எண்ணங்களின் பிரதிபலிப்பு

Tuesday, July 22, 2008

நூலிழையில் தப்பியது மத்திய அரசு! ஆதரவு : 275 எதிர்ப்பு: 256

பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுகளும், எதிராக 256 ஓட்டுகளும் விழுந்தன. இதன் மூலம், கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த பரபரப்பான திருப்பங்களுக்கு பின், நூலிழையில் மத்திய அரசு தப்பியது. அரசை கவிழ்த்து, அணுசக்தி ஒப்பந்தத்தை சீர்குலைப்பதோடு, மாயாவதியை பிரதமராக்கலாம் என, இடதுசாரி தலைவர்கள் கண்ட கனவும், மேற்கொண்ட வியூகமும் பெரும் தோல்வியை தழுவியுள்ளது. மீதமுள்ள ஆட்சிக் காலத்தை, இடதுசாரிகளின் நிர்பந்தம் இன்றி, பிரதமர் மன்மோகன் சிங் அரசு முடிக்கும்.


தீவிரமாக செயல்பட்டனர் : கடந்த 2004ம் ஆண்டு முதல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, இடதுசாரிகள் சமீபத்தில் வாபஸ் பெற்றனர். அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதையடுத்து, பார்லிமென்டை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, மன்மோகனை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, "அரசை எப்படியும் காப்பாற்றுவது' என, காங்கிரஸ் தலை மையிலான அணியும், "எப்படியும் வீழ்த்தி விடுவது' என, இடதுசாரி தலைமையிலான அணியினரும் தீவிரமாக செயல்பட்டனர்.


எம்.பி.,க்கள் 25 கோடி மற்றும் 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக புகார்கள் எழுந்தன.இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் லோக்சபா கூடியது. அப்போது, அரசுக்கு நம்பிக்கை கோரும் ஒருவரி தீர்மானத்தை தாக்கல் செய்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். "நாட்டின் நலன் கருதியே அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது' என்றார். இதைத் தொடர்ந்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உட்பட பல கட்சித் தலைவர்கள் பேசினர்.இரண்டாவது நாளாக நேற்று தலைவர்களின் விவாதம் தொடர்ந்தது. விவாதம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ., கட்சியை சேர்ந்த எம்.பி., அசோக் அகர்வால், அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க தனக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் தெரிவித்தார். சபை வரலாற்றில் இல்லாத வகையில், கைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களை வெளியே எடுத்து சபையில் காண்பித்தார்.


இப்பிரச்னையால் மதியத்திற்கு மேல் சபையில் அமளி ஏற்பட்டு, பின் ஒரு வழியாக 6.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, விவாதத்தை முடித்து வைக்க பிரதமர் அழைக்கப் பட்டார். அப்போதும் கூச்சல், குழப்பம் இருந்ததால், பிரதமர் தன் உரையை சில நிமிடங்களில் முடித்து விட்டார்.அவர் தாக்கல் செய்த ஆறு பக்க பதிலுரையில், "என்னை தங்களின் அடிமைகளாக நடத்த இடதுசாரி கட்சியினர் திட்டமிட்டனர். ஒவ்வொரு கட்ட சமரச பேச்சுவார்த்தையின் போது, தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்த விரும்பினர். அது ஏற்றுக் கொள்ள முடியாதது' என்று தெரிவித்திருந்தார்.


பின்னர், பல நாட்களாக நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நம்பிக்கை ஓட்டெடுப்பு துவங்கியது. எதிர்க்கட்சியினர் டிவிஷன் ஓட்டு நடத்த வேண்டும் என, வலியுறுத் தினாலும், எலக்ட்ரானிக் மிஷின் மூலம் முதலில் ஓட்டெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், எலக்ட்ரானிக் மிஷினில், 50க்கும் மேற்பட்ட ஓட்டுகள் பதிவாகவில்லை. மொத்த ஓட்டுகள் 487 என்றும், அரசுக்கு ஆதரவு 253 என்றும், எதிர்ப்பு 232 என்றும், ஓட்டுப் போடாதவர்கள் இரண்டு பேர் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, எம்.பி.,க்களிடம் சீட்டுக்கள் கொடுக்கப்பட்டு டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அரசுக்கு ஆதரவாக 275 எம்.பி.,க்களும், எதிராக 256 எம்.பி.,க்களும் ஓட்டளித்தனர்.


10 எம்.பி.,க்கள் ஓட்டுப் போடவில்லை. சபையில் நேற்று 541 எம்.பி.,க்கள் ஆஜராகியிருந்தனர். இவர்களில் 271 பேர் ஆதரவு அரசுக்கு தேவை. இருந்தாலும், அதை விட கூடுதலாக நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.மொத்தத்தில் எதிரணியின் ஓட்டுகளை விட கூடுதலாக 19 ஓட்டுகள் பெற்று அரசு வெற்றி பெற்றது. நேற்றைய ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம், கடந்த 30 ஆண்டுகளில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், வெற்றி பெற்ற ஏழாவது பிரதமர் என்ற பெருமையை மன்மோகன் பெற்றுள்ளார்.ஓட்டெடுப்பின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே, சபையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.


நேற்று நடந்த இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட பா.ஜ., எம்.பி.,க்கள் நான்கு பேருக்கு, பார்லிமென்டின் லாபியில் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது.நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி தலைவர் அமர்சிங், "என் அரசியல் வாழ்வில் இன்று தான் மகிழ்ச்சியான நாள்' என்றார். மத்திய அரசு பெற்ற வெற்றி, "ஊழல் மூலமாகவும், மோசடி வேலைகள் மூலமாகவும் பெற்ற வெற்றி' என, பா.ஜ., கூறியுள்ளது.அரசு வெற்றி பெற்றதை தொழில்துறையும் வரவேற்றுள்ளது.


கட்சி மாறிய எம்.பி.,க்கள் யார்?: பா.ஜ.,வைச் சேர்ந்த நான்கு பேர், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், பிஜு ஜனதா தளம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தலா ஒருவர் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.ஐ.மு., கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டு போட்ட பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி., ஹரிஹர் ஸ்வெயின் அக்கட்சியிலிரு ந்து நீக்கப்பட்டுள்ளார் என, அக்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

Monday, July 21, 2008

பா.ஜ.க.-காங்கிரசை மிரட்டும் 3-வது அணி

மத்திய அரசை காப்பாற்றி எப்படியாவது ஆட்சியைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் போரா டிக்கொண்டிருக்கிறது.

எப்படியாவது, ஏதாவது செய்து காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட வேண்டும் என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக் கொண்டு காரியத்தில் குதித்துள்ளது.

காங்கிரஸ், பா.ஜ.க. இருகட்சித்தலைவர்களின் விïகத்திற்கிடையே தேசிய அரசியலில் திடீர் திருப்பமாக 3-வது அணி எனப்படும் மாற்று அணி புதிய சக்தியாக வலுப்பெற்றுள்ளது. இப்படி ஒரு அபார திடீர் வளர்ச்சியை 3-வது அணி பெறும் என்று அரசியல் நிபுணர்களே எதிர் பார்க்கவில்லை.

ஐக்கிய தேசிய முற் போக்கு கூட்டணி எனப் பெயரிடப்பட்ட 3-வது அணி யில் அ.தி.மு.க., சமாஜ் வாடி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் உள்பட 8 கட்சிகள் இருந்தன. முதலில் இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. சமீபத்தில் சமாஜ்வாடி கட்சி `பல்டி' அடித்து காங்கிரஸ் பக்கம் போய் விட்டது.

இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினையில் தங்களை காங்கிரசார் அவ மானப்படுத்தி விட்டதாக கருதிய கம்ïனிஸ்டு தலை வர்கள் மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். சிதறிக்கிடந்த மாநில கட்சிகளை ஒருங் கிணைத்தது அவர்கள்தான். `தலித்' இன மக்களின் தனித் தலைவராக உருவெடுத்து வரும் மாயாவதியை சந்தித்துப் பேசினார்கள்.

அதன் பேரில் 3-வது அணி தலைவர்கள் சந்திர பாபு நாயுடு, சவுதாலா ஆகியோருடன் மாயா வதி பேசினார். மெகா கூட்டணிக்கு திட்டமிடப் பட்டது. இதைத் தொடர்ந்து தேவேகவுடா, சந்திரசேகர் ராவ், அஜீத்சிங் உள்பட பல தலைவர்களுடன் இடது சாரி கட்சித் தலைவர்களும், மாயாவதியும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதற்கு பலன் கிடைத்தது.

காங்கிரஸ், பா.ஜ.க. பக் கம் போகாமல் நாமே சொந்த காலில் நிற்க லாம் என்று மாநில கட்சி களிடம் நம்பிக்கை விதை தூவப்பட்டது. மாயாவதி யுடன் கூட்டணி வைத்துக் கொள்வதன் மூலம் `தலித்' ஓட்டுக்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் பல கட்சிகள் மெகா கூட்டணிக்கு சம் மதித்தன. தற்போது 3-வது அணியில் பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத், இந்திய தேசிய லோக் தளம், ஜார்க்கண்ட் விகாஸ் கட்சி, ராஷ்டீரிய லோக் தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கான, ராஷ் டீரிய சமிதி உள்பட 10க் கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

இந்த மெகா கூட்டணிக்கு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு உள்ளது. இதன் மூலம் அடுத்தத் தேர்தலில் 3-து அணியை ஒரு மாபெ ரும் சக்தியாக மாற்ற முயற்சி கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று டெல்லியில் 3-வது அணி தலைவர்கள்-இடது சாரி கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.

ஓட்டெடுப்பு நாளை நடந்து முடிந்ததும், நாளை மறுநாள் (புதன்கிழமை) 3-வது அணி தலைவர்கள் மீண்டும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.

3-வது அணியில் தற் போது அதிகாரப்பூர்வமாக தலைவர் என்று யாரும் இல்லை. உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயா வதியை தலைவராக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் மாயாவதி தேசிய அரசியலில் விசுவரூபம் எடுக்கத் தொடங்கி உள் ளார்.

மாயாவதியை அடுத்த பிரதமர் ஆக்குவோம் என்ற கோஷத்தை இடது சாரிகள் முதலில் எழுப்பினார்கள். இதை 3-வது அணியில் உள்ள மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது பா.ஜ.க.-காங்கிரசுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மாயாவதியுடன் கூட்டணி சேர்ந்தால், தங்கள் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ் ஆகியோர் நினைக்கிறார்கள். உத்தரபிரதேச அரசியலில் எதிரும்-புதிருமாக இருந்த மாயாவதி - அஜீத்சிங் இருவரும் 3-வது அணி மூலம் சேர்ந்து இருப்பதும் முக்கியமானதாக கருதப்படு கிறது.

இவர்கள் கை கோர்த்து இருப்பதால் உத்தரபிரதேச முஸ்லிம்-தலித்-உயர்சாதி ஓட்டுக்கள் பெருவாரியாக 3-வது அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜீத்சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம் கட்சிக்கு வளர்ச்சி கிடைக்கும் என் கிறார்கள்.

3-வது அணி எனும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நாடெங்கும் மாயா வதி கால் பதிக்கத் தொடங்கி இருப்பது காங்கிரசை விட பா.ஜ.க. தலைவர்களுக்கு தான் கலக்கத்தை கொடுத் துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் பட்சத்தில் அத்வானிதான் அடுத்த பிரதமர் என்ற எண்ணம் நாடெங்கும் பரவி இருந்தது. அத்வானிக்கு போட்டியாக களத்தில் யாரும் இல்லை என்ற நிலை இருந்தது.

தற்போது 3-வது அணி வலுவாகி மாயாவதி முன் நிறுத்தப்பட்டுள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்பட லாம் என்று பா.ஜ.க. பயப் படுகிறது. "உண்மையில் பிரதமர் வேட்பாளர் என்ற எங்கள் கோஷத்துக்கு பாதிப்பு வரலாம்'' என்று மூத்த பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறினார்.

