எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, March 28, 2013

கலைஞர் விளக்கம் ஜெயலலிதாவிற்கு இலங்கை தமிழர் விவகாரத்தில்


ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி
திமுக தீர்மானம் கண்துடைப்பு என்றால் அதிமுக தீர்மானம் ஓரங்க நாடகமா?சென்னை : இலங்கை தமிழர்களுக்காக திமுக அரசு நிறைவேற்றிய தீர்மானம் கண்துடைப்பு நாடகம் என்றால் அதிமுக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஓரங்க நாடகமா என்று ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில நாட்களாக சட்டப் பேரவை நடைபெற்றுக் கொண்டிருப்பதையும், அங்கே திமுகவினரை வாய் திறந்து கருத்து தெரிவிக்க விடாமல் ஆளும் கட்சி தங்களது மெஜாரிட்டியை கொண்டு விருப்பம் போல் பேசியும் வெளியேற்றியும் வருவதையும், முதலமைச்சர் பதிலுரை என்ற பெயரால் பிரச்னையை விட்டுவிட்டு முழுக்க முழுக்க என்னை தனிப்பட்ட முறையில் எப்படியெல்லாம் தாக்கி தரக் குறைவாக பேச முடியுமோ அந்த அளவிற்குத் தாக்கி உரையாற்றுவதையும் கண்டு வருகிறோம்.

அந்த வரிசையில் நேற்று ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை நசுக்கிட காவல் துறையினர் முயற்சிப்பது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம். அதற்கு பதிலளிக்க வேண்டிய முதலமைச்சர் தன் பேச்சு முழுவதிலும் இலங்கை பிரச்னையில் நான் கபட நாடகம் ஆடுவதாகவும், இரட்டை வேடம் போடுவதாகவும் பல பக்க பேச்சை தயார் செய்து அவையில் படித்து விட்டு ஏடுகளுக்கும் விநியோகம் செய்திருக்கிறார்.

இலங்கைப் பிரச்னையில் நான் கபட நாடகம் ஆடுவதாக ஜெயலலிதா பழி சுமத்துவது இது எத் தனையாவது முறை என்றே ஞாபகம் இல்லை. கச்சத்தீவு பிரச்னையாக இருந்தாலும், இலங்கைப் பிரச்னையாக இருந்தாலும், காவிரி பிரச்னையாக இருந்தாலும் அரைத்த மாவையே அரைப்பதைப் போல், ஜெயலலிதா சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். அந்தப் பேச்சினை ஏடுகள் பெரிதாக வெளியிடுகின்ற காரணத்தால், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமையாகிறது.

தமிழர் நலன் கருதி மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேற வேண்டுமென்று அவர் 2009ம் ஆண்டே கூறியதாகவும், நானோ அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி 2 வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன்வராவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார் கள் என்ற தீர்மானம் நிறைவேற்றியதாகவும், பின்னர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்னை சந்தித்த பிறகு மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்து ராஜினாமா நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன் என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இதில் எதை அவர் நாடகம் என்கிறார்? இலங்கையில் போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்ட உடனே 14.10.2008ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது நாடகமா? (அவரது அகராதியில் அனைத்துக் கட்சி கூட்டம் என்றாலே அலர்ஜி ஆயிற்றே?) அந்த கூட்டத்தில் ‘போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது நாடகமா?

அந்த தீர்மானத்தை உடனடியாக பிரதமருக்கு அனுப்பி, பிரதமர் அரசியல் தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவாக எடுத்திடும் என்று கூறியது நாடகமா?
அந்த அனைத்துக் கட்சி தீர்மானத்தைப் பற்றி ஜெயலலிதா என்ன சொன்னார்? ‘தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இலங்கைப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிட்டால், பின்னர் நம் உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடும் வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது’ என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

அதை தற்போது வசதியாக மறந்து விட்டுப் பேசுவதற்கு பெயர்தான் இரட்டை வேடம். நமது வேண்டுகோளினை ஏற்று இந்திய பிரதமர் 18,10&08ல் இலங்கை அதிபருடன் பேசியதும், பிறகு 24,10,08ல் சென்னையில் நாம் பிரமாண்டமான மனிதச் சங்கிலி நடத்தியதும், 26,10,08ல் பிரணாப் சென்னை வந்து என்னை சந்தித்ததும்,

12&11&08ல் இலங்கைத் தமிழர்களுக்காக பேரவையில் நான் தீர்மானம் முன் மொழிந்து நிறைவேற்றியதும், 4,12,08ல் அனைத்துக் கட்சி தலைவர்களையும் பிரதமரிடம் அழைத்துச் சென்று பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனு ப்பி பேசச் சொன்னதும், அவ்வாறே பிரணாப் சென்று பேசியதும், 27,12,08ல் திமுக பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றியதும் நாடகமா? இரட்டை வேடமா?

அதற்குப் பிறகும் திமுக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி ஏற்கனவே நான் விரிவாக எழுதி விட்டேன். ஆனால் ஜெயலலிதா பல்வேறு கண்துடைப்பு நாடகங்கள்தான் அப்போது நடந்தன என்று சொல்லியிருக்கிறார். திமுக தீர்மானம் நிறைவேற்றியது கண்துடைப்பு என்றால், நேற்று ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா?

