அணுசக்தி ஏற்றுமதியாளர்கள் கூட்டம் வியன்னாவில் சிலதினங்களாக நடைப்பெற்றுவருகிறது அதில் நமக்கு குறிப்பிடதக்க வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகது.
இதை 21ம் நூற்றாண்டின் முதல் வெற்றியென்றே சொல்லலாம்.
ஏன் நான் அவ்வாறு சொல்கிறேன் என்றால் உலக ஆராய்ச்சியாளர்கள் 21ம் நூற்றாண்டை சீனா மற்றும் இந்தியாவின் நூற்றாண்டாகத்தான் இருக்குமென்று சொல்கிறார்கள்.20ஆம் நுற்றாண்டு அமெரிக்காவுடையதோ அதைபோலத்தான் 21ம் நூற்றாண்டு இந்தியாவுடையது அதில் எந்த மாற்றமுமில்லை.
நேற்று நடந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற்று இறுதியில் வாக்கெடுப்பு நடைபெற்று வெற்றிபெற்றது.
இதில் குறிப்பிடதகுந்த அம்மசம் என்னவென்றால்
1.அணு ஆயுதபரவல் தடை ஒப்பந்தம்
மற்றும்
2.அணுகுண்டு சோதனை
போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமலேயே Nuclear Supplier Group யின் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
அணுமூலப்பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகள் இந்த இரண்டு ஒப்பந்தகளில் கண்டிப்பாக கையெழித்திடவேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே மற்ற நாடுகளிலிருந்து மூலப்பொருட்களயும் தொழில் நுட்பத்தையும் பெறமுடியும்.
ஆனால் நாம் மட்டும் இந்த விதியிலிருந்த்து விலக்கு அளிக்கப்பட்டிருகிறோம் என்றால் உலக நாடுகளின் கவனம் முழுதும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.
ஏன் இந்தியாவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதென்றால் இந்தியா ஒரு போதும் சுயக்கட்டுப்பாட்டை மீறாத,மற்ற நாடுகளின் அரசியல் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காத மற்றும் முக்கியமாக அகிம்சவாத நாடு என்று கருதி,கட்டுப்பாட்டை விதிக்க தேவையில்லை அவர்களாகவே கட்டுப்பட்டு செயல்படுவார்கள் என்று நினைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதே போல் ஒரு ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு தருமா என்றால் அது கனவில் கூட நடைபெறாத ஒன்று.
இந்த ஒப்பந்தத்தினால் நாட்டின் மிகமுக்கியமான மற்றும் வளரும் பொருளாதாரத்திற்கு அடிப்படையான மின்சார தேவையின் அளவு ஈடுசெய்யப்படும்.
எவ்வளவு விரைவில் தோரியத்திலிருந்தது மின்சாரம் எடுக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாக செய்யவேண்டும், ஏனென்றால் நீண்டகாலத்திற்கு மற்றவர்களையே நம்பிருக்கமுடியாதில்லையா!
வெற்றிகள் தொடர நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக.
எண்ணங்களின் பிரதிபலிப்பு
Sunday, September 7, 2008
Wednesday, August 27, 2008
ப்ரஜா ராஜ்யம் - சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம்
அன்னை தெரசா பிறந்தநாளான நேற்று (26)சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம்
ஆந்திர அரசியலில் பெரிதா எதிர்ப்பார்க்கப்பட்ட அரசியல் புயல் திருப்பதியில் மையம் கொண்டு பெருவெள்ளம் எனும் ஆந்திர மக்கள் கலந்துகொண்ட" ப்ரஜா ராஜியத்தின் " (மக்கள் ஆட்சி) துவக்கப்பட்டு இந்திய அரசியல்வாதிகளையும் இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டது.
10 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் தானாக, யாருடைய கட்டாயமும் இல்லாமல் கலந்துகொண்ட ஒரே கட்சி கூட்டம் எதுவென்றால் அது இதுவாகத்தான் இருக்கும்.
ஏன் தேசியக்கட்சி மாநாடு நடத்தினால் கூட இது போல் ஒரு மக்கள் வெள்ளத்தை பார்க்கமுடியாது.
திராவிடக்கட்சிகள் மாநாடு நடத்தினால் கட்டயாமாக ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் குறைந்தது 1000 பேர்களையாவது கூட்டிச்செல்லவேண்டும் என்ற வாய்மொழி உத்தரவுவந்தாலும், பணம் கொடுத்தாலும் 200 லிருந்து 300 பேர்வரைத்தான் பிடித்துகொண்டுபோய் நிறுத்தி மாவட்டதலைவர்களிடத்தில் நான் 1000 பேரை கூட்டிவந்திருக்கிறேன் என்று கூறி நல்லபேர் வாங்கநினைப்பார்கள்.கடைசியில் பார்த்தால் மாநாடு பந்தல் கூட நிறைந்திருக்காது.
வீடியோ கிராஃபரை கூட்டிவந்து 4லிருந்து 5 லட்சத்திற்கும் மேலாக தொண்டர்கள் திரண்டார்கள் என்று கட்டுக்கத்தையை விடுவார்கள் செயற்கையான மாயையயை உருவாக்கிகாட்டுவார்கள்.ஆனால் இது அதைப்போல் அல்லாமல் மக்களின் உணர்வுகளாகத்தான் தோன்றின.
அடுத்த பாராளுமன்றத்தேர்திலிலேயே சில அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்..
நல்ல அதிர்வுகளைத்தந்தால் பயனாக இருக்கும்.
மாற்றம் ஒன்றுதானே மாற்றமேயில்லாதது!
Labels:
அரசியல்
Tuesday, July 22, 2008
நூலிழையில் தப்பியது மத்திய அரசு! ஆதரவு : 275 எதிர்ப்பு: 256
பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுகளும், எதிராக 256 ஓட்டுகளும் விழுந்தன. இதன் மூலம், கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த பரபரப்பான திருப்பங்களுக்கு பின், நூலிழையில் மத்திய அரசு தப்பியது. அரசை கவிழ்த்து, அணுசக்தி ஒப்பந்தத்தை சீர்குலைப்பதோடு, மாயாவதியை பிரதமராக்கலாம் என, இடதுசாரி தலைவர்கள் கண்ட கனவும், மேற்கொண்ட வியூகமும் பெரும் தோல்வியை தழுவியுள்ளது. மீதமுள்ள ஆட்சிக் காலத்தை, இடதுசாரிகளின் நிர்பந்தம் இன்றி, பிரதமர் மன்மோகன் சிங் அரசு முடிக்கும்.
தீவிரமாக செயல்பட்டனர் : கடந்த 2004ம் ஆண்டு முதல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, இடதுசாரிகள் சமீபத்தில் வாபஸ் பெற்றனர். அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதையடுத்து, பார்லிமென்டை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, மன்மோகனை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, "அரசை எப்படியும் காப்பாற்றுவது' என, காங்கிரஸ் தலை மையிலான அணியும், "எப்படியும் வீழ்த்தி விடுவது' என, இடதுசாரி தலைமையிலான அணியினரும் தீவிரமாக செயல்பட்டனர்.
எம்.பி.,க்கள் 25 கோடி மற்றும் 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக புகார்கள் எழுந்தன.இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் லோக்சபா கூடியது. அப்போது, அரசுக்கு நம்பிக்கை கோரும் ஒருவரி தீர்மானத்தை தாக்கல் செய்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். "நாட்டின் நலன் கருதியே அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது' என்றார். இதைத் தொடர்ந்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உட்பட பல கட்சித் தலைவர்கள் பேசினர்.இரண்டாவது நாளாக நேற்று தலைவர்களின் விவாதம் தொடர்ந்தது. விவாதம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ., கட்சியை சேர்ந்த எம்.பி., அசோக் அகர்வால், அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க தனக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் தெரிவித்தார். சபை வரலாற்றில் இல்லாத வகையில், கைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களை வெளியே எடுத்து சபையில் காண்பித்தார்.
இப்பிரச்னையால் மதியத்திற்கு மேல் சபையில் அமளி ஏற்பட்டு, பின் ஒரு வழியாக 6.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, விவாதத்தை முடித்து வைக்க பிரதமர் அழைக்கப் பட்டார். அப்போதும் கூச்சல், குழப்பம் இருந்ததால், பிரதமர் தன் உரையை சில நிமிடங்களில் முடித்து விட்டார்.அவர் தாக்கல் செய்த ஆறு பக்க பதிலுரையில், "என்னை தங்களின் அடிமைகளாக நடத்த இடதுசாரி கட்சியினர் திட்டமிட்டனர். ஒவ்வொரு கட்ட சமரச பேச்சுவார்த்தையின் போது, தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்த விரும்பினர். அது ஏற்றுக் கொள்ள முடியாதது' என்று தெரிவித்திருந்தார்.
பின்னர், பல நாட்களாக நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நம்பிக்கை ஓட்டெடுப்பு துவங்கியது. எதிர்க்கட்சியினர் டிவிஷன் ஓட்டு நடத்த வேண்டும் என, வலியுறுத் தினாலும், எலக்ட்ரானிக் மிஷின் மூலம் முதலில் ஓட்டெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், எலக்ட்ரானிக் மிஷினில், 50க்கும் மேற்பட்ட ஓட்டுகள் பதிவாகவில்லை. மொத்த ஓட்டுகள் 487 என்றும், அரசுக்கு ஆதரவு 253 என்றும், எதிர்ப்பு 232 என்றும், ஓட்டுப் போடாதவர்கள் இரண்டு பேர் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, எம்.பி.,க்களிடம் சீட்டுக்கள் கொடுக்கப்பட்டு டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அரசுக்கு ஆதரவாக 275 எம்.பி.,க்களும், எதிராக 256 எம்.பி.,க்களும் ஓட்டளித்தனர்.
10 எம்.பி.,க்கள் ஓட்டுப் போடவில்லை. சபையில் நேற்று 541 எம்.பி.,க்கள் ஆஜராகியிருந்தனர். இவர்களில் 271 பேர் ஆதரவு அரசுக்கு தேவை. இருந்தாலும், அதை விட கூடுதலாக நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.மொத்தத்தில் எதிரணியின் ஓட்டுகளை விட கூடுதலாக 19 ஓட்டுகள் பெற்று அரசு வெற்றி பெற்றது. நேற்றைய ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம், கடந்த 30 ஆண்டுகளில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், வெற்றி பெற்ற ஏழாவது பிரதமர் என்ற பெருமையை மன்மோகன் பெற்றுள்ளார்.ஓட்டெடுப்பின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே, சபையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
நேற்று நடந்த இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட பா.ஜ., எம்.பி.,க்கள் நான்கு பேருக்கு, பார்லிமென்டின் லாபியில் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது.நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி தலைவர் அமர்சிங், "என் அரசியல் வாழ்வில் இன்று தான் மகிழ்ச்சியான நாள்' என்றார். மத்திய அரசு பெற்ற வெற்றி, "ஊழல் மூலமாகவும், மோசடி வேலைகள் மூலமாகவும் பெற்ற வெற்றி' என, பா.ஜ., கூறியுள்ளது.அரசு வெற்றி பெற்றதை தொழில்துறையும் வரவேற்றுள்ளது.
கட்சி மாறிய எம்.பி.,க்கள் யார்?: பா.ஜ.,வைச் சேர்ந்த நான்கு பேர், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், பிஜு ஜனதா தளம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தலா ஒருவர் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.ஐ.மு., கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டு போட்ட பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி., ஹரிஹர் ஸ்வெயின் அக்கட்சியிலிரு ந்து நீக்கப்பட்டுள்ளார் என, அக்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
தீவிரமாக செயல்பட்டனர் : கடந்த 2004ம் ஆண்டு முதல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, இடதுசாரிகள் சமீபத்தில் வாபஸ் பெற்றனர். அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதையடுத்து, பார்லிமென்டை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, மன்மோகனை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, "அரசை எப்படியும் காப்பாற்றுவது' என, காங்கிரஸ் தலை மையிலான அணியும், "எப்படியும் வீழ்த்தி விடுவது' என, இடதுசாரி தலைமையிலான அணியினரும் தீவிரமாக செயல்பட்டனர்.
எம்.பி.,க்கள் 25 கோடி மற்றும் 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக புகார்கள் எழுந்தன.இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் லோக்சபா கூடியது. அப்போது, அரசுக்கு நம்பிக்கை கோரும் ஒருவரி தீர்மானத்தை தாக்கல் செய்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். "நாட்டின் நலன் கருதியே அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது' என்றார். இதைத் தொடர்ந்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உட்பட பல கட்சித் தலைவர்கள் பேசினர்.இரண்டாவது நாளாக நேற்று தலைவர்களின் விவாதம் தொடர்ந்தது. விவாதம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ., கட்சியை சேர்ந்த எம்.பி., அசோக் அகர்வால், அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க தனக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் தெரிவித்தார். சபை வரலாற்றில் இல்லாத வகையில், கைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களை வெளியே எடுத்து சபையில் காண்பித்தார்.
இப்பிரச்னையால் மதியத்திற்கு மேல் சபையில் அமளி ஏற்பட்டு, பின் ஒரு வழியாக 6.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, விவாதத்தை முடித்து வைக்க பிரதமர் அழைக்கப் பட்டார். அப்போதும் கூச்சல், குழப்பம் இருந்ததால், பிரதமர் தன் உரையை சில நிமிடங்களில் முடித்து விட்டார்.அவர் தாக்கல் செய்த ஆறு பக்க பதிலுரையில், "என்னை தங்களின் அடிமைகளாக நடத்த இடதுசாரி கட்சியினர் திட்டமிட்டனர். ஒவ்வொரு கட்ட சமரச பேச்சுவார்த்தையின் போது, தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்த விரும்பினர். அது ஏற்றுக் கொள்ள முடியாதது' என்று தெரிவித்திருந்தார்.
பின்னர், பல நாட்களாக நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நம்பிக்கை ஓட்டெடுப்பு துவங்கியது. எதிர்க்கட்சியினர் டிவிஷன் ஓட்டு நடத்த வேண்டும் என, வலியுறுத் தினாலும், எலக்ட்ரானிக் மிஷின் மூலம் முதலில் ஓட்டெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், எலக்ட்ரானிக் மிஷினில், 50க்கும் மேற்பட்ட ஓட்டுகள் பதிவாகவில்லை. மொத்த ஓட்டுகள் 487 என்றும், அரசுக்கு ஆதரவு 253 என்றும், எதிர்ப்பு 232 என்றும், ஓட்டுப் போடாதவர்கள் இரண்டு பேர் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, எம்.பி.,க்களிடம் சீட்டுக்கள் கொடுக்கப்பட்டு டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அரசுக்கு ஆதரவாக 275 எம்.பி.,க்களும், எதிராக 256 எம்.பி.,க்களும் ஓட்டளித்தனர்.
10 எம்.பி.,க்கள் ஓட்டுப் போடவில்லை. சபையில் நேற்று 541 எம்.பி.,க்கள் ஆஜராகியிருந்தனர். இவர்களில் 271 பேர் ஆதரவு அரசுக்கு தேவை. இருந்தாலும், அதை விட கூடுதலாக நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.மொத்தத்தில் எதிரணியின் ஓட்டுகளை விட கூடுதலாக 19 ஓட்டுகள் பெற்று அரசு வெற்றி பெற்றது. நேற்றைய ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம், கடந்த 30 ஆண்டுகளில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், வெற்றி பெற்ற ஏழாவது பிரதமர் என்ற பெருமையை மன்மோகன் பெற்றுள்ளார்.ஓட்டெடுப்பின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே, சபையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
நேற்று நடந்த இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட பா.ஜ., எம்.பி.,க்கள் நான்கு பேருக்கு, பார்லிமென்டின் லாபியில் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது.நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி தலைவர் அமர்சிங், "என் அரசியல் வாழ்வில் இன்று தான் மகிழ்ச்சியான நாள்' என்றார். மத்திய அரசு பெற்ற வெற்றி, "ஊழல் மூலமாகவும், மோசடி வேலைகள் மூலமாகவும் பெற்ற வெற்றி' என, பா.ஜ., கூறியுள்ளது.அரசு வெற்றி பெற்றதை தொழில்துறையும் வரவேற்றுள்ளது.
கட்சி மாறிய எம்.பி.,க்கள் யார்?: பா.ஜ.,வைச் சேர்ந்த நான்கு பேர், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், பிஜு ஜனதா தளம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தலா ஒருவர் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.ஐ.மு., கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டு போட்ட பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி., ஹரிஹர் ஸ்வெயின் அக்கட்சியிலிரு ந்து நீக்கப்பட்டுள்ளார் என, அக்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
Labels:
அரசியல்
Monday, July 21, 2008
பா.ஜ.க.-காங்கிரசை மிரட்டும் 3-வது அணி
மத்திய அரசை காப்பாற்றி எப்படியாவது ஆட்சியைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் போரா டிக்கொண்டிருக்கிறது.
எப்படியாவது, ஏதாவது செய்து காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட வேண்டும் என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக் கொண்டு காரியத்தில் குதித்துள்ளது.
காங்கிரஸ், பா.ஜ.க. இருகட்சித்தலைவர்களின் விïகத்திற்கிடையே தேசிய அரசியலில் திடீர் திருப்பமாக 3-வது அணி எனப்படும் மாற்று அணி புதிய சக்தியாக வலுப்பெற்றுள்ளது. இப்படி ஒரு அபார திடீர் வளர்ச்சியை 3-வது அணி பெறும் என்று அரசியல் நிபுணர்களே எதிர் பார்க்கவில்லை.
ஐக்கிய தேசிய முற் போக்கு கூட்டணி எனப் பெயரிடப்பட்ட 3-வது அணி யில் அ.தி.மு.க., சமாஜ் வாடி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் உள்பட 8 கட்சிகள் இருந்தன. முதலில் இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. சமீபத்தில் சமாஜ்வாடி கட்சி `பல்டி' அடித்து காங்கிரஸ் பக்கம் போய் விட்டது.
இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினையில் தங்களை காங்கிரசார் அவ மானப்படுத்தி விட்டதாக கருதிய கம்ïனிஸ்டு தலை வர்கள் மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். சிதறிக்கிடந்த மாநில கட்சிகளை ஒருங் கிணைத்தது அவர்கள்தான். `தலித்' இன மக்களின் தனித் தலைவராக உருவெடுத்து வரும் மாயாவதியை சந்தித்துப் பேசினார்கள்.
அதன் பேரில் 3-வது அணி தலைவர்கள் சந்திர பாபு நாயுடு, சவுதாலா ஆகியோருடன் மாயா வதி பேசினார். மெகா கூட்டணிக்கு திட்டமிடப் பட்டது. இதைத் தொடர்ந்து தேவேகவுடா, சந்திரசேகர் ராவ், அஜீத்சிங் உள்பட பல தலைவர்களுடன் இடது சாரி கட்சித் தலைவர்களும், மாயாவதியும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதற்கு பலன் கிடைத்தது.
