எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, September 28, 2009

சனி பெயர்ச்சி பலன்கள்


இந்த சனி பகவான் என்பவர் யார்?சனி பெயர்ந்தால் என்ன ஆகும்?


உண்மையாக சனி பெயர்ந்தால் என்ன ஆகும்?

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சனிப்பெயர்ச்சி - சனிப்பெயர்ச்சி என்று எந்த ஏட்டைப் பார்த்தாலும் சனிப்பெயர்ச்சி மயம்தான்.

சனி பகவான் - சிம்ம ராசியிலிருந்து - கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்து குடிபெயர்கிறாராம்!

சரி; இந்த சனி பகவான் என்பவர் யார்?-வானமண்டலத்திலிருந்து கத்திரி - அக்னி நட்சத்திரம் என்ற பெயர்களில் நம்மையெல்லாம் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கிறதே சூரியன்; அந்த சூரியனுக்கும் சாயாதேவி என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்தான் இந்த சனி பகவான் என்கிறார்கள்.

சுட்டெரிக்கும் சூரியனைக் கட்டியணைத்து கர்ப்பம் தரித்து ஒரு மகனையும் பெற்றெடுத்தாள் ஒரு பெண் என்றால் எத்தனை வோல்டேஜ் - ஏ.சி. வசதி படைத்த பெண்ணாக அவள் இருந்திருக்கவேண்டும்?

வோல்டாஸ் - ஏ.சி. கம்பெனிக்காரர்களைத்தான் கேட்கவேண்டும். ஏனெனில் அவர்கள்தான்

தங்களது ஏ.சி. கருவிகளை எரிமலையையும் பனிமலையாக்கும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்!

இந்த சனி என்பது பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

சனி என்பது விண்வெளியிலுள்ள ஒரு கோள் என்கிறது விஞ்ஞானம். வியாழன் என்ற கோளுக்கு அடுத்தபடியாக இது ஒரு மிகப்பெரிய கோள். இந்தக்கோளின் குறுக்களவு மட்டுமே 73 ஆயிரம் மைல் என்று அறுதியிட்டு உறுதிபட வரையறுத்திருக்கிறது விஞ்ஞானம்.

பூமிக்கும் இந்த சனி என்கிற கோளுக்குமிடையில் உள்ள தூரம் எவ்வளவு? 75 கோடி மைலாகும்!

இந்த சனிக் கிரகத்தை - கோளைத்தான் இங்கே சனி பகவான் என்கிறார்கள்.

விஞ்ஞானம் கூறும் சனி ஒரு கோள் என்பதை நம்புவதா? நம்மூர் சோதிடர்கள் சனிபகவான் என்கிறார்களே அதை நம்புவதா?

விடை காண்பது மிக எளிது!

விஞ்ஞானம் கூறுவது - அதன் அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் எல்லாமே உலகம் முழுவதிலுமுள்ள நாடுகள் - மக்களுக்குப் பொதுவானது!

தொலைக்காட்சி என்றால் உலகத்தின் எந்த நாட்டிலும் - எந்த வீட்டிலும் படிப்பறிவற்ற பாமரன்கூட இயக்கலாம். காட்சிகளைக் கண்டுகளிக்கலாம்!

செல்போன் என்றால் முதலாளியின் கையிலும் வைத்துக்கொள்ள முடியும்; அவரின்கீழ் பணியாற்றும் கடைநிலை ஊழியரின் பையிலும் வைத்துக் கொள்ளலாம்; அவரும் பேசலாம். இவராலும் பேச முடியும்.

இப்படி விஞ்ஞானம் கூறுவதையும் அதன் அடிப்படையிலான கண்டுபிடிப்புகளின் பயன்களையும் எல்லோரும் அனுபவிக்கலாம்! ஆனால் -சோதிடம் சொல்லும் இந்த சனிபகவான் - அவரது பெயர்ச்சி பற்றியெல்லாம் - உலகில் எத்தனை நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியும்? அவர்களுக்கெல்லாம் சனிப் பெயர்ச்சிப் பலன்கள் பற்றி எதுவும் தெரியுமா? அந்த நாடுகளில் எல்லாம் நம்ம ஊர்த் திருநள்ளாறு போல - சனீஸ்வரன் கோயில் என்று உண்டா? அங்கே எல்லாம் நளதீர்த்தக்குளங்கள்தான் உண்டா?

காக்கையின் மேல் ஓர் ஆளே ஏறி உட்காரலாம். காக்கை நசுங்காது. சனீஸ்வரர் ஏறி அமர்ந்த பிறகும் பிள்ளையார் சதுர்த்திக் கொழுக்கட்டை போல காக்கை அப்படியே இருக்கும் என்றால் நம்புவார்களா?

நம்பமாட்டார்கள் - என்ன காரணம்?

தொலைக்காட்சிப் பெட்டி போல - செல்போன் போல எல்லோரும் சனி பகவானைக் கண்ணால் காணமுடியாது! அவன் எங்கேயிருந்து எங்கே போகிறான் என்பதை ஜோதிடர்கள்தான் கண்டுபிடித்துப் பலன் சொல்ல வேண்டும். யாரை ஏழரைநாட்டுச் சனி பிடித்துக்கொள்ளும்? யாரை விட்டுவிடும்? என்பது பற்றியெல்லாம் ஜோதிடர்கள் சொல்வதைத்தான் நம்பித் தொலையவேண்டும். ஆனால் -

செல்போன்களால் என்ன பயன் என்பதை ஒவ்வொருவரும் உலகம் முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது விஞ்ஞானத்தின் சக்தி.

ஜோதிடர்கள் கூறும் சனிபகவான் சக்தி என்ன?

திருநள்ளாறில் சனிப் பெயர்ச்சி விழா.

பக்தர்கள் நளதீர்த்தத்தில் நீராடும்போது அவர்களது உடைமைகள் திருட்டுப் போவதாகப் புகார்!

யாரிடம் புகார் கூறுகிறார்கள்? சனீஸ்வரரிடமா? போலீசாரிடம்தான் தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துத் தரும்படி கோருகிறார்கள்.

பக்தர்களின் உடைமைகள் திருட்டுப் போகாமல் பாதுகாக்க கோவிலைச் சுற்றி 37 ரகசியக் கேமராக்களை போலீசார் பொறுத்தியிருக்கிறார்கள்.

பக்தர்களைப் பாதுகாக்க மொத்தம் அங்கே 1500 போலீசார்!

பக்தர்கள் சனீஸ்வரனுக்குச் சக்தி அதிகமா? போலீசாருக்கு சக்தி அதிகமா? தங்கள் உடையைக் காக்கும் சக்தி போலீசாருக்கே உண்டு என்று நம்புகிறார்கள்!

இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, -

73 ஆயிரம் மைல் குறுக்களவு கொண்ட சனி நிஜமாகவே பெயர்ந்தால் என்ன ஆகும்?

நினைத்துப் பார்ப்பவர்களின் நெஞ்சம் பதறும்!

- நாற்பதாண்டுகளுக்கு முன்பு -

விண்ணிலே பறந்து கொண்டிருந்த சாட்டிலைட் ஒன்று பூமிப் பந்து நோக்கி வருகிறது; எங்கே விழும் என்று கணிக்க முடியவில்லை; எங்கே விழுந்தாலும் நாசம்; சர்வநாசம்தான் என்று உலகமே பயந்து நடுங்கியது!

அதுபோல சனி என்ற கோள் இடம்பெயர்ந்து பூமி நோக்கி வந்தால் என்ன ஆகும்?

சனிப் பெயர்ச்சியின் பலன் எழுதுபவர்கள், அதனை நம்புகிறவர்கள் எல்லாம் சிந்தித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை,

நளன்குளம் என்கிற மூடநம்பிக்கைக் குளத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது உடைமைகளை சனி பகவானால் பாதுகாக்க முடியவில்லை. அதைத்தான் -

நளன்குளத்தைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள 12 கேமராக்கள் எடுத்துக்காட்டுவனவாக இருக்கின்றன.

அதனால்தான்

இந்த கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை, கோவில் நிருவாக அதிகாரி அறைக்குள்ளும், திருநள்ளாறு காவல் நிலையத்திலும் செயல்படுகிறது.

இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் திருட்டுச் சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்றும், இதனால் பொது மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க முடியும் என கோவில் நிர்வாக அதிகாரி பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார் -
என்கிறது பத்திரிகைச் செய்தி!

-------------------------(நன்றி: முரசொலி 27.9.2009)

Sunday, September 27, 2009

இருள் பொருள், இருள் ஆற்றல்

முனைவர் த.வி.வேங்கடேசுவரன், ‘இருள் பொருள், இருள் ஆற்றல்’ என்ற தலைப்பில் 26-09-09 அன்று பேசினார். அதன் வீடியோ இங்கே.


Watch Dark Matter, Dark Energy (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com



இரண்டாம் பகுதி:


Watch Dark Matter, Dark Energy (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

Thursday, September 10, 2009

5 ஆண்டுகளில் தமிழகத்தில் காங். ஆட்சியைப் பிடிக்கும்

தமிழக இளைஞர் காங்கிரஸார் கடுமையாகவும், தீவிரமாகவும் பாடுபட்டால் ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று மாலை சென்னைக்கு வந்தார். நான்கு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் மாணவர்களிடையே பேசினார். பின்னர் காமராசர் அரங்கத்தி்ல நடந்த கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸாருடன் பேசினார். பின்னர் பத்திரிக்கை நிறுவன அதிபர்கள், ஆசிரியர்களுக்குப் பேட்டி அளித்தார். அதேபோல சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாலை 6.48 மணிக்கு காமராஜர் அரங்கத்துக்கு ராகுல் காந்தி வந்தார். அரங்கத்துக்குள் 35 வயதுக்குட்பட்ட கட்சித்தொண்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 6.50 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரையில் இளைஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசினார்.

அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துப் பேசியதாவது..

உங்களிடமுள்ள எழுச்சி கட்சியை மேலும் வளர்ப்பதற்கான நம்பிக்கையை கொடுத்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இளைஞர் காங்கிரசார் கையில் கட்சியை ஒப்படைக்கிறேன். காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது என்றும், மக்கள் நலனுக்கான பணிகளில் ஈடுபடவில்லை என்றும் சொல்கிறீர்கள். நான் அடிக்கடி தமிழகத்துக்கு வரவேண்டும் என்றும் தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறீர்கள்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக இளைஞர் காங்கிரசார் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். மக்கள் நலப்பணிகளுக்காக உரத்த குரல் கொடுக்க வேண்டும். மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் இளைஞர் காங்கிரசாரின் பணிகள் அமைய வேண்டும்.

40 ஆண்டுகளாக இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கமுடியவில்லை. இளைஞர் காங்கிரசார் மக்கள் நலப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டால் தமிழ்நாட்டில் நிச்சயம் ஐந்தே ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்.

கட்சியை பலப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நான் எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வரத் தயாராக இருக்கிறேன். மத்திய அரசின் மக்கள் நலனுக்கான திட்டங்களை கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடையும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளுங்கள்.

கோஷ்டிகள் ஒழிக்கப்படும்...

கட்சிக்குள் எழுந்துள்ள கோஷ்டி பூசல்கள் பற்றி குறிப்பிட்டீர்கள். விரைவில் கோஷ்டி பூசல்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகள் முடிந்ததும், பஞ்சாயத்து அளவில் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முறைப்படியான தேர்தலுக்குப்பின் கோஷ்டி பூசல்கள் இருக்காது.

உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கோஷ்டி பூசல்கள் மறைந்துள்ளது.

இதேபோல், தலைவர்கள் பெயர்களில் தொடங்கப்பட்டு உள்ள பேரவைகளும் கலைக்கப்படும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் உங்கள் கையில் இளைஞர் காங்கிரசை ஒப்படைத்து இருக்கிறேன். கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழையுங்கள். பெண்களுக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படும்.

திமுக, அதிமுக கட்சிகளின் பலத்தைப்பற்றி குறிப்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை கடைக்கோடியில் உள்ள பாமர மக்களும் உணரும் வகையில் இளைஞர் காங்கிரசார் பிரசாரம் செய்தால், நம் பலம் மக்கள் மத்தியில் பிரகாசிக்கும். அதைக் கருத்தில் கொண்டு உங்கள் பணிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்றார் ராகுல்.

மக்களே ஊழலை ஒழிக்க வேண்டும்...

முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல்..

கலையரங்கின் நுழைவுவாயிலில் மாணவி ஷிரீன் பாத்திமா பொன்னாடை போர்த்தி ராகுல் காந்தியை வரவேற்றார். அரங்கின் உள்ளே சென்றதும் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் பொன்னாடை போர்த்தினார்.

பின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. முதலில் ராகுல்காந்தி மாணவ-மாணவிகளிடம் பல கேள்விகளை கேட்டார். அதற்கு அவர்கள் பதில் அளித்தனர்.

பின்னர் மாணவ-மாணவிகளும் ராகுல்காந்தியிடம் கேள்வி கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

மாணவ, மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில்,

இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக இளைஞர்கள்தான் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் 48 சதவீதம் உள்ளனர். உலகின் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்று அதிக இளைஞர்களை காண முடியாது.

இவர்களில் 7 சதவீதம் பேர் தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கடினமாக உழைக்கும் திறன், புதியவற்றை கண்டுபிடிக்கும் திறமை, எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் உள்ளனர். ஏழைகளும் இருக்கிறார்கள். கல்வி கற்பதன் மூலமே வறுமையை ஒழிக்க முடியும். வளமாகவும் வாழ முடியும்.

உயர்கல்வி படிக்கும் 7 சதவீதம் பேர்களை ஒரு இந்தியாவாகவும், உயர்கல்வி படிக்காத மீதமுள்ள 93 சதவீதம் பேர்களை மற்றொரு இந்தியாவாகவும் பார்க்கிறேன். உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன. கிராமத்து மக்களுக்கு போதுமான சாலை வசதி, பஸ் வசதி, மின்சார வசதி, தகவல் தொடர்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன.

இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான பாதையில்தான் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு கிராமப்புறங்களில் பல கட்டமைப்பு வசதி இன்னும் குறைவாக உள்ளதால் விவசாய பொருட்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவு அதிகமாக உள்ளது. எனவே, அவர்களுக்கும் உற்பத்தி செலவை குறைக்க இந்த கட்டமைப்பு வசதிகள் உதவும். விவசாயத்தை எல்லோரும் ஊக்கப்படுத்த வேண்டும்.

நன்கு படித்தவர்கள் படிக்காத மற்றவர்கள் படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதோடு படிப்புக்கு உதவியும் செய்ய வேண்டும். ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு மறைய கல்வி ஒன்றே ஆயுதமாக இருக்க முடியும் என்பதுதான் உண்மை.

எனவே, இரு வேறு இந்தியாவாக இல்லாமல் 100 சதவீதம் பேரும் உயர்கல்வி கற்கும் நிலையை இந்தியா அடைய வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவை.

நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த எழுத்தறிவு மற்றும் கல்வி தரத்தை விட இப்போது அதிகம் உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, மாணவர்களே, உங்கள், தாத்தா-பாட்டி காலத்தில் இல்லாத வசதி வாய்ப்புகளை உங்கள் தாய், தந்தையர் பெற்றிருப்பார்கள்.

உங்கள் தாய், தந்தையர் பெற்றிருக்காத வசதியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதுவும், சிறப்பு வாய்ந்த இந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் நீங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உண்மையிலேயே நாட்டில் நடக்கும் ஊழலுக்கு அரசியல்வாதிகள் மட்டுமே காரணம் என்பதை ஏற்க முடியாது.

நன்றி:தட்ஸ்தமிழ்

Thursday, September 3, 2009

ஆந்திர முதல்வர் மரணம் - இந்தியாவுக்கே மாபெரும் இழப்பு


ஆந்திரா முதல்வரின் மரணம் நம் இந்தியாவிற்கே மாபெரும் இழப்பு.

எல்லோருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு அவர் ஒரு காங்கிரஸ்காரர் என்பதை விட மக்களுக்காக தன்னுயுர் நீத்த மனிதர் அவர் சாதாரண மனிதர் அல்ல மாமனிதர்.

அவரைப் போன்றொரு தன்னலமற்ற தலைவர்கள் கிடைப்பது அரிது.

அவர் இன்று இல்லாவிட்டாலும் அவருடை கடைசியாக தொலைக்காட்சி சேனலுக்கு அளித்தப்பேட்டியில் நான் எப்போதும் மக்களுடனே இருக்க விரும்பி மக்களின் குறைகளை தீர்ப்பதாகவும் சொல்லிருக்கிறார் என்றால் அவருடைய மனம் எப்போதும் மக்களின் மீதே இருந்திருக்கிறது என்பதற்கு சான்றாக அமைகிறது.

மீண்டும் ஒரு முறை என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆட்கொனா துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, September 2, 2009

ஆந்திர முதல்வர் மரணம்

ஆந்திர மாநில மக்களால் "ஒய்.எஸ்.ஆர்." என்று மிகவும் அன்போடு அழைக்கப்பட்டவர் ராஜசேகர ரெட்டி. ஆந்திர மாநில அரசியலை புரட்டிப்போட்ட பெருமை இவருக்கு உண்டு.

தெலுங்கு தேசம் கட்சியை அசைக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில், அந்த மாயையை உடைத்து ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சிக்கு ராஜசேகர ரெட்டி புத்துணர்ச்சி கொடுத்தார். அதனால் தான் சோனியா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இவரை "கடப்பா புலி" என்று அடிக்கடி வர்ணிப்பதுண்டு.

60 வயதாகும் ராஜசேகர ரெட்டி ஆந்திராவில் செய்து வந்த சாதனைகள் உண்மையிலேயே பிரமிக்க வைத்தன. இதனால் தான் ஆந்திரா முதல்-மந்திரிகளில் 5 ஆண்டுகால ஆட்சியில் முழுமையாக இருந்த முதல் நபர் என்ற சாதனையை இவரால் படைக்க முடிந்தது.

இந்தியாவில் உள்ள மாநில முதல்-மந்திரிகளில் மிக, மிக சிறப்பான ஆட்சியை கொடுப்பதில் நம்பர்-ஒன் இடத்தில் ராஜசேகர ரெட்டி இருப்பதாக 2006-ம் ஆண்டு நடத்தப்பட்ட 2 கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இதனால் காங்கிரசாரிடம் மட்டுமின்றி மற்ற கட்சி அரசியல் தலைவர்களிடமும் ராஜசேகர ரெட்டி மதிப்பும், மரியாதையும் பெற்று இருந்தார்.

நக்சலைட்டுக்களின் தொந்தரவுகளை மீறி, ஆந்திர மாநிலத்தின் அசராத வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த சிறப்பு இவருக்கு உண்டு. மிக குறுகிய காலத்தில் ஆந்திராவை நம்பர்-ஒன் மாநிலமாக மாற்றப் போவதாக அவர் மார்தட்டி சொல்லிக் கொண்டிருந்தார். இதற்காகவே ஆந்திர மக்கள் தொகையில் 75 சதவீதம் இருக்கும் விவசாயிகளை முன்னேற்ற அடுத்தடுத்து திட்டங்களை அறிவித்தப்படி இருந்தார்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை. ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாழ்க்கை இப்படி, சோகமாக முடியும் என்று யாருமே நினைக்கவில்லை. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவில் 1949-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி ராஜசேகர ரெட்டி பிறந்தார். இவரது முழுப் பெயர் எடுகுரி சந்திந்தி ராஜசேகர ரெட்டி.

செல்வந்த குடும்பத்தில் பிறந்த இவர் கர்நாடகாவில் உள்ள குல்பர்கா எம்.ஆர்.மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார். படிப்பு முடிந்ததும் சிறிது காலம் மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார்.

1973-ம் ஆண்டு இவர் தன் தந்தை ஒய்.எஸ்.ராஜா ரெட்டி நினைவாக புலி வேந்துலா நகரில் பெரிய மருத்துவமனை கட்டினார். அதோடு ஒரு பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி கட்டினார். பிறகு அந்த கல்வி நிறுவனங்களை லயோலா கல்லூரி நிறுவனத்துக்கு கொடுத்து விட்டார்.

ராஜசேகர ரெட்டியின் மூதாதையர்கள் அனைவரும் பொதுச்சேவையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தனர். அந்த சேவையாற்றும் குணம் ராஜசேகர ரெட்டியிடமும் காணப்பட்டது. படிக்கும் காலத்திலேயே ஏழை-எளியவர்களுக்கு உதவிகள் செய்து வந்த ராஜசேகர ரெட்டி 1978-ம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபடஆரம்பித்தார்.

கடப்பா பாராளுமன்றத் தொகுதியில் இருந்து 4 தடவை எம்.பி.ஆக தேர்வானார். பிறகு மாநில அரசியலுக்கு திரும்பிய அவர் தொடர்ச்சியாக 4 தடவை புலிவேந்துலா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானார்.

8 தேர்தலை எதிர்கொண்ட அவர் ஒரு தடவை கூட தோல்வி அடைந்தது இல்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் "தோல்விக்கு தோல்வி கொடுத்தவர் எங்கள் ஒய்.எஸ்.ஆர்." என்று புகழ்வதுண்டு.

1980 முதல் 1983 வரை இவர் மாநில அரசில் பல்வேறு மந்திரி பதவிகளை வகித்தார். ஊரக மேம்பாடு, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் ராஜேசேகர ரெட்டி கொண்டு வந்த சீர்திருத்தங்கள் ஏராளம். அரசியல் மூலம் மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற அவரது லட்சியம் தான் அவரை மேலும், மேலும் உயர்த்தியது.

1983-ம் ஆண்டு அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். 1985 வரை தலைவராக இருந்த அவர் மீண்டும் 1998 முதல் 2000 வரை 2-வது தடவையாக தலைவர் பதவி வகித்தார். 1999-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ராஜசேகர ரெட்டி அமர்ந்தார்.

2004-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ராஜசேகர ரெட்டி, அந்த காலக்கட்டத்தில் செய்த நூதனமான போராட்டங்கள் தான் காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டுவதாக மாறியது.

2000-ம் ஆண்டில் ஆந்தி ராவில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து ராஜசேகர ரெட்டியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் 14 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். ஆந்திர மாநில அரசியலில் இது பிரளயத்தை ஏற்படுத்தியது.

2003-ம் ஆண்டு ராஜசேகர ரெட்டி ஆந்திரா மாநிலம் முழுவதும் 1400 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். கிராமம், கிராமமாக சென்றார். ஏழை, எளிய மக்களை சந்தித்துப்பேசினார். இது ஆந்திராவில் அடித்தள மட்டத்தில் இருந்த மக்களை, காங்கிரஸ் பக்கம் திருப்பியது. காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சிப் பெற்றது.

இதன் காரணமாக 2004-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஜசேகர ரெட்டி 14-5-2004ல் முதல்- மந்திரியாக பதவி ஏற்றார்.

2003 பாத யாத்திரையின் போது ஏழை, எளிய விவ சாயிகள் படும் கஷ்டங்களை, எதிர் கொள்ளும் பிரச்சினை களை ராஜசேகர ரெட்டி நேரில் பார்த்திருந்தார். ஏழை விவசாயிகளுக்கு என் னென்ன தேவைப்படும் என்பது அந்த பாத யாத்தி ரையின் போது அவர் மன தில் ஆழமாக பதிந்து போய் இருந்தது.

முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றதும் ஏழை விவசாயிகளின் மன ஏக் கத்தை போக்குவது என்று உறுதி எடுத்துக் கொண் டார். தனது முதல் பட்ஜெட் டிலேயே எந்த துறைக்கும் இல்லாதபடி வேளாண் துறைக்கு அதிக பணம் ஒதுக் கீடு செய்தார்.

ஏழை விவசாயிகள் பயன் பெற, இலவச மின்சாரம் கொடுத்தார்.

விவசாயத்தில் நவீன உத்திகளை பயன்படுத்த வழி வகுத்தார். அதே சமயத்தில் ஆந்திர மாநில விவசாய உள் கட்டமைப்பையும் வலுப் டுத்தினார். கிராம விவசாயிகள் வாழ் வில் வளம் பெருக வேண்டு மானால் நீர்ப் பாசனம் மிக, மிக முக்கியமானது என்பதை யாத யாத்திரை காலத்தில் அறிந்திருந்த ராஜசேகர ரெட்டி ஆந்திர மாநில நீர்ப்பாசனத் திட்டங்களில் மாபெரும் புரட்சி செய்தார். முதல்-மந்திரியாக பதவி ஏற்ற முதல் 2 ஆண்டுகளில் மட்டும் நீர்ப்பாசனத் திட் டங்களுக்கு 1600 கோடி ரூபாயை செலவிட்டார்.

அதோடு Òஜலயக்ஞம்Ó என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஆந்திராவில் தரிசாக கிடந்த நிலங்கள் எல்லாம் மாற்றப்பட்டன. இந்த புரட் சியை ராஜசேகர ரெட்டி 2 வருடத்தில் ஓசையின்றி செய்து முடித்தார். ஒரே சமயத்தில் 70 நீர்ப் பாசன திட்டங்களை அமல் படுத்தி எல்லா கட்சிக்காரர் களையும் பிரமிக்க வைத் தார். பெரிய ஆறுகளில் ஓடும் தண்ணீரை, சிறு சிறு கால்வாய் வெட்டி பாசனத் துக்கு கொண்டு வந்தார்.
பல புதிய அணைக்கட்டுகளைக் கட்டினார். மிக குறுகிய காலத்தில் 32 பெரிய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினார். இவற்றுக்கு ஆன மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? 65 ஆயிரம் கோடி ரூபாய்.

இவை அனைத்தையும் ராஜசேகர ரெட்டி, மிக, மிக திட்டமிட்டு நேர்த்தியாக செய்து முடித்தார்.

இந்த விவசாயப் புரட்சி காரணமாக ஆந்திரா வில் இரண்டாண்டுகளில் விளை நிலங்களின் அளவு இரட்டிப்பாக உயர்ந்தது. இதனால் ஆந்தி ராவின் ஒட்டு மொத்த விவ சாய உற்பத்தி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. ஏழை விவசாயி களின் வாழ்வில் வசந்தம் வீசியது.

நீர்ப்பாசனத் திட்டங் களை நிறைவேற்றிய போதே மக்களின் குடிநீர் திட்டங் களையும் சேர்த்து அமல் படுத்தினார். இதனால் 1 கோடி ஏழைகளுக்கு குடிநீர் வசதி கிடைத்தது.