ஜெயலலிதா போன்ற ஒரு சிலரின் அபிலாஷையின்படி, திமுக மத்திய அரசிலிருந்து தற்போது வெளியேறி விட்டது.
இதனால் என்ன நடந்துவிட்டது? ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற் பட்டுவிட்டதா?
அமெரிக்கத் தீர்மானத் தில் இந்தியா திருத்தங் களைக் கொண்டு வந்து விட்டதா?
நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை திருத்தங்களோடு நிறைவேற்றி விட்டதா?

மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறியது மட்டும்தான் நடந்தது.
ஆனால் அதற்காக திமுக சிறிதும் கவலைப்படவில்லை. 2009ல் திமுக மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தாலும் இதே நிலைதான் என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்ப்பவர்கள் உணர்வார்கள்.

அப்போதே வெளியேறியி ருந்தால் இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், திமுக மீது பழியைப் போடுகின்ற செயலே தவிர வேறல்ல. அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாறு அறிந்தவர்கள் ஏற்கமாட்டார்கள். அதுமாத்திரமல்ல. திமுக ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் ஈழத் தமிழர்களுக்காக இத் தனைப் போராட்டங்களையும் நடத்தியது;

அரசியல் ரீதியாகப் பல்வேறு இழப்புகளுக்கும் ஆளானது. ஆனால் ஜெயலலிதா, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்யாமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பின், திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல இலங்கைத் தமிழர் பிரச்னையில் அதிக அக்கறை செலுத்துவது போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறேன் என்றெல்லாம் ஏதோ ஈழத் தமிழர்களுக்காக இழப்பைச் சந்தித்தவரை போல குறிப்பிட்டிருக்கிறார்.

ஆட்சிக்கு வருவதைப் பற்றி கற்பனைகூட செய்துபார்க்காத 1956ம் ஆண்டிலேயே, சிதம் பரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஈழத் தமிழர்களுக்காக தீர்மானத்தை முன்மொழிந்த எனக்கு திடீரென்று ஞானோதயம் என்று கூறுகின்ற ஜெயலலிதாவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது எத்தனை நாட்களாக அக்கறை?
தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா?

1956ம் ஆண்டிலிருந்து நடந்து வரும் நிகழ்வுகளையும், ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பின் நடக்கும் நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்களா?
16,4,02ல் இதே சட்டசபையில் ‘பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடுவார்களா?

17,1,09ல் இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்’ என்று ஜெயலலிதா கூறியதை மறக்க முடியுமா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நான் இரட்டை வேடம் போட்டேன் என்பதா? பேரவையில் மெஜாரிட்டி உள்ளது என்ற கித்தாப்பில் எதை வேண்டுமென்றாலும் பேசுவதா?

அடுத்து ஜெயலலிதா தன் பேச்சில் என் மீது சாற்றியுள்ள குற்றச்சாட்டு, நான் இருந்த உண்ணாவிர தத்தை பற்றி புது விளக்கத்தை சமீப காலமாக கூறுவதாகவும், போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அரசு மத்திய அரசுக்கு தெரிவித்ததாகவும், அதனை மத்திய அரசு நம்பி தனக்கு தெரியப்படுத்தியதாகவும், அதனை நான் நம்பியதாகவும் எந்தத் தமிழரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

சமீப காலமாக நான் இதைக் கூறவில்லை. இதோ, 28,4,09 தினத்தந்தியின் தலைப்பு: ‘மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார்

கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி போரை நிறுத்தி விட்டதாக இலங்கை அறிவிப்பு’
இதைத் தவிர 2ம் பக்கத்தில் ‘போர் நடவடிக்கை முடிவுக்கு வந்தது; இலங்கை ராணுவம் அறிவிப்பு’ என்ற தலைப்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

எனவே நான் சமீபகாலமாக இதை கூறவில்லை. அன்றே வெளியான செய்தி இது. ஜெயலலிதா கூறியுள்ள உண்மைக்கு மாறான தகவல்களுக்கு இதுவும் ஓர் உதாரணம்.
திமுக பொதுச் செயலா ளர் பேராசிரியர், ‘மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகிய போதிலும், மத்திய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் யாராவது ஈடுபட்டால் அதற்கு திமுக துணை போகாது’ என்று பேசியதை எடுத்துக்காட்டி, இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். எப்படியாவது மத்திய ஆட்சி கவிழாதா? சந்தடிசாக்கில் தான் பிரதமராகிவிட முடியாதா? என்ற நப்பாசை ஜெயலலிதாவுக்கு. அதனால் நாங்கள் செய்வதெல்லாம் துரோகமாக தெரிகிறது.

எதற்கெடுத்தாலும் நான் இரட்டை வேடம் போடுவதாக கூறுகிறார். சேது திட்டம் வேண்டுமென்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தற்போது வேண்டாம் என்கிறாரே, அதற்கு பெயர்தானே இரட்டை வேடம்!

காவிரி ஆணையத்தை பல் இல்லாத வாரியம் என்றெல்லாம் கூறிவிட்டு, தற்போது அதை ஆதரிப்பதற்கு பெயர்தானே இரட்டை வேடம்! இன்று (28&3&13) இந்து நாளிதழில் வெளிவந்துள்ள ‘விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்தவர், தமிழ் ஈழத்தின் ஆதரவாளராகியுள்ளார்’ என்ற செய்தியை படித்துப் பார்த்தால் யார் இரட்டை வேடம் போடுபவர் யார் இரட்டை முகம் கொண்டவர் என்பதை அறிந்து கொள்ளலாம் இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments: