ஆந்திர மாநில மக்களால் "ஒய்.எஸ்.ஆர்." என்று மிகவும் அன்போடு அழைக்கப்பட்டவர் ராஜசேகர ரெட்டி. ஆந்திர மாநில அரசியலை புரட்டிப்போட்ட பெருமை இவருக்கு உண்டு.
தெலுங்கு தேசம் கட்சியை அசைக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில், அந்த மாயையை உடைத்து ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சிக்கு ராஜசேகர ரெட்டி புத்துணர்ச்சி கொடுத்தார். அதனால் தான் சோனியா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இவரை "கடப்பா புலி" என்று அடிக்கடி வர்ணிப்பதுண்டு.
60 வயதாகும் ராஜசேகர ரெட்டி ஆந்திராவில் செய்து வந்த சாதனைகள் உண்மையிலேயே பிரமிக்க வைத்தன. இதனால் தான் ஆந்திரா முதல்-மந்திரிகளில் 5 ஆண்டுகால ஆட்சியில் முழுமையாக இருந்த முதல் நபர் என்ற சாதனையை இவரால் படைக்க முடிந்தது.
இந்தியாவில் உள்ள மாநில முதல்-மந்திரிகளில் மிக, மிக சிறப்பான ஆட்சியை கொடுப்பதில் நம்பர்-ஒன் இடத்தில் ராஜசேகர ரெட்டி இருப்பதாக 2006-ம் ஆண்டு நடத்தப்பட்ட 2 கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இதனால் காங்கிரசாரிடம் மட்டுமின்றி மற்ற கட்சி அரசியல் தலைவர்களிடமும் ராஜசேகர ரெட்டி மதிப்பும், மரியாதையும் பெற்று இருந்தார்.
நக்சலைட்டுக்களின் தொந்தரவுகளை மீறி, ஆந்திர மாநிலத்தின் அசராத வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த சிறப்பு இவருக்கு உண்டு. மிக குறுகிய காலத்தில் ஆந்திராவை நம்பர்-ஒன் மாநிலமாக மாற்றப் போவதாக அவர் மார்தட்டி சொல்லிக் கொண்டிருந்தார். இதற்காகவே ஆந்திர மக்கள் தொகையில் 75 சதவீதம் இருக்கும் விவசாயிகளை முன்னேற்ற அடுத்தடுத்து திட்டங்களை அறிவித்தப்படி இருந்தார்.
யார் கண்பட்டதோ தெரியவில்லை. ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாழ்க்கை இப்படி, சோகமாக முடியும் என்று யாருமே நினைக்கவில்லை. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவில் 1949-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி ராஜசேகர ரெட்டி பிறந்தார். இவரது முழுப் பெயர் எடுகுரி சந்திந்தி ராஜசேகர ரெட்டி.
செல்வந்த குடும்பத்தில் பிறந்த இவர் கர்நாடகாவில் உள்ள குல்பர்கா எம்.ஆர்.மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார். படிப்பு முடிந்ததும் சிறிது காலம் மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார்.
1973-ம் ஆண்டு இவர் தன் தந்தை ஒய்.எஸ்.ராஜா ரெட்டி நினைவாக புலி வேந்துலா நகரில் பெரிய மருத்துவமனை கட்டினார். அதோடு ஒரு பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி கட்டினார். பிறகு அந்த கல்வி நிறுவனங்களை லயோலா கல்லூரி நிறுவனத்துக்கு கொடுத்து விட்டார்.
ராஜசேகர ரெட்டியின் மூதாதையர்கள் அனைவரும் பொதுச்சேவையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தனர். அந்த சேவையாற்றும் குணம் ராஜசேகர ரெட்டியிடமும் காணப்பட்டது. படிக்கும் காலத்திலேயே ஏழை-எளியவர்களுக்கு உதவிகள் செய்து வந்த ராஜசேகர ரெட்டி 1978-ம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபடஆரம்பித்தார்.
கடப்பா பாராளுமன்றத் தொகுதியில் இருந்து 4 தடவை எம்.பி.ஆக தேர்வானார். பிறகு மாநில அரசியலுக்கு திரும்பிய அவர் தொடர்ச்சியாக 4 தடவை புலிவேந்துலா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானார்.
8 தேர்தலை எதிர்கொண்ட அவர் ஒரு தடவை கூட தோல்வி அடைந்தது இல்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் "தோல்விக்கு தோல்வி கொடுத்தவர் எங்கள் ஒய்.எஸ்.ஆர்." என்று புகழ்வதுண்டு.
1980 முதல் 1983 வரை இவர் மாநில அரசில் பல்வேறு மந்திரி பதவிகளை வகித்தார். ஊரக மேம்பாடு, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் ராஜேசேகர ரெட்டி கொண்டு வந்த சீர்திருத்தங்கள் ஏராளம். அரசியல் மூலம் மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற அவரது லட்சியம் தான் அவரை மேலும், மேலும் உயர்த்தியது.
1983-ம் ஆண்டு அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். 1985 வரை தலைவராக இருந்த அவர் மீண்டும் 1998 முதல் 2000 வரை 2-வது தடவையாக தலைவர் பதவி வகித்தார். 1999-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ராஜசேகர ரெட்டி அமர்ந்தார்.
2004-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ராஜசேகர ரெட்டி, அந்த காலக்கட்டத்தில் செய்த நூதனமான போராட்டங்கள் தான் காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டுவதாக மாறியது.
2000-ம் ஆண்டில் ஆந்தி ராவில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து ராஜசேகர ரெட்டியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் 14 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். ஆந்திர மாநில அரசியலில் இது பிரளயத்தை ஏற்படுத்தியது.
2003-ம் ஆண்டு ராஜசேகர ரெட்டி ஆந்திரா மாநிலம் முழுவதும் 1400 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். கிராமம், கிராமமாக சென்றார். ஏழை, எளிய மக்களை சந்தித்துப்பேசினார். இது ஆந்திராவில் அடித்தள மட்டத்தில் இருந்த மக்களை, காங்கிரஸ் பக்கம் திருப்பியது. காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சிப் பெற்றது.
இதன் காரணமாக 2004-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஜசேகர ரெட்டி 14-5-2004ல் முதல்- மந்திரியாக பதவி ஏற்றார்.
2003 பாத யாத்திரையின் போது ஏழை, எளிய விவ சாயிகள் படும் கஷ்டங்களை, எதிர் கொள்ளும் பிரச்சினை களை ராஜசேகர ரெட்டி நேரில் பார்த்திருந்தார். ஏழை விவசாயிகளுக்கு என் னென்ன தேவைப்படும் என்பது அந்த பாத யாத்தி ரையின் போது அவர் மன தில் ஆழமாக பதிந்து போய் இருந்தது.
முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றதும் ஏழை விவசாயிகளின் மன ஏக் கத்தை போக்குவது என்று உறுதி எடுத்துக் கொண் டார். தனது முதல் பட்ஜெட் டிலேயே எந்த துறைக்கும் இல்லாதபடி வேளாண் துறைக்கு அதிக பணம் ஒதுக் கீடு செய்தார்.
ஏழை விவசாயிகள் பயன் பெற, இலவச மின்சாரம் கொடுத்தார்.
விவசாயத்தில் நவீன உத்திகளை பயன்படுத்த வழி வகுத்தார். அதே சமயத்தில் ஆந்திர மாநில விவசாய உள் கட்டமைப்பையும் வலுப் டுத்தினார். கிராம விவசாயிகள் வாழ் வில் வளம் பெருக வேண்டு மானால் நீர்ப் பாசனம் மிக, மிக முக்கியமானது என்பதை யாத யாத்திரை காலத்தில் அறிந்திருந்த ராஜசேகர ரெட்டி ஆந்திர மாநில நீர்ப்பாசனத் திட்டங்களில் மாபெரும் புரட்சி செய்தார். முதல்-மந்திரியாக பதவி ஏற்ற முதல் 2 ஆண்டுகளில் மட்டும் நீர்ப்பாசனத் திட் டங்களுக்கு 1600 கோடி ரூபாயை செலவிட்டார்.
அதோடு Òஜலயக்ஞம்Ó என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஆந்திராவில் தரிசாக கிடந்த நிலங்கள் எல்லாம் மாற்றப்பட்டன. இந்த புரட் சியை ராஜசேகர ரெட்டி 2 வருடத்தில் ஓசையின்றி செய்து முடித்தார். ஒரே சமயத்தில் 70 நீர்ப் பாசன திட்டங்களை அமல் படுத்தி எல்லா கட்சிக்காரர் களையும் பிரமிக்க வைத் தார். பெரிய ஆறுகளில் ஓடும் தண்ணீரை, சிறு சிறு கால்வாய் வெட்டி பாசனத் துக்கு கொண்டு வந்தார்.
பல புதிய அணைக்கட்டுகளைக் கட்டினார். மிக குறுகிய காலத்தில் 32 பெரிய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினார். இவற்றுக்கு ஆன மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? 65 ஆயிரம் கோடி ரூபாய்.
இவை அனைத்தையும் ராஜசேகர ரெட்டி, மிக, மிக திட்டமிட்டு நேர்த்தியாக செய்து முடித்தார்.
