எண்ணங்களின் பிரதிபலிப்பு
Thursday, March 21, 2013
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி: இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு
ஜெனிவா: இலங்கைக்கு எதிராக, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஓட்டளித்துள்ளன.
இலங்கையில், 2009ல், ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, இறுதி கட்ட சண்டை நடந்தது. இதில், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். ஏராளமான விடுதலைப் புலிகள், ராணுவத்திடம் சரணடைந்தனர். சரணடைந்த விடுதலை புலிகள், ரகசியமான இடங்களில் வைக்கப்பட்டு, ராணுவத்தினரால், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் விடுதலை புலிகள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகவும், மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கான, மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும், நல்லிணக்க ஆணைக்குழு, சில பரிந்துரைகளை செய்திருந்தது. இந்த குழு பரிந்துரைகள் மீது, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக கூறி, கடந்த ஆண்டு, ஜெனிவாவில் உள்ள, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் தொடர்பாக, இலங்கை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால், இந்த ஆண்டும், மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக, அமெரிக்காவால்,தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சுவிட்சர்லாந்தின், ஜெனிவாவில், மனித உரிமை ஆணையத்தின், 22வது ஆண்டு கூட்டம் தற்போது நடக்கிறது. "இலங்கையில், நடந்த சண்டையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இது குறித்து சுதந்திரமான, நம்பத் தகுந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என கூறி, மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா, கடந்த வாரம் தீர்மானம் தாக்கல் செய்தது.
இந்த தீர்மானத்தில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. நல்லிணக்க குழுவின் பல பரிந்துரைகளை இலங்கை அரசு ஏற்க மறுத்துள்ளது கவலையளிக்கிறது. இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை அமைப்பினர் உள்ளிட்டோர் காணாமல் போவது குறித்தும், சுதந்திரமான விசாரணை நடத்தப்படவில்லை. அதிகார பரவலாக்கத்துக்கு ஒப்புதல் அளித்த இலங்கை அரசு, தற்போது அதை செயல்படுத்த முடியாது என, மறுத்துள்ளது. இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாக, விசாரிக்க, ஐ.நா., பிரதிநிதிகளுக்கும், மனித உரிமை அமைப்பினருக்கும், இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும் என, இத்தீர்மானம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், மொத்தம், 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நேற்று நடந்த ஓட்டெடுப்பில், இந்தியா, ஆஸ்திரியா, கனடா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நார்வே, பிரிட்டன் உள்ளிட்ட, 25 நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்தன. தீர்மானத்தை எதிர்த்து, பாகிஸ்தான், கியூபா, வெனிசுலா, பிலிப்பைன்ஸ், மாலத்தீவு,இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட், காங்கோ, குவைத், ஈக்வடார் உள்ளிட்ட 13 நாடுகள் ஓட்டுப்போட்டன. நடுநிலை வகிக்கும் நோக்கில், எட்டு நாடுகள் இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. முன்னதாக இந்த தீர்மானம் தொடர்பாக பல்வேறு நாடுகள் விவாதித்தன.
இந்த தீர்மானத்தை, வன்மையாக கண்டித்த, இலங்கை பிரதிநிதி, மகிந்தா சமரசிங்கா குறிப்பிடுகையில், ""இந்த தீர்மானம் உள்நோக்கம் கொண்டது. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள புகார்கள் தவறானவை. இலங்கை மேற்கொண்ட மறுவாழ்வு பணிகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை. இலங்கையை தனித்து விடுவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது,'' என்றார்.
இந்த தீர்மானத்தை ஆதரித்து இந்திய உறுப்பினர் திலீப் சின்கா பேசியதாவது: இலங்கை, 13வது அரசியல் சட்டதிருத்தத்தை அமல்படுத்த வேண்டும். மனித உரிமை ஆணைய பிரதிநிதிகள் இலங்கையை பார்வையிட அனுமதிக்க வேண்டும். வடக்கு மாகாண மக்கள் தேர்தலை சந்திப்பதற்குரிய சூழலை உருவாக்க வேண்டும். மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் ஏற்கும் வகையிலான, நம்பிக்கைக்குரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இலங்கை எடுத்துவரும் நல்லிணக்க நடவடிக்கைகள், விரிவு மற்றும் விரைவு படுத்தவும் வேண்டும். எனினும், இலங்கை உடனான உறவை துண்டிக்க விரும்பவில்லை. இவ்வாறு திலீப் சின்கா கூறினார்.
பாக்.,எதிர்ப்பு: இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது. அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தில், திருத்தங்கள் பல செய்யப்பட வேண்டும், என கூறிய பாகிஸ்தான் பிரதிநிதி, எதிர்த்து ஓட்டளித்தார்.
எழுத்து பூர்வமாக தாக்கல்: தீர்மானம் குறித்து கடைசி நேரம் வரை இந்தியாவின் முடிவு சஸ்பென்சாக இருந்ததால், "எழுத்து பூர்வமான கருத்தை இந்தியா பதிவு செய்ய முடியாது' என, கூறப்பட்டது. ஆனால், தீர்மானம் தொடர்பான கருத்து வலுவுள்ளதாக இருக்க வேண்டும், என்பதால்,இந்தியா, எழுத்து பூர்வமான கருத்தை, இந்த சபையில் பதிவு செய்துள்ளது.
திருத்தம் இல்லை: இலங்கையில் "இனப் படுகொலை' நடந்ததாக கூறி, இந்தியா தனது கருத்தை பதிவு செய்யும் படி, தமிழக கட்சிகள் வற்புறுத்தின. ஆனால், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில், இந்தியாவின் தரப்பில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை.
தமிழக அரசின் 2013-2014 நிதிநிலை ஆண்டுக்கா பட்ஜெட்
தமிழகத்தின் 2013 - 14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பில்லை; இருக்கும் வரியை உயர்த்தவும் இல்லை. அதே நேரத்தில், அரசு வழங்கும் அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட விலையில்லா திட்டங்களுக்கு, பட்ஜெட் மதிப்பில், 31 சதவீதத் தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால், நிதிப் பற்றாக்குறை, 23 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
"புதிய வரி விதிக்கப்படவில்லை, இருக்கும் வரியை உயர்த்தவுமில்லை' என்ற கோஷத் துடன், 2013 - 14ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். காவிரி டெல்டா மாவட்டங்களைப் போல, வறட்சி பாதிப்புக்கு உள்ளான பிற மாவட்டங்களுக்கு, நிவாரணம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடரும் என்ற அறிவிப்பும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளையுமே, பட்ஜெட்டில், நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.வேளாண்மை: இதுவரை இல்லாத அளவாக, வேளாண்மை துறைக்கு, 5,189 கோடி ரூபாய் ஒதுக்கீடும், அரசு அலுவலகங்களுக்கு, சூரிய மின் சக்தி அமைக்க, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடும், 17 ஆயிரம் காவலர்கள், 1,091 துணை ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்பு பணியாளர்கள் தேர்வு, பொது வினியோகத் திட்டத்துக்கு, 4,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு போன்றவை, பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.
ரூ.20க்கு அரிசி: அரிசி விலையை கட்டுப்படுத்த, கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலம், ஒரு லட்சம் டன் அரிசி, கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படும். இதேபோல், காய்கறி விலையைக் கட்டுப்படுத்த, கூட்டுறவு மற்றும் தோட்டக்கலை துறைகள் மூலம், "பண்ணை பசுமை நுகர்வோர்' கடைகள் திறக்கப்படும்.
நில வங்கி: தொழில் உற்பத்தியைப் பெருக்க, புதிய தொழில்களை ஊக்குவிப்பதற்காக, சிப்காட் நிறுவனம் மூலம், 25 ஆயிரம் ஏக்கர் கொண்ட நில வங்கி ஏற்படுத்தப்படும். தென் மாவட்டங்களில் தொழில்களை ஊக்குவிக்க, புதிய சலுகை தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும். சிறிய மற்றும் நடுத்தர கட்டமைப்பு திட்டங்களுக்கு, 770 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கவும், சிறப்பு சலுகை தொகுப்பு அறிவிக்கப்படும்.
சாலை மேம்பாடு: நெடுஞ்சாலைத் துறையின் ஒதுக்கீடு, 6,452 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்புக்கு, 2,032 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் போல, தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை
ஆணையம் உருவாக்கப்படும். சென்னையில், பல்வேறு போக்குவரத்துகளை இணைக்க, ஆய்வுப் பணிகள் துவங்கப்படும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துக்கு, 6,511 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. முகாம்களுக்கு வெளியில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும், முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.
கல்வி: அனைத்துப் பள்ளிகளிலும் 2013 - 14ம் ஆண்டுக்குள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். பள்ளிக் கல்விக்காக, 1,299 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். நான்காவது மாநில நிதி ஆணைய அறிக்கை, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, பசுமை வீடுகள், முதல்வரின் காப்பீட்டுத் திட்டம், மாணவர்களுக்கு மடி கணினி உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், வரும் நிதியாண்டிலும் தொடர்கின்றன. இத்திட்டங்களுக்காக, 43 ஆயிரத்து 449 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது.
நிதி நெருக்கடி: பட்ஜெட்டின் முடிவுரையில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், ""கடும் நிதி நெருக்கடி நிலவும் சூழலில், புதிய முயற்சிகளுக்கும், நடப்புத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொது விவாதத்தின் போதும், மானிய கோரிக்கை விவாதங்களின் போதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பல அறிவிப்புகளையும், திட்டங்களையும் வெளிப்படுத்துவர்,'' என்றார். நிதி அமைச்சரின் அறிவிப்பை அடுத்து, பட்ஜெட் அறிவிப்புகளை, முதல்வர் வெளியிடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்புகளுக்காக, பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்
*தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 17,138 காவலர்கள், 1,091 எஸ்.ஐ.,க்கள், 1,005 தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் 292 சிறை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
* 2013- 14ம் நிதியாண்டில், 2 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
* காய்கறி சாகுபடி பரப்பளவை, 7.25 லட்சம் ஏக்கரில் இருந்து, 8.2 லட்சம் ஏக்கராக உயர்த்த, சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
* மேலும், 5 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி பரப்பு, திருந்திய நெல் சாகுபடி முறையின் கீழ் கொண்டு வரப்படும்.
* சிறு, குறு விவசாயிகள், நுண்ணீர் பாசன திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கான ஒரு ஏக்கர் உச்சவரம்பு நீக்கப்படும். மேலும், 530 கோடி ரூபாய் செலவில், 1.30 லட்சம் ஏக்கர் பாசன பரப்பு, இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
* இந்த நிதி ஆண்டு ஆறு லட்சம் ஆடுகள் மற்றும் 12
ஆயிரம் கறவை பசுக்கள் இலவசமாக வழங்கப்படும்.
*பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கும் திட்டம், 2014, மார்ச் வரை நீடிக்கப்படுகிறது.
* தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சிப்காட் நிறுவனம் மூலம், 25 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பு கொண்ட, நில வங்கி ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் மூலம், தூத்துக்குடியில், புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.
*168 கி.மீ., நீள, இடைவழித்தட மாநில நெடுஞ்சாலைகள், இருவழித்தடங்களாகவும்; 1,000 கி.மீ., நீள, ஒருவழித்தட முக்கிய மாவட்ட சாலைகள், இடைவழித் தடங்களாகவும், தரம் உயர்த்தப்படும். ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு, 2,032 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது.
*சென்னையில், 271.68 கோடி ரூபாய் செலவில், நான்கு மேம்பாலங்களும், மதுரை, காளவாசல், கோரிபாளையம் ஆகிய இடங்களில், 130 கோடி ரூபாய் செலவில், இரண்டு மேம்பாலங்களும் அமைக்கப்படும்.
*தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணியின்கீழ், அதிக போக்குவரத்து உள்ள, 1,678 கி.மீ., சாலைகள், 8,580 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.
* தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை போல, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
*தஞ்சை மற்றும் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், 30 கோடி ரூபாயில், இரண்டு மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
*பசுமை வீடுகள் திட்டத்தில், 60 ஆயிரம் வீடுகளும், இந்திரா வீட்டு வசதி திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகளும் கட்டப்படும்.
*தமிழ்நாடு கிராம குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில், 750 கோடி ரூபாயில், 15 ஆயிரத்து 115 குடியிருப்புகள் கட்டப்படும்.
*மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகை, வேலூர், சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களின், முக்கிய கூட்டுகுடிநீர் திட்டங்களுக்கு, 212.54 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது.
"புதிய வரி விதிக்கப்படவில்லை, இருக்கும் வரியை உயர்த்தவுமில்லை' என்ற கோஷத் துடன், 2013 - 14ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். காவிரி டெல்டா மாவட்டங்களைப் போல, வறட்சி பாதிப்புக்கு உள்ளான பிற மாவட்டங்களுக்கு, நிவாரணம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடரும் என்ற அறிவிப்பும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளையுமே, பட்ஜெட்டில், நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.வேளாண்மை: இதுவரை இல்லாத அளவாக, வேளாண்மை துறைக்கு, 5,189 கோடி ரூபாய் ஒதுக்கீடும், அரசு அலுவலகங்களுக்கு, சூரிய மின் சக்தி அமைக்க, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடும், 17 ஆயிரம் காவலர்கள், 1,091 துணை ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்பு பணியாளர்கள் தேர்வு, பொது வினியோகத் திட்டத்துக்கு, 4,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு போன்றவை, பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.
ரூ.20க்கு அரிசி: அரிசி விலையை கட்டுப்படுத்த, கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலம், ஒரு லட்சம் டன் அரிசி, கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படும். இதேபோல், காய்கறி விலையைக் கட்டுப்படுத்த, கூட்டுறவு மற்றும் தோட்டக்கலை துறைகள் மூலம், "பண்ணை பசுமை நுகர்வோர்' கடைகள் திறக்கப்படும்.
நில வங்கி: தொழில் உற்பத்தியைப் பெருக்க, புதிய தொழில்களை ஊக்குவிப்பதற்காக, சிப்காட் நிறுவனம் மூலம், 25 ஆயிரம் ஏக்கர் கொண்ட நில வங்கி ஏற்படுத்தப்படும். தென் மாவட்டங்களில் தொழில்களை ஊக்குவிக்க, புதிய சலுகை தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும். சிறிய மற்றும் நடுத்தர கட்டமைப்பு திட்டங்களுக்கு, 770 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கவும், சிறப்பு சலுகை தொகுப்பு அறிவிக்கப்படும்.
சாலை மேம்பாடு: நெடுஞ்சாலைத் துறையின் ஒதுக்கீடு, 6,452 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்புக்கு, 2,032 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் போல, தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை
ஆணையம் உருவாக்கப்படும். சென்னையில், பல்வேறு போக்குவரத்துகளை இணைக்க, ஆய்வுப் பணிகள் துவங்கப்படும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துக்கு, 6,511 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. முகாம்களுக்கு வெளியில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும், முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.
கல்வி: அனைத்துப் பள்ளிகளிலும் 2013 - 14ம் ஆண்டுக்குள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். பள்ளிக் கல்விக்காக, 1,299 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். நான்காவது மாநில நிதி ஆணைய அறிக்கை, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, பசுமை வீடுகள், முதல்வரின் காப்பீட்டுத் திட்டம், மாணவர்களுக்கு மடி கணினி உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், வரும் நிதியாண்டிலும் தொடர்கின்றன. இத்திட்டங்களுக்காக, 43 ஆயிரத்து 449 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது.
நிதி நெருக்கடி: பட்ஜெட்டின் முடிவுரையில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், ""கடும் நிதி நெருக்கடி நிலவும் சூழலில், புதிய முயற்சிகளுக்கும், நடப்புத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொது விவாதத்தின் போதும், மானிய கோரிக்கை விவாதங்களின் போதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பல அறிவிப்புகளையும், திட்டங்களையும் வெளிப்படுத்துவர்,'' என்றார். நிதி அமைச்சரின் அறிவிப்பை அடுத்து, பட்ஜெட் அறிவிப்புகளை, முதல்வர் வெளியிடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்புகளுக்காக, பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்
*தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 17,138 காவலர்கள், 1,091 எஸ்.ஐ.,க்கள், 1,005 தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் 292 சிறை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
* 2013- 14ம் நிதியாண்டில், 2 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
* காய்கறி சாகுபடி பரப்பளவை, 7.25 லட்சம் ஏக்கரில் இருந்து, 8.2 லட்சம் ஏக்கராக உயர்த்த, சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
* மேலும், 5 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி பரப்பு, திருந்திய நெல் சாகுபடி முறையின் கீழ் கொண்டு வரப்படும்.
* சிறு, குறு விவசாயிகள், நுண்ணீர் பாசன திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கான ஒரு ஏக்கர் உச்சவரம்பு நீக்கப்படும். மேலும், 530 கோடி ரூபாய் செலவில், 1.30 லட்சம் ஏக்கர் பாசன பரப்பு, இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
* இந்த நிதி ஆண்டு ஆறு லட்சம் ஆடுகள் மற்றும் 12
ஆயிரம் கறவை பசுக்கள் இலவசமாக வழங்கப்படும்.
*பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கும் திட்டம், 2014, மார்ச் வரை நீடிக்கப்படுகிறது.
* தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சிப்காட் நிறுவனம் மூலம், 25 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பு கொண்ட, நில வங்கி ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் மூலம், தூத்துக்குடியில், புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.
*168 கி.மீ., நீள, இடைவழித்தட மாநில நெடுஞ்சாலைகள், இருவழித்தடங்களாகவும்; 1,000 கி.மீ., நீள, ஒருவழித்தட முக்கிய மாவட்ட சாலைகள், இடைவழித் தடங்களாகவும், தரம் உயர்த்தப்படும். ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு, 2,032 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது.
*சென்னையில், 271.68 கோடி ரூபாய் செலவில், நான்கு மேம்பாலங்களும், மதுரை, காளவாசல், கோரிபாளையம் ஆகிய இடங்களில், 130 கோடி ரூபாய் செலவில், இரண்டு மேம்பாலங்களும் அமைக்கப்படும்.
*தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணியின்கீழ், அதிக போக்குவரத்து உள்ள, 1,678 கி.மீ., சாலைகள், 8,580 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.
* தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை போல, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
*தஞ்சை மற்றும் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், 30 கோடி ரூபாயில், இரண்டு மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
*பசுமை வீடுகள் திட்டத்தில், 60 ஆயிரம் வீடுகளும், இந்திரா வீட்டு வசதி திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகளும் கட்டப்படும்.
*தமிழ்நாடு கிராம குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில், 750 கோடி ரூபாயில், 15 ஆயிரத்து 115 குடியிருப்புகள் கட்டப்படும்.
*மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகை, வேலூர், சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களின், முக்கிய கூட்டுகுடிநீர் திட்டங்களுக்கு, 212.54 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது.
Tuesday, March 19, 2013
திமுக கூட்டணியில் இருந்து விலகியது :
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் முறைப்படி விலகியதற்கான கடிதம் நேற்று இரவு ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பார்லிமென்டில் நிறைவேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா ஏற்றுக் கொண்டால், தன் முடிவை மறுபரிசீலனை செய்யத் தயார் என, கருணாநிதி அறிவித்திருந்த நிலையில் இந்த விலகல் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நேற்று நடந்த காங். எம்.பி.க்கள் கூட்டத்தில், கருணாநிதியின் கோரிக்கை குறித்து சோனியா கருத்து தெரிவிக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசில் இருந்து தி.மு.க., விலகுவதாக கருணாநிதி அறிவித்தார். இதனால் மத்தியில் 9 ஆண்டுகளாக இருந்த காங்.-தி.மு.க.கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவே தி.மு.க.பார்லிமென்ட் கட்சி எம்.பி.க்கள் தலைவர் டி.ஆர்.பாலு, டில்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, முறைப்படி தி.மு.க. விலகியதற்கான கடிதத்தினை கொடுத்தார்.
அமைச்ர்கள் இன்று ராஜினாமா:
இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை, நேரில் சந்தித்து அவரது அமைச்சரவையில் உள்ள 5 தி.மு.க.அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளனர். இதற்கிடையே தி.மு.க., விலகல் கடிதம் கொடுத்ததையடுத்து, காங். ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் பிரதமர் இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்தும், தி.மு.க.வின் கோரிக்கை குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதனால் டில்லி அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது. திருத்தங்களை ஏற்றால் பரிசீலிப்போம் என கருணாநிதி அறிவித்திருப்பதால் இன்றும் திடீர் அரசியல் திருப்பங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது.இலங்கை தமிழர் விவகாரத்தை முன்னிறுத்தி விலகியுள்ளதால், லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் புது கூட்டணி உருவாக்கும் வாய்ப்புள்ளது என்ற அரசியல் கணக்கும், தி.மு.க., வகுத்துள்ளது.
இலங்கையில், 2009ல், நடந்த இறுதிக்கட்டப் போரின் போது, மனித உரிமை மீறல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிரான, ஒரு தீர்மானத்தை, அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இதன் மீதான ஓட்டெடுப்பு, 21ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில், அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
எச்சரிக்கை:
"அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்களை கொண்டு வரவில்லை என்றால், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவோம்' என, மத்திய அரசுக்கு ஏற்கனவே, தி.மு.க., மிரட்டல் விடுத்தது. மேலும், "இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும். சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் அமைத்து, குறிப்பிட்ட காலவரையற்றுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், ஐ.மு., கூட்டணியிலிருந்து விலகுவோம்' என, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, கருணாநிதி, கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தூதர்கள்:
இதையடுத்து, நேற்று முன்தினம், சோனியாவின் தூதர்களாக, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோர் கருணாநிதியை, அவரது, சி.ஐ.டி., காலனி இல்லத்தில் சந்தித்து பேசினர். அவர்களின் பேச்சுவார்த்தை இரண்டரை மணி நேரம் நீடித்தது. பேச்சுவார்த்தையின் போது, எந்த உத்தரவாதமும் கருணாநிதியிடம், மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கவில்லை. சோனியா மற்றும் ராகுலுடன் மத்திய அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்; ஆனால், எந்த முடிவும் எட்டவில்லை. நேற்று காலை, டில்லியிலிருந்து எந்த தகவலும் கருணாநிதிக்கு வரவில்லை என்பதால், அவர் அதிருப்தி அடைந்தார். இதற்கிடையில், அமெரிக்கா வெளியிட்ட தீர்மானமும், கருணாநிதியை எரிச்சல் அடைய வைத்தது. உடனடியாக அவர் பொதுச்செயலர் அன்பழகனிடம் தொடர்பு கொண்டு பேசினார். பின், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன், அறிவாலயத்தில் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களின் சந்திப்பில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக, தி.மு.க., வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்யாததால், மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐ.மு., கூட்டணியிலிருந்தும், தி.மு.க., விலகுவதாக கருணாநிதி அறிவித்தார். "வெளியில் இருந்து மத்திய அரசுக்கு ஆதரவு தரப்போவதில்லை' என்றும் தெரிவித்தார்.
தி.மு.க., ஆதரவை விலக்கிக் கொண்டாலும், மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்று, நிதியமைச்சர் சிதம்பரமும், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், கமல்நாத்தும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
6 முறை மிரட்டல்:
இதுவரை மிரட்டிய தி.மு.க.,: தி.மு.க., இதுவரை, ஐந்து முறை மிரட்டல் விடுத்து, ஆறாவது முறையில்தான், கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.
* 2006 அக்., - நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், 10 சதவீத பங்குகளை, தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "கூட்டணியை விட்டு விலக நேரிடும்' என, தி.மு.க., எச்சரித்தது. இதனால், மத்திய அரசு, முடிவை மாற்றிக் கொண்டது.
* 2008 அக்., - இலங்கையில் இறுதிக் கட்டப் போர் நடந்த போது, போர் நிறுத்தம் கோரி, கூட்டணியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தது. அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, சென்னையில் கருணாநிதியை சந்தித்த உடன், திடீரென முடிவு மாறி விட்டது.
* 2011 மார்ச் - தமிழக சட்டசபை தேர்தலின் போது, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் - தி.மு.க., இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணியிலிருந்து விலக தி.மு.க., முடிவு செய்தது. மீண்டும் முடிவு மாறியது.
* 2012 மார்ச் - "இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததை ஆதரிக்காவிட்டால், கூட்டணியிலிருந்து விலகுவோம்' என, அப்போதும் தி.மு.க., எச்சரித்தது. நீர்த்துப்போன தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததும், முடிவில் மாற்றம் செய்யப்பட்டது.
* 2012 மே - பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. "விலை உயர்வை குறைக்காவிட்டால், கூட்டணியிலிருந்து விலகுவோம்' என, ஆவேசமாக அறிவித்தது. பின் முடிவை மாற்றிக் கொண்டது.
* 2013 மார்ச் - "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து விலக நேரிடலாம்' என, எச்சரித்தது. நேற்று கூட்டணியிலிருந்து விலகியது.
இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க., நிலைப்பாடு:
இலங்கை பிரச்னையில், தி.மு.க.,வின் நிலைப்பாடு, அவ்வப்போது பல வடிவங்கள் எடுத்துள்ளது.
1956: சிதம்பரத்தில் நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவளித்து தீர்மானம் நிறைவேற்றம்.
1977: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, சென்னையில் பேரணியை தி.மு.க., நடத்தியது.
1981: அப்போதைய பிரதமர் இந்திராவிடம் இலங்கை பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் கருணாநிதி கைது.
1981: வெலிக்கடை சிறையில், முப்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, மறுநாள் சென்னையில் கண்டன பேரணியை தி.மு.க., நடத்தியது.
1983: தமிழக சட்டசபையில், இலங்கை தமிழர் குறித்து நடத்தப்பட்ட விவாதம் பிரச்னையானது. மத்திய, மாநில அரசுகள் இலங்கை பிரச்னையை கண்டு கொள்ள மறுக்கின்றன எனக்கூறி கருணாநிதியும், அன்பழகனும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர்.
1985 மே 13: தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பை (டெசோ) சென்னையில்கருணாநிதி துவங்கினார்.
1986 மே: டெசோ சார்பாக "ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை', மதுரையில் தி.மு.க., நடத்தியது.
1989: ராஜிவ் ஆட்சிக்காலத்தில் அனுப்பப்பட்ட அமைதிப்படை சென்னை திரும்பியது. முதல்வராக இருந்த கருணாநிதி, அமைதிப்படையை வரவேற்க மறுத்துவிட்டார். இதனால், இந்திய இறையாண்மையை அவர் அவமதித்ததாக பிரச்னை கிளம்பியது.
2009 ஏப்.27: இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த போது, போரை நிறுத்தக்கோரி கருணாநிதி திடீர் உண்ணாவிரதத்தை துவக்கினார். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக கூறி அன்று மதியமே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
2012 ஆக.12: டெசோ துவங்கி 27 ஆண்டுகள் கழித்து, "ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு' சென்னையில் நடத்தப்பட்டது.
அக்.21: டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தி.மு.க., எம்.பி.,க்கள் குழு பிரதமரிடம் அளித்தது.