மாயாவதியை முன் நிறுத்தி சந்திரபாபு நாயுடு, தேவேகவுடா, அஜீத்சிங், சந்திரசேகரராவ், சவுதாலா, பிருந்தாவன் கோஸ்வாமி போன்றவர்களை துணைக்கு வைத்துக் கொண்டால் இந்தியாவில் புதிய புரட்சியை உண்டாக்கி விட முடியும் என்று கம்ïனிஸ்டு தலைவர்கள் பிரகாஷ் கரத்தும், ஏ.பி.பரதனும் உறுதி யாக நம்புகிறார்கள். மாநில கட்சிகள் ஒத்துழைப்புடன் மாயாவதி சூறாவளி சுற்றுப்பயணத்தில் சுமார் 12 சதவீத தலித் ஓட்டுக்களை 3-வது அணி பக்கம் திருப்பி விட முடியும் என்றும் அவர் கள் கருதுகிறார்கள்.

மாயாவதிக்கு உத்தரபிர தேசம் தவிர மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார் மாநில `தலித்'களிடம் ஓரளவு செல் வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கு மூலம் வட இந்தியாவில் கணிசமான தொகுதிகளில் அவர் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். காங்கிரஸ் தலைவர்களும் இந்த பயத் தில் தான் உள்ளனர்.

தென் இந்தியாவில் தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் ஆகியோருடன் சேருவதன் மூலம் மாயாவதி அலை தெற்கிலும் வீச வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இடது சாரிகள்-மாயாவதி அணி புதிய எழுச்சியை கொடுக்கும் என்று எதிர் பார்க்கிறார்கள்.

இடது சாரிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு வைத்துள்ள அர சியல் குறி மாயாவதிக்கு தனிப்பட்ட வெற்றியை தேடி கொடுக்கும்.

பாராளுமன்றத்தில் மன்மோகன்சிங் நம்பிக்கை தீர்மானம்; அத்வானி காரசார விவாதம்

அமெரிக்காவுட னான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரிகள் ஆத ரவை வாபஸ் பெற்றதால் மத்திய அரசு மெஜாரிட்டியை இழந்தது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு நிரூ பிக்க வேண்டும் என்று பா.ஜ.க., இடது சாரி கள் வலியுறுத்தின. இதை ஏற்று நாளை (செவ்வாய்க்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வந்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவை திரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆதரவாக வாக் களிக்க ரூ.25 கோடி வரை "குதிரை பேரம்'' நடந்ததாக தகவல்கள் வெளியானது. இது தவிர தேசிய அரசியலில் கட்சிகளின் நிலைப்பாட் டிலும் மாறுதல்கள் ஏற்பட்டது.

3-வது அணியில் இருந்து விலகிய முலாயம்சிங் யாத வின் சமாஜ்வாடி கட்சி, காங்கிரசுடன் "கை'' கோர்த் தது. இதையடுத்து 3-வது அணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சந்திர சேகர்ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தேவேகவு டாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சேர்ந்தன.

இடது சாரிகளும் ஆதரவு கரம் நீட்டி இருப்பதால் 3-வது அணி தேசிய அள வில் வலுவானதாக மாறி உள்ளது. இந்த மாற்றம் காரணமாக ஆளும் கூட்ட ணிக்கு ஆதரவாக 260 எம்.பி.க்களும், எதிராக 268 எம்.பி.க்களும் இருப்பது உறுதியாகி உள்ளது.

சிறிய கட்சிகள், சுயேட் சைகள் தெரிவித்து வரும் கருத்துக்களின் அடிப்படை யில் கணக்கிட்டால் மத்திய அரசுக்கு 268 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக 270 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே மத்திய அரசு வெற்றி பெறுமா, தோல்வி அடையுமா என்பது கணிக்க முடியாத படி உள்ளது.

தொடர்ந்து சிக்கல் நீடிப் பதால் சில எம்.பி.க்களை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கச் செய்யும் கடைசி ஆயுதத்தை காங்கிரஸ் தலைவர்கள் கையில் எடுத்துள்ளனர். 10 முதல் 15 எம்.பி.க்களை வரவிடாமல் செய்ய முயற்சி கள் நடக்கிறது. பா.ஜ.க., சிவசேனாவில் உள்ள எம்.பி.க்கள் பணத்துக்காக கடைசி நிமிடத்தில் விலை போய் விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

பரபரப்பான இத்தகைய சூழ்நிலையில் பாராளு மன்றத்தின் 2 நாள்சிறப் புக் கூட்டம் இன்று பகல் 11 மணிக்கு தொடங்கியது. எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இது முக்கியமான கூட்டம். இதில் எல்லா எம்.பி.க்களும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜி கூறினார்.

