எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, May 28, 2008

காங்கிரஸ் (தோல்வி) கர்நாடகத்தில்




காங்கிரஸ் தோல்வி?! கர்நாடகத்தில் உண்மையில் நடந்ததென்ன?



தோற்றார்களா ! தோற்கடிக்கப்பட்டார்களா !

முந்தைய தேர்தல் முடிவுகள்

பா.ஜ.க - 79

காங் - 65

ஜன - 58

மற்றவை - 22

இன்றைய தேர்தல் முடிவுகள்

பா.ஜ.க - 110

காங் - 80

ஜன - 28

மற்றவை - 6

பா.ஜ.க வுக்கு முதல் முறையாக எப்படியாவது ஆட்சியை அமைக்கவேண்டும் எனகி்ற தீவிரமோ கர்நாடகத்தை கைப்பற்றவேண்டும் என்ற வெறியோ?! எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
மக்களின் கவனமெல்லாம் அவர்களின் பக்கமே இருக்குமாறு பார்த்துக்கொண்டார்கள்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த கணத்திலிருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் கணம் வரை இதை அவர்கள் கவனமாகக் கையாண்டார்கள்.
உதாரணத்துக்கு ஒகேனக்கல் பிரச்னையைக் கையாண்டவிதம். மேலும், முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டு, ஜனதா தளத்தின் குடும்ப அரசியல், வெளிப்படையான தேவகவுடாவின் சுயநலமிக்க அரசியல், கொள்கையில்லா அரசியல் நோக்கு, வாக்குறுதிகள்... இவற்றையெல்லாம் பா.ஜ.க தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது.

ஆனால் காங்கிரஸோ, இதைப் பயன்படுத்தத் தவறிவிட்டது, காங்கிரஸின் உள்கட்சிப் பூசலையும், முதல்வர் பெயரை அறிவிக்காத ஒரு தேர்தலையும் கீழ்த்தட்டு மக்கள் ஏற்காததுதான் காங்கிரஸின் தோல்விக்கு முக்கியக் காரணம்.


ஆதலால் அவர்கள் தோற்கடிக்கப்படவில்லை, தோற்றுத்தான் போனார்கள்


காங்கிரஸார் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வேற்றுமையை மறந்து ஒன்றுபட்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகவேண்டும்.

No comments: