""தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,'' என்று செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கங்களின் துவக்க விழா, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள "டி' ஹாலில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நேற்று காலை நடந்தது.
ஆய்வரங்கத்தை துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:தமிழ் மொழியை மேலும் செழுமைப்படுத்திடவும், அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதை வளர்த்து 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துகளையும் இந்த ஆய்வரங்கத்தின் மூலமாகப் பெற இருக்கிறோம்.தமிழ் மொழி - தமிழர் பண்பாடு - நாகரிகத்தைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது எல்லா முனைகளிலும் புதிய எழுச்சியைக் காண முடிகிறது. ஏறத்தாழ 50க்கும் மேலான நாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது, புதிய தெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களை புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும். அந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாக கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டும்.
கோல்கட்டாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம், சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816ல் எல்லிசு, 1856ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர்.இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக் குடும்பம். அக்குடும்பத்தின் முதன்மை மொழி, தமிழ் என்னும் உண்மையை உலகிற்கு அவர்கள் உணர்த்தினர். 1927ல் ஜான் மார்ஷலின் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு, உலகின் கருத்தைத் தமிழின் பால் ஈர்த்தது.அதன் பின், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் குறித்து அறிந்து கொள்வதில், உலக நாடுகளின் அறிஞர்கள் ஆர்வம் காட்டினர்.
அவர்கள் ஆராய்ந்து, தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர் தம் இலக்கிய விழுமியம், கலைநயம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.திராவிட இனத்தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர். திராவிடம் தந்த செழிப்பும், வலிவும் தான், ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.வட மாநில திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டு, தமிழர்கள், தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வாதிட்டு நிலைநாட்டுகிறார் சோவியத் மொழி அறிஞர் சாகிரப்.காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள், திராவிட மொழிப் பிரிவின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர்.
பீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் "குருக்கர்' என்போர் திராவிட மக்களே என்பது, அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.இந்திய நாகரிக அடையாளமான சேலையும், வேட்டியும் திராவிட நாட்டின் கொடையாகுமென்று பேராசிரியர் சட்டர்ஜி, "இந்தோ - ஆரியன் - இந்து' என்ற நூலில் எழுதியுள்ளார். ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு, திராவிட வழிபாடே.அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோவில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது. ஆதிச்சநல்லூரின் மண்டை ஓடுகள், சிந்துவெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன.சங்க காலம், கி.மு., நான்காவது நூற்றாண்டின் துவக்க காலம் எனக் கொண்டால், சங்க இலக்கியங்களிலிருந்து திராவிட நாகரிகத்தை அறிய முடிகிறது.
ராமச்சந்திர தீட்சிதர் எழுதிய, "தமிழர் தோற்றமும், பரவியதும்' என்ற நூலில், "மத்திய தரைக்கடல், குமரிக் கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா எங்கும் பரவியது தமிழர் நாகரிகமே' என்று கூறியுள்ளார்.தமிழ் மொழியின் தொன்மையைப் பொறுத்தவரை, தொல்காப்பியம் போன்றதோர் பழமை இலக்கணம், எந்த மொழியிலும் இல்லை. திருக்குறள் போல அற இலக்கியம், எந்த மொழியிலும் இல்லை. சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான காப்பியம், எந்த மொழியிலும் இல்லை. ஆசியா முழுவதும் கோலோச்சிய பவுத்த சமயத்துக்கு மணிமேகலை போல ஒரு காப்பியம், பாலி மொழியிலும் இல்லை.எல்லா சமயங்களையும், சைவ, வைணவ சமயங்களையும், சமண, பவுத்த சமயங்களையும், கிறித்துவ, இசுலாமிய சமயங்களையும், இதயத்திலே ஏந்திக்கொண்ட மொழி தமிழ். சமயந்தோறும் நின்ற தையல் எனப் போற்றப் பெறும் தமிழ், சமயங்களையும் வளர்த்து தன்னையும் வளர்த்துக் கொண்ட மொழி.
திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம் தமிழினம். மயிலாடுதுறைக்கு அருகில் கழுக்காணி முட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையினரால், முதலாம் ராசாதிராசன் காலத்தைச் சேர்ந்த கி.பி., 1053வது ஆண்டைச் சேர்ந்த 85 செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.வில், புலி, கயல் ஆகிய சேர, சோழ, பாண்டியர்களின் முத்திரைகளோடு கிடைத்துள்ள அந்தச் செப்பேடுகள், வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரும் கருவூலம். தஞ்சை விசயாலயச் சோழன், பல்லவர்களிடமிருந்து கைப்பற்றியதற்கான புதிய வரலாற்றுக் குறிப்பு, இச்செப்பேட்டில் கிடைத்துள்ளது.இந்த செப்பேடு, மாநாட்டு கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி முறையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது உத்திரமேரூர் கல்வெட்டு. இவையெல்லாம் தமிழர்களின் தொடர்ச்சியான வரலாற்றுப் பதிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
இந்த பெருமையையெல்லாம் தமிழர்கள் தான், வெளிநாட்டவர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர், அவற்றை தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலை தான் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.தமிழுக்கும், தமிழினத்துக்கும் ஆற்ற வேண்டியவை, இன்னும் ஏராளமாக உள்ளன. இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். கிரேக்கம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் தமிழியல், தமிழினம் குறித்தும் எழுதப்பட்ட நூல்கள், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
உலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள் மின்மயமாக்கப் பெற்று, உலகில் உள்ள ஒரு பகுதியில் உள்ளவர்களும் அவற்றைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும். துறைதோறும் தமிழ் பயன்பட வேண்டும். வகை வகையாய் அகராதிகளும், தொகை தொகையாய் கலைக் களஞ்சியங்களும் வர வேண்டும்.இன்னும் என்னென்ன தமிழுக்கு வேண்டும் என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கிற அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லி, இந்த அரசுக்கு ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
எண்ணங்களின் பிரதிபலிப்பு
Friday, June 25, 2010
Tuesday, June 22, 2010
ஹூ ஜிண்டாவ்

யார் இவர்?.
இவர் தான் தற்போதைய சீனாவின் தந்தை. இவர்தானே சீனா என்கிற மாபெரும் குடும்பத்தை வழிநடத்துகிறார் அதனால் தான் நான் அவரை தந்தை என்று சொல்கிறேன்.
அவ்வாறே நூலாசிரியரும் குறிப்பிடுகிறார். மூன்று தலைமுறைகளை தெரிந்தவர், மூன்று தலைமுறை தலைவர்களுக்கு கீழும் வேலை செய்திருக்கிறார் என்றால் அதிபர் என்பதை விட இப்பொழுது அவரை தந்தை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
மாவோ,டெங்சியோங், ஜியாங் தற்போது ஹூ ஜிண்டாவ்.
புத்தகத்தை வாங்க மேலே உள்ள தொடர்பை சொடுக்கவும்.
ஹூ ஜிண்டாவ் படித்தேன் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். நடை நன்றாக இருந்தது. இன்னும் சொல்லபோனால் கொஞ்சம் கொஞ்சமாக தொகுத்து கொடுத்தது படிப்பதற்கு எளிமையாக இருந்தது. தலைவர்களுடைய பெயர்கள் மாவோ, டெங்சி, ஜியாங்,ஹூ வைத் தவிர மற்றவர்கள் பெயர் மனதில் நிற்பதற்கு கொஞ்சம் கஷ்டம்.
ஹூ வை பற்றி படிப்பதை விட சீனாவை பற்றி அதிக அறிமுகம் செய்கிறது என்றே தோன்றுகிறது. எனக்கு அவ்வளவாக சீனாவைப் பற்றி தெரியாது இருந்தாலும் கொஞ்சம் தெரிந்து கொள்ள உதவியது. புள்ளி விவரங்கள் புத்தகத்திற்கு வலுசேர்ப்பதாக இருந்தது.
கம்யூனிசத்தை கொஞ்சம் கொஞ்சமாக கை கழுவி கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு நிறைய உண்மையான புள்ளி விவரங்களை அரசாங்கம் நீண்டகாலத்திற்கு மறைக்கும் போது அதன் மீது தாக்கம் ஏற்பட்டு மாற்று சிந்தனை ஏற்பட்டு உடைவதற்கோ அல்லது உள்நாட்டு பிரச்னைகள் வருவதற்கு நிறைவே வாய்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது.