இந்த விவசாயப் புரட்சி காரணமாக ஆந்திரா வில் இரண்டாண்டுகளில் விளை நிலங்களின் அளவு இரட்டிப்பாக உயர்ந்தது. இதனால் ஆந்தி ராவின் ஒட்டு மொத்த விவ சாய உற்பத்தி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. ஏழை விவசாயி களின் வாழ்வில் வசந்தம் வீசியது.
நீர்ப்பாசனத் திட்டங் களை நிறைவேற்றிய போதே மக்களின் குடிநீர் திட்டங் களையும் சேர்த்து அமல் படுத்தினார். இதனால் 1 கோடி ஏழைகளுக்கு குடிநீர் வசதி கிடைத்தது.
இதற்கிடையே ஏழை விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த இயலாமல் இருப்பது அவரது கவனத்துக்கு வந் தது. உடனடியாக ஏழை விவசாயிகளின் 1192 கோடி மின் கட்டண நிலுவைத் தொகைகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக Òஇந்திரம்மா திட்டம்Ó என் றொரு திட்டத்தை அறிமுகம் செய்தார். விவசாயிகள் கடன்களை அடிக்கடி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முதியோருக்கு பென்சன் கொடுக்கும் திட்டம் கொண்டு வந்தார். விதவைகள் மற்றும் ஊன முற்றோர் மறுவாழ்வுக்கு முன் னுரிமை கொடுத்தார்.
ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டி கொடுத்தார். ரேசனில் ஏழைகளுக்கு ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு வழங்கினார். ராஜீவ் காந்தி பெயரில் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வந்தார். அவரது 5 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏழைகள் பெற்ற பயன் ஏராளம்... ஏராளம்... ஏழை விவசாயிகள் வாழ்வில் அவர் மறுமலர்ச்சி ஏற்படுத்தி இருந்தார்.
ஏழைகள் மீது அவர் காட் டிய பரிவு உண்மையான தாக இருந்தது. அதனால் தான் கடந்த மே மாதம் பாராளு மன்றத்துக்கும், சட்ட சபைக்கும் ஒரே சம யத்தில் தேர்தல் நடந்த போது ஆந்திரா மாநில மக் கள் மீண்டும் ராஜசேகர ரெட்டியை முழு மனதுடன் ஆதரித்தனர்.
சந்திரபாபு நாயுடு ஒரு பக்கம் கலக்கினார். அவருக்கு இணையாக சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியும் கலக்கியது.
அவர்கள் இருவரும் ஓட்டுக்களை அள்ளி விடுவார்கள் என்று சிலர் ஆரூடம் கூறினார்கள். ஆனால் தெலுங்கு தேசத்தையும், பிரஜா ராஜ்ஜியம் கட்சியையும் ஆந்திர மக்கள் ஓட ஓட விரட்டி விட்டனர். ராஜசேகர ரெட்டி செய்த மக்கள் சேவை முன்பு அந்த 2 கட்சிகளும் எடுபடாமலே போய் விட்டன.
அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 42 எம்.பி. தொகுதிகளில் 33 இடங்கள் கிடைத்தன. 294 சட்டசபை தொகுதி களில் 156 இடங்களைப் பிடித்து ராஜசேகர ரெட்டி சாதனை படைத்தார். மீண்டும் 2-வது தடவையாக கடந்த மே மாதம் 20-ந் தேதி ஆந்திர முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றார்.
ஆந்திர மாநில அரசியல் வரலாற்றில் என்.டி.ராமராவ் மட்டுமே தொடர்ச்சியாக 2 தடவை முதல்-மந்திரி பதவி ஏற்று சாதனை படைத்திருந்தார். காங்கிரஸ் தலைவர்களில் இருந்த சாதனையை நிகழ்த்தியது ராஜசேகர ரெட்டி மட்டுமே.
அடுத்து வரும் 5 ஆண்டு களுக்குள் ஆந்திராவில் மேலும் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய அவர் நினைத்திருந்தார். இதற்காக அவர் பல தடவை தன் ஆசையை வெளியிட்டார்.
ஆந்திரா மக்களும் பூரிப் போடு அவற்றை எதிர் பார்த் திருந்தனர். ஆனால் அதற்குள் எமன் அவசரப் பட்டு விட்டான். ராஜசேகர ரெட்டிக்கு ஏற்பட்ட எதிர்பாராத முடி வால் அவர் மனைவி விஜய லட்சுமி, மகன் ஜெகன் மோகன் ரெட்டி, மகள் சர் மிளா நிலை குலைந்து போய் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியே சோகத்தில் மூழ்கி உள்ளது
சோனியா கண்ணீர் விட் டார். ஆந்திரா மக்கள் அழுது புலம்பியபடி உள்ளனர். அவர்கள் மனதில் ராஜ சேகர ரெட்டி ஆழமாக இடம் பிடித்துள்ளார். அந்த இடத்தை இன்னொருவர் வந்து நிரப்புவது கேள்விக்குறி தான்.
எண்ணங்களின் பிரதிபலிப்பு
Wednesday, September 2, 2009
Wednesday, August 26, 2009
கண்கள், கைகளை கட்டி தமிழர்களை, இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற கொடூர காட்சி
விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது தமிழர்களின் கண்கள் மற்றும் கைகளை கட்டி இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற கொடூர காட்சிகள்
விடுதலைப்புலிகளின் வசம் இருந்த வன்னி பகுதியை பிடிக்க இலங்கை ராணுவம் கடும்தாக்குதல் நடத்தியது. அப்போது அங்குவாழும் தமிழர்களை பிடித்து கடும் சித்ரவதை செய்து கொன்றனர்.
இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து வந்ததங்கள் அரசையும், ராணுவத்தையும் களங்கப்படுத்தும் விதமாக பொய்செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதாக தெரிவித்தது.
ஆனால் ஊடகங்கள் வெளியிட்ட தகவல் உண்மை என்பது தற்போது தெரியவந்துள்ளது இங்கிலாந்தை சேர்ந்த சேனல்- 4 என்ற டி.வி. சமீபத்தில் ஒரு வீடியோ காட்சியை ஒளிப்பரப்பியது.
வன்னிபோரின் போது தமிழர்களின் கைகளையும், கண்களையும் கட்டிவைத்து இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்லும் பட்டவர்த்தமான கொடூரகாட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தன.
இக்காட்சிகள் கடந்த ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்டது. அப்போது வெளிநாட்டு செய்தியாளர்கள் போர் நடைபெறும் பகுதிகளுக்கு செல்ல இலங்கை அரசு தடைவிதித்து இருந்தது.
இந்த தாக்குதலை சேனல்- 4 டி.வி. நிறுவ அதிகாரி ஜொனதன் மில்லர் தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களா? இல்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை தன்னுடன் சேர்ந்து பார்த்த நடுநிலை வகிக்கும் சிங்கள ஊடகத்தினர் இது உண்மையானதுதான் என தன்னிடம் கூறியதாகவும் மில்லர் கூறினார்.
இதுகுறித்து, இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்மக்களுக்கு எதிரான கோரச்செயல்கள் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடவில்லை.
மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே ராணுவம் ஈடுபட்டது என்றும் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் வசம் இருந்த வன்னி பகுதியை பிடிக்க இலங்கை ராணுவம் கடும்தாக்குதல் நடத்தியது. அப்போது அங்குவாழும் தமிழர்களை பிடித்து கடும் சித்ரவதை செய்து கொன்றனர்.
இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து வந்ததங்கள் அரசையும், ராணுவத்தையும் களங்கப்படுத்தும் விதமாக பொய்செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதாக தெரிவித்தது.
ஆனால் ஊடகங்கள் வெளியிட்ட தகவல் உண்மை என்பது தற்போது தெரியவந்துள்ளது இங்கிலாந்தை சேர்ந்த சேனல்- 4 என்ற டி.வி. சமீபத்தில் ஒரு வீடியோ காட்சியை ஒளிப்பரப்பியது.
வன்னிபோரின் போது தமிழர்களின் கைகளையும், கண்களையும் கட்டிவைத்து இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்லும் பட்டவர்த்தமான கொடூரகாட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தன.
இக்காட்சிகள் கடந்த ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்டது. அப்போது வெளிநாட்டு செய்தியாளர்கள் போர் நடைபெறும் பகுதிகளுக்கு செல்ல இலங்கை அரசு தடைவிதித்து இருந்தது.
இந்த தாக்குதலை சேனல்- 4 டி.வி. நிறுவ அதிகாரி ஜொனதன் மில்லர் தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களா? இல்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை தன்னுடன் சேர்ந்து பார்த்த நடுநிலை வகிக்கும் சிங்கள ஊடகத்தினர் இது உண்மையானதுதான் என தன்னிடம் கூறியதாகவும் மில்லர் கூறினார்.
இதுகுறித்து, இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்மக்களுக்கு எதிரான கோரச்செயல்கள் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடவில்லை.
மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே ராணுவம் ஈடுபட்டது என்றும் தெரிவித்துள்ளது.
