எண்ணங்களின் பிரதிபலிப்பு
Wednesday, March 23, 2011
காங்கிரஸ் 63 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆலந்தூர் தொகுதியில் காயத்திரி தேவி போட்டியிடுகிறார். வேட்பாளர் விபரம் வருமாறு:-
திருவள்ளூர் மாவட்டம் :
1. திருத்தணி- சதா சிவலிங்கம்
2. பூவிருந்தவல்லி (தனி) –
3. ஆவடி - ஆர். தாமோதரன்
சென்னை மாவட்டம் :
4. திரு.வி.க.நகர் (தனி) - சி.நடேசன்
5. ராயபுரம் - ஆர். மனோ
6. அண்ணா நகர் - வி.கே. அறிவழகன்
7. தியாகராயநகர் - செல்வகுமார்
8. மைலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு
காஞ்சீபுரம் மாவட்டம் :
9. ஆலந்தூர் - காயத்திரி தேவி
10. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - டி.யசோதா
11. மதுராந்தகம் (தனி) - ஜெயக்குமார்
வேலூர் மாவட்டம் :
12. சோளிங்கர் - அருள் அன்பரசு
13. வேலூர் - ஞான சேகரன்
14. ஆம்பூர் - ஜே. விஜய இளஞ்செழியன்
கிருஷ்ணகிரி மாவட்டம் :
15. கிருஷ்ணகிரி - ஹெசினா சயித்
16. ஓசூர் - கோபிநாத்
திருவண்ணாமலை மாவட்டம்:
17. செங்கம் (தனி) - செல்வ பெருந்தொகை
18. கலசப்பாக்கம் - சி.எஸ். விஜய குமார்
19. செய்யார் - எம்.கே. விஷ்ணுபிரசாத்
விழுப்புரம் மாவட்டம் :
20. ரிஷிவந்தியம் - சிவராஜ்
சேலம் மாவட்டம்
21. ஆத்தூர் (தனி) - அர்த்த நாரி
22. சேலம் வடக்கு - ஜெயபிரகாஷ்
நாமக்கல் மாவட்டம் :
23. திருச்செங்கோடு - ஆர்.எம்.சுந்தரம்
ஈரோடு மாவட்டம் :
24. ஈரோடு மேற்கு - யுவராஜ்
25. மொடக்குறிச்சி - பழனிசாமி
திருப்பூர் மாவட்டம் :
26. காங்கேயம் - விடியல் எஸ். சேகர்
27. அவினாசி (தனி) - ஏ.ஆர். நடராஜன்
28. திருப்பூர் தெற்கு -
நீலகிரி மாவட்டம்
29. உதகமண்டலம் - கணேசன்
கோவை மாவட்டம்
30. தொண்டாமுத்தூர் -எம்.எஸ்.கந்தசாமி
31. சிங்காநல்லூர் -மயுரா ஜெயகுமார்
32. வால்பாறை (தனி) - கோவை தங்கம்
திண்டுக்கல் மாவட்டம் :
33. நிலக்கோட்டை (தனி) - ராஜாங்கம்
34. வேடசந்தூர் - தண்டபானி
கரூர் மாவட்டம் :
35. கரூர் - ஜோதி மணி
திருச்சி மாவட்டம் :
36. மணப்பாறை -டாகர். சுப. சோமு
37. முசிறி - எம். ராஜ சேகரன்
அரியலூர் மாவட்டம் :
38. அரியலூர் - பாலை தீ அமரமூர்த்தி
கடலூர் மாவட்டம்:
39. விருதாசலம் - நீதிராஜன்
நாகை மாவட்டம் :
40. மயிலாடுதுறை - எஸ். ராஜ்குமார்
திருவாரூர் மாவட்டம்
41. திருத்துறைப்பூண்டி (தனி) - சி. செல்லத்துரை
தஞ்சை மாவட்டம் :
42. பாபநாசம் - ராம்குமார்
43. பட்டுக்கோட்டை - என்.ஆர். ரங்கராஜன்
44. பேராவூரணி - கே. மகேந்திரன்
புதுக்கோட்டை மாவட்டம் :
45. திருமயம் - ராமசுப்புராவ்
46. அறந்தாங்கி - எஸ். திருநாவுக்கரசர்
சிவகங்கை மாவட்டம் :
47. காரைக்குடி - கே.ஆர். ராமசாமி
48. சிவகங்கை - வி.ராஜசேகரன்
மதுரை மாவட்டம் :
49. மதுரை வடக்கு - ராஜேந்திரன்
50. மதுரை தெற்கு - எஸ்.பி.வரதராஜன்
51. திருப்பரங்குன்றம் - சி.ஆர்.சுந்தர ராஜன்
விருதுநகர் மாவட்டம் :
52. விருதுநகர் - நவீன் ஆம்ஸ்ராங்
ராமநாதபுரம் மாவட்டம் :
53. பரமக்குடி (தனி) - ரா.பிரபு
54. ராமநாதபுரம் –
தூத்துக்குடி மாவட்டம் :
55. விளாத்திகுளம் - பெருமாள்சாமி
56. ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
நெல்லை மாவட்டம் :
57. வாசுதேவநல்லூர் (தனி) - எஸ்.கணேசன்
58. கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்
59. நாங்குனேரி - வசந்தகுமார்
60. ராதாபுரம் - வேல்துரை
கன்னியாகுமரி மாவட்டம் :
61. குளச்சல் - ராபர்ட் புரூஸ்
62. விளவங்கோடு - விஜய தரணி
63. கிள்ளிïர் - ஜான் சேக்கப்
Saturday, March 19, 2011
இயக்குனர் பாலுமகேந்திராவுடன் - கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்
எங்களது அலுவலகத்தில் மொட்டை மாடி கூட்டம் எப்பொழுதும் நடைபெறுவது உண்டு. அந்த மொட்டை மாடிக்கூட்டத்தின் நோக்கமே பயனுள்ள அரட்டை என்றும் சொல்லலாம். அதில் ஏதாவது ஒரு தலைப்பு அரசியலைப் பற்றியோ, புத்தகம் எழுதுவதைப் பற்றியோ, சினிமாவை பற்றியோ அல்லது பொருளாதாரத்தைப் பற்றியோ என்று ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு அந்த துறையின் வல்லுனர்களை அழைத்து அதைப் பற்றி பேசி விவாதம் நடப்பதுண்டு.
இந்த கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். சில சமயங்களில் கூட்டம் நிறைய வரும் பல ச்மயங்களில் கூட்டம் குறைவாக இருக்கும்.
சுதந்திரமாக எல்லாரும் கலந்து பேசி கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். சில சமயங்களில் காரசாரமான விவாதம் நடைபெறும்.
அப்படி நேற்றைய கிழக்கு மொட்டை மாடி கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் ” எழுத்தில் இருந்து திரைக்கு " என்கிற தலைப்பில் பேசினார்.
மிகவும் அழகாக, தெளிவாக ஒரு படைப்பை எப்படி எடுக்கவேண்டும் என்று உரையாற்றினார்.
ஒரு சிறுகதையில் இருந்து எப்படி படத்தை எடுக்கலாம். அந்த கதை அப்படியே எடுக்கவேண்டுமா அல்லது அந்த கதையின் கருவை மையமாக வைத்து மட்டுமே எப்படியெல்லாம் படமெடுக்கலாம் என்கிற விஷயத்தை மிகவும் எதார்த்தமாக சொன்னார். நேற்று கலந்து கொண்டு இளம் வளரும் இயக்குனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு சிலர் குற்றம் கண்டு பிடித்து கூட்டத்தில் தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளும் விதமாக அதிமேதாவி தனமாக பேசுபவர் எப்பொழுதுமே வருவதுண்டு.
ஒரு துறையைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்பு அந்த துறையைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தால் அல்லது குறைந்தபட்சம் தெரிந்தாலாவது விமர்சனம் செய்யலாம், இல்லையென்றால் சந்தேகத்தை மட்டும் கேட்டுவிட்டு சென்றால் நன்றாக இருக்கும்.
அது போல ஒரு சிறுகதை எழுத்தாளார் பாலுமகேந்திராவின் சினிமாவைப் பற்றி விமர்சித்தார். எப்படியோ அவருடைய கோபத்தை நேற்று கொட்டித் தீர்த்துவிட்டார் என்று நினைக்கிறேன்.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நேற்றையக்கூட்டம். இது போல கிழக்கு மொட்டை மாடி கூட்டத்திற்கு முடிந்தவரையில் எல்லாரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். சில சமயங்களில் கூட்டம் நிறைய வரும் பல ச்மயங்களில் கூட்டம் குறைவாக இருக்கும்.