பத்திரிக்கை சுந்தந்திரம் பறிக்கப்பட்டும், எழுத்துரிமை, பேச்சுரிமை நசுக்கப்பட்டும். உண்மையான ஜனநாயகத்தை இன்னும் முடமாக்கிவைத்துள்ளது சீன ஒற்றை கட்சி ஆட்சி. கம்யூனிஸமா இல்லை முதலாளித்துவமா என்று வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அங்கே ஏழைகளிடத்திலே கம்யூனிஸ ஆட்சியும், முதலாளிகளிடத்திலே முதலாளித்துவ ஆட்சியையும் செய்துவருகிறது ஒற்றைக் கட்சி என்று சொல்லும் ஹூ ஜிண்டாவ் அரசாங்கம்.
மனித உரிமை மீறல்கள் நிறையவே அங்கு அரங்கேறுவதைப் போன்று தான் தோன்றுகிறது அதுதான் உண்மையும் கூட.
சீனாவிலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிக்கிடக்கிறது இந்தியாவைப் போன்றே.
இருந்தாலும் இந்தியாவில் எல்லாரும் குறிப்பாக கொஞ்சம் வசதி படைத்தவர்கள் நிம்மதியாக வாழலாம் ஆனால் சீனாவில் அப்படியில்லை என்றே தோன்றுகிறது. கம்யூனிஸ அரசு எதை எப்பொழுது பிடுங்கிக் கொள்ளுமோ யார் எந்த சமயத்தில் இருப்பிடத்தை காலி செய்ய வற்புறுத்துவார்களோ என்று நிம்மதியாக இருக்க முடியாது.
இந்தியாவைப் போன்றே அங்கும் லஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்து தாண்டவமாடுகிறது என்பதை சீனா விலகும் திரையில் சொல்லப்பட்டது. இந்த புத்தகத்தில் மிஸ்ஸாகி இருக்கிறது.
சீனாவைப் பற்றி, சீன அதிபர்களைப் பற்றி, பொருளாதரத்தைப் பற்றி, அபரிமிதமான வளர்ச்சியை பற்றி, கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப் போல் கம்யூனிஸம் தேய்ந்து முதலாளித்துவம் மாற்றத்தைப் பற்றி இந்த புத்தகம் நன்றாக அலசி ஆராய்கிறது.
Labels:
நூல் விமர்சனம்
Monday, June 21, 2010
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு தங்க நாணயம் வெளியீடு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, பாரத ஸ்டேட் வங்கி, சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளது;
துணை முதல்வர் ஸ்டாலின் நாணயங்களை வெளியிட்டார்.பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 2, 4 கிராம் எடைகளில் இரண்டு சிறப்பு நாணயங்கள் வெளியிடும் விழா, ரெசிடென்சி ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின், சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட்டார். தலைமை செயலர் ஸ்ரீபதி, முதல் நாணயத்தை பெற்றுக்கொண்டார்.இந்நாணயத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் இடம், பாரத ஸ்டேட் வங்கி விற்பனை நிலையங்கள் மற்றும் ரேஸ்கோர்சில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
"வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டு நினைவாக, சிறப்பு தங்க நாணயங்களை பொதுமக்கள் வாங்கி மகிழலாம்' என, வங்கி துணைப் பொதுமேலாளர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.
துணை முதல்வர் ஸ்டாலின் நாணயங்களை வெளியிட்டார்.பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 2, 4 கிராம் எடைகளில் இரண்டு சிறப்பு நாணயங்கள் வெளியிடும் விழா, ரெசிடென்சி ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின், சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட்டார். தலைமை செயலர் ஸ்ரீபதி, முதல் நாணயத்தை பெற்றுக்கொண்டார்.இந்நாணயத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் இடம், பாரத ஸ்டேட் வங்கி விற்பனை நிலையங்கள் மற்றும் ரேஸ்கோர்சில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
"வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டு நினைவாக, சிறப்பு தங்க நாணயங்களை பொதுமக்கள் வாங்கி மகிழலாம்' என, வங்கி துணைப் பொதுமேலாளர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.