இதற்கிடையே ஏழை விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த இயலாமல் இருப்பது அவரது கவனத்துக்கு வந் தது. உடனடியாக ஏழை விவசாயிகளின் 1192 கோடி மின் கட்டண நிலுவைத் தொகைகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக Òஇந்திரம்மா திட்டம்Ó என் றொரு திட்டத்தை அறிமுகம் செய்தார். விவசாயிகள் கடன்களை அடிக்கடி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முதியோருக்கு பென்சன் கொடுக்கும் திட்டம் கொண்டு வந்தார். விதவைகள் மற்றும் ஊன முற்றோர் மறுவாழ்வுக்கு முன் னுரிமை கொடுத்தார்.

ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டி கொடுத்தார். ரேசனில் ஏழைகளுக்கு ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு வழங்கினார். ராஜீவ் காந்தி பெயரில் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வந்தார். அவரது 5 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏழைகள் பெற்ற பயன் ஏராளம்... ஏராளம்... ஏழை விவசாயிகள் வாழ்வில் அவர் மறுமலர்ச்சி ஏற்படுத்தி இருந்தார்.

ஏழைகள் மீது அவர் காட் டிய பரிவு உண்மையான தாக இருந்தது. அதனால் தான் கடந்த மே மாதம் பாராளு மன்றத்துக்கும், சட்ட சபைக்கும் ஒரே சம யத்தில் தேர்தல் நடந்த போது ஆந்திரா மாநில மக் கள் மீண்டும் ராஜசேகர ரெட்டியை முழு மனதுடன் ஆதரித்தனர்.

சந்திரபாபு நாயுடு ஒரு பக்கம் கலக்கினார். அவருக்கு இணையாக சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியும் கலக்கியது.

அவர்கள் இருவரும் ஓட்டுக்களை அள்ளி விடுவார்கள் என்று சிலர் ஆரூடம் கூறினார்கள். ஆனால் தெலுங்கு தேசத்தையும், பிரஜா ராஜ்ஜியம் கட்சியையும் ஆந்திர மக்கள் ஓட ஓட விரட்டி விட்டனர். ராஜசேகர ரெட்டி செய்த மக்கள் சேவை முன்பு அந்த 2 கட்சிகளும் எடுபடாமலே போய் விட்டன.

அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 42 எம்.பி. தொகுதிகளில் 33 இடங்கள் கிடைத்தன. 294 சட்டசபை தொகுதி களில் 156 இடங்களைப் பிடித்து ராஜசேகர ரெட்டி சாதனை படைத்தார். மீண்டும் 2-வது தடவையாக கடந்த மே மாதம் 20-ந் தேதி ஆந்திர முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றார்.

ஆந்திர மாநில அரசியல் வரலாற்றில் என்.டி.ராமராவ் மட்டுமே தொடர்ச்சியாக 2 தடவை முதல்-மந்திரி பதவி ஏற்று சாதனை படைத்திருந்தார். காங்கிரஸ் தலைவர்களில் இருந்த சாதனையை நிகழ்த்தியது ராஜசேகர ரெட்டி மட்டுமே.

அடுத்து வரும் 5 ஆண்டு களுக்குள் ஆந்திராவில் மேலும் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய அவர் நினைத்திருந்தார். இதற்காக அவர் பல தடவை தன் ஆசையை வெளியிட்டார்.

ஆந்திரா மக்களும் பூரிப் போடு அவற்றை எதிர் பார்த் திருந்தனர். ஆனால் அதற்குள் எமன் அவசரப் பட்டு விட்டான். ராஜசேகர ரெட்டிக்கு ஏற்பட்ட எதிர்பாராத முடி வால் அவர் மனைவி விஜய லட்சுமி, மகன் ஜெகன் மோகன் ரெட்டி, மகள் சர் மிளா நிலை குலைந்து போய் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியே சோகத்தில் மூழ்கி உள்ளது

சோனியா கண்ணீர் விட் டார். ஆந்திரா மக்கள் அழுது புலம்பியபடி உள்ளனர். அவர்கள் மனதில் ராஜ சேகர ரெட்டி ஆழமாக இடம் பிடித்துள்ளார். அந்த இடத்தை இன்னொருவர் வந்து நிரப்புவது கேள்விக்குறி தான்.