கூட்டம் தொடங்கியதும் 7 புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

அதன் பிறகு கடந்த கூட்டத் தொடருக்கு பின்னர் மறைந்த 5 முன்னாள் எம்.பி.க்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வழக்க மாக இத்தகைய தீர்மானத் துக்கு பிறகு கேள்வி நேரம் நடைபெறும். ஆனால் இன்று கேள்வி நேரம் எதுவும் இல்லை.

சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கேட்டுக் கொண்ட படி நேரடியாக நம்பிக்கைத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. "அமைச்சரவையின் மீது இந்த சபை நம்பிக்கை வைத் துள்ளது'' என்ற ஒற்றை வரி நம்பிக்கைத்தீர்மானத்தை சரியாக 11.22 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங் தாக் கல் செய்தார்.

இந்த தீர்மானத்தின் மீது மொத்தம் 16 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்று கூறிய சபாநாயகர் சோம்நாத்சட்டர்ஜி ஒவ் வொரு கட்சிக்கும் பேச அளிக்கப்படும் வாய்ப்புகள் குறித்து கூறினார்.

விவாதத்தை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து முதலில் பேசினார். ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு கடந்த 4 ஆண்டு களில் செய்துள்ள சாத னைகளை அவர்பட்டியலிட் டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியா வுக்கு ஏன் தேவை என்பதை பற்றியும், அவர் விளக்கம் அளித்தார்.

மன்மோகன்சிங் பேச்சு விவரம் வருமாறு:-

நான் பதவி ஏற்ற நாளில் இருந்து நாட்டு நலன் கருதியே எல்லா பணிகளையும் செய்து வருகிறேன். எனது அரசு எடுத்த ஒவ்வொரு முடிவும் நாட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே எடுக்கப் பட்டது.

4 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு, பண வீக்கம், விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை சமா ளிக்க அரசு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக இந்த சபை கூடி உள்ளது. கம்ïனிஸ்டு தலைவர்கள் ஜோதிபாசு, ஹர்கிஷன்சிங் சுர்ஜித் ஆகியோரால் இந்த கூட்டணி அரசு செதுக்கப்பட்டது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி கழகத்திடம் ஒப்புதல் பெற்றாலும், அமெரிக் காவை அணுகும் முன்பு பாராளுமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று இடது சாரிகள் உள்பட எல்லா கட்சிகளிடமும் உறுதி அளிக்கப்பட்டது.

எனது உறுதி மொழியை யாரும் ஏற்கவில்லை. நான் ஜப்பான் மாநாட்டுக்கு சென் றிருந்த போது இடது சாரி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஜப்பானில் இருந்து திரும்பி வந்த உடனே நான் ஜனாதிபதியை சந்தித்துப் பேசினேன். பாராளு மன்றத் தில் விரைவில் மெஜாரிட்டியை நிரூபிப்பதாக உறுதி கூறினேன்.

மத்திய அரசு எடுத்துள்ள ஒவ்வொரு நடவடிக்கை மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே எந்த இடைïறு பற்றியும் கவலைப்படாமல் உறுதியுடன் முன்னெடுத்து செல்வேன்.

இந்த அரசு எத்தகைய நடவடிக்கைககளில் ஈடு பட்டாலும் அது சுதந்திர போராட்டத்தை போற் றும் வகையிலும், 21-ம் நூற் றாண்டு சவால்களை சமா ளிக்க ராஜீவ் கண்ட கனவு களை நிறைவேற்றும் வகை யில் இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங்பேசினார்.

இதையடுத்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அத்வானியை பேசும்படி சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அழைப்பு விடுத்தார். அத்வானி பேச்சில் அனல் பறந்தது. சுமார் 1 மணி நேரம் மேல் அவர் ஆவேச மாகப்பேசினார். அவர் கூறி யதாவது:-

அணுசக்தி ஒப்பந்தத்தை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சமபங்குதாரராக இல்லை. இதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்த ஒப்பந்தம் தனிப்பட்ட 2 நாடுகளுக்கு இடையில் உள்ளது போல இல்லை. தனிப்பட்ட 2 பேருக்கு இடை யில் உள்ளது போல இருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. ஓட்டுக்காக உள்நாட்டு பாது காப்பு விஷயத்தில் அரசு அலட்சியமாகவே இருந்தது.

இந்தியாவில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ. பின்புலமாக இருப்பதை நாங்கள் பல தடவை சுட்டிக் காட்டினோம். ஆனால் அரசு கொஞ்சமும் செயல் படவில்லை. தற்போது இந்த அரசு தீவிர சிகிச்சைப் பிரி வில் கிடக்கும் நோயாளி போல கிடக்கிறது.

இந்த அரசு தப்பி பிழைக் குமா, பிழைக்காதா என்பதே பெரிய கேள்விக் குறியாக உள்ளது. இந்த அரசை நடத்தும் பிரதமருக்கு ஓட்டு உரிமை இல்லை. இந்திய வரலாற்றில் இத்தகைய நிலை ஏற்பட்டு இருப்பது இது தான் முதல் தடவை.

கூட்டணி தர்மத்தை பிரதமரும், சோனியாவும் கடைப்பிடிக்கவில்லை. ஜன நாயக அமைப்புகள் அனைத் தும் தவறாக பயன்படுத்தப்பட்டன.

தற்போது இந்த அரசு மெஜாரிட்யை இழந்து விட்டது. இந்த அரசை தோற்கடிக்க விரும்புகிறோம். ஆனால் இதன் மூலம் நிலையற்ற தன்மை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

இவ்வாறு அத்வானி பேசினார்.

அத்வானி பேசிய போது பல தடவை காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரி வித்து கூச்சலிட்டனர். சபாநாயகர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்து அவர்களை உட்கார வைத் தார்.

அத்வானி தன் பேச்சின் போது 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையை மன்மோகன்சிங் எதிர்த்ததாக குறிப்பிட்டார். அதற்கு பிதமர் மன்மோகன்சிங் எழுந்து மறுப்பு தெரிவித்தார்.

அத்வானி பேசி முடித்த தும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு உறுப்பினர் முகம்மது சலீம் எழுந்து பேசினார். இன்றைய முதல் நாள் விவாதம் இரவு 10 மணி வரை நடக்கும் என்று தெரிகிறது.

நாளை (செவ்வாய்க் கிழமை)யும் அரசியல் கட் சித் தலைவர்கள் விவா தத்தில் பங்கேற்று பேசு வார்கள். முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் பதில் அளித்து பேசுவார். நாளை பிற்பகல் நம்பிக்கைத் தீர் மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறும்.

எம்.பி.க்கள் தங்கள் இருக்கை முன் உள்ள பொத்தானை அழுத்தி வாக்கை பதிவு செய்வார்கள். அதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் சீட்டு மூலம் வாக்கெடுப்பு தொடரும். சில மணி நேரங்களுக்குள் ஓட்டெடுப்பு முடிவு தெரிந்து விடும்.

மத்திய அரசு தலைவிதி நாளை மாலை தெரிந்து விடும்.

Thursday, July 3, 2008

பா.ம.க. நூற்றுக்கு 200 சதவீதம் தி.மு.க கூட்டணியில் உள்ளது


சென்னை: “பா.ம.க., நூற்றுக்கு 200 சதவீதம் தி.மு.க., கூட்டணியில் உள்ளது,” என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று காலை கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிந்து, வெளியில் வந்த ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் விளம்பர பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இது மக்களுக்கு அருவெறுப்பை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க வேண்டும் என்று கூறி வந்தேன். முதல்வர் கருணாநிதி விளம்பர பேனர்களை வைப்பதை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதற்காக, நேரில் வந்து பாராட்டி முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன்.

வரும் 26ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை மதுபான ஒழிப்பு பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளேன். துõத்துக்குடியில் இருந்து சென்னை வரை இந்த பயணம் மேற்கொள்வேன். இந்த விவரத்தை முதல்வரிடம் தெரிவித்தேன். மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினேன். மது ஒழிப்பு தொடர்பாக, மகாராஷ்டிர அரசு ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது. அந்த நகலை முதல்வரிடம் வழங்கி, அதை நாமும் பின்பற்றலாம் என்று யோசனை தெரிவித்தேன்.

ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக படிக்க வேண்டும் என்ற சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் வெற்றி பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தேன். ஆங்கிலமும், தமிழும் மொழிப் பாடங்களாக இருப்பதைப் போல மற்ற பாடங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினேன். தேசிய மொழிகளாக, 18 மொழிகள் அங்கீகரிக்கப்படும் என்று குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூறப்பட்டது. இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . விரைவில் வரப் போகும் தமிழக பட்ஜெட் குறித்தும், சில யோசனைகளை தெரிவித்தேன்.

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு தற்போதைய நிலையை மக்களுக்கு உணர்த்தும் அறிக்கை, செயல் அறிக்கை, தாக்கம் பற்றிய அறிக்கை ஆகிய மூன்றையும் தாக்கல் செய்கிறது. அதேபோல் தமிழகத்திலும் சட்டசபையை கூட்டி, இந்த அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் . எந்த மாநிலமும் இதை பின்பற்றவில்லை. இதை நாம் பின்பற்றினால், முன்மாதிரியாக அமையும் . எனது யோசனையை கவனிப்பதாக முதல்வர் கூறினார். பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் தனி பட்ஜெட் போட வேண்டும். தேசிய மின் கழகம் சார்பில் இதுவரை தமிழகத்தில், ஒரு மின் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தேசிய மின் கழக தலைவராக இப்போது சங்கரலிங்கம் என்ற தமிழர் உள்ளார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மின் உற்பத்தி நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று கோரிக் கை வைத்தேன். வேறு அரசியல் பற்றி பேசவில்லை. இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

பார்லிமென்ட் தேர்தல் கூட்டணி பற்றி கேட்டதற்கு, “நுõற்றுக்கு 200 சதவீதம் இந்த கூட்டணியில் தான் இருக்கிறோம். இதை பல முறை நான் உங்களிடம் தெரிவித்து விட்டேன்,” என்று கூறிவிட்டு கிளம்பினார். முதல்வருடன் நடந்த சந்திப்பின்போது ஜி.கே.மணி உடனிருந்தார்.

Tuesday, July 1, 2008

கச்சா எண்ணெய் விவகாரத்தின் பின்னணி என்ன

கச்சா எண்ணெய் விலைகள் கூடுவதற்கு உலகளவில் பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஐந்து காரணங்கள் மிகவும் முக்கியமானவை:உலகளவில் எண்ணெய் உபயோகம் உயர்ந்துள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் உபயோகம் அதிகமாக இருக்கிறது.விலை சரியாமல் இருப்பதற்காக சில சமயம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை நிறுத்தி விடுகின்றன. இது செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலைகளை மறுபடி கூட்ட உதவுகிறது.சில சமயம் சில எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஏற்படும் உள்நாட்டுப் பிரச்னைகள் அண்டை நாடுகளுடன் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவைகளால் எண்ணெய் உற்பத்தி குறைகிறது அல்லது நிறுத்தப்படுகிறது.


எண்ணெய் விலை வருங்காலங்களில் உயரும் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்பு உள்ளவர்கள் மார்ஜின் பணத்தை செலுத்தி டிரேட் செய்யலாம். இதில் உலகளவில் பலர் ஈடுபட்டுள்ளதால், இதுவும் தற்போது கச்சா எண்ணெய் விலை கூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.டாலர் மதிப்பு, கூடிவரும் பணவீக்கம், குறைந்து வரும் பங்குச் சந்தை ஆகியவைகளால், முதலீட்டாளர்கள் தங்கம், எண் ணெய் முதலீடுகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆதலால், எண்ணெய் வழுக்கிக் கொண்டு கீழே இறங்காமல் மேலே ஏறிக்கொண்டு இருக்கிறது.அமெரிக்காவில் எண்ணெய் உபயோகம் குறைந்துள்ளது என்று வந்த புள்ளி விவரத்தை அடுத்து, சென்ற வாரம் ஒரு பேரல் 132 டாலர் அளவிற்கு குறைந்தது.