Labels:
அரசியல்
Friday, July 3, 2009
தி.மு.க. வின் ஜனநாயக விரோத போக்கு
திருச்சியில் கடந்த 21-ம் தேதி தி.மு.க., முப்பெரும் விழா நடந்தது.தங்கபாலு பேசும்போது
ஆட்சியில் பங்கு தருவதற்கு கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டால் பொதுக்குழு, செயற்குழு கூடிமுடிவு எடுக்கப்படும்
என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
அவர் என்னவோ செய்யக்கூடாத தப்பு பண்ணின மாதிரியும் கேட்கக்கூடாததைக் கேட்ட மாதிரியும் கலைஞர் கருணநிதி
கூட்டணி உடன்பாட்டின் போது, 'ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்றும்
அப்படியே பங்கு கொடுப்பதாக இருந்தாலும்கூடபாண்டிச்சேரியையும் சேர்த்துக்கொள்ளலாம்'என்கிறார்.
என்னவோ அவர் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைச்சிருக்கற மாதிரியும் ஏதோ காங்கிரஸ் ஒப்புக்கு ஒத்துப்போவதுபோலும் ஆகிவிட்டது.
இதுவரை நடந்த தேர்தல்களில், எல்லா நேரமும் எல்லாக்கட்சியும் முழு மெஜாரிட்டியுடன்தான் ஆட்சி அமைத்தது. இதுவரை தமிழ் நாட்டின்
வரலாற்றிலே கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. அதனால் காங்கிரஸார் கூட்டணி உடன்பாட்டின்போது எந்த ஒரு
நிபந்தனையும் வைக்காமல் தேர்தலில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு போட்டியிட்டது. இதனால் கூட்டணி உடன்பாடு செய்ய வேண்டிய
அவசியம் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை.ஆனால், மக்களின் தீர்ப்பு மகேசனின் தீர்ப்பாக இருக்கும்போது இனிமேல் அந்த உடன்படிக்கையை
போடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது தி.மு.க. மக்கள், தேர்தலின்போது அவ்வளவாக தி.மு.க. வை நம்பாமல்
அதன் முக்கியக் கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ்,பா.ம.க. மற்றும் இடதுசாரிகளை நம்பித்தான் வாக்களித்தார்கள்.
அதனால் தி.மு.க. முழுமெஜாரிட்டியான மேஜிக் எண் 124 ஐ தொட்டிருந்தால், யாரும் ஆட்சியில் பங்கு கொள்ளவும் மற்ற திட்டங்களுக்கு
முட்டுக்கட்டை போடவும் மாட்டார்கள்.
ஆனால் நடந்தது என்ன? தி.மு.க 95 ம், காங்கிரஸ் 35 ம், பா.ம.க 18 ம் மற்றும் இடதுசாரிகள் -15 ம் பெற்று வெற்றி பெற்றன.
ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பா.ம.க மற்றும் இடதுசாரிகளைத் தவிர்த்து காங்கிரஸ் ஆதரவு இருந்தாலே போதுமானது .
இதனால் பா.ம.க., எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவு தெரிவித்தது, அதேபோல், இடதுசாரிகளும் . ஆனால் காங்கிரஸின் நிலைமை அப்படி
இல்லை. இவர்களின் தயவால் ஆட்சி அமைக்கும்போது, ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை. ஏனென்றால் மக்கள் காங்கிரஸை அதன் கொள்கையின்
அடிப்படையிலே தேர்ந்தெடுத்தார்கள் .அதனால் அவர்களுக்கு காங்கிரஸார் சார்பில் அவர்களின் கொள்கையின் அடிப்படையில் மக்களுக்குச் சில நல்ல
திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த நினைக்கிறார்கள் .அப்படி நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
ஆனால் மக்களின் தீர்ப்புக்கு மாறாக நாங்கள் ஆட்சியில் பங்கு தரமாட்டோம் நாங்கள்தான் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்போம் என்று
சொல்லுவது, ஜனநாயகத்திற்கு எதிரானது முரணானது விரோதமானது. எந்த அடிப்படையில் அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் ஆட்சி சுகத்திலா,
அதிகார சுகத்திலா என்று தெரியவில்லை.
நேற்று லயோலோ கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேகூட மக்களின் எண்ணங்கள் எதிரொலித்திருக்கிறது என்றால் இதை
தி.மு.க. மதித்து காங்கிரஸாருக்கு ஆட்சியில் உரிய பங்கினை தந்து எதிர்காலத்திற்கு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
காங்கிரஸார் மக்களுக்குத்தான் தியாகத்தைச் செய்யவேண்டுமே ஒழிய தி.மு.க. வுக்கு எந்தத் தியாகத்தையும் செய்யத் தேவையில்லை.
அது அவர்களின் உரிமை கடமையும்கூட, இவ்வாறு நடந்தால் எப்படி காங்கிரஸாருக்கு மக்கள் எதிர்காலத்தில் ஓட்டளிப்பார்கள் என்று தெரியவில்லை.
மக்கள் காங்கிரஸை, காங்கிரஸாரை எப்படி நம்புவார்கள் என்பதும் புரியவில்லை.
தமிழ் நாட்டிலுள்ள காங்கிரஸார் தங்களின் நிலைமைகளை அகில இந்திய காங்கிரஸின் தலைமைக்கு விளக்கமாக எடுத்துக்கூறி, தங்களுக்குக் கிடைக்க
வேண்டிய நியாயமான ஆட்சியின் பங்கையும் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமைகளையும் செய்யவேண்டும்,
அப்படிச் செய்தால்தான தமிழ்நாட்டில் காங்கிரஸார் தங்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்கும்
எதிர்காலத்தில் அடிபணிய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்சியில் பங்கு தருவதற்கு கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டால் பொதுக்குழு, செயற்குழு கூடிமுடிவு எடுக்கப்படும்
என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
அவர் என்னவோ செய்யக்கூடாத தப்பு பண்ணின மாதிரியும் கேட்கக்கூடாததைக் கேட்ட மாதிரியும் கலைஞர் கருணநிதி
கூட்டணி உடன்பாட்டின் போது, 'ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்றும்
அப்படியே பங்கு கொடுப்பதாக இருந்தாலும்கூடபாண்டிச்சேரியையும் சேர்த்துக்கொள்ளலாம்'என்கிறார்.
என்னவோ அவர் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைச்சிருக்கற மாதிரியும் ஏதோ காங்கிரஸ் ஒப்புக்கு ஒத்துப்போவதுபோலும் ஆகிவிட்டது.
இதுவரை நடந்த தேர்தல்களில், எல்லா நேரமும் எல்லாக்கட்சியும் முழு மெஜாரிட்டியுடன்தான் ஆட்சி அமைத்தது. இதுவரை தமிழ் நாட்டின்
வரலாற்றிலே கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. அதனால் காங்கிரஸார் கூட்டணி உடன்பாட்டின்போது எந்த ஒரு
நிபந்தனையும் வைக்காமல் தேர்தலில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு போட்டியிட்டது. இதனால் கூட்டணி உடன்பாடு செய்ய வேண்டிய
அவசியம் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை.ஆனால், மக்களின் தீர்ப்பு மகேசனின் தீர்ப்பாக இருக்கும்போது இனிமேல் அந்த உடன்படிக்கையை
போடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது தி.மு.க. மக்கள், தேர்தலின்போது அவ்வளவாக தி.மு.க. வை நம்பாமல்
அதன் முக்கியக் கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ்,பா.ம.க. மற்றும் இடதுசாரிகளை நம்பித்தான் வாக்களித்தார்கள்.
அதனால் தி.மு.க. முழுமெஜாரிட்டியான மேஜிக் எண் 124 ஐ தொட்டிருந்தால், யாரும் ஆட்சியில் பங்கு கொள்ளவும் மற்ற திட்டங்களுக்கு
முட்டுக்கட்டை போடவும் மாட்டார்கள்.
ஆனால் நடந்தது என்ன? தி.மு.க 95 ம், காங்கிரஸ் 35 ம், பா.ம.க 18 ம் மற்றும் இடதுசாரிகள் -15 ம் பெற்று வெற்றி பெற்றன.
ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பா.ம.க மற்றும் இடதுசாரிகளைத் தவிர்த்து காங்கிரஸ் ஆதரவு இருந்தாலே போதுமானது .
இதனால் பா.ம.க., எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவு தெரிவித்தது, அதேபோல், இடதுசாரிகளும் . ஆனால் காங்கிரஸின் நிலைமை அப்படி
இல்லை. இவர்களின் தயவால் ஆட்சி அமைக்கும்போது, ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை. ஏனென்றால் மக்கள் காங்கிரஸை அதன் கொள்கையின்
அடிப்படையிலே தேர்ந்தெடுத்தார்கள் .அதனால் அவர்களுக்கு காங்கிரஸார் சார்பில் அவர்களின் கொள்கையின் அடிப்படையில் மக்களுக்குச் சில நல்ல
திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த நினைக்கிறார்கள் .அப்படி நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
ஆனால் மக்களின் தீர்ப்புக்கு மாறாக நாங்கள் ஆட்சியில் பங்கு தரமாட்டோம் நாங்கள்தான் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்போம் என்று
சொல்லுவது, ஜனநாயகத்திற்கு எதிரானது முரணானது விரோதமானது. எந்த அடிப்படையில் அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் ஆட்சி சுகத்திலா,
அதிகார சுகத்திலா என்று தெரியவில்லை.
நேற்று லயோலோ கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேகூட மக்களின் எண்ணங்கள் எதிரொலித்திருக்கிறது என்றால் இதை
தி.மு.க. மதித்து காங்கிரஸாருக்கு ஆட்சியில் உரிய பங்கினை தந்து எதிர்காலத்திற்கு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
காங்கிரஸார் மக்களுக்குத்தான் தியாகத்தைச் செய்யவேண்டுமே ஒழிய தி.மு.க. வுக்கு எந்தத் தியாகத்தையும் செய்யத் தேவையில்லை.
அது அவர்களின் உரிமை கடமையும்கூட, இவ்வாறு நடந்தால் எப்படி காங்கிரஸாருக்கு மக்கள் எதிர்காலத்தில் ஓட்டளிப்பார்கள் என்று தெரியவில்லை.
மக்கள் காங்கிரஸை, காங்கிரஸாரை எப்படி நம்புவார்கள் என்பதும் புரியவில்லை.
தமிழ் நாட்டிலுள்ள காங்கிரஸார் தங்களின் நிலைமைகளை அகில இந்திய காங்கிரஸின் தலைமைக்கு விளக்கமாக எடுத்துக்கூறி, தங்களுக்குக் கிடைக்க
வேண்டிய நியாயமான ஆட்சியின் பங்கையும் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமைகளையும் செய்யவேண்டும்,
அப்படிச் செய்தால்தான தமிழ்நாட்டில் காங்கிரஸார் தங்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்கும்
எதிர்காலத்தில் அடிபணிய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
Labels:
அரசியல்
ஏழைகள், நடுத்தர மக்களைக் கவர மம்தா பாணியில் பிரணாப் அசத்தல்* கிலோ ரூ.3 விலையில் மாதம் தோறும் ரேஷன் கார்டுகளுக்கு 25 கிலோ அரிசி
ஏழைகள், நடுத்தர மக்களைக் கவரும் வகையில், வரிச் சலுகைகளுடன் கூடிய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சமர்ப்பித்தார். கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது; தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், பட்ஜெட்டில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் உதிரி சலுகைகள் மீது விதிக்கப்பட்டு வந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு கிலோ மூன்று ரூபாய் விலையில், மாதம் தோறும் 25 கிலோ அரிசி வழங்கப்படும். தங்கம், வெள்ளி நாணயங்கள், செட்-டாப் பாக்ஸ்கள் விலை உயர்கிறது; எல்.சி.டி., "டிவி', மொபைல் போன், உயிர் காக்கும் மருந்துகளின் விலைகள் குறைகின்றன. தேசிய அளவில் ஆன்-லைன் வேலைவாய்ப்பு மையமும் துவக்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப், நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அனைவரும் எதிர்பார்த்தது போலவே, பல சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. மம்தா ரயில்வே பட்ஜெட்டைப் போல, மக்களை பாதிக்காத புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு 1.50 லட்சத்திலிருந்து 1.60 லட்சமாக 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு இது 15 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு 1,000 ரூபாய் அளவுக்கு வருமான வரி குறையும்; மூத்த குடிமக்களுக்கு 1,500 ரூபாய் குறையும்.மேலும், ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் உதிரி சலுகைகள் (பிரிஞ்ச் பெனிபிட்) மீது விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்பட்டதால், நிறுவனங்களிடமிருந்து மேலும் சலுகைகள் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
சுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி வீதங்களில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், குறிப்பிட்ட சில வரிகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் மீது தற்போது 10 கிராமிற்கு 100 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது; இனி 200 ரூபாய் வசூலிக்கப்படும். ஒரு கிலோ தங்கத்திற்கு 500 ரூபாய் என்ற அளவில் விதிக்கப்படும் சுங்க வரி இனி, 1,000 ரூபாயாக இருக்கும்.இதனால், தங்கம், வெள்ளி நாணயங்கள், தங்கக் கட்டிகள் விலை உயரும். செட்-டாப் பாக்ஸ்கள் மீது 5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் உயரும்; ஜவுளிப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது.
உயிர் காக்கும் மருந்துகள் மீதான சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எல்.சி.டி., "டிவி',கள் மீதான சுங்க வரியும் 5 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது. அதனால், எல்.சி.டி., "டிவி', மற்றும் மொபைல் போன்கள் விலை குறையும். மேலும், உயிர் காக்கும் மருந்துகள், வணிகச் சின்னம் பொறிக்கப்பட்ட நகைகள், விளையாட்டுப் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள், சாப்ட்வேர் பொருட்கள் போன்றவற்றின் விலை குறையும்.வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு, கிலோ மூன்று ரூபாய் விலையில் மாதந்தோறும் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இனி தினச்சம்பளம் 100 ரூபாய் வழங்கப்படும். மேலும், தேசிய அளவில், "ஆன்-லைன்' வேலைவாய்ப்பு மையமும் துவக்கப்படும். அத்துடன் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்காக 71 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் ஆண்டிற்கு 1 சதவீதம் சொத்து வரி செலுத்த வேண்டும். இந்த அளவு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும்.மொத்தத்தில் ஏழைகள், நடுத்தர மக்களைக் கவரும் வகையில் கூடிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள அமைச்சர் பிரணாப், கிராமப்புற பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுவதின் மூலம் தேவை அதிகரித்து, அதனால் பொரு ளாதாரம் வளரும் என்ற அடிப்படையை மையமாகக் கொண்ட பட்ஜெட்டாக இது கருதப்படுகிறது.மொத்த நிதிப் பற்றாக்குறை அளவு கடந்த போதும், வளர்ச்சி தேவை என்ற முறையில் முதல் தடவையாக 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவினம் கொண்ட பட்ஜெட்டை படைத்திருக்கிறார். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்த சில மணி நேரத்தில் பங்குச் சந்தை, 869 புள்ளிகளை இழந்து நேற்றைய வர்த்தகம் 14,043 என்று முடிவடைந்தது. பிரதமர் மன்மோகன் திட்டவட்டமாக மொத்த வளர்ச்சியை அதிகரிக்கும் பட்ஜெட் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மொத்த செலவு முதன் முறையாக 10 லட்சம் கோடி ரூபாய் : பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் :
* வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், மூத்த குடிமக்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* தனி நபர் வருமான வரி மீதான 10 சதவீத கூடுதல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
*உதிரிச் சலுகைகள் ( பிரிஞ்ச் பெனிபிட் ) மீதான வரி ரத்து செய்யப் பட்டுள்ளது.
*கம்பெனிகள் வரியில் மாற்றம் இல்லை.
*ராணுவத்திற்கான ஒதுக்கீடு 34 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாயாகியுள்ளது.
*பொருளாதார மந்தநிலை காரணமாக நிதி ஊக்குவிப்பிற்காக ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் 2008 -09ம் ஆண்டில் செலவிடப்பட்டுள்ளது.
*நெடுஞ்சாலைகளுக்கான ஒதுக்கீடு 23 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
*வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர, 3,973 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்திற்கான ஒதுக்கீடு 87 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 12 ஆயிரத்து 887 கோடி ரூபாயாகியுள்ளது.
*மழைநீர் வடிகால் திட்டங்களுக்கான நிதி உதவி, 300 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
*பண்ணை கடன்களுக்கான ஒதுக்கீடு இரண்டு லட்சத்து 87 ஆயிரம் கோடியில் இருந்து மூன்று லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
விவசாயிகளுக்கு சலுகை : *குறிப்பிட்ட காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டிச் சலுகை அளிக்கப்படும்.
*நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக கூடுதலாக, 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*ஏற்றுமதி கடன் உத்தரவாத திட்டம் 2010 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
*பொருட்கள் பரிமாற்ற வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
*குறைந்தபட்ச பதிலீட்டு வரி, 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*பெட்ரோலிய துறைக்கு அளிக்கப்பட்ட வரி விடுமுறைக் காலம் இயற்கை எரிவாயு துறைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்சி நன்கொடை : *அரசியல் ரீதியாக வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100 சதவீத வரிச் சலுகை உண்டு.
*உரங்களுக்கான மானியம் சத்துக்களின் அடிப்படையில் இருக்குமே அன்றி, விலை அடிப்படையில் இருக்காது.
*வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களாகவே செயல்படும்.
*வங்கிகள் இல்லாத பகுதிகளில் வங்கிக் கிளைகளைத் திறப்பதற்காக ஒரே நேர மானியமாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும்.
சம்பளம் இனி ரூ.100 :*தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கு, நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் சம்பளம் 100 ரூபாயாக உயர்த்தப்படும்.
*தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான ஒதுக்கீடு, 39 ஆயிரத்து 100 கோடி ரூபாய்.
*தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 2008-09ம் நிதியாண்டில் 4.74 கோடி பேர் பலன் அடைந்தனர்.
*தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான பணிகள் துவங்கி விட்டன.
*பாரத் நிர்மாண் திட்டத்திற்கான ஒதுக்கீடு 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
*தேசிய வீட்டுவசதி திட்டத்தின் கீழ், ஊரக வீட்டு வசதி நிதியாக, 2,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*பெண்கள் எழுத்தறிவு இயக்கத்தில் சிறுபான்மையினர், எஸ்.சி., / எஸ்.டி.,யினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
*கிராமப்புற பெண்களில் 50 சதவீதம் பேர், மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.
*தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பெறும் கல்வி கடன்களுக்கு முழு வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும். இதன்மூலம் ஐந்து லட்சம் மாணவர்கள் பலன் அடைவர்.
*தேசிய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படும்.
*அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்படும்.
*புதிய ஓய்வூதிய சலுகையின் கீழ் ஜவான்கள் மற்றும் கமிஷன் அதிகாரிகள் என, 12 லட்சம் பேர் ஜூலை மாதம் முதல் பலன் அடைவர்.
*துணை ராணுவப் படையினருக்காக ஒரு லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும்.
*நாட்டு மக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம் 12 முதல் 18 மாதங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*தற்போதுள்ள ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் புதிய ஐ.ஐ.டி.,க்களுக்காக 2,113 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
*காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக, 3,472 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுங்க வரி மாற்றம் இல்லை
*சுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி வீதங்களில் மாற்றம் இல்லை.
*"இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்திற்கான ஒதுக்கீடு 63 சதவீதம் கூடியுள்ளது.
*வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எளிமையாக்கப்படும்.
*காலநிலை மாற்றம் தொடர்பான திட்டத்தின் கீழ், எட்டு இயக்கங்கள் துவக்கப்படும்.
*ஊரக சுகாதார இயக்கத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட, 257 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
*இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
*மேற்கு வங்கத்தில் புயலால் பாதித்த பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய 1,000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
*மொத்தச் செலவு முதல் முறையாக 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஒதுக்கீட்டை விட 34 சதவீதம் அதிகம்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 2009-10ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். இதில், ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது, கடந்தாண்டை விட 34 சதவீதம் அதிகம். கடந்த பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு 36 ஆயிரத்து 103 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, மத்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை சமாளிக்க பாதுகாப்புப் படையை நவீனப்படுத்துவதோடு, பலப்படுத்துவதும் அவசியம் என்பதை உணர்ந்து, அதற்காக அதி நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை பெற முடிவு செய்யப்பட்டது.தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட கமாண்டோ படைப் பிரிவை மேம்படுத்துவதற்காக அதி நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கான பட்டியல் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கடலோர பாதுகாப்புப் படைக்கு அதி விரைவு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கும் ட்டமிடப்பட்டுள்ளது.இவற்றை வாங்குவதற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு தேவை என்பதை கருத்தில் கொண்டே, கடந்தாண்டை விட இந்தாண்டு 34 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சீனாவை விட குறைவு: தற்போதைய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, நாட்டின் மொத்த வளர்ச்சியில் வெறும் 2 சதவீதம் மட்டுமே. பாகிஸ்தான் தனது ராணுவத்துக்காக மொத்த வளர்ச்சியில் 5 சதவீதத்தை ஒதுக்கீடு செய்துள் ளது. சீனா, 7 சதவீதத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 7,000 கோடி ரூபாயை செலவிடாமல் ராணுவம் திருப்பிச் செலுத்தியுள்ளது.பட்ஜெட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "அமைச்சரவை செயலர் சந்திரசேகர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, "ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம்' என்ற அடிப்படையில் வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு 2,100 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்' என்றார்.
தமிழகத்தில் மிகப்பெரிய ஜவுளி பூங்கா :ஜவுளித் தொழிலில் சிறந்து விளங்கும் தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் ஹேண்ட்லூம் மெகா கிளஸ்டர் எனப்படும் �த்தறி பூங்காக்கள் அமைக்கப்படும். இதே போல, ராஜஸ்தானில் விசைத்தறி பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். கார்பெட் தொழிலுக்கான பூங்காக்கள், ஸ்ரீநகரிலும் உ.பி.,யில் உள்ள மிர்சாபூரிலும் அமைக்கப்படும்.
புதுச்சேரி விமான நிலையம் மேம்படுத்தப்படும் : விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு வழங்கப்படும் 190 கோடி ரூபாய் நிதியில், விமான நிலையங்கள் மேம்பாட்டுக்கு என, 99.15 கோடி வரை செலவிடப்படும். இந்த நிதி, இந்திய விமானநிலைய அதிகார ஆணையத்திற்கு அளிக்கப்படுகிறது. இதில் 20 கோடி ரூபாய் வரை வடகிழக்கு மாநில விமான நிலைய மேம்பாட்டுக்கு செலவிடப்படும். மீதமுள்ள 79.15 கோடி ரூபாயின் மூலம் ஜம்மு, ஸ்ரீநகர், அக்டி மற்றும் புதுச்சேரி விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்
.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றம் : வெற்றிகரமான திட்டமான கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டு இத்திட்டத்தையும் விவசாயத்துறை, வனத்துறை, நீர்வளம், சாலை திட்டங்கள் உள்ளிட்ட
அரசின் பிற திட்டங்களுடன் இணைத்து செயலாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 115 மாவட்டங்கள் மட்டும் இதற்கு எடுத்துக் கொள்ளப்படும். பிற திட்டங்களுடன் இணைந்து கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றிய வரையறைகளை மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்யும்.இந்த நிதியாண்டில் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு 39 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்படும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 144 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத் நிர்மாண் திட்ட சாலைகள் நீளம் அதிகரிப்பு : பாரத் நிர்மாண் திட்டத்தின்படி, இந்த ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 185 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 132 கிலோ மீட்டர் தூரமாக அதிகரிக்கப்பட்டு இதற்கென, 48 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வேலைவாய்ப்பு மையங்கள் நவீன மயம் : வேலைவாய்ப்பு மையங்கள் நவீனப்படுத்தப்படும். தனியார் ஒத்துழைப்புடன் இதற்கென புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அந்த திட்டத்தின் மூலம் ஒரே மாதிரியான சாப்ட்வேர் மூலம் தேசிய அளவில் இணையதளம் ஒன்று துவங்கப்படும்.
வேலை தேடுவோர் ஆன்-லைன் மூலமாக நாட்டின் எந்தப்பகுதியிலும் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம். நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு மையங்கள் அனைத்தையும் இதன்மூலம் தொடர்பு கொள்ளவும் முடியும்.எங்காவது ஒரு இடத்தில் வேலை தேடி பதிந்தாலும், அதற்கேற்ப நிறுவனம் அந்த நபரை அழைக்கும் வகையில், இளைஞர்கள் தங்கள் திறமைக்கேற்ப வேலைவாய்ப்பை பெற வசதியாக அமையும்.
சுகாதார திட்டத்துக்கு கூடுதல் நிதி : நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டிற்கும் கீழேயுள்ள அனைத்து குடும்பமும் பயன்பெறும் வகையில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 12 ஆயிரத்து 70 கோடி ரூபாய் வரை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இந்த பட்ஜெட்டின் மூலம் 2,057 கோடி ரூபாய் வரை வழங்கப்படவுள்ளது.
வங்கி வசதிகள் ஏற்படுத்த திட்டம் :வங்கி வசதிகள் இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கெல்லாம் புதிய வங்கிக் கிளைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென வங்கிகளை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த புதிய இடங்கள் கண்டறியப்படும்.
அந்த இடங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வங்கிக் கிளைகள் துவங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் 100 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்படும்.
மத்திய பட்ஜெட் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இடையில் வளர்ச்சி குறைந்த நிலை மாறி மீண்டும் 8 சதவீத மொத்த வளர்ச்சி எட்டும் வகையில் அமைந்திருக்கிறது' என்று, பிரதமர் மன்மோகன் பாராட்டினார்.
மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் குறித்து பிரதமர் மன்மோகன் கூறியதாவது: பொருளாதார ஊக்குவிப்புக்கு தேவையான விஷயங்களைக் கண்டறிந்து, அதற்கான உத்திகளை வகுத்திருக்கிறார் நிதியமைச்சர். அவர் பணி பாராட்டிற்குரியது. உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை இருந்த போதும், இங்கே வளர்ச்சி காண உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டிலேயே மொத்தவளர்ச்சி 7 சதவீதம் எட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதைத் தொடர்ந்து வளர்ச்சி 9 சதவீதமாக உயரும் என்றார்.
சிதம்பரம் கருத்து: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிதியமைச்சராகவும் தற்போது உள்துறை அமைச்சராகவும் உள்ள சிதம்பரம் கூறியதாவது:
இந்த 2009-2010 பட்ஜெட் மிகவும் திறமையுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஊக்குவிப்பு நிதிகள் அளித்த நிலையில் இந்த பட்ஜெட் திட்டங்களும் சேர்ந்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குறிப்பாக விவசாயிகள் பயன்படுத்தும் உர உப்புகளுக்கு அதன் நுண்ணுயிர்ச்சத்து அடிப்படையில் விலை, நேரடியாக விவசாயிக்கு மானியச் சலுகை சென்றடைய திட்டம் ஆகியவை பட்ஜெட்டில் புதுமைகள். அதே போல ஏழ்மை நிலையில் உள்ள மாணவர் வாங்கிய கல்விக்கடன் மீதான வட்டி தள்ளுபடி ஆகியவை வரவேற்கத்தக்கது என்றார்.
பங்குச் சந்தை சரிவு : நிதித்துறை செயலர் அசோக் சாவ்லா பட்ஜெட் குறித்து தெரிவித்த கருத்துக்கள் :
பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு, அவசரப்பட்ட பதட்டமான செயலின் அறிகுறி. இது தற்காலிகமானதே, விரைவில் சீராகும். கிராமப்புற மக்கள் மேம்பாட்டை பட்ஜெட் மையமாகக் கொண்டிருக்கிறது என்ற தொலைநோக்கு இல்லாமல் குறுகிய பார்வையால் எழுந்த விளைவு. அதே போல பொதுத்துறை பங்குகள் விற்பனை குறித்து அரசு படிப்படியாகச் செயல்படும். அதன் மூலம் எவ்வளவு வருவாய் வரும் என்று பட்ஜெட்டில் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அரசு தெளிவாக இருக்கிறது. காலம் வரும் போது பொதுத்துறை பங்கு விற்கப்படும் என்றார்.
நடப்பு நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப், நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அனைவரும் எதிர்பார்த்தது போலவே, பல சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. மம்தா ரயில்வே பட்ஜெட்டைப் போல, மக்களை பாதிக்காத புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு 1.50 லட்சத்திலிருந்து 1.60 லட்சமாக 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு இது 15 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு 1,000 ரூபாய் அளவுக்கு வருமான வரி குறையும்; மூத்த குடிமக்களுக்கு 1,500 ரூபாய் குறையும்.மேலும், ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் உதிரி சலுகைகள் (பிரிஞ்ச் பெனிபிட்) மீது விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்பட்டதால், நிறுவனங்களிடமிருந்து மேலும் சலுகைகள் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
சுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி வீதங்களில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், குறிப்பிட்ட சில வரிகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் மீது தற்போது 10 கிராமிற்கு 100 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது; இனி 200 ரூபாய் வசூலிக்கப்படும். ஒரு கிலோ தங்கத்திற்கு 500 ரூபாய் என்ற அளவில் விதிக்கப்படும் சுங்க வரி இனி, 1,000 ரூபாயாக இருக்கும்.இதனால், தங்கம், வெள்ளி நாணயங்கள், தங்கக் கட்டிகள் விலை உயரும். செட்-டாப் பாக்ஸ்கள் மீது 5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் உயரும்; ஜவுளிப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது.
உயிர் காக்கும் மருந்துகள் மீதான சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எல்.சி.டி., "டிவி',கள் மீதான சுங்க வரியும் 5 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது. அதனால், எல்.சி.டி., "டிவி', மற்றும் மொபைல் போன்கள் விலை குறையும். மேலும், உயிர் காக்கும் மருந்துகள், வணிகச் சின்னம் பொறிக்கப்பட்ட நகைகள், விளையாட்டுப் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள், சாப்ட்வேர் பொருட்கள் போன்றவற்றின் விலை குறையும்.வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு, கிலோ மூன்று ரூபாய் விலையில் மாதந்தோறும் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இனி தினச்சம்பளம் 100 ரூபாய் வழங்கப்படும். மேலும், தேசிய அளவில், "ஆன்-லைன்' வேலைவாய்ப்பு மையமும் துவக்கப்படும். அத்துடன் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்காக 71 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் ஆண்டிற்கு 1 சதவீதம் சொத்து வரி செலுத்த வேண்டும். இந்த அளவு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும்.மொத்தத்தில் ஏழைகள், நடுத்தர மக்களைக் கவரும் வகையில் கூடிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள அமைச்சர் பிரணாப், கிராமப்புற பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுவதின் மூலம் தேவை அதிகரித்து, அதனால் பொரு ளாதாரம் வளரும் என்ற அடிப்படையை மையமாகக் கொண்ட பட்ஜெட்டாக இது கருதப்படுகிறது.மொத்த நிதிப் பற்றாக்குறை அளவு கடந்த போதும், வளர்ச்சி தேவை என்ற முறையில் முதல் தடவையாக 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவினம் கொண்ட பட்ஜெட்டை படைத்திருக்கிறார். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்த சில மணி நேரத்தில் பங்குச் சந்தை, 869 புள்ளிகளை இழந்து நேற்றைய வர்த்தகம் 14,043 என்று முடிவடைந்தது. பிரதமர் மன்மோகன் திட்டவட்டமாக மொத்த வளர்ச்சியை அதிகரிக்கும் பட்ஜெட் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மொத்த செலவு முதன் முறையாக 10 லட்சம் கோடி ரூபாய் : பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் :
* வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், மூத்த குடிமக்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* தனி நபர் வருமான வரி மீதான 10 சதவீத கூடுதல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
*உதிரிச் சலுகைகள் ( பிரிஞ்ச் பெனிபிட் ) மீதான வரி ரத்து செய்யப் பட்டுள்ளது.
*கம்பெனிகள் வரியில் மாற்றம் இல்லை.
*ராணுவத்திற்கான ஒதுக்கீடு 34 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாயாகியுள்ளது.
*பொருளாதார மந்தநிலை காரணமாக நிதி ஊக்குவிப்பிற்காக ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் 2008 -09ம் ஆண்டில் செலவிடப்பட்டுள்ளது.
*நெடுஞ்சாலைகளுக்கான ஒதுக்கீடு 23 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
*வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர, 3,973 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்திற்கான ஒதுக்கீடு 87 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 12 ஆயிரத்து 887 கோடி ரூபாயாகியுள்ளது.
*மழைநீர் வடிகால் திட்டங்களுக்கான நிதி உதவி, 300 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
*பண்ணை கடன்களுக்கான ஒதுக்கீடு இரண்டு லட்சத்து 87 ஆயிரம் கோடியில் இருந்து மூன்று லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
விவசாயிகளுக்கு சலுகை : *குறிப்பிட்ட காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டிச் சலுகை அளிக்கப்படும்.
*நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக கூடுதலாக, 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*ஏற்றுமதி கடன் உத்தரவாத திட்டம் 2010 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
*பொருட்கள் பரிமாற்ற வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
*குறைந்தபட்ச பதிலீட்டு வரி, 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*பெட்ரோலிய துறைக்கு அளிக்கப்பட்ட வரி விடுமுறைக் காலம் இயற்கை எரிவாயு துறைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்சி நன்கொடை : *அரசியல் ரீதியாக வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100 சதவீத வரிச் சலுகை உண்டு.
*உரங்களுக்கான மானியம் சத்துக்களின் அடிப்படையில் இருக்குமே அன்றி, விலை அடிப்படையில் இருக்காது.
*வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களாகவே செயல்படும்.
*வங்கிகள் இல்லாத பகுதிகளில் வங்கிக் கிளைகளைத் திறப்பதற்காக ஒரே நேர மானியமாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும்.
சம்பளம் இனி ரூ.100 :*தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கு, நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் சம்பளம் 100 ரூபாயாக உயர்த்தப்படும்.
*தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான ஒதுக்கீடு, 39 ஆயிரத்து 100 கோடி ரூபாய்.
*தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 2008-09ம் நிதியாண்டில் 4.74 கோடி பேர் பலன் அடைந்தனர்.
*தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான பணிகள் துவங்கி விட்டன.
*பாரத் நிர்மாண் திட்டத்திற்கான ஒதுக்கீடு 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
*தேசிய வீட்டுவசதி திட்டத்தின் கீழ், ஊரக வீட்டு வசதி நிதியாக, 2,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*பெண்கள் எழுத்தறிவு இயக்கத்தில் சிறுபான்மையினர், எஸ்.சி., / எஸ்.டி.,யினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
*கிராமப்புற பெண்களில் 50 சதவீதம் பேர், மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.
*தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பெறும் கல்வி கடன்களுக்கு முழு வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும். இதன்மூலம் ஐந்து லட்சம் மாணவர்கள் பலன் அடைவர்.
*தேசிய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படும்.
*அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்படும்.
*புதிய ஓய்வூதிய சலுகையின் கீழ் ஜவான்கள் மற்றும் கமிஷன் அதிகாரிகள் என, 12 லட்சம் பேர் ஜூலை மாதம் முதல் பலன் அடைவர்.
*துணை ராணுவப் படையினருக்காக ஒரு லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும்.
*நாட்டு மக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம் 12 முதல் 18 மாதங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*தற்போதுள்ள ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் புதிய ஐ.ஐ.டி.,க்களுக்காக 2,113 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
*காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக, 3,472 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுங்க வரி மாற்றம் இல்லை
*சுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி வீதங்களில் மாற்றம் இல்லை.
*"இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்திற்கான ஒதுக்கீடு 63 சதவீதம் கூடியுள்ளது.
*வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எளிமையாக்கப்படும்.
*காலநிலை மாற்றம் தொடர்பான திட்டத்தின் கீழ், எட்டு இயக்கங்கள் துவக்கப்படும்.
*ஊரக சுகாதார இயக்கத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட, 257 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
*இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
*மேற்கு வங்கத்தில் புயலால் பாதித்த பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய 1,000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
*மொத்தச் செலவு முதல் முறையாக 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஒதுக்கீட்டை விட 34 சதவீதம் அதிகம்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 2009-10ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். இதில், ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது, கடந்தாண்டை விட 34 சதவீதம் அதிகம். கடந்த பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு 36 ஆயிரத்து 103 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, மத்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை சமாளிக்க பாதுகாப்புப் படையை நவீனப்படுத்துவதோடு, பலப்படுத்துவதும் அவசியம் என்பதை உணர்ந்து, அதற்காக அதி நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை பெற முடிவு செய்யப்பட்டது.தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட கமாண்டோ படைப் பிரிவை மேம்படுத்துவதற்காக அதி நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கான பட்டியல் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கடலோர பாதுகாப்புப் படைக்கு அதி விரைவு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கும் ட்டமிடப்பட்டுள்ளது.இவற்றை வாங்குவதற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு தேவை என்பதை கருத்தில் கொண்டே, கடந்தாண்டை விட இந்தாண்டு 34 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சீனாவை விட குறைவு: தற்போதைய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, நாட்டின் மொத்த வளர்ச்சியில் வெறும் 2 சதவீதம் மட்டுமே. பாகிஸ்தான் தனது ராணுவத்துக்காக மொத்த வளர்ச்சியில் 5 சதவீதத்தை ஒதுக்கீடு செய்துள் ளது. சீனா, 7 சதவீதத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 7,000 கோடி ரூபாயை செலவிடாமல் ராணுவம் திருப்பிச் செலுத்தியுள்ளது.பட்ஜெட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "அமைச்சரவை செயலர் சந்திரசேகர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, "ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம்' என்ற அடிப்படையில் வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு 2,100 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்' என்றார்.