காங்கிரஸ், பா.ஜ.க. பக் கம் போகாமல் நாமே சொந்த காலில் நிற்க லாம் என்று மாநில கட்சி களிடம் நம்பிக்கை விதை தூவப்பட்டது. மாயாவதி யுடன் கூட்டணி வைத்துக் கொள்வதன் மூலம் `தலித்' ஓட்டுக்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் பல கட்சிகள் மெகா கூட்டணிக்கு சம் மதித்தன. தற்போது 3-வது அணியில் பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத், இந்திய தேசிய லோக் தளம், ஜார்க்கண்ட் விகாஸ் கட்சி, ராஷ்டீரிய லோக் தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கான, ராஷ் டீரிய சமிதி உள்பட 10க் கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.
இந்த மெகா கூட்டணிக்கு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு உள்ளது. இதன் மூலம் அடுத்தத் தேர்தலில் 3-து அணியை ஒரு மாபெ ரும் சக்தியாக மாற்ற முயற்சி கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று டெல்லியில் 3-வது அணி தலைவர்கள்-இடது சாரி கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.
ஓட்டெடுப்பு நாளை நடந்து முடிந்ததும், நாளை மறுநாள் (புதன்கிழமை) 3-வது அணி தலைவர்கள் மீண்டும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.
3-வது அணியில் தற் போது அதிகாரப்பூர்வமாக தலைவர் என்று யாரும் இல்லை. உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயா வதியை தலைவராக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் மாயாவதி தேசிய அரசியலில் விசுவரூபம் எடுக்கத் தொடங்கி உள் ளார்.
மாயாவதியை அடுத்த பிரதமர் ஆக்குவோம் என்ற கோஷத்தை இடது சாரிகள் முதலில் எழுப்பினார்கள். இதை 3-வது அணியில் உள்ள மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது பா.ஜ.க.-காங்கிரசுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
மாயாவதியுடன் கூட்டணி சேர்ந்தால், தங்கள் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ் ஆகியோர் நினைக்கிறார்கள். உத்தரபிரதேச அரசியலில் எதிரும்-புதிருமாக இருந்த மாயாவதி - அஜீத்சிங் இருவரும் 3-வது அணி மூலம் சேர்ந்து இருப்பதும் முக்கியமானதாக கருதப்படு கிறது.
இவர்கள் கை கோர்த்து இருப்பதால் உத்தரபிரதேச முஸ்லிம்-தலித்-உயர்சாதி ஓட்டுக்கள் பெருவாரியாக 3-வது அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜீத்சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம் கட்சிக்கு வளர்ச்சி கிடைக்கும் என் கிறார்கள்.
3-வது அணி எனும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நாடெங்கும் மாயா வதி கால் பதிக்கத் தொடங்கி இருப்பது காங்கிரசை விட பா.ஜ.க. தலைவர்களுக்கு தான் கலக்கத்தை கொடுத் துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் பட்சத்தில் அத்வானிதான் அடுத்த பிரதமர் என்ற எண்ணம் நாடெங்கும் பரவி இருந்தது. அத்வானிக்கு போட்டியாக களத்தில் யாரும் இல்லை என்ற நிலை இருந்தது.
தற்போது 3-வது அணி வலுவாகி மாயாவதி முன் நிறுத்தப்பட்டுள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்பட லாம் என்று பா.ஜ.க. பயப் படுகிறது. "உண்மையில் பிரதமர் வேட்பாளர் என்ற எங்கள் கோஷத்துக்கு பாதிப்பு வரலாம்'' என்று மூத்த பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறினார்.
மாயாவதியை முன் நிறுத்தி சந்திரபாபு நாயுடு, தேவேகவுடா, அஜீத்சிங், சந்திரசேகரராவ், சவுதாலா, பிருந்தாவன் கோஸ்வாமி போன்றவர்களை துணைக்கு வைத்துக் கொண்டால் இந்தியாவில் புதிய புரட்சியை உண்டாக்கி விட முடியும் என்று கம்ïனிஸ்டு தலைவர்கள் பிரகாஷ் கரத்தும், ஏ.பி.பரதனும் உறுதி யாக நம்புகிறார்கள். மாநில கட்சிகள் ஒத்துழைப்புடன் மாயாவதி சூறாவளி சுற்றுப்பயணத்தில் சுமார் 12 சதவீத தலித் ஓட்டுக்களை 3-வது அணி பக்கம் திருப்பி விட முடியும் என்றும் அவர் கள் கருதுகிறார்கள்.
மாயாவதிக்கு உத்தரபிர தேசம் தவிர மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார் மாநில `தலித்'களிடம் ஓரளவு செல் வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கு மூலம் வட இந்தியாவில் கணிசமான தொகுதிகளில் அவர் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். காங்கிரஸ் தலைவர்களும் இந்த பயத் தில் தான் உள்ளனர்.
தென் இந்தியாவில் தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் ஆகியோருடன் சேருவதன் மூலம் மாயாவதி அலை தெற்கிலும் வீச வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இடது சாரிகள்-மாயாவதி அணி புதிய எழுச்சியை கொடுக்கும் என்று எதிர் பார்க்கிறார்கள்.
இடது சாரிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு வைத்துள்ள அர சியல் குறி மாயாவதிக்கு தனிப்பட்ட வெற்றியை தேடி கொடுக்கும்.
எப்படியாவது, ஏதாவது செய்து காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட வேண்டும் என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக் கொண்டு காரியத்தில் குதித்துள்ளது.
காங்கிரஸ், பா.ஜ.க. இருகட்சித்தலைவர்களின் விïகத்திற்கிடையே தேசிய அரசியலில் திடீர் திருப்பமாக 3-வது அணி எனப்படும் மாற்று அணி புதிய சக்தியாக வலுப்பெற்றுள்ளது. இப்படி ஒரு அபார திடீர் வளர்ச்சியை 3-வது அணி பெறும் என்று அரசியல் நிபுணர்களே எதிர் பார்க்கவில்லை.
ஐக்கிய தேசிய முற் போக்கு கூட்டணி எனப் பெயரிடப்பட்ட 3-வது அணி யில் அ.தி.மு.க., சமாஜ் வாடி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் உள்பட 8 கட்சிகள் இருந்தன. முதலில் இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. சமீபத்தில் சமாஜ்வாடி கட்சி `பல்டி' அடித்து காங்கிரஸ் பக்கம் போய் விட்டது.
இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினையில் தங்களை காங்கிரசார் அவ மானப்படுத்தி விட்டதாக கருதிய கம்ïனிஸ்டு தலை வர்கள் மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். சிதறிக்கிடந்த மாநில கட்சிகளை ஒருங் கிணைத்தது அவர்கள்தான். `தலித்' இன மக்களின் தனித் தலைவராக உருவெடுத்து வரும் மாயாவதியை சந்தித்துப் பேசினார்கள்.
அதன் பேரில் 3-வது அணி தலைவர்கள் சந்திர பாபு நாயுடு, சவுதாலா ஆகியோருடன் மாயா வதி பேசினார். மெகா கூட்டணிக்கு திட்டமிடப் பட்டது. இதைத் தொடர்ந்து தேவேகவுடா, சந்திரசேகர் ராவ், அஜீத்சிங் உள்பட பல தலைவர்களுடன் இடது சாரி கட்சித் தலைவர்களும், மாயாவதியும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதற்கு பலன் கிடைத்தது.
காங்கிரஸ், பா.ஜ.க. பக் கம் போகாமல் நாமே சொந்த காலில் நிற்க லாம் என்று மாநில கட்சி களிடம் நம்பிக்கை விதை தூவப்பட்டது. மாயாவதி யுடன் கூட்டணி வைத்துக் கொள்வதன் மூலம் `தலித்' ஓட்டுக்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் பல கட்சிகள் மெகா கூட்டணிக்கு சம் மதித்தன. தற்போது 3-வது அணியில் பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத், இந்திய தேசிய லோக் தளம், ஜார்க்கண்ட் விகாஸ் கட்சி, ராஷ்டீரிய லோக் தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கான, ராஷ் டீரிய சமிதி உள்பட 10க் கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.
இந்த மெகா கூட்டணிக்கு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு உள்ளது. இதன் மூலம் அடுத்தத் தேர்தலில் 3-து அணியை ஒரு மாபெ ரும் சக்தியாக மாற்ற முயற்சி கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று டெல்லியில் 3-வது அணி தலைவர்கள்-இடது சாரி கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.
ஓட்டெடுப்பு நாளை நடந்து முடிந்ததும், நாளை மறுநாள் (புதன்கிழமை) 3-வது அணி தலைவர்கள் மீண்டும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.
3-வது அணியில் தற் போது அதிகாரப்பூர்வமாக தலைவர் என்று யாரும் இல்லை. உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயா வதியை தலைவராக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் மாயாவதி தேசிய அரசியலில் விசுவரூபம் எடுக்கத் தொடங்கி உள் ளார்.
மாயாவதியை அடுத்த பிரதமர் ஆக்குவோம் என்ற கோஷத்தை இடது சாரிகள் முதலில் எழுப்பினார்கள். இதை 3-வது அணியில் உள்ள மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது பா.ஜ.க.-காங்கிரசுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
மாயாவதியுடன் கூட்டணி சேர்ந்தால், தங்கள் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ் ஆகியோர் நினைக்கிறார்கள். உத்தரபிரதேச அரசியலில் எதிரும்-புதிருமாக இருந்த மாயாவதி - அஜீத்சிங் இருவரும் 3-வது அணி மூலம் சேர்ந்து இருப்பதும் முக்கியமானதாக கருதப்படு கிறது.
இவர்கள் கை கோர்த்து இருப்பதால் உத்தரபிரதேச முஸ்லிம்-தலித்-உயர்சாதி ஓட்டுக்கள் பெருவாரியாக 3-வது அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜீத்சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம் கட்சிக்கு வளர்ச்சி கிடைக்கும் என் கிறார்கள்.
3-வது அணி எனும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நாடெங்கும் மாயா வதி கால் பதிக்கத் தொடங்கி இருப்பது காங்கிரசை விட பா.ஜ.க. தலைவர்களுக்கு தான் கலக்கத்தை கொடுத் துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் பட்சத்தில் அத்வானிதான் அடுத்த பிரதமர் என்ற எண்ணம் நாடெங்கும் பரவி இருந்தது. அத்வானிக்கு போட்டியாக களத்தில் யாரும் இல்லை என்ற நிலை இருந்தது.
தற்போது 3-வது அணி வலுவாகி மாயாவதி முன் நிறுத்தப்பட்டுள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்பட லாம் என்று பா.ஜ.க. பயப் படுகிறது. "உண்மையில் பிரதமர் வேட்பாளர் என்ற எங்கள் கோஷத்துக்கு பாதிப்பு வரலாம்'' என்று மூத்த பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறினார்.
மாயாவதியை முன் நிறுத்தி சந்திரபாபு நாயுடு, தேவேகவுடா, அஜீத்சிங், சந்திரசேகரராவ், சவுதாலா, பிருந்தாவன் கோஸ்வாமி போன்றவர்களை துணைக்கு வைத்துக் கொண்டால் இந்தியாவில் புதிய புரட்சியை உண்டாக்கி விட முடியும் என்று கம்ïனிஸ்டு தலைவர்கள் பிரகாஷ் கரத்தும், ஏ.பி.பரதனும் உறுதி யாக நம்புகிறார்கள். மாநில கட்சிகள் ஒத்துழைப்புடன் மாயாவதி சூறாவளி சுற்றுப்பயணத்தில் சுமார் 12 சதவீத தலித் ஓட்டுக்களை 3-வது அணி பக்கம் திருப்பி விட முடியும் என்றும் அவர் கள் கருதுகிறார்கள்.
மாயாவதிக்கு உத்தரபிர தேசம் தவிர மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார் மாநில `தலித்'களிடம் ஓரளவு செல் வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கு மூலம் வட இந்தியாவில் கணிசமான தொகுதிகளில் அவர் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். காங்கிரஸ் தலைவர்களும் இந்த பயத் தில் தான் உள்ளனர்.
தென் இந்தியாவில் தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் ஆகியோருடன் சேருவதன் மூலம் மாயாவதி அலை தெற்கிலும் வீச வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இடது சாரிகள்-மாயாவதி அணி புதிய எழுச்சியை கொடுக்கும் என்று எதிர் பார்க்கிறார்கள்.
இடது சாரிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு வைத்துள்ள அர சியல் குறி மாயாவதிக்கு தனிப்பட்ட வெற்றியை தேடி கொடுக்கும்.
Labels:
அரசியல்
பாராளுமன்றத்தில் மன்மோகன்சிங் நம்பிக்கை தீர்மானம்; அத்வானி காரசார விவாதம்
அமெரிக்காவுட னான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரிகள் ஆத ரவை வாபஸ் பெற்றதால் மத்திய அரசு மெஜாரிட்டியை இழந்தது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு நிரூ பிக்க வேண்டும் என்று பா.ஜ.க., இடது சாரி கள் வலியுறுத்தின. இதை ஏற்று நாளை (செவ்வாய்க்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வந்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவை திரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆதரவாக வாக் களிக்க ரூ.25 கோடி வரை "குதிரை பேரம்'' நடந்ததாக தகவல்கள் வெளியானது. இது தவிர தேசிய அரசியலில் கட்சிகளின் நிலைப்பாட் டிலும் மாறுதல்கள் ஏற்பட்டது.
3-வது அணியில் இருந்து விலகிய முலாயம்சிங் யாத வின் சமாஜ்வாடி கட்சி, காங்கிரசுடன் "கை'' கோர்த் தது. இதையடுத்து 3-வது அணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சந்திர சேகர்ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தேவேகவு டாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சேர்ந்தன.
இடது சாரிகளும் ஆதரவு கரம் நீட்டி இருப்பதால் 3-வது அணி தேசிய அள வில் வலுவானதாக மாறி உள்ளது. இந்த மாற்றம் காரணமாக ஆளும் கூட்ட ணிக்கு ஆதரவாக 260 எம்.பி.க்களும், எதிராக 268 எம்.பி.க்களும் இருப்பது உறுதியாகி உள்ளது.
சிறிய கட்சிகள், சுயேட் சைகள் தெரிவித்து வரும் கருத்துக்களின் அடிப்படை யில் கணக்கிட்டால் மத்திய அரசுக்கு 268 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக 270 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே மத்திய அரசு வெற்றி பெறுமா, தோல்வி அடையுமா என்பது கணிக்க முடியாத படி உள்ளது.
தொடர்ந்து சிக்கல் நீடிப் பதால் சில எம்.பி.க்களை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கச் செய்யும் கடைசி ஆயுதத்தை காங்கிரஸ் தலைவர்கள் கையில் எடுத்துள்ளனர். 10 முதல் 15 எம்.பி.க்களை வரவிடாமல் செய்ய முயற்சி கள் நடக்கிறது. பா.ஜ.க., சிவசேனாவில் உள்ள எம்.பி.க்கள் பணத்துக்காக கடைசி நிமிடத்தில் விலை போய் விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
பரபரப்பான இத்தகைய சூழ்நிலையில் பாராளு மன்றத்தின் 2 நாள்சிறப் புக் கூட்டம் இன்று பகல் 11 மணிக்கு தொடங்கியது. எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இது முக்கியமான கூட்டம். இதில் எல்லா எம்.பி.க்களும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜி கூறினார்.
கூட்டம் தொடங்கியதும் 7 புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.
அதன் பிறகு கடந்த கூட்டத் தொடருக்கு பின்னர் மறைந்த 5 முன்னாள் எம்.பி.க்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வழக்க மாக இத்தகைய தீர்மானத் துக்கு பிறகு கேள்வி நேரம் நடைபெறும். ஆனால் இன்று கேள்வி நேரம் எதுவும் இல்லை.
சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கேட்டுக் கொண்ட படி நேரடியாக நம்பிக்கைத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. "அமைச்சரவையின் மீது இந்த சபை நம்பிக்கை வைத் துள்ளது'' என்ற ஒற்றை வரி நம்பிக்கைத்தீர்மானத்தை சரியாக 11.22 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங் தாக் கல் செய்தார்.
இந்த தீர்மானத்தின் மீது மொத்தம் 16 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்று கூறிய சபாநாயகர் சோம்நாத்சட்டர்ஜி ஒவ் வொரு கட்சிக்கும் பேச அளிக்கப்படும் வாய்ப்புகள் குறித்து கூறினார்.
விவாதத்தை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து முதலில் பேசினார். ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு கடந்த 4 ஆண்டு களில் செய்துள்ள சாத னைகளை அவர்பட்டியலிட் டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியா வுக்கு ஏன் தேவை என்பதை பற்றியும், அவர் விளக்கம் அளித்தார்.
மன்மோகன்சிங் பேச்சு விவரம் வருமாறு:-
நான் பதவி ஏற்ற நாளில் இருந்து நாட்டு நலன் கருதியே எல்லா பணிகளையும் செய்து வருகிறேன். எனது அரசு எடுத்த ஒவ்வொரு முடிவும் நாட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே எடுக்கப் பட்டது.
4 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு, பண வீக்கம், விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை சமா ளிக்க அரசு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக இந்த சபை கூடி உள்ளது. கம்ïனிஸ்டு தலைவர்கள் ஜோதிபாசு, ஹர்கிஷன்சிங் சுர்ஜித் ஆகியோரால் இந்த கூட்டணி அரசு செதுக்கப்பட்டது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி கழகத்திடம் ஒப்புதல் பெற்றாலும், அமெரிக் காவை அணுகும் முன்பு பாராளுமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று இடது சாரிகள் உள்பட எல்லா கட்சிகளிடமும் உறுதி அளிக்கப்பட்டது.
எனது உறுதி மொழியை யாரும் ஏற்கவில்லை. நான் ஜப்பான் மாநாட்டுக்கு சென் றிருந்த போது இடது சாரி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
ஜப்பானில் இருந்து திரும்பி வந்த உடனே நான் ஜனாதிபதியை சந்தித்துப் பேசினேன். பாராளு மன்றத் தில் விரைவில் மெஜாரிட்டியை நிரூபிப்பதாக உறுதி கூறினேன்.
மத்திய அரசு எடுத்துள்ள ஒவ்வொரு நடவடிக்கை மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே எந்த இடைïறு பற்றியும் கவலைப்படாமல் உறுதியுடன் முன்னெடுத்து செல்வேன்.
இந்த அரசு எத்தகைய நடவடிக்கைககளில் ஈடு பட்டாலும் அது சுதந்திர போராட்டத்தை போற் றும் வகையிலும், 21-ம் நூற் றாண்டு சவால்களை சமா ளிக்க ராஜீவ் கண்ட கனவு களை நிறைவேற்றும் வகை யில் இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங்பேசினார்.