ஆனால், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 150-170 டாலரை எட்டும் என்று விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து விலை மறுபடி கூட ஆரம்பித்தது. தற்போது 140யை தாண்டி நிற்கிறது.கச்சா எண்ணெய் என்றால் என்ன?கச்சா எண்ணெய் என்றால் ஹைட்ரோ கார்பன் கலந்த ஒரு திரவம்.


இனிப்பான கச்சா எண்ணெய் : கச்சா எண்ணெயில் எத்தனை வகைகள் உள்ளன? வெஸ்ட் டெக்சாஸ் இண்ட்ர்மீடியேட் கச்சா எண்ணெய் தான் உலகிலேயே சிறந்த எண்ணெய். மற்ற கச்சா எண்ணெய்களை விட 2 முதல் 4 டாலர் வரை அதிகமாக விற்கப்படுகிறது. இதில் குறைந்த அளவே சல்ப்பர் இருப்பதால் (0.24 சதவீதம்) இது இனிப்பான கச்சா எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உபயோகிக்கப்படும் கச்சா எண்ணெய் பெரும்பாலும் அதிக சல்ப்பர் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யபடுவதாகும்.


முக்கியமான பொருளா என்ன?: ஒரு பேரல் என்றால் என்ன?ஒரு பேரல் என்றால் 42 அமெரிக்க காலன். அதுவே லிட்டரில் பார்த்தால் 158.98 லிட்டர். ஒரு டன் கச்சா எண்ணெய் என்பது 7.33 பேரல்.எண்ணெய் மேல் ஏன் இவ்வளவு பிரியம் காட்டுகிறோம். அவ்வளவு முக்கியமான பொருளா என்ன?ஆமாம். உலகளவு எரிசக்தி தேவையில் 40 சதவீதத்தை கச்சா எண்ணெய் தான் சமாளிக்கிறது. உலகளவில் ஒரு நாளைக்கு 76 மில்லியன் பேரல் உபயோகப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் தினசரி 20 மில்லியன் பேரல்களும், சீனாவில் தினசரி 5.6 மில்லியன் பேரல்களும், ஜப்பானில் தினசரி 5.4 மில்லியன் பேரல்களும் உபயோகப்படுத்தப்படுகிறது.


எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு என்றால் என்ன?


உலகின் 40 சதவீதம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான அல்ஜீரியா, இந்தோனேஷியா, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவூதி அரேபியா, யூ.ஏ.இ., ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு தான் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு. இந்த நாடுகளிடம் தான் 75 சதவீத எண்ணெய் ரிசர்வ்கள் உள்ளன. உலகின் 55 சதவீத ஏற்றுமதியை இவர்கள் தான் செய்து வருகின்றனர்.இந்தியா ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய் உபயோகிக்கிறது?


இந்தியா முதல் 10 இடங்களில் ஒன்றாக வருகிறது. தினசரி 2.2 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உபயோகப்படுத்தப்படுகிறது.இந்தியாவில் எண்ணெய் கிடைப்பதில்லையா?இந்தியாவின் ஒரு நாள் எண்ணெய் உற்பத்தி 0.8 மில்லியன் பேரல்கள் தான். 70 சதவீதம் நாம் இறக்குமதியையே நம்பி இருக்கிறோம். தற்போது ராஜஸ்தான், பாம்பே ஹை போன்ற இடங்களில் எண்ணெய் வளங்கள் கிடைக்க ஆரம்பித்திருப்பதால் வருங்காலங்களில் இவை நமது தேவையை சிறிது பூர்த்தி செய்யும் என நம்பலாம்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ன செய்கிறது?இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதற்கு மிகவும் குறைந்த அளவே செலவு ஆவதால், ரிலையன்ஸ் பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பு செய்து எரிபொருளாக்கி ஏற்றுமதி செய்கிறது.


இந்தியாவில் மாற்று எரிபொருளே இல்லையா?பல மாற்று எரிபொருட்கள் இருந்தாலும் அவை போதுமானதாக இல்லாததால் எண்ணெயையே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. ஆதலால், உபயோகங்களை குறைத்து நாட்டையும், வீட்டையும் வளமாக்க பாடுபடவேண்டும்.