சுதந்திரமாக எல்லாரும் கலந்து பேசி கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். சில சமயங்களில் காரசாரமான விவாதம் நடைபெறும்.
அப்படி நேற்றைய கிழக்கு மொட்டை மாடி கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் ” எழுத்தில் இருந்து திரைக்கு " என்கிற தலைப்பில் பேசினார்.
மிகவும் அழகாக, தெளிவாக ஒரு படைப்பை எப்படி எடுக்கவேண்டும் என்று உரையாற்றினார்.
ஒரு சிறுகதையில் இருந்து எப்படி படத்தை எடுக்கலாம். அந்த கதை அப்படியே எடுக்கவேண்டுமா அல்லது அந்த கதையின் கருவை மையமாக வைத்து மட்டுமே எப்படியெல்லாம் படமெடுக்கலாம் என்கிற விஷயத்தை மிகவும் எதார்த்தமாக சொன்னார். நேற்று கலந்து கொண்டு இளம் வளரும் இயக்குனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு சிலர் குற்றம் கண்டு பிடித்து கூட்டத்தில் தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளும் விதமாக அதிமேதாவி தனமாக பேசுபவர் எப்பொழுதுமே வருவதுண்டு.
ஒரு துறையைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்பு அந்த துறையைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தால் அல்லது குறைந்தபட்சம் தெரிந்தாலாவது விமர்சனம் செய்யலாம், இல்லையென்றால் சந்தேகத்தை மட்டும் கேட்டுவிட்டு சென்றால் நன்றாக இருக்கும்.
அது போல ஒரு சிறுகதை எழுத்தாளார் பாலுமகேந்திராவின் சினிமாவைப் பற்றி விமர்சித்தார். எப்படியோ அவருடைய கோபத்தை நேற்று கொட்டித் தீர்த்துவிட்டார் என்று நினைக்கிறேன்.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நேற்றையக்கூட்டம். இது போல கிழக்கு மொட்டை மாடி கூட்டத்திற்கு முடிந்தவரையில் எல்லாரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Labels:
பொது
Monday, February 14, 2011
காதலர் தின நல்வாழ்த்துக்கள்
காதலர் தின நல்வாழ்த்துக்கள் என்றென்றும் காதல் வாழ்க, காதலர் வாழ்க....
இது ஒரு திருஷ்டிக்கு மட்டுமே, தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இது ஒரு திருஷ்டிக்கு மட்டுமே, தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
Labels:
காதல்
Wednesday, November 3, 2010
தரமான கல்வியை புகட்ட நாம் என்ன என்ன செய்ய வேண்டும்.
1. சரியான கல்விக் கூடங்கள் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட பள்ளிகள். ( ஆய்வுக்கூடங்கள், கணினி மையங்கள், பாடப்புத்தகங்கள், தரமான ஆசிரியர்கள் )
2. நன்கு பயிற்சி பெற்ற தரமான ஆசிரியர்கள்.
3. கல்விகூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வேறெந்த வேலைகளையும் பள்ளி நிர்வாகம் வழங்க கூடாது.
4. மாணவர்கள் மற்றும் ஆசிரியகள் புரிதல் என்பது இங்கே மிக முக்கியம்.
5. மாணவர்களுக்கு புரியும் படியாக பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.
6. மாணவர்கள் பாடத்தை புரிந்து கொண்டார்களா என்பதை எப்படி சோதிப்பது என்று கேட்டால் ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் நிறைய கேள்விகள் வரவேண்டும். ஆசிரியர்கள் அந்த எல்லாக் கேள்விகளுக்கும் பொருப்பான முறையில் பதிலளித்து அவர்களுடைய சந்தேகங்களை போக்கவேண்டும். யாராவது கேள்விகள் கேட்கவில்லை என்றால் அந்த மாணவனுக்கு பாடம் முழுமையாக புரிந்து கொண்டான் என்று கருதக் கூடாது. அவனுக்கு முழுமையாக புரியாமல் கூட இருக்கலாம் அப்படி இருக்கையில் கண்டிப்பாக மீண்டும் ஒரு முறை அவனைப் போன்ற பிள்ளைகளை தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக அமர்த்தி மீண்டும் அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுக்க வேண்டும். அவனுக்கு புரியும் வரை எடுக்கவேண்டும். அவனால் மீண்டும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், ஏன் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று ஆசிரியர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவனுக்கு எப்படி சொல்லிக் கொடுத்தால் அவன் புரிந்து கொள்வான் என்பதை ஆசிரிகள் கற்றுக் கொள்ளவேண்டும்.
இதிலிருந்து அவனுக்கு அடிப்படையில் இருந்தே அவனுக்கு புரியவில்லை என்று அர்த்தம். அதனால் நீங்கள் மீண்டும் அடிப்படையில் இருந்து மீண்டும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
7. ஒரு வகுப்புக்கு அதிகபட்சம் 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் அப்பொழுது தான் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் புரிதல் இருக்கும். இல்லாவிட்டால் தரமற்ற சமூதாயத்தை தான் நாம் படைக்கிறோம் என்று பொருள்.
இங்கே மிகவும் மோசமான நிலையில் நமது அரசாங்க பள்ளிகள் தான் முதலிடத்தில் இருக்கிறது.
அரசு பள்ளிகளில் தரமான ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு 10% சதவிகதம் மட்டும் தான் இருக்கும் மீதி இருக்கும் ஆசிரியர்கள் எல்லாம் பணி மூப்பு அடிப்படையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற பணிமூப்பு ஆசிரியர்களுக்கே எதுவும் தெரியாத நிலையில் மாணவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுக்க முடியும் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுககு எப்படி பதில் சொல்ல முடியும்.
தரமான ஆசிரியர்களை அமர்த்துவது அரசாங்காத்தின் கடமை அந்த கடமையை அரசாங்கம் செய்கிறதா என்றால் எந்த மாநில அரசும் செய்வதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஊதியத்திற்கு மட்டும் போராடும் ஆசிரியர்களின் இயக்கங்கள் மற்றும் சங்கங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வதில்லை.
ஓட்டிற்க்காக மட்டும் ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி கொடுக்கும் அரசாங்கங்கள் தரமான ஆசிரியர்களை நிர்ணயம் செய்வதில் இருந்து தவறிவிட்டது.
ஓட்டிற்காக செய்யாமல் நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக, நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக என்று நீண்டகால சிந்தனை எல்லாம் எந்த அரசாங்கத்திற்கு இல்லை.
ஏன் இந்த அவல நிலை எப்போது இந்த நிலைமாறும்.
இன்றைய அவல நிலையை சற்று பார்ப்போம் :
விமான போக்குவரத் துறையின் வளர்ச்சிக்கு தடை திறமையில்லாதா ஊழியர்களால் :
அடுத்த சில வருடங்களில் விமான போக்குவரத்து துறை, அணு தொழிநுட்பம் மற்றும் பாதுகாப்பு துறையில் குறிப்பிட தகுந்த வளர்ச்சியை பெரும்.இருந்தாலும் திறமையான ஊழியர்கள் இல்லாததால் அந்த துறைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று பெங்களூரில் நடைபெற்ற தொழில் நுட்பவல்லுனர்கள் கூட்ட்த்தில் விவாதிக்கப்பட்டது.
இந்திய விமான படையில் பயிற்சி பெற்ற 700 விமானி பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் 126 போரிடும் விமானங்களும் மற்றும் 100 ஹெலிக்காப்டர்களும் வாங்கவிருக்கிறார்கள் இந்நிலையில் அதனை இயக்குவதற்கு விமானிகள் இல்லை இதே நிலைமை தான் அணு அறிவியல்
துறையிலும் என்கிறார் சங்கைய இயக்குனர் நடுபலி அவர்கள்.
விமான போக்குவரத்து துறையானது விரிவுபடுத்தப்பட்டு அதனுடைய விமானி தேவை 2000 க்கும் அதிகம் மற்றும் 10,000 அதிகமான பழுதுபார்க்கும் பணியாளர்ச்கள். இந்த பணியிட்ங்களை நிரப்புவதுதென்பது கஷ்டமான காரியம் ஏனென்றால் ஏற்கனவே வேலையாட்கள் பற்றாக்குறையுள்ளது.
இதிலே சரியான தொழில்நுட்பம் பயின்ற வேலையாட்கள் பற்றாகுறை அதிகம். நாம் பக்கத்து நாடான சீனா 1700 தொழில்நுட்ப கல்லூரிகளில் 19 லட்சம் தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குகிறார்கள். ஆனால் நம்நாட்டில் 300 தொழில்நுட்ப கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்களைத் தான் உருவாக்க முடிகிறது அவர்களும் சரியான முறையில் பயிற்சி பெறாதவர்களே. உதாரணத்திற்கு க்டந்த 40 வருடத்தில் 15 இண்டீஜீனியஸ் எஞ்சின்களை உருவாக்கியிருக்கிறார்கள் ஆனால் நாமோ ஓரே ஒரு எஞ்ஜினைத் தான் உருவாக்கியிருக்கிறோம்.
பல கோடிரூபாய்க்கான ஒப்பந்தங்கள் வரவிருக்கிற நிலையில் இது போன்ற பற்றாகுறையை சரிசெய்யவில்லை என்றால் குறிபிட்ட காலத்துக்குள் ஒப்பந்த வேலையை முடித்து கொடுக்க முடியாது.
நல்ல திறமையான பயிற்சி பெற்ற வேலையாட்களை உருவாக்க முக்கியதுவம் அளிக்க வேண்டும் ரூ . 45,000 கோடி ரூபாக்கு முதலீடு வரவிருக்கிறது அது 1.25 மில்லியன் வேலை வாய்ப்புகளை ஏற்படப்போகிறது.
.
கணினி மையமாயாக்கலுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது விமான துறையிலும் மற்றும் பாக்காப்பு துறையிலும்.
என்று புலம்பும் நிலையில் நாம் இருக்கிறோம். மனித வளம் இவ்வளவு இருந்தும் இப்படி வருந்தும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.
Friday, October 1, 2010
எச்சரிக்கை மணி பூர்வீக இந்தியர்களுக்கு - நேற்றைய தீர்ப்பு
ஒரு பெரும்பான்மையான சமூகத்தால் ஒரு சிறுபான்மை சமூகத்தின் உடமைகள் கைப்பற்றபட்டு இருக்கிறது.
பாபர் 500 வருடங்களுக்கு முன்னால் அந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டியெழுப்பி தொழுகை நடந்து கொண்டிருந்த ஒரு இடத்தை மற்றொரு பெரும்பான்மையான சமூகம் ஒன்று திட்டம் போட்டு கொள்ளை அடித்து கொண்டிருக்கிறது அதற்கு ஒரு நாட்டின் உயர் நீதி மன்றம் பெரும்பான்மையான சமூகத்திற்கு சார்பாக தீர்ப்பளித்திருக்கிறது.
எங்கே சிறுபான்மை சமூகத்திற்கு சாதமாக தீர்ப்பு வழங்கினால் பெரும்பானையான சமூகத்தால் சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம்கள் தாக்கப் படுவார்களோ என்று அஞ்சி இப்படி ஒரு மாபெரும் அபத்தமான தீர்ப்பை வழங்கி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
இதில் மூன்று நீதிபதிகளில் இருவர் ஓரளவுக்கு நடுநிலைமையோடு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் மற்றொருவர் இந்து மத வெறியர் அதனால் அவர் இந்துகளுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அடிப்படையிலே நீதிபதியும் ஒரு சாதாரண மனுஷன் தானே.
ஒரு நீதிபதி சட்டத்திட்டத்திற்கு ஏறப தீர்ப்பை வழங்க வேண்டுமே ஒழிய அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பை வழங்க கூடாது.
பாபரால் கட்டப்பட்டதுதான் அந்த மசூதி என்று எல்லோருக்கும் தெரியும் கடந்த 500 ஆண்டுகாலமாக அந்த இடத்தில் முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதற்கான எல்லா ஆதரமும் முஸ்லீம்கள் தரப்பிலான சன்னி வாஃப் அமைப்பு முன்வைத்தும் இது போதிய ஆதரம் இல்லை அதனால் இந்த மசூதி பாபரால் கட்டப்பட்டது என்பதை நிருபிக்க தவறிவிட்டது அதனால் இந்த இடத்தை மூன்றாக பங்கிட்டுக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்திருக்கிறது.