இதையடுத்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அத்வானியை பேசும்படி சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அழைப்பு விடுத்தார். அத்வானி பேச்சில் அனல் பறந்தது. சுமார் 1 மணி நேரம் மேல் அவர் ஆவேச மாகப்பேசினார். அவர் கூறி யதாவது:-
அணுசக்தி ஒப்பந்தத்தை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சமபங்குதாரராக இல்லை. இதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்த ஒப்பந்தம் தனிப்பட்ட 2 நாடுகளுக்கு இடையில் உள்ளது போல இல்லை. தனிப்பட்ட 2 பேருக்கு இடை யில் உள்ளது போல இருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. ஓட்டுக்காக உள்நாட்டு பாது காப்பு விஷயத்தில் அரசு அலட்சியமாகவே இருந்தது.
இந்தியாவில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ. பின்புலமாக இருப்பதை நாங்கள் பல தடவை சுட்டிக் காட்டினோம். ஆனால் அரசு கொஞ்சமும் செயல் படவில்லை. தற்போது இந்த அரசு தீவிர சிகிச்சைப் பிரி வில் கிடக்கும் நோயாளி போல கிடக்கிறது.
இந்த அரசு தப்பி பிழைக் குமா, பிழைக்காதா என்பதே பெரிய கேள்விக் குறியாக உள்ளது. இந்த அரசை நடத்தும் பிரதமருக்கு ஓட்டு உரிமை இல்லை. இந்திய வரலாற்றில் இத்தகைய நிலை ஏற்பட்டு இருப்பது இது தான் முதல் தடவை.
கூட்டணி தர்மத்தை பிரதமரும், சோனியாவும் கடைப்பிடிக்கவில்லை. ஜன நாயக அமைப்புகள் அனைத் தும் தவறாக பயன்படுத்தப்பட்டன.
தற்போது இந்த அரசு மெஜாரிட்யை இழந்து விட்டது. இந்த அரசை தோற்கடிக்க விரும்புகிறோம். ஆனால் இதன் மூலம் நிலையற்ற தன்மை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அத்வானி பேசினார்.
அத்வானி பேசிய போது பல தடவை காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரி வித்து கூச்சலிட்டனர். சபாநாயகர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்து அவர்களை உட்கார வைத் தார்.
அத்வானி தன் பேச்சின் போது 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையை மன்மோகன்சிங் எதிர்த்ததாக குறிப்பிட்டார். அதற்கு பிதமர் மன்மோகன்சிங் எழுந்து மறுப்பு தெரிவித்தார்.
அத்வானி பேசி முடித்த தும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு உறுப்பினர் முகம்மது சலீம் எழுந்து பேசினார். இன்றைய முதல் நாள் விவாதம் இரவு 10 மணி வரை நடக்கும் என்று தெரிகிறது.
நாளை (செவ்வாய்க் கிழமை)யும் அரசியல் கட் சித் தலைவர்கள் விவா தத்தில் பங்கேற்று பேசு வார்கள். முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் பதில் அளித்து பேசுவார். நாளை பிற்பகல் நம்பிக்கைத் தீர் மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறும்.
எம்.பி.க்கள் தங்கள் இருக்கை முன் உள்ள பொத்தானை அழுத்தி வாக்கை பதிவு செய்வார்கள். அதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் சீட்டு மூலம் வாக்கெடுப்பு தொடரும். சில மணி நேரங்களுக்குள் ஓட்டெடுப்பு முடிவு தெரிந்து விடும்.
மத்திய அரசு தலைவிதி நாளை மாலை தெரிந்து விடும்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு நிரூ பிக்க வேண்டும் என்று பா.ஜ.க., இடது சாரி கள் வலியுறுத்தின. இதை ஏற்று நாளை (செவ்வாய்க்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வந்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவை திரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆதரவாக வாக் களிக்க ரூ.25 கோடி வரை "குதிரை பேரம்'' நடந்ததாக தகவல்கள் வெளியானது. இது தவிர தேசிய அரசியலில் கட்சிகளின் நிலைப்பாட் டிலும் மாறுதல்கள் ஏற்பட்டது.
3-வது அணியில் இருந்து விலகிய முலாயம்சிங் யாத வின் சமாஜ்வாடி கட்சி, காங்கிரசுடன் "கை'' கோர்த் தது. இதையடுத்து 3-வது அணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சந்திர சேகர்ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தேவேகவு டாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சேர்ந்தன.
இடது சாரிகளும் ஆதரவு கரம் நீட்டி இருப்பதால் 3-வது அணி தேசிய அள வில் வலுவானதாக மாறி உள்ளது. இந்த மாற்றம் காரணமாக ஆளும் கூட்ட ணிக்கு ஆதரவாக 260 எம்.பி.க்களும், எதிராக 268 எம்.பி.க்களும் இருப்பது உறுதியாகி உள்ளது.
சிறிய கட்சிகள், சுயேட் சைகள் தெரிவித்து வரும் கருத்துக்களின் அடிப்படை யில் கணக்கிட்டால் மத்திய அரசுக்கு 268 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக 270 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே மத்திய அரசு வெற்றி பெறுமா, தோல்வி அடையுமா என்பது கணிக்க முடியாத படி உள்ளது.
தொடர்ந்து சிக்கல் நீடிப் பதால் சில எம்.பி.க்களை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கச் செய்யும் கடைசி ஆயுதத்தை காங்கிரஸ் தலைவர்கள் கையில் எடுத்துள்ளனர். 10 முதல் 15 எம்.பி.க்களை வரவிடாமல் செய்ய முயற்சி கள் நடக்கிறது. பா.ஜ.க., சிவசேனாவில் உள்ள எம்.பி.க்கள் பணத்துக்காக கடைசி நிமிடத்தில் விலை போய் விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
பரபரப்பான இத்தகைய சூழ்நிலையில் பாராளு மன்றத்தின் 2 நாள்சிறப் புக் கூட்டம் இன்று பகல் 11 மணிக்கு தொடங்கியது. எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இது முக்கியமான கூட்டம். இதில் எல்லா எம்.பி.க்களும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜி கூறினார்.
கூட்டம் தொடங்கியதும் 7 புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.
அதன் பிறகு கடந்த கூட்டத் தொடருக்கு பின்னர் மறைந்த 5 முன்னாள் எம்.பி.க்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வழக்க மாக இத்தகைய தீர்மானத் துக்கு பிறகு கேள்வி நேரம் நடைபெறும். ஆனால் இன்று கேள்வி நேரம் எதுவும் இல்லை.
சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கேட்டுக் கொண்ட படி நேரடியாக நம்பிக்கைத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. "அமைச்சரவையின் மீது இந்த சபை நம்பிக்கை வைத் துள்ளது'' என்ற ஒற்றை வரி நம்பிக்கைத்தீர்மானத்தை சரியாக 11.22 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங் தாக் கல் செய்தார்.