2013 மார்ச் 5: டெசோ சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்ததாக ஸ்டாலின் கைது.
மார்ச் 7: டில்லியில் டெசோ சார்பாக அகில இந்திய மாநாடு, கருத்தரங்கம் நடந்தது. அழைப்பு விடுக்கப்பட்ட பெரும்பாலான முக்கிய வட மாநில தலைவர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.
மார்ச் 12: இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு, மத்திய அரசு ஆதரவளிக்கக் கோரி, தமிழகத்தில் டெசோ சார்பில் பந்த் நடத்தப்பட்டது.
மார்ச் 19: அமைச்சரவையில் நான்கு ஆண்டுகள் கழித்த பிறகு, இலங்கை தமிழர் விவகாரத்தில், மத்திய அரசின் போக்கு அதிருப்தி அளிப்பதாகக் கூறி, அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கருணாநிதி அறிவித்தார். அதன்படி நள்ளிரவில் ஜனாதிபதியிடம் விலகல் கடிதம் கொடுக்கப்பட்டது.
Tuesday, February 26, 2013
ரயில்வே பட்ஜெட் 2013-2014
* ரயில்வே முக்கிய ஸ்டேஷன்களில் ஒய்பைவ் லைன்
* ரயில்வே துறையில் 22 ஆயிரத்து 500 கோடி இழப்பு
* பட்ஜெட் : ரயில்வே பாதுகாப்பை பலப்படுத்த திட்டம்
* ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குகிறது; பன்சால்
* 17 ஆண்டுக்கு பின் காங்., தாக்கல் செய்யும் பட்ஜெட்
* யானைகள் பலியை தடுக்க முழுக்கவனம்
* புதியபாதைகள் - மின்வசதி பெருக்கப்படும்
*10 ஆயிரத்து 700 ஆள் இல்ல லெவல் கிராசிங்குகளை நீக்க முடிவு
* கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் இழப்பை ஈடுகட்ட முடியும்
* சமீப காலங்களில் ரயில்வே விபத்துக்கள் குறைந்துள்ன
* ரிசர்வேஷன் அலர்ட் எஸ்.எம்.எஸ் திட்டம் விரிவுப்படுத்தப்படும்
*மாறறுத்திறனாளிகளுக்கு கூடுதல் பணியிடம்
*தரமான உணவு வழங்கிட விலை உயர்த்த திட்டம்
* இ டிக்கெட் பணிகள் டிசம்பருக்குள் முடிவைடயும்
* ரயில் நீர் உற்பத்தி நிலையம் 6 இடங்களில் அமைப்பு
*ஆசாதி ரயில் சேவை இயக்க திட்டம்
* ரயில்வே உணவு தரத்தை பரிசோதிக்க கூடுதல் கவனம்
* உ பி,யில் ரயில் வார்ப்பட தொழிற்சாலை
* துறைமுகம்- ரயில்வேஇணைக்க 3ஆயிரத்து 800 கோடியில் திட்டம்
* மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்கலேட்டர்
* இணையதள முன்பதிவு இரவு 11. 30 வரை நீடிப்பு
ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு புதிய ரயில்கள்
தஞ்சாவூர்- புதுக்கோட்டைக்கு புதிய ரயில்பாதை
67 புதிய எக்ஸ்பிரஸ் ரயில் 26 புதிய பாசஞ்சர் ரயில்
ரயில்வே முக்கிய ஸ்டேஷன்களில் ஒய்பைவ் லைன்
* ரயில்வே பட்ஜெட் திட்ட மதிப்பீடு 63 ஆயிரத்து 363 கோடி
* ரயில்வே கட்டணம் மூலம் 42 ஆயிரத்து 210 கோடி திரட்ட முடிவு
* டீசல் மூலம் வரும் ஆண்டில் 5 ஆயிரத்து 100 கோடி இழப்பு வரும்
*சரக்கு ரயில் கட்டணம் மூலம் 93 ஆயிரத்து 554 கோடி திரட்ட முடிவு
* விளையாட்டு வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை
*பயணிகள் கட்டணம் உயர்வில்லை: பன்சால்
* 1. 5 2 லட்சம் பணியிடங்கள் நிரப்ப இலக்கு
* ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு அமைக்க ரூ . 300 கோடி
*ரயில் கட்டமைப்பில் புதிதாக அருணால் சேர்ப்பு
* துறைமுகம்- ரயில்வே ஸ்டேஷன் இணைக்க ரூ 3, 800 கோடி
* ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்த ஆயிரம் கோடி
* செகந்திராபாத்தில் ரயில்வே நிதி நிர்வாகவியல் கல்லூரி
* சூரிய மின்சக்தி மூலம் ஆயிரம் ரயில்வே கேட் செயல்படுத்த திட்டம்
*பயணிகள் கட்டணம் உயர்வில்லை: பன்சால்
* கோவை - மன்னார் குடிக்கு புதிய ரயில்
*சென்னை- ஜோலார்பேட்டைக்கு புதிய ரயில்
*தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில்பாதை
* தமிழகத்திற்கு புதிதாக 14 ரயில்கள்
தமிழகத்திற்கு புதிதாக 14 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவைகள்... சென்னை பீகானுருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை காரைக்குடி இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் வாராந்திர ரயில் , சென்னையிலிருந்து சேலம் வழியாக பழநிக்கு தினசரி ரயில், கோவையிலிருந்து திருச்சி, தஞ்சை வழியாக மன்னார்குடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், கோவையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையிலிருந்து வேளாங்கன்னிக்கு புதிய ரயில், சென்னை- தஞ்சை இடையே தினசரி ரயில், சென்னையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் , நாகையிலிருந்து-பெங்களூருக்கு மதுரை திருச்சி வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரிக்கு புதிய ரயில் இயக்கப்படும் என கூறியுள்ளார்.
Wednesday, February 20, 2013
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு
பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்த முயற்சிகளின் பலனாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட் விதித்த கெடுவைத் தொடர்ந்து, எதிர்பார்க்கப்பட்டதை போலவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. நீர்வளத் துறை செயலர், சாமல் கே சர்க்கார் கையெழுத்திட்ட அந்த உத்தரவு, அரசிதழில் வெளியிடப்பட்டதற்கான தகவல், நேற்று காலை, 11:00 மணியளவில் அறிவிக்கப்பட்டது.இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு, 419 டி.எம்.சி., அளவு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின், அமராவதி மற்றும் பவானி நீர்தேக்கங்களின் தண்ணீரையும் உள்ளடக்கிய அளவு தான், இந்த 419 டி.எம்.சி., தமிழகத்துக்கு என, கர்நாடகாவில் இருந்து கிடைக்க இருப்பது, உண்மையில் 182 டி.எம்.சி., அளவு தண்ணீர் தான்.
எந்தவொரு அசாதாரண பருவநிலையும் ஏற்படாத பட்சத்தில், காவிரி நதி நீரின் மொத்த அளவு, ஆண்டுக்கு 740 டி.எம்.சி., என இறுதித் தீர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மொத்த அளவில் இருந்து தான், தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி என, நான்கு மாநிலங்களுக்கும் தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு என அளிக்கப்படும், 419 டி.எம்.சி., தண்ணீரை, மாத வாரியாக பிரித்து, ஒவ்வொரு மாதமும், இவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டுமென, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்துக்கு, ஜூன் மாதம், 10 டி.எம்.சி.,யும், ஜூலை மாதம், 34 டி.எம்.சி.,யும், ஆகஸ்ட் மாதம், 50 டி.எம்.சி.,யும், செப்டம்பர் மாதம், 40 டி.எம்.சி.,யும், அக்டோபர் மாதம், 22 டி.எம்.சி.,யும், நவம்பர் மாதம், 15 டி.எம்.சி.,யும், டிசம்பர் மாதம், 8 டி.எம்.சி.,யும் அளிக்க வேண்டும்.பிப்ரவரி முதல், மே மாதம் வரை, தலா, 2.5 டி.எம்.சி., அளவு தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். தமிழகத்துக்கு உண்டான பங்கீட்டு தண்ணீரின் அளவை, பிலிகுண்டுலு என்ற இடத்தில் வைத்து தான் அளவீடு செய்ய வேண்டும்.இந்த விவரங்கள் எல்லாமே, நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் உள்ளன.
இவை எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் நிர்வாக ஆணையம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்குமுறை குழு என, இரண்டு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்; அவ்வாறு உருவாக்கப்படும் இந்த அமைப்புகள் தான், நதி நீர் பங்கீட்டை செயல்படுத்தும் அமைப்புகளாக திகழும் என, இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த இரண்டு அமைப்புகள் அமைக்கப்படுவது குறித்து, அரசிதழில் எவ்வொரு தகவலும் இல்லை. மாறாக, இது விஷயமாக, நீர் வள அமைச்சகமானது, சட்ட அமைச்சகத்துக்கு, ஒரு கடிதத்தை எழுதியுள்ளதாக தெரிகிறது.அந்த கடிதத்தில், "காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக, ஏராளமான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளன. அவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இப்பிரச்னைக்கு சட்டப்படியான முடிவு இன்னும் வரவில்லை. இவ்வாறு சட்டப்படியான தீர்வு கிடைக்காத நிலையில், நிர்வாக ஆணையத்தையும்,
ஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைத்தால், அதில் சட்டப் பிரச்னை ஏதும் வர வாய்ப்புள்ளதா' என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கான விளக்கம் கிடைத்த பின், இந்த குழுக்கள் அமைக்கப்படும். அரசிதழில் வெளியான, 90 நாட்களுக்குப் பின், இந்த உத்தரவு அமலுக்கு வரும் என, கூறப்பட்டுள்ளது. எனவே, வரும் ஜூன் மாதம் 12ம் தேதி, மேட்டூர் அணை, வழக்கமாக திறக்கப்படும் போது, அரசு பிறப்பித்த உத்தரவு முழுமையாக அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கலாம்.
நடந்தாய் வாழி காவிரி... :
1890: ஆங்கிலேயர் ஆட்சியில் மைசூர் சமஸ்தானமாகவும், மெட்ராஸ் ராஜதானியாகவும் இருந்த காலத்தில், காவிரிப் பிரச்னை தலைதூக்கியது.
1892: நதிநீர் பங்கீடு குறித்து முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. சில ஆண்டுகள் கழித்து இந்த
ஒப்பந்தத்தை மைசூர் சமஸ்தானம் நிராகரித்தது.
1910: கர்நாடகாவில் கண்ணம்பாடி அணை கட்ட முடிவானது. இதை தமிழகம் எதிர்த்தது. மேட்டூரில் அணை கட்ட தமிழகம் முடிவு செய்தது.
1924 பிப்.18: காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் அப்போதிருந்த சென்னை மாகாணம் மற்றும் மைசூர் அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
1956: மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட்டது. சென்னை மாகாணத்துக்கு உட்பட்டிருந்த காவிரி உற்பத்தியாகும் இடமான குடகு, கர்நாடகாவுடன் இணைந்தது.
1974 பிப்.18: சென்னை மாகாணம் -மைசூர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ரத்தானது.
1990 ஜூன் 2: காவிரி நதி நீர்ப்பங்கீடு குறித்து விசாரிக்க பிரதமர் வி.பி.சிங், சித்ததோஷ் முகர்ஜி தலைமையில் மூவர் நடுவர் நீதி மன்றத்துக்கு உத்தரவிட்டார்.
1991 ஜூன் 25: ஆண்டுக்கு 205 டி.எம்.சி., (1 டி.எம்.சி., = 100 கோடி கன அடி) தண்ணீர் தமிழகத்துக்குத் தரவேண்டும் என்றும், காவிரியால் பயன் பெறும் 11.2 லட்சம் ஏக்கரின்அளவை உயர்த்தக் கூடாது என்றும் கர்நாடகாவுக்கு உத்தரவு.
1991 டிச.11: நடுவர் நீதி மன்றத்தின் உத்தரவை ஏற்குமாறு, கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை. இந்த உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதில் 20 பேர் பலி.
1993 ஜூலை: இடைக்கால உத்தரவை அமல்படுத்தக் கோரி ஜெயலலிதா உண்ணாவிரதம்.
1996 ஆக.,- 1997 ஜன.5: சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரைப்படி தமிழக முதல்வர் கருணாநிதிக்கும்,
கர்நாடக முதல்வர் படேலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை, தீர்வு எட்டப்படாமல் முடிந்தது.
1998 ஜூலை 20: நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தினால் கர்நாடகா - தமிழகம் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள், பிரதமர் வாஜ்பாயிடம் மனு.
1998 ஜூலை 21: ஆக. 21க்குள் தமிழகத்துக்குச் சேர வேண்டிய 205 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்கிட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
1998 ஆக.8: காவிரி பிரச்னையில் சுமூகத் தீர்வு
காணாவிட்டால், வாஜ்பாய் அரசுக்கான ஆதரவு வாபஸ் என ஜெயலலிதா எச்சரிக்கை.
1999 மே 7: 1991-92ல் கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணத்தை மே 15க்குள் வழங்க சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு உத்தரவு.
2002 அக்.,: கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதித்ததிற்காக கோர்ட்டில் மன்னிப்புக் கோரி, காவிரி நீரை திறந்து விட உத்தரவிட்டார்.
2002 அக்.12: காவிரியில் தண்ணீர்த் திறந்துவிடக் கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உண்ணாவிரதம்.
2003 ஜன.13: தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவில் தண்ணீர் தர கர்நாடகா ஒப்புதல்.
2006 ஆக.3: காவிரி ஆணையத்தின் ஆயுள் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
2007 பிப்.5: காவிரி நடுவர் நீதிமன்றம், இறுதி
Advertisement
தீர்ப்பை அறிவித்தது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 19.2 கோடி கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும். கேரளா, புதுச்சேரிக்கு உரிய நீரையும் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. தமிழகம் ஏற்றுக்கொண்டது. கர்நாடக அரசு எதிர்த்து மனுத்தாக்கல். 2012, செப்.13: காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் தர முடியாது என முதல்வர் ஷெட்டர் திடீர் அறிவிப்பு.
செப்.19: காவிரியில் தினமும் 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு.
செப்.24: தண்ணீர் திறந்துவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு.
செப்.28: தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கடுமையான கண்டிப்பு.
அக்.8: தினமும் 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு பிரதமர் தான் பொறுப்பு என அறிவித்தது.
அக்.8: பிரதமர் அக்.20 வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட் உத்தரவையும், பிரதமர் உத்தரவையும், சில மணி நேரங்களில் கர்நாடகா அவமதித்தது.
அக்.9: கர்நாடகா அரசு மீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
அக்.9:கர்நாடகாவைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கைது.
அக்.10: பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்தித்து பேச, கர்நாடக முதல்வர் ஷெட்டர் டில்லி சென்றார். இரண்டு நாட்கள் காத்திருந்து பிரதமரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
அக்.17: நீர்ப்பங்கீடு குறித்து புதிய மனு ஒன்றை தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் அளித்தது.
நவ.15: காவிரி நதிநீர் ஆணையம், நவ.16-30க்குள் 4.81 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டது.
நவ.29: காவிரிப் பிரச்னை குறித்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருவில் பேச்சுவார்த்தை.
டிச.6: தமிழகத்துக்கு உடனடியாக, 10 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
டிச.7: நீர் திறந்து விட முடியாது என எம்.பி.,க்களுடன் பிரதமரை சந்தித்து ஷெட்டர் கூறினார்.
டிச.7: தமிழகத்துக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.
டிச.10: தமிழகத்துக்கு 12 டி.எம்.சி., நீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
டிச.21: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட பிரதமருக்கு ஜெ., இரண்டாவது முறையாக கடிதம்.
டிச.25: அரசிதழில் நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிடக் கூடாது என பிரதமருக்கு ஷெட்டர் கடிதம்.
2013, ஜன.4: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, அரசிதழில் வெளியிட தாமதிக்கும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்.
ஜன.11: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட பிரதமர் முடிவு.
பிப்.4: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசு பிப்.20க்குள் கெஜட்டில் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
பிப்.9: தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறப்பு.
பிப்.13: குறைந்த அளவு தண்ணீர் திறந்து விட்ட கர்நாடக அரசு மீது, தமிழகம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
பிப்.20: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது.
Subscribe to:
Posts (Atom)