இந்த தீர்ப்பு எப்படி இருக்கிறது என்றால் 1998 ல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியது. அந்த தாக்குதலில் ஒரே ஒரு தீவரவாதி மட்டும் பிடிபட்டான் அவனது வாக்கு மூலத்தில் நாங்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் நாங்கள் அங்குதான் பயிற்சி பெற்றோம், கடல் வழியாக மும்பையில் ஊடுருவினோம், எனது பெற்றோர்கள் பாகிஸ்தான் நாட்டில் தான் வசிக்கிறார்கள் என்றதும் எல்லா தொலைக்காட்சிகளும் அவனது பெற்றோர்கள் இருக்கும் இடத்தை முற்றுகையிட்டு ஒலிபரப்ப தொடங்கியது இது பாகிஸ்தான் அரசுக்கும் மற்றும் பாகிஸ்தான் நீதிதுறைக்கும் தெரியும். இருந்தும் இந்திய அரசாங்கம் எல்லா விதமான ஆதாரத்தை வழங்கியும் இன்னும் சமந்தப்பட்ட தீவிரவாத குழுக்களை பிடிக்கவில்லை ஏன் என்று கேட்டால் போதிய ஆதாரம் தரவில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறது அது போலத்தான் சன்னி வாஃப் அமைப்பு வழங்கிய ஆதாரத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்து இந்த தீர்ப்பு வழங்கப்படிருக்கிறது.
ஒரு நீதிமன்றம் சாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பை வழங்க வேண்டும் அப்படிபட்ட தீர்ப்புதான் சரியான தீர்ப்பாக இருக்கும் அப்படிபட்ட நாடுதான் சரியான மற்றும் உயர்ந்த சிறந்த ஜனநாயக நாடாக விளங்க முடியும்.
இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு வரும் பொழுது அப்படி ஒரு தீர்ப்பை இந்தியன் என்கிற முறையில் நான் எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் இது போன்ற ஒரு தீர்ப்பு வந்தால் இதை வேறுவகையில் சமூகம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
ஆரியர்களுக்கு எதிராக மிண்டும் களமிரங்க பூர்வீக மக்களாகிய இந்தியர்கள் திராவிடர்களும் மற்ற சமூகத்தினரும் ஒன்று சேரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபடும்.
இப்பொழுது ஹிந்துக்கள் என்று பா.ஜ.க, R.S.S மற்றும் VHP போன்ற அமைப்புகள் ஆரியர்களை மட்டுமே சொல்லி வருகிறது இதுவே இன்னும் 500 வருடங்கள் ஆன பிறகு ஹிந்துக்கள் என்றால் ஆரியர்கள் மட்டும்தான் என்கிற நிலை வந்து ஆரியர்கள் தான் பூர்வீக இந்தியர்கள் மற்றவர்கள் எல்லாரும் அவர்களின் அடிமைகள் என்று வரலாறு எல்லா மட்டத்திலும் எல்லா இடங்களிலும் திருத்தி எழுதபட்டிருக்கும்.
அப்பொழுது மற்றவர்களின் கதி ?
நாங்கள் எல்லா மதத்தினரையும் சமமாக பார்க்கிறோம். யாராவது சிறுபான்மை சமூகத்திற்க்கு எதிராக நடந்து கொண்டாலோ அல்லது அவர்களை அழிக்க நினைத்தாலோ மீண்டும் ஆயிரம் பெரியார்கள் இந்தியா முழவதும் தோன்றுவார்கள் அவர்களில் சுபாஷ் சந்திரபோஷ் போன்றவர்கள் கூட வரலாம் அப்பொழுது ஆரியர்களின் நிலைமை?
அதனால் மக்களை கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவதையோ அல்லது பிரிவினைவாததை தூண்டுவதையோ நாங்கள் ஒரு போது அனுமதிக்கமாட்டோம்.
கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கு உயிரூட்ட நினைக்கிறது ஆரியர்களின் கூட்டம்.
இராமயணம் ஒரு கதை. அந்த கதை மக்களை நல்வழிப்படுத்தும் என்கிற நல்ல நோக்கத்தில் எழுதபட்டது. இதை ஆரியர்களின் சமூகம் உண்மை என்று சொல்லி மக்களை திசை திருப்பி மக்களை கடவுளின் பெயரால் சுரண்ட நினைக்கிறது மற்றவர்களை அழிக்க நினைக்கிறது. இதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இன்னும் நிறைய பேருக்கு இந்த உண்மை தெரியாது.குறிப்பாக இப்பொழுது உள்ள இளைஞர்களுக்கு. ஏதோ ஏட்டுக் கல்வி படித்தோம் பெற்றோர்கள் என்ன சொன்னார்களோ அதையே எந்த கேள்வியையும் கேட்காமல் நம்பினோம் என்று இருக்கிறார்கள்.
சிந்திக்க வேண்டும் எல்லா விஷயத்தை பற்றியும் படிக்க வேண்டும் உண்மையான வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை.
R.S.S, V.H.P மற்றும் B.J.P போன்ற அமைப்புகள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் மீண்டும் நீங்கள் எங்களுக்கு வேலை கொடுக்காதீர்கள்.
பாபர் 500 வருடங்களுக்கு முன்னால் அந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டியெழுப்பி தொழுகை நடந்து கொண்டிருந்த ஒரு இடத்தை மற்றொரு பெரும்பான்மையான சமூகம் ஒன்று திட்டம் போட்டு கொள்ளை அடித்து கொண்டிருக்கிறது அதற்கு ஒரு நாட்டின் உயர் நீதி மன்றம் பெரும்பான்மையான சமூகத்திற்கு சார்பாக தீர்ப்பளித்திருக்கிறது.
எங்கே சிறுபான்மை சமூகத்திற்கு சாதமாக தீர்ப்பு வழங்கினால் பெரும்பானையான சமூகத்தால் சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம்கள் தாக்கப் படுவார்களோ என்று அஞ்சி இப்படி ஒரு மாபெரும் அபத்தமான தீர்ப்பை வழங்கி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
இதில் மூன்று நீதிபதிகளில் இருவர் ஓரளவுக்கு நடுநிலைமையோடு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் மற்றொருவர் இந்து மத வெறியர் அதனால் அவர் இந்துகளுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அடிப்படையிலே நீதிபதியும் ஒரு சாதாரண மனுஷன் தானே.
ஒரு நீதிபதி சட்டத்திட்டத்திற்கு ஏறப தீர்ப்பை வழங்க வேண்டுமே ஒழிய அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பை வழங்க கூடாது.
பாபரால் கட்டப்பட்டதுதான் அந்த மசூதி என்று எல்லோருக்கும் தெரியும் கடந்த 500 ஆண்டுகாலமாக அந்த இடத்தில் முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதற்கான எல்லா ஆதரமும் முஸ்லீம்கள் தரப்பிலான சன்னி வாஃப் அமைப்பு முன்வைத்தும் இது போதிய ஆதரம் இல்லை அதனால் இந்த மசூதி பாபரால் கட்டப்பட்டது என்பதை நிருபிக்க தவறிவிட்டது அதனால் இந்த இடத்தை மூன்றாக பங்கிட்டுக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்திருக்கிறது.
இந்த தீர்ப்பு எப்படி இருக்கிறது என்றால் 1998 ல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியது. அந்த தாக்குதலில் ஒரே ஒரு தீவரவாதி மட்டும் பிடிபட்டான் அவனது வாக்கு மூலத்தில் நாங்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் நாங்கள் அங்குதான் பயிற்சி பெற்றோம், கடல் வழியாக மும்பையில் ஊடுருவினோம், எனது பெற்றோர்கள் பாகிஸ்தான் நாட்டில் தான் வசிக்கிறார்கள் என்றதும் எல்லா தொலைக்காட்சிகளும் அவனது பெற்றோர்கள் இருக்கும் இடத்தை முற்றுகையிட்டு ஒலிபரப்ப தொடங்கியது இது பாகிஸ்தான் அரசுக்கும் மற்றும் பாகிஸ்தான் நீதிதுறைக்கும் தெரியும். இருந்தும் இந்திய அரசாங்கம் எல்லா விதமான ஆதாரத்தை வழங்கியும் இன்னும் சமந்தப்பட்ட தீவிரவாத குழுக்களை பிடிக்கவில்லை ஏன் என்று கேட்டால் போதிய ஆதாரம் தரவில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறது அது போலத்தான் சன்னி வாஃப் அமைப்பு வழங்கிய ஆதாரத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்து இந்த தீர்ப்பு வழங்கப்படிருக்கிறது.