இந்த தீர்மானத்தின் மீது மொத்தம் 16 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்று கூறிய சபாநாயகர் சோம்நாத்சட்டர்ஜி ஒவ் வொரு கட்சிக்கும் பேச அளிக்கப்படும் வாய்ப்புகள் குறித்து கூறினார்.
விவாதத்தை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து முதலில் பேசினார். ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு கடந்த 4 ஆண்டு களில் செய்துள்ள சாத னைகளை அவர்பட்டியலிட் டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியா வுக்கு ஏன் தேவை என்பதை பற்றியும், அவர் விளக்கம் அளித்தார்.
மன்மோகன்சிங் பேச்சு விவரம் வருமாறு:-
நான் பதவி ஏற்ற நாளில் இருந்து நாட்டு நலன் கருதியே எல்லா பணிகளையும் செய்து வருகிறேன். எனது அரசு எடுத்த ஒவ்வொரு முடிவும் நாட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே எடுக்கப் பட்டது.
4 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு, பண வீக்கம், விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை சமா ளிக்க அரசு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக இந்த சபை கூடி உள்ளது. கம்ïனிஸ்டு தலைவர்கள் ஜோதிபாசு, ஹர்கிஷன்சிங் சுர்ஜித் ஆகியோரால் இந்த கூட்டணி அரசு செதுக்கப்பட்டது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி கழகத்திடம் ஒப்புதல் பெற்றாலும், அமெரிக் காவை அணுகும் முன்பு பாராளுமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று இடது சாரிகள் உள்பட எல்லா கட்சிகளிடமும் உறுதி அளிக்கப்பட்டது.
எனது உறுதி மொழியை யாரும் ஏற்கவில்லை. நான் ஜப்பான் மாநாட்டுக்கு சென் றிருந்த போது இடது சாரி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
ஜப்பானில் இருந்து திரும்பி வந்த உடனே நான் ஜனாதிபதியை சந்தித்துப் பேசினேன். பாராளு மன்றத் தில் விரைவில் மெஜாரிட்டியை நிரூபிப்பதாக உறுதி கூறினேன்.
மத்திய அரசு எடுத்துள்ள ஒவ்வொரு நடவடிக்கை மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே எந்த இடைïறு பற்றியும் கவலைப்படாமல் உறுதியுடன் முன்னெடுத்து செல்வேன்.
இந்த அரசு எத்தகைய நடவடிக்கைககளில் ஈடு பட்டாலும் அது சுதந்திர போராட்டத்தை போற் றும் வகையிலும், 21-ம் நூற் றாண்டு சவால்களை சமா ளிக்க ராஜீவ் கண்ட கனவு களை நிறைவேற்றும் வகை யில் இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங்பேசினார்.
இதையடுத்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அத்வானியை பேசும்படி சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அழைப்பு விடுத்தார். அத்வானி பேச்சில் அனல் பறந்தது. சுமார் 1 மணி நேரம் மேல் அவர் ஆவேச மாகப்பேசினார். அவர் கூறி யதாவது:-
அணுசக்தி ஒப்பந்தத்தை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சமபங்குதாரராக இல்லை. இதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்த ஒப்பந்தம் தனிப்பட்ட 2 நாடுகளுக்கு இடையில் உள்ளது போல இல்லை. தனிப்பட்ட 2 பேருக்கு இடை யில் உள்ளது போல இருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. ஓட்டுக்காக உள்நாட்டு பாது காப்பு விஷயத்தில் அரசு அலட்சியமாகவே இருந்தது.
இந்தியாவில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ. பின்புலமாக இருப்பதை நாங்கள் பல தடவை சுட்டிக் காட்டினோம். ஆனால் அரசு கொஞ்சமும் செயல் படவில்லை. தற்போது இந்த அரசு தீவிர சிகிச்சைப் பிரி வில் கிடக்கும் நோயாளி போல கிடக்கிறது.
இந்த அரசு தப்பி பிழைக் குமா, பிழைக்காதா என்பதே பெரிய கேள்விக் குறியாக உள்ளது. இந்த அரசை நடத்தும் பிரதமருக்கு ஓட்டு உரிமை இல்லை. இந்திய வரலாற்றில் இத்தகைய நிலை ஏற்பட்டு இருப்பது இது தான் முதல் தடவை.
கூட்டணி தர்மத்தை பிரதமரும், சோனியாவும் கடைப்பிடிக்கவில்லை. ஜன நாயக அமைப்புகள் அனைத் தும் தவறாக பயன்படுத்தப்பட்டன.
தற்போது இந்த அரசு மெஜாரிட்யை இழந்து விட்டது. இந்த அரசை தோற்கடிக்க விரும்புகிறோம். ஆனால் இதன் மூலம் நிலையற்ற தன்மை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அத்வானி பேசினார்.
அத்வானி பேசிய போது பல தடவை காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரி வித்து கூச்சலிட்டனர். சபாநாயகர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்து அவர்களை உட்கார வைத் தார்.
அத்வானி தன் பேச்சின் போது 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையை மன்மோகன்சிங் எதிர்த்ததாக குறிப்பிட்டார். அதற்கு பிதமர் மன்மோகன்சிங் எழுந்து மறுப்பு தெரிவித்தார்.
அத்வானி பேசி முடித்த தும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு உறுப்பினர் முகம்மது சலீம் எழுந்து பேசினார். இன்றைய முதல் நாள் விவாதம் இரவு 10 மணி வரை நடக்கும் என்று தெரிகிறது.
நாளை (செவ்வாய்க் கிழமை)யும் அரசியல் கட் சித் தலைவர்கள் விவா தத்தில் பங்கேற்று பேசு வார்கள். முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் பதில் அளித்து பேசுவார். நாளை பிற்பகல் நம்பிக்கைத் தீர் மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறும்.
எம்.பி.க்கள் தங்கள் இருக்கை முன் உள்ள பொத்தானை அழுத்தி வாக்கை பதிவு செய்வார்கள். அதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் சீட்டு மூலம் வாக்கெடுப்பு தொடரும். சில மணி நேரங்களுக்குள் ஓட்டெடுப்பு முடிவு தெரிந்து விடும்.
மத்திய அரசு தலைவிதி நாளை மாலை தெரிந்து விடும்.
Labels:
அரசியல்
Subscribe to:
Posts (Atom)