Labels:
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
நாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை, பீளமேட்டிலுள்ள, "கொடிசியா' வளாகத்தில் நாளை ( 23ம் தேதி)துவங்குகிறது. வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த மாநாட்டை நேரில் காண இயலாத பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தினமலர் இணைய தளம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு அழைப்பாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட 4,600 பேரும், பல லட்சம் மக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, நாளை காலை 10.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்குகிறது. துணைமுதல்வர் ஸ்டாலின், வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டுச் சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிடுகிறார். அதன் பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குகிறார். பேராசிரியர் அஸ்கோ பார்போலா, விருது ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி, தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகிறார். மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, மாநாடு வளாகம் வரை நடக்கிறது.
வரும் 27ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் இம்மாநாட்டின் நிகழ்வுகள், இரு விதமாக வகைபடுத்தப்பட்டுள்ளன. மாநாடு பொதுநிகழ்வுகளில் மக்கள் பங்கேற்க ஏதுவாக மிக பிரம்மாண்டமான மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாநாடு துவக்க விழா, நாளை காலையில் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கிறது. நாளை மறுதினம் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடக்கின்றன. வரும் 25ம் தேதி கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தொடர்ந்து, 26ம் தேதி கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடக்கின்றன. மாநாடு நிறைவு நாளான 27ம் தேதி நடக்கும் நிகழ்வில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், பிரணாப்முகர்ஜி பங்கேற்கின்றனர். மேற்கண்ட அனைத்து இந்நிகழ்வுகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். அதே வேளையில், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்கம் நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்குள், பங்கேற்பாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நன்றி : தினமலர்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, நாளை காலை 10.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்குகிறது. துணைமுதல்வர் ஸ்டாலின், வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டுச் சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிடுகிறார். அதன் பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குகிறார். பேராசிரியர் அஸ்கோ பார்போலா, விருது ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி, தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகிறார். மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, மாநாடு வளாகம் வரை நடக்கிறது.
வரும் 27ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் இம்மாநாட்டின் நிகழ்வுகள், இரு விதமாக வகைபடுத்தப்பட்டுள்ளன. மாநாடு பொதுநிகழ்வுகளில் மக்கள் பங்கேற்க ஏதுவாக மிக பிரம்மாண்டமான மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாநாடு துவக்க விழா, நாளை காலையில் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கிறது. நாளை மறுதினம் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடக்கின்றன. வரும் 25ம் தேதி கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தொடர்ந்து, 26ம் தேதி கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடக்கின்றன. மாநாடு நிறைவு நாளான 27ம் தேதி நடக்கும் நிகழ்வில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், பிரணாப்முகர்ஜி பங்கேற்கின்றனர். மேற்கண்ட அனைத்து இந்நிகழ்வுகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். அதே வேளையில், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்கம் நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்குள், பங்கேற்பாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நன்றி : தினமலர்
Labels:
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
செம்மொழி மாநாடு நடத்துவது ஏன்
"உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவது ஏன்' என்பது குறித்து, முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, தூர்தர்ஷன் "டிவி' மற்றும் ரேடியோவில், முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:இதுவரை, எட்டு உலகத் தமிழ் மாநாடுகள் நடந்துள்ளன. தற்போது கோவையில் நடக்கும் மாநாடு, அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடக்கும் மாநாடு. தமிழ், "செம்மொழி' என அறிவிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் மாநாடு.
உலகில் 6,880 மொழிகள் உள்ளன. இதில், 2,000 மொழிகள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றுள், "கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஹீப்ரு, சமஸ்கிருதம்' ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில், தமிழும் செம்மொழி எனும் சிறப்பை தற்போது பெற்றுள்ளது.தமிழ், மற்ற செம்மொழிகளை விட மேலானது. லத்தீன், ஹீப்ரு மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் இடையில் நசிந்து தற்போது வளமடைந்து வருகிறது. சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. சீனம், பட எழுத்து முறையில் உள்ளது. அரேபியம், காலத்தால் மிகவும் பிந்தியது. பாரசீகம், அரேபிய வரி வடிவத்தில் எழுதப்படுகிறது.
தமிழோ 2,500 ஆண்டுகள் தொடர்ச்சியான இலக்கியங்களைக் கொண்டுள்ளது. தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. இல்லற வாழ்க்கைக்கும் அகம், புறம் என வகுத்து இலக்கணம் கூறுவது, உலக மொழிகளிலேயே தமிழ் ஒன்றுதான்; இது தமிழின் தனிச் சிறப்பு.தமிழ், வேறு மொழிகளை சார்ந்திருக்கவில்லை; தனித்தன்மை வாய்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலியன திராவிட மொழிகள் எனப்படுகின்றன. இந்த மொழிகளுக்கு மூல மொழியாக தமிழ் விளங்குகிறது என கால்டுவெல் கூறியுள்ளார். அவர், 12 திராவிட மொழிகளை ஆராய்ந்து எழுதியுள்ளார்.
"மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூல், இந்த உண்மையை உரைக்கிறது.தமிழ், உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான நீதியையும், ஒழுக்கத்தையும், அற மாண்புகளையும் கூறுகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்னே செம்மொழி சிறப்பை தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல், 2004ல் தான் கிடைத்துள்ளது. இந்த பெருமையை கொண்டாடும் வகையில் தான், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது.கலிபோர்னியா பல்கலை தமிழ்த் துறைத் தலைவர் ஜார்ஜ் ஹார்ட், பின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா உட்பட, 49 நாடுகளில் இருந்து, 536 தமிழ் அறிஞர்கள் வருகின்றனர். இந்தியாவில் இருந்து, 5,000 பேர் பங்கேற்கின்றனர்.
பல்வேறு அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் மாநாட்டிற்கு வந்து செல்வோருக்கு வசதியாக சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்த நடக்கும், செம்மொழி மாநாடு, உலகத் தகவல் தொழில் நுட்பவியல் மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்கிறேன் என்றார்.
உலகில் 6,880 மொழிகள் உள்ளன. இதில், 2,000 மொழிகள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றுள், "கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஹீப்ரு, சமஸ்கிருதம்' ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில், தமிழும் செம்மொழி எனும் சிறப்பை தற்போது பெற்றுள்ளது.தமிழ், மற்ற செம்மொழிகளை விட மேலானது. லத்தீன், ஹீப்ரு மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் இடையில் நசிந்து தற்போது வளமடைந்து வருகிறது. சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. சீனம், பட எழுத்து முறையில் உள்ளது. அரேபியம், காலத்தால் மிகவும் பிந்தியது. பாரசீகம், அரேபிய வரி வடிவத்தில் எழுதப்படுகிறது.
தமிழோ 2,500 ஆண்டுகள் தொடர்ச்சியான இலக்கியங்களைக் கொண்டுள்ளது. தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. இல்லற வாழ்க்கைக்கும் அகம், புறம் என வகுத்து இலக்கணம் கூறுவது, உலக மொழிகளிலேயே தமிழ் ஒன்றுதான்; இது தமிழின் தனிச் சிறப்பு.தமிழ், வேறு மொழிகளை சார்ந்திருக்கவில்லை; தனித்தன்மை வாய்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலியன திராவிட மொழிகள் எனப்படுகின்றன. இந்த மொழிகளுக்கு மூல மொழியாக தமிழ் விளங்குகிறது என கால்டுவெல் கூறியுள்ளார். அவர், 12 திராவிட மொழிகளை ஆராய்ந்து எழுதியுள்ளார்.
"மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூல், இந்த உண்மையை உரைக்கிறது.தமிழ், உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான நீதியையும், ஒழுக்கத்தையும், அற மாண்புகளையும் கூறுகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்னே செம்மொழி சிறப்பை தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல், 2004ல் தான் கிடைத்துள்ளது. இந்த பெருமையை கொண்டாடும் வகையில் தான், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது.கலிபோர்னியா பல்கலை தமிழ்த் துறைத் தலைவர் ஜார்ஜ் ஹார்ட், பின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா உட்பட, 49 நாடுகளில் இருந்து, 536 தமிழ் அறிஞர்கள் வருகின்றனர். இந்தியாவில் இருந்து, 5,000 பேர் பங்கேற்கின்றனர்.
பல்வேறு அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் மாநாட்டிற்கு வந்து செல்வோருக்கு வசதியாக சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்த நடக்கும், செம்மொழி மாநாடு, உலகத் தகவல் தொழில் நுட்பவியல் மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்கிறேன் என்றார்.
Labels:
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
Subscribe to:
Posts (Atom)