ஒரு நீதிமன்றம் சாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பை வழங்க வேண்டும் அப்படிபட்ட தீர்ப்புதான் சரியான தீர்ப்பாக இருக்கும் அப்படிபட்ட நாடுதான் சரியான மற்றும் உயர்ந்த சிறந்த ஜனநாயக நாடாக விளங்க முடியும்.
இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு வரும் பொழுது அப்படி ஒரு தீர்ப்பை இந்தியன் என்கிற முறையில் நான் எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் இது போன்ற ஒரு தீர்ப்பு வந்தால் இதை வேறுவகையில் சமூகம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
ஆரியர்களுக்கு எதிராக மிண்டும் களமிரங்க பூர்வீக மக்களாகிய இந்தியர்கள் திராவிடர்களும் மற்ற சமூகத்தினரும் ஒன்று சேரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபடும்.
இப்பொழுது ஹிந்துக்கள் என்று பா.ஜ.க, R.S.S மற்றும் VHP போன்ற அமைப்புகள் ஆரியர்களை மட்டுமே சொல்லி வருகிறது இதுவே இன்னும் 500 வருடங்கள் ஆன பிறகு ஹிந்துக்கள் என்றால் ஆரியர்கள் மட்டும்தான் என்கிற நிலை வந்து ஆரியர்கள் தான் பூர்வீக இந்தியர்கள் மற்றவர்கள் எல்லாரும் அவர்களின் அடிமைகள் என்று வரலாறு எல்லா மட்டத்திலும் எல்லா இடங்களிலும் திருத்தி எழுதபட்டிருக்கும்.
அப்பொழுது மற்றவர்களின் கதி ?
நாங்கள் எல்லா மதத்தினரையும் சமமாக பார்க்கிறோம். யாராவது சிறுபான்மை சமூகத்திற்க்கு எதிராக நடந்து கொண்டாலோ அல்லது அவர்களை அழிக்க நினைத்தாலோ மீண்டும் ஆயிரம் பெரியார்கள் இந்தியா முழவதும் தோன்றுவார்கள் அவர்களில் சுபாஷ் சந்திரபோஷ் போன்றவர்கள் கூட வரலாம் அப்பொழுது ஆரியர்களின் நிலைமை?
அதனால் மக்களை கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவதையோ அல்லது பிரிவினைவாததை தூண்டுவதையோ நாங்கள் ஒரு போது அனுமதிக்கமாட்டோம்.
கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கு உயிரூட்ட நினைக்கிறது ஆரியர்களின் கூட்டம்.
இராமயணம் ஒரு கதை. அந்த கதை மக்களை நல்வழிப்படுத்தும் என்கிற நல்ல நோக்கத்தில் எழுதபட்டது. இதை ஆரியர்களின் சமூகம் உண்மை என்று சொல்லி மக்களை திசை திருப்பி மக்களை கடவுளின் பெயரால் சுரண்ட நினைக்கிறது மற்றவர்களை அழிக்க நினைக்கிறது. இதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இன்னும் நிறைய பேருக்கு இந்த உண்மை தெரியாது.குறிப்பாக இப்பொழுது உள்ள இளைஞர்களுக்கு. ஏதோ ஏட்டுக் கல்வி படித்தோம் பெற்றோர்கள் என்ன சொன்னார்களோ அதையே எந்த கேள்வியையும் கேட்காமல் நம்பினோம் என்று இருக்கிறார்கள்.
சிந்திக்க வேண்டும் எல்லா விஷயத்தை பற்றியும் படிக்க வேண்டும் உண்மையான வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை.
R.S.S, V.H.P மற்றும் B.J.P போன்ற அமைப்புகள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் மீண்டும் நீங்கள் எங்களுக்கு வேலை கொடுக்காதீர்கள்.
Labels:
இந்துக்கள்,
தீர்ப்பு,
முஸ்லீம்
Subscribe to:
Posts (Atom)