தமிழகத்தில் மிகப்பெரிய ஜவுளி பூங்கா :ஜவுளித் தொழிலில் சிறந்து விளங்கும் தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் ஹேண்ட்லூம் மெகா கிளஸ்டர் எனப்படும் �த்தறி பூங்காக்கள் அமைக்கப்படும். இதே போல, ராஜஸ்தானில் விசைத்தறி பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். கார்பெட் தொழிலுக்கான பூங்காக்கள், ஸ்ரீநகரிலும் உ.பி.,யில் உள்ள மிர்சாபூரிலும் அமைக்கப்படும்.
புதுச்சேரி விமான நிலையம் மேம்படுத்தப்படும் : விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு வழங்கப்படும் 190 கோடி ரூபாய் நிதியில், விமான நிலையங்கள் மேம்பாட்டுக்கு என, 99.15 கோடி வரை செலவிடப்படும். இந்த நிதி, இந்திய விமானநிலைய அதிகார ஆணையத்திற்கு அளிக்கப்படுகிறது. இதில் 20 கோடி ரூபாய் வரை வடகிழக்கு மாநில விமான நிலைய மேம்பாட்டுக்கு செலவிடப்படும். மீதமுள்ள 79.15 கோடி ரூபாயின் மூலம் ஜம்மு, ஸ்ரீநகர், அக்டி மற்றும் புதுச்சேரி விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்
.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றம் : வெற்றிகரமான திட்டமான கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டு இத்திட்டத்தையும் விவசாயத்துறை, வனத்துறை, நீர்வளம், சாலை திட்டங்கள் உள்ளிட்ட
அரசின் பிற திட்டங்களுடன் இணைத்து செயலாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 115 மாவட்டங்கள் மட்டும் இதற்கு எடுத்துக் கொள்ளப்படும். பிற திட்டங்களுடன் இணைந்து கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றிய வரையறைகளை மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்யும்.இந்த நிதியாண்டில் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு 39 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்படும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 144 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத் நிர்மாண் திட்ட சாலைகள் நீளம் அதிகரிப்பு : பாரத் நிர்மாண் திட்டத்தின்படி, இந்த ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 185 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 132 கிலோ மீட்டர் தூரமாக அதிகரிக்கப்பட்டு இதற்கென, 48 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வேலைவாய்ப்பு மையங்கள் நவீன மயம் : வேலைவாய்ப்பு மையங்கள் நவீனப்படுத்தப்படும். தனியார் ஒத்துழைப்புடன் இதற்கென புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அந்த திட்டத்தின் மூலம் ஒரே மாதிரியான சாப்ட்வேர் மூலம் தேசிய அளவில் இணையதளம் ஒன்று துவங்கப்படும்.
வேலை தேடுவோர் ஆன்-லைன் மூலமாக நாட்டின் எந்தப்பகுதியிலும் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம். நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு மையங்கள் அனைத்தையும் இதன்மூலம் தொடர்பு கொள்ளவும் முடியும்.எங்காவது ஒரு இடத்தில் வேலை தேடி பதிந்தாலும், அதற்கேற்ப நிறுவனம் அந்த நபரை அழைக்கும் வகையில், இளைஞர்கள் தங்கள் திறமைக்கேற்ப வேலைவாய்ப்பை பெற வசதியாக அமையும்.
சுகாதார திட்டத்துக்கு கூடுதல் நிதி : நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டிற்கும் கீழேயுள்ள அனைத்து குடும்பமும் பயன்பெறும் வகையில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 12 ஆயிரத்து 70 கோடி ரூபாய் வரை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இந்த பட்ஜெட்டின் மூலம் 2,057 கோடி ரூபாய் வரை வழங்கப்படவுள்ளது.
வங்கி வசதிகள் ஏற்படுத்த திட்டம் :வங்கி வசதிகள் இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கெல்லாம் புதிய வங்கிக் கிளைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென வங்கிகளை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த புதிய இடங்கள் கண்டறியப்படும்.
அந்த இடங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வங்கிக் கிளைகள் துவங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் 100 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்படும்.
மத்திய பட்ஜெட் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இடையில் வளர்ச்சி குறைந்த நிலை மாறி மீண்டும் 8 சதவீத மொத்த வளர்ச்சி எட்டும் வகையில் அமைந்திருக்கிறது' என்று, பிரதமர் மன்மோகன் பாராட்டினார்.
மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் குறித்து பிரதமர் மன்மோகன் கூறியதாவது: பொருளாதார ஊக்குவிப்புக்கு தேவையான விஷயங்களைக் கண்டறிந்து, அதற்கான உத்திகளை வகுத்திருக்கிறார் நிதியமைச்சர். அவர் பணி பாராட்டிற்குரியது. உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை இருந்த போதும், இங்கே வளர்ச்சி காண உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டிலேயே மொத்தவளர்ச்சி 7 சதவீதம் எட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதைத் தொடர்ந்து வளர்ச்சி 9 சதவீதமாக உயரும் என்றார்.
சிதம்பரம் கருத்து: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிதியமைச்சராகவும் தற்போது உள்துறை அமைச்சராகவும் உள்ள சிதம்பரம் கூறியதாவது:
இந்த 2009-2010 பட்ஜெட் மிகவும் திறமையுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஊக்குவிப்பு நிதிகள் அளித்த நிலையில் இந்த பட்ஜெட் திட்டங்களும் சேர்ந்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குறிப்பாக விவசாயிகள் பயன்படுத்தும் உர உப்புகளுக்கு அதன் நுண்ணுயிர்ச்சத்து அடிப்படையில் விலை, நேரடியாக விவசாயிக்கு மானியச் சலுகை சென்றடைய திட்டம் ஆகியவை பட்ஜெட்டில் புதுமைகள். அதே போல ஏழ்மை நிலையில் உள்ள மாணவர் வாங்கிய கல்விக்கடன் மீதான வட்டி தள்ளுபடி ஆகியவை வரவேற்கத்தக்கது என்றார்.
பங்குச் சந்தை சரிவு : நிதித்துறை செயலர் அசோக் சாவ்லா பட்ஜெட் குறித்து தெரிவித்த கருத்துக்கள் :
பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு, அவசரப்பட்ட பதட்டமான செயலின் அறிகுறி. இது தற்காலிகமானதே, விரைவில் சீராகும். கிராமப்புற மக்கள் மேம்பாட்டை பட்ஜெட் மையமாகக் கொண்டிருக்கிறது என்ற தொலைநோக்கு இல்லாமல் குறுகிய பார்வையால் எழுந்த விளைவு. அதே போல பொதுத்துறை பங்குகள் விற்பனை குறித்து அரசு படிப்படியாகச் செயல்படும். அதன் மூலம் எவ்வளவு வருவாய் வரும் என்று பட்ஜெட்டில் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அரசு தெளிவாக இருக்கிறது. காலம் வரும் போது பொதுத்துறை பங்கு விற்கப்படும் என்றார்.
Labels:
அரசியல்
Thursday, June 25, 2009
அணு மற்றும் அணுகுண்டு
பள்ளியில் படிக்கும் போது இயற்பியல் பாடத்தை நிறைய மக்கப் செய்து தான் படித்தேன். அதில் ஒன்றும் புரியாது ஏனென்றால் அதில் சொல்லப்படும் விஷயங்கள்
கற்பனை மட்டுமே செய்து பார்த்துக் கொள்ளவேண்டும் மற்றபடி செய்முறை விளக்கங்கள் எல்லாம் ஒரு சில பாடத்தில் மட்டுமே செய்து காட்டுவார்கள்.
எனக்கு தெரிந்தவரை சூரிய ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் எவ்வாறு ஸ்டார்ச் தயாரிக்கின்றன. சூரிய ஒளி படாத இடத்தில் இலைகளால் ஸ்டார்ச் தயாரிக்க
முடிவதில்லை என்ற சோனையை மட்டுமே எங்கள் பள்ளியில் என்னுடை வகுப்பில் செய்து காட்டினார்கள். மற்றபடி வேறெந்த சோதனையும் அவவளவாக செய்து காட்டவில்லை.
ஏனென்றால் மற்ற சோதனைகளெல்லாம் செய்தால் செலவு ஆகும் என்பதால் செய்யவில்லை போலும்.
மின்சாரம் என்றால் என்ன? அதிலும் முக்கியமாக இந்த எலக்டரான்கள்,புரோட்டான்கள் மற்றும் நியூட்ரானகள் சுத்தமாக ம்ம்கூம் இன்னும் தலையை சுற்றுகிறது. அது எப்படி இருக்கும் கேட்டால் எல்லாத் துகள்களும் இந்த மூன்று அணுக்களால் ஆனது என்பார்கள். என்னடா இது சும்மா நம்பளை குழப்பறாங்களே என்று மேலும் கேட்டால் எல்லாத் தனிமங்களும், எல்லாப் பொருள்களும் இந்த மூன்றால் ஆனது என்கிறார்கள்.உள்வட்டப் பாதை வெளி வட்டப்பாதை. உள்வட்டபாதையில் நியுட்ரானகளும் புரோட்டாங்களும் இருக்கும் அதன் வெளிவட்டப் பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றிக் கொண்டிருக்கும்.நிறை எண் மாறுபடும் போது அதன் பண்புகளும் மாறுபடுகிறது.தனிமங்களும் மாறுப்டுகிறது இது எல்லாமே எனக்கு குழப்பம் தான்.
யாரவது இயற்பியல் வல்லுனர்கள் இருந்தால் எளிமையாக என்னைப் போல் உள்ள எல்லா Tube Light களுக்கும் புரிகிற மாதிரி விளக்கினால் புரிந்து கொள்வோம்.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது அணு என்ற ஒரு பாடம் இருந்தது. அதில் ரூதர்போடு சோதனையும் இருந்தது. ஆனாலும் அடிப்படையாகவே எனக்கு எதுவும் புரியாததனால்
பள்ளியிலும் சரி வேறெங்கும் சரி நான் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. எப்பொழும் போல் மக்கப் தான் அத்தனையும் மனப்பாடம் செய்து ஒரு 175 மதிப்பெண்கள் பெற்றேன்.
சரி அந்த குழப்பம் இன்று வரை தொடர்கிறது. அது எப்பொழுது தெளிவாகுமோ என்று தெரியவில்லை.
சரி விஷயத்துக்கு வருவோம்.

அணுவை எப்படி கண்டுபிடித்தார்கள். அந்த அணுவில் இருந்து எப்படி அணுகுண்டு தயாரித்தார்கள்?
அணுகுண்டு அணுகுண்டு என்று சொல்கிறார்களே அது என்னடா அணுகுண்டு அதெப்படி இருக்கும்?
அது எப்படி தயாரிக்கப்படுகிறது அதை யார் யார் எல்லாம் சேர்ந்து கண்டு பிடித்தார்கள்?
அதை எதற்காக கண்டு பிடித்தார்கள். ஆக்கபூர்வ செயல்களுக்குப் பயன்படுத்தலாமா இல்லை அழிவுக்கு மட்டும்தான் அதை பயன்படுத்த முடியுமா? போன்ற இன்ன பிறவிஷயங்களை
என்.ராமதுரை அணு புத்தகத்தின் மூலமாக அழகாக விவரிக்கிறார்.
இந்த புத்தக்த்தை படித்த பிற்குதான் ஓரளவுக்கு பிடிப்பட்டது அணு சக்தி ஒப்பந்தத்தை பற்றி, பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகள் கைகளுக்கு போகக்கூடாது என்று
உலகம் ஏன் கவலைப்படுகிறது என்பதைப் பற்றி மற்றும் வடகொரியா அவ்வப்பொழுது நடத்தும் அணுகுண்டு சோதனையைப் பற்றி.
இந்தியா எந்த நிலையில் உள்ளது நம்மால் அணு ஆயுதம் தயாரிக்க முடியுமா, முடியாதா, இல்லை வல்லரசுகளிடம் மட்டும் தான் அந்த அணு ஆயுத பலம் இருக்குமா என்பதை நம்மால் ஓரளவு யூகிக்கமுடியும். கூடிய விரைவில் அந்த இடத்தை நம்மால் அடைய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது.
முடிந்தால் எல்லோரும் அந்த புத்தக்தை வாங்கிப் படியுங்கள் ஓரளவுக்கு புரியும் அணு அரசியலைப் பற்றி.
அணு புத்தகத்தை வாங்க இங்கே சொடக்கவும்
கற்பனை மட்டுமே செய்து பார்த்துக் கொள்ளவேண்டும் மற்றபடி செய்முறை விளக்கங்கள் எல்லாம் ஒரு சில பாடத்தில் மட்டுமே செய்து காட்டுவார்கள்.
எனக்கு தெரிந்தவரை சூரிய ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் எவ்வாறு ஸ்டார்ச் தயாரிக்கின்றன. சூரிய ஒளி படாத இடத்தில் இலைகளால் ஸ்டார்ச் தயாரிக்க
முடிவதில்லை என்ற சோனையை மட்டுமே எங்கள் பள்ளியில் என்னுடை வகுப்பில் செய்து காட்டினார்கள். மற்றபடி வேறெந்த சோதனையும் அவவளவாக செய்து காட்டவில்லை.
ஏனென்றால் மற்ற சோதனைகளெல்லாம் செய்தால் செலவு ஆகும் என்பதால் செய்யவில்லை போலும்.
மின்சாரம் என்றால் என்ன? அதிலும் முக்கியமாக இந்த எலக்டரான்கள்,புரோட்டான்கள் மற்றும் நியூட்ரானகள் சுத்தமாக ம்ம்கூம் இன்னும் தலையை சுற்றுகிறது. அது எப்படி இருக்கும் கேட்டால் எல்லாத் துகள்களும் இந்த மூன்று அணுக்களால் ஆனது என்பார்கள். என்னடா இது சும்மா நம்பளை குழப்பறாங்களே என்று மேலும் கேட்டால் எல்லாத் தனிமங்களும், எல்லாப் பொருள்களும் இந்த மூன்றால் ஆனது என்கிறார்கள்.உள்வட்டப் பாதை வெளி வட்டப்பாதை. உள்வட்டபாதையில் நியுட்ரானகளும் புரோட்டாங்களும் இருக்கும் அதன் வெளிவட்டப் பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றிக் கொண்டிருக்கும்.நிறை எண் மாறுபடும் போது அதன் பண்புகளும் மாறுபடுகிறது.தனிமங்களும் மாறுப்டுகிறது இது எல்லாமே எனக்கு குழப்பம் தான்.
யாரவது இயற்பியல் வல்லுனர்கள் இருந்தால் எளிமையாக என்னைப் போல் உள்ள எல்லா Tube Light களுக்கும் புரிகிற மாதிரி விளக்கினால் புரிந்து கொள்வோம்.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது அணு என்ற ஒரு பாடம் இருந்தது. அதில் ரூதர்போடு சோதனையும் இருந்தது. ஆனாலும் அடிப்படையாகவே எனக்கு எதுவும் புரியாததனால்
பள்ளியிலும் சரி வேறெங்கும் சரி நான் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. எப்பொழும் போல் மக்கப் தான் அத்தனையும் மனப்பாடம் செய்து ஒரு 175 மதிப்பெண்கள் பெற்றேன்.
சரி அந்த குழப்பம் இன்று வரை தொடர்கிறது. அது எப்பொழுது தெளிவாகுமோ என்று தெரியவில்லை.
சரி விஷயத்துக்கு வருவோம்.

அணுவை எப்படி கண்டுபிடித்தார்கள். அந்த அணுவில் இருந்து எப்படி அணுகுண்டு தயாரித்தார்கள்?
அணுகுண்டு அணுகுண்டு என்று சொல்கிறார்களே அது என்னடா அணுகுண்டு அதெப்படி இருக்கும்?
அது எப்படி தயாரிக்கப்படுகிறது அதை யார் யார் எல்லாம் சேர்ந்து கண்டு பிடித்தார்கள்?
அதை எதற்காக கண்டு பிடித்தார்கள். ஆக்கபூர்வ செயல்களுக்குப் பயன்படுத்தலாமா இல்லை அழிவுக்கு மட்டும்தான் அதை பயன்படுத்த முடியுமா? போன்ற இன்ன பிறவிஷயங்களை
என்.ராமதுரை அணு புத்தகத்தின் மூலமாக அழகாக விவரிக்கிறார்.
இந்த புத்தக்த்தை படித்த பிற்குதான் ஓரளவுக்கு பிடிப்பட்டது அணு சக்தி ஒப்பந்தத்தை பற்றி, பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகள் கைகளுக்கு போகக்கூடாது என்று
உலகம் ஏன் கவலைப்படுகிறது என்பதைப் பற்றி மற்றும் வடகொரியா அவ்வப்பொழுது நடத்தும் அணுகுண்டு சோதனையைப் பற்றி.
இந்தியா எந்த நிலையில் உள்ளது நம்மால் அணு ஆயுதம் தயாரிக்க முடியுமா, முடியாதா, இல்லை வல்லரசுகளிடம் மட்டும் தான் அந்த அணு ஆயுத பலம் இருக்குமா என்பதை நம்மால் ஓரளவு யூகிக்கமுடியும். கூடிய விரைவில் அந்த இடத்தை நம்மால் அடைய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது.
முடிந்தால் எல்லோரும் அந்த புத்தக்தை வாங்கிப் படியுங்கள் ஓரளவுக்கு புரியும் அணு அரசியலைப் பற்றி.
அணு புத்தகத்தை வாங்க இங்கே சொடக்கவும்
Labels:
அறிவியல்
Subscribe to:
Posts (Atom)