எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, February 26, 2015

2015-2016 க்கான இரயில்வே பட்ஜெட்

 2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தாக்கல் செய்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் பயணிகள் மற்றும் சரக்கு  கட்டண உயர்வு எதுவும் இடம்பெறவில்லை. அதேப்போன்று புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.
ரயில்வே பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க வகையிலான திட்டங்களோ அல்லது அறிவிப்புகளோ இடம்பெறவில்லை என்பதால், பங்கு சந்தையில் ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

முக்கிய அம்சங்கள்:

* நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே மிகப்பெரிய பங்காற்றுகிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.

 *  ரயில் பாதை அகலமாக்கல் மின்மயமாக்கல் அதிகரிக்கப்படும்
*  ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன .
* ஏற்கெனவே உள்ள வழித் தடங்களில் கூடுதல் ரயில்கள்  இயக்கப்படும்.
* ராஜ்தானி சதாப்தி போன்ற விரைவு ரயில்கள்  அதிகம் தேவை.
* சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை.

கட்டண உயர்வில்லை
* பயணிகள் கட்டணத்தில் மாற்றமில்லை.
* அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4 அம்ச இலக்குகள்.
* கூடுதல் முதலீடுகளால் வேலை வாய்ப்புகள் பெருகும்.
* 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற திட்டம்.

 பசுமை கழிவறைகள்
* ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மைக்கென தனி துறை உருவாக்கம்.
* 650 ரயில் நிலையங்களில் புதிய பசுமை கழிவறைகள்.
* 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைப்பு

குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்
* 24 மணிநேரமும் செயல்படும் குறை தீர் மையங்கள்.
*  நாடு முழுமைக்கும் ரயில்வே உதவி எண் 138
* மார்ச்-1 முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்

120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்
* டிக்கெட் முன்பதிவுக்கான கால அவகாசம் தற்போதுள்ள 60 நாட்களிலிருந்து செய்யும்  120 நாட்களாக நீட்டிப்பு.
* எஸ்.எம்.எஸ்.  மூலம் குறைகளை பதிவுசெய்யும் வசதி அறிமுகம்.
* ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிக்கெட்டுகள்
* தானியங்கி எந்திரங்கள் அதிகரிப்பு.
* ரயில் வரும் நேரம் குறித்து அறியும் எஸ்.எம்.எஸ்.வசதி
* 108 ரயில்களில்   இணைய தளம் மூலம் உணவு பெரும் வசதி.
* கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பொது பெட்டிகள் இணைப்பு

 புல்லட் ரயில்
* முக்கிய ரயில் நிலையங்களில் wify வசதி.
* புல்லட் ரயில் அடுத்த 2 ஆண்டுகளில் அறிமுகம்.
* பெண்கள் பெட்டிகளில் சிசிடிவி கேமிராக்கள்
* சாமானியரோடு தொடர்பு கொள்ள எம்.பி.க்கள் தலைமையில் குழு.

1,200 கி.மீ.நீளத்திற்கு புதிய ரயில் பாதைகள்

* புதிய விளக்கு வசதிகளுடன் பெட்டிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தல்
* 9,400 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர் கேஜ் பாதை அகலப்பாதையாக மற்றப்படும்.
* 1,200 கி.மீ.நீளத்திற்கு புதிய ரயில் பாதைகள்.
* இரட்டைப் பாதை, மின்மயமாக்கல் உள்ளிட்ட 77 புதிய திட்டங்கள் அறிமுகம்.
* சரக்கு ரயில் போக்குவரத்துக்கு ரெண்டு தனிப் பாதைகள்.
* ரயில் நிலையங்களை நவீனப் படுத்த தனியாருக்கு அனுமதி.

5 நிமிடத்தில் டிக்கெட்
* வரும் நிதியாண்டில் 6,000 கி.மீ.நீளம் பாதைகள் மின்மயமாக்கம்.
* மெட்ரோ ரயில் 160 கி.மீ.முதல் 200 கி.மீ. வரை நீட்டிப்பு.
* காகிதமில்லாத ரயில்வே டிக்கெட்டுகள்.
* மாநிலத்தின் கலாச்சாரம் பிரதிபலிக்கும் வகையில் அம்சங்கள் கொண்ட  ரயில் நிலையங்கள் அமைப்பு
  * சரக்கு ரயில்களின் வேகம் அதிகரிப்பு
* 9 ரயில்களின் வேகம் 160 கி.மீ.ஆக அதிகரிப்பு
* நிலையத்திற்குள் நுழைந்த 5 நிமிடத்தில் டிக்கெட் வழங்க நடவடிக்கை

அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரயில் சேவை
* முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு  கீழ்ப்படுக்கை முன்னுரிமை
* 3438 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் ஒழிப்பு
* தேர்வு செய்யப் பட்ட 4 பல்கலைக் கழகங்களில் ரயில்வே ஆய்வு மையங்கள்.
* அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரயில் சேவை பரிசீலனை.
* மாநிலங்களுடன் இணைந்து புதிய கூட்டுத்  திட்டங்கள்.
* ரயில் பேருந்துகளுக்கு ஒரே டிக்கெட்.
* ரயில் பெட்டிகளில் தீ விபத்து எச்சரிக்கைக் கருவி பொருத்தப்படும்.

இ-கேட்டரிங் வசதி அறிமுகம்
108 ரயில்களில் இ-கேட்டரிங் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ரயில்களில் பயணிப்பவர்கள் தங்களுக்கு வேண்டிய விருப்பமாக உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட முடியும்

புதிய ரயில்கள் இல்லை
* புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்ல. ஆய்வுகள் முடிவடைந்த பின்னர் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்கப்படும்

ரயில்வே தனியார் மயமாக்கப்படாது
* ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படமாட்டாது
 * ரயில்வே சொத்துக்களின் விற்பனை தவிர்ப்பு
* ரயில்வே நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தவிர்க்க டிஜிட்டல் மேப்பிங் மூலம்  கண்காணிப்பு
*  ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு யோகா பயிற்சி
* எரிசக்தி பயன்பாட்டைக் கண்காணிக்க தனி வாரியம்
* பயணிகளின் வசதிக்காக 67 விழுக்காடு கூடுதல் நிதி ஒதுக்கீடு
*  வன விலங்கு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
* ரயில்களின் ஒலி அளவு குறைப்பு
* கடலோர நகரங்களை இணைக்க 2,000 கோடி ரூபாய் நிதி
* 21 ரயில்வே பணியாளர் வாரியம் அமைப்பு
* 1000 வாட் மின்சாரம் சூரியஒளி மூலம் உற்பத்தி செய்ய திட்டம்

No comments: