒரு இளைஞனும் அவ்வாருதான் இருப்பார்கள்.


அவர் படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி சக மாணவர்களைப் போன்றும் தான் இருந்துள்ளார். அவர் சக இளைஞர்கள் போல வாலிப வயதில் காதல் லீலைகள் செய்துள்ளார் அவ்வளவே அதில் எந்த ஒரு ஹீரோயிசமும் இல்லை.

எல்லோருக்கும் அந்த வயதில் பருவ மாற்றம் வரும். ஹார்மோன்களின் சூழ்ச்சிக்கு எல்லோரும் அகப்படும் பரும் தான் அதில் எந்த ஹீரோயிசமும் இருப்பது போல எனக்கு தெரிய வில்லை.

இதையே அவர் மிகைபடுத்தி பேசுகிறார் என்றால் அவருக்கு எந்தளவுக்கு தன்னம்பிக்கை உணர்வு இருந்திருக்கும்.

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அப்பொழுதெல்லாம் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.

கல்லுரிப் படிப்பும் முடிந்தது ராணுவத்தில் வேலையும் கிடைத்து விட்டது பின்னே என்ன கல்யாணம் தான். காதலி எல்லாம் இல்லை தோல்வி. பெற்றோரகள் பார்க்கும் பெண் தான் இனிமேல் காதலி.

வீட்டில் பெண்ணும் பார்த்துவிட்டார்கள் நான் மட்டும் பெண்ணை பார்க்கவில்லை. போட்டோ மட்டும் காட்டினார்கள் பிடித்து விட்டது அழகாக இருக்கிறாள் நேரில் பார்க்க வேண்டுமே.

ஆம் பார்த்தே ஆகவேண்டும் முடிவெடுத்தால் எடுத்தது தான் அதில் எந்த மாற்றாமும் இல்லை. பஸ்ஸை பிடித்து பெண் வீட்டிற்கு சென்று பார்த்தால் அவருக்கு மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

என்ன அந்த அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா?

ஆம் அது அதிர்ச்சி தான் இன்ப அதிர்ச்சி போட்டோவில் அழகாகத் தான் இருந்தாள், ஆனால் நேரில் பேரழகியாக இருந்தாள் என்கிறார். கல்யாணம் மற்றும் குடும்ப வாழ்க்கை மிக நன்றாக சென்றது.

ராணுவத்தில் சேர்ந்த பிறகு மிகவும் ஒழுக்கமாகவும் நாட்டிற்காக உயிரையே விடும் அளவுக்கு நேசித்தமை பற்றியும் நிறை பேசியிருக்கிறார்.

பாகிஸ்தான் என்பது ஒன்றே ஒன்று தான் அரசியலமைப்பு பொருத்த மட்டில். ஆனால் நாடோ இரண்டு அது கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான். அரசியல்வாதிகள் எப்பொழுதும் போல் ஆளும் கட்சி எதிர்கட்சி மேற்கு பாகிஸ்தானில் மட்டும் ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் ஒரே கட்சி அதாவது மேற்கு பாகிஸ்தானை எதிர்க்கும் மக்கள் கட்சி.

நியாமாக கிடைக்க வேண்டிய எதையும், மேற்கு பாகிஸ்தானிற்கு கிடைக்கும் எதுவும் கிழக்கு பாகிஸ்தானுக்கு குதிரை கொம்பாகத்தான் இருந்திருக்கிறது. அதனால் தான் மக்கள் எல்லோரும் சேர்ந்து மேற்கு பாகிஸ்தானை எதிர்த்தார்கள்.

நாளும் போராட்டம். பூட்டோவோ தன்னுடைய பங்கிற்கு எரிகிற நெருப்பில் எண்ணை உற்றியதைப் போல் மக்களை போராட்டக் குழுவை இரும்புக் கரம் கொண்டு அடக்க நினைத்தார் ஆனால் அவர் நினைத்தது வேறு நடந்தது வேறு.

ராணுவத்தைக் கொண்டுவந்து அடக்க நினைத்தார் ஆனால் அது சிறிய போராட்டமாக இருந்தது விடுதலை போராட்டமாக மாறியது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதைப் போன்று கிழக்கு பாகிஸ்தான் இந்தியாவை நாடி நட்பு கரம் நீட்டியது. இந்தியாவோ அவர்களுக்கு உதவி எங்களுடைய பலத்தை உடைத்து பங்களாதேஷ் உருவாகுவதிற்கு வழிகோலியது. அதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம் என்கிறார்.

கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தறாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையாக நடந்ததை அவர்கள் உணரவில்லை. ஏன் இங்கு நான் இதைச் சொல்கிறேன் என்றால் அவர்கள் அவர்களுடைய தவறை உணராதவரை திருந்த மாட்டார்கள், தப்புக்கு மேல் தப்புதான் செய்து கொண்டிருப்பார்கள் தீவிரவாதத்தை வளர்த்து விட்டது போல்.

பூட்டோவின் ஆட்சி காலத்தில் மிகவும் மலிவாக இருந்தது ஊழல் மட்டுமே. மற்ற எல்லா விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு இருந்தது.

ஆட்சி மாற்றம் வந்தால் அவர் திருந்துவார் என்று நினைத்தேன். நான் நினைத்தது போலவே ஆட்சி மாற்றமும் வந்தது. மக்களுக்கு தூரோகம் செய்தவரை ஊழலுக்குப் பெயர் போனவரை தூக்கிலிட்டார்கள். நல்லவேளை அவரை தூக்கிலிட்டார்கள் இல்லையேல் நாடு அவ்வளவுதான் அதல பாதாளத்துக்குத் தான் சென்றிருக்கும்.

ஆட்சியாளர் நாவாப் ஷரீஃப் கொஞ்சம் நன்மையை செய்தார் என்று சொல்வதை விட பூட்டோ அளவிற்கு ஊழல் செய்யவில்லை.

மீண்டும் ஆட்சி மற்றும் காட்சி மாறியது பூட்டோவின் மகள் பெனசிர் பூட்டோ நன்றாக ஆட்சியை நடத்தினார். ஆனால் அவர் தன் அப்பாவை மிஞ்சும் அளவிற்கு தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாரடி பாயும் என்று சொன்ன மாதிரி அவர் நடந்து காட்டினார்.

மீண்டும் ஆட்சி மற்றும் காட்சி மாற்றம் நாவாப் ஷரீஃப் சிறந்த பிரதமராக விளங்குவார் என்றால் அவரும் பெனசிர் செய்த ஆட்சி காலத்தை போன்றே ஆட்சி செய்தார். ஊழல் பெருகியது மக்களின் அடிப்படை வசதிகளைக்கூட அவரால் சரிவர செய்து கொடுக்க முடியாமல் ஊழல் மலிந்து விட்டது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். அதனால் எங்கு ராணும் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளுமோ என்று பயந்து கொண்டிருந்த வேளையில் கார்டினல் ஜெனரல் விருப்ப ஓய்வெடுத்து பதவி விளகினார்.

அந்த இடத்திற்கு என்னைப் நியமித்தால் நன்றாக செயல் படுவேன் என்று கருதி நவாப் என்னைத் தேர்ந்தெடுத்தார். ஆம் நானும் அவர் நினைத்தைப் போலவே என்னுடைய முழு திறமையும், மிகவும் நேர்மையாகவும் நடந்து கொண்டேன் என் நாட்டிற்காக.

கார்கில் போர் என்பது ராணுவ ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்று நினைத்து போட்ட மிகச் சரியான திட்டம். நாவாப்புக்கு தெரியாமல் இந்தியாவுடன் போரை தொடுத்தது என்பது எல்லாமே அவர் போட்ட பிளான் தான். அந்தப் போரில் வெற்றியோ தோல்வியோ அது அவரின் இமேஜை உலக அரங்கில் உயர்த்தும் என்று நினைத்து செய்த காரியம் என்று நான் நினைக்கிறேன்.

நவாப் தப்பு செய்யும் போது தட்டி கேட்டும், அவர் செய்யும் தப்புக்கு உடந்தையாகமலும் இருந்தேன் அதனால் அவருக்கு என் மீது வெறுப்பு வந்தது. அவர் என்னையும் பதவி நீக்கம் செய்யலாம் என்று சதி செய்த போது அவரால் அது முடியாமல் போனது ஏன் என்றால் ராணுவத்தில் எல்லோரும் அவர் அவருடைய தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தார்கள் எனக்கு எதிராக நடக்கும் எல்லா சதி வேளைகளையும் அவர்கள் முறியடித்தார்கள் அதனால் அவரால் என்னை பதவி நீக்கம் செய்ய முடியவில்லை.

நான் எங்கு அவரை பதவி நீக்கம் செய்து ராணுவ ஆட்சியை கொண்டு வந்திடுவேனோ என்று பயந்து கொண்டிருந்தார். உண்மையில் எனக்கு அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லை என்கிறார்.

ஆனால் நான் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஏனென்றால் பின்னர் நடந்த, அவர் விளக்கிய சம்பவங்கள் அனைத்தும் சரியாக திட்டமிட்டு இவர் நிறைவேற்றியதாகவே தெரிகிறது.

இவர் இலங்கை சென்று திரும்பும் போது பாகிஸ்தானில் வந்து இறங்காமல் அப்படியே நாடு கடத்த நவாப் உத்தரவு பிறப்பித்ததாக சொல்கிறார். அதனால் விமானம் கடத்தல் எல்லாம் நவாப் செய்தது என்கிறார். அப்படி இவர் ஆகாயத்தில் இருக்கும் போது எப்படி மற்றவர்களுக்கு தெரிந்து நவாப்பை வீட்டு காவலில் வைத்து ராணுவ ஆட்சியை அமுல் படுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் எப்படி அது சாத்தியம் அதுவும் ராணுவ தலைமை அதிகாரி கார்டினல் ஜெனரல் நாட்டில் இல்லாத போது.

அதனால் தான் நான் சொல்கிறேன் இந்த விமானக் கடத்தல் எல்லாம் இவரே போட்ட சரியான திட்டம். அப்பொழுதுதான் உலக மக்கள் நம்புவார்கள் ராணுவ ஆட்சியை மக்கள் ஏற்ப்பார்கள் என்று அவர் போட்ட திட்டத்தை மிக சரியாக அவருடைய குழு செய்து முடித்து ஆட்சியைக் கைப்பற்றியது.

உண்மையில் அவர் ஒரு மிக நேர்மையான ஜனநாயகவாதி நாம் அவருடைய வாழ்க்கையிலிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் பாகிஸ்தானில் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டது என்றால் சரியாக இருக்கும்.

இதை எல்லாம் நான் சொல்வதினால் நான் அவருக்காக வக்காளத்து வாங்குகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

பாகிஸ்தானியர்களின் பார்வையிலே அவர் ஒரு ஹீரோ தான்.


புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

1 comment:

Anonymous said...

உங்கள் வலைபதிவு பார்த்தேன். தயவு செய்து தவறில்லாமல் டைப் செய்யவும்.
படிப்பதற்கு கடினமாக உள